Wednesday, April 17, 2019

பெத்த மனசு..

ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்

'வரட்டும் ..வரட்டும்..நன்னா  நாலு கேள்வி நறுக்குனு கேட்கணும்..'
Airport arrival வாசலில் விடிகாலை மூணு மணிக்கு வரும் flight  க்கு முந்திரிக் கொட்டையாய் பன்னெண்டு மணிக்கே வந்து..ஓரமா ஒரு எடம் பார்த்து உக்கார்ந்தாச்சு..
டாடா 'பை' 'பை'க்கள்..குடும்பத்தோட வந்து ஒரு குட்டி பிக்னிக் பலருக்கு.
கல்யாணக் களையோடு கடைகள். spoon ,fork ஆல குத்தி சண்டை போட்டும் கொஞ்சங்கூட கிழியாம அடம் பிடிச்ச தோசையை ,யாரும் பார்க்கலைனு நினைச்சுண்டு கையால லார்ட் லபக் தாஸ் மாதிரி விண்டு வாயில் போட்டு அனுபவிச்ச அரை டிராயர் இளைஞன், எக்கச்சக்க selfie புள்ளைகள்..PNR ஐ password போட்டு எப்படி பத்திரமா வைச்சுக்கணும்னு class எடுத்த ஒரு மலபார் மாமி. Placard வெச்சுண்டு பரபரனு அலைஞ்சிண்டிருந்த டிரைவர்கள்..மோப்ப நாய் வேற ரொம்ப சுத்திண்டு இருந்தது..hijack alertனு news வந்ததன் விளைவு..
லவ் ஜோடீஸ் ...கார் வராத கடுப்பில்
காள் காள் கத்தலுடன் கோட்டுசூட்டு ஆசாமி..
இப்படி பல விஷயம் சுத்தி நடந்தாலும்..மனசு மட்டும்..வரட்டும் இரு..வெச்சுக்கறேனு  கறுவிண்டு..
இங்கேர்ந்து கிளம்பும்போது பேசின பேச்சென்ன..'ரெண்டே மாசம் ஓடி வந்துடப் போறேன்..உன்னோட செல்லைக் கொடு..hang out  இல்லையே இறக்கிடறேன்..
Messenger install பண்ணி இருக்கேன்.அதுல easy ஆ இருக்கும்..இருக்கவே இருக்கு.எப்படியும் நீ தான் fb லயே குடி இருப்பியே..so no problem.
 watsapp video call இருக்கவே இருக்கு.
உன்னோட time ல ராத்திரி 9 மணிக்கு கூப்பிடுவேன்..நீ பாட்டுக்கு local call ல லொள்ளு சபா நடத்தாதே..அதே மாதிரி காலம்பற 10 மணிக்கு கூப்பிடறேன்..நான் தூங்க போறதுக்கு முன்னாடி..காய்கறி வாங்கப் போய்டாதே..இத்தனை இருக்கு..எதுக்கு உனக்கு கவலை'.
இப்படி சொன்னபோது ஆமாம்ல இது என்ன அந்தக் காலமா..கண்ணைக் கசக்கிண்டு நிக்க..தேத்தியாச்சு மனசை..முதல் ரெண்டு நாள்..சொன்னபடியெல்லாம் நடந்தது..
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு..நாம அனுப்பற hi க்கு half a day கழிச்சுதான் ஒரு blue tick வரும்..சரி சரி..9 மணிக்கு call வரும்னு நினச்சா..reached officeநு ஒரு ஒத்தை வரி..இனிமே மெஸேஜ் பண்ணாதேனு indirect ஆ..ம்ம்ம்ம்..
எப்படியும் காலம்பர கால் வரும்னு காத்திருக்க...காத்துண்டே இருக்க..
இப்படியே ரெண்டு மாசம் ஓட்டியாச்சு..
இன்னிக்கு  வரட்டும் உண்டு இல்லனு பண்ணிடறேன்..
மணி மூணு..தரை இறங்கியது விமானம்.. வரட்டும்..வரட்டும்..வெச்சுக்கறேன்..
அரை மணி அவஸ்தை..
அதோ..அதோ..அங்கே தெரியறது...
.yes..வந்தாச்சு..ஒத்திகைப்படி ஒழுங்கா நறுக்குனு கேட்டுடணும் முதல்லயே..
கண்ணாடி வாயில் திறக்க..கையசைத்தபடி..
Hi..maaa..wazaap என்று ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டவளை..என்னடா.இப்படி இளைச்சு போயிருக்க..சாப்பிட்டியா ..
இல்லையா..ரொம்ப miss பண்ணேண்டா..நான் சொல்ல..
'அதான் வந்துட்டேனே..
Chill maa'..அவள் பாணியில்.. அவள் தொனியில்....
தேன் வந்து காதில் பாய..
திட்டித் தீர்க்கணும், கொட்டிக் குதறனும்னு  போட்ட திட்டமெல்லாம்......???

Sunday, April 7, 2019

பள்ளி போகும் பாட்டி



தலை வாரிப் பூச்சூடி உன்னை..
பாட சாலைக்கு போ என்று
சொன்னாளோ  உன் அன்னை..

முடியிலுள்ள சிடுக்கெடுத்து
முடிந்து கொண்டை போடுவேன்..
உன் ...
முகத்திலுள்ள சுருக்கத்துக்கு
முழு டப்பா கிரீமும் போதாதே..
மூட் அவுட் ஆகாதே பாட்டி
முடிஞ்ச வரைக்கும் ..உன்
முதுமையையும் மறைப்பேனே..

மலர்ந்த புன்னகை நீ சிந்த
மறைந்தே போகுமே ..
உன்..
வயதைக் காட்டும் ரேகையெல்லாம்...

Friday, April 5, 2019

ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே..'

:ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..'

'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..ஒரு வார்த்தை என்னைக் கேட்கமாட்டியாம்மா ...என்ன வேண்டுதல் இதெல்லாம்..
தாயும் சொன்னாள் ...
'தலைப் பிரசவம்...
தாயும் சேயும் நலமா இருக்க
திருமலையானை தரிசனம் பண்ண
குழந்தையைத்  தூக்கிண்டுனு நடந்து வரேன்னு பிரார்த்தனனை..
இனிமே இப்படி வேண்டிக்க மாட்டேன்..உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி..
சோக முகத்துடன ்என்னிடம்  சொன்ன  அம்மா..
இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை என்னை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே..
மகன் தந்தையிடம் சொல்வான்..
'அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு வார்த்தை என்னை கேட்க மாட்டியா...
நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே
ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..ஏண்ணா..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..
கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.
கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம் ராஜி aunty ஆத்துக்கு போகணும்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க..

இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..
ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..

Sriram Jayaram Jaya Jaya ram

Wednesday, April 3, 2019

கரிசனம்

கரிசனம்..

Top up போட்டுத் தருவியா..
Tops ம் கொஞ்சம் இஸ்திரி பண்ணமுடியுமா..
Time table படி படிச்சாச்சு..
தாத்தாவுக்கு சமைச்சதே போதுமெனக்கு..
உதவி செய்யட்டுமா.
உனக்கேன் ம்மா..இவ்வளவு வேலை
கரிசனம் பொங்கக் கேட்டாள்..
போதுண்டா..
சுத்தி வளைக்காம சொல்லு
சுத்த எங்க போறேனு..
சூட்டிகை ம்மா நீ
சூட்டினாள் பட்டம்..
சுற்றி என்கழுத்தை கட்டியபடி
சிட்டாய்ப் பறந்தாள்..
சுளுவாய் காரியம் முடிய
குஷியில் பெண்ணுமே..

Saturday, March 30, 2019

அடுப்படி எனக்கென்ன சொந்தமா...? பழைய நினைப்பு.. படை போல் குடும்பம் பொடிசு முதல் பெரியவர்கள் பானையில் சோறு பருப்புக் குழம்பு பொரியலும்..வறுவலும்.. பொதுவாய் சமையல். பந்தியில் அமர்ந்து பாங்காய் பரிமாறல் பங்கிட்டு உணவு பழசுக்கு இடமேது.. பொசுக்கும் வெய்யிலில் பொழுதும் போகவே அப்பளமும் வடாமும் அழகாய் இடுவாளே.. அம்மியும் ஆட்டுக்கல்லும் அங்கே கைகொடுக்குமே தேய்த்தல் துவைத்தல் துடைத்தல் எல்லாமே துரிதமா நடக்குமங்கே தட்ட ஒரு மெஷினில்லாமலே.. இப்பவும் யோசனைதான் எப்படி இப்படி எல்லாம் முடிஞ்சதென்று.. பள்ளியெழுச்சி முதல் படுக்கப் போகும் வரை பம்பரமாய் வேலை எம்பிரானே ஏனென்றேன்.. காப்பி ஒருத்தருக்கு காம்ப்ளான் ஒருத்தருக்கு அருகம்புல் ஜூஸ் ஆறின கஞ்சி ஒருத்தருக்கு திரிஃபலா ஒருத்தருக்கு டீத் தண்ணி ஒருத்தருக்கு காப்பிக் கடையே.. கதவும் மூடாதே.. சுக்கா ரொட்டி சுருள வதக்கிய வெண்டை கடைஞ்ச பருப்பு கெட்டித் தயிர்.. பன்னீர் பட்டர் ஒருத்தருக்கு பத்திய சாப்பாடு ஒருத்தருக்கு பிரியாணி ஒருத்தருக்கு பாஸ்டா ஒருத்தருக்கு.. என்னதான் ஆனாலும் ஒட ஒட ரசமும் ஒரு வடு தொட்ட மோரும் ஒரு வழி வழிக்கலையோ ஒரு திருப்தி வராதே.. ஓஞ்சு போகுதே ஒரு வேளை சமைச்சதுமே.. வகைகள் இப்போ வதையும் ஆச்சே வத்தலும் வடாமும் வகையாய் நொறுக்கலும் விலைக்கு வாங்கும் நிலையும் ஆச்சே.. பகட்டே இல்லா பழைய வாழ்வு பகல் கனவாச்சே ஓடி வந்தாச்சு ஒரு பெருந்தூரம் திரும்பிப் பார்ப்போம்.. திரும்பிப் போகாவிட்டாலும்..

அடுப்படி எனக்கென்ன சொந்தமா...?

பழைய நினைப்பு..

படை போல் குடும்பம்
பொடிசு முதல் பெரியவர்கள்
பானையில் சோறு
பருப்புக் குழம்பு
பொரியலும்..வறுவலும்..
பொதுவாய் சமையல்.
பந்தியில் அமர்ந்து
பாங்காய் பரிமாறல்
பங்கிட்டு உணவு
பழசுக்கு இடமேது..

பொசுக்கும் வெய்யிலில்
பொழுதும் போகவே
அப்பளமும் வடாமும்
அழகாய் இடுவாளே..
அம்மியும் ஆட்டுக்கல்லும்
அங்கே கைகொடுக்குமே
தேய்த்தல் துவைத்தல்
துடைத்தல் எல்லாமே
துரிதமா நடக்குமங்கே
தட்ட ஒரு மெஷினில்லாமலே..

இப்பவும் யோசனைதான்
எப்படி இப்படி
எல்லாம் முடிஞ்சதென்று..

பள்ளியெழுச்சி முதல்
படுக்கப் போகும் வரை
பம்பரமாய் வேலை
எம்பிரானே ஏனென்றேன்..

காப்பி ஒருத்தருக்கு
காம்ப்ளான் ஒருத்தருக்கு
அருகம்புல் ஜூஸ்
ஆறின கஞ்சி ஒருத்தருக்கு
திரிஃபலா ஒருத்தருக்கு
டீத் தண்ணி ஒருத்தருக்கு

காப்பிக் கடையே..
கதவும் மூடாதே..

சுக்கா ரொட்டி
சுருள வதக்கிய வெண்டை
கடைஞ்ச பருப்பு
கெட்டித் தயிர்..
பன்னீர் பட்டர் ஒருத்தருக்கு
பத்திய சாப்பாடு ஒருத்தருக்கு
பிரியாணி ஒருத்தருக்கு
பாஸ்டா ஒருத்தருக்கு..

என்னதான் ஆனாலும்
ஒட ஒட ரசமும்
ஒரு வடு தொட்ட மோரும்
ஒரு வழி வழிக்கலையோ
ஒரு திருப்தி வராதே..

ஓஞ்சு போகுதே
ஒரு வேளை சமைச்சதுமே..

வகைகள் இப்போ
வதையும் ஆச்சே
வத்தலும் வடாமும்
வகையாய் நொறுக்கலும்
விலைக்கு வாங்கும்
நிலையும் ஆச்சே..
பகட்டே இல்லா
பழைய வாழ்வு
பகல் கனவாச்சே

ஓடி வந்தாச்சு
ஒரு பெருந்தூரம்
திரும்பிப் பார்ப்போம்..
திரும்பிப் போகாவிட்டாலும்..

