Thursday, October 5, 2023

Madhyamar-என்னை_ஆச்சரியப்படுத்தும்_மத்யமர்

 #ஸண்டே_ஸ்பெஷல்


#என்னை_ஆச்சரியப்படுத்தும்_மத்யமர்.


என்னிக்கு friend ஆனோம்..எப்ப அரட்டை அடிக்க ஆரம்பிச்சோம்..

எதுவும் சுத்தமா நினைவில்லை..


மத்யமர் தளம் ஆரம்பிச்ச நேரம்..பதிவுகள் மூலம் தான் பரிச்சயம் அதிகமாச்சு.


ஆனைமங்கலத்தில் உதித்த

அற்புத மனிதரிவர்.


ஆயிரம் பிறைகள் கண்ட போதிலும்

அன்று போல் இன்றும் இளமையானவர்.


புனர் பூசத்தில் பிறந்த

பூலோக ரகுபதி இவர்.


வார்த்தை விளையாட்டு..

வாய் பிளந்து கேட்பேன்


வாஞ்சையான பேச்சு..

வரம் பெற்றேன் நானே..


அமெரிக்காவில் இருந்தாலும்..

அகிலாவை மறப்பதில்லை..


என்ன தவம் செய்தேன் நானும்..

இவர் போல் சான்றோர் நட்பு கிட்ட..🙏🙏🙏🙏


சார் என்று கூப்பிடத் தொடங்கி..

ரகுபதி மாமா என்று..

உறவு ..பலம் அடைய..

உள்ளத்து மகிழ்ச்சியை..

என்னவென்று சொல்லுவேன்..

எங்க குடும்பத்தில் இப்போ இவரும் ஒருவர்.


நான் வெளியே போகப் போறேன்னு சொல்லி இருப்பேன்.

கரெக்டா கிளம்பும் போது ..

'பத்திரமா போய்ட்டு வா'..மெசேஜ் வந்து விழும்.


ரகுபதி மாமாவுடன் என் டெலிபதி அப்படி.


லயோலாவில் படித்து, UPSC தேர்வெழுதி, பல உயர் பதவிகள் வகித்து, பல நாடுகள் பயணம் செய்து, தலாய் லாமாவை இந்திய அரசுப் பிரதிநிதியாகக் காணச் சென்று..இவரின் பணிக்காலப் பெருமைகள் எழுத பதிவொன்று போதாது.


இவரின் பேச்சைக் கேட்பதே ஒரு ஜாலி..

Pun உடன் பேசுவதில் பன்முகத் திறமையாளர்.


அமெரிக்கா அலப்பறையில் அசத்துவார்


மெல்லிசைப் போட்டியிலோ ..melody கிங்கானார்..


வாங்கி இருக்கும் பொட்டிகள் ஏராளம்.


முதன் முதல் மத்யமர் தளத்தில் #red_carpet வாங்கிய பெருமைக்குரியவர்.


அவர் காட்டும் அன்புக்கும் பாசத்துக்கும் ..இந்த அகிலா என்ன செய்யப் போகிறேன்னு ..மனசு நினைச்சாலும்..

அடப் பைத்தியமே.." You are so blessed' நு மைண்ட் வாய்ஸ் என்னை மண்டையில் தட்டும்.


நீங்க விற்punனராக இருந்தாலும்..

World பூரா சுத்தினாலும்..

வீற்றிருப்பவர் எங்கள் மனமென்னும் சிம்மாசனத்தில்..என்றும்


NY ல் இப்போ இருந்தாலும்..

I am near to you என்று ..

எங்க எல்லாரிடமும் ..

Communication ல் இருப்பவர்.


வாஞ்சை, வாத்ஸல்யம்,வாரி வழங்கும் அன்பு....இவரிடம் இருப்பது போல..எவரிடமும் கண்டதில்லை.


மத்யமர் தந்த அற்புத நட்பு....நீங்கள்.


மத்யமர் இல்லாவிட்டால்..இப்படி ஒரு மாணிக்கம் எங்கள் வாழ்வில் கிடைத்து இருக்க முடியாது.


Thanks to madhyamar and Shankar Rajarathnam  sir


என்ன தவம் செய்தனை..

Raghupathy N uncle.

feeling blessed


"என்னை இப்போ எடு ஒரு ஃபோட்டோ" என்று..

நீங்க கொடுத்த pose..அன்று 2019ல்.

No comments: