Thursday, October 5, 2023

Madhyamar-பொறுப்பு

 #Sunday_topic


#பொறுப்பு.


"பொறுப்பு என்பது முள்கிரீடம்..அது தூங்க விடாது."


சங்கர் சார் பதிவில் எழுதியிருந்த இந்த வாசகம் ஏனோ மனதைக் குடைந்தபடி இருந்தது..


பொறுப்பு ...இந்த வார்த்தை பிறந்ததிலிருந்து கேட்கும் ஒரு வார்த்தை..


பொறுப்பா நடந்துக்கோ..

பொறுப்பா பேசு..இப்படியே சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாம்.

இங்கே பல பதிவுகள் படித்தபோது ஒரு self appraisal செய்ய முடிகிறது.


Yes..நான் இதே மாதிரி situation ல் நான் என்ன செய்தேன் என்று யோசிக்க வைத்தது.


இப்படியே அசை போட்டபடி போஸ்ட் ஆஃபிஸில் அப்பாவுக்க்காக ஒரு speed post செய்யப் போனேன்.


வரிசையில் என் முன்னால் ஒரு 80+ தாத்தா அவர் கூட பொறுப்பா அவரின் college going பேத்தி போல இருக்கு.


"Passbook update பண்ணுவதற்கு நீ எதுக்கு தாத்தானு..அந்தப் பெண் கேட்க.

"இல்லமா..எனக்கும் கொஞ்சம் வெளி உலகம் பார்த்த மாதிரி இருக்கும்.

என்னதான் SMS ல வந்தாலும் இப்படி அச்சடிச்சு வாங்கி வெச்சுண்டால் தான் எனக்கு தூக்கம் வரும்னு '..தாத்தா..


அந்தப் பெண் குழந்தை ..

 ஓட்டை போட்ட கவுண்ட்டரில் கை நீட்டி..

பொறுப்பாய்..வேலை முடிக்கவும்..

' கொடு கொடு..எவ்வளவு இப்ப சேர்ந்திருக்குனு பார்க்கறேன்னு"..

பிடுங்காத குறை..


அரசாங்க ஓய்வூதியம் வாங்குபவர் என்று அவர் சொல்லாமலே புரிந்தது.


என் வேலை டக்குனு முடிய..

நானும் அங்கிருந்து நடையைக் கட்ட ஆரம்பித்தேன்.


அப்போது..


"தாத்தா..you have got so much money.. பேத்தி குதித்தாள்.


" இது போதாதே கண்ணம்மா'..இன்னும் இது போல ஒரு மடங்கு சேர்க்கணுமே..'


உடனே பேத்தி..துள்ளிக் கொண்டு..

" என் கல்யாணத்துக்கு சேர்க்கறயா தாத்தா...அப்ப நிஜமா இது போதவே போதாது.'..

கிண்டல் த்வனியில் அவள் சொன்னாள்.


"அதெல்லாம்..பொறுப்பா உன் அப்பாவும் அம்மாவும் ஜம்முனு சேர்த்து வெச்சிருக்கா..இந்த தாத்தாவோட துக்கினியூண்டு பணம் ..அதுக்கெல்லாம் போறாதுடா'...லேசாக குரல் கம்மியது.


' சரி ..பின்ன எதுக்கு பணம் சேர்க்கறேள்?..அப்பாவுக்கு பொட்டில போட்டு தரவா?..


' இல்லடா கண்ணா..தாத்தா ..வேற ஒரு காரணத்துக்காகப் பணம் சேர்க்கறேன்'...


காதைத் தீட்டி கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் ..அவர் எதுக்காக சேர்க்கறார்னு தெரிஞ்சுக்க ஆசை.


அதுக்குள்ள..மனசு கணக்கு போட்டது. 


தாத்தா is right. அவரோட கடைசி காலம் வரைக்கும் யாரிடமும் கை ஏந்தாமல் , தன் சொந்த செலவுகளும், மருந்து மாத்திரையும் ...

அதெல்லாம் விட பெரிய விஷயம்..டக்குனு கையில் காசிருந்தால்..தனக்கு மனசுக்கு பிடிச்சவங்களுக்கு உபகாரம் செய்ய தேவையாச்சே..அதுதான் பொறுப்பா ஒவ்வொரு காசும் இன்னும் சேர்க்கிறார்னு நான் நினைத்துக் கொண்டிருந்த போது ..டமால்னு ஒரு குண்டு போட்டார்.


ஜனனிம்மா..( அவர் பேத்தி பேரை இப்போதான் சொன்னார்).


இது எதுக்கு தெரியுமா?..

வாழறதுக்கு எப்படி பணம் தேவையோ..அது போலத் தான்..இந்தத் தாத்தா திடீர்னு மண்டையைப் போட்டேனா..

என்னோட ஈமக்காரியங்களுக்கும் பணத்தை வெச்சுட்டு போறது என் பொறுப்பு தானே..'..


இப்படி ஒரு ஆங்கிளா?..

நானும் ஜனனியும் அதே அதிர்ச்சியில் அவரைப் பார்த்தோம்.


' உளறாத தாத்தா'..


அவர்கள் பேச்சிலிருந்து புரிந்தது...

எதோ ஒரு இறப்புக்கு போய்ட்டு வந்த அவர் மருமகள்..." இப்போ எல்லாம்  சில லட்சங்கள் இல்லனா ..ஈமக்கிரியை கூட பண்ண முடியாது போல இருக்கு'


அந்த வார்த்தைகள்  தாத்தாவின்  மனசில் ஆழமா போய் உட்கார்ந்து விட்டது..என்பதை கதை போல சொன்னார்.


( ரொம்ப interesting ஆ இருந்ததா..அதான் ஒட்டுக் கேட்டுண்டே போனேன்.)


அவர்கள் தெரு வந்ததும் திரும்பி விட்டார்கள்..

ஆனால்.என் மனம் திரும்பத் திரும்ப அதே யோசித்தது.


எத்தனை பொறுப்புகளை சுமந்து, கடந்து..அப்பாடானு இருக்க வேண்டிய காலத்தில்..

இது எதுக்கு இவராகவே ஒரு பெரிய பொறுப்பு தனக்கு இருக்குனு மண்டையில் ஏற்றிக் கொண்டு....


மரணத்துக்குப் பின்னும் தன் குழந்தைகள் கஷ்ட்டப்படக்கூடாதுனு நினைப்பில்..மீண்டும் பொறுப்பாக ..குருவி போல பணம் சேர்க்கும் அவரைப் பார்த்து சிரிப்பதா..salute செய்வதா?..


வீடு வந்து சேர்ந்ததும்..

' எங்க..அந்த speed post receipt ஐ கொடு..பத்திரமா வெச்சுக்கணும்னு'..

86 வயதிலும் ...தன் பொறுப்பு..தன் கடமை..என்று இருக்கும் என் அப்பாவைப் பார்த்ததும்..


' அப்பா..you are a super man' என்றேன்.

என்ன ஆச்சு இவளுக்குனு அவரு யோசிக்க ஆரம்பிச்சுட்டார்..


பொறுப்புகள்..இதிலேர்ந்து 

தப்பிச்சு ஓடணும்னு .

.ready ..steady ..go ..

mode ல் பலர் இருக்க...

இது போல வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம்..


' தாத்தா கிட்டேர்ந்து கத்துக்கோ'.

எங்க வீட்டு குடும்ப வாசகம் இது..

No comments: