Tuesday, December 29, 2020

Late 'ஆகுமுன் ஒரு letter.

 Late 'ஆகுமுன் ஒரு letter.


அன்புள்ள அகிலா..


நலம் நலமறிய ஆவல்னு எழுதக் கூட நேரமில்லை இப்போது என்னிடம்.


உன்னை விட்டு போகற சமயம் வந்தாச்சு..

என் முடிவை யாராலும்  தடுக்கமுடியாது..


பிரிவு கொடுமைதான்..ஆனால்..

விதியின் வழியை யார் மாற்ற முடியும்?


உன் கூட இருந்த கணங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது..மறக்க வே முடியாது.


எத்தனை பல்பு நான் வாங்க வெச்சாலும்..

பயில்வான் போல...பலம் காட்டுவாய் நீ.


தத்துவம் பேசுவே..தாங்க முடியாது எனக்கு.

தத்துபித்துனு உளறுவ..தலை தெறிக்க ஓடி இருக்கேன்.


தத்தளிச்சு நின்னாலும்..தன்னம்பிக்கை விட மாட்டாய் நீ..


கைகோர்த்து ஒவ்வொரு நாளும் ..கல்லும் முள்ளும் கூட காலுக்கு இதமான cotton ஆக இருக்க..நாம் நடந்த பாதைகள்..


எல்லாத்தையும் விடு..உன் கை மணத்தில் கட்டிப் போட்ட நாட்கள் இருக்கே..!! ஆஹா..


உன்னை எப்படி பிரிவேன்?

.எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கம்மியா வாழ்க்கை கொடுத்தான் இந்தக் கடவுள்..

இப்படி மனசு கிடந்து அடித்துக் கொள்(ல்)கிறது.


ஆனா..ஒண்ணு.. உன்னோட இருந்த நாட்கள் என்னிக்கும் பசுமையாய்  இருக்கும்..


ஒரே ஒரு request..

நான் இல்லைனு சோர்ந்து போகாதே..

அடுத்த கட்டத்துக்கு அடி எடுத்து வைக்க..

சில இழப்புகள் கண்டிப்பாகத் தேவை..நம் வாழ்க்கையில்..


அதனால்..மனசை திடப் படுத்திக் கொள்..


இது முடிவல்ல..உன் வாழ்வின் அடுத்த கட்டத்தின்  ஆரம்பம்னு நினைத்துக் கொள்.


உன்னை விட்டு போனாலும்..மீண்டும் வேறு பிறப்பாய் உன்னை எப்படியும் வந்து சந்திக்கணும்னு ஆசை.


உன்னை ஆட்டிப் படைச்சிருக்கேன்..

ஆறுதலாகவும் இருந்திருக்கேன்..

அட்டகாசம் செய்திருக்கேன்..

"இதுவும் கடந்து போகும்னு ' நம்பிக்கை என்ற ஒரே ஒரு அஸ்திரத்தை கெட்டியா பிடித்துக் கொண்ட உனக்கு..


என் வாழ்த்துக்கள்..


பிரிய மனமில்லாமல்..

#இப்படிக்கு

உன்..

...

..

...

...


....

....

...

....

....

...

2019

Wednesday, December 23, 2020

Halo..hello

 #காது_கொடுத்துக்_கேட்டேன்_ஆஹா_ஹலோ_ஹலோ_சத்தம்..


ஹலோ டாடி ..எப்போ வருவீங்க..உங்க பாஸ் ஏன் லீவு தரலை.. இழுத்து இழுத்து பேசும் குட்டிப் பொண்ணு..

ஃபோனை பிடுங்கியபடி 

ஹலோ என்னங்க அந்த தயிர் வெளியே இருக்கு . ஃப்ரிஜ்ல வெச்சுடுங்க.. அவள் அம்மா


ஹலோ...ஹலோ..மத்யானம் விசாகா ஹரி கேட்டு முடிச்சுட்டு கிளம்பியாச்சு..என்னமா பிச்சு உதறா

தாத்தா ஒருத்தர் .


ஹலோ..ஹலோ...என் லாப்டாப்பில் கீ போர்டு வேல பண்ணலை சார். so எல்லாமே வாட்ஸப்பு மெசஞ்சர் தான்.. ஒரு tech savvy.


ஹலோ..ஹலோ..40 பேர் target. இன்னிவரைக்குமே 167 பேர் ஆன்லைன் payment பண்ணிட்டாங்க..

சக்ஸஸ் ..சக்ஸஸ் ..சீட்டு கம்பெனி காரர் போலருக்கு..


ஹலோ..சொல்றதைக் கேளு ராத்திரிக்கு சாப்பாடு வெக்க வேணாம்.

வீட்டு சாப்பாட்டில் விடுதலை ஆன ஒரு மாமா..


ஹலோ ..ஹலோ...நான் சொல்ற steps எல்லாம் நோட் பண்ணிக்கோ அப்போதான் இந்த sum solve பண்ண முடியும்.. பையன் பரீட்சைக்கு on the wheels இலும் கருமமே கண்ணான அப்பா..


ஹலோ..ஹலோ..லக்‌ஷ்மி..நான் தான் பேசறேன்.

நாளைலேர்ந்து வேலைக்கு வந்துடு ..

வலது கரத்துக்கு ரிமைண்டர் கொடுக்கும் என்னை மாதிரி ஒரு பெண்..


இரண்டு மணி நேரமா..இதே மாதிரி ஹலோ ஹலோ ஹலோனு ..என்னை சுத்தி..

earphone போட்டுக்காமல் travel செய்யணும் என்கிற என் பாலிஸி ..

இன்று பல ஹலோக்கள் கேட்கணும்னு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கோ?

Tuesday, December 22, 2020

கூட்ஸ் வண்டியிலே

 கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு


 '25 தானே.'.

இல்ல்..லை 32..

டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.

என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை

  tally ஆனதே இல்லை..

சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..

சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..

வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..

அரைக்கிழம் ஆனபோதும்..

ஆசை விடுவதில்லை..

ஆடி அசைந்து செல்லும்..

பெட்டிகளின் கணக்கு

பெரும் புதிரே என்றுமெனக்கு..

ஒண்ணு.இரண்டு ..மூணு..

எண்ணத் தொடங்க..

அம்மா..ப்ளீஸ் என்றாள்..

அவளுக்கென்ன தெரியும்..

அதிலிருக்கும் மகிழ்ச்சி..

அடப்போடா..

யார் பார்த்தால் என்ன..

தொடர்ந்தேன்..

நாலு..அஞ்சு..ஆறு..


கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..

கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..

கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..

போனது போகட்டும்..

புதுசாய் துவங்குவோம்..

புது வருடக் கணக்கை

Advance happy new year friends

Friday, December 18, 2020

Jog with joy

 #jog_with_joy

ஜில்லுனு காத்து முகத்தை ஜவ்வுனு இழுக்கும் வேளையிலே..ஜக்கு அதான் ஜகதீசன் மாமா ஜாகிங் போவார் தினமும் ஜவ்வாது செண்ட்டோட லெதர் ஜாக்கெட்டோட ..

லிஃப்ட் கிட்ட என்னைப் பார்த்ததும்.

'ஜோல்னா எடுத்துண்டு எங்கே கிளம்பிட்டே' என்றார்.

' ஜோலி ஏகத்துக்கு இருக்கே மாமா' நு நான் சொன்னேன்

ஜாலியா ஜாகிங் பண்ணு..அப்போதான் ஜிம் போகாம ஜம்முனு இருக்க முடியும்நு சொல்லிண்டே..

' இந்த மெட்ரோ வேலை நடக்கறதுனால் வர வர ஜன்னல் கூட திறக்க முடியலை .ஜெயில்ல இருக்கற மாதிரி இருக்கு.

ஜனங்களுக்கு எத்தனை கஷ்டம்..அதுசரி

 அந்த நாலாம் நம்பர் ஜாகைக்கு இன்னும் யாரும் வரலையா இன்னும்..பூட்டியே கிடந்தா ஜகன் மோகினி வந்துடுவாளே' நு கவலையா இருக்ககுனு பொலம்பல்.

ஜக்கு மாமா மூக்கு நுழைக்காத ஜகாவே கிடையாது.

ஜாம் ஆகாமல் எங்க லிஃப்ட் அதிசயமா திறக்க..இவரைப் பார்த்ததும் ஜம்ப் பண்ணி ஓடினான் புதுசா வந்த 'ஜம்ப்பர்' சாரி..சாரி..'ப்ளம்பர்'

' ஜிங்க் டீக் கர்னே கே லியே ஜரூர் ஆவூங்கா'னு ஜூட் விட்டான் ஜாம்ஷெட்பூர் ஜா (jha)


படி வழியா இறங்கி வந்தார் ஜரிகை வேட்டி ஜம்பு மாமா . சாயங்கால  ஜானவாசம் attend பண்ண..ஜனசந்தடிக்கு பயந்து  ஜல்தியாவே கிளம்பினவர் நம்ம ஜக்கு மாமாவைப் பார்த்து ஜகா வாங்கினார்.

 'என்னைப் பார்த்தாலே ஜன்னி வந்தவன் மாதிரி ஏன் இப்படி ஓடறார்' நான் என்ன ஜங்கிள் லேர்ந்தா வந்தேன்.. ரொம்பத்தான் ஜம்பம் . அவனுக்கு ஜெம்மாட்டம் ஒரு பையன்னு எனக்கென்ன jealousy ஆ.. பேசிண்டே வந்தவர் தன்னோட ஜாகிங் ஜோடியைப் பார்த்து விட்டார்.

 

'சொல்ல மறந்துட்டேன்..ஒரு முழம் ஜாதி மல்லி வாங்கி மாமி கிட்ட கொடுத்துடுன்னார்.


சரி மாமானு சொல்லி ஜல்லி போட்ட ரோடில் ஜாக்கிரதையா நடந்து  ஜாமான் எல்லாம் வாங்கும் போது தான் ' ஊறப்போட்ட ஜவ்வரிசி 'ஜவ்' வரிசியாகிடுமே..அப்பறம் ஜாம் கூட செய்ய முடியாதேனு ஓட ஆரம்பிச்சேன்.


ஜக்கு மாமா ஜக் நிறைய MTR Grand ல்  காஃபி குடிச்சுட்டு வருவதற்குள் 

 மாமி ஜுவல்லரி ஷாப்புக்கு 'ஜனவரி வருதே..ஜனவரி.வருதே' நு. பாடிண்டு..ஜலஜாவோட கிளம்பிட்டா..காலண்டர் வாங்கறதுக்கு..


 ஜாகிங் போய் வரதுக்கள்ள மாமி ஒரு ஜாலி ரைடு போய்டறாடீமா..ஒரு டம்ளர் ஜலம் கொடுனு சாவிக்காக வந்து நினார்.


இருந்தாலும் ரெண்டு பேரும் நல்ல ஜோடினு பேர் வாங்கினவா..அதானே முக்கியம்.


அந்தாக்‌ஷரி என்ன..பாட்டு வெச்சு தான் விளையாடணுமா..பதிவுலும் விளையாடலாம்.

Mahadevan Srinivasan sir ' சா' போஸ்ட் எனக்கு inspiration 

.நான் 'ஜா'..

அப்போ நீங்க?

Tuesday, December 15, 2020

என்னை மறந்ததேன்...???

 என்னை மறந்ததேன்...??? 


நன்னா தேடு...அந்த புஸ்தக மூட்டைக்குள்ளே இருக்கா பாருடா..அதுலதான் இருக்கு அந்த  பழைய டைரி கடுப்பில ஏணியில் ஊஞ்சல் ஆடிண்டு இருந்த பையன்...அதே எல்லாம் எப்பவோ எடைக்கு போட்டு அம்மா mug வாங்கிட்டாப்பா..இப்போ எதுக்கு என்னை ஏத்தி வைச்சு உயிர வாங்கற...ஏணியில் இருந்து குதித்து மகன் ஓட..டேய்..அவசரமா ஒரு நம்பர் வேணும்டா....அங்கு வந்த தர்மபத்தினி.. க்கும்..செல்லுல எல்லாம் இருக்கும்போது..எதுக்கு இந்த லொள்ளு உங்களுக்குனு வசைபாட..ஐயோ..செத்துப் போன செல்லே..உயிர் உடனே வந்த Bsnl வழியா பேசக்கூட..இப்போ நீ வேண்டியிருக்கே....


காசு இல்லாம இருக்கலாம்..ஆனா..கைப்பேசி இல்லனா  ..technology க்கு salute செய்தாலும்..ரொம்ப அடிமையாகிட்டோமோ...எண்ணம் அப்பப்போ வரும்.

ஒரு flash back..

ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஆளைப் பிடிச்சு Bsnl connection வாங்கி..அதுக்கு ஒரு opening and closing password போட்டு பூட்டிப் பூட்டி..பில்லுக்கு பயந்து பேசிய காலம்..

எல்லாரோட டெலிஃபோன் நம்பரும் alphabetical order ல அழகா..அட்ரஸும் சேர்த்து எழுதி இருக்கும்.. புது வருஷ டைரி வந்ததும் அச்சு பிசகாம அதை copy வேற பண்ணி, பழைய டைரியயும் தூக்கிப் போடாம reference வெச்சுண்டு வாழ்ந்த நாட்கள்..

எல்லா நம்பர்களும் மனப்பாடம்..இப்போ மாதிரி வீட்டு நம்பரே செல் பார்த்து சொன்னதில்ல..

என் அம்மாவுக்கு ஆசையா வாங்கி கொடுத்தேன் ஒரு Nokia..அதை நோக்கியதே இல்லை அவள்..

அம்மா..இந்த landline phobia வை விடேன் என்றால்..இது தான் செளகரியம்...cost effective என்பாள்.அம்மா grow up என்பேன்..நான் தான் வளரல

எத்தனை digit ஆ இருந்தாலும் மூச்சு விடாம சொன்ன அம்மா எங்கே.. அந்த நம்பர் 23 ல முடியுமோ..இல்ல இல்ல..94 னு ஆரம்பிக்கும்....சட்டுனு ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிறது..அந்த செல்லைக் கொண்டா..சொல்லிடறேன்.. அந்த செல்லில் உள்ள contact list ஐ google ல வேற save பண்ணி இருக்கேன்..என்ன ப்ரயோசனம்..

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்...


மின்சாரம் இல்லாத போதும்..முழுமுச்சில் வேலை செய்யும் மூளையே..இன்னும் உன்னைக் கொஞ்சம் உபயோகிச்சு இருக்கலாமோனு தோணறது..


பழையன் கழிதலும்..புதியன புகுதலும் ஆனாலும்..இன்னும் என் அம்மா வீட்டில் அந்த ஃபோன் stand அதில் இருக்கும் telephone directory ம் அவள் கையெழுத்தில் எழுதப்பட்ட systematic telephone டைரியும்..nostalgic தான்.

Monday, December 14, 2020

அவளுக்கும் அச(ட்)டு என்று பேர்.

 14-12-18

அவளுக்கும் அச(ட்)டு  என்று பேர்.


அவள் நெஜமாவே இப்படித்தான் சொன்னாளா? இல்லை எனக்குத்தான் காதில அப்படி விழுந்ததா?

சே..சே..அவளுக்கு தான் தமிழ் தெரியாதே..

என் மை.வா. எனக்கு ஆறுதல் சொல்ல..

நடந்தது இதுதான்ங்க


morning walk முடிச்சு திரும்பி வரும் போது ரொம்ப நாளா பார்க்காத ஒரு தோழி எதிரில் வந்தாள்.

அபார்ட்மெண்ட் அரசல் புரசல் அரட்டை எல்லாம் முடிச்சோம். 

"உன்னோட NGO வேலையெல்லாம் எப்படி இருக்குனு 'நான் கேட்க ..அங்கே அவள் கொடுக்கும் training பற்றி சொல்லி சிலாகித்தாள்.

'ஒரு நாள் நானும் உன்னோட இதில் இணையணும் ' நு நான் சொல்ல..


சொன்னாளே ஒரு வார்த்தை.' you will be an asset' to us'. ஆ...மயக்கமே வந்துடுத்து.

பட்டர்ஃப்ளை தேவதை போல வந்தவள் bye சொல்லிச் சென்றாள் .


'அசடு' என்று எனக்கு நானே கொடுத்துக் கொண்ட டைட்டிலுக்கு..ஒரே ஒரு 'ட்' சேர்த்து

"asset' அசால்ட்டா சொல்லி அல்லேக்கா என்னை அந்த் வானத்துக்கே தூக்கிச் சென்ற அந்த வார்த்தை....அந்த நொடி..

இன்னிக்குப் பூரா..asset is the secret of my energyநு ..நடைப்பயிற்சியிலிருந்து வந்த என்ன ஓட ..பறக்க விட்ட வார்த்தை..


( நட்பூக்களே..'அகிலா நீ அசடு இல்ல'னு எனக்கு ஐஸ் வைக்காம..நீங்க இன்னிக்கு சொன்ன ..சொல்லப் போற அந்த வார்த்தை என்ன?..முடிவு பண்ணுங்க..

அன்புடன்

அகிலானந்தமயி

Sunday, December 13, 2020

சக்குளத்து பகவதி

 பழம் மட்டும் சாப்பிட்டு 

ஞானப் பழமாகும் Sumathi Manivannan எங்கே..

சான்ஸ் கிடைச்சா போதும்..

சாக்கு போக்கு சொல்லி

சக்கரைப் பொங்கல் தின்னும்

அகிலா எங்கே..


இன்னிக்கு எதுக்கு சக்கரைப் பொங்கல்னு கேட்பவர்களுக்கு இதோ..


ஆசாமி வந்தாலும்..சாமி வந்தாலும்..முதல்ல நம்ம வேலை..அவங்களுக்கு படைச்சு பொடைச்சு எடுக்கறதுதான்.


சக்குளத்துக்காவு அம்மன்..என் வீட்டை தேடி படம் உருவில் என்னைக் காக்க வந்தாள். பயம் கஷ்டம்,சந்தோஷம் எதுவெனிலும் அம்மா கிட்ட ஷேர் பண்ணிப்பது போல இவளிடம்..

சண்டையும் சமாதானமும் கூட உண்டு..


கார்த்திகை அன்று பொங்கலிட்டால்..பூரித்து போவாள் தான்..

அன்னிக்கு செய்யமுடியலை..அதான் வெள்ளிக்கிழமை இன்னிக்கு பகவதிக்கு பிரசாதம் செஞ்சாச்சு..


சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே

சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே..


நல்ல செயல் செய்ய நீ வைக்கணும்

நல்ல வார்த்தை சொல்ல நீ வைக்கணும்

நல்லவர்களின் நட்பு நீ கொடுக்கணும்

அல்லல் நீக்கி எம் குலத்தை காக்கணும்..


என்று சொல்லும்போதே ஒரு பாஸிடிவ் எனர்ஜி நமக்குள் பாய்ந்தோடும்..


" உடலை விட்டெந்தன் உயிர் பிரியும் போது 

உடனே வருவாய் ஒளி மின்னல் போல் ' என்று உருகும்போது..உனக்கு நானிருக்கேன் என்பாள்..


"காமமும் க்ரோதமும் லோபமும் மோஹமும் ..என்னில் வராமல் நீ காத்திடுவாய் .

சாமகானப்ரியே சண்டிகே 

என்னை நீ..

ஹோமாக்னி குண்டத்தில் ஹவிஸாக்குவாய் ". சொல்லும்போதே சூழ்ந்த இருள் எல்லாம் விலகும் மாயம்.


சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே

சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே..


அன்புடன்.

பத்து வரிக் கதை

 #பத்து_வரிக்_கதை.


'

#மாத்தி_யோசி' ..இந்த concept எனக்கு கத்துக் கொடுத்தது bala Hari


அவரோட இன்றைய ' பத்து வரியில் படம் பார்த்து அவர் எழுதிய கதைக்கு'  


என் எச.


மன்னிச்சு மக்களே..🙏🙏


#பிக்சர்_பர்ஃபக்ட்..


எப்போதுமே கிளிசரின் போட்ட கண்கள், கழுத்தும் கையும் நகை ஸ்டாண்டாக..பாத்திரம் கழுவும்போதும் பட்டுப் புடவையில் பளபளக்கும்..சீரியல் நடிகை ரோனிலா..


" மேடம்..இந்த ரோல் பண்ணிப் பாருங்க..இண்டஸ்ட்ரில உங்க இமேஜே மாறிடும்' ..காரட் காட்டினார் டைரக்டர் காத்தமுத்து..


" சார்..எதுக்கு சார் இந்த விஷப் பரீட்சை ..என்னை இந்த மாதிரி ஆடியன்ஸ் ஒத்துக்க மாட்டாங்க சார்' கெஞ்சி கூத்தாடியும் மசியவில்லை டைரக்டர்..


பின்னி பூ வெச்ச கூந்தல்.. இப்போதுகோல்டன் ப்ரவுன் ஹேர் டையில் மினுமினுக்க..லிப் க்ளாஸ் சுண்டியிழுக்க,கசகசனு அந்த கோட் மட்டும் கெட்டியாக அவளைப் போட்டு இறுக்கியது .


கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்ட அவளுக்கு..'ஓ..மை காட்..நானா இது..இவ்வளவு நாள் எங்கே இருந்தது இந்த அழகு..' 


அவள் யோசனையைக் கலைத்த டைரக்டர்.." மேடம்..இந்தாங்க ..இந்த பிஸ்டலைப் பிடிங்க..லாவகமா அந்த ஓட்டைக்குள் கை விட்டு உங்க கண்ணில் ஒரு குரூரம் , ஒரு கொலை வெறி தெரியணும்..காத்தமுத்து பேசப் பேச..


காந்தக் கண்களுடன் ..கூந்தல் ஒருப்பக்கம் கண்ணில் விழ, நடுங்கும் கைகளுடன் துப்பாக்கியை முதல் முதலாக வாழ்க்கையில் தொட்ட நேரம்..


"மேடம்..அப்படியே இருங்க..ப்ரமோவுக்கு இந்த ஷாட் அற்புதமா இருக்கும்' லைட் ,காமெரா ஆக்‌ஷன் அவர் ஆணைக்காக முழு யூனிட்டும் காத்திருக்க..


"டைரக்டர் சார்.. நிறுத்துங்க ..எல்லாம் கச்சிதமா இருக்க, என் நெயில் பெயிண்ட்டை  மாத்தாமல் இப்படி விட்டுட்டீங்களே..ஷாட்ல என் கைவிரல் கூட க்ரைம் க்கு தகுந்த மாதிரி இருக்க வேண்டாமா?' ..

 ரோனிலாவின் குரல்..முழு யூனிட்டும் ஸ்தம்பிக்க வைத்தது.


துப்பாக்கி ..நல்லவேளை டைரக்டர் கையில் இல்லை

Thursday, December 10, 2020

Happy karthigai

 Happy karthigai


நேத்திக்கி சாயந்தரம் அப்பாவுக்கு ஏதொ பொறி தட்ட..


"ஏம்மா.கார்த்திகை நாளைக்கு தானே..இன்னும் நீ பொரியே பண்ணலையேனு கேட்க..


"அப்பா..என் பொறுமையை சோதிக்கும் பொரியைப் பத்தி ஒரு வரி கூட பேசாதப்பானு" அவரை பொரி கலங்க வைக்க..

பொரினு கேட்டத்துக்கு இவ எதுக்கு இப்படி எறிஞ்சு விழறானு என்னை பார்க்க..

"பின்ன என்னப்பா..பாதி பொரி கூட்டணிலேர்ந்து பிரிஞ்சு தனிக் கட்சியா பேந்தப் பேந்த முழிக்கும். அதனால பொரிக்கு நான் பிரியா விடை கொடுத்துட்டேன்.."

ஏதோ பாவம் ..பொரிஞ்சு தள்றானு..


 அடுத்த பொறியில் என்னை மாட்ட வைக்க திட்டம் போட்டார்..


"அப்போ..அப்பம் பண்ணிடேன்.. "

"அப்பமா..அதுக்கு பழுத்த வாழைப்பழம் இல்லனு" நான் அப்பீல் தர..


"சரி..அப்போ..அடை.."

"அடை....அதான் டாக்டர் உங்களுக்கு தடை போட்டிருக்காரே.."

"அதனால்..இந்த தடவை பழமும் பாயசமும் மட்டும் நெய்வேத்தியம்.."


இன்னிக்கு மத்யானம்..

வெல்ல அப்பம் எண்ணெயில் துள்ளி விளையாட.

தோசைக் கல்லில் அஞ்சு ஓட்டை அடை ..

தயாராகிக் கொண்டிருக்க..

தூங்கி எழுந்த வந்த அப்பா..

" எனக்குத் தெரியும்..நீ எப்படி பண்ணாம இருப்ப? ..கண்ணால் பேசிட்டு ..


"கொடு..இந்த விளக்குக்கு எல்லாம் திரி போட்டு எண்ணெய் விட்டு,சந்தனம் குங்குமம் இட்டு கொடுத்துடறேன்..நீ சீக்கிரம் நல்ல புடவை கட்டிண்டு வந்து விளக்கேத்து'..


அந்த அன்பு.. அந்த வாத்ஸல்யம்..


கற்றதும் பெற்றதும்  இந்நாளில் இதுவே..


அன்பு சூழ் உலகு

Sunday, December 6, 2020

தேடல்

 06-12-18

#மனதில்_தோன்றிய_முதல்_வார்த்தை.

#தேடல்

மூக்கு கண்ணாடி எங்கேனு தேடலோட ஆரம்பிக்கும் விடியல்.

மூக்குக்கு மேல இருந்தாலும்..துழாவித் துழாவி..எங்கே வெச்சேன்னு சில சமயம்..

கண்ணுக்கெதிரிலேயே இருக்கும் சாவி கொத்தை கண்ட இடமெல்லாம் தேடல்.

வீட்டிலும் தேடல்..வெளியிலும் தேடல்..


தேடல் இல்லாத் வாழ்க்கை...தொய்ந்து போன ஒரு நடைப் பயணம்.


" அம்மா..என்னோட நோட் எங்கனு பாரு' இது கேட்காத வீடு இல்லை..சரினு தேடப் போனால்..எப்பவோ தொலைந்து போனது என்று முடிவு கட்டின முக்கியமான பொருள் ஒண்று கிடைக்கும்.


தேடல் ..ஆனால் நிறைய பாடம் கற்றுத் தரும்.

முதலில் எதைத் தேடறோம் என்கிற தெளிவு வேண்டும்.

அடுத்து, சில தேடல்கள்..பழசை தூசி தட்ட வைக்கும். புதுசாவும் வழிகாட்டும்.


இரையைத் தேடும்போது கொஞ்சம் இறையையும் தேடுவோம்.


" நான் இங்கிருக்கேன்..நான் இங்கேயும் இருக்கேன் ' என்று நம்மை கூப்பிட்டபடி இருக்கும் இறைவனைக் காண்போம்.


கடுமையா பேச நினைக்கும் போது இனிமையான வார்த்தை தேடுவோம்.


' உனை எங்கேத் தேடுவேன்..'என்று சும்மா இருக்காமல்..சுறுசுறுப்பாக இருப்போம்.

தேடிக் கொண்டே இருங்கள் எதையாவது.

வாழ்க்கையின் பக்கங்கள் வழி காட்டும் தேடல் வரிகளால் நிரம்பட்டும்.


#அதுசரி..இன்னிக்கு உங்களுக்கு தோன்றிய முதல் வார்த்தை என்ன மக்களே?

December

 #டிசம்பர்..டிசம்பர்..ஹாலிடே moodu..


( december போஸ்ட் ..கொஞ்சம் delay ஆச்சு..

என்கிட்டேர்ந்து தப்ப முடியாதே நீங்க ..நட்பூஸ்😀)


வருடத்தின் கடைசி மாதம்

வந்தாச்சு டிசம்பர் மாதம்..


நாட்கள் நொடியாய் பறந்திட

நாமும் வந்தோமே டிசம்பர்..


சுகமும் சோகமும் கலந்திங்கே

சுவையான பல அனுபவங்கள்.


திரும்பிப் பார்க்க வைத்திடுமே

கடந்த தடங்கள் யாவையுமே..


வாழ்க்கை தரும் பாடமுமே

வருடம் முழுதும் நடந்திடுமே


கற்றதும் பெற்றதும் பலவிங்கே

முற்றுப் புள்ளி ஏதிங்கே..


இருபதில் அடி எடுத்து வைக்க..

இருப்பதோ இன்னும் சில நாள்..


ஜனவரியில் போட்ட சபதங்கள்

ஜனித்ததா? ஜன்னியில் படுத்ததா..?


அசை போடும் நேரமிதுவே..self

Appraisal ஒன்று செய்வோமே..


Nineteen இப்போ சோகத்திலிருக்கோ..?

Teenage முடிந்து போச்சென்றே..!


 வருஷமும் வயதும் போனால் என்ன?

 வாழ்ந்தும் காட்டுவோம் ..வழியும் காட்டுவோம்..


அன்புடன் ...

Saturday, December 5, 2020

அன்பு_சூழ்_உலகு

 நேத்திக்கு  என் ஃப்ரண்டோட ஃப்ரண்ட் ஆஷ்னா வீட்டுக்கு போனேன். 

ஜாலியா பேசி அரட்டை எல்லாம் நடக்க..


அவங்க வீட்டு இன்னொரு ரூமிலிருந்து வெளியே வந்தார்கள்..ஒரு நடுத்தர வயது பெண்மணி..


என் ஃப்ரண்டு ..' இவங்கதான் ஆஷ்னாவோட "mom in law " என்று அறிமுகப்படுத்த..


அமைதியா ..அந்த அம்மா சொன்னாங்க..

' I am not her mom in law..

I am her #mom_in_love.


ஆஹா..மண்டையில் நறுக்குனு யாரோ குட்ற சத்தம்..


எத்தனை அழகான வார்த்தை..

சொல்லிச் சொல்லி பார்த்துக் கொண்டே திரும்பும்போது..


" I love you maa' என்று என் மாமியாரை கட்டிக் கொள்ளும்போது..

" ஐயோ..எனக்கு வெக்கமா இருக்கு' என்று அவள் முகம் சிவந்த  ஞாபகம் ஏனோ இன்னும் மனதில் ஓடிக் கொண்டிருக்கு..


#அன்பு_சூழ்_உலகு...

கடவுள் முன்

 #05-12-18

"இது போதும்..இதுவே எனக்கு போதும்'் என்று வாய் சொல்லியபடி இருக்க....இனிப்புக்கு கை நீட்டும் குழந்தையாய் நான்..

கடவுளின் முன்..

சந்திப்போமா..இன்று சந்திப்போமா

 சந்திப்போமா..இன்று சந்திப்போமா..


அங்கங்கே தலை காட்டிய வெள்ளிக் கம்பிகளுக்கு 'டை ' அடிச்சாச்சு.. எந்த புடவை பாந்தமா இருக்கும்..தேடலுக்கு பின் தேர்ந்தெடுப்பு ஒரு சிவப்பு கறுப்பு புடவை..

ஃபோட்டோவில் இருப்பது போல இருக்கணுமே ..ஒரு கவலை..சின்ன விபூதிக் கீற்று பயம் போக்க இட்டாச்சு..வாட்ச் வடிவில் அம்மாவையும் கூட கூட்டிண்டாச்சு.

என்ன வாங்கிண்டு போகலாம்..?.பழமா..பலகாரமா..

வென்றது பழம்..பொறுக்கி எடுத்து வாங்கியாச்சு..புஸ்தகம் நிறைய படிப்பார்னு கேள்விப் பட்டிருக்கோமே..சரி ..புக் ஹவுஸில் ஒரு மேய் மேய்ந்து மனசுக்கு ஓகேனு சொன்ன ஒரு எழுத்தாளர் படைப்பை pack செய்தாச்சு..

எதில் ஆரம்பிக்கலாம்  பேச்சை...? இதுவரையில் எழுத்தில் தானே அறிமுகம்...

இந்த சந்திப்பு ஒரு மிக சந்தோஷமான ஒன்றாக இருக்கணுமே...ஆட்டோ பிடித்த வேளை..லேசாக ஒரு excitement. அபார்ட்மென்ட் வாசல் இறங்கியதும் பேரும் ஃபோட்டோவும் பிடித்த  செக்யூரிட்டி 'உள்ளே காத்திருக்கிறார்கள்' வழி சொன்னான். பிள்ளையார் சிலை ஒன்று போய் வா உள்ளே என்றது..வழியெங்கும் வண்ணப் பூக்கள்..சிவப்பாய் ஒரு மைக் பூ ஒன்று தலையாட்டி வரவேற்க..துறு துறு கைகள் காமிராவில் படம் பிடிக்க..அங்கே அழகான குழலூதும் கண்ணன் முன்  கானமிசைத்தபடி அங்கிருந்த வயதில் மூத்தோர்..

மணிகளும் தோரணமும் தொங்கும் வாசல் முன் நிற்க..படபட மனசை அடக்க..மணிச் சத்தம் கேட்டு வந்து திறந்தாள் ..பதிவுகள் மூலம் பரிச்சயமான saraswathi..நம்ம் Mythili Varadarajan  aunty ந் வலது கரம்.


எங்கே வந்தேன்னு புரிஞ்சதா..great meeting with such a wonderful fb friend Mythili Varadarajan aunty. 


'உன்னை first time பார்க்கிற மாதிரியே இல்லையே.'.அவர் உதிர்த்த முதல் வாசகம்..சந்தோஷம் சந்தோஷம்.அப்பப்பா...

பேச்சு..பேச்சு..பேச்சு..

அடக்க முடியாமல் ஃபோட்டோ எடுக்கும் போது சிரித்துத் தள்ளும் Mythili aunty. கன்னடத்தில் செல்லமாய் கண்டித்த சரஸ்வதி..

அவரது அக்கா சரயூ aunty வீடு..

வீடல்ல..அது ஒரு அழகான art gallery.. ஒரு கோயில் போல..எல்லா ஊர்களையும் ஒரே இடத்தில் சுற்றி வந்த பிரமிப்பு.. 

பசுமையான செடிகள் தொட்டிகளிலும்.. தொங்கிக் கொண்டும்..

ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். 


நேரம் போனதே தெரியவில்லை..

மீண்டும் வந்து meet பண்றேன்..வாக்கு கொடுத்தபடி மனசில்லாமல் நான் கிளம்ப..

வீட்டில் கொடியிலிருந்து வெத்தலை பறித்து தாம்பூலம் கொடுத்து மிக அன்பாய் வழியனுப்பிய அவர் அக்கா.. (அந்த வெத்தலை மென்ற சுகம்..இன்னும் நாக்கில்)

வாசலை அடைவதற்கு முன் ..Facebook status போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட...ஒரு அருமையான நட்பை..

.என்ன தவம் செய்தனை..இத்தனை அன்பும் ஆசையும் கிடைக்கச் செய்த மார்க்குக்கு ஒரு சலாம் ..

FB உங்களைப் பொறுத்த வரை என்ன என்று பதிவில் கேட்டிருந்த Shankar Rajarathnam sir..

பதிவுகளும்..அதைத் தொடரும் unconditional அன்பு காட்டும் இந்த பந்தங்கள் தான் என் பதில்.

நாளை..உனதே..

 நாளை..உனதே..


வீசி எறியப்பட்ட புத்தகப்பை..

விடுமுறை நாளையென சொல்லிடுமே


திறந்து கிடக்கும் பேனாவோ..

டீவிக்கு ஓடும் அவசரம் சொல்லிடுமே


_off செய்யாத மடிக்கணினி..

online இருப்பதை சொல்லிடுமே


போட்டுப் பார்த்து பரத்திய துணிகள்..

போக வேண்டிய பார்ட்டி சொல்லுமே.


அடுக்கி அழகாக்கிய அலமாரி.

அவள் தோழி வருவதை சொல்லிடுமே..


Green tea யில் காய்ந்த கப்

காலை வரை படிப்பை சொல்லிடுமே


கழுத்தைக் கட்டி கொஞ்சையிலே..

காரியம் எதுவென்று புரிந்திடுமே..


உருட்டல் மிரட்டல் வேகாது பருப்பு..

உனக்கு வேலையே இல்லையானு சலிப்பு


கிளிக்கு அங்கே இறக்கை முளைக்கும்..

விடுதலை பெற்று வெளியே பறக்கும்..


சத்தம் அடங்கும்..

சுத்தம் பெருகும்..

கத்தலில்லா..வாழ்வு..

கசக்கும் எட்டிக்காயாய்..

 காத்திருப்பு அதிகமாகும்..

ஏக்கம் நிறையுமங்கு..

வழி பார்த்து ..

விழி ஏங்கும்..

சீறியது போய்..

சிறுபிள்ளையாய்..

சின்ன மனம் ஏங்கும்..

செல்லமே..

எப்போ நீ வருவாயென்று..


வருவாய் நீயும்..

வீடே மாறி ப் போகும்

அம்மா..

ஏன் இப்படி அழுக்கா இருக்கு..

என்னை கேட்க ஆளாவாய் நீயும்..