Showing posts with label அன்னை. Show all posts
Showing posts with label அன்னை. Show all posts

Tuesday, March 8, 2016

மகளிர் தினம்


சக்தி நீ..

சாந்தம் நீ..

புத்தி நீ..

பக்தி நீ..


அன்னை  நீ..

அணையிலா அன்பு நீ..

 துணைவி நீ..

தோள் கொடுப்பவள் நீ..

 மகள் நீ..

மண்ணின் சொர்க்கம் நீ...

 அக்கா நீ..

அக்கறையின் கரை நீ..

 தங்கை நீ...

தமயனனின் தங்கம் நீ..

 அத்தை நீ..

அன்பின் மொத்தம் நீ..

சித்தி நீ...

செல்லத் தோழியும் நீ..

 பாட்டி நீ...

வழி காட்டி நீ...
 
ஆசிரியை நீ...

ஆளாக்குபவள் நீ...

 ப்ரிய சகி நீ...

பேசும் தெய்வம் நீ...

தோழி நீ..

துணை யிருப்பவள் நீ..
 

உறவுகளின் உயிர் நீ..

உயிரின் ஓட்டம் நீ..
 
யாதுமாகி நின்றாய் நீ

அணுவும் அசையாது நீயின்றி..


 உலக மகளிர் தின மென்று

ஊரெல்லாம் கொண்டாட்டமின்று

உன்னத நிலை  நீ இன்னுமடைய

உடைத்தெ றிவாய் தடைகளுமே..

 
என் சமர்ப்பணம்

அகிலா