Thursday, October 5, 2023

Madhyamar-வல்லமை தாராயோ

 #வல்லமை_தாராயோ..


இந்த வருஷத்தின் கடைசிப் பதிவு😃😃😃😃


கோலம் போடறேளா..?..

கோலமாவு கோ(அ)கிலாவைப் பார்த்து பக்கத்து வீட்டு பெண் கேட்க..

இல்ல..இட்லி மாவு அரைக்கறேன் ..சொல்ல முடியாமல் விழுங்கி..புன்னகைக்கிறேன்..😃😃😃


லிஃப்டில் ஏறுகையில்..

"ஏன் முகம் வாடி இருக்கு?.."தெளிவா இருக்கும் என்னைப் பார்த்தும் கேட்கும் கேள்விக்கு புன்னகை ஒன்றை உதிர்க்கிறேன்..🤔🤔😀


எப்பதான் இந்த work from home.முடியுமோ..!?


எப்படித்தான் நீ இப்படி வீட்ட்லியே இருக்கியோ..!??

ஹோம் மேக்கர் என்னைப் பார்த்து ஏவப்படும் கேள்விக்கும் ..புன்னகைக்கிறேன்..😀😀🙏


பக்கத்து வீட்டிலிருந்து வரும் பாசுமதி ரைஸ் வாசனை சூப்பர்னு சொல்லும் பெண்ணைப் பார்த்து புன்னகை உதிர்க்கிறேன்..😄😄


அவளே..


"Learn to say no..அம்மா'. ..என்று சொல்லித் தரும் போது...அடுத்த முறை கட்டாயம் என்று புன்னகை உதிர்க்கிறேன்..


சில சமயம் நர்த்தனமாடும் negative எண்ணங்களுக்கு..வடிவம் கொடுக்காமல்..வடிகட்டி..புன்னகையுடன் வழி அனுப்பி வைக்கிறேன்..


வரிசையாக வேண்டுதல்களுடன் அவன் முன் நிற்க..

"இன்னும் பாக்கி இருக்கா..நான் தான் இருக்கேனே பார்த்துக்க மாட்டேனா..என்று சொன்னாலும்..விடாது சொன்னதையே சொல்கிறேன்..

"அட அசடே".. இன்னுமா புரியல அவன் லீலை.." மை. வாய்ஸ் சொல்ல..அசட்டுப் புன்னகை உதிர்க்கிறேன்.


உள்ளே அடங்கு என்று ஊரடங்கு போட்டு வைத்த..

பேராசை,பொறாமை,கோபம், குதர்க்கம்..

"வெளியே வந்தாயோ....பிச்சு புடுவேன் பிச்சு என்று..மிரட்டி உருட்டி வெச்சாலும்..லேசா தலை நீட்டும்போது..போனால் போகட்டும்..ஒரு முறை வந்து போ என்று புன்னகைக்கிறேன்..


"கிளம்பறேன் நான்.." என்று நீ சொல்ல.


வெத்திலை பாக்குடன் வழியனுப்ப வந்த என்னைப் பார்த்து..

' உனக்கு கோபமே வரலையா என் மேல".. 

Twenty twenty என்னைப் பார்த்து கேட்க..

அதே புன்னகையுடன்..'

 சென்று வா..உனக்கு 

 முப்பதொன்று என்பது முடிவு..

 எனக்கு ..அது இன்னொரு நல்ல ஆரம்பத்தின் அறிகுறி" என்றேன்..

 

'மறக்க மாட்டியே என்னை? ..😪


" நர்ஸரி டீச்சரையே மறக்காத நான்..

நிரந்தரமில்லை இந்த வாழ்க்கைனு சொல்லிக் கொடுத்த உன்னை...'..என் புன்னகை மீதி கோடிட்ட இடத்தை நிரப்ப..


 

 அடுத்து பிறக்கப் போகும் ..ஒன்று..

 என் வாழ்க்கையில் இன்னோரு ஒன்று தான்..


"போய் வா..கெடுதல் செய்திட்டோமோ என்ற குற்ற உணர்வு உனக்கு வேண்டாம்.."..

கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் காட்டிக் கொடுத்த கள்ளன்.நீ..

.....

 


கை காட்டியபடி நிற்கிறேன்

கண் மறையும் வரை..


 வீட்டுக்குள்ளே ...அது..

 விட்டுப் போன தடயங்கள்..

வேண்டுமென்பதை..

எடுத்து பூட்டி வைத்தேன்..

வேண்டாததை விட்டெறிந்தேன்..


அடுத்த காலண்டர் மாட்ட இடம் செய்கிறேன்..

அது காலண்டரா..???

இல்லை..காலம் terror ஆ என்று புன்னைகையுடன் அதைப் பார்த்து கேட்கிறேன்...காத்திருக்கிறேன்..


ஒரு நிமிஷம்..ஓடி வந்தது மீண்டும்..

என்னாச்சு? என்றேன்..அதே புன்னகையுடன்..


மத்யமருக்கெல்லாம்..புத்தாண்டு வாழ்த்து சொல்லிடு..


வெள்ளைப் பூக்கள்..🌏 எங்கும் மலரவே..

அன்பு ஒன்று மட்டும் என்றும் நிலைக்கவே..


Happy new year friends

அன்புடன்.

Akila..


No comments: