Wednesday, September 18, 2019

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..

ப்ளாட்ஃபார்மில் டிரெயின் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாச்சு..்.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற.
எல்லாத்தையும் ஒரு வழியா அடியில தள்ளி நிமிர்ந்தா..நங்குனு மண்டையில் ஒரு அடி..வேறென்ன..விரிக்கப்பட்ட மிடில் பர்த் வீங்க வெச்சது என் முன் சொட்ட மண்டையை. என் பொண்ணோ ..full energy ல் ஆட்டம்..மிடில் பர்த்தை போட்டு நொக்கு நொக்குனு நொக்கி தாளம் போட..மிடில் பர்த் மாமா குறட்டையில் ஆலாபனை செய்ய.எங்க கூ..சிக்கு புக்கு ரயில் பயணம் ஆரம்பம்..
நமக்குத்தான் 4 மணிக்கு முழிப்பு வந்துடுமே..வீட்டு ஞாபகத்தில் எழுந்திருக்க..மீண்டும் டொங்னு மண்டையில் ஒரு அடி..எங்கயும் காலை வெக்க முடியல..மெதுவா....முதுகை கோணலா ஒரு வளை வளைச்சு...தலையை மெதுவா நீட்ட..என் சிண்டை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சது மிடில் பர்த் சங்கிலி ..ஆ..வலி..கத்த கூட முடியல..
கால் எங்க வெக்கறது..சாமானெல்லாம் தூங்கிண்டிருக்கே..ஒரு வழியா சமாளிச்சு எழுந்து ..அப்பர் பர்த் ல் அக்கடானு தூங்கிண்டிருந்த அகத்துக்காரரை எழுப்பி..கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கோங்கோ..நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..அப்ப்போதான் முதல் ரவுண்ட் வர காபி எனும் கஷாயத்தை குடிக்க முடியும்னு சொல்ல..அம்மா தாயே..வீட்ட்ல தான் அட்டகாசம்னா..இங்கேயுமா..சரி சரி போய்ட்டு வானு வழியனுப்பி வெச்சுட்டு..வாய் பிளந்து தூங்க
. டாண்ணு ஆறு மணிக்கு என் காது குளிர' காபி..காபி'..'சாய்..சாய்' சத்தம்..என் பெர்த் கிட்ட வந்துட்டார் ..ஒரு காபி குடுங்க..சொன்னதுதான் தாம்தம் கொதிக்க கொதிக்க பேப்பர் கிளாஸில் ரொப்பிட்டு..madam 10 ரூபாய் தாங்க..
ஒரு நிமிஷம் ப்பா..பர்ஸ் பெண்ணின் தலைகாணிக்கடியில்...மெதுவா உருவலையோ.நான் அம்பேல்..ஆட்டம் ஆரம்பிப்பாளே..ஒரு கையில் காபி..மறு கையில் காசு..அப்பத்தான் ட்ரெயின் டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிக்க..என் கையிலிருந்த காபியும் சேர்ந்து ஸ்டெப்ஸ் போட..கடைசியில் எனக்கு கிடச்சது 2 ரூபாய் காப்பிதான்.
காபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்..ஆனந்த சயனத்தில் என்னை சுத்தி எல்லாரும். எனக்கோ வேடிக்கை பார்க்கணும்..
சூரியன் அழகா வெளிய வருமே..மேகமெல்லாம் என்னோட ஓட்டமா ஒடி வரதைப் பாக்கணும்..
மரம் வேகமா ஓடும்..சின்ன சின்ந பாலங்கள்..வயல்வெளி..மாட்டு வண்டி..
ஒவ்வொரு ஊர் ரெயில்வே கேட் கிட்ட நிக்கற ஸ்கூல் பசங்கள் பார்க்கணும்.
குட்டி ஸ்டேஷன் எல்லாம் ஓடி ஓடி வந்து தண்ணியும் ஒட்டகப் பாலும் விற்கும் குட்டீஸ். கொய்யா..ஆரஞ்சு வித்து ரெயில் கிளம்பிடுமோங்கிற பயத்தில் சிறு வியாபாரிகள்..
இத்தனையும் பேரழகன் சூர்யா போஸ்ல உட்கார்ந்த படியே ரசிச்சபடி ..
கொஞ்ச நேரமா ஒரே சைடாகிப்போன கழுத்தை அம்மா...என்று அழைத்தபடி என் பெண் ஒரு திருப்பு திருப்ப..ஆ..வலி..வலி..

அந்தக் கோணக் கழுத்தோடயே பால் கரைத்து கொடுத்தாச்சு்....கொஞ்ச நேரத்தில் இட்லி ஊட்டல்..தோசை தோசை விளையாட்டு .. தண்ணி கொட்டி ஈரமான துணியை மாற்றல் எல்லாம் இனிதே நடந்தேற..' சார்..லஞ்சுக்கு என்ன வேணும் உங்களுக்குனு pantry service கேட்க..
ஒண்ணுமே தெரியாதது போல மிடில் பர்த் மாமா..என்ன லஞ்ச்சா..நான் இன்னும் breakfast ஏ சாப்பிடலையேனு (விவேக் ஸ்டைலில)் ..இந்த மாதிரி long journey ல தான் நம்மைஅறியாம தூங்க முடியறது.. சரிப்பா..வெஜிடேரியன் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்துடு என்றபடி பல் தேய்க்கப் போனார்..எனக்கோ அப்பா..விடுதலை..திரும்பி வந்து பர்த்தை மடிச்சுடுவார்..மடங்கின என் கழுத்தும் பிழைக்குங்கிற நினைப்பில் மண்ணைப் போட்டார் மகானுபாவர்..மீண்டும் தன் berth ல் ஏறி படுத்தபடி..
ஆங்..சொல்ல மறந்துட்டேன்..upper berth ல் படுத்திருந்த என்னவரை நாங்கள் அடித்த லூட்டி ஒரு வழியாய் எழுப்ப..நீயாச்சு உம்ம பொண்ணாச்சுனு  ரெண்டு பேரையும் கோர்த்து விட்டு..நான் கொட்டாவிக்கு பதில் சொல்ல குறட்டை விடலானேன்.
ரயில் பயணம் என்றும் சுகம்..மிடில் பெர்த் இடித்தாலும்..
இனிமே ஆறு மணிக்கு எல்லாரையும் எழுப்பிடுவாங்களாமே..
பரிதாபம்..அந்தோ பரிதாபம்..பாட்டு தான் இப்போ மனசில ஓடறது

Tuesday, September 10, 2019

Ammaa

10 th September.

கவனிப்பார் யாருமில்லையென
கலங்காத என் வீட்டு செடிகள்.

வறண்ட நாட்களும்
வர்தா புயலும்
வந்தும் தான் போயின.
வாடிப் போனாலும்
வாரி அடித்து சென்றாலும்.
மீண்டு(ம்) எழுந்தது
மருந்தான மணத்தக்காளியும்..
மணம்  தரும் கருவேப்பிலையும்.

அம்மா..இட்ட உரம்..
மரஞ்செடிக்கு மட்டுமல்ல..என்
மனதுக்கும் கூடத்தான்..
miss u maa

Friday, September 6, 2019

என் ஜீவன் நீதானே

#படம்_பார்த்து_கதை
#madhyamar_Sunday_special க்காக எழுதிய so called என் கதை.

#என்_ஜீவன்_நீதானே

"ஏங்க..அந்த நியூஸ் பேப்பரை நொட்டுறு பண்ணது போதும்.மடமடனு குளிச்சு டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் .

 மார்க்கெட்டில் போய் ஃப்ரஷ்ஷா காய் வாங்கிட்டு, அப்படியே அரிசி மண்டில சாமான் லிஸ்ட் கொடுக்கணும். பாங்க் வேற நாலு நாள் இருக்காதாம் . கொஞ்சம் பணம்  எடுக்கணும். ஒரேடியா முடிச்சுட்டு வந்துடலாம்' கட்டளை பறந்தது காவேரி அம்மாளிடமிருந்து.

"ஏம்மா..உன்னோட வேடிக்கை பார்த்துண்டு வரதுக்கு ..நீ ஒரு ஒரு காயும் பழமும் வாங்கறதுக்குள்ள காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுமே..

நான் பாட்டு அக்கடானு டீவி பார்த்துண்டு இருப்பேனே' ..சுந்தரம் சொன்னதை கண்டுக்காமல் ஜருகண்டியில் இறங்கினாள் காவேரி.

சுந்தரம் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். காலையில் போனால்..வீடு வர பாதி ராத்திரி ஆகிடும். பசங்க படிப்பு, ஸ்கூல், வீடு ,உள் வேலை, வெளி வேலை எல்லாம் காவேரி தான். பையன்கள் ரெண்டு பேரும் நல்ல வேலையில் வந்த பிறகு ..வயதும் ஆகி விட்டதால் கடை வேலைக்கு போவதை நிறுத்தி இரண்டு வருடமாச்சு.

தினமும் இதே கூத்துதான். தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியே இழுத்துச் சென்று விடுவாள்.

அன்றும் அப்படித்தான்..வெளியே போய் வந்து..சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசர, ஏதோ முனகல் சத்தம் அவரை எழுப்பியது. காவேரி தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.

மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. "காவேரி.".. "காவேரி"..அவர் குரல் காதில் விழவில்லை அவளுக்கு...கண் மூடினாள்.
சுந்தரம் சுருண்டு போனார். தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். விட்டத்தை் பார்த்தபடி..

" நாளையிலேர்ந்து காரியம் ஆரம்பிக்கணும். காய்கறி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு..சாமான் ஒண்ணு விடாம ரெடி பண்ணி வெச்சுக்கணும்.."
மருமகள்கள் பேச்சுக் குரல்..

ஏதோ மண்டையில் அடித்தாற்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து எப்போதும் எடுத்துப் போகும் பைகளை எடுத்தார்.
"கொடுங்கம்மா..எல்லாத்தையும் பார்த்து நான் வாங்கி வந்துடறேன்.."..

"மாமா..நீங்க?...மருமகள்கள் கேட்க..
" எனக்கு ஒவ்வொண்ணும் உன் மாமியார் சொல்லிக் கொடுத்திருக்காம்மா..நீங்க உள் வேலையை கவனிங்கோ..நான் போய்ட்டு வரேன்".
அவர்கள் எப்போது காய்கறி வாங்கும் பெருமாள் கடை முன் நின்றார்..

"நல்ல பிஞ்சா பார்த்து நானே பொறுக்கி எடுத்துக்கறேனேப்பா..'..காவேரியின் குரல் அங்கே அவருக்கு மட்டும் கேட்டது..

Tuesday, September 3, 2019

கொடுப்பினை..படம் பார்த்து கதை

#சண்டே_ஸ்பெஷல்...
#madhyamar_Special. எல்லா வாரமும் ஒரு புது விதமாக தலைப்பு கொடுத்து ..சிந்தனை தூண்டும் விதம் எழுதத் தூண்டும் இடம்.

இந்த வாரம்  #படம்_பார்த்து_கதை.
4 படங்களில்..மூன்று படத்திற்க்கு எழுதினேன்.
அதில் இந்த படத்துக்கு என் கதை..

#கொடுப்பினை

"ஏங்க..இந்த அரை டிராயரைப் போட்டுண்டு வெளிய வராதீங்கனு எத்தனை தடவை சொல்றது..அவங்க எல்லாம் என்ன நினைச்சுப்பாங்க" என்று கிரிஜா கேட்கவும்.."போடி போ..என் ட்ரஸ்ஸை யார் பார்க்கப் போறாங்க அங்கேனு" நக்கலடித்தபடி கைலாசம் மாமா.

அந்த பெரிய பில்டிங்கின் கேட் முன் சென்றதும்..வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி சலாமடித்தபடி.." எல்லாரும் உங்களுக்காக தான் காத்துக்கிட்டிருக்காங்க ..போங்க சீக்கிரம் நு வாய் நிறைய வரவேற்றான்.
இண்டர்காமில் சொன்னது தான் தாமதம்..

"சகலை..வந்துட்டீங்களா..' மூணாவது மாடிலேர்ந்து மாதவன்.
டேய்..கைலாசம்..சீக்கிரம் வர மாட்டியா..கிளம்பணும் கிளம்பணும்னு கால்ல கஞ்சியோட பறப்பியே அப்பறம்..சீனு பெரியப்பா சிட்டாய் வந்தார்.
அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்த சேகர்..வாரத்தில் இந்த ஒரு நாளுக்காக தாண்டா காத்திண்டு இருக்கேன் என்று நட்பின் உரிமையோடு..

ஏய கிரி்ஜா..வந்தாச்சா..வா..வா..இங்க க்ளப் ஹவுஸில் எல்லாரும் உனக்காக தான் காத்திட்டிருக்கோம். அவள் கையை இழுத்தபடி..கோமதி மாமி.

தன் கையில் கொண்டு வந்திருந்த கிருஷ்ண ஜயந்தி பட்சணமெல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாள் கிரிஜா

சொல்லு சொல்லு ..போன வாரம் கல்யாணத்துக்கு போனியே..எப்படி இருந்தது..?
யார் யார் வந்தா..என்ன மெனு.. வரிசையாக் கேள்விகள்.
இவர் செளக்கியமா..அவர்கள் செளக்கியமா.. ஒருத்தரை விடாமல் விசாரிப்புகள்.
அந்தப் பக்கம்..கைலாசம் மாமாவுடன் சேர்ந்து வெடிச் சிரிப்பு சத்தம் அந்த காம்பவுண்ட்டிலே எதிரொலித்தது..

மணி அஞ்சு அடிக்கவும்..கைலாசமும் கிரிஜாவும் கிளம்ப ஆரம்பிக்க..இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போங்களேன் என்று அன்புக் கட்டளைகள்.

ஒரு வழியா..அஞ்சே முக்காலுக்கு..இனிமே ரொம்ப நேரமாகிடும்..கிளம்பிடுங்கோனு அவர்களே சொல்ல..அடுத்த வாரம் பார்க்கலாம்
அந்த காம்பவுண்டு கேட்டை கடக்கையில்..
"happy old age home ' என்ற பெயர்ப் பலகையின்  பின்..கலங்கிய கண்களுடன் .கை..வலிக்க வலிக்க ..டாட்டா காட்டிய உறவு மற்றும் நட்புகள்.

"அப்பா..எங்கே இருக்கீங்க..நான் வந்து பிக் அப் பண்ணட்டுமா?"..என்ற மகனின் குரல் தேனாய் காதுகளில்..

Monday, September 2, 2019

Bandh day

எழுந்திருக்க மனமிலா..
சோம்பலான காலை..
எடுப்பாரன்றி..
வீசி எறியப்பட்ட...செய்தித்தாள்
தூக்கில் தொங்கும் பால் பாக்கெட்..
எதுக்குமே வாசப்படி இறங்க வேண்டாம்..
எது இருக்கோ..அதே போதும்..
அடைப்பட்ட குழந்தைகள்..
சனி ஞாயிறை விட..
சுகம் தருதோ..??

சுற்றி எல்லாரும் இருக்கும்..
சுறுசுறுப்பை சூறையாடும்
சிற்றின்பம் சிலருக்கும்..
பேரிழப்பு ..
பொருளாதாரத்துக்கும்..
தரும்..
வேலை நிறுத்தங்கள்..
வழி காட்டுமா..
வளர்ச்சிக்கு..!!!!

Friday, August 30, 2019

மாகிமை

மாகி(மை)
maggiyananda Mayi.என் கடைக்குட்டியின் செல்லப் பேர் ஒரு காலத்தில். A for apple சொல்லும்போது கூட M for maggiனு சொல்வோம் நாங்க.மாகி ban ஆனப்போ ஆடிப்போன குடும்பத்தில் நாங்களும் ஒண்ணு.
மாகி படைத்து விட்டால்
மாமலையும் ஓர் கடுகாய்
மளமளனு வேலை நடக்கும்.
காலம் மாறித்தானே போகும்.

ஏன்னா...இப்போ கொஞ்சம் வளர்ந்துட்டோமே.. weight conscious..diet plan..etc..etc..மாகிக்கு வந்தது முதல் வேட்டு.பாக்கெட் பாக்கெட்டா ரொம்பி வழிஞ்சது போய்..
போதும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரு மாசத்துக்குனு மனதை அடக்க ஆரம்பிப்பு.
இரண்டு நாள் முன்னாடி ..இருந்த பொட்டலமெல்லாம் காலியாக எங்களுக்குள் நடந்த conversation.
அவள்: அம்மா..மாகி காலி.வாங்கிண்டு வா. ஒரே ஒரு பாக்கெட் போதும்.என்னை tempt பண்ற மாதிரி offer ல கிடச்சுதுனு அள்ளிண்டு வராதே.ஆமாம் சொல்லிட்டேன்.
நான்: அட என செல்லமே மாகியானந்தமயி..உன் சித்தம் என் பாக்கியம்.
பையை தூக்கிண்டு கடைக்கும் போயாச்சு.எல்லா சாமானும் வாங்கினப்பறம் என்னவோ மிஸ் ஆறதேனு மண்டை குடைய..(மைண்ட் வாய்ஸ் இதுக்குத்தான் வயசான காலத்தில லிஸ்ட் எழுதிண்டு வரணுங்கறதுனு என்னை உசுப்பித்து.)
பில் போடும் வேளையில் ..கண்டேன் சீதையை..மாகி ..மாகி..வரிசையா அடுக்கி வைத்தபடி ,என்ன தேடறீங்க அக்கா..என்னைக் கேட்டாள் கடையில் வேலை செய்யும் பெண்.இதே தான் ம்மா..
ஒரு பாக்கெட் கொடு என்றேன். பழக்கப்பட்ட அவள் சொன்னாள்..அக்கா இப்போ ஒரு பாக்கெட் வாங்கினா ஒரு சூப்பர் மாகி bowl free க்கா..இந்த offer
இப்பவே முடிஞ்சிடும் . ஒரு இரண்டாவது எடுத்துப் போங்க என்றாள்..ஓசிக்கு ஆசை யாரை விட்டது. very colorful and catchy bowl. வாங்கியாச்சு.
வீட்டுக்கு வந்ததும் மகளைக் கூப்பிட்டு மாகி இந்தாம்மா என்றேன்.
யக்..இது யார் கேட்டா..எனக்கு இந்த flavour பிடிக்காதே..அதைக் கூட பாக்க மாட்டியா.. ஏம்மா free கிடைச்சதால்் என் favourite மறந்து போச்சா ..சரி சரி..போ..adjust பண்ணிக்கறேன் இந்த டைம் என்றாள்.
டீவில  ஓடிக் கொண்டிருந்த ரஜினி பாட்டு..என்
காதில் இப்படி விழுந்தது..

cupக்கும் , glassக்கும், spoonக்கும் ஆசைப்பட்டு..
வாழ்கின்ற வாழ்வுக்கு
என்றைக்கும் அர்த்தமில்ல..
இதைப் புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..?
 culprit நான் தானே?

Shopping

புடவை ஷாப்பிங்.

காலேஜ் ethnic day..
கனவுடன் பட்டாம்பூச்சிகள்..

கறுப்பு கலர்..
கண்டிப்பா கலந்து இருக்கணும்..

கட்டிண்டால்..
கரீனா கபூர் மாதிரி தெரியணும்.

கண்ணை பறிக்கும் ஜரிகை கூடாது
கண்ணு போடறாப்போல இருக்கோணும் என் செலக்‌ஷன்..

கண்டிஷன் ...கடகடவென்று
கடைக்குட்டியும் போட்டாளே..

கூல் டிரிங்க்கும் கையுமா
கடை கடையா ஏறி இறங்கல்..

கலர் பிடிச்சா .பார்டர் படு 'போ'ர்
பார்டர்  பிடித்தாலோ..
ப்ளவுஸும் ஃப்ளாப்பாச்சு..

மால்கள் சுத்தி வந்தும்
மனசுக் கொண்ணும் பிடிக்கலை.

பெரிய கடைகளில் எல்லாம்
பெரிசா ஒண்ணும் புதுசா இல்லை..

பக்கத்து பொட்டிக்(boutique) கடையில்
புதுப்புது டிசைனில்
பளிச்சுனு புடவை கிடைக்க..
பிரித்து கட்டி அழகு பார்க்க
பிரமித்து நின்றேன்..
பாரம்பரிய உடை அழகே தனிதான்.

ethnic day க்கள்..
அடிக்கடி வரட்டும்..
எங்கோ மூலையில்..ஈனஸ்வரத்தில்
என் மைண்ட் வாய்ஸ்

Wednesday, August 21, 2019

தேடல்

தேடல்
எல்லாம் வாங்கியாச்சா..
எத்தனை பேர் சாப்பாடு..
காலைல எழுந்ததும்..
காத்துல பறந்துடும் நேரம்..
காய் கறி நறுக்கி..
கோலத்துக்கு அரைச்சு..
சாமி உள் சுத்தம் பண்ணு
வெல்லம் பொடிச்சுடு..
விடு விடுனு வேலை ஆகும்..
கரெண்ட் போறதுக்குள்ள..
grinder ,mixie வேலையாகட்டும்.
சமையல் மேடை ..
சகதியா இருக்கப்படாது..
பளிச்சுனு இருக்கணும்...
கீழ மேல சிந்தாமல்..
பாந்தமாய் வேலை செய்யனும்..

மாமி வந்தாச்சு பாரு..
நலங்கிட்டு..நமஸ்காரம் பண்ணு..
நன்னா..சாப்பிடுங்கோனு..
நாலும் கேட்டு பறிமாறு..
இந்த புடவை எடுப்பா அமைஞ்சிருக்கு..
நன்னா..select பண்ணியிருக்கே..

சாயந்திரம் சஹஸ்ரநாமம் பாராயணத்துக்கு..
சுண்டலும்..கேசரியும் பண்ணு..
பையில வெத்தல பாக்கோட
பழமும் தேங்காயும்...
pack பண்ணி வெச்சுடு...
பாராயணம் முடிஞ்சு..
எல்லாரும் போயாச்சு..
காலம்பறலேர்ந்து..பம்பரமா சுத்திட்டே..
நாளைக்கு லீவு நாள் தானே..
நிம்மதியா கொஞ்சம் தூங்கு..
நல்லபடியா எல்லாம் ஆச்சு..

எப்போதும் போல் என் அம்மா..
என்னை....ஆட்டுவிக்க..
எனக்குள்ளே ஒரு கேள்வி..!!!

இத்தனை பேரில்..
யாராய் நீ வந்தேம்மா.
எப்போ வந்தே..
எனக்கு அடையாளம் தெரியலயே..
நான் கவலையாய் கேட்க..
புன்னகை ஒன்றே பதிலாய்..
photo வில் நீ..

Thursday, May 16, 2019

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீசன் 3 கடிதம் 1

எழுதுகிறேன் ஒரு கடிதம் சீசன் 3
கடிதம் 1

அன்புள்ள பவித்ரா அக்காவுக்கு

ஷேமம்.ஷேமத்திற்கு பதில்.
அம்மா என் பக்கத்திலே உட்கார்ந்து சொல்ல சொல்ல எழுதறேன்.
அங்கு உன்னோட ஆபீஸ் வேலையெல்லாம் எப்படி இருக்கு? நீ கிளம்பினதும் வீடே வெறிச்சுனு போச்சு. குழந்தை ராத்திரி பூரா அழுதா..உன்னைத் தேடிண்டே இருந்தா.

 இப்பொ நாலு நாளா அழுகை கொஞ்சம் குறைஞ்சுருக்கு. அம்மாவோடயும் என்னோடயும்  பழகிட்டா. பவுடர் பால் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறா. உன்னை பத்தி தான் நினைப்பு அம்மாக்கு எப்போதும்.

உடம்பை ஒழுங்கா பார்த்துக்கோ. பளுவான வேலையெல்லாம் செய்யாம இருக்கச் சொன்னா..இன்னும் நீ பச்சை உடம்புக்காரிதான். இப்போ சரியா கவனிச்சுக்கலைனா பின்னாடி ரொம்பா வீக்காகிடுவேனு அம்மாக்கு கவலை.
அப்பா வார்த்தை க்கு வார்த்தை உன்னையே சொல்லிண்டு இருக்கா.
 குழந்தையப் பத்தி கவலைப் படாதே..இப்போ கூட இங்கேதான் என் மடியில் படுத்துண்டு தூங்கறா. உன் உடம்பைப் பார்த்துக்கோ.அத்திம்பேரைக் கேட்டதா சொல்லு.அடுத்த லீவு உனக்கு எப்போ?

அம்மா இப்போ எழுந்து போயாச்சு.
அக்கா..உனக்கு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்.அடுத்த வாரம் புதன்கிழமை க்குள்ள ஃபீஸ் கட்டணும்.இல்லனா பரீட்சை எழுத விடமாட்டா. இந்த லெட்டரை தந்தி போல பாவித்து மணியார்டர் அனுப்பிடுக்கா..போன வருஷத்துக்கு முந்தின வருஷம் வாங்கின இங்க் பேனா.ரொம்ப இங்க் கொட்டறது. அதுக்கும் சேர்த்து ஒரு அஞ்சு ரூபா அனுப்ப முடியுமாக்கா..
இங்கே எல்லாரும் செளக்கியம். குழந்தை சமத்தா இருக்கா. கவலைப்படாதே.
இப்படிக்கு
அன்புத் தங்கை
சுசீ

Sunday, May 12, 2019

ராஜ ராகம்

ராஜ ராகம்..
Raaja sir music..a part and parcel of life)

 வழிந்தோடிய நதியாய்
வயலினும் விணையும்
வசப்படுத்த
செல்லோவும் சித்தாரும்
செல்லமாய் வருட
கிட்டாரின் தந்திகள்
கிறங்கத்தா னடிக்க
பியானோக்கள்..
புத்தம் புது மெட்டிசைக்க
தபேலாக்காளின் தாளங்கள்
தலையாட்டச் செய்ய
கோரஸின் குரல்களோடு
கூட்டத்தில் நாம்கலக்க
நாதஸ்வரங்கள்..
நாத வெள்ளத்தில் மூழ்கடிக்க
தாரையும் தப்பட்டையும்
தனை மறந்தாடச்செய்ய
புல்லாங்குழல்கள்
புதுராகம் பாட..
பேரறியாக் கருவிகளும்
மோட்சமடைந்ததுவே
மாஸ்ட்ரோ உன்னாலே..
சுகமொ சோகமோ
சுற்றி வரும்
மெட்டுனதே..
இசைஞானி உன்னாலே
இசையும் இயல்பானதிங்கே
தாலாட்டும் கரங்கள்
நம்மை விட்டுச் சென்றாலும்
தனிமைக்கு ஓர் துணை
தெவிட்டாத உன்னிசை தானே

Saturday, May 4, 2019

Soka mother- may 3rd 2019

soka mother
i am a soka mother.
I have no fear

welcoming each day with cheer
worries vanish and disappear.
my mission becoming clear
i never stop to persevere

gratitude filling my heart
I've learnt the living art.
every dawn is a fresh start
with power packed kick start.

hopping the hurdles with hope
stopping not till i win.

 I am a soka mother..and
i am very special.
thank u

finding the mission of life
triumphing

Wednesday, April 17, 2019

பெத்த மனசு..

ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்

'வரட்டும் ..வரட்டும்..நன்னா  நாலு கேள்வி நறுக்குனு கேட்கணும்..'
Airport arrival வாசலில் விடிகாலை மூணு மணிக்கு வரும் flight  க்கு முந்திரிக் கொட்டையாய் பன்னெண்டு மணிக்கே வந்து..ஓரமா ஒரு எடம் பார்த்து உக்கார்ந்தாச்சு..
டாடா 'பை' 'பை'க்கள்..குடும்பத்தோட வந்து ஒரு குட்டி பிக்னிக் பலருக்கு.
கல்யாணக் களையோடு கடைகள். spoon ,fork ஆல குத்தி சண்டை போட்டும் கொஞ்சங்கூட கிழியாம அடம் பிடிச்ச தோசையை ,யாரும் பார்க்கலைனு நினைச்சுண்டு கையால லார்ட் லபக் தாஸ் மாதிரி விண்டு வாயில் போட்டு அனுபவிச்ச அரை டிராயர் இளைஞன், எக்கச்சக்க selfie புள்ளைகள்..PNR ஐ password போட்டு எப்படி பத்திரமா வைச்சுக்கணும்னு class எடுத்த ஒரு மலபார் மாமி. Placard வெச்சுண்டு பரபரனு அலைஞ்சிண்டிருந்த டிரைவர்கள்..மோப்ப நாய் வேற ரொம்ப சுத்திண்டு இருந்தது..hijack alertனு news வந்ததன் விளைவு..
லவ் ஜோடீஸ் ...கார் வராத கடுப்பில்
காள் காள் கத்தலுடன் கோட்டுசூட்டு ஆசாமி..
இப்படி பல விஷயம் சுத்தி நடந்தாலும்..மனசு மட்டும்..வரட்டும் இரு..வெச்சுக்கறேனு  கறுவிண்டு..
இங்கேர்ந்து கிளம்பும்போது பேசின பேச்சென்ன..'ரெண்டே மாசம் ஓடி வந்துடப் போறேன்..உன்னோட செல்லைக் கொடு..hang out  இல்லையே இறக்கிடறேன்..
Messenger install பண்ணி இருக்கேன்.அதுல easy ஆ இருக்கும்..இருக்கவே இருக்கு.எப்படியும் நீ தான் fb லயே குடி இருப்பியே..so no problem.
 watsapp video call இருக்கவே இருக்கு.
உன்னோட time ல ராத்திரி 9 மணிக்கு கூப்பிடுவேன்..நீ பாட்டுக்கு local call ல லொள்ளு சபா நடத்தாதே..அதே மாதிரி காலம்பற 10 மணிக்கு கூப்பிடறேன்..நான் தூங்க போறதுக்கு முன்னாடி..காய்கறி வாங்கப் போய்டாதே..இத்தனை இருக்கு..எதுக்கு உனக்கு கவலை'.
இப்படி சொன்னபோது ஆமாம்ல இது என்ன அந்தக் காலமா..கண்ணைக் கசக்கிண்டு நிக்க..தேத்தியாச்சு மனசை..முதல் ரெண்டு நாள்..சொன்னபடியெல்லாம் நடந்தது..
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு..நாம அனுப்பற hi க்கு half a day கழிச்சுதான் ஒரு blue tick வரும்..சரி சரி..9 மணிக்கு call வரும்னு நினச்சா..reached officeநு ஒரு ஒத்தை வரி..இனிமே மெஸேஜ் பண்ணாதேனு indirect ஆ..ம்ம்ம்ம்..
எப்படியும் காலம்பர கால் வரும்னு காத்திருக்க...காத்துண்டே இருக்க..
இப்படியே ரெண்டு மாசம் ஓட்டியாச்சு..
இன்னிக்கு  வரட்டும் உண்டு இல்லனு பண்ணிடறேன்..
மணி மூணு..தரை இறங்கியது விமானம்.. வரட்டும்..வரட்டும்..வெச்சுக்கறேன்..
அரை மணி அவஸ்தை..
அதோ..அதோ..அங்கே தெரியறது...
.yes..வந்தாச்சு..ஒத்திகைப்படி ஒழுங்கா நறுக்குனு கேட்டுடணும் முதல்லயே..
கண்ணாடி வாயில் திறக்க..கையசைத்தபடி..
Hi..maaa..wazaap என்று ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டவளை..என்னடா.இப்படி இளைச்சு போயிருக்க..சாப்பிட்டியா ..
இல்லையா..ரொம்ப miss பண்ணேண்டா..நான் சொல்ல..
'அதான் வந்துட்டேனே..
Chill maa'..அவள் பாணியில்.. அவள் தொனியில்....
தேன் வந்து காதில் பாய..
திட்டித் தீர்க்கணும், கொட்டிக் குதறனும்னு  போட்ட திட்டமெல்லாம்......???

Sunday, April 7, 2019

பள்ளி போகும் பாட்டி



தலை வாரிப் பூச்சூடி உன்னை..
பாட சாலைக்கு போ என்று
சொன்னாளோ  உன் அன்னை..

முடியிலுள்ள சிடுக்கெடுத்து
முடிந்து கொண்டை போடுவேன்..
உன் ...
முகத்திலுள்ள சுருக்கத்துக்கு
முழு டப்பா கிரீமும் போதாதே..
மூட் அவுட் ஆகாதே பாட்டி
முடிஞ்ச வரைக்கும் ..உன்
முதுமையையும் மறைப்பேனே..

மலர்ந்த புன்னகை நீ சிந்த
மறைந்தே போகுமே ..
உன்..
வயதைக் காட்டும் ரேகையெல்லாம்...

Friday, April 5, 2019

ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே..'

:ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..'

'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..ஒரு வார்த்தை என்னைக் கேட்கமாட்டியாம்மா ...என்ன வேண்டுதல் இதெல்லாம்..
தாயும் சொன்னாள் ...
'தலைப் பிரசவம்...
தாயும் சேயும் நலமா இருக்க
திருமலையானை தரிசனம் பண்ண
குழந்தையைத்  தூக்கிண்டுனு நடந்து வரேன்னு பிரார்த்தனனை..
இனிமே இப்படி வேண்டிக்க மாட்டேன்..உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி..
சோக முகத்துடன ்என்னிடம்  சொன்ன  அம்மா..
இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை என்னை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே..
மகன் தந்தையிடம் சொல்வான்..
'அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு வார்த்தை என்னை கேட்க மாட்டியா...
நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே
ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..ஏண்ணா..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..
கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.
கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம் ராஜி aunty ஆத்துக்கு போகணும்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க..

இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..
ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..

Sriram Jayaram Jaya Jaya ram

Wednesday, April 3, 2019

கரிசனம்

கரிசனம்..

Top up போட்டுத் தருவியா..
Tops ம் கொஞ்சம் இஸ்திரி பண்ணமுடியுமா..
Time table படி படிச்சாச்சு..
தாத்தாவுக்கு சமைச்சதே போதுமெனக்கு..
உதவி செய்யட்டுமா.
உனக்கேன் ம்மா..இவ்வளவு வேலை
கரிசனம் பொங்கக் கேட்டாள்..
போதுண்டா..
சுத்தி வளைக்காம சொல்லு
சுத்த எங்க போறேனு..
சூட்டிகை ம்மா நீ
சூட்டினாள் பட்டம்..
சுற்றி என்கழுத்தை கட்டியபடி
சிட்டாய்ப் பறந்தாள்..
சுளுவாய் காரியம் முடிய
குஷியில் பெண்ணுமே..

Saturday, March 30, 2019

அடுப்படி எனக்கென்ன சொந்தமா...? பழைய நினைப்பு.. படை போல் குடும்பம் பொடிசு முதல் பெரியவர்கள் பானையில் சோறு பருப்புக் குழம்பு பொரியலும்..வறுவலும்.. பொதுவாய் சமையல். பந்தியில் அமர்ந்து பாங்காய் பரிமாறல் பங்கிட்டு உணவு பழசுக்கு இடமேது.. பொசுக்கும் வெய்யிலில் பொழுதும் போகவே அப்பளமும் வடாமும் அழகாய் இடுவாளே.. அம்மியும் ஆட்டுக்கல்லும் அங்கே கைகொடுக்குமே தேய்த்தல் துவைத்தல் துடைத்தல் எல்லாமே துரிதமா நடக்குமங்கே தட்ட ஒரு மெஷினில்லாமலே.. இப்பவும் யோசனைதான் எப்படி இப்படி எல்லாம் முடிஞ்சதென்று.. பள்ளியெழுச்சி முதல் படுக்கப் போகும் வரை பம்பரமாய் வேலை எம்பிரானே ஏனென்றேன்.. காப்பி ஒருத்தருக்கு காம்ப்ளான் ஒருத்தருக்கு அருகம்புல் ஜூஸ் ஆறின கஞ்சி ஒருத்தருக்கு திரிஃபலா ஒருத்தருக்கு டீத் தண்ணி ஒருத்தருக்கு காப்பிக் கடையே.. கதவும் மூடாதே.. சுக்கா ரொட்டி சுருள வதக்கிய வெண்டை கடைஞ்ச பருப்பு கெட்டித் தயிர்.. பன்னீர் பட்டர் ஒருத்தருக்கு பத்திய சாப்பாடு ஒருத்தருக்கு பிரியாணி ஒருத்தருக்கு பாஸ்டா ஒருத்தருக்கு.. என்னதான் ஆனாலும் ஒட ஒட ரசமும் ஒரு வடு தொட்ட மோரும் ஒரு வழி வழிக்கலையோ ஒரு திருப்தி வராதே.. ஓஞ்சு போகுதே ஒரு வேளை சமைச்சதுமே.. வகைகள் இப்போ வதையும் ஆச்சே வத்தலும் வடாமும் வகையாய் நொறுக்கலும் விலைக்கு வாங்கும் நிலையும் ஆச்சே.. பகட்டே இல்லா பழைய வாழ்வு பகல் கனவாச்சே ஓடி வந்தாச்சு ஒரு பெருந்தூரம் திரும்பிப் பார்ப்போம்.. திரும்பிப் போகாவிட்டாலும்..

அடுப்படி எனக்கென்ன சொந்தமா...?

பழைய நினைப்பு..

படை போல் குடும்பம்
பொடிசு முதல் பெரியவர்கள்
பானையில் சோறு
பருப்புக் குழம்பு
பொரியலும்..வறுவலும்..
பொதுவாய் சமையல்.
பந்தியில் அமர்ந்து
பாங்காய் பரிமாறல்
பங்கிட்டு உணவு
பழசுக்கு இடமேது..

பொசுக்கும் வெய்யிலில்
பொழுதும் போகவே
அப்பளமும் வடாமும்
அழகாய் இடுவாளே..
அம்மியும் ஆட்டுக்கல்லும்
அங்கே கைகொடுக்குமே
தேய்த்தல் துவைத்தல்
துடைத்தல் எல்லாமே
துரிதமா நடக்குமங்கே
தட்ட ஒரு மெஷினில்லாமலே..

இப்பவும் யோசனைதான்
எப்படி இப்படி
எல்லாம் முடிஞ்சதென்று..

பள்ளியெழுச்சி முதல்
படுக்கப் போகும் வரை
பம்பரமாய் வேலை
எம்பிரானே ஏனென்றேன்..

காப்பி ஒருத்தருக்கு
காம்ப்ளான் ஒருத்தருக்கு
அருகம்புல் ஜூஸ்
ஆறின கஞ்சி ஒருத்தருக்கு
திரிஃபலா ஒருத்தருக்கு
டீத் தண்ணி ஒருத்தருக்கு

காப்பிக் கடையே..
கதவும் மூடாதே..

சுக்கா ரொட்டி
சுருள வதக்கிய வெண்டை
கடைஞ்ச பருப்பு
கெட்டித் தயிர்..
பன்னீர் பட்டர் ஒருத்தருக்கு
பத்திய சாப்பாடு ஒருத்தருக்கு
பிரியாணி ஒருத்தருக்கு
பாஸ்டா ஒருத்தருக்கு..

என்னதான் ஆனாலும்
ஒட ஒட ரசமும்
ஒரு வடு தொட்ட மோரும்
ஒரு வழி வழிக்கலையோ
ஒரு திருப்தி வராதே..

ஓஞ்சு போகுதே
ஒரு வேளை சமைச்சதுமே..

வகைகள் இப்போ
வதையும் ஆச்சே
வத்தலும் வடாமும்
வகையாய் நொறுக்கலும்
விலைக்கு வாங்கும்
நிலையும் ஆச்சே..
பகட்டே இல்லா
பழைய வாழ்வு
பகல் கனவாச்சே

ஓடி வந்தாச்சு
ஒரு பெருந்தூரம்
திரும்பிப் பார்ப்போம்..
திரும்பிப் போகாவிட்டாலும்..

Thursday, March 28, 2019

தங்கமணி

சத்தம் போடாத..
சாதனை யாளர்கள்.
சரித்திரத்தில்...... பலர்
எம் குடும்ப ….. சரித்திர நாயகி..
எங்கள் தங்கமணி நீதானே…

”வயசாச்சு எனக்கு..
வேறெதுவும் முடியாதுனு..”
வெறுமை வாழ்க்கை.. உனக்கில்லை
Versatile blogger award….
விருதுக்கு சொந்தக்காரி நீ

திருக்கயிலை நாதன் முதல்..
..திருவொற்றி யுறைக்கோன் வரையில்
திரும்பிய திசையெலாம்..
திருக்கோலம் கொண்டவனை..
தேடிப் போய்ப் பார்த்ததில்லை..
தேன் சொட்டும் பாவின் வழி
”என் பணி அரன்  துதியென்று”..
என்னாளும் துதித்த நீ..
எம்மை விட்டுச் சென்ற நாள்..

இன்னாள்..28-03-2014
வருத்தங்கள்….. …
தேடுது.. வார்த்தைகளை..
Miss you thangamani..

தோற்றம்  : 05-10-1939        மறைவு  : 28-03-2014
thangamani blog: http://kavidhaithuligal.blogspot.in/

Friday, March 22, 2019

அழகி..நீ பேரழகி

@myclick
அழகி..நீ..பேரழகி..

மஞ்சள் அழகி நீ
மலர்ந்த பூவழகி
தெளித்த சிவப்பழகில்
மிளிரும் மென்மை  நீ..

கண்ணாடியில் காட்டட்டுமா
கவரும் உன்னழகை..தலைக்
கனம் வந்திடாதே
மண்ணில் அழகி நானென்று..

காக்கும் கண்ணிமை..நம்
கண்ணுக்குப் புலப்படுவதில்லை
காக்கும் இறைவனும்..
கண்ணெதிரே வருவதில்லை..
உன்னழகும் என்றுமே..
உனக்குத் தெரிவதில்லை
ஊரார் உரைக்கையிலே
உனக்கிங்கே உறைத்திடுமோ

நாடகமாம் இவ்வுலகில்
நாள்கணக்கு உனக்கு..
நாளும் இருக்கென்ற
நம்பிக்கை வாழ்வெனக்கு..

நானும் இங்கு செய்யணும்..
நல்லது நாலு பேருக்கு..
நாதனவன் பாதமதை..
நானும் அடையுமுன்னே

தண்ணீர்..தண்ணீர்.

தண்ணீர்..தண்ணீர்.

ஒரு கப் சக்கரையும் காப்பி பொடியும் கடன் வாங்கும் காலம் போய் ஒரு கப் தண்ணீ இருக்கா..அடுத்த மாசம் திருப்பித் தரேனே மாமி எனலாம்..

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..அவள் ஆத்துக்காரர் அரை லிட்டர் தண்ணீ வாங்கிண்டு வந்ததை கேட்டேளா..பட்டு மாமி பொறாமையில் மூக்கை சிந்தலாம்..

அப்பா..அப்பா..ஏன் எனக்கு தண்ணிகாசலம் னு பேர் வெச்ச..என் friends எல்லாம் கேலி பண்றாப்பா..என்று அடம்பிடிக்கும் மகனிடம்..அது மூதாதையர் பேருடானு சொல்லலாம்..

Demonetization சமயத்தில் ஒரே ஒரு 500 ரூபாயும் ,ஆயிரம் ரூபாயும் தனியா எடுத்து உண்டியல் அடியில் போட்டு  வெச்சு காண்பிச்சோமே..இந்த தண்ணீரை இவங்களுக்கு எப்படி இருக்கும்னு காட்ட எடுத்து வெச்சிருக்கலாமோனு வருந்தலாம்.

'கண்ணீர் சுத்திகரிப்பு' நிலையங்கள் பல உருவாகலாம்..அதிகம் அழுவோர்க்கு மானியம் தரப்படலாம்.

திரவப்பொருளில் தண்ணீர் என்றதும் திருதிருனு முழிக்கலாம்..

நிலத்தடி நீர் தேடப்போனவர்கள் ..நிலத்தடி அபார்ட்மெண்ட்டுகள் கட்டலாம்..
அங்கேயே IT companies ஆரம்பிச்சு..பல மூர்த்திகள் முன்னுக்கு வரலாம்.

Education loan,home loan எல்லாம் போய் water loan வாங்கி அதுக்கு emi கட்டலாம்.

கோடை விடுமுறைக்கு தண்ணீர் கிடைக்கும் mars க்கு சுற்றுலாப் பயணம் போகலாம்..

ஐயோ ..
நினைக்கவே நடுங்குதே..
நீயில்லாமல் நானா
நீரில்லாமல் வாழ்வா..?

நிறமில்லா நீர்..
நதியாய்..ஆறாய்
நானிலம் காக்க
சுயநல வாழ்வில்
கயவராய் மாறினோம்
தண்ணீர் தானே...
தாராளமாய்..
தண்ணீராய் செலவு..

விளைவோ..

ஒரு குடம் நீருக்கு
ஒரு மணி காத்திருப்பு

தவிக்கும் வாய்க்கு
தண்ணீர் தரவே
தயக்கமும்  ஆச்சு.

சேமித்த காசு..நீர்
சேந்தித் தரல..
சிந்திய துளிகளும்
சேர்க்க முடியல..

கங்கையும் யமுனையும்
காவிரியும் நர்மதையும்
கைக் கோர்க்கட்டும்..
கண்ணீர் துடைக்கட்டும்

நதியெல்லாம் இணையட்டும்..
நலமெல்லாம் பெருகட்டும்..
நாளை வரும் சந்ததிக்கு
நம்மால் முடிந்த உதவி..
நல்லக் குடிநீரும்
நோயில்லா வாழ்வுந்தானே..

Wednesday, March 20, 2019

Happiness day

happy இன்று முதல் happy

இந்த உலகத்திலே பெரிய பணக்காரன் யாரு?.கொஞ்சம் லிஸ்ட் போடுங்க..

கார் வெச்சிருப்பவரா..
கரன்ஸி கட்டு கட்டா வெச்சிருப்பவரா..
வீடு பெரிசா வெச்சுருப்பவரா..
நல்ல வேலையில் இருப்பவரா..
வெற்றி வாகை சூடுபவரா?
பெரிய பதவியில் இருப்பவரா..
பெரும் புகழோடு இருப்பவரா..

இத்தனையும் இருந்தாலும் இல்லாட்டியும் ...சந்தோஷமா happy ஆ யாரால் இருக்க முடிகிறதோ அவர்தானே உண்மையான பணக்காரர். சரிதானே?

கால் கிலோ கத்திரிக்காய் கொடுனு என்கிறமாதிரி எந்த சூப்பர் மார்க்கெட்லயாவது விற்கிறதா இந்த சந்தோஷம்?

எங்கே தேடுவேன்..சந்தோஷம் உனை
எங்கே தேடுவேன்னு எல்லாரும் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையறோமா இல்லையா..
கவிதை என்னும் பேரில் நான் உளற ஆரம்பிச்ச புதுசு.
இப்படி ஒரு மொக்கை எழுதி வெச்சேன்.
'இறைவா
வேண்டும் இன்னொரு பிறவி..
போராட அல்ல..
வாழ்வதற்கு..'
இன்னிக்கு அதைப் படிக்கும்போது..என் மேலே வெறுப்பா வரும்.
போராடி ஜெயிக்கும் சந்தோஷம் போல உலகத்தில் வேற ஏதாவது சந்தோஷம் உண்டா..

பூக்கள் மகிழ்ச்சி..
பூலோகம் மகிழ்ச்சி
இயற்கை மகிழ்ச்சி
இல்லம் மகிழ்ச்சி.
இதெல்லாம் எப்போ மகிழ்ச்சியா தெரியுமென்றால்..நம் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான்.
மகிழ்ச்சியா இருக்கணும்நு சொல்லித் தர பல பேர் இப்போ கிளம்பி இருக்காங்க.

நிஜமாகவே தேடிக் கிடைக்கும் பொருளா..சந்தோஷம் என்பது.
நம்முள் எப்போதும் இருந்து கொண்டு வெளியில் வரத்் துடிக்கிறது..
டேய் சும்மா அடங்கு...இதுக்கெல்லாம் சந்தோசப்பட்டா என்ன ஆவுறதுனு அதை தட்டி உள்ளே உட்கார வெச்சிட்டு..அடுத்தது எது நமக்கு சந்தோஷம் தரும்னு தேடி அலையறோம்.
நல்ல சூப்பரா டிரஸ் பண்ணிட்டு சந்தோஷமா வெளியே கிளம்புவோம்..எதிர் வூட்டுக்காரம்மா ஒரு சோகக் குரலில் 'என்ன இன்னிக்கு கொஞ்சம் டல்லா இருக்கீகநு ' கேட்டதுமே..அத்தனை சந்தோஷமும் ஓட்டை விழுந்த பலூனாய் புஸ்ஸுனு இறங்ககிடும்.

நம்மைச் சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடானு கோடி negative energy சுற்றியபடி இருக்கு.
நாம் ஒரு நிமிஷம் தள்ளாடும் போது..டபால்னு வந்து நம் மேல உட்கார்ந்துக்கும். அப்பறம் சந்தோஷமா..அப்படின்னா என்னனு கேட்டு..டன் டன் ஆ சோகமோ..சோகம் தான்.
சந்தோஷம் என்பது ஒரு சின்ன விதை..
அதை நம் மனசிலும் , நம் சுற்றியுள்ளவர் மனசிலும் விதைக்கணும்.
நான் சந்தோஷமா இருக்கணும்னா அடுத்தவன் சாகணும் என்பது சந்தோஷமல்ல..

நாம் இருக்கும் இடத்தை, வீட்டை முதலில் சந்தோஷம் என்னும் சிமெண்ட் போட்டு strong ஆக்கணும்.

அதுக்காக இளிச்ச வாயனா இருக்க சொல்லலை..
நாம்.. எப்போ..எங்கே இருந்தாலும் அங்கே சந்தோஷ, மகிழ்ச்சி அலைகள் கரை புரண்டோடணும் ஒரு பிரதிக்ஞை எடுத்துக்கணும். ஐயொ..வந்துட்டாடா..ஒப்பாரி வைக்கணு யாரும் சொல்லக்கூடாது.

எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை..
நான் சந்தோஷமா இருக்கிறேன்..இருப்பேன் என்பதை நாம் தான் நிர்ணயிக்கிறோம். live this moment happily.
இன்னிக்கு international day of happiness ஆமே..
வாங்க ..
let's be happy i say and spread the fragrance of happiness everywhere.

happy இன்று முதல் happy தான்.

சரிதானே..friends.
 Thanks  Chandrashekar Ramaswamy sir.
Your status today is the seed to this post

Tuesday, March 5, 2019

Acche din

Acche din..
The wait is on..

அஞ்சறைப் பெட்டியிலும்
அரிசி டப்பாவிலும்
அடுக்கின புடவையிலும்
அலமாரி இடுக்கிலும்

 மடித்தும் சுருட்டியும்
மறைச்சு வெச்சேனே
மாங்கா நெக்லெஸும்
முத்து வளையலுமா
மாறும் ஒருநாள்
மகளுக்கு சீராகனு

விளக்கேற்றிய மாலை
வீட்டோர் எல்லாம்
விறுவிறு சீரியலில்
வாய்பிளந்த வேளை
அறிக்கை வந்தது
ஆயிரமும் ஐநூறும்
அந்திமக் கிரியையில்

ஆசையாய் வளர்ந்தது
அழுது புலம்பியபடி
அம்மாவைப் பிரிந்தது
அவளருமைக் குழந்தை.

அப்பவும் நம்பிக்கை
'அச்சே தின்'
அதோ வந்திடுமென்று
காத்திருப்பு
கருப்பொழிந்து
வெள்ளைப் பூக்கள்
வாழ்வில் மலருமென்று..

சொந்தக் காசும்
சொந்தமில்லாமல்..
வந்த காசும்
வாழ விடாமல்..

வழியெல்லாம் அடைப்பு
வளர்ச்சியென மார்த்தட்டல்
வருமொரு நல்ல நாள்
வெறும் கனவாகிடுமோ..!!

நம்பிக்கைக் கவிதை
நவம்பர் மாதத்தில்
மன உளைச்சல்
மார்ச் மாதத்தில்
வானிலை மாற்றமாய்
வாக்குகள் மாற
வாக்காளன் பாடு
வீதியிலே..வரிசையிலே..

'அச்சே தின்'
அவ்வப்போது..
அழுத்திச் சொல்கிறேன்..
அப்படியாவது
வராதா என்று..

Tuesday, February 26, 2019

தங்லீஷ்துணுக்குகள்

#தங்லீஷ்துணுக்குகள்

'பாட்டில்' லயித்ததில்...எண்ணெய்
'பாட்டில் 'கை நழுவ
'பாட்டும்' கிடைத்தது..
'பாட்டு 'என்ன வேண்டிகிடக்கு
"பாட்டை' பார்க்கும் வேளையிலே..

#பட்டால்தெரியும்

Monday, February 18, 2019

வாக்காளர் அட்டையும்

வாக்காளர் அட்டையும்..வாயில்லாப் பூச்சி நானும்..

எதுக்கும் சும்மா வாங்கி வெச்சுக்கலாமேனு பல விஷயங்கள் நம்ம வீட்ட்ல இருக்கு.
அப்படித்தான்....இந்த வோட்டர் ஐடி கார்டும்.

கல்யாணம் ஆன புதுசுல டில்லி வாசம். ஜுனூன் ஹிந்தி தான் வாழ்வாதாரம்.கதவை திறக்கவே பயம்.யாராவது எதாவது ஹிந்தில கேட்டுட்டா என்ன பண்றதுனு ஒரே உதறல்.

ஒரு நாள்..என் உப்பரிகையில் நின்னு வேடிக்கை பார்த்தபடி இருந்தப்போ..ஒரு ஃபைலும் கையுமா ஒரு வாட்டசாட்டமா ஒரு ஆள் என் வீட்டை நோக்கி வந்தார். கீழே வீட்டுக்கார அம்மாவோடு ஏதோ பேசி விட்டு..படி ஏறி மேல வர ஆரம்பிக்க..என் லப்டப் அதிகரிக்க..வாக்காளர் அட்டை பதிவுக்கு வந்தேன் என்று புரிய வைத்தார்.

அவர் கேட்ட அத்தனையும் ஒன்று விடாமல் நான் ஆங்கிலத்தில் எழுதித் தந்தேன். குடும்ப விவரம் உட்பட. வந்தது அட்டை.
கால் கிழமான என் வயதை அநியாயம்.. சாளேஸ்வரம் வயது என காண்பித்த அட்டை.. ஒரு நொடி சுக்கு நூறான இதயத்தை கெட்டியாக பிடித்தேன்.
அடுத்த இடி..என் கணவர் பெயர் ராமசாமி. அவர் அப்பா பெயர் ராம் பகதூர்.
பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கி..
எப்படி இப்படி ஒரு தப்பு செய்ய முடியும் என்றே யோசனை.
சீனிவாசன் என்று எழுதியது எப்படி ் ராம் பகதூர் ஆனது.
million dollar question.
அதுவும் அப்போது வாக்காளர் பட்டியலையும் அட்டையயும் ஒழுங்குப் படுத்திய சிம்ம சொப்பனம் பதவியில் இருந்த காலம்.
அந்த வோட்டர் ஐடியினால் பெரிதாக ஒரு பயனுமில்லை.

அதே சமயம் விடுமுறைக்காக சென்னை வந்தேன். அப்பா ஒரே டென்சனாக.."ஊருக்கு போறதுக்குள் வோட்டர் ஐடிக்கு formalities முடி என்றார்.
டெல்லியில் வாங்கிட்டேன்ப்பா என்றேன். காதிலே போட்டுக்கவில்லை.
அங்கேயும் போய் க்யூவில் நின்று அழுது வடிந்து ஃபோட்டோ எடுத்து..ஐடியும் வந்தது.

என் டெல்லி அட்டையை ஒருவரும் மதிக்கவில்லை. ' அது  அந்த ஊருக்கு சார்' கேட்டால் பதில் இப்படி.
நாடோடிகளான நாங்கள் அடுத்த ஊருக்கு மூட்டைக் கட்டினோம். டாடா நகர். அங்கேயும் இதே கதை. வோட்டர் ஐடி வாங்கியே ஆகணும் என்று.
நான் இந்தியாவில தானேப்பா இருக்கேன்னு நான் கேட்ட கேள்விக்கு..முரைப்பு த்கான் பதில்.

அடுத்த மூட்டை தேவ பூமி..Dehradun. அந்த வார்டு கவுன்சிலர் ( டம்மி மனைவி...தேவபூமி ராப்ரி தேவி)
அங்கே தேர்தல் வர..' அண்ணிக்கு உங்க வீட்டு ஓட்டு ..அவசியம் போடணுமென்றார்.

என் டெல்லி, தமிழ்நாடு வோட்டர் ஐடி செல்லாது..இங்கே நான் புதுசா ஒண்ணு இந்த வீட்டு முகவரியில் வாங்கித் தரேன் என்றார். அதே போல ஒரு சுபயோக தினத்தில் "akila 'வை ' akela' ஆக்கி ஒரு வாக்காளர் அட்டை வந்தது..
அந்த 'e ' ஐ' i' ஆக்கச் சொல்ல .. akhila
என்று ஒரு h ம் சேர்த்து..உஸ் அப்பாடா..
இப்பொழுது கர்நாடகா. அதே கதை. மீண்டும்.
கர்னாடகாவில் கால் பதிக்க..

அவள் ஒரு தொடர்கதை மாதிரி..

சீட்டுக் கட்டு விளையாடலாம் .இப்படி state to state போனால் .
one India..அப்படினா என்ன சார்?

Thursday, February 14, 2019

துணுக்குகள்

விரதமிருந்த அடுத்த நாள்..
வெயிட் அரை கிலோவாவது
குறைஞ்சிருக்கா..🍇🍉🍍
வயிறு ஒரு சுத்து உள்ள போயிருக்கானு செக் பண்ற அதீத டிசைன் நம்மளோடது..
அப்ப நீங்க..?

Wednesday, February 13, 2019

பிச்சை பாத்திரம்

(உயிர்)பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றேன்..ஐயனே..என் ஐயனே..

உத்ராகண்டில் வாசம். யார் வந்தாலும் ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் எல்லா இடத்துக்கும் tour guide ஆ கிளம்பிடுவேன்.ஒரு ஏக்கம் எப்போதும் உண்டு..kedarnath அடிவாரத்தில் வீட்டுக்காரர் வேலையில் இருந்த போதும்..ஏதோ காரணத்தால் இந்தப் பயணம் மட்டும் தட்டிக் கொண்டே போனது.

2009. கோயம்புத்தூர் சித்தி சித்தப்பா, மகன், நான் என் மகள்கள்..கிளம்பிட்டோம் யாத்ரா.
ஆகஸ்ட் மாதம்..அசகாய மழை பெய்யும். இப்ப போய் ரிஸ்க் எடுக்கறீர்களே என்று சொன்ன எல்லாருக்கும் ஒரு புன்னகை பதிலாக கொடுத்து விட்டு..மூட்டை கட்டியாச்சு..

gauri kund . just இன்னும் 14 km மலை ஏறிட்டால் ...அவனைக் காணலாம்.
குதிரை சவாரிகளின் பேரம்..palanquin கள் வரிசையில். நான் என் பெரியவள், சித்தி பையன் ..குதிரை யிலும்..சித்தி, சித்தப்பா, சின்னவள் palanquin யிலும் செல்ல முடிவாச்சு.

பணம் கட்டினதும் மூணு குதிரைகள் ..இது Champa..இது ்chameli..இது Kavitha..
குதிரைக்காரர் formal aa introduce செஞ்சு வெச்சார். ஹலோ நு நாங்கள் சொல்ல..நல்லா வேகமா தலையாட்டித்து.

 counter ல் இருந்த ஆள் குதிரைக்காரரின் licence ஐ எங்கள் கையில் கொடுத்தார்..ஓஹோ..இவர் குடுமி எங்க கையிலனு குதூகலிச்ச போது..உன் life ஏ என் கையில் இப்போ என்பது போல ஒரு சிரிப்பு சிரித்தார் அவர்.

குதிரை மேலபொரு வழியா வழுக்கி வழுக்கி ஏறியாச்சு. என்ன மாதிரி ஒரு அறிவாளி  குதிரைகள். Champa தான் அக்காகாரியாம்.அவள் முன்னாடி நடக்க..குறும்பு குட்டி கவிதா..அவளை தாண்டாமல்..என்ன ஒரு technical walk.. படியே இல்லாவிட்டாலும்..பார்த்து பார்த்து காலை வைத்துச் செல்லும் லாவகம்.உச்சா வருதுன்னு ஓரமா ஒதுங்கும் ஒரு ஒழுங்கு..

மலைத்தபடி..மலை ராணியையும் மந்தாகினி யையும் ரசித்த படி எங்கள் பயணம். செல்ஃபோனில் பேச முடிந்ததால் எல்லாருக்கும் எங்கள் சவாரி பற்றி சிலாகித்தபடி சென்றோம்.

கூட்டமே இல்லை கோயிலில். கேதார நாதனைக் கண்குளிரக் கண்டோம். அரை மணி நேரத்துக்கும் மேலே அசையாமல் அவனை நினைத்தபடி..அங்கேயே அமர்ந்திருந்தோம்.விட்டு வரவே மனமில்லை.அப்படி ஒரு ஆகர்ஷிக்கும் சன்னதி. ஜருகண்டி சொல்ல ஆளில்லாத ஜோ எனக் கொட்டும் மழைக்காலம்.
மனசு நிறைய அவன் நாமம் சொல்லி..பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த அகோரர்களை ஆ வென பார்த்தபடி ..கீழே இறங்கத் துவங்கினோம்.

மத்தியான நேரம்..மந்தாகினி ஓசை. அக்கா தங்கைகள் வந்து நிற்க ..மீண்டும் குதிரை சவாரி.

திடீரென்று அப்படி ஒரு மேகம் . லேசான தூறலாய் ஆரம்பித்த மழை..சில நொடிகளில் கொட்டோ கொட்டென்று கொட்ட..கைக்கு அடங்காமல் குதிரைகள் ஓட்டமெடுத்தது..வலது பக்கம் மலையிலிருந்து கொட்டும் மழை..அதற்கு பயந்து குதிரைகள் ஓட நினைக்க.. இடது பக்கம் அதள பாதாளம். கைப்பிடி நழுவ கீழே விழ ஆரம்பித்தோம். குதிரைகள் ஒரு புறம் ஓட..கோடாவாலா..அதன் பின் ஓட..நாங்கள் நடுவழியில் அம்போ என்று விடப்பட்டோம்.

ram bada வில் சாப்பிட்ட அத்தனை ஆலு பராட்டாவும் ஆவியாக..மொபைல் மழையில் நனைந்து மூச்சு நின்று போக.ஆள் நடமாட்டமில்லா வழியில் நாங்கள் மூவர்.( season இல்லாததால் ஆளே இல்லை).

இப்படி ஒரு திவ்ய தரிசனம் செய்து விட்டு வரும்போது இது என்ன சோதனை சிவபகவானே..palanquin ல் போன சின்ன மகள், சித்தியைப் பற்றி ஒரே கவலை..

வேறெதுவும் தோன்றவில்லை..சிவனே நீ தான் கதி..எங்களைக் காப்பாற்று..கண்ணில் தாரையாக நீர்.
வேறு வழியில்லை. நடக்க ஆரம்பித்தோம். ஒம் நமச் சிவாய..ஓம் நமச் சிவாய..என்றபடி.

மாஜி..மாஜி..யாரோ கூப்பிடும் குரல். திரும்பிப் பார்க்கவோ ,நிற்கவோ பயம். வெகு அருகில் அந்தக் குரல். தைரியம் வரவழைத்து..திரும்பினேன்..

மூன்று சின்ன குதிரைகளுடன் ஒரு நடுத்தர வயதுப் பையன். ' aao maaji .ismein beto aap log' என்றான். nahi baiyya என்று மறுத்தேன்.
என் மனதில் ஓடியதைப் படித்த அவன்..' நான் உன் மகன் போல. நான் சொல்வதைக் கேள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே கும்மிருட்டாகும். மிருக ஜந்துக்களின் நடமாட்டம் வரும். தயவு செய்து என்னை நம்பு. இதில் ஏறுங்கள்..நான் உங்களை பத்திரமா கொண்டு போய் விடறேன். காசு கேட்பேனு பயப்படாதே..எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ' என்றான்.

 வேறு வழியே இல்லை..ஏறினோம். அவன் கதை அவன் அம்மாவை வருடத்தில் ஒரு முறை தான் பார்ப்பானாம். அவனுக்காக அவன் அம்மா  காத்திருக்கும் அழகை அவன் மொழியில் விவரித்தான்.28 கிமீ  தினமும் ஏறி இறங்கினாலும் ..கிடைக்கும் சம்பளம் மிகக் குறைவு என்று குறைப்பட்டான். கொட்டும் மழையில் அவன் கதை கேட்டபடி..அந்தக் கேதாரனைப் பிரார்த்தித்தபடி..மாலை ஆறரை மணிக்கு கீழே வந்து சேர..அங்கே முன்னமே வந்து சேர்ந்த சித்தியும் சித்தப்பாவும் எங்களை கட்டிக் கொண்டு அழ..

நன்றி..நன்றி என நூறு தடவை அந்தப் பையனுக்கு சொல்லி எங்கள் கையிலிருந்த காசையெல்லாம் திணிக்க..மூன்றே மூன்று நூறு ரூபாய் வாங்கிய அவன்..' meri maa ko ek sari Lena hai' என்றான்.

cloud burst என்று அடிக்கடி அங்கே பேப்பரில வரும்  செய்திகள்..
கண்ணெதிரில். பொத்துக் கொட்டும் மழை..ஜலப் பிரளயம்.

காசு...கைப்பேசி..எதுவும் உதவிக்கு வரவில்லை.. அடித்துச் செல்லப்பட்டு..ஆள் அடையாளம் காண முடியாது காணாமல் போயிருப்போம்.
எங்களைக் காக்க வந்தவன்..சாட்சாத் அந்த சிவனே ..சிவனே
அவன் தந்த உயிர்ப் பிச்சையில் நான் ..

எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும்  பகவானே ..எனக்கு யார் மூலமாவது நல்ல வழி காட்டு..அதே போல்..நானும் ஏதாவது வகையில் யாருக்கேனும் உதவியாய் இருக்கணும் என்று ஒரு வேண்டுதல் செய்வேன். No prayers go unanswered

வந்தான்..காத்தான்..ஜோதி மயமானவன்.