Thursday, October 5, 2023

Madhyamar- நானே நானா

 #midweek_topic

நானே நானா.. யாரோ தானா..😄😄


நமக்கு முதுமை வந்தாலும் ever இளமையா இருக்கணும்னு ஆசைங்க.😄😄😄

முதுமை என்பதின் அடையாளம் ..நரை திரை மூப்பு இல்ல..

அதையும் தாண்டி..புனிதமானது ..புனிதமானது...என்ன தெரியுமா..

Maturity...அணுகுமுறை ...

அலசி ஆராய்தல் ..இன்னும் பல.


தன்னோட பதிவுகளில் எல்லாம் பக்தியும் ..வாழ்க்கைப் பாடமும் பகிர்பவர்...

கண்ணில் தெரியும் காருண்யம்..


தன் வயதையும் பொருட்படுத்தாமல்...ஓடிப் போய் உபகாரம் செய்யும் அற்புத குணமுடையவர்..


தன் தோட்டத்து விளைச்சலை ..குழந்தை குதூகலத்துடன் ரசித்து மகிழ்பவர்..


தான் செய்த ரெசிபிகளை அழகா ஷேர் செய்பவர்..


பேச்சிலும் எழுத்திலும் வாத்ஸல்யம் மட்டுமே காண முடியும்.


மிகச் சிறந்த நிர்வாகி.

மத்யமர் மீட் 2020 ல்..தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை

அத்தனை சிரத்தையுடன் செய்து ஒப்படைத்த போது..

இவர் போல யாரென்றுனு..

மனசுக்குள் ஒரு பாடம் புகுத்தியவர்.


தன் தலைமுறைக்கும் ஆன்மீகம் எடுத்துக் கொண்டு செல்பவர்.


பறவைகள் இவர் பழைய கிராமத்து வீட்டில் சிக்க..அவர்களுக்காவே..

உடனே பறந்து சென்று ..flying visit செய்தவர்.


ஜனவரி 5 ல் பிறந்தநாள் கொண்டாடும் ..என் அன்புக்குரிய..என்னை அகில்..அகில் என்று ஆசையுடன் அழைக்கும் Rangamani C. R. Mam.

#உங்க_பிறந்தநாளுக்கு என் அர்ப்பணம்.


இவரைப் போல ஆக முடியுமானு...ஓவரா ஆசைப்படாதே அகிலானு மை.வா.சொன்னாலும்..லும்..லும்...


அடுத்து ...


மூச்சு விடாம பாடுனா அது SPB..

முழுமூச்சாய்..விரல் நுனிக்குள் கோலமாவு கொண்டு..

எங்கேயும் சிக்காமல்..

சிக்கு கோலம் போடும்..

கோலத்தில் கோலேச்சும்..

கோல ராணி Mallika Ponnusamy  mam.


சின்ன கப் உப்புமா செஞ்சுட்டு..பெரிசா சாதிச்ச மாதிரி போஸ்ட் போடற எனக்கு

அமைதியா ஒரு கோலப் புரட்சி செய்யும் இவங்க மாதிரி ஆகணும்னு நினைக்கறது..💪💪💪💪😄


உலக மகா நடிப்புடா சாமினு..

இவங்கள மட்டும் சொல்லிடவே முடியாது..


அப்படியே பாத்திரமாகவே மாறி..

அவங்க வாய்ஸ் modulation ...அவங்க எடுக்கும் கலகல concept

தூள் கிளப்பும்..

மத்யமர் குடும்ப..காமெடி+ கருத்துகந்தாத்தா( கந்தசாமி)...

மீம்ஸ் மன்னீ...⭐

ரங்கோலி ராணி..🌟

நவரச நாயகி⭐

One and only Revathy Srinivasan 


இந்த முப்பெரும் தேவியர் of madhyamar...

இவங்கள நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கேன்.

ஆனால் பதிவுகள் மூலம் ...

மனசில பதிஞ்சவங்க...


(இன்னும் வரும்)

No comments: