Thursday, October 5, 2023

Madhyamar-ஜோதிடம்

 #sunday_special 28-10-21


ஜோதிடம்..

இந்த வார்த்தைக்குள்ளேயே இருக்கு..திடம்.


கொட்டப்போகுது அதிர்ஷ்டம்னு சொல்லும்போது ..மனசே அடங்குனு திடமா இருக்கணும்..


குழில விழ வாய்ப்பு இருக்குணு சொல்லுப்போதும்..

மனசில் வேண்டும் திடம்


நான் காலேஜ் படிக்கும்போது ..எங்கம்மா என் ஜாதகத்தை ரொம்ப தெரிஞ்சவரிடம்   காட்ட....

' இனிமே தான் நீ ஜாக்கிரதையா இருக்கணும்னு ஆரம்பிச்சு..

இவளுக்கு நடக்கற நேரம் இருக்கே...

பஸ்ஸுக்காக பல மணி நேரம் காத்திருப்பாள் ஆனால் ,அது வந்து நிக்கும்போது ஏற மாட்டாள்"..

அம்புட்டுதேன்..

" அம்மா பஸ் லேட்டுனு " சொன்னால் போதும்..

"அதான் ..அவரே.. சொல்லிட்டாரே.." அங்கலாய்ப்புகள்.


Actually, சிட்டியை விட்டு ஒதுக்குப்புறமாக வீடு வாங்கி விட்டு, இரண்டு மணி நேரத்துக்கு ..ஒரு பஸ் வரும். அது ஏற்கனவே ரொம்பி வழிய..போனால் போகட்டும் போடானு ..பாட்டுப் பாடி..பொடி நடையா போறவளேனு..நம்ம மை வாய்ஸ் உள்ளே சோக கீதம் பாட..

வீட்டுக்கு வந்தால்..அம்மா செண்டிமெண்ட்..


Human psychology எப்படினா. முதல்ல ஒரு நல்லதுனு நடக்கும்னு நம்பிக்கை கிடைச்சால் போதும்..எத்தனை கெடுதல் க்யூவில் நின்றாலும் வெட்டி வீழ்த்த முடியும்..

நமக்கு.. ஸ்டார்ட்டிங்கே trouble ஆக..அப்புறம் ஒதுங்கிடலாம்னு ஒரு எண்ணம் தோணிப் போச்சு..


அப்படியும்....நப்பாசை யாரை விட்டது. அவர் சொல்றது சரி..இவர் சொல்றது சரினு ..வாழ்க்கையில் போராட்ட விளிம்பில் இருந்தபோது..இது உதவுமோ என்று..ஊன்றுகோல் தேடியதுண்டு..


ஆனால் ஒன்று மட்டும் தெளிவா புரிஞ்சது..

அகிலா..உனக்கு இது செட்டாகுதுனு ..நயன்தாரா ஸ்டைலில் சொல்லிக் கொண்டு..


பகவானிடம் பூரண சரணாகதி ஒன்றே போதும்....எந்தக் கர்மாவிலிருந்தும் விடுபட முடியாது..ஆனால் at least இந்த ஜன்மாவில் நல்ல சிந்தனை ,நல்ல சொல் ,நல்ல செயல்னு இருந்து கொண்டு, கண்ணுக்கு தெரியும் தெரியாத எதிரிகளிடம் போராட தெம்பு கொடு பகவானே..


சரி தானே நான் சொல்றது.


நம்ம வாழ்க்கையின் steering நமக்கு மேலே ஒருத்தன் இருக்காரே..நம்மை இந்த உலகுக்கு அனுப்பினாரே ..அவரிடம் தான் இருக்கு.


நாம் செய்யும் நல்ல செயல்களில், நாம் பேசும் சொற்களில் ,நம் தூய்மையான எண்ணங்களில் இருக்கு வாழ்க்கையின் அடிநாதம்.


கேட்காதவரை குழப்பமில்லை.

வாழ்க்கை அதன் பாதையில் போகும் . 


"அவர் என்ன சொல்லப் போகிறாரோ"..என்று மன உளைச்சலில் இருப்பதை விட..


"அவன் எல்லாம் பார்த்துப்பான்..இவ்வளவு தூரம் படைத்தவன்..படுத்தினாலும்

பொழிவான் கருணை மழையைக் கண்டிப்பாக ...என்று அதீத நம்பிக்கையில்  ஓடும் எங்கள் வாழ்க்கை வண்டி..


ஒரே மாதிரி உடல் உபாதைகள் இருந்தாலும்..ஒருத்தருக்கு ஒத்துக் கொள்ளும், நிவாரணம் அளிக்கும் மருந்து..மற்றொருவருக்கு சிறிது கூட பலன் கொடுக்காமல் போகும்..

அது போலத்தான்..நமக்கு ஒத்து வரலைனு ..நகர்ந்தாச்சு..

இங்கு நிறைய பேரின் பதிவுகள். ..அவர்களுக்கு கிடைத்த வழிகள் படிக்கும் போது..அதுக்கும் சேர்த்து அதிர்ஷ்டம் வேணும்னு தோணுது..


ஆண்டவன் சொல்றான்..நம்பள் கேக்கறான் ..அவ்வளவுதான்

No comments: