#ஸண்டே_ஸ்பெஷல் 09-06-22
#சின்னச்_சின்ன_சந்தோஷங்கள்
இலக்கே இல்லாமல் நடப்பதில் சந்தோஷம்..
அடுத்து என்ன பாட்டு வரும்னு ரேடியோவில் காத்திருப்பு சந்தோஷம்.😄
Agenda எதுவுமே இல்லாமல்..
I came just to see you என்று ஒரு தோழி சொல்லுவது சந்தோஷம்..
அவளோடு கை கோர்த்து கோயில் செல்வது சந்தோஷம்..🙏
கூட்டத்தில் முண்டியடித்து ..பகவானின் முக தரிசனம் கிடைத்தால் சந்தோஷம்..😊
மணமணக்கும் பிரசாதம்..மடக்கு மடக்குனு விழுங்குவது சந்தோஷம்..🤤
பஸ்ஸில் உட்கார்ந்து பராக்கு பார்த்து ஊருக்கு செல்வது சுகம்..
ரயிலில் ஓரச்சீட்டில் உட்கார்ந்து..
காற்று தழுவ..கடக்கும் மரங்களுக்கு டாட்டா சொல்வது சந்தோஷம்.
வாழ்த்து சொல்வதில் சின்ன
சந்தோஷம்..
கவிதையோ,கார்டோ..என் கையால் செய்து கொடுப்பதில் சின்ன சந்தோஷம்..
புதுசா உருவாக்கின...
குண்டக்க மண்டக்க டிஷ்ஷுக்கு..பாராட்டு குவியும் போது சின்ன சந்தோஷம்.🤣🤣🍨🍧
உதிரிப்பூ வாங்கி தொடுத்து ..மாலை சாற்றி அழகு பார்ப்பத்தில் சின்ன சந்தோஷம்..
டயலாக் ஒண்ணு விடாமல் தெரிந்தாலும்..ஆயிரமாவது முறையாக ..டீவியில் ..மீண்டும் மீண்டும் மெளனராகம் பார்ப்பதில் சின்ன சந்தோஷம்..💪💪💪
ராஜா சார் பாட்டில் ..ஐயோ..இது எந்த பாட்டில் வரும் interlude நு மண்டை பிச்சு..விடை கிடைச்சதும்..சின்ன சந்தோஷம்.💪
சுமார்னு நினைச்சு வாங்கின புடவை..சூப்பரா இருக்குனு சுற்றம் நட்பு பாராட்டும்போது..சின்ன சந்தோஷம்.🤣
அடுத்த முறையும் உன் வீட்டுக்கு கண்டிப்பா வருவேன்னு..முதல் முறை வந்த விருந்தாளி . சொல்லிட்டு போகும்போது சந்தோஷம்..🙏
நல்ல சுட்ட அப்பளத்தில்..நெய் ஊற்றி..அது உருகி ஓடும்போது..நொறுக்கி சாப்பிடுவதில் சந்தோஷம்..🤤
நான் இன்னிக்கு உனக்கு உப்மா பண்ணித் தரேன்னு.daughter சொல்லும்போது ..துளிர் விடும் சந்தோஷம்..😄
வேலையெல்லாம் முடிச்சதும்..gas cylinder தீர்ந்து போனால் ஒரு குட்டி சந்தோஷம்..🤣💪
நதிக்கரையில் மெல்ல மெல்ல கால் வைத்து ..சில்லிப்பை உணரும் போது சின்ன சந்தோஷம்..
அங்கே மரத்தில் பாடும் குயில்..என் குரலுக்கு எச பாடும்போது சின்ன சந்தோஷம்..
காக்கா ..குருவி..புறா கூட ..என் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் சின்ன சந்தோஷம்.
சந்தோஷம் ..சின்னதோ பெரிசோ..எந்தக் கடையிலயும்..என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காதுனு..கொஞ்சம் கொஞ்சமா புரிவது..சின்ன சந்தோஷம்..
இந்த சந்தோஷம் போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமானு கடவுள் நம்மள கேட்கற மாதிரி கனவு வரும்போது..
சின்ன..பெரிய சந்தோஷம்.😄😄
இன்னிக்கு பாருங்க..பருப்புத் தேங்காயை ஃபோட்டோ எடுக்க போனால்..அதில் பிள்ளையார் உருவம் தெரிஞ்சால்..சின்ன சந்தோஷம்..
கரெக்டா..??


No comments:
Post a Comment