Tuesday, April 19, 2022

Action reaction

 challenge accepted Shanthi Srinivasan


ஆக்‌ஷ்ன்களைவிட ரியாக்‌ஷன்கள் அதிகம் ஆக்ரமித்த காலம் ஒரு வகை.


கால் கிலோ கத்திரிக்காய் வாங்க கடுமையா பயிற்சி எடுத்து கடைக்குப் போனப்போ,  கடைக்காரருடன் பேரம் பேசி கேட்டதுக்கு மேல அதிகமா கொடுத்த போது, இந்த ஏமாந்த சோணகிரி  எடுத்த challenge. 

ஹிந்தி கத்துண்டே ஆகணும்..நான் பேசறதைக் கேட்டு அவங்க காது பொத்திண்டாலும்.


ஊர் ஊராகப் போன போது என் வீடு எதுனே தெரியாம தத்தளிச்ச காலம் உண்டு. என்ன பெரிய விஷயம் என்று ஒவ்வொரு struggle ம் புன்னகையோடு challenge பண்ணி இருக்கேன்.


 challenge என்பது ஒண்ணு ரெண்டா இருந்தா  பரவாயில்லை.  அதனால் ..challenge எல்லாம் chocolate ஆ பாவிக்க ஆரம்பிச்சேன்.


 சுவையாக்கினேன் வாழ்க்கையை.

தத்தளிச்சு நீந்தி வந்து இலக்கை அடையும்போது அடுத்த ஆப்பு காத்திருக்கும். 


இப்போது நிஜமாகவே நான் challenge செய்ய நினைப்பது என் வயோதிகம் that's is my third stage of life. I determine to live with dignity.

கண் மங்கும்..(அது இப்பவே இருக்கு).காது கொஞ்சம் வேலை பார்க்காது..கால் சொல்ற இடம் போக மக்கர் பண்ணலாம். கையும் கொஞ்சம் கைகொடுக்காமல் போகலாம். வாயைக் கட்டி போட வேண்டி இருக்கலாம்.

ஆனா..மனசு மட்டும் எப்போதும் சந்தோஷமா இருக்கணும். என் சந்தோஷம்..என் high life condition என்னைப் போல இந்த கட்டத்தை கடக்கும் பலருக்கு ஊக்கமளிக்கணும்.


எப்படி இருந்த நான்..அப்படியே இன்னும் அதே பாஸிடிவ் attitude உடன் இருக்கேன் என்று எனக்கு நானே தட்டிக் கொடுத்து எந்த இடத்தில் இருந்தாலும் சந்தோஷ மணம் வீசணும்.

Challenge ..to be cheerful

Shyamala Raghavendra mam..next நீங்க தான்

Monday, April 11, 2022

மாவடு

 கிச்சனுக்குள் நுழையும் போதே

கமகம கமகம...கம..கம..கம..


உப்பு காரத்தில் ஊறியபடி

ஊரைக் கூட்டும் வாசனையுடன்


மாவடுதான்..வேறென்ன..

எப்போ கடா வெட்டுவாங்கனு செந்தில் ஸ்டைலில் நான்..


'ஊறும் வரை காத்திரு'னு டையலாக் பேசியபடி மாவடார்.

Saturday, April 9, 2022

பண்டிகை நாள்.

 பண்டிகை நாள்...


ஆசையா கேட்டேன்..பொண்ணு கிட்ட..

kheer பண்ணட்டுமா..?

calorie ஜாஸ்தி மா..

வடை..?

weight போடும்..

அவியல்..?

அது ஒரு சொதப்பல் டிஷ்..

பருப்பு உசிலி..?

பேரே சகிக்கல..

பிட்லை..?

இது என்ன லை..

puran போளி..?

பொறுமை சோதிக்காதேம்மா..


அரைமணி argument..

அமைதி ஒப்பந்தம்..


பகவானுக்கு ...

பாலும் பழமும்..

பக்தைக்கு..

பருப்பும் ரொட்டியும்..


கொஞ்ச நேரம் கழிச்சு..

கொஞ்சலுடன்..பெண் சொன்னாள்..

பிறந்த நாள் இன்று..

பிரியாத் தோழிக்கு..


இப்போ..

பார்ட்டிக்கு போகனும்..

பிட்சா சாப்பிடணும்

பெப்சி குடிக்கனும்..

பாப்கார்ன் கொறிக்கனும்..

விட்டதை பிடிக்க்

வேகமாய் கிளம்பல்..


அடப் பாவிகளா..

(விவேக் style ல் நான் ..)

மீந்த ரொட்டி..

மறுபடியுமா...

விட்டேன்..ஜூட்..

Tuesday, April 5, 2022

ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே..

 :ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..'


'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..ஒரு வார்த்தை என்னைக் கேட்கமாட்டியாம்மா ...என்ன வேண்டுதல் இதெல்லாம்..

தாயும் சொன்னாள் ...

'தலைப் பிரசவம்...

தாயும் சேயும் நலமா இருக்க

திருமலையானை தரிசனம் பண்ண

குழந்தையைத்  தூக்கிண்டுனு நடந்து வரேன்னு பிரார்த்தனனை..

இனிமே இப்படி வேண்டிக்க மாட்டேன்..உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி..

சோக முகத்துடன ்என்னிடம்  சொன்ன  அம்மா..

இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை என்னை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே..

மகன் தந்தையிடம் சொல்வான்..

'அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு வார்த்தை என்னை கேட்க மாட்டியா...

நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே

ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..ஏண்ணா..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..

கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.

கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம் ராஜி aunty ஆத்துக்கு போகணும்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க..


இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..

ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..


Sriram Jayaram Jaya Jaya ram

Monday, April 4, 2022

சந்தை

 #சந்தை


#அம்மி குத்தலையோ..ஆட்டுக்கல் குத்தலையோ ..


இந்தக் குரல் நம் வீடு ,தெரு வாசல்களில் கேட்டு எத்தனை நாளாச்சு.


கரண்ட் இல்லை என்று எந்த ஒரு பதார்த்தம் செய்வதும் நின்றதில்லை சில வருடங்கள் முன் வரை.


அம்மி இருக்க..அருமையான சட்னி


ஆட்டுக்கல் இருக்க..அளவளாபியபடி இட்லி மாவு, அடை மாவு....


இந்த ருசி மறக்கடிக்க வந்தது மிக்ஸியும் கிரைண்டரும்.


அடுத்து நம் திருமணகளில் இன்றும் பின்பற்றப் படும் ஒரு சடங்கு.

அம்மி மிதிப்பது:

மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். "இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்" என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். 

எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.


சரி..சரி..நேரம் யாருக்கு இருக்கு என்று நீங்கள் புலம்புவது காதில் விழுகிறது.


ஆனால்..மீண்டும் பழைய சுவைக்கு நாக்கு ஏங்க..எல்லாக் கோயில் வாசலிலும் மார்க்கெட்களிலும் இப்போது அம்மி ஆட்டுக்கல் வியாபாரம் அபாரமா நடக்கிறது.


கிச்சனும் இவைகளைப் பொருத்த வடிவமைக்கப் படுகிறது.

உடம்புக்கு நல்ல பயிற்சி..எந்த ஜிம்முக்கும் போக வேண்டாம்.


என்ன..சின்ன சைஸ் பெரிய விலை.

நேரம் கிடைக்கும் போது இதில் அரைத்து..நம்ம குடும்பத்துக்கு நல்ல சுவையும் காண்பிப்போமே.


சந்தையில் கிடைக்கும் வாங்குவோம்..மீண்டும் ஆரோக்கிய அறுசுவை வாழ்வுக்கு திரும்புவோம்.


(இந்தப் முதல் படம்..என் அம்மா வீட்டில் தலை குப்புற படுத்து கிடக்கும் ஆட்டுக்கல்..

அரைக்க ஆள் தேடும் அம்மி..)