Thursday, March 28, 2019

தங்கமணி

சத்தம் போடாத..
சாதனை யாளர்கள்.
சரித்திரத்தில்...... பலர்
எம் குடும்ப ….. சரித்திர நாயகி..
எங்கள் தங்கமணி நீதானே…

”வயசாச்சு எனக்கு..
வேறெதுவும் முடியாதுனு..”
வெறுமை வாழ்க்கை.. உனக்கில்லை
Versatile blogger award….
விருதுக்கு சொந்தக்காரி நீ

திருக்கயிலை நாதன் முதல்..
..திருவொற்றி யுறைக்கோன் வரையில்
திரும்பிய திசையெலாம்..
திருக்கோலம் கொண்டவனை..
தேடிப் போய்ப் பார்த்ததில்லை..
தேன் சொட்டும் பாவின் வழி
”என் பணி அரன்  துதியென்று”..
என்னாளும் துதித்த நீ..
எம்மை விட்டுச் சென்ற நாள்..

இன்னாள்..28-03-2014
வருத்தங்கள்….. …
தேடுது.. வார்த்தைகளை..
Miss you thangamani..

தோற்றம்  : 05-10-1939        மறைவு  : 28-03-2014
thangamani blog: http://kavidhaithuligal.blogspot.in/

Friday, March 22, 2019

அழகி..நீ பேரழகி

@myclick
அழகி..நீ..பேரழகி..

மஞ்சள் அழகி நீ
மலர்ந்த பூவழகி
தெளித்த சிவப்பழகில்
மிளிரும் மென்மை  நீ..

கண்ணாடியில் காட்டட்டுமா
கவரும் உன்னழகை..தலைக்
கனம் வந்திடாதே
மண்ணில் அழகி நானென்று..

காக்கும் கண்ணிமை..நம்
கண்ணுக்குப் புலப்படுவதில்லை
காக்கும் இறைவனும்..
கண்ணெதிரே வருவதில்லை..
உன்னழகும் என்றுமே..
உனக்குத் தெரிவதில்லை
ஊரார் உரைக்கையிலே
உனக்கிங்கே உறைத்திடுமோ

நாடகமாம் இவ்வுலகில்
நாள்கணக்கு உனக்கு..
நாளும் இருக்கென்ற
நம்பிக்கை வாழ்வெனக்கு..

நானும் இங்கு செய்யணும்..
நல்லது நாலு பேருக்கு..
நாதனவன் பாதமதை..
நானும் அடையுமுன்னே

தண்ணீர்..தண்ணீர்.

தண்ணீர்..தண்ணீர்.

ஒரு கப் சக்கரையும் காப்பி பொடியும் கடன் வாங்கும் காலம் போய் ஒரு கப் தண்ணீ இருக்கா..அடுத்த மாசம் திருப்பித் தரேனே மாமி எனலாம்..

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..அவள் ஆத்துக்காரர் அரை லிட்டர் தண்ணீ வாங்கிண்டு வந்ததை கேட்டேளா..பட்டு மாமி பொறாமையில் மூக்கை சிந்தலாம்..

அப்பா..அப்பா..ஏன் எனக்கு தண்ணிகாசலம் னு பேர் வெச்ச..என் friends எல்லாம் கேலி பண்றாப்பா..என்று அடம்பிடிக்கும் மகனிடம்..அது மூதாதையர் பேருடானு சொல்லலாம்..

Demonetization சமயத்தில் ஒரே ஒரு 500 ரூபாயும் ,ஆயிரம் ரூபாயும் தனியா எடுத்து உண்டியல் அடியில் போட்டு  வெச்சு காண்பிச்சோமே..இந்த தண்ணீரை இவங்களுக்கு எப்படி இருக்கும்னு காட்ட எடுத்து வெச்சிருக்கலாமோனு வருந்தலாம்.

'கண்ணீர் சுத்திகரிப்பு' நிலையங்கள் பல உருவாகலாம்..அதிகம் அழுவோர்க்கு மானியம் தரப்படலாம்.

திரவப்பொருளில் தண்ணீர் என்றதும் திருதிருனு முழிக்கலாம்..

நிலத்தடி நீர் தேடப்போனவர்கள் ..நிலத்தடி அபார்ட்மெண்ட்டுகள் கட்டலாம்..
அங்கேயே IT companies ஆரம்பிச்சு..பல மூர்த்திகள் முன்னுக்கு வரலாம்.

Education loan,home loan எல்லாம் போய் water loan வாங்கி அதுக்கு emi கட்டலாம்.

கோடை விடுமுறைக்கு தண்ணீர் கிடைக்கும் mars க்கு சுற்றுலாப் பயணம் போகலாம்..

ஐயோ ..
நினைக்கவே நடுங்குதே..
நீயில்லாமல் நானா
நீரில்லாமல் வாழ்வா..?

நிறமில்லா நீர்..
நதியாய்..ஆறாய்
நானிலம் காக்க
சுயநல வாழ்வில்
கயவராய் மாறினோம்
தண்ணீர் தானே...
தாராளமாய்..
தண்ணீராய் செலவு..

விளைவோ..

ஒரு குடம் நீருக்கு
ஒரு மணி காத்திருப்பு

தவிக்கும் வாய்க்கு
தண்ணீர் தரவே
தயக்கமும்  ஆச்சு.

சேமித்த காசு..நீர்
சேந்தித் தரல..
சிந்திய துளிகளும்
சேர்க்க முடியல..

கங்கையும் யமுனையும்
காவிரியும் நர்மதையும்
கைக் கோர்க்கட்டும்..
கண்ணீர் துடைக்கட்டும்

நதியெல்லாம் இணையட்டும்..
நலமெல்லாம் பெருகட்டும்..
நாளை வரும் சந்ததிக்கு
நம்மால் முடிந்த உதவி..
நல்லக் குடிநீரும்
நோயில்லா வாழ்வுந்தானே..

Wednesday, March 20, 2019

Happiness day

happy இன்று முதல் happy

இந்த உலகத்திலே பெரிய பணக்காரன் யாரு?.கொஞ்சம் லிஸ்ட் போடுங்க..

கார் வெச்சிருப்பவரா..
கரன்ஸி கட்டு கட்டா வெச்சிருப்பவரா..
வீடு பெரிசா வெச்சுருப்பவரா..
நல்ல வேலையில் இருப்பவரா..
வெற்றி வாகை சூடுபவரா?
பெரிய பதவியில் இருப்பவரா..
பெரும் புகழோடு இருப்பவரா..

இத்தனையும் இருந்தாலும் இல்லாட்டியும் ...சந்தோஷமா happy ஆ யாரால் இருக்க முடிகிறதோ அவர்தானே உண்மையான பணக்காரர். சரிதானே?

கால் கிலோ கத்திரிக்காய் கொடுனு என்கிறமாதிரி எந்த சூப்பர் மார்க்கெட்லயாவது விற்கிறதா இந்த சந்தோஷம்?

எங்கே தேடுவேன்..சந்தோஷம் உனை
எங்கே தேடுவேன்னு எல்லாரும் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையறோமா இல்லையா..
கவிதை என்னும் பேரில் நான் உளற ஆரம்பிச்ச புதுசு.
இப்படி ஒரு மொக்கை எழுதி வெச்சேன்.
'இறைவா
வேண்டும் இன்னொரு பிறவி..
போராட அல்ல..
வாழ்வதற்கு..'
இன்னிக்கு அதைப் படிக்கும்போது..என் மேலே வெறுப்பா வரும்.
போராடி ஜெயிக்கும் சந்தோஷம் போல உலகத்தில் வேற ஏதாவது சந்தோஷம் உண்டா..

பூக்கள் மகிழ்ச்சி..
பூலோகம் மகிழ்ச்சி
இயற்கை மகிழ்ச்சி
இல்லம் மகிழ்ச்சி.
இதெல்லாம் எப்போ மகிழ்ச்சியா தெரியுமென்றால்..நம் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான்.
மகிழ்ச்சியா இருக்கணும்நு சொல்லித் தர பல பேர் இப்போ கிளம்பி இருக்காங்க.

நிஜமாகவே தேடிக் கிடைக்கும் பொருளா..சந்தோஷம் என்பது.
நம்முள் எப்போதும் இருந்து கொண்டு வெளியில் வரத்் துடிக்கிறது..
டேய் சும்மா அடங்கு...இதுக்கெல்லாம் சந்தோசப்பட்டா என்ன ஆவுறதுனு அதை தட்டி உள்ளே உட்கார வெச்சிட்டு..அடுத்தது எது நமக்கு சந்தோஷம் தரும்னு தேடி அலையறோம்.
நல்ல சூப்பரா டிரஸ் பண்ணிட்டு சந்தோஷமா வெளியே கிளம்புவோம்..எதிர் வூட்டுக்காரம்மா ஒரு சோகக் குரலில் 'என்ன இன்னிக்கு கொஞ்சம் டல்லா இருக்கீகநு ' கேட்டதுமே..அத்தனை சந்தோஷமும் ஓட்டை விழுந்த பலூனாய் புஸ்ஸுனு இறங்ககிடும்.

நம்மைச் சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடானு கோடி negative energy சுற்றியபடி இருக்கு.
நாம் ஒரு நிமிஷம் தள்ளாடும் போது..டபால்னு வந்து நம் மேல உட்கார்ந்துக்கும். அப்பறம் சந்தோஷமா..அப்படின்னா என்னனு கேட்டு..டன் டன் ஆ சோகமோ..சோகம் தான்.
சந்தோஷம் என்பது ஒரு சின்ன விதை..
அதை நம் மனசிலும் , நம் சுற்றியுள்ளவர் மனசிலும் விதைக்கணும்.
நான் சந்தோஷமா இருக்கணும்னா அடுத்தவன் சாகணும் என்பது சந்தோஷமல்ல..

நாம் இருக்கும் இடத்தை, வீட்டை முதலில் சந்தோஷம் என்னும் சிமெண்ட் போட்டு strong ஆக்கணும்.

அதுக்காக இளிச்ச வாயனா இருக்க சொல்லலை..
நாம்.. எப்போ..எங்கே இருந்தாலும் அங்கே சந்தோஷ, மகிழ்ச்சி அலைகள் கரை புரண்டோடணும் ஒரு பிரதிக்ஞை எடுத்துக்கணும். ஐயொ..வந்துட்டாடா..ஒப்பாரி வைக்கணு யாரும் சொல்லக்கூடாது.

எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை..
நான் சந்தோஷமா இருக்கிறேன்..இருப்பேன் என்பதை நாம் தான் நிர்ணயிக்கிறோம். live this moment happily.
இன்னிக்கு international day of happiness ஆமே..
வாங்க ..
let's be happy i say and spread the fragrance of happiness everywhere.

happy இன்று முதல் happy தான்.

சரிதானே..friends.
 Thanks  Chandrashekar Ramaswamy sir.
Your status today is the seed to this post

Tuesday, March 5, 2019

Acche din

Acche din..
The wait is on..

அஞ்சறைப் பெட்டியிலும்
அரிசி டப்பாவிலும்
அடுக்கின புடவையிலும்
அலமாரி இடுக்கிலும்

 மடித்தும் சுருட்டியும்
மறைச்சு வெச்சேனே
மாங்கா நெக்லெஸும்
முத்து வளையலுமா
மாறும் ஒருநாள்
மகளுக்கு சீராகனு

விளக்கேற்றிய மாலை
வீட்டோர் எல்லாம்
விறுவிறு சீரியலில்
வாய்பிளந்த வேளை
அறிக்கை வந்தது
ஆயிரமும் ஐநூறும்
அந்திமக் கிரியையில்

ஆசையாய் வளர்ந்தது
அழுது புலம்பியபடி
அம்மாவைப் பிரிந்தது
அவளருமைக் குழந்தை.

அப்பவும் நம்பிக்கை
'அச்சே தின்'
அதோ வந்திடுமென்று
காத்திருப்பு
கருப்பொழிந்து
வெள்ளைப் பூக்கள்
வாழ்வில் மலருமென்று..

சொந்தக் காசும்
சொந்தமில்லாமல்..
வந்த காசும்
வாழ விடாமல்..

வழியெல்லாம் அடைப்பு
வளர்ச்சியென மார்த்தட்டல்
வருமொரு நல்ல நாள்
வெறும் கனவாகிடுமோ..!!

நம்பிக்கைக் கவிதை
நவம்பர் மாதத்தில்
மன உளைச்சல்
மார்ச் மாதத்தில்
வானிலை மாற்றமாய்
வாக்குகள் மாற
வாக்காளன் பாடு
வீதியிலே..வரிசையிலே..

'அச்சே தின்'
அவ்வப்போது..
அழுத்திச் சொல்கிறேன்..
அப்படியாவது
வராதா என்று..

Tuesday, February 26, 2019

தங்லீஷ்துணுக்குகள்

#தங்லீஷ்துணுக்குகள்

'பாட்டில்' லயித்ததில்...எண்ணெய்
'பாட்டில் 'கை நழுவ
'பாட்டும்' கிடைத்தது..
'பாட்டு 'என்ன வேண்டிகிடக்கு
"பாட்டை' பார்க்கும் வேளையிலே..

#பட்டால்தெரியும்

Monday, February 18, 2019

வாக்காளர் அட்டையும்

வாக்காளர் அட்டையும்..வாயில்லாப் பூச்சி நானும்..

எதுக்கும் சும்மா வாங்கி வெச்சுக்கலாமேனு பல விஷயங்கள் நம்ம வீட்ட்ல இருக்கு.
அப்படித்தான்....இந்த வோட்டர் ஐடி கார்டும்.

கல்யாணம் ஆன புதுசுல டில்லி வாசம். ஜுனூன் ஹிந்தி தான் வாழ்வாதாரம்.கதவை திறக்கவே பயம்.யாராவது எதாவது ஹிந்தில கேட்டுட்டா என்ன பண்றதுனு ஒரே உதறல்.

ஒரு நாள்..என் உப்பரிகையில் நின்னு வேடிக்கை பார்த்தபடி இருந்தப்போ..ஒரு ஃபைலும் கையுமா ஒரு வாட்டசாட்டமா ஒரு ஆள் என் வீட்டை நோக்கி வந்தார். கீழே வீட்டுக்கார அம்மாவோடு ஏதோ பேசி விட்டு..படி ஏறி மேல வர ஆரம்பிக்க..என் லப்டப் அதிகரிக்க..வாக்காளர் அட்டை பதிவுக்கு வந்தேன் என்று புரிய வைத்தார்.

அவர் கேட்ட அத்தனையும் ஒன்று விடாமல் நான் ஆங்கிலத்தில் எழுதித் தந்தேன். குடும்ப விவரம் உட்பட. வந்தது அட்டை.
கால் கிழமான என் வயதை அநியாயம்.. சாளேஸ்வரம் வயது என காண்பித்த அட்டை.. ஒரு நொடி சுக்கு நூறான இதயத்தை கெட்டியாக பிடித்தேன்.
அடுத்த இடி..என் கணவர் பெயர் ராமசாமி. அவர் அப்பா பெயர் ராம் பகதூர்.
பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கி..
எப்படி இப்படி ஒரு தப்பு செய்ய முடியும் என்றே யோசனை.
சீனிவாசன் என்று எழுதியது எப்படி ் ராம் பகதூர் ஆனது.
million dollar question.
அதுவும் அப்போது வாக்காளர் பட்டியலையும் அட்டையயும் ஒழுங்குப் படுத்திய சிம்ம சொப்பனம் பதவியில் இருந்த காலம்.
அந்த வோட்டர் ஐடியினால் பெரிதாக ஒரு பயனுமில்லை.

அதே சமயம் விடுமுறைக்காக சென்னை வந்தேன். அப்பா ஒரே டென்சனாக.."ஊருக்கு போறதுக்குள் வோட்டர் ஐடிக்கு formalities முடி என்றார்.
டெல்லியில் வாங்கிட்டேன்ப்பா என்றேன். காதிலே போட்டுக்கவில்லை.
அங்கேயும் போய் க்யூவில் நின்று அழுது வடிந்து ஃபோட்டோ எடுத்து..ஐடியும் வந்தது.

என் டெல்லி அட்டையை ஒருவரும் மதிக்கவில்லை. ' அது  அந்த ஊருக்கு சார்' கேட்டால் பதில் இப்படி.
நாடோடிகளான நாங்கள் அடுத்த ஊருக்கு மூட்டைக் கட்டினோம். டாடா நகர். அங்கேயும் இதே கதை. வோட்டர் ஐடி வாங்கியே ஆகணும் என்று.
நான் இந்தியாவில தானேப்பா இருக்கேன்னு நான் கேட்ட கேள்விக்கு..முரைப்பு த்கான் பதில்.

அடுத்த மூட்டை தேவ பூமி..Dehradun. அந்த வார்டு கவுன்சிலர் ( டம்மி மனைவி...தேவபூமி ராப்ரி தேவி)
அங்கே தேர்தல் வர..' அண்ணிக்கு உங்க வீட்டு ஓட்டு ..அவசியம் போடணுமென்றார்.

என் டெல்லி, தமிழ்நாடு வோட்டர் ஐடி செல்லாது..இங்கே நான் புதுசா ஒண்ணு இந்த வீட்டு முகவரியில் வாங்கித் தரேன் என்றார். அதே போல ஒரு சுபயோக தினத்தில் "akila 'வை ' akela' ஆக்கி ஒரு வாக்காளர் அட்டை வந்தது..
அந்த 'e ' ஐ' i' ஆக்கச் சொல்ல .. akhila
என்று ஒரு h ம் சேர்த்து..உஸ் அப்பாடா..
இப்பொழுது கர்நாடகா. அதே கதை. மீண்டும்.
கர்னாடகாவில் கால் பதிக்க..

அவள் ஒரு தொடர்கதை மாதிரி..

சீட்டுக் கட்டு விளையாடலாம் .இப்படி state to state போனால் .
one India..அப்படினா என்ன சார்?

Thursday, February 14, 2019

துணுக்குகள்

விரதமிருந்த அடுத்த நாள்..
வெயிட் அரை கிலோவாவது
குறைஞ்சிருக்கா..🍇🍉🍍
வயிறு ஒரு சுத்து உள்ள போயிருக்கானு செக் பண்ற அதீத டிசைன் நம்மளோடது..
அப்ப நீங்க..?

Wednesday, February 13, 2019

பிச்சை பாத்திரம்

(உயிர்)பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றேன்..ஐயனே..என் ஐயனே..

உத்ராகண்டில் வாசம். யார் வந்தாலும் ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் எல்லா இடத்துக்கும் tour guide ஆ கிளம்பிடுவேன்.ஒரு ஏக்கம் எப்போதும் உண்டு..kedarnath அடிவாரத்தில் வீட்டுக்காரர் வேலையில் இருந்த போதும்..ஏதோ காரணத்தால் இந்தப் பயணம் மட்டும் தட்டிக் கொண்டே போனது.

2009. கோயம்புத்தூர் சித்தி சித்தப்பா, மகன், நான் என் மகள்கள்..கிளம்பிட்டோம் யாத்ரா.
ஆகஸ்ட் மாதம்..அசகாய மழை பெய்யும். இப்ப போய் ரிஸ்க் எடுக்கறீர்களே என்று சொன்ன எல்லாருக்கும் ஒரு புன்னகை பதிலாக கொடுத்து விட்டு..மூட்டை கட்டியாச்சு..

gauri kund . just இன்னும் 14 km மலை ஏறிட்டால் ...அவனைக் காணலாம்.
குதிரை சவாரிகளின் பேரம்..palanquin கள் வரிசையில். நான் என் பெரியவள், சித்தி பையன் ..குதிரை யிலும்..சித்தி, சித்தப்பா, சின்னவள் palanquin யிலும் செல்ல முடிவாச்சு.

பணம் கட்டினதும் மூணு குதிரைகள் ..இது Champa..இது ்chameli..இது Kavitha..
குதிரைக்காரர் formal aa introduce செஞ்சு வெச்சார். ஹலோ நு நாங்கள் சொல்ல..நல்லா வேகமா தலையாட்டித்து.

 counter ல் இருந்த ஆள் குதிரைக்காரரின் licence ஐ எங்கள் கையில் கொடுத்தார்..ஓஹோ..இவர் குடுமி எங்க கையிலனு குதூகலிச்ச போது..உன் life ஏ என் கையில் இப்போ என்பது போல ஒரு சிரிப்பு சிரித்தார் அவர்.

குதிரை மேலபொரு வழியா வழுக்கி வழுக்கி ஏறியாச்சு. என்ன மாதிரி ஒரு அறிவாளி  குதிரைகள். Champa தான் அக்காகாரியாம்.அவள் முன்னாடி நடக்க..குறும்பு குட்டி கவிதா..அவளை தாண்டாமல்..என்ன ஒரு technical walk.. படியே இல்லாவிட்டாலும்..பார்த்து பார்த்து காலை வைத்துச் செல்லும் லாவகம்.உச்சா வருதுன்னு ஓரமா ஒதுங்கும் ஒரு ஒழுங்கு..

மலைத்தபடி..மலை ராணியையும் மந்தாகினி யையும் ரசித்த படி எங்கள் பயணம். செல்ஃபோனில் பேச முடிந்ததால் எல்லாருக்கும் எங்கள் சவாரி பற்றி சிலாகித்தபடி சென்றோம்.

கூட்டமே இல்லை கோயிலில். கேதார நாதனைக் கண்குளிரக் கண்டோம். அரை மணி நேரத்துக்கும் மேலே அசையாமல் அவனை நினைத்தபடி..அங்கேயே அமர்ந்திருந்தோம்.விட்டு வரவே மனமில்லை.அப்படி ஒரு ஆகர்ஷிக்கும் சன்னதி. ஜருகண்டி சொல்ல ஆளில்லாத ஜோ எனக் கொட்டும் மழைக்காலம்.
மனசு நிறைய அவன் நாமம் சொல்லி..பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த அகோரர்களை ஆ வென பார்த்தபடி ..கீழே இறங்கத் துவங்கினோம்.

மத்தியான நேரம்..மந்தாகினி ஓசை. அக்கா தங்கைகள் வந்து நிற்க ..மீண்டும் குதிரை சவாரி.

திடீரென்று அப்படி ஒரு மேகம் . லேசான தூறலாய் ஆரம்பித்த மழை..சில நொடிகளில் கொட்டோ கொட்டென்று கொட்ட..கைக்கு அடங்காமல் குதிரைகள் ஓட்டமெடுத்தது..வலது பக்கம் மலையிலிருந்து கொட்டும் மழை..அதற்கு பயந்து குதிரைகள் ஓட நினைக்க.. இடது பக்கம் அதள பாதாளம். கைப்பிடி நழுவ கீழே விழ ஆரம்பித்தோம். குதிரைகள் ஒரு புறம் ஓட..கோடாவாலா..அதன் பின் ஓட..நாங்கள் நடுவழியில் அம்போ என்று விடப்பட்டோம்.

ram bada வில் சாப்பிட்ட அத்தனை ஆலு பராட்டாவும் ஆவியாக..மொபைல் மழையில் நனைந்து மூச்சு நின்று போக.ஆள் நடமாட்டமில்லா வழியில் நாங்கள் மூவர்.( season இல்லாததால் ஆளே இல்லை).

இப்படி ஒரு திவ்ய தரிசனம் செய்து விட்டு வரும்போது இது என்ன சோதனை சிவபகவானே..palanquin ல் போன சின்ன மகள், சித்தியைப் பற்றி ஒரே கவலை..

வேறெதுவும் தோன்றவில்லை..சிவனே நீ தான் கதி..எங்களைக் காப்பாற்று..கண்ணில் தாரையாக நீர்.
வேறு வழியில்லை. நடக்க ஆரம்பித்தோம். ஒம் நமச் சிவாய..ஓம் நமச் சிவாய..என்றபடி.

மாஜி..மாஜி..யாரோ கூப்பிடும் குரல். திரும்பிப் பார்க்கவோ ,நிற்கவோ பயம். வெகு அருகில் அந்தக் குரல். தைரியம் வரவழைத்து..திரும்பினேன்..

மூன்று சின்ன குதிரைகளுடன் ஒரு நடுத்தர வயதுப் பையன். ' aao maaji .ismein beto aap log' என்றான். nahi baiyya என்று மறுத்தேன்.
என் மனதில் ஓடியதைப் படித்த அவன்..' நான் உன் மகன் போல. நான் சொல்வதைக் கேள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே கும்மிருட்டாகும். மிருக ஜந்துக்களின் நடமாட்டம் வரும். தயவு செய்து என்னை நம்பு. இதில் ஏறுங்கள்..நான் உங்களை பத்திரமா கொண்டு போய் விடறேன். காசு கேட்பேனு பயப்படாதே..எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ' என்றான்.

 வேறு வழியே இல்லை..ஏறினோம். அவன் கதை அவன் அம்மாவை வருடத்தில் ஒரு முறை தான் பார்ப்பானாம். அவனுக்காக அவன் அம்மா  காத்திருக்கும் அழகை அவன் மொழியில் விவரித்தான்.28 கிமீ  தினமும் ஏறி இறங்கினாலும் ..கிடைக்கும் சம்பளம் மிகக் குறைவு என்று குறைப்பட்டான். கொட்டும் மழையில் அவன் கதை கேட்டபடி..அந்தக் கேதாரனைப் பிரார்த்தித்தபடி..மாலை ஆறரை மணிக்கு கீழே வந்து சேர..அங்கே முன்னமே வந்து சேர்ந்த சித்தியும் சித்தப்பாவும் எங்களை கட்டிக் கொண்டு அழ..

நன்றி..நன்றி என நூறு தடவை அந்தப் பையனுக்கு சொல்லி எங்கள் கையிலிருந்த காசையெல்லாம் திணிக்க..மூன்றே மூன்று நூறு ரூபாய் வாங்கிய அவன்..' meri maa ko ek sari Lena hai' என்றான்.

cloud burst என்று அடிக்கடி அங்கே பேப்பரில வரும்  செய்திகள்..
கண்ணெதிரில். பொத்துக் கொட்டும் மழை..ஜலப் பிரளயம்.

