Monday, January 19, 2009

கண்ணீர் சொல்லும் கதை..


வானமது அழுகிறது- அது
சிந்தும் கண்ணீர் மழையென்பார்..
மனமது அழுகிறது..அது
சிந்தும் கண்ணீர் கவிதையென்பார்..
எண்ணத்தின் ப்ரதிபலிப்பு..அது
எட்டிப்பார்க்கும் கண்ணீராம்..

ஆனந்த கண்ணீராய்..
அழையாமல் அரும்புமது..
அழுகைக்கு ஆலாபனையாய்..
அருவியாக கொட்டுமது..
நிஜத்தை மறைக்கும்..
நீலிக்கண்ணீர் ஒன்றுண்டு
அடங்கா சிரிப்பினிலே..
துள்ளிவரும் கண்ணீரது..

கண்ணீரும் கவிதையும்
உள்ளத்தின் ஊற்றுகளாம்..
அடைகுந்தாழ் ஒன்றுன்டோ..
வற்றா இச்சுரப்பிகட்கு..




.