Thursday, October 5, 2023

-இதெல்லாம்_ஜகஜம்

 #ஸண்டே_ஸ்பெஷல்


#இதெல்லாம்_ஜகஜம்


..!!


இப்பவே சொல்லிட்டேன் எல்லார்க்கும்..

இந்த அகிலா ரொம்ப நல்லவ..ரொம்ப பொறுமைசாலி..போனால் போகட்டும் விடுனு கண்டுக்காம கண்டிக்காம விடற ..நல்ல மனசுக்காரி..


நான் அர்ச்சனை பண்ணனும்னா..எப்படி atrocious  ஆ வீட்டுக்காரர் வேலை செய்யணும்..?


அப்பப்ப...ஒரு இரண்டு நாளைக்கு ..கல்யாணம் காட்சினு வீட்டை விட்டு எப்படா எஸ்கேப்புனு ..தப்பிச்சு ஓடுவேனா..


ஃபிரிட்ஜ் ஃபுல்லா ரொப்பிட்டு ..மேடை யெல்லாம் அழகா நீட் செஞ்சு வைச்சுட்டு போவேனா..

ஆனா..வீடு திரும்பினால்..

மேடை ஃபுல்லா சாமான் ரொம்பி கிடக்கும்.


அரிசி சம்படம் ..

"ஹையா..நான் எப்புடி உசரத்தில் வந்து உட்கார்ந்துட்டேன் பார்னு 

மேடையிலே ஏறி ..பாதி இடத்தை அடைச்சிருக்கும்.

ஷெல்ஃபில் இருப்பதெல்லாம் ..காத்து வாங்கப்போறேன்னு...மேடை மேலே முகாமிட்டு இருக்கும்.


அப்....பா....( அதுதான் என் வீட்டுக்காரர்)


ஏன்ப்பா..இப்படி கொலு வெச்சிருக்கீங்க..? 

அடுக்கி வெச்சதெல்லாம்..அடங்காப் பிடாரியா ..அங்கொன்றும் இன்கொன்றும் இருக்கேனு..

எரிச்சலில்..நம்ம BP ஏற..


எதுவுமே நடக்காத மாதிரி ஆஜர் ஆகிட்டு..

" நீ அரிசி சம்படம் எங்க வெச்ச?..இதோ இந்த பொந்துக்குள்ள..அதிலேர்ந்து ஒரு டம்ளர் அரிசி எடுக்க..நான் என் உடம்பை அரை அடி குறுக்கணும்..குனியனும்...இதெல்லாம் நடக்கற காரியமா. ?


"சூப்பர் ஸ்டார்...டான்ஸ் பார்த்திருக்க இல்ல?

எப்படி அலுங்காம குலுங்காம ஸ்டெப்ஸ் போடுவார்..

அதுமாதிரி..நான் இப்படி கை நீட்டினால் அரிசி, அப்படி தூக்கினால் பருப்பு..அஞ்சறைப் பெட்டி..அஞ்சடி தள்ளி இல்லாம..

அப்படியே அள்ளி போடற distance ல


ஆனால்..அந்த டான்ஸ் எப்படி சூப்பர் ஹிட்டாகுமோ..அதே போல...

'".மாப்பிள்ளை ..அகிலா சமையலை விடஉங்க சமையல் சூப்பர்னு ...


எல்லா ஐட்டமும் மீதி வெக்காம சாப்டார் தெரியுமோ?..


பாத்திரம் எங்கே இருந்தால் என்ன?..பக்குவம் தானே முக்கியம் சமையலுக்கு????


நற..நறனு...நான் பல்லைக் கடிக்க..

இந்தா..டயர்டா வந்திருக்கே..இட்டிலியும் சட்னியும் பண்ணி வெச்சிருக்கேன்..சாம்பார் சுட பண்ணட்டுமானு கேட்கும்போது..


அடப்பாவமே..இவர்கிட்ட போய் ..சத்தம் போட்டமே ..நானு sympathy mode க்கு போக..


அடுத்த முறை ஊருக்கு போய்ட்டு வந்தாலும்..

' நீ கத்தறது எல்லாம் ஜகஜம் போ..ஜகா வாங்காம..ஜோலியை ஜம்முனு முடிக்கிறேனா இல்லலையானு...

" காற்றில் எந்தன் கீதம் ..காணாத ஒன்றைத் தேடுதேனு"..

ராஜா சார் பாட்டு அவர் கேட்க..

" காணாமல் போன கத்தியை தேடுதேனு"..

நான் திரும்ப கத்த ஆரம்பிக்க...

ஜாலி தான்..

ஜகஜம் தான்..


இந்த கிளி கூட என் பேச்சைக் கேக்குது..ஹீம்..

No comments: