Thursday, October 5, 2023

Madhyamar-#sunday_topic #நாகரிகம் கட்டிய புது வீட்டில் கலைநயமிக்க தனியறை குழந்தைகள் மகிழவென்றே தட்டித் தான் செல்லணும் என்ற.. கற்ற புது நாகரிகம்..😊 கைப்பேசியின் கடவுச் சொல்லை.. காலன் வந்து கதவு தட்டினாலும் . கட்டினவனு( ளு)க்கும் .. காட்டாத நாகரிகம்🤣 கடைக்குள் நுழைந்து.. புடவை செலக்ட் செய்து.. கையில் வைத்து அழகு பார்க்க.. கலர் இது ரொம்ப நல்லாருக்கேனு .. கையிலிருந்து பிடுங்கி.. காசைக் கொடுக்கும் மக்கள் முன்னே.. காட்டாத கோபம்..நாகரிகமா?😄😄 கையேந்தி பவனில்.. காசுக்கு தண்ணீர் வாங்கி கொஞ்சம் மீதியிருக்கேனு.. கையிலடக்க.. கஞ்சப் பிரபு என்று ..கலாய்க்கும் கூட்டம் முன் காட்டாத..கோபம்..நாகரிகமா?😄😄 காய்கறிக் கடையில்... கணவன் முறைப்பாரே என்று.. கொசுறு வாங்காத சோகம்.. நாகரிகத்தின் உச்சமன்றோ..😄😄 குடும்பமோ..குழுமமோ.. கூட்டமா பேசும்போது.. குறுகுறுக்கும் எண்ணங்கள் கொட்டித் தீர்க்க நினைத்தாலும்.. கொஞ்சம் சும்மா இரு.. குறுக்கே பேசாமல் இருந்து... கடமையே கண்ணாயிருப்பதும்.. நாகரிக வகையன்றோ.😩 கத்திப் பேசாதே.. சுத்தி முத்தி பாரு. சொந்தக் கதை பேசாதே. வந்த வேலை மட்டும் பாரு.. வரிசையாய் கற்கிறோம்.. வாழ்க்கையின் வளைவிற்கேற்ப..🤔 நாகரிகம்.. நம்மை சுருக்குவதிலா?.. நாலு பேருக்கு பிடித்த மாதிரி நடப்பதிலா?.. Adjust செய்வதிலா? அடப்போப்பா..இதுதான் நான் என்பதிலா?🤦 நாகரிகம் என்ற பெயரில் நரகத்துக்குள் இருக்கோமா? நாகரிகம் என்பது.. நாலும் கற்று அறிவதிலா? நயமும் பண்புடன் இருப்பதிலா? நையாண்டி செய்து நோகடிப்பதிலா?.. நாகரிகம்..நாகரிகமாக.. நம்முள் வளரட்டும்.. நல்ல மணம் பரப்பட்டும்.🙏🙏

 #sunday_topic


#நாகரிகம்


கட்டிய புது வீட்டில்

கலைநயமிக்க தனியறை 

குழந்தைகள் மகிழவென்றே

தட்டித் தான் செல்லணும் என்ற..

கற்ற புது நாகரிகம்..😊


கைப்பேசியின் கடவுச் சொல்லை..

காலன் வந்து கதவு தட்டினாலும் .

கட்டினவனு( ளு)க்கும் ..

காட்டாத நாகரிகம்🤣


கடைக்குள் நுழைந்து..

புடவை செலக்ட் செய்து..

கையில் வைத்து அழகு பார்க்க..

கலர் இது ரொம்ப நல்லாருக்கேனு ..

கையிலிருந்து பிடுங்கி..

காசைக் கொடுக்கும் மக்கள் முன்னே..

காட்டாத கோபம்..நாகரிகமா?😄😄


கையேந்தி பவனில்..

காசுக்கு தண்ணீர் வாங்கி

கொஞ்சம் மீதியிருக்கேனு..

கையிலடக்க..

கஞ்சப் பிரபு என்று ..கலாய்க்கும் கூட்டம் முன்

காட்டாத..கோபம்..நாகரிகமா?😄😄


காய்கறிக் கடையில்...

கணவன் முறைப்பாரே என்று..

கொசுறு வாங்காத சோகம்..

நாகரிகத்தின் உச்சமன்றோ..😄😄


குடும்பமோ..குழுமமோ..

கூட்டமா பேசும்போது..

குறுகுறுக்கும் எண்ணங்கள்

கொட்டித் தீர்க்க நினைத்தாலும்..

கொஞ்சம் சும்மா இரு..

குறுக்கே பேசாமல் இருந்து...

கடமையே கண்ணாயிருப்பதும்..

நாகரிக வகையன்றோ.😩


கத்திப் பேசாதே..

சுத்தி முத்தி பாரு.

சொந்தக் கதை பேசாதே.

வந்த வேலை மட்டும் பாரு..

வரிசையாய் கற்கிறோம்..

வாழ்க்கையின் வளைவிற்கேற்ப..🤔


நாகரிகம்..

நம்மை சுருக்குவதிலா?..

நாலு பேருக்கு பிடித்த மாதிரி நடப்பதிலா?..

Adjust செய்வதிலா?

அடப்போப்பா..இதுதான் நான் என்பதிலா?🤦


நாகரிகம் என்ற பெயரில்

நரகத்துக்குள் இருக்கோமா?

நாகரிகம் என்பது..

நாலும் கற்று அறிவதிலா?

நயமும் பண்புடன் இருப்பதிலா?

நையாண்டி செய்து நோகடிப்பதிலா?..

நாகரிகம்..நாகரிகமாக..

நம்முள் வளரட்டும்..

நல்ல மணம் பரப்பட்டும்.🙏🙏

No comments: