#சண்டே_ஸ்பெஷல்
மனம் வலித்த தருணம்(ங்கள்)
கீழ விழுந்து..அடிபட்டு இருக்குனு தெரிஞ்சும்..சில குழந்தைகள் சத்தம் போடாம கண்டிக்காம இருக்கும்.
அப்போ..யாராவது கூப்ட்டு..' வலிக்கிறதா கண்ணானு..கேட்கட்டும் பாருங்க..
குழந்தை ஓனு அழும்.அது ஓலத் தானே..நாங்களே தட்டி விட்டு ஓட நினைச்சாலும்..தட்டி எழுப்புனு தலைப்பு கொடுத்த தலைவரே..
வாடகைக்கு குடியிருந்த வீடுகளில்..கொடுத்த வலிகள்..
சொந்த வீட்டில் சுகமா இருந்துட்டு..டெல்லில கரோல்பாக்கில் ஒரு சிங்கிள் பெட் ரூம் வீடு...
சம்மர் வந்தால் தண்ணீர் ப்ரச்சனை தலை விரித்தாடும்.
காலைல 7 to 8 தான் தண்ணி வரும். அதுக்குள்ள முதல் நாள் துணிமணி, பாத்திரம் எல்லாம் க்ளீன் செஞ்சு, பக்கெட்டெல்லாம் காலியா வெச்சால் தான் ..இருக்கற சொப்பு சாமான்லயும் ரொப்பி வைக்கணும்..
கீழ வீட்டில் ஹவுஸ் ஓனர். பெரிய குடும்பம். மூட் இருந்தால் நிறைய தண்ணீர் வுடுவா..இல்லாட்டி , தண்ணியே வரலைனு ..சத்தியம் அடிப்பா..
அவங்க மருமகள்..கொஞ்சம் நல்லவ..அவளோட குழந்தைக்கு டெய்லி ப்ரேக்ஃபாஸ்ட் எங்க வீட்ல தான்.
' அகிலா..இட்லி கே சாத் சட்னி யா சாம்பார்னு' வந்துடும் ..
அந்த நன்றி விசுவாசத்தில் ஒரு 2 பக்கெட் தண்ணி நைசா கொடுப்பா..இப்படி காலம் ஓடும் போது..பொண்ணுக்கு கல் எறியும் தூரத்தில் சூப்பர் ஸ்கூல் கிடைச்சது..
ஸ்வீட் எடுத்துக் கொண்டு சொல்லப் போனேன்.
அப்படியா..ரொம்ப சந்தோஷம்..அடுத்த மாசம் வீட்டைக் காலி பண்ணுங்க'..
ஏதோ காரணம் சொல்லி....
யப்பா..மனசே கஷ்டமா போச்சு..
அட போயா..போயா உலகம் பெர்சுனு ..இன்னொரு வீடு..
ராமானுஜம் மெஸ் கிட்ட..
அங்கேயும் விடாது தண்ணி ப்ரச்சனை..
மோட்டர்ல அடிக்கடி air lock ஆகிடும்
மோட்டார் ..வீட்டோட பின் பக்கம்..அடுத்த தெருவில இருக்கும்.
அவங்க வீட்டுல ஒரு குட்டி வழி திறந்தால்..நான் போய் அதில் அரை மக் தண்ணி ஊற்றினால் ஏறிடும்.
அப்போ ரெண்டாவது பெண் வயிற்றில்.
' கொஞ்சம் கதவு திறக்க முடியுமானு " கேட்டால்..
நிர்தாட்சண்யமாய் மாட்டேன்னு பதில் வரும்
அப்புறம் 10 நிமிஷம் சுத்தி போய் ..மோட்டரில் தண்ணி ஊத்தி எடுக்க வெச்சுட்டு வரும்போது...
சீ..என்ன மனிதர்கள்னு நினைச்சாலும்..இன்னிக்கும் மனசு வலிக்கும்..
அட அப்பாடா..கங்கை பாயும் டெஹ்ராடூனுக்கு வந்தாச்சு..இனிமே ஏது தண்ணி கஷ்டம்னு நினைச்சா..
அங்கே சம்மரில் ..tanker இல்லாமல் உயிரே வாழ முடியாது.
மாடி வீட்டில் நான்..கீழே ஹபுஸ் ஓனர்.
மொட்டை மாடியில் tank.
Tanker காசு ஆளுக்கு பாதி..
ஹவுஸ் ஓனர்..மோட்டர் போடும் போது..அவர் பையனை மாடில போய் நிக்க வெச்சு..
என் tank ல இருக்கற வால்வை மூடிட்டு..அவனை அங்கே காவலுக்கு வெச்சுடுவார்.
என்னடா இது ..மோட்டர் ஓடறது ..தண்ணீர் வரலையேனு போய் கேட்டால்..
' full tank ரொப்பினேன்.. நீதான் செலவழிச்சுட்டேனு"..சொல்லிக் கொண்டே..மோட்டார் ரூமை பூட்டிட்டு போய்டுவார்.
அப்புறம் சமைக்க முடியாது..ஒண்ணும் பண்ண முடியாது..
என் வீட்டுக்காரரோ சைட்டில் வேலை..இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை தான் வருவார்.
அவர் வரும்போது 'பெஹன் பெஹன்னு" தேனாய்ப் பேசுவார்
தடுமாறி ....
ஒருநாள்..அந்தப் பையன் போய் நிக்கும்போது..தைரியம் வரவழைத்துக் கொண்டு..
வால்வை மூடி இருப்பதை காண்பித்தேன்..
அது சின்னப் பையன்..தெரியாம செஞ்சான் என்றாரே பார்க்கணும்..
பையன் பாவம் ..ஹிந்தியில்..
"அப்பா..நீ தானே மூடச் சொன்நேனு சொன்னதும்..
அவன் சோட்டா பச்சானு ..டபாய்த்து விட்டார்..
ரொம்ப மனசு வலித்த தருணங்கள் அவை...
ஆனால் அதே பையனுக்கு..என் பெண்கள் படிக்கற ஸ்கூலில் அட்மிஷன் வாங்கிக் கொடுத்தேன்..
இன்னிக்கு பெரிய வேலையில் இருக்கான்..
அடுத்து..அங்கேயே வேறு ஒரு வீட்டுக்கு மாறினோம்.
அதுவும் ஒரு நெருப்பு குழி தான்.
வீட்டுக்காரர் டெல்லில் இருந்தாலும்..அந்தம்மா ஃபோன் பண்ணி பண்ணி என் உயிர் எடுப்பா..ரீஸனே இல்லாமல் கத்துவா..
அந்த வீடு தோட்டம் எல்லாம் நான் இருந்த ஏழு வருஷத்தில் ஜொலித்தது..
அங்கிருந்தும் மூட்டை கட்டி யாக வேண்டிய ட்ரான்ஸ்ஃபர்.
வீட்டுக்காரர் டெல்லிலேர்ந்து வந்து எல்லாம் செக் பண்ணிட்டு..
ஓகே சொல்லிட்டு..
நாங்க இன்னும் இரண்டே நாள் இருக்கபோறோம்னு தெரிஞ்சும், நாங்க ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்கு போய்ட்டு வருவத்கற்க்குள் எங்க மீதி இருந்த சாமானை ஒரு சின்ன ரூம்ல அடைச்சுட்டு..
' வீட்டுக்கு அடுத்த ஆள் வர, வைட் வாஷ் பண்ண்ப்போறேன்னு"..
அந்த மாசம் ஃபுல் வாடகை கொடுத்தும்..அவர் செஞ்ச செயல் வலி மட்டுமல்ல..ஒரு பெரிய வடுவாய் இன்னிக்கும் என் மனசில்..
சரி பெங்களூரில் வீடு பார்த்த போது..
மெட்ரோ சிட்டியிலும் எங்கள் சிந்தனையில் மண்ணை வாரிப் போட்டார் வீட்டுக்கார தாத்தா..
சும்மா வரேன்னு வந்துட்டு..
வீட்டைப் பார்க்கணும்னு சொல்லி..
குழந்தைகளோட ஷெல்ஃப் முதற்க் கொண்டு திறந்து பார்த்து..
இப்போ வேற வீடு..வேற ஓனர்..
இப்படித்தான் வாழ்க்கை..
சொந்த வீடு இருந்தும்..சில காரணங்களால் வெளி ஊரில் தங்குபவர்களை ..
ஹவுஸ் ஓனர்கள் ..நாம் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிந்து..மனவலி கொடுப்பது என்ன நியாயம்?
இருப்பவனுக்கு ஒரு வீடு..இல்லாதவனுக்கு உலகமே வீடுனு சொன்னாலும்...
ஆறாத வடுக்களை ஏற்படுத்திய இவர்கள் ...நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
கொஞ்சம் மனிதத்துடன் இருக்கலாமேனு ...
இதற்கு குடித்தனக்காரர்களை குறை சொல்வோர் நிறைய இருக்கலாம்.
ஆனால்..நான்..என்றும் ..வாழும் வீட்டை..நல்லபடியாக வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு நல்ல tenant. அது அவர்கள் அறிந்திருந்தும் ஏன் இப்படி?
புரியாத புதிர்..

No comments:
Post a Comment