#சண்டே_ஸ்பெஷல்..
#வாழ்க்கையும்_பாடலும்
பாடல்கள் இல்லாத வாழ்க்கையா..?
எலக்ட்ரிக் ட்ரெயினில்..அந்த டடக் டடக் சத்தோடு..
சந்தத்தோடும் பாட்டு பாடி ..
சில்ல்றை கேட்க வருவோர் பலர்.
சிலர் பாடற பாட்டு..ரொம்ப அருமையா இருக்கும்.
ஹார்மோனியத்துடன்..கணீர் குரலில்..' இறைவனிடம் கையேந்துங்கள்..அவன் இல்லையென்று சொல்லுவதில்லைனு'....டெய்லி அவர் அந்த ஒரே பாட்டை பாடினாலும்..மனசுக்குள் அப்படியே ஒரு பந்து உருண்டு போகும்..
அம்மா கிட்ட எதுக்காவது காசு கேக்கணும்னா..இந்தப் பாட்டுதான்...கை கொடுக்கும்..😄😄💪💪💪
அடுத்து இன்னொருத்தர் மனைவி குழந்தைகள் ஹார்மோனியத்துடன் வருவார்.ஹிந்தி தான் பாடுவார்..
' ஏக் ப்யார் கா நக்மா ஹை..ஜிந்தகி அவுர் குச் பி நஹி..தேரே மேரே கஹானி ஹைனு.." பாடி முடிச்சுட்டு..ஒரு அர்த்தமுள்ள சிரிப்பு சிரிப்பாங்க..❤️❤️
அந்த லவ்வை பாருடினு ..கண்டிப்பா ஒரு கிசு கிசு அங்க ஓடும்..
சில நாட்கள்..பக்தி மணம் கமழும் ஒருத்தர் வருவார்..
வெங்கலக் குரலில் ' "திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதர் அரசாங்கம்'
அவர் பாடற பாட்டு ..அன்னிக்கு பூரா ..மனசில ரீங்கரிச்சு ..பக்தி பழமா ஆக்கிடும்..🪗🪗🪗
இப்படி ஒரு 🎵 கச்சேரி ஒரு பக்கம் நடக்க..
லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் ..ஏகத்துக்கு கச்சேரி, பஜனைனு நடக்கும்..
செவ்வாய் வெள்ளிக்கிழமை...
' கற்பூர நாயகியே கனகவல்லினு ஆரம்பிச்சு...செல்லாத்தா ..செல்ல மாரியாத்தானு '....
நம்மள சாமி ஆட வைக்கும் ஒரு ட்ரூப்..
ஆஃபீஸ் போற இளம்பெண்கள்..
தங்கள் மாமியாரோட படற பாட்டையும்..மறக்க..
பாட்டா பாடித் தள்ளுவாங்க..
' ஒரு தென்றல் புயலாகி வருமேனு"/..
ஆத்தீ..கொஞ்சம் ஸ்லோ மா..நாங்க கொஞ்சம் பரீட்சைக்கு படிக்கறோம்னு அப்பீல் பண்ணாலும்..அலட்டிக்காமா..அடித் தொண்டையிலிருந்து பாடி..களைப்பாங்க..
இப்படி மின்சார 🚃 ரயிலோடு..பாட்டுப் பயணம் ..
அடுத்து..
சம்சார சாகரத்திலும் நிறைய situation பாட்டு..
பாட்டில்லாத கல்யாணமா?..
பாட்டு போட்டியில்லா நலங்கா?..
ஒரு நெருங்கின உறவினர் வீட்டு கல்யாணம்.
நலங்கு..ஜாலியா நடக்க..
" ம்ம்ம்ம்..பொண்ணை ..ஒரு பாட்டு பாடச் சொல்லுங்கோ"..நேயர் விருப்பம் வர..
வெட்கம் தாங்காமல்.." உன்னை ஒன்று கேட்பேன்.. உண்மை சொல்ல வேண்டும்..என்னைப் பாடச் சொன்னால்..என்ன பாடத் தோன்றும்னு "...பொண்ணு பாட...
' வெள்ளி பனி உருகி ..மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்னு" ..பையன் பாட..
திடீர்னு பையனோட அம்மா..விசும்பி விசும்பி அழ ஆரம்பிச்சாங்க..
ஓஹோ..இந்த பாட்டெல்லாம் மாமிக்கு ரொம்ப பிடிக்கும் போலருக்குனு ..எங்க பாட்டி அவங்க கிட்ட..போய் சமாதானம் சொல்லப் போக..
" இப்பவே என் பையன் அவள் வலையில் விழுந்துட்டானேனு .'..கண்ணீரும் கம்பலையுமா...
ஒரு டூயட் ..இப்படி முதல்லயே மாமியாரும் மாட்டுப்பெண்ணும் டூ விட காரணமா போச்சே...
இதை விட அடுத்த பாட்டு..
அதே குடும்பத்தில் இன்னொரு கல்யாணம்.
நலங்குக்கு ரெடி பண்ணிக் கொண்டிருந்தா..
" அம்மா தாயே..ஒழுங்கா நல்ல பாட்டா பாடு..ஏடாகூடமா எதாவது பாடி வெச்சு..வாழ்க்கை பூரா இடி வாங்காதேனு'..
" அம்மா..chill maa'..பொண்ணு கூலா சொல்லிட்டு போய்ட்டா.
நலங்கு ஆரம்பிச்சது..
தேங்காய் உருட்டியாச்சு..அப்பளம் உடைச்சாச்சு..
இப்போ..பாட்டு டைம்..
"எதேதோ எண்ணம் வளர்த்தேன்..உன் கையில் என்னை கொடுத்தேன்.."..
அவள் பாட..
' நீ பாதி..நான் பாதி..கண்ணே'...
நானும் கல்யாணப் பெண்ணின் அம்மாவும் thumbs up செஞ்சுண்டோம்..
சம்மந்தி மாமி வாயெல்லாம் பல்லாக ..அப்படியே அங்கே எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்த மிக்ஸரை வாயில் போட்டதும்..
பெண் வீட்டு சைட்லேர்ந்து ஒரு குரல்..' சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்'...வெகு சங்கோஜக்காரி எங்கள்...'..
ஒரே வெடிச்சிரிப்பு..
பாவம்..சம்மந்தி மாமியும் சிரிப்பில் கலந்து கொண்டு..ரொம்ப ஜோவியலா இருந்தா..
சரி..நலங்கை முடிக்கலாமானு ..ஒரு குரல்..
" இன்னும் நான் எனக்கு புடிச்ச பாட்டை பாடவே இல்லையேனு "..கல்யாணப் பொண்ணு ஒரு குண்டைப் போட ..
பையனும் ஜொள்ளிண்டே..' உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில்னு'....
பாடும்மா ..பாடு..ஒரே cheer girls ..
தொண்டை கனைத்தபடி..
' இவன் யாரோ..இவன் யாரோ வந்தது எதற்காக..
சிரிக்கின்றான் ..ரசிக்கின்றான் எனக்கே எனக்காக..'..
பொண்ணு கை காட்டி காட்டி மாப்பிள்ளைய பார்த்து பாட..
பையனோட அம்மா..ஓரமா போய் நின்னு..விசும்பல்..
" ஏன் என்ன ஆச்சு'/.
" பாருங்கோ..என் புள்ளய எப்படி வளர்த்தேன்..இன்னும் கல்யாணம் ஆகி சில மணி நேரம் கூட ஆகல..' இவன் தானா ..இவந்தானானு ' கையை கையை.. காட்டி . எப்படி மரியாதையே இல்லாம பாடறா..'..
எங்கோ..கோபம்..எங்கோ வெடிக்க..
இந்த குடும்பத்துக்கும் நலங்குக்கும் ஆகவே ஆகாது போல இருக்கேனு...
விவேக் என் மை.வாய்ஸில்..
இந்தப் பாட்டெல்லாம் எங்கே கேட்டாலும் கொசுவத்தி சுத்தும்..
என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத..என்றும் என் கூடவே ..மனசுக்குள் பொத்தி வெச்ச பாட்டு.
என் கல்யாணம் முடிஞ்சு..கட்டு சாதம்..
😭 ஒரே அழுகை..நானும் அப்பாவும்..
எங்க அம்மா.. ..'அபியும் நானும்' ஐஸ்வர்யா மாதிரி..' இப்போ என்ன உங்க பொண்ணு கல்யாணம் ஆகித் தானே போறா..மானத்தை வாங்காதீங்கனு' மிரட்ட..
வேன் கிளம்பி..ஓசூரை நோக்கி.
ஓசூர் கிட்டக்க வந்ததும்..
என் நாத்தனாரும் நாத்தனார் ஹஸ்பெண்டும் ஒரு இடத்தில் இறங்கி..அங்கே நிறுத்தி வெச்சிருந்த பைக்கில் வீட்டுக்கு போய்ட்டா..
எங்க வேன்..ஆடி ஆடி..வீட்டை அடைந்தது..
வேன்லேர்ந்து இறங்கி..மாடிப் படி ஏறியாச்சு..
வீட்டு வாசல்ல நானும் அவரும் நிற்க..
ஆரத்தி தட்டுடன் என் நாத்தனார்..
ஹால்லேர்ந்து..சத்தமா..டேப் ரிகார்டர்லேர்ந்து..
"மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும் மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும் பொங்கிடுமே பொங்கிடுமே
குற்றம் குறை இல்லா ஒரு கொங்கு மணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும் வாழணும் வாழணுமே.."..
"தேவர் மகன்ல "வருமே அந்தப் பாட்டு..
அப்படி ஒரு சந்தோஷ feeling. எப்பவுமே..இருக்கும் ஒரு traditional பாட்டை விட்டுட்டு..
இது கரெக்டா நாங்க உள்ளே நுழையும் போது பாடணும்னு..வேக வேகமா முன்னாடி போய்..வீட்டை ரெடி பண்ணி..காஸெட்டை கரெக்டா செட் பண்ணி...
வாய் நிறைய புன்னகையுடனும் ,சந்தோஷத்துடனும் என்னை வரவேற்ற விதம் இருக்கே...
Hats off to my beloved sister in law.
ராஜா சார் இசை..அன்று நுழைய ஆரம்பிச்சது..இந்த மண்டைக்குள்...
அதுக்கப்பறம் என் cousin sister கல்யாணம் முடிஞ்சு அவளை கொண்டு விடப் போனபோது..என் வீட்டுக்காரர் மொபைல்லேர்ந்து இந்த பாட்டை பாட வெச்சேன்.
இப்படி எல்லாத் தருணங்களிலும் நம்ம வாழ்க்கையோட ஒன்றி இருப்பது இசை தான்..
இசையோடு இணைந்து இனிமையா வாழ்வோம்.

No comments:
Post a Comment