#Midweek_topic
தீபாவளி பட்சணம்..29-10-21
ஆஹா..இது topic..
இழுக்க இழுக்க அல்வா போல..மனசை கரைய வைக்கும் மைசூர்ப்பா போல..
மத்யமரையே சுற்றி சுற்றி வரும் ஜாங்கிரி போல..
நானே ராஜா...எனும் பாதுஷா போல..
கலந்து கட்டி..குதூகலமாய் இங்கே வலம் வரும் நமக்கு ..மிக்ஸர் போல...
போதும்மா போதும்..
பாயிண்ட்டுக்கு வா.உங்க மை .வா கேட்கிறது.
வருஷத்தில் மத்த பண்டிகைக்கெல்லாம்..
YouTube குடைந்து , குண்டக்க மண்டக்கனு செய்வேன்..ஆனால் தீபாவளி என்றால்..நிலைய வித்வான் தான்..
வேற என்ன?..
லட்டுவும்,காரா பூந்தி, மிக்ஸர் தான்.
அதுவும்..கல்யாணம் ஆகி வந்த போது ..சித்தியின் கையால் எழுதிக் கொடுத்த. அதே பழைய டைரி..அதிலிருக்கும் அளவுதான்..
இப்போ கிடைக்கும் பொருட்களின் தரம் கொஞ்சம் வேறுபடுவதால்..
Latest update in measurement சித்தி சொல்லிடுவா..
எந்த சொத்திலும் ஆசைப்படாத நான்..முதல் முறையாக..
பதுக்கியது எது தெரியுமா?..
எங்கம்மாவோட பூந்தி கரண்டி..
" என் .... ஞாபகமா வெச்சுக்கறேனே.." உறவு ஒன்று சொல்ல..
வெரி சாரினு வெடுக்கென்று சொல்லிட்டோமோனு இன்னி வரைக்கும் ஒரு உறுத்தல் உண்டு..
ஆனா..
முத்து முத்தா பூந்தி மணி அள்ளத்தான் வேணும்னு ..அன்னக்கிளி சுஜாதாவாக மாறும் போது..மகிழ்ச்சியே😄😄📦📦
வளையோசை கலகல கலனு கவிதை படிக்கிற மாதிரி..
டக் ..டக்..டக்னு ..அந்த தட்டை தட்டும் ஓசை இருக்கே..
பக்கத்து வீட்டுக்கும் தெரியும்..பூந்தி வேலை நடக்குதுனு..
இதில் ஒரு செளகரியம் என்னன்னா..
முதல்ல..டக் டக்..டொக் டொக்குனு லட்டுக்கு பூந்தி தேய்த்து விட்டு..
அடுத்து....காரா பூந்திக்கு இறங்கிடலாம்..
பதம் மட்டும் வேற..
ஒண்ணு..அரை வேக்காட்ல இருக்கணும்..
இன்னொன்னு..கரகரனு வாயில் போட்டால் கரையணும்.
சில சமயம்..வால் முளைத்த பூந்தியும் ..கொஞ்சம் வாலாட்டும்..
எல்லாம் ..வாய்க்குள்ள தானே போகப்போறதுனு ..😄😄👍
அதுவும்..அந்த லட்டு....🤤🤤
ஒவ்வொரு லட்டுலயும் ..ஒரு கிராம்பு , இரண்டு கல்கண்டு, 2 திராட்சை, நுணுக்கின முந்திரி ..சேர்த்து பிடித்து..
அப்படியே சில மணி நேரம்.கழிச்சு..
சக்கரை மலர்ந்து...பச்சை கற்பூரம் ஏலாக்காய் மணத்தோட..அப்படி எடுத்து ..
இரண்டா உடைச்சு வாயில் போட..
சொர்க்கமே என்றாலும்.
அது பூந்தி லட்டு போலாகுமானு..பாட்டு பாடத் தோணும் ..பாருங்க..ஆஹா..
அடுத்து..காராபூந்தி..
அதோட..கமகமனு கருவேப்பிலை..
கரகரனு வேர்க்கடலை..
கொழுப்புக்கு ..முந்திரி..
அளவா..உப்பு காரம் பெருங்காயம்
அப்படியே கலந்து வைக்க..
பூந்தியைப் போலொரு ..பட்சணம் இனிதாமோனு....
இதுபோக..மீதி..கொஞ்சம் பாதுஷா..கொஞ்சம் சாக்லேட் பர்ஃபியும் பண்ணி வெச்சால்..
சுற்றம் நட்புகளுக்கும் ..கொடுத்து மகிழலாம்..
Wishing all my madhyamar friends a fabulous and safe deepavali 🪔🪔🪔🪔🪔🪔


No comments:
Post a Comment