Tuesday, November 19, 2019

தேன்மொழி

எச to Saraswathi Gayathri

தேன்மொழி
ஒல்லியா தெரியற என்றால்..
உச்சி குளிர்வாளே
கொஞ்சம் சதை போட்டியோ என்றால்..
நெஞ்சும் சுருங்கிப் போவாளே..
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு..
எதுத்த வீட்டு் அம்மாவை நினைப்பாள்..
உபாதைகளை ..
ஊருக்கெல்லாம் சொல்வாள்..
google செய்தே
cancer எனக்கில்லையே என்று..
கலங்கியும் போவாளே..
argue செய்வாள்..
அடங்கியும் போவாள்

harmony கெடுக்கும்..இந்த
hormone வேலையை..
மாத்திரை மருந்தோடு..கொஞ்சம்..
மன உறுதியும் சேர்த்துக் கொள்வோம்..
அசுரர் இவரை வெல்ல..
ஆயுதம்..இது ஒன்றே..

Happy men's day

Happy men's day

ஆபீஸிலிருந்து
அந்தி சாயுமுன்
அதிசயமா..
வந்த அத்தான்..
அத்தி பூத்த மாதிரி..
அல்வாவும்...அடுக்கு மல்லியும்
அரை வாண்டுக்கு..
அழகா ஒரு சட்டையும்..
 தந்தபடி சொன்னாராம்..
ஆண்கள் தினமாமே இன்னிக்கி..
அதான் வாங்கியாந்தேன்..
அட ராசா..
அதெப்புடி நான் மறந்தேன்..
எதிர்ப்பார்ப்பே இல்லா..
எம்புட்டு நல்ல மனசு..
பெண்கள் தினமுன்னு..
பெருமையா கொண்டாடினது
பொட்டில் அறைஞ்சாப்போல..
நினைவுக்கு வர..
ஆமாம்.. மறந்திட்டேன்..
அவசர வேலையிலே..
அமைதியா...நாஞ்சொல்ல..
அங்க அவரில்லை..
ஏற்கனவே..போயாச்சு..
கிரிக்கெட்டு மேட்ச் பார்க்க..

Sunday, November 17, 2019

What's in store

வெள்ள நீரது
வீதியெலாம் புரண்ட வேளை
வீடுகளாய் உருமாறிய...
ஏரிபல அறிந்தேன்..அன்று

வெறியாய் சேமித்தது
வெற்றுத் தாளான வேளை..
வரிசையில் நிற்போர் கண்டு..
வழக்கமாய் ..வரும் சந்திலும்
வங்கி உளதென்றறிந்தேன்.. இன்று..

நாளை..
what's in store?..
quotes கூட தோணுமோ
queue வில் நிற்கும்போது..!!!

வீரபாண்டிய கட்டபொம்மன் style.

வீரபாண்டிய கட்டபொம்மன் style..

ATM வந்தது முதல்..
எட்டிப் பார்த்தாயா..
paytm வந்ததும்..
bank ஐ மறந்தாயா
fund transfer  வந்ததும்..
friend ஒருத்தர் உண்டா..

card வாங்கியதும்..
courtesy call உண்டா..
cheque எழுதினாயா..
draft எடுத்தாயா..
online  வந்தவுடன்
offline  ஆனவனே..கேள்.

மானேஜரா..கிளார்க்கா..
மரியாதையா..வரிசையில் நில்லு..

(ஐயோ சாமி..கட்ட பொம்மா..கனவில் நீருமா..?)
கொஞ்சம் பின்னோக்கி பார்க்க..

அம்மா சொல்லித் தர.
காசோலையும்.
.கணக்கிருப்பும்..
கடுப்பேற்றினாலும்
கால் கடுக்க நின்று..
கற்ற நாட்கள்..
கை கொடுத்ததே இப்போதும்

வருஷம் பல கடந்து..
வங்கி சென்றபோது..
வரதே இல்லயே இப்போ..
வருத்தமாய் கேட்ட குரல்கள்..
வந்து போகுமே..நினைவில்
வரிசையில் இப்போ..
வசைபாடி நிற்கும்போது..

சுகங்கள் கண்டதால்..
சுருங்கும் முகம் இன்று..

வருங்காலம் ....வரட்டும்
வஞ்சமிலா..லஞ்சமிலா
வழியை உணர்த்தட்டும்..
வலிகள் எல்லாம்..
வலிமை சேர்க்கட்டும்..
வாழ்வு மலரட்டும்..

Thursday, November 14, 2019

Children's day

Myclik @ mullandiram.. A small village with big hopes..
Happy children's day

போட்டோ புடி என்னை'
பொங்கும் ஆசையில்..என்
பின்னே வந்தாள்.
பிரகாரம் சுற்றினாள்.

நில்லென்றேன்..நின்றாள்..
சிரியென்றேன் சிரித்தாள்..
நல்லா வருமா..என்றாள்
நண்பர்களும் சேர்த்தாள்.

உடுத்திய சீருடை..
உணரவைத்தது..
உள்ளூர் பள்ளியில்
ஒண்ணாம் வகுப்பென்று

வீடெது என்றேன்..
விரல் நீட்டி காட்டினாள்
கோயில் கோபுரம் முன்
குடிசை எனதென்றாள்..

பெயர் கேட்டேன்..
பூரிப்புடன்..
பிரியா..
விஷ்ணுப் பிரியா என்றாள்.

விலாசமிலா ..இவ்
விண்மீன்கள்..
விண்ணை எட்டட்டும்..
வெற்றி வாகை சூடட்டும்..

அடுத்த முறை போகணும்..
அவளிடம் கொடுக்கணும்..
அவளின் முக மலர்ச்சியை..
அழகா படம் பிடிக்கோணும்..

பட்டது மனதில்..
பளிச்சென்று உண்மை
படிக்கும் இவளோ..
படு அதிர்ஷ்ட்டக்காரியென்று

விட்டேன் ஊரை..
வழியில் கண்டேன்..
வழி பிறக்கா
வாண்டுகளை..

மாறுமெப்போ இந்நிலை..

பூ ..கட்டும்.. பூக்கள்
பூமி ஆளட்டும்..
பாத்திரம் விளக்கும்..
பிஞ்சுக் கரங்கள்..
பாரை வெல்லட்டும்..

தம்பியை தாலாட்டும்..
தளிர்கள் பலவும்..
தடையை உடைக்கட்டும்..
தரணி ஆளட்டும்..

