Thursday, December 15, 2016

அழியாத கோலங்கள்

அழியவே எழுதப்பட்ட
அழகான கோலங்கள்..
அழிக்கப் படும்போது..
அழுமே நெஞ்சமுமே..



கலைந்து சிதறிய கோலம்..
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்..
குட்டி எலி வேலையோ ..இல்லை
குட்டிச் சாத்தான்களின்
கும்மாளம் ..குதூகலம்..

துடைப்பத்துடன் வந்த
துப்புரவு பணியாளர்..
சுத்தம் சுத்தம்னு
சத்தம் போடுவியே..
அசுத்தம் இங்கே..
ஆசிட் கொண்டா..
அழுக்கு போகலையோ..
ஆளைத் தூக்கிடுவான்..
அலம்பல்..புலம்பலுடன்..

தூக்கில் ஏற்றி என்னை
தூ இவ்வளவுதானா..
தூசியாய் பார்த்த வேளை..
வாதம் என்னுடையது
வாதத்தில் தவித்த வேளை..

வாழ்க்கை பாடம்..
வளரும் வயதிலே..
வகையாய் கற்பித்தால்..
வாழ்வும் செழிக்குமே..
வளமை பெருகுமே..


நாகரீக நண்டுசிண்டுகள்..
நுனி நாக்கில் ஆங்கிலம்
நாலும் தெரிந்த பேச்சு.
'நான்' என்ற எண்ணம்..

வாண்டுகளின் வால்த்தனம்..
கண்டும் காணாமல்...
காணாமல் விட்ட தொடரின்
கதை கேட்டும் அம்மா ..

குறை சொல்ல நானில்லை..
கற்றுத் தரலாமொ கொஞ்சம்..
சுற்றியிருப்பதெல்லாம்..
சொத்து உனதல்ல வென்று..

நாளைய மன்னர்கள்..
நல்லது கற்கட்டும்..
நல்லாட்சி அமைக்கட்டும்
நலமோடு வாழட்டும்..

பிரியா விடை

தென்னை மரமேற ஆள் வருவான்
தெண்டச் செலவென திருப்பி அனுப்பல்..
பக்கத்து வீட்டு மாமரம்..
நம்பக்கம் காய் தருகையிலே..
அக்கப்போர் ஒன்னு வந்ததில்ல..
அது கிடக்கு விடுங்கனு..
அமைதிப் புறா பறக்கும்..
உலகக் கோப்பை கிரிக்கெ்ட் வரும்..
உளுத்த கம்பமும் சாய்ந்து போகும்.
இழுத்துக் கட்டு இப்போதைக்கு..
இன்னிங்ஸ் முடிஞ்சிடும்னு இம்சைகள்..
தன்னலம் ...தலை தூக்கும்

பாலம் பல கட்டணும்..
பாதை பல ஆகணும்..
புதிய ஊராய் மாறணும்
பாவப்பட்ட் மரங்களை
பலி கொடுத்தோம் என்றும்..
வரும் என் முறை எப்போனு
வருத்தத்தில் வாடிய மரத்துக்கு
வந்ததே வார்த் புயலும்..
வெட்டி வீழ்த்துமுன்..
வேரோடு சாய்க்கவே..
வலியில்லா...சாவோ..
வழியில் கிடக்கும் மரங்களுக்கு..
வண்டியில் ஏற்றுமுன்னே
வணங்கி வேண்டுவோம்..
வேரோ..விதையோ
 விட்டுப் போ..
வரும் சந்ததிக்கு காட்ட

Oh butterfly

திறந்த ஜன்னல் வழி..
தெரிந்து தான் வந்தாயா..???
தேடி எதுவும் வந்தாயா..???
தேவை என்ன சொல்..??
தட்டாமல் தருவேனே.
பட்டாம்பூச்சி உனக்கே..

அடைபடாதே ..சிறையிலிங்கே..
அங்கே தெரியுது பார்..
அழகான என் தோட்டம்..
ஓடிப் பிடிச்சு விளையாட..
ஓயும்போது நானும் வரேன்..
ஓடிப் போ நீயும்..
படபட பட்டாம்பூச்சியே..

