Friday, July 30, 2021

Rains..Refresh..relive...

 Rains..Refresh..relive...

சின்னச் சின்ன தூறல் என்ன..


மழை தூறல் போல இருக்கே..குடை எடுத்திண்டியா..extra socks ஒன்னு bag ல இருக்கா..ஈரக் காலோட இருக்காதே...

கொசு கடிச்சுட போறது..என் friend க்கு 4 th type dengue ..careful ஆ இரு..(school கிளம்பிய பெண்னுக்கு advice மழை..எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்..!!.)

மழை நாட்கள்..சின்ன சின்ன இன்பங்கள் அனுபவங்கள்..

சின்னச் சின்ன தூறல்..

சின்ன சின்ன சந்தோஷம்

சின்னதாய் குளம் கட்டும்..(பத்து germs பத்தி பாடம் சொல்லாத அம்மா..dengue கொசு ..அப்படினா என்னனே தெரியாது)

சீறிப் பாயும்..கப்பலும்..கத்திக் கப்பலும்..

கரையேர முயற்சிக்கும்..கை தட்டி competition..

கொஞ்சம் வளர்ந்த நேரம்..படிப்பு சுமை ஏற ஆரம்பிச்ச நேரம்..maths test லேர்ந்து தப்ப..மழை வேண்டி மனு... கண்டிப்பா...தள்ளுபடியாகிடும்..

மொறு மொறுனு வடாம் காயணும்..அம்மா வேண்டிப்பா..

மொட மொடனு கஞ்சி போட்ட ஆர்கண்டி புடவை காயணும்..சித்தி வேண்டுதல்..(காய்ஞ்ச புடவை மடித்து எடுத்துவைக்கிற வேலை நம்முது..எங்கேயானும் ஒடஞ்சிடுமோனு ஒரே tension ஆகிடும்..தப்பித் தவறி மழை வந்ததோ...ஊருக்கே கூழ் ஊத்தலாம்..)..

மழை வந்தா..lending library காரன் இன்னியொட விகடன் தரமாட்டானே...ஐயோ வருண பகவானே..கொஞ்சம் கருணை காட்டுப்பா..பாட்டி வேண்டிப்பா..

ஒருவழியா ஒரு நாள் மழை வரும்.புக் நனையாமல் அதுக்கு கவர் போட்டு...rain coat ஐ மழையில் ஒரு நனை நனைச்சு...பத்தரமா உள்ள வைச்சுட்டு..சொட்ட சொட்ட நனைஞ்ச நாட்கள்...(அடுத்த நாள் தொண்டை வலியுடன் சரவணன் டாக்டர் கிளினிக்கில் முனகும் நேரம்..உண்மைவிளம்பி  தோழி ஒருத்தி பத்த வைப்பாள்...aunty aunty..இவ என்ன பண்ணா தெரியுமோனு...வெந்த புண்ணுல வேல்..வரேன் இரு மவளே..கருவிக் கொண்டே நான்...'அதான் விஷயமா..ஆத்துக்கு வா..இருக்கு உனக்கு...  மீதி வெள்ளித்திரையில்.).நினைக்க நினைக்க சுகம்..

அப்பறம் சைக்கிள் கத்துண்ட கொழுப்பில்..உயிர்த் தோழியுடன் ஒரு கை விட்டு..ஒஹோ..மேகம் வந்ததோ பாடி மழையில் ஊர் சுற்றி (பெரிய ரேவதினு நினைப்பு)...

நினைவலையில் இருந்து வெளி வரச் சொன்னது ...வாசல் calling bell..

சொட்ட சொட்ட மழையில் நனைந்த என் பெண்..

ஐயோ ...நாந்தான் குடை எடுத்துண்டு கீழ வறேனே..அதுக்குள்ள..ஏண்டா நனைஞ்சிண்டு வந்தே..

it was fun maa..

ஒன்றும் பேசாமல் உதவினேன்..

Tuesday, July 27, 2021

Gopalan sankaran happy birthday

 Happy birthday goplalan mama

சங்கரன் மாமா..

வார்த்தைக்கு வார்த்தை தெறிக்கும் காமெடி..

ஜானகி மாமியின் சூப்பர் ஜோடி..

சரியான ஜாடிக்கேத்த மூடி..

இவர் இருக்குமிடம் அதிரும் சிரிப்பு சரவெடி.

நடிப்பிலே ..நாடுவார் கொடி..

உதவுவார் எல்லாருக்கும் ஓடி ஓடி..


பெண்களுக்கு இவர் சூப்பர் டாடி..

இருக்க மாட்டார் ..moody..

அப்பப்போ பிடிப்பார் கரண்டி..

அவர் சமையலுக்கு மாமி கியாரண்டி .

இவரைச் சுத்தி எப்பவும் நண்பர்கள் கோஷ்டி..

கடி ஜோக் சொல்லி அடிப்பாரே லூட்டி..


இவருக்கில்லை போட்டி..

இவர் ஒரு சகலகலா கில்லாடி..


இவர் இருப்பது பெங்களூரு சிட்டி..

இருந்தும் செல்ல முடியவில்லை பறந்தோடி..


வாழ்த்துக்கள் இன்று குவிந்திருக்கும் கோடி..

என் வாழ்த்தும் சேரட்டும் இவரை நாடி..


Happy birthday mama






Monday, July 26, 2021

ஆடிக் கிருத்திகை

 ஆடிக் கிருத்திகை


ஆடிக் கிருத்திகை இன்று

அழகன் முருகன் நாளின்று..

ஆறுமுகா என்றழைக்க

ஆனந்தமாய் வந்திடுவான்

கந்தா என்று கூவ

வந்தேன் என்பான் அவன்..

குமரா என்று கும்பிட

குறைகள் தீர்ப்பான் அவன்

வேலா என்று விளம்ப

வினைகள் விலக்குவான் அவன்

கடம்பா என்று கதற

கைப்பிடித்து நடத்துவான் அவன்..


"கந்த சஷ்டி கவசம்" சொல்ல

களைவான் கவலைகள்.

"வேல் மாறல் " படிக்க

விலகுமே வருந்துன்பம்

" சர்வ சத்ரு சம்ஹார வேல் பதிகம்'

சகல பயமும் நீக்கும்..

'சரவணபவ ' எனும் சந்தம்

சரளமாய் நாவில் சொல்ல

சங்கடங்கள் நீங்கும்

சகல செளபாக்கியம் கிட்டும்.


கவசங்கள் பல  அணிந்து 

காட்சி தரும் அவனை

கவசம் படித்தழைக்க

காக்கவே ஓடி வந்திடுவான்

கருணை மழை பொழிந்திடுவான்.

காருண்ய நாதனாய்

கவலைகள் தீர்த்திடுவான்.


வேலும் மயிலும் துணை.

வேலும் மயிலும் துணை.

மனிதர்க்கு மொழியே தேவையில்லை.

 Evergreen மீள்ஸ்


மனிதர்க்கு மொழியே தேவையில்லை..' மொழி படத்தில் வரும் பாட்டு...


இந்த பாட்டு..எப்போது கேட்டாலும் என் இதயம் போகும் பின்னோக்கி..

காவேரிக் கரையிலே வளர்ந்த சிறுபெண்.(அட நாந்தேன்்)..பட்டணம் பார்க்க கிளம்பினா..

மதராஸப் பட்டினம் அன்புடன் வரவேற்க..இன்னாமா எங்கே போவணும் ..என் ஆட்டோல குந்துனு ஆட்டோகாரர் அடம் பிடிக்க..மலங்க மலங்க சித்தியின் தலைப்பில் ஒளிந்தபடி செல்ல..வீடு வந்தது..சில்லறை தேட..இன்னாமா..காலங்காத்தால ..சரியான சாவு கிராக்கி...வசை பொழிய..(2 ரூபாய் சில்லரை சரியாக கொடுத்ததால் வந்த கோபம் )..இப்படியே மதராஸ் பாஷை....mother tongue ஆனது..படிப்பு முடிய வேலை கிடைக்க..அடுத்தது..கல்யாணந்தான்..Delhi பையன்.. ஐயோ சாமி.. prathmik exam.. எதோ fluke ல பாஸ் பண்ணோம்..இது என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை ஸ்டைலில் வடக்கு நோக்கிப் பயணம்... (அப்ப வேறு மெளன ராகம் படம் வந்த நேரம்..அந்த சர்தார்ஜி role எனக்கு ரொம்ப பிடிக்கும்)..கடைக்கு போகனும்னா..கைகால் உதறும்..கரோல்பாக் கடைத் தெருவில் , கடைக்காரன் 60 ரூபா சொல்வதை..பயங்கர ஹிந்தி பேசி 70 ரூபா வில் வாங்கி வெற்றிப் புன்னகை புரிய....ஏன் இவன் நம்முளப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கிறானு..விவரம் புரியாம..ஐயோ பயங்கர bulb ..அடுத்து இந்த time சொல்றது ..ஹிந்தி ல 11/2 மணியை சாடே ஏக் நு (daid nu சொல்லனுமாம்)சொல்லி அது தனி bulb..இப்படி தட்டுத் தடுமாறி ஏ வகையறா ..ஓ வகையறானு சொல்லியே..காலம் ஓட  .. அடுத்த ஊர் மாற்றம்..நிமாடி பாஷை பேசும்,  நர்மதை நதியும், விந்திய மலையும்..அங்கங்கே கண்ணில் படும் ஓரிரண்டு மனிதர்களும்.. மண்டலேஷ்வர்..madhya pradesh ..(அலை பாயுதே movie  shooting  இங்கே தான்)

ஆத்தா சந்தைக்கு போயிருக்கு ஸ்டைலில்...நானும் வாரச் சந்தை போக..'காந்தா லோ காந்தா லோ'..நு ..என்னனு பார்த்தா..நம்மூர் வெங்காயம்.. 

வேலை செய்யற மன்னு பேசற ஒரு மண்ணும் முதல்ல பு்ரியல...வெறும் தலையாட்டல் தான் பதில்..ஆனால் ...இப்படி வாழ்க்கை ஓடம் போக..அடுத்த இட மாற்றம்.. west Bengal ல ஒரு குக்கிராமம்...ஊரே கடுகெண்ணையும்..மீன் வாசமும்..kothay, ki, Ami,bhalo..shundhar..இப்படி ஒரு நாலு வார்த்தை கத்துண்டு அலம்பல் பண்ணிய காலம்...இரண்டு வருஷம் ஓடிப்போச்சு..அடுத்து மாற்றம் இமயமலை அடிவாரம்,. dehradun..garhwali மொழி.. ஆனால் என் ஹிந்தி கொஞ்சம் செப்பனிடப்பட்ட இடம்..(ஆனாலும்... அந்த ka,kha சரியா இன்னும்  வரல..shah rukh khan..அவர்கள் அந்த kha  வை உபயோகப்படுத்தும் அழகே தனி..

எல்லாம் போக இப்பொ கன்னட பூமி..எப்படியாவது கன்னடத்தை கத்துக்கனும்னு முயற்சி.. (விக்கிரமாதித்தன் நினைப்பு)..

ஆட்டோ ல ஏறினேன் ஒரு நாள்..அந்த ஓட்டுனரிடம்...இல்லி ஹோகு..அல்லி பேட. .

கொத்தில்லா..எல்லாம் என் Kannada barathe.app சொல்லிக் கொடுக்க.. ஒரே வெற்றிப் புன்னகை..ஆட்டோ லேர்ந்து இறங்கும் போது அந்த டிரைவர்..madam..நான் தமிழுதான் என்றாரே பார்க்கணும். செம்ம bulb..விட்டேன் ஜூட்..

Friday, July 23, 2021

திங்களும் வந்தது

 திங்களும் வந்தது..


Tiffin box எடுத்து வெச்சுட்டு 

"#share பண்ணிக்கோடா உன் ஃப்ரண்ட்ஸோட..".. என்று பெண்ணிடம் நான் சொல்ல..


யார் பொண்ணு அவ?


போட்டாளே ஒரு போடு..


"Fb லயா..Instagram ஆ.. இல்ல watsapp லயா?


Share என்று சொன்னதும்..

செயலிகள் தான் ஞாபகம் வருதோ?


ஆத்ம நண்பர்கள்

"App" வழி வந்தவர்கள்

Appreaciate பண்ணுவாங்க..

Applause 👋 தருவாங்க.


Correct தானே?😀


திங்கள் கிழமை

Thought ம் வந்தது..

தோழமைகள் இங்கிருக்க

தொய்வு என்பதேது வாழ்க்கையில்..?


Start muzic நட்பூஸ்..


அன்புடன்..

Tuesday, July 20, 2021

எதிரி

 #எதிரி..


என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி?


இந்த வேலை ரொம்ப கஷ்டம்..

நடக்கவே நடக்காது..


எதுவுமே சரியாகவே நினைச்ச மாதிரி நடக்க மாட்டேங்கிறதே..இப்படி புகார் பெட்டகம் மனசில் ஓடிக் கொண்டே இருக்கா..


புலம்பல் இல்லாத வாழ்க்கைனு ஒண்ணு உண்டா என்ன?


யோசித்துப் பார்த்தால்..நம்மை சந்தோஷமா இருக்க விடாமல் சதித் திட்டம் போடறது யாரு?


யார் அந்த எதிரி


யாரு?..யாரு?


எங்கே ஒளிந்து கொண்டு இருக்காங்க?


பல கேள்விகள் மனசில ஓடுகிறதா?


எங்கே  தேட ஓடறீங்க..

Wait..wait.


Very simple...


#எதிரி.. வேற யாரு?..எங்கியும் இல்லை..


பின்ன?


நம்மிடமும் நம்மை சூழ்ந்து இருக்கும்..


 #எதிர்மறை_எண்ணங்கள் தான்.. நமக்கு பெரிய எதிரி..


சாய்வு நாற்காலியில் உடகார்ந்து சதித் திட்டம் போடற ஆளை..

சிம்மாசனத்தில் தூக்கி வைக்காமல்..

சீந்தாமல் இருந்து பாருங்க..

 சீச்சீ..இந்த ஆளு கிட்ட நம்ம வேலை நடக்காது என்று..

சீறி பாய்ந்து ஓடி விடுவார்..


எதிர் மறை எண்ணங்களை அடையாளம் காண்போம்..

என்னிடம் உனக்கு இடமில்லை என்று..

எதிரியை..

எள்ளி நகையாடி..

வாழ்க்கையை வாழ்வோம்..வெற்றி கொள்வோம்.


இந்த நாள் இனிய நாள்..

அன்புடன்..

.....

Monday, July 19, 2021

Windows_வழி_வாழ்க்கை

 #Windows_வழி_வாழ்க்கை..


அட..நானு கம்ப்யூட்டர் விண்டோஸ் சொல்லலைங்க..நம்ம வீட்டு ஜன்னல் தான்  சொல்றேன்..


சிறைக்கைதியாய்..கம்பிகளுக்கு பின் நான்..

சிறகடித்து பறந்த வெண்புறாக்கள்..

சீட்டுப் பிரச்சனை அங்கேயுமா?


என்ன தான் செய்யப் போறாங்கனு..

ஆசையா பார்த்துக் கொண்டிருந்தேன்..


படபடக்கும் பறவையை 

படமும் பிடித்தேன்..


அடடா. என்ன அழகு..


"அங்கே தான் அவ்வளவு இடம் இருக்கே..

இங்கே ஏன் வந்து நடுவுல நுழையற..?'


"இல்ல..இல்ல..இங்கே தான் எனக்கு வேணும் இடம் ..'

சுத்தி சுத்தி வந்தது..ஒரு புறா..


விடா முயற்சி..

விடவே இல்லை..


என்ன தோணித்தோ..மற்ற புறாக்களுக்கு..


' வா..வந்து உட்காரு..உன் தொல்லை தாங்க முடியலை' 


இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் நகர்ந்து..இடம் கொடுக்க..


அப்பறம்..அவங்க அரட்டை கச்சேரி .


ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..


இப்படித்தான்..


தோழிகள் எல்லாரும் மாடிப்படியில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும்போது...

புதுசா யாராவது வந்தால் ..

இடம் கொடுக்கலாமா..வேண்டாமானு கண்ணால் பேசிப்போம்😀


ஒரு சின்ன நாடகம் ..சத்தமே இல்லாமல் அங்கேயும்  நடந்தது ..


ரசித்தேன்..அவை கலைந்து போகும்வரை..


Sunday, July 18, 2021

Tunnel_thoughts

 #Tunnel_thoughts



பயணங்கள் எப்பவும் சுகம் தான்..

அதுவும் மலையும் நதியும் சூழ..குளிர் காற்று நம் கூந்தலை கலைக்க..

ஜன்னல் வழி ..ஒரு காமிராக் கண்களுடன் பயணம் அலாதி தான்.


" ஏறி இறங்கி ,சாலையின் விளிம்பில் ஓடும் வண்டிகள்..

பயம் கவ்வும்..

" இப்போ ஒரு மூணு கிமீ..tunnel க்குள்ளே போகப்போறோம்..' 

வீட்டுக்காரர் சொன்னதும்.. முதல்ல .

ஒரு ஃபோட்டோ..


அப்புறம் தான் entry.


Tunnel உள்ளே நுழைய..

கீற்று வெளிச்சம் குறைய..

கலங்க ஆரம்பித்தது மனம்..

கும்மிருட்டில் ..

கார்கள் வெளிச்சத்தில்..


'இன்னும் எவ்வளவு தூரம்ப்பா?'

கண்ணை மூடிக் கொண்டு கேட்டேன்..


இருட்டை எதிர்கொள்ள ஏனிந்த பயம்?

இமைப் பொழுதில் முடியாதா..

இந்த குகைக்குள் பயணம்?


ஆயிரம் கேள்விகள்?


இந்த tunnel வழி சென்றால் தான் ..

இயற்கை அழகு கொஞ்சும்..இடங்களைப் பார்க்க முடியும்..

பொறுமை..பொறுமை..


அவர் சொல்லச் சொல்ல..

லேசாக வெளிச்சக் கீற்று ..

ஊ..ல..லா..பாடி வர..

உயிரே வந்தது..

ஊரும் வந்தது..


இப்போதும் அப்படித்தான் இருக்கிறோமோ..?

விடியலும் வரும்..

வெளிச்சமும் வரும்..


அதே வழியில் திரும்பி வந்தேன்..

அப்போது பயமில்லை..

அங்கு வேலை செய்பவர்களையும், திறமையாக எங்களுக்கு காரோட்டி வந்தவரையும் பார்த்து நன்றி சொன்னேன்..


இருட்டு..நிரந்தரமல்ல.

அன்புடன்

.....

Thursday, July 15, 2021

Butter murukku

 Shutter போடாமல்....

Shift ஓடும்..

shuttle service நடக்கும் இடம் நம்ம கிச்சன் தானே?


அதான்..

Bitter days நு புலம்பாமல்

Better ஆ feel பண்ண..

ஒரு

#Butter_murukku செஞ்சேன்😀


முறுக்கு தான் ஒடிந்ததே தவிர..

மனம் இன்னும் உடையவில்லை..

வாட்டி வறுத்தாலும்..

வீழ்வேனானா.நான்?

விட மாட்டேன் ..

உன்னை பிடித்த பிடியை🙏


அன்புடன்

அகிலானந்தமயி🙏


Champa ...fragrance...

 letter to my late beloved friend Champa.


Champa ...fragrance...


that was you my dear friend..

the soft spoken,ever smiling,  energetic,enthusiastic, affectionate..... adjectives fall short to say about you...


your way of welcoming ' வாருங்கோ'..

your hour long telephonic conversations..

your art of keeping in touch with people ...

your eyes ever speaking the language of love..

your heart to help anyone who knocks the door..

your face glowing with happiness..

your passion for pilgrimages..

your love for  kids..

your impartial attitude..

your calm and simple nature...

your craze for shopping..

your concern for everyone around you..

your way of receptiveness

your filled dining table ...

your favourite recipes..

your hospitality..

everything is fresh in my mind..

today, is your son's marriage..your dream wedding ..without you..

சொர்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம்..

அந்த சொர்கத்தை ...ஒரு புது சொந்தத்தை..

மகனுக்கு காட்டிவிட்டு..

சொர்கத்திலிருந்து..சந்தோஷித்திருப்பாய்..

நிச்சயமாய் நீ இன்று..

looking back at my Madhya Pradesh days, I really feel blessed for that posting of my hubby..

otherwise ,i would have missed a chance to meet such a  friend in my life..

one year gone ...you became a prey to the dreadful dengue... 

you were to finish the 108 divya desams pilgrimage..but Almighty had some other plan..

probably, in heaven too there might have been shortage of Champas like you...he had to call his beloved back to HIM.. for this reason ,i can't forgive HIM....

 all is well here ,with your blessings dear..

spread your wings there too ....spread the freshness there too.. 

missing you dear...

Wednesday, July 14, 2021

விடுகதை

 விடுகதையாய்  வாழ்க்கை ஒட

கவிதை என்ன நான் எழுத?


பதைக்கும் நிலை இருக்க..

கதை என்ன நான் சொல்ல?


ரசமில்லா வாழ்க்கை ஓட

ரெசிபி என்ன நான் செய்ய?


உப்பு சப்பில்லா வாழ்க்கையுடன்

உறவாட பழகி விட்டேன்..


எல்லாம் இருந்தும்.. 

இல்லை எதுவுமென்றான பின்னே..


இயக்கமது குறைந்த பின்னே..

இயந்திர கதி வாழ்க்கை போய்..


இல்லமே..எல்லாமுமாக..

இயங்கக் கற்றேனிங்கே..


கத்தலில்லை..கூச்சலில்லை..

கற்றேன்..

அமைதி..அன்பு..கூடி வாழ்தல்..


கற்க இன்னும் 

கடலளவு இருக்க..


கற்றதை நடைமுறையாக்க..

கொடு..நீயும்..ஒரு வாய்ப்பு..

கொடூர நோயை விரட்டு..மனித

குலத்தை நீ காப்பாற்று..🙏


Monday, July 12, 2021

சுட்ட வாழைப்பொடியும் பச்சை மோர்க்குழம்பும்.



 வாங்க  சாப்பிடலாம்..


வா(ழ்)ழைக்காய் ஜிங்கலாலா..


#பாரம்பரியஉணவுஅல்ல ..அல்ல.

அதைவிட..புனிதமானது..புனிதமானது..

எங்க புதுக் கோட்டை உணவு.

எல்லா வீட்டிலும் ஒரு குடும்ப பாட்டு இருக்கோ..இல்லையோ..கண்டிப்பா ஒரு குடும்ப பண்டம் ஒண்ணு இருக்கும்.

அதுதான் இது.


சுட்ட வாழைப்பொடியும் பச்சை மோர்க்குழம்பும்.

----------------++++--+++++++++--------------++++-+-++++---

வாழைக்காய் ..பெயரைப் பார்த்ததும்..வாயு என்று விழுந்தடித்து ஓடத் துடிக்கும் மக்களே

stop stop..


பல நாள் கழித்து சகோதர சகோதரிகள் ஒண்ணா சேரும்போது ..அரட்டைக்கு நடுவில் கொஞ்சம் அடுக்களையும் பார்ப்பார்கள் இல்லையா?

' நம்ம அம்மா செய்வாங்களே..இந்த டிஷ்..எத்தனை டேஸ்ட்டா இருக்குமநு நினைவலைகள் பின்னோக்கி கூட்டிப் போகுமா இல்லையா?

அதேதான்..எங்க அப்பா,பெரியப்பா அத்தை ஒண்ணா சேரும்போது கண்டிப்பா இந்த ஐட்டம் உண்டு.

செய்முறை

சுட்ட வாழைக்காய் பொடி

வாழைக்காய் -1 (3 பேருக்கு)

து.பருப்பு 1 ஸ்பூன்

க்.பருப்பு 1 ஸ்பூன்

உ.பருப்பு 1/2 ஸ்பூன்.

புளி கொஞ்சம்

மிளகாய் வத்தல் 5 or 6

பெருங்காயம் .

எல்லாத்தையும் எண்ணெயில் போட்டு வறுக்கனும். மிக்ஸியில் பவுடர் பண்ணிக்கணும். 

வாழைக்காயை அலம்பிவிட்டு , எண்ணெய் தடவி அடுப்பில் தீயாமல் சுட்டு எடுக்கணும்.

ஆறினபிறகு தோலை உரிச்சுடுவேன்னு உரிச்சு..காரட் துரு்வலில் துருவி..அரைத்து வைத்த பொடியோடு உப்பு ,சொட்டு வெல்லம் சேர்த்து கலக்கணும்.. very simple.


பச்சை மோர்க்குழம்பு

------------------------------------------

1ஸ்பூன் கடுகு..எண்ணெயில்லாமல் லேசா வறுக்கணும். அதோட ரெண்டு பச்சை மிளகாய் கொஞ்சம் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் கிர்ரணும்.

இதை தயிரில் கலக்கணும். மேலே கருவேப்பிலை தூவணும்.

அவ்வளவுதான். ஒரு ஜீரக ரசம் வைத்து விட்டு..மீண்டும் அரட்டை continue செய்யலாம்.


டப்பாவில் இந்த பொடியை போட்டு வைக்க..என்னை மாதிரி multi cuisine எல்லாருக்கும் செய்து கொடுத்து விட்டு மோர் சாதத்துக்கு செட்டில் ஆகும் அம்மாக்களுக்கு இது அமிர்தம்.


ஒரே ஒரு டிப்பு தரேன்.

எதைச் சாப்பிட்டாலும் லார்ட் லபக் தாஸாக முழுங்காமல்.பகவான் கொடுத்த 32 பல்லையும் உபயோகித்து நன்றாக அரைத்து saliva வுடன் சேர்த்து சாப்பிடும் போது உணவின் சத்தெல்லாம் சரியாக இரத்ததில் போய் சேரும்.

வாழைக்காய் வறுவல், பொரியல்,கூட்டு, பொடிமாஸ்..இதோட இதையும் செஞ்சு பாருங்க..

சந்தோஷமா இருங்க.

நம்பிக்கை

 என்னப்பா...


ஃப்ரிட்ஜில காய் எல்லாம் ரொப்பி இருக்கா?


மாசத்துக்கு வேண்டிய சாமான் எல்லாம் வாங்கி stock பண்ணியாச்சா?


இன்னிக்கு சமையல் மூணு வேளையும் decide பண்ணியாச்சா?


சனிக்கிழமை வெளியே போக ப்ளான் பண்ணியாச்சா?


அடுத்த வாரம் போக வேண்டிய கல்யாணத்துக்கு என்ன ட்ரெஸ் போட்டுக்கணும்னு யோசிச்சாச்சா?


அடுத்த வருஷம் லீவுக்கு போக வேண்டிய இடம் என்னனு இப்போவே கூகிள் பண்ண ஆரம்பிச்சாச்சா?..


எதுக்குடா காலைல இத்தனை கேள்வினு டென்ஷனாகிட்டீங்களா?..


.....

இது எல்லாம் எதுக்கு சொல்ல வரேன்னா..🤔


So simple..

நம்பிக்கை தான் வாழ்க்கை😀


அதனால்..

வாழ்வோம்..வாழ்வை ரசிப்போம்...


அன்புடன்..

அகிலானந்தமயி

Saturday, July 10, 2021

Thanks giving


 நன்றி..நன்றி..நன்றி


பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு..

பக்கம் பக்கமாய்  எழுத ஆசை.. நன்றி நவிலல்..'பா"..


அதற்கு பதில் சமர்ப்பித்தேன்..

நாவில் ஊறி..கரையும் "பா'


அளவான இனிப்பு சேர்த்து..

அளவில்லா அன்பு சேர்த்து.

ஆசையாகக் கிண்டிய 'பா'..

அகிலாவின் 'பா'..இது

அடுக்களைப் ...'பா'


கரைந்த அன்பில் உருவான "பா"..

கரைந்து காணாமல் போகும் என் "பா.".

கடையில் வாங்கியதில்ல இந்தப் "பா"..

கை வலிக்க கிளறிய "பா"..

என் வீட்டு "மைசூர்ப்பா"..


எடுங்க ஒரு ஸ்லைஸப்பா..

இதுவே என் ஸ்டைலப்பா..


என் வீட்டு சம்படத்தின்

மைசூர்ப்பா எல்லாம்  கேட்டுப் பார்..

என் நட்பூஸ் பேர் சொல்லுமே..


Thanks so much my friends for making my day so special🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Friday, July 9, 2021

வரம் தந்த சாமிக்கு..

 வரம் தந்த சாமிக்கு..


'நர்ஸ்..நர்ஸ்..மணி என்னாச்சு இப்போ..இன்னிக்கு திங்கட்கிழமை.. ராகுகாலம் ஏழரைக்கு ஆரம்புச்சுடும் அதுக்குள்ள எனக்கு டெலிவரி ஆகணும்..ப்ளீஸ்..ப்ளீஸ்..'

வலி தந்த ஈனச் சுவரத்தில் செவிலியிடம் முறையிட்டபடி அந்த அம்மா ..

ஆங்கிலோ இந்தியனான எமிலியா என்ற நர்ஸ் ..what.. raagu..இன்னா சொல்றே man..ஒண்ணு ம் புரில..அவள் விரட்ட..

தாயைப் பிரிய மனம் வராது அந்த சிசு நழுவி ஓட..நான் இங்கேயே இருக்கேனே..எதுக்கு வெளியே போகணும்னு திமிற..

ஒரு வயதான பாட்டியின் குரல்..' அம்மானு கத்தாதேடி..அப்பறம் குழந்தை உனக்கு மட்டும் உன் அம்மா வேணும்..நான் மட்டும் உன்னை வுட்டு வெளியே வரணுமானு உள்ளயே இருக்கும்..சுவாமியை நினச்சுக்கோ' 

அந்த சிசுவின் ஜனனம் நெருங்க ..கடவுள் வந்து அதன் காதில் கிசுகிசுத்தார்..' புது உலகு காணப் புறப்படு குழந்தாய்..உனக்கு எல்லாம் ரெடியா காத்திருக்கு..உயிராய் உனை காக்க அம்மா அப்பா, ஊட்டி வளர்க்க தாத்தா பாட்டி, தங்கத் தட்டில் தாங்க உடன்பிறப்புகள், பாதி சொர்க்கமாய்ப் புகுந்த வீடு, சுற்றம் நட்பு....எல்லாம் எல்லாம் ..


சந்தோஷங்களோடு சவால்கள் பலவும் சரமாரியாகக் காத்திருக்கு. சிந்தையில் எனைக் கொண்டு  சிறப்பாய் எதிர் கொள்வாய். அன்பு எனும் அட்சயப் பாத்திரம் உனது. அகிலத்துக்கும் வழங்கு . அன்பால் உலகை ஆள் நீயும்.

கடைசியாய் ஒன்று.. அள்ளித் தருபவன் நான். அதைத் தா..இதைத்தா எனக் கேட்டு அளவுகோல் இடாதே..நேரம் வந்தாச்சு. வெளியே போ..தள்ளப்பட்ட சிசு வெளியே..வீறிட்டு அழுதபடி.

