சூலமேந்திய..
சக்தி நானும் தான்
தேடும் அசுரன் ..
வேறெங்குமில்லை..
என் கோபத்திலே..
என் குரூரத்திலே..
என் ஆசையிலே..
விளையும் பேராசையிலே..
என் எண்ணத்திலே..
என் செயல்களிலே...
என் பேச்சினிலே..
என்னை ஆட்டுமிவனை..
தசமி நாளிதில்..
தகனம் செய்கிறேன்..
தேவியே..
உயிர்த்தெழுதல்...
வேண்டாமே இவனுக்கு..
No comments:
Post a Comment