கூலிக்காக..
பள்ளி மிதிக்கா..
பாலகரும்..
காலணி துடைக்கும்..
கறுத்த கரங்களும்
காவியம் படைக்கட்டும்

சின்ன பசங்களெல்லாம்
சிறை உடைக்கட்டும்..
சிட்டாய்ப் பறக்கட்டும்
சீறாய் வாழட்டும்..

நமக்கும் பங்குண்டு..
நல்லதை செய்வோமே..
நாலு காசு தருவதை விட்டு
நம் நேரமதை தருவோமே..
நல்ல சமுதாயம் படைப்போமே..

Wednesday, November 13, 2019

நான் கண்ட பாரதம்....(நேற்று)

நான் கண்ட பாரதம்....(நேற்று)

மூணு நூறு ரூபாய் கையில்.
மூக்கைப் பிடிக்க சாப்பிட ஆசை..
உணவகம் நுழைந்தேன்..
உவகையாய் உண்டேன் ..
சர்வர் வந்தார் பில் கொண்டு..
கர்வமாய் நீட்டினேன் கார்டையுமே..
சர்வர் டவுனு...சொறிந்தார் தலை..
சரியாப் போச்சு.. சங்கடத்தில் நான்..
இருப்பதைக் கொடுத்தால்..
இன்னிக்கு வீடு சேரமுடியாதே..
இக்கட்டில் சிக்கிய நேரம்..
இளையராஜா பாட்டு.
எல்லாரும் மாவாட்ட கத்துகிடணும்
என் மனதில் ஓட..
சகஜமாய் சொன்னார்..
சரி சரி ..நளைக்குத் தாங்க..
மனுசனுக்கு மனுசன்
உதவலனா எப்படி என்றே..

கடன் உறவை முறிக்கும்
கடையில் மாட்டிய போர்டு..
கண்சிமிட்டியது..
என்னைப் பார்த்து..

Sunday, November 10, 2019

Kindergarten to college

kindergarten முதல் college வரை
( கல்லறை வரையும் கூட)

டீல் தான் எப்பவும் லைஃப்ல..ஸ்கூல் அட்மிஷனுக்கு சுக்லாம்பரதரம் போட்ட நேரம். வீட்டுக்காரர் கிட்ட 'அபியும் நானும்' ஐஸ்வர்யா மாதிரி கண்டிஷனுடன்..' capitals to capitation fee வரை உங்க syllabus. கரோல் பாக்..கத்திரிக்காய் எல்லாம் என்னோடுதுனு பாகம் பிரிச்சாச்சு.
நடுக்கத்தோடு பிரின்சிபால் ரூம் கதவை தட்ட..ரம்பம்பம் .ஆரம்பம்..ரம்பம்பம் ..பேரின்பம் ..intro எல்லாம் முடிஞ்சது..பக்கத்திலிருந்த coordinator ஐ பார்த்தபடி principal ' கேள்விகளை நீ கேட்கிறாயா..நானே கேட்கட்டுமா என்ற தொனியில்..
தொண்டையில் கிச் கிச் கணைத்தபடி  coordinator என் கணவரைப் பார்த்தபடி being an engineer we hope that you will help your daughter in her studies. வேகமா அவர் மண்டையாட்ட..கேள்விகள் இப்போ என்னை குறி வைத்து..
' உங்களுக்கு பாடத் தெரியுமா..ஆடத் தெரியுமா..(rhymes சொல்லி கொடுக்க)
கதை சொல்லத் தெரியுமா..
copy, paste தெரியுமா..கட் பண்ணி ஒட்டத் தெரியுமா..collage தெரியுமா..
வீட்டில  magazines வாங்கறீங்களா..அதுல வர அட்வெர்டைஸ்மெண்ட் எல்லாம் collect பண்ணி வெச்சிருக்கீங்களா..see we want creativity in every project we do.
well..
ஆலாய்ப் பறந்த அட்மிஷன் அல்வா மாதிரி கிடைக்க..
welcome to our ________ group of institutions. these years are going to be very crucial for  your child ...coordinator கை குலுக்குவார்.
இதே கதை தான் ஒவ்வொரு ஊர்..ஒவ்வொரு கிளாஸும் மாறும் போது..these years are going to be very crucial in your child's life.
middle school வந்தபோதும்..மீண்டும் orientation. mike பிடித்த madam கள் மழையாய்  advice. அம்மாக்களின் மொழி அறிவு பெருகும் நேரம். கதை, கவிதை, கட்டுரை ( எங்கே போனாலும் ஹிந்தி இங்கிலீஷ்  புஸ்கதம் வாங்கி அடுக்கப்படும்). science project ..பல்பு மாட்டி respiratory system, nervous system எல்லாம் செய்யணும்..இருக்கும் அறிவு பத்தாத நிலையில் விலை கொடுத்து சந்து பொந்து தேடி project ready made ஆ விற்பவர் காலில் விழுந்து வாங்கினால் internal லில் அரை மார்க் கூடும். அடுத்த ஊர் அடுத்த ஸ்கூல்..அதே welcome address.. இன்னும் கொஞ்சம் extra பயமுறுத்தலுடன்.ரிசல்ட் ரொம்ப முக்கியம். hardஆ hard work பண்ணனும்.கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், quilt லிருந்து வெளிவரா முடியா குளிரிலும்...குழந்தைகள் படிப்பு.
அப்பாடா..ஒரு வழியா.இப்போ இறுதி கட்டத்துக்கு வந்தேன்..அதான் காலேஜ்க்கு..
அதே பல்லவி,சரணம்..இன்னும் improvised version. ' we prepare the students to face corporate pressures'
இது என்னடா...இந்த அம்மாவுக்கு வந்த சோதனை..
படுக்கை தட்டி தூங்கபோகும் போது..டொக் டொக்னு மெசேஜ் மழை பெண்ணின் வாட்சப்பில் பொழியும்..தூங்காத விழிகள் நாலாய் நாங்க மாறணும்..
விடியறதுக்குள்ள ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, பேர் சூட்டி, பொருளை வித்து, profit காண்பிச்சு, மார்க்கெட் சர்வே எடுத்து..competitor strategy analyse பண்ணி, மாத்திரை போட்டுக்க போகும் அப்பாவை , மைக் பிடிச்சு இண்டெர்வியூ பண்றம மாதிரி ஃபோட்டோவும் எடுத்து...audio ,video எல்லாம் ஒட்டி ஒரு ppt பண்ணி printout எடுக்க 'போயேப் போச்சு தூக்கம்..நான் கிளாஸில் தூங்கிக்கறேன்மா என்று..app ல் எடுக்கும் attendance ..ஆப்பு அடிக்குமுன் அவள் ஓட..
ஆறிப்போன காபி டம்ளருடன்..இப்படித்தான்...நம்ம வாழ்க்கை..this is going to be a crucial phase என்று..present ஐ அனுபவிக்க நேரமுன்றி..எதிர்காலத்த்தை நோக்கி எகிறிப் பாய்ந்தபடி.
ஜன்னல் திறக்கிறேன்..வேலைக்கு போகும் தன் மகனை ஆதரவாய் தலையை கோதியபடி..' இப்ப ஓடாம எப்படா ' என்றபடி இன்னோரு அம்மா..

Saturday, November 9, 2019

விலைவாசி

 காய்கறிக் காரம்மா..
ரொம்ப கறாரு தானம்மா.
காசெல்லாம்  வேண்டாம்..
கணக்கு வெச்சிக்கறேன்..
காசோலையா கொடுத்திடு..
கரீட்டா..ஆமாம். ..என்றாள்..

மருந்து கடைக்காரரோ
இருக்கு இன்னும் ரெண்டு நாளு..
இருக்கற ஐநூறு ஆயிரத்தில்
இங்க மருந்தும்..சோப்பும் வாங்கென்றார்..

தையல் காரரோ..
துணி இங்கே இருக்கட்டும்..
பணத்தோட வாங்க என்றார்...

ஊரைச் சுத்திட்டு..
நிலவரம் தெரிஞ்சிண்டு..
வீட்டுக்குள் நுழைய..
வந்தாள் ..
வேலைசெய்யும் லஷ்மியுமே...
ஐநூறும் ஆயிரமும்..
யாரிடமும் வாங்காதே..
செல்லாது இப்போ ...
சொன்ன நேரம்..
சிரித்தபடி சொன்னாள்..
வாங்குற சம்பளம் ..
அட்வான்ஸ் ல கழிஞ்சாச்சு..
எட்டணா கையில் இல்லை..
எங்கிட்டு போவேன்..
ஆயிரமும் ஐநூறும்..

வைத்திருப்பவருக்கு தானே..
வயிறு கலங்கும்..

Thursday, November 7, 2019

Happy birthday kamal

கமல்..கமல்..கமல்
கள்ளமில்லா..களத்தூர்
கண்ணம்மா கமல்
குதப்பும் வெத்தலையுடன்
சப்பாணி கமல்

இளமை ஊஞ்சலாடி
நினைத்தாலே இனிக்கும்
பஞ்ச தந்திரம் அறியா
பம்மல் கே சம்பந்தம் ' கமல்'

மூக்கை சுருக்கும்
மீண்டும் கோகிலா கமல்..

சலங்கை ஒலி கமல்
சகலகலா வல்ல கமல்

வேலு நாயக்கர் கமல்
வசூல் ராஜா கமல்

மூன்றாம் பிறை கமல்
மகாநதிக் கமல்

புஷ்பக் கமல்
புன்னகை மன்னன் கமல்

காக்கிச் சட்டை கமல்
காதலா காதலா கமல்

அவ்வை சண்முகி கமல்
அன்பே சிவம் கமல்..

சிப்பிக்குள் முத்து கமல்
சிங்கார வேலன் கமல்

நம்மவர் கமல்..
நீயா..கமல் இது..?

'ஆள வந்தான்' மட்டும்
அப்போதே பிடிக்கலை..
இப்பவும் அதே கதைதான்
அப்பு ராஜாவுக்கே
இப்போதும் என் வோட்டு.

Wednesday, November 6, 2019

Happy diwali

happy diwali.
புள்ளிகள் ஒன்றில்லாமலே
'பா'ட்டில் மூடியும்..
பெயிண்ட் ப்ரஷின் முனையுடன்
புதுமையான கோலம்.

'you too can do ' என்று
YouTube உறுதியளிக்க..
உருவான சின்னகோலம்.

வண்ணங்கள் விளையாட
வெடிச்சத்தம் வான் பிளக்க
வந்தது தீபாவளி..
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Monday, November 4, 2019

பக்கோடா..bond..

பக்கோடா..bond..

 அன்புள்ள சிங்காரச் சென்னை தோழமைகளே..
இந்த அடை மழைக்கு உங்கள் எல்லாருக்கும் ஒரு செட் பூரி் மசால் என் கிச்சனிலிருந்து..

ஆனால் மழைக்கு உகந்தது..  பக்கோடாதான் பண்ணி சாப்பிட்டு..பேஷா இருங்கோ..

தொப்பலா நனைஞ்சு, ஏழு கடல் ஏழு குழி தாண்டி வீட்டுக்குள் நுழையும்போது இழுக்கணுமே..ஆனியன் பக்கோடா வாசனையும் இஞ்சியும் ஏலமும் போட்ட டீயும்.
யார் முதல்ல வீட்டுக்குள் நுழையறாளோ அவர்கள் ட்யூட்டி ...கணவர் entry முதல்ல என்றால் கடலை மாவும் , கட் பண்ணி வெங்காயமும் போட்டு கமகமனு கைவண்ணம் காட்ட வேண்டியது தலையாய கடமை...மழையில் நனைந்து( நீந்தி) வரும் மனைவிக்கும் மகன்(ள்) க்கும் பக்கோடா நீட்ட...bond கெட்டியாகும். பக்கத்து வீட்டு பாட்டிக்கும் தாத்தாவுக்கும் பதமா எடுத்து கொண்டு போய்  கொடுக்கலாம்.

முதுமை நமக்கும் வரும்..மொறுமொறு சாப்பிட முடியாம போகும்..ஆனா மெல்லறதுக்கு இருக்கும் இந்த பக்கோடா நினைவுகள்..
அப்படியே..ஒரு பாட்டும் பாடிக்கலாம்.

அன்றொரு  நாள் .அதே மழையில்.
அவள் (ர்) இருந்தாள் என் அருகில்..நான்
அடைக்கலம் அடைந்தேன்..
ஆனியன் பக்கோடாவில்..
நீ அறிவாயே..,அடைமழையே

பக்கோடா பந்தம்..என்றும் நிலையானது..

Wednesday, October 30, 2019

Match fixing

Nandhu Sundhu sir..இப்படி flashback போக வெச்சிட்டீங்களே
matching fixing.
இரண்டு காலமாப் பிரிக்கலாம்..வெ.வா.கா(வெட்டி வாங்கிய காலம்) ஒ.வ.கா (ஒட்டி வந்த காலம்).
என் அம்மா இந்த ரெண்டு காலத்திலும் கலக்கியும் இருக்கா..கலங்கியும் போயிருக்கா. நல்லி,குமரனில் புடவை வேட்டை முடிந்தபின்..படையெடுப்பு ப்ளவுஸ் செக்‌ஷன் நோக்கி.. ஒரு மஞ்ச புடவை காண்பிச்சு மாட்ச்சிங் கொடு என்பாள்..அடுக்கி இருக்கும் வரிசையில் வெச்சு வெச்சு பார்ப்பார் சேல்ஸ்மேன். நாலஞ்சு எடுத்து போடுவார்..' இது கோவிந்தா மாதிரி இருக்கே..இது மஸ்ட்டர்ட் கொஞ்சம் தூக்கலா இருக்கு..அந்த மஞ்ச லைட்டை கொஞ்சம் ஆஃப் பண்ணுங்கோ..கலர் சரியா தெரியல..ட்யூப் லைட் வெளிச்சம் எதுக்கு இந்த கவுண்டருக்கு..நற நறனு சேல்ஸ்மேன் பல்லைக் கடித்தபடி பல்லைக் காட்டுவார்..பழைய கஸ்(ஷ்)டமராச்சே..கடைசில முதல்ல காண்பிச்சதே சரியான மாட்ச்சோ என்று மனசு சொல்லும். எனக்கு கொஞ்சம் வெளிச்சத்துல காண்பிங்கோ என்பாள். அந்த floor கடைசியில் ஒரு குட்டி ஜன்னல் இருக்கும்..இந்த மாதிரி பாடாபடுத்துபவருக்கென்றே..முழு bundle ம் ஒருத்தர் சுமந்து வர..Z security level ல் ரெண்டு பேர் escort வேற..இத்துணூண்டு இடுக்குல வெயில்ல வெச்சு பார்த்து ஒரு 75 cm வாங்க முடிவாகும்.. (கடைக்காரரின் சொட்டைக்கு இவங்க எல்லாந்தான் காரணமோ)..
இதுக்கு அடுத்தது..ஒட்டி வந்த காலம்..அதான் attached blouse..introduce ஆனபோது இந்திர லோக சந்தோஷம்..இனிமே நோ blouse piece tension..ஆனா அதை டைலர்கள் எல்லாம் குழாய் மாதிரி தைக்க..அம்மா தையா தக்கானு குதிச்சு..சித்திகளின் அறிவுரையில attached blouse எல்லாம்் என் பெண்களுக்கு cute பாவாடை ஆனது..
மீண்டும் கஜினி படையெடுப்பு..கட் பீஸ் தேடி..
இப்போது என் காலம்..கலம்காரி காலம்..சம்பந்தமே இல்லாமல்..மாட்ச்சிங்..பூ போட்ட புடவைக்கு..புத்தர் டிசைன் ப்ளவுஸ்..
கோடுகட்ட புடவைக்கு பூப் போட்ட மாட்ச்சிங்..சத்தியமா..புடவைக்கு மாட்ச்சே இருக்கக்கூடாது இப்போ trend.
never ending ..this matching fixing..
இது எப்படி இருக்கு என் அனுபவம்  Nandhu Sundhu sir

Tuesday, October 29, 2019

சிறகுகள் முளைத்தே

சிறகுகள் முளைத்தே..

அப்பா தட்டிலிருக்கும் நெய் மணக்கும் ரசம் சாதமும்.
அம்மா வார்க்கும் ஒட்டவழித்த மாவின் கடைசி தோசையும்
இதமே..என்றும்
இறக்கை முளைக்குமுன்..

#treasures_preserved
Drawing by Aishwarya Ramasami -2010

Monday, October 28, 2019

கீரை

எச to Saraswathi Gayathri..

கீரை ஆய்தல்

கடைந்த பாற்கடலில்..
கிளம்பி வெளியேறியது...
ஆலகால விஷமென்றால்..
கடையும்..
கீரை எம்மாத்திரம்..
பழுதும்..பழுப்பும்..
படியும் அழுக்கும்..
பாங்காய் விலக்கி..
பருப்போடு கடைந்து..
A விட்டமின் சத்தோடு
அன்புமும் கூட சேர்த்து..
மசித்த கீரை..
மயக்க வைக்காதெனினும்
மறுபடி கேட்க வைக்குமே..
Saraswathi Gayathri

Monday, October 21, 2019

Trichy

அருமையான பதிவு... என்னையும் எங்கூர எட்டி பார்க்க வைச்சது. Shiv K Kumar sir

திருச்சி வாசம்..
TST bus..
TMS பாட்டு..
ஓர சீட்டில் ..
ஊரை வேடிக்கை..

மலைக்கோட்டை வரும்..
மாங்கு..மாங்குனு..
தெப்பகுளம் வழியா..
தாயுமானவருக்கு..
தோப்புக்கரணம் போட்டு..
சாரதாஸிலும்..கீதாஸிலும்..
கிடீஸ் கார்னரிலும்..
துணி வாங்கி..
பசியாற..போவோம்..
வசந்த் பவனுக்கு..
குடும்பம்..ரொம்ப ஒத்துமையா..
எல்லாரும்..ஒரே அயிட்டம்..
மசாலா தோசை ஆர்டர் பண்ணி..
முடிக்க முடியாம ..முழுங்கி..
தின்ன தோசை..
சீரணமாக..
பொடி நடையா நடந்து ..
வீடு வந்து சேர்வோம்..
வாங்கி வந்த துணியை
தினமும் எடுத்து பார்த்து..
புது வாசம் முகர்ந்து பார்த்து..
எப்போ தீபாவளி வரும்..
முதல் ஆளா..ரெடி ஆகி..
புதுத் துணி போட்டு
பட்டாசு வெடிச்சு..
ஊரை எழுப்பிய கதையெல்லாம்..
இப்போ சொன்னா..
So cheap ங்கறாங்க..
திரும்பிப் பார்த்தேன்..
திரும்பி வரா நாட்களை..
உங்கள் பதிவின் மூலம்..
Thanks Shiv K Kumar

Friday, October 11, 2019

Bye bye dolls

Bye bye dolls..
See you next year..

(My friend radha's golu)

கொண்டாட்டம் முடிவு
கொலு பொம்மைகள்...
பரணி வாசத்துக்கு..
பழையபடி போகும்..
மூச்சு முட்ட..
மூக்கு உடையாதிருக்க..
பழைய புடவையிலும்..
பேப்பர் சுருள்களிலும்..
தஞ்சம் புகுமே....
நம்மையே பார்த்த வண்ணம்..
நாளை ஓட்டிய இவை(வர்)கள்..

'என்னையே பார்க்கிறாப்போல
இருக்கு.'..கொலுவிருக்கும்
அவதாரங்களும்..
ஆன்மீக ஆசான்களுமென்று..
அடங்கி ஒடுங்கி..
அமைதி காத்த நமக்கு..
படுக்க வைத்த பொம்மைகள்..
படு சுதந்திரம் தருமோ..
கெடுபிடி ஏதுமில்லை..இனி
அப்பாடா..
அடுத்த நவராத்திரி வரை....

அவன் ஒரு தொடர்கதை

அவன் ஒரு தொடர்கதை..எச to Shiv K Kumar sir post

தலைச்சனாய்ப் பிறந்தது
தலைவவிதி இல்லையென்று
தலை நிமிர வைப்பான்..
தலைமுறைகள் புகழ்ந்திடவே..

பெட்டி போல அறையிலே
படுப்பர் நால்வர் அங்கே
பொட்டலச் சாப்பாடு வரும்
புளித்த தயிர் சாதத்துடன்.

உணவகம் பல உண்டு
ஊர் சுற்ற இடமுண்டு
முடங்கிக் கிடப்பா நினவனே
கிடங்கு அறை தனிலே

விடுப்புக்கு வரும் ஆசையிலே
விடிய விடிய உழைப்பான்
வளையலும்்  செயினு மாகும்
வங்கியில் சேர்த்த பணம்

சிக்கனம் நீயப்பா என
சுற்றம் கேலி செய்தாலும்
சிரித்தே மழுப்பிடுவான்..
சிந்தையில் ஆழ்ந்திடுவான்.

கடமைகள் முடிக்க..
கல்யாணம் நடக்கும்.
குழந்தைகள் வர
கதையும் தொடரும்.

வெளியூர் மாற்றலாகும்.
விட முடியா பள்ளிச்சீட்டு
வாட்ஸப்பும் வீடியோவிலும்
வாழ்க்கை நடத்திடலாம்
வந்த சந்தர்ப்பமிது
விட்டு விடாதே என்பாள்.

விடை கொடுத்தனுப்புவாள்
விலைவாசியும் கைகாட்டி..

பொட்டி அறை வாழ்க்கை
பொட்டலச் சாப்பாடு..
"செல்"லிலே வாழ்க்கை..( செல்- சிறிய அறை. ,ஃபோன்)
சேர்க்கணுமே இப்போது
செல்லங்கள் கண்மணிகள்
செழிப்பாய் வாழ்ந்திடவே..

அவன்..
ஒரு தொடர்கதைதான்

Wednesday, September 18, 2019

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..

ப்ளாட்ஃபார்மில் டிரெயின் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாச்சு..்.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற.
எல்லாத்தையும் ஒரு வழியா அடியில தள்ளி நிமிர்ந்தா..நங்குனு மண்டையில் ஒரு அடி..வேறென்ன..விரிக்கப்பட்ட மிடில் பர்த் வீங்க வெச்சது என் முன் சொட்ட மண்டையை. என் பொண்ணோ ..full energy ல் ஆட்டம்..மிடில் பர்த்தை போட்டு நொக்கு நொக்குனு நொக்கி தாளம் போட..மிடில் பர்த் மாமா குறட்டையில் ஆலாபனை செய்ய.எங்க கூ..சிக்கு புக்கு ரயில் பயணம் ஆரம்பம்..
நமக்குத்தான் 4 மணிக்கு முழிப்பு வந்துடுமே..வீட்டு ஞாபகத்தில் எழுந்திருக்க..மீண்டும் டொங்னு மண்டையில் ஒரு அடி..எங்கயும் காலை வெக்க முடியல..மெதுவா....முதுகை கோணலா ஒரு வளை வளைச்சு...தலையை மெதுவா நீட்ட..என் சிண்டை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சது மிடில் பர்த் சங்கிலி ..ஆ..வலி..கத்த கூட முடியல..
கால் எங்க வெக்கறது..சாமானெல்லாம் தூங்கிண்டிருக்கே..ஒரு வழியா சமாளிச்சு எழுந்து ..அப்பர் பர்த் ல் அக்கடானு தூங்கிண்டிருந்த அகத்துக்காரரை எழுப்பி..கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கோங்கோ..நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..அப்ப்போதான் முதல் ரவுண்ட் வர காபி எனும் கஷாயத்தை குடிக்க முடியும்னு சொல்ல..அம்மா தாயே..வீட்ட்ல தான் அட்டகாசம்னா..இங்கேயுமா..சரி சரி போய்ட்டு வானு வழியனுப்பி வெச்சுட்டு..வாய் பிளந்து தூங்க
. டாண்ணு ஆறு மணிக்கு என் காது குளிர' காபி..காபி'..'சாய்..சாய்' சத்தம்..என் பெர்த் கிட்ட வந்துட்டார் ..ஒரு காபி குடுங்க..சொன்னதுதான் தாம்தம் கொதிக்க கொதிக்க பேப்பர் கிளாஸில் ரொப்பிட்டு..madam 10 ரூபாய் தாங்க..
ஒரு நிமிஷம் ப்பா..பர்ஸ் பெண்ணின் தலைகாணிக்கடியில்...மெதுவா உருவலையோ.நான் அம்பேல்..ஆட்டம் ஆரம்பிப்பாளே..ஒரு கையில் காபி..மறு கையில் காசு..அப்பத்தான் ட்ரெயின் டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிக்க..என் கையிலிருந்த காபியும் சேர்ந்து ஸ்டெப்ஸ் போட..கடைசியில் எனக்கு கிடச்சது 2 ரூபாய் காப்பிதான்.
காபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்..ஆனந்த சயனத்தில் என்னை சுத்தி எல்லாரும். எனக்கோ வேடிக்கை பார்க்கணும்..
சூரியன் அழகா வெளிய வருமே..மேகமெல்லாம் என்னோட ஓட்டமா ஒடி வரதைப் பாக்கணும்..
மரம் வேகமா ஓடும்..சின்ன சின்ந பாலங்கள்..வயல்வெளி..மாட்டு வண்டி..
ஒவ்வொரு ஊர் ரெயில்வே கேட் கிட்ட நிக்கற ஸ்கூல் பசங்கள் பார்க்கணும்.
குட்டி ஸ்டேஷன் எல்லாம் ஓடி ஓடி வந்து தண்ணியும் ஒட்டகப் பாலும் விற்கும் குட்டீஸ். கொய்யா..ஆரஞ்சு வித்து ரெயில் கிளம்பிடுமோங்கிற பயத்தில் சிறு வியாபாரிகள்..
இத்தனையும் பேரழகன் சூர்யா போஸ்ல உட்கார்ந்த படியே ரசிச்சபடி ..
கொஞ்ச நேரமா ஒரே சைடாகிப்போன கழுத்தை அம்மா...என்று அழைத்தபடி என் பெண் ஒரு திருப்பு திருப்ப..ஆ..வலி..வலி..

அந்தக் கோணக் கழுத்தோடயே பால் கரைத்து கொடுத்தாச்சு்....கொஞ்ச நேரத்தில் இட்லி ஊட்டல்..தோசை தோசை விளையாட்டு .. தண்ணி கொட்டி ஈரமான துணியை மாற்றல் எல்லாம் இனிதே நடந்தேற..' சார்..லஞ்சுக்கு என்ன வேணும் உங்களுக்குனு pantry service கேட்க..
ஒண்ணுமே தெரியாதது போல மிடில் பர்த் மாமா..என்ன லஞ்ச்சா..நான் இன்னும் breakfast ஏ சாப்பிடலையேனு (விவேக் ஸ்டைலில)் ..இந்த மாதிரி long journey ல தான் நம்மைஅறியாம தூங்க முடியறது.. சரிப்பா..வெஜிடேரியன் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்துடு என்றபடி பல் தேய்க்கப் போனார்..எனக்கோ அப்பா..விடுதலை..திரும்பி வந்து பர்த்தை மடிச்சுடுவார்..மடங்கின என் கழுத்தும் பிழைக்குங்கிற நினைப்பில் மண்ணைப் போட்டார் மகானுபாவர்..மீண்டும் தன் berth ல் ஏறி படுத்தபடி..
ஆங்..சொல்ல மறந்துட்டேன்..upper berth ல் படுத்திருந்த என்னவரை நாங்கள் அடித்த லூட்டி ஒரு வழியாய் எழுப்ப..நீயாச்சு உம்ம பொண்ணாச்சுனு  ரெண்டு பேரையும் கோர்த்து விட்டு..நான் கொட்டாவிக்கு பதில் சொல்ல குறட்டை விடலானேன்.
ரயில் பயணம் என்றும் சுகம்..மிடில் பெர்த் இடித்தாலும்..
இனிமே ஆறு மணிக்கு எல்லாரையும் எழுப்பிடுவாங்களாமே..
பரிதாபம்..அந்தோ பரிதாபம்..பாட்டு தான் இப்போ மனசில ஓடறது

Tuesday, September 10, 2019

Ammaa

10 th September.

கவனிப்பார் யாருமில்லையென
கலங்காத என் வீட்டு செடிகள்.

வறண்ட நாட்களும்
வர்தா புயலும்
வந்தும் தான் போயின.
வாடிப் போனாலும்
வாரி அடித்து சென்றாலும்.
மீண்டு(ம்) எழுந்தது
மருந்தான மணத்தக்காளியும்..
மணம்  தரும் கருவேப்பிலையும்.

அம்மா..இட்ட உரம்..
மரஞ்செடிக்கு மட்டுமல்ல..என்
மனதுக்கும் கூடத்தான்..
miss u maa

Friday, September 6, 2019

என் ஜீவன் நீதானே

#படம்_பார்த்து_கதை
#madhyamar_Sunday_special க்காக எழுதிய so called என் கதை.

#என்_ஜீவன்_நீதானே

"ஏங்க..அந்த நியூஸ் பேப்பரை நொட்டுறு பண்ணது போதும்.மடமடனு குளிச்சு டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் .

 மார்க்கெட்டில் போய் ஃப்ரஷ்ஷா காய் வாங்கிட்டு, அப்படியே அரிசி மண்டில சாமான் லிஸ்ட் கொடுக்கணும். பாங்க் வேற நாலு நாள் இருக்காதாம் . கொஞ்சம் பணம்  எடுக்கணும். ஒரேடியா முடிச்சுட்டு வந்துடலாம்' கட்டளை பறந்தது காவேரி அம்மாளிடமிருந்து.

"ஏம்மா..உன்னோட வேடிக்கை பார்த்துண்டு வரதுக்கு ..நீ ஒரு ஒரு காயும் பழமும் வாங்கறதுக்குள்ள காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுமே..

நான் பாட்டு அக்கடானு டீவி பார்த்துண்டு இருப்பேனே' ..சுந்தரம் சொன்னதை கண்டுக்காமல் ஜருகண்டியில் இறங்கினாள் காவேரி.

சுந்தரம் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். காலையில் போனால்..வீடு வர பாதி ராத்திரி ஆகிடும். பசங்க படிப்பு, ஸ்கூல், வீடு ,உள் வேலை, வெளி வேலை எல்லாம் காவேரி தான். பையன்கள் ரெண்டு பேரும் நல்ல வேலையில் வந்த பிறகு ..வயதும் ஆகி விட்டதால் கடை வேலைக்கு போவதை நிறுத்தி இரண்டு வருடமாச்சு.

தினமும் இதே கூத்துதான். தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியே இழுத்துச் சென்று விடுவாள்.

அன்றும் அப்படித்தான்..வெளியே போய் வந்து..சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசர, ஏதோ முனகல் சத்தம் அவரை எழுப்பியது. காவேரி தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.

மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. "காவேரி.".. "காவேரி"..அவர் குரல் காதில் விழவில்லை அவளுக்கு...கண் மூடினாள்.
சுந்தரம் சுருண்டு போனார். தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். விட்டத்தை் பார்த்தபடி..

" நாளையிலேர்ந்து காரியம் ஆரம்பிக்கணும். காய்கறி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு..சாமான் ஒண்ணு விடாம ரெடி பண்ணி வெச்சுக்கணும்.."
மருமகள்கள் பேச்சுக் குரல்..

ஏதோ மண்டையில் அடித்தாற்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து எப்போதும் எடுத்துப் போகும் பைகளை எடுத்தார்.
"கொடுங்கம்மா..எல்லாத்தையும் பார்த்து நான் வாங்கி வந்துடறேன்.."..

"மாமா..நீங்க?...மருமகள்கள் கேட்க..
" எனக்கு ஒவ்வொண்ணும் உன் மாமியார் சொல்லிக் கொடுத்திருக்காம்மா..நீங்க உள் வேலையை கவனிங்கோ..நான் போய்ட்டு வரேன்".
அவர்கள் எப்போது காய்கறி வாங்கும் பெருமாள் கடை முன் நின்றார்..

"நல்ல பிஞ்சா பார்த்து நானே பொறுக்கி எடுத்துக்கறேனேப்பா..'..காவேரியின் குரல் அங்கே அவருக்கு மட்டும் கேட்டது..

Tuesday, September 3, 2019

கொடுப்பினை..படம் பார்த்து கதை

#சண்டே_ஸ்பெஷல்...
#madhyamar_Special. எல்லா வாரமும் ஒரு புது விதமாக தலைப்பு கொடுத்து ..சிந்தனை தூண்டும் விதம் எழுதத் தூண்டும் இடம்.

இந்த வாரம்  #படம்_பார்த்து_கதை.
4 படங்களில்..மூன்று படத்திற்க்கு எழுதினேன்.
அதில் இந்த படத்துக்கு என் கதை..

#கொடுப்பினை

"ஏங்க..இந்த அரை டிராயரைப் போட்டுண்டு வெளிய வராதீங்கனு எத்தனை தடவை சொல்றது..அவங்க எல்லாம் என்ன நினைச்சுப்பாங்க" என்று கிரிஜா கேட்கவும்.."போடி போ..என் ட்ரஸ்ஸை யார் பார்க்கப் போறாங்க அங்கேனு" நக்கலடித்தபடி கைலாசம் மாமா.

அந்த பெரிய பில்டிங்கின் கேட் முன் சென்றதும்..வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி சலாமடித்தபடி.." எல்லாரும் உங்களுக்காக தான் காத்துக்கிட்டிருக்காங்க ..போங்க சீக்கிரம் நு வாய் நிறைய வரவேற்றான்.
இண்டர்காமில் சொன்னது தான் தாமதம்..

"சகலை..வந்துட்டீங்களா..' மூணாவது மாடிலேர்ந்து மாதவன்.
டேய்..கைலாசம்..சீக்கிரம் வர மாட்டியா..கிளம்பணும் கிளம்பணும்னு கால்ல கஞ்சியோட பறப்பியே அப்பறம்..சீனு பெரியப்பா சிட்டாய் வந்தார்.
அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்த சேகர்..வாரத்தில் இந்த ஒரு நாளுக்காக தாண்டா காத்திண்டு இருக்கேன் என்று நட்பின் உரிமையோடு..

ஏய கிரி்ஜா..வந்தாச்சா..வா..வா..இங்க க்ளப் ஹவுஸில் எல்லாரும் உனக்காக தான் காத்திட்டிருக்கோம். அவள் கையை இழுத்தபடி..கோமதி மாமி.

தன் கையில் கொண்டு வந்திருந்த கிருஷ்ண ஜயந்தி பட்சணமெல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாள் கிரிஜா

சொல்லு சொல்லு ..போன வாரம் கல்யாணத்துக்கு போனியே..எப்படி இருந்தது..?
யார் யார் வந்தா..என்ன மெனு.. வரிசையாக் கேள்விகள்.
இவர் செளக்கியமா..அவர்கள் செளக்கியமா.. ஒருத்தரை விடாமல் விசாரிப்புகள்.
அந்தப் பக்கம்..கைலாசம் மாமாவுடன் சேர்ந்து வெடிச் சிரிப்பு சத்தம் அந்த காம்பவுண்ட்டிலே எதிரொலித்தது..

மணி அஞ்சு அடிக்கவும்..கைலாசமும் கிரிஜாவும் கிளம்ப ஆரம்பிக்க..இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போங்களேன் என்று அன்புக் கட்டளைகள்.

ஒரு வழியா..அஞ்சே முக்காலுக்கு..இனிமே ரொம்ப நேரமாகிடும்..கிளம்பிடுங்கோனு அவர்களே சொல்ல..அடுத்த வாரம் பார்க்கலாம்
அந்த காம்பவுண்டு கேட்டை கடக்கையில்..
"happy old age home ' என்ற பெயர்ப் பலகையின்  பின்..கலங்கிய கண்களுடன் .கை..வலிக்க வலிக்க ..டாட்டா காட்டிய உறவு மற்றும் நட்புகள்.

"அப்பா..எங்கே இருக்கீங்க..நான் வந்து பிக் அப் பண்ணட்டுமா?"..என்ற மகனின் குரல் தேனாய் காதுகளில்..

Monday, September 2, 2019

Bandh day

எழுந்திருக்க மனமிலா..
சோம்பலான காலை..
எடுப்பாரன்றி..
வீசி எறியப்பட்ட...செய்தித்தாள்
தூக்கில் தொங்கும் பால் பாக்கெட்..
எதுக்குமே வாசப்படி இறங்க வேண்டாம்..
எது இருக்கோ..அதே போதும்..
அடைப்பட்ட குழந்தைகள்..
சனி ஞாயிறை விட..
சுகம் தருதோ..??

சுற்றி எல்லாரும் இருக்கும்..
சுறுசுறுப்பை சூறையாடும்
சிற்றின்பம் சிலருக்கும்..
பேரிழப்பு ..
பொருளாதாரத்துக்கும்..
தரும்..
வேலை நிறுத்தங்கள்..
வழி காட்டுமா..
வளர்ச்சிக்கு..!!!!

Friday, August 30, 2019

மாகிமை

மாகி(மை)
maggiyananda Mayi.என் கடைக்குட்டியின் செல்லப் பேர் ஒரு காலத்தில். A for apple சொல்லும்போது கூட M for maggiனு சொல்வோம் நாங்க.மாகி ban ஆனப்போ ஆடிப்போன குடும்பத்தில் நாங்களும் ஒண்ணு.
மாகி படைத்து விட்டால்
மாமலையும் ஓர் கடுகாய்
மளமளனு வேலை நடக்கும்.
காலம் மாறித்தானே போகும்.

ஏன்னா...இப்போ கொஞ்சம் வளர்ந்துட்டோமே.. weight conscious..diet plan..etc..etc..மாகிக்கு வந்தது முதல் வேட்டு.பாக்கெட் பாக்கெட்டா ரொம்பி வழிஞ்சது போய்..
போதும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரு மாசத்துக்குனு மனதை அடக்க ஆரம்பிப்பு.
இரண்டு நாள் முன்னாடி ..இருந்த பொட்டலமெல்லாம் காலியாக எங்களுக்குள் நடந்த conversation.
அவள்: அம்மா..மாகி காலி.வாங்கிண்டு வா. ஒரே ஒரு பாக்கெட் போதும்.என்னை tempt பண்ற மாதிரி offer ல கிடச்சுதுனு அள்ளிண்டு வராதே.ஆமாம் சொல்லிட்டேன்.
நான்: அட என செல்லமே மாகியானந்தமயி..உன் சித்தம் என் பாக்கியம்.
பையை தூக்கிண்டு கடைக்கும் போயாச்சு.எல்லா சாமானும் வாங்கினப்பறம் என்னவோ மிஸ் ஆறதேனு மண்டை குடைய..(மைண்ட் வாய்ஸ் இதுக்குத்தான் வயசான காலத்தில லிஸ்ட் எழுதிண்டு வரணுங்கறதுனு என்னை உசுப்பித்து.)
பில் போடும் வேளையில் ..கண்டேன் சீதையை..மாகி ..மாகி..வரிசையா அடுக்கி வைத்தபடி ,என்ன தேடறீங்க அக்கா..என்னைக் கேட்டாள் கடையில் வேலை செய்யும் பெண்.இதே தான் ம்மா..
ஒரு பாக்கெட் கொடு என்றேன். பழக்கப்பட்ட அவள் சொன்னாள்..அக்கா இப்போ ஒரு பாக்கெட் வாங்கினா ஒரு சூப்பர் மாகி bowl free க்கா..இந்த offer
இப்பவே முடிஞ்சிடும் . ஒரு இரண்டாவது எடுத்துப் போங்க என்றாள்..ஓசிக்கு ஆசை யாரை விட்டது. very colorful and catchy bowl. வாங்கியாச்சு.
வீட்டுக்கு வந்ததும் மகளைக் கூப்பிட்டு மாகி இந்தாம்மா என்றேன்.
யக்..இது யார் கேட்டா..எனக்கு இந்த flavour பிடிக்காதே..அதைக் கூட பாக்க மாட்டியா.. ஏம்மா free கிடைச்சதால்் என் favourite மறந்து போச்சா ..சரி சரி..போ..adjust பண்ணிக்கறேன் இந்த டைம் என்றாள்.
டீவில  ஓடிக் கொண்டிருந்த ரஜினி பாட்டு..என்
காதில் இப்படி விழுந்தது..

cupக்கும் , glassக்கும், spoonக்கும் ஆசைப்பட்டு..
வாழ்கின்ற வாழ்வுக்கு
என்றைக்கும் அர்த்தமில்ல..
இதைப் புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..?
 culprit நான் தானே?

Shopping

புடவை ஷாப்பிங்.

காலேஜ் ethnic day..
கனவுடன் பட்டாம்பூச்சிகள்..

கறுப்பு கலர்..
கண்டிப்பா கலந்து இருக்கணும்..

கட்டிண்டால்..
கரீனா கபூர் மாதிரி தெரியணும்.

கண்ணை பறிக்கும் ஜரிகை கூடாது
கண்ணு போடறாப்போல இருக்கோணும் என் செலக்‌ஷன்..

கண்டிஷன் ...கடகடவென்று
கடைக்குட்டியும் போட்டாளே..

கூல் டிரிங்க்கும் கையுமா
கடை கடையா ஏறி இறங்கல்..

கலர் பிடிச்சா .பார்டர் படு 'போ'ர்
பார்டர்  பிடித்தாலோ..
ப்ளவுஸும் ஃப்ளாப்பாச்சு..

மால்கள் சுத்தி வந்தும்
மனசுக் கொண்ணும் பிடிக்கலை.

பெரிய கடைகளில் எல்லாம்
பெரிசா ஒண்ணும் புதுசா இல்லை..

பக்கத்து பொட்டிக்(boutique) கடையில்
புதுப்புது டிசைனில்
பளிச்சுனு புடவை கிடைக்க..
பிரித்து கட்டி அழகு பார்க்க
பிரமித்து நின்றேன்..
பாரம்பரிய உடை அழகே தனிதான்.

ethnic day க்கள்..
அடிக்கடி வரட்டும்..
எங்கோ மூலையில்..ஈனஸ்வரத்தில்
என் மைண்ட் வாய்ஸ்

Wednesday, August 21, 2019

தேடல்

தேடல்
எல்லாம் வாங்கியாச்சா..
எத்தனை பேர் சாப்பாடு..
காலைல எழுந்ததும்..
காத்துல பறந்துடும் நேரம்..
காய் கறி நறுக்கி..
கோலத்துக்கு அரைச்சு..
சாமி உள் சுத்தம் பண்ணு
வெல்லம் பொடிச்சுடு..
விடு விடுனு வேலை ஆகும்..
கரெண்ட் போறதுக்குள்ள..
grinder ,mixie வேலையாகட்டும்.
சமையல் மேடை ..
சகதியா இருக்கப்படாது..
பளிச்சுனு இருக்கணும்...
கீழ மேல சிந்தாமல்..
பாந்தமாய் வேலை செய்யனும்..

மாமி வந்தாச்சு பாரு..
நலங்கிட்டு..நமஸ்காரம் பண்ணு..
நன்னா..சாப்பிடுங்கோனு..
நாலும் கேட்டு பறிமாறு..
இந்த புடவை எடுப்பா அமைஞ்சிருக்கு..
நன்னா..select பண்ணியிருக்கே..

சாயந்திரம் சஹஸ்ரநாமம் பாராயணத்துக்கு..
சுண்டலும்..கேசரியும் பண்ணு..
பையில வெத்தல பாக்கோட
பழமும் தேங்காயும்...
pack பண்ணி வெச்சுடு...
பாராயணம் முடிஞ்சு..
எல்லாரும் போயாச்சு..
காலம்பறலேர்ந்து..பம்பரமா சுத்திட்டே..
நாளைக்கு லீவு நாள் தானே..
நிம்மதியா கொஞ்சம் தூங்கு..
நல்லபடியா எல்லாம் ஆச்சு..

எப்போதும் போல் என் அம்மா..
என்னை....ஆட்டுவிக்க..
எனக்குள்ளே ஒரு கேள்வி..!!!

இத்தனை பேரில்..
யாராய் நீ வந்தேம்மா.
எப்போ வந்தே..
எனக்கு அடையாளம் தெரியலயே..
நான் கவலையாய் கேட்க..
புன்னகை ஒன்றே பதிலாய்..
photo வில் நீ..