அரை மயக்கத்திலும் அம்மா..' ராகு காலம் இன்னும் வரலையே ..என்ன குழந்தை எனக்கு பிறந்திருக்கு என்று கேட்க...ஆஸ்பத்திரி வராண்டாவில் ஆரவாரத்துடன் குழந்தையின் தாய் மாமன், சந்தோஷச் செய்தி பரப்பிக் கொண்டிருந்தான்..'அக்காக்கு ரோஜாப்பு மாதிரி ஒரு பொண்ணு பிறந்திருக்கு'.


deep from my heart i am thanking each and everyone who all made my day so special and memorable. Thanks  a ton my dear friends

Sunday, July 4, 2021

கோவில் பிரசாதம்..

 Morning walking combined with temple 

Visit is a bliss in Bangalore.

The silence amidst chantings is a divine experience.

And above all,the prasadham they offer 

Is truly awesome..so tasty

Namma bengaluru..


கோவில் பிரசாதம்..


வாக்கிங் போகும்வழி..

வருமே சிவன் கோவில்..

வலமாய்ச் சுற்றி வந்து..

வரமே வேண்டி நின்று..

வெளியே வரும் வேளை..

வழியும் நெய்யோடு

வாரியிறைத்த முந்திரியுடன்..

வட்டில் வெண்பொங்கல்....

வழங்கி மகிழ்ந்தாரே..


எரித்த கொழுப்பெல்லாம்..

ஏளனமாய் பார்த்திடுமே..


சொர்க்கம் காட்டி நீயும்..

சோதனையே செய்தாலும்..

சொக்கிட மாட்டேனே..

சொக்க நாதாவே..!!!


பொட்டல த்தில் கட்டியுமே..

விட்ட நடைத் தொடர்ந்தேனே

வீட்டுக்கு போய் அங்கே..

பொதுவாய் பங்கிட்டுண்ண..


கனவாய்ப் போனதே..

கையில் கிடைக்கும் பிரசாதம்..


அந்த நாளும் வந்திடாதோ..

ஆவலுடன் நானிருக்கேன்..

அலங்காரத்தில் உன்னை ரசிக்க..

ஏங்கிடுமே என் மனதும்..🙏

Thursday, July 1, 2021

அவர் அப்படித்தான்...

 அவர் அப்படித்தான்...

கொஞ்ச நாளாகவே காலையில் வாக்கிங் கிளம்பி  போகும் வழியில் அந்தாளைப் பார்ப்பேன்.

என்னடா..இப்படி எல்லாம் கூடவா இருப்பாங்கனு பெண்ணிடம் புலம்பினேன். 

'உனக்கு இதே வேலையாப் போச்சு..போனோமா வந்தோமானு இல்லாம யாரையாவது பார்த்து CID வேலை பண்ணாதே' என்று வெடுக்கென்றாள்.

அன்றும் அப்படித்தான்..கீழே இறங்கியதும் கண்ணில் பட்டவர் அவரே..அவரே..

' அவர் கையில் வெச்சு ஆங்கிள் பார்க்கறதை பாரு..வர எரிச்சலுக்கு நாலு கேள்வி போய் கேட்கப் போறேன்னு கூட வந்த என் தோழியிடம் சொல்ல..' ஊர் வம்புக்குனே அலைவ .நீ ஏதாவது சொல்லப் போய் அவன் கன்னடத்தில் உன்னை திட்ட ஆரம்பிச்சா என்ன செய்வே..ஒழுங்கா வீட்டுக்குள்ள போனு என்னை விரட்டிட்டு விர்ருனு கிளம்பிட்டா..

'என்னடா இது ..எப்படி இந்த ஆளுக்கு பாடம்.சொல்லித் தரதுனு ஒரே கவலை மண்டையில..

"பின்ன என்ன காலங்கார்த்தால கடுப்பேத்தினா ..கோவம் வராதா எனக்கு? எவ்வளவு பிஸி ஏரியா? 


இன்று புத்திரியுடன் கீழே இறங்க..

இன்னிக்கு ஒரு வழி பண்ண போறேன்..அவர் கையில் இருக்கிறதை 'பிடுங்கி'..


'பிடுங்கி...'? ஐயோ அம்மானு பேந்தப் பேந்த அவள் முழிக்க..

.....

பின்ன என்னடா.?

.ஒழுங்கா பெருக்க வேண்டாம்..தரையிலேயே ஒட்டாமல் இப்படி 'துடப்பத்தை 'ஆட்டி ஆட்டி நடந்தா..கோவம் வராது பின்ன எனக்கு? 


"அவரு அப்படிதானாம் ' 

பல வருஷமா அந்த 99 வெரைட்டி தோசை கடையில் வேலையாம். பாவம் பிழைச்சு போட்டும் விடுங்கனு பக்கத்தில் இருந்த டீ குடித்தபடி ஒருவர் சொல்ல..


எப்புடி..கடைசியில டைட்டிலுக்கு வந்தேன் பாருங்க..