காசு...கைப்பேசி..எதுவும் உதவிக்கு வரவில்லை.. அடித்துச் செல்லப்பட்டு..ஆள் அடையாளம் காண முடியாது காணாமல் போயிருப்போம்.
எங்களைக் காக்க வந்தவன்..சாட்சாத் அந்த சிவனே ..சிவனே
அவன் தந்த உயிர்ப் பிச்சையில் நான் ..

எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும்  பகவானே ..எனக்கு யார் மூலமாவது நல்ல வழி காட்டு..அதே போல்..நானும் ஏதாவது வகையில் யாருக்கேனும் உதவியாய் இருக்கணும் என்று ஒரு வேண்டுதல் செய்வேன். No prayers go unanswered

வந்தான்..காத்தான்..ஜோதி மயமானவன்.

Saturday, February 9, 2019

Park ஆ இல்லை bark aa

Park or Bark🐕

Park ஆ..இல்லை bark aa..
காய்ந்த இலைப் படுக்கை..
kurl on மெத்தையோ..
குலைக்கும் சில.
குதறத் தயாராக சில
குலையும் நடுங்கி..
குண்டும் குழியானாலும்
கட்டினேன் நடையை..
கவர்மெண்ட்டு சாலையே மேலென்று..

(ஃபோட்டோ கொஞ்சம் shake.. ஒரு பயம் வேண்டாம் என்கிட்டனு முரைச்சு பார்த்தா..நடுங்காதா பின்ன..??)
#morningmusings

Friday, February 8, 2019

Timing

பள்ளிப் பேருந்து ஓட்டுனருடன் ஒரு பெரிய விவாதம்.
ஏம்ப்பா..'அழைச்சிண்டு' போவேன்னு சொல்லிட்டு இப்படி 'அடைச்சிண்டு' போறியே..
உங்களுக்கு சரியா காதுல விழலனா நானா பொறுப்பு..
#timing

காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..

காலம் மாறுமா..நம் வாழ்வு மாறுமா..

வேலைக்குப் போன அம்மாக்கள்
விவரம் தெரியாத பிள்ளைகள்
விளையாடிக் கழிக்குமே அடுத்தவீட்டில்
வினையேதும் ஆனதில்லை அப்போது..
தலைகீழ் எல்லாமாச்சு இப்போது..

முகமூடித் திருடர் போல்
மூடர்கள் வெறிக்கு பயந்து
முகத்தை துணியால் மறைத்தும்
மறைத்தே வீசும் அமிலத்தால்
மங்கிய வாழ்விங்கு ஏராளம்.

ஊருக்கு கிளம்புகிறாள் பெண்ணென்றால்
உள்ளூர பயமும் தொற்றிடுதே
உதறல் எடுத்தே உயிர் போய் வருதே
பேருந்து பயணம் இரவிலென்றால்
அருந்துவதில்லையே தண்ணீரும் இங்கே
அரை வயிற்று உண்வோடு
அடக்கியே செல்லணுமே வீடுவரையில்.

ஊருக்குள் இருக்கையிலே
காருக்குள் போகையிலே
பேசத் துவங்கிடுவாள் அம்மா
பிடுங்கிப் பேசிடுவார் அப்பா
வழித்துணையாய் உரையாடல்
வீடு வந்து இறங்கி்யதும்
விடுவாரே நிம்மதிப் பெருமூச்சு

வயிற்றில் ஓர் நெருப்பு
வயதுப் பெண்...
்வீட்டிலிருந்தால்.
வெளியே சென்றால்..

வருமா ஒரு காலம்..
வெறிச்சென்ற தெருவிலும்
வெளிச்ச மில்லா வீதியிலும்
அச்சமின்றி இவள் நடக்க..

Thursday, January 31, 2019

நற்றமிழித்துணுக்கு

#நற்றமிழ்த்துணுக்கு
கரு ஒண்ணு உருவாச்சு காலம்கடந்தாலும் மகிழ்ச்சியில் மனைவி..
கரு கவிதைக்கும் கிடைத்தது ...இரட்டிப்பு மகிழ்ச்சியில்..
கவி பாடும் கணவன்.

Tuesday, January 22, 2019

நாளாம்..நாளாம்..திருநாளாம்

நாளாம்..நாளாம்..திருநாளாம்

மூட்டு வலி..முதுகு வலி
முணுமுணுப்பில் உறக்கம்
மறக்காமல் கூவும்் கடிகாரம்
முடிந்ததே இரவு..
விடிந்ததே விரைவிலென்று
வாரிச் சுருட்டி எழுச்சி..
"உனக்கென்ன ..
உபாதை ஒன்றுண்டா..
உரிய நேரத்தில் வந்து
உன் வேலை தொடங்குகிறாய்.."
சூரியனுக்கு சுளுக்கில்லை
சந்திரனுக்கு சளித் தொல்லையில்லை.
நட்சத்திரத்துக்கு நரம்பு தளர்ச்சியில்லை.
மேகத்துக்கு முதுகு வலியில்லை.

அசதியுடன் விழித்தாலும்
அசத்தலாக்குகிறேன் என் நாளை.

சூட்சுமம் அறிந்தேன்..
சுருங்கியவள் விரிந்தேன்.

மறையும் மதியும் மலரும் காலையும்
மறக்காமல்  சொல்லுமே சேதி
வலி கொடுத்த ஆண்டவன்..மன
வலிமையும் கொடுப்பான்
வழியும் திறப்பான்..
நாளைத் துவங்க..
நாளெல்லாம் திருநாளாக்க.
Thanks to Swaminathan Ramasubramanian sir. உங்கள் அருமையான பதிவுக்கு இந்த கிறுக்கல் சமர்ப்பணம்.
Happy week ahead friends.
#myclick

Monday, December 24, 2018

முதுமையின் அடையாளங்கள்

முதுமையின் சில அடையாளங்கள் என Mythili Varadarajan mam பதிவுக்கு..என் பதில்..என் அப்பாவின் மன நிலையிலிருந்து..

தூக்க மருந்து  தாலாட்டுமுன்
தூக்கிப் போடுமே இருமல்
என் லொக் லொக்  சத்தம்
கொர் கொர் குறட்டைக்காரரையும்
கூப்பிட்டு எழுப்புமே..
தலைகாணி உயரமாகும்..
தலை விதி நொந்து..
தாரையாய் கண்ணீர் அருவி..
.
கோழிக் கூவும் நேரம்..
கண்ணும் சொக்கும் தூக்கம்..
எட்டு மணி ட்ரெயின் பிடித்து
எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து
ஓட்டமும் நடையுமாக..
ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..
ஓரமாய்..சின்ன நினைவாய்..
 விழிப்பும் ஒரு வழியாய் வர..
வேகத்தில் இயங்கும் வீடு..
பெண்ணும் பேத்தியும்..
பேச்சா..சண்டையா..??
புரியாத புதிராய் நான் முழிக்க..
சூடாக் குடித்த காபி..
சுட சுட செய்தியுடன் பேப்பர்
வெது வெது நீரில் குளியல்..
வேண்டுதல் நாளின் இனிமைக்கு..
பசித்து புசித்த காலம்..
பழங்கதையான ஏக்கம்..
மாத்திரைகள் பாதி உணவாக..
மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..
ஒற்றை வரியில் பேசிய நானோ
ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!
வலிகள் தரும் வேதனை..
விடுதலை வேண்டி ப்ராத்தனை..
கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய
நிகழும் காலம் நீளமாய்த் தெரிய
வரப்போகும் விடியல்..
விரட்டுமென் சோதனையென
விழித்தபடி படுத்திருக்கேன்..
விடிய இன்னும் நேரம் இருக்கே..

I feel women are more positive and energetic to surpass the ageing.
Thanks Mythili Varadarajan mam for kindling my thoughts.

Thursday, December 20, 2018

கா..கா..கா

@myclick ...
Chandrashekar Ramaswamy sir..ரொம்ப கேட்டேளே..காக்கா

அக்கம் பக்கம் பாருடா..சின்னராசா.
ஆகாஸப் பார்வை என்ன..
சொல்லு ராசா..
சிக்னல் என்ன மந்திரமா..
மனுஷன் என்ன எந்திரமா..
சார்ஜண்ட்டு..அங்கே இல்லை..
அர்ஜண்ட்டு ..உனக்கு என்ன..
அம்புக்குறி பார்த்து நீயும்.
வம்பு ஏதும் பண்ணாம..
தடத்திலே  ஓட்டு சாமீ
வழியும் கிடைச்சு விடும்..
வீடும் விரைவில் வரும்..
அக்கம் பக்கம் பாருடா..சின்ன ராசா

Friday, December 14, 2018

அழியாத கோலங்கள்

அழியாத கோலங்கள்..

அழியவே எழுதப்பட்ட
அழகான கோலங்கள்..
அழிக்கப் படும்போது..
அழுமே நெஞ்சமுமே..

கலைந்து சிதறிய கோலம்..
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்..
குட்டி எலி வேலையோ ..இல்லை
குட்டிச் சாத்தான்களின்
கும்மாளம் ..குதூகலம்..

துடைப்பத்துடன் வந்த
துப்புரவு பணியாளர்..
சுத்தம் சுத்தம்னு
சத்தம் போடுவியே..
அசுத்தம் இங்கே..
ஆசிட் கொண்டா..
அழுக்கு போகலையோ..
ஆளைத் தூக்கிடுவான்..
அலம்பல்..புலம்பலுடன்..

தூக்கில் ஏற்றி என்னை
தூ இவ்வளவுதானா..
தூசியாய் பார்த்த வேளை..
வாதம் என்னுடையது
வாதத்தில் தவித்த வேளை..

வாழ்க்கை பாடம்..
வளரும் வயதிலே..
வகையாய் கற்பித்தால்..
வாழ்வும் செழிக்குமே..
வளமை பெருகுமே..

நாகரீக நண்டுசிண்டுகள்..
நுனி நாக்கில் ஆங்கிலம்
நாலும் தெரிந்த பேச்சு.
'நான்' என்ற எண்ணம்..

வாண்டுகளின் வால்த்தனம்..
கண்டும் காணாமல்...
காணாமல் விட்ட தொடரின்
கதை கேட்டும் அம்மா ..

குறை சொல்ல நானில்லை..
கற்றுத் தரலாமோ கொஞ்சம்..
சுற்றியிருப்பதெல்லாம்..
சொத்து உனதல்ல வென்று..

நாளைய மன்னர்கள்..
நல்லது கற்கட்டும்..
நல்லாட்சி அமைக்கட்டும்
நலமோடு வாழட்டும்..

Wednesday, December 12, 2018

புயல் நாள்

வேரோடு வீழ்ந்த மரங்கள்..
வெறிச்சோடிய தெருக்கள்....
விளக்கில்லா வீடுகள்..
விரும்பாத இவைகள்..
வருடாந்திர விருந்தாளி..

வேலை பளுவில்லா அம்மா..
வீட்டுக்குத் திரும்பிய அப்பா..
வெட்டி அரட்டை அடிக்க ஆளில்லா அண்ணா..
வெறுமனே ஃபோனை நோண்டாத தங்கை..
மெகா சீரியல் இல்லா தாத்தா பாட்டி..
உருண்டை பிடித்து கையில் சாதம்..
ஊர்க்கதை பேச நேரம்..
விளையாட்டும் சிரிப்பும்..
வேடிக்கை பேச்சும்..
விடியும் வரை ஓடும்..
விளக்கில்லா ஒரு நாள்..
விளக்கிடுமோ..
வாழ்வின் பிடிப்பை..

ek KitKat break tho bantha hai Yar

Saturday, December 8, 2018

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 '25 தானே.'.
இல்ல்..லை 32..
டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.
என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை
  tally ஆனதே இல்லை..
சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..
சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..
வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..
அரைக்கிழம் ஆனபோதும்..
ஆசை விடுவதில்லை..
ஆடி அசைந்து செல்லும்..
பெட்டிகளின் கணக்கு
பெரும் புதிரே என்றுமெனக்கு..
ஒண்ணு.இரண்டு ..மூணு..
எண்ணத் தொடங்க..
அம்மா..ப்ளீஸ் என்றாள்..
அவளுக்கென்ன தெரியும்..
அதிலிருக்கும் மகிழ்ச்சி..
அடப்போடா..
யார் பார்த்தால் என்ன..
தொடர்ந்தேன்..
நாலு..அஞ்சு..ஆறு..

கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..
கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..
கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..
போனது போகட்டும்..
புதுசாய் துவங்குவோம்..
புது வருடக் கணக்கை
Advance happy new year friends

Tuesday, December 4, 2018

நம்பிக்கை

நம்பிக்கை
"எத்தனை தடவை சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிண்டு..reminder கொடுத்துண்டே இருப்பியா...?" சீறினேன்   சின்னவளிடம்..
சாமியிடம் கைக்கூப்பி  வரங்கள் வரிசையாய்க் கேட்டபடி பூஜையிலிருந்த நான்..
'சாமி பாவம் ம்மா'..நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தாள்.. எப்படியும் தன் வேலை அம்மா செய்து முடித்து விடுவாள் என்ற நம்பிக்கையில்..