Tuesday, December 13, 2016

வர்தா

வேரோடு வீழ்ந்த் மரங்கள்..
வெறிச்சோடிய தெருக்கள்....
விளக்கில்லா வீடுகள்..
விரும்பாத இவைகள்..
வருடந்தோறும் வருதே..
வேலை பளுவில்லா அம்மா..
வீட்டுக்கு திரும்பிய அப்பா..
வெட்டி அரட்டை அடிக்க ஆளில்லா அண்ணா..
வெறுமனே ஃபோனை நோண்டாத தங்கை..
மெகா சீரியல் இல்லா தாத்தா பாட்டி..
உருண்டை பிடித்து கையில் சாதம்..
ஊர்க்கதை பேச நேரம்..
விளையாட்டும் சிரிப்பும்..
வேடிக்கை பேச்சும்..
விடியும் வரை ஓடும்..
விளக்கில்லா ஒரு நாள்..
வேண்டுமிங்கே..
வருடத்துக்கோர் முறை..
ek KitKat break tho bantha ha Yar



Thursday, December 8, 2016

கட்டுரை..கவிதை

பொருள் வாங்கிக் கொடுக்க செலவழிக்கும் நேரம்..
பேசி கழிக்க பெற்றோருக்கு ஏன் இல்லை..
கட்டுரை தலைப்பை கண்டதும்...
கட்டுக்கடங்காத சந்தோஷம் என்று..
கேள்வித்தாளோடு வந்தாளே..
வாதம் எனது முன் வைப்பேன்..
நேரம் கிடைத்தால் நீயும் படி..

தவழ்ந்து நகர துவங்கையிலே
நானும் உன்னை விலகலையே..
நிலா காட்டி சோறு ஊட்டையிலே..
நானும் நிலவை ரசிச்சேனே..
மழலை மொழியில் நீ கொஞ்சையிலே..
நானும் என் மொழி மறந்தேனே..
தங்கப் பாதம்  நடக்கையிலே..
தன் கை கொடுத்து வெச்சேனே..
பள்ளி வாசல் அனுப்பிவிட்டு..
பரிதவிப்போடு காத்து கிடந்தேனே..
பாடம் நீ படிக்கையிலே..
புதிதாய் மீண்டும் படித்தேனே..
வளர்ந்து நீ வருகையிலே..
விலகாது நானும் தொடர்ந்தேனே.
காற்று புகாத இடைவெளியில்..
காத்தே நானும் இருக்கையிலே.
மூச்சு முட்டத் துவங்கியது உனக்கு
முணுமுணுப்பும் அங்கே முளைவிட்டது.
தலை வாரும் நேரம் ..
தலையாட்டியபடி..பாட்டு கேட்பாய்..
பஸ் ஏற்ற போகையிலே..
பள்ளித் தோழியுடன் அரட்டை அடிப்பாய்..
சாப்பாட்டு நேரம் ..வருவேன் பேச
கொட்டாக் கண்ணோடு டீவியில் மூழ்குவாய்..
விடுமுறை நாளில் வெளியே போலாம்னா..
விடேன் கொஞ்சம் தூங்க என்பாய்..

காத்துக் கிடந்து சலிப்புடனே..
முகநூலில் என்ன நடக்குதுனு..
நுழையும் போது வருவாய் நீயும்..
சரி சரி..நீ பேசிக்கோ..உடன்பிறவா
சக தோழி பலரோடு..
உனக்கேது நேரம் எனக்காக..
முறுக்கிக் கொண்டு போவாயே..
கதவும் அடையும்..உன்..
மனம் போல..

நம் நட்புக்கு ஒரு ஜே

Happy birthday kalai
orkut ஆ..ஐயோ..
அதெல்லாம் சரியில்லை..
id  எல்லாம் வேண்டாம்..
அக்கடானு கிடந்தேன்..
அசட்டுத் துணிச்சல் வர..
அதுவும் தான் என்னதுனு..
அலசிப் பார்போமே..
அதிரடியா நுழைந்தேன்..
scrap ,friend request ..
 சுத்தமா ஒன்னும் புரியல..
சத்தமில்லாமல்...
சகி ஒருத்தி வந்தாள்....
இளையராஜா இசையால்..
இனிதாய் ஒரு அறிமுகம்..
scrap அதிகமானது ..
சொந்தமும் இறுகியது..
சொல்றேன் ஒரு தலைப்பு..
சும்மா எழுதலாம் வாங்கன்னா..
எங்கள் கூட்டணி..
எண்ணிக்கை கூடியது..
எங்கோ இருந்தாள்..
என்னை..ஆட்கொண்டாள்..
எல்லையிலா அன்பிலே..
ஊடகங்கள் மாறியது..
உறவு எமது மாறலையே..
எந்தப் பயணத்திலும்..
என் கூடவே வருவாள்..
பத்திரமா இருக்கீங்களா..
ஊர் போய் சேர்ந்தாச்சா..
கடல் கடந்து வாழ்ந்தாலும்..
குறுஞ்செய்தியில்.. தொடர்வாள்..
நல்லதோ கெட்டதோ..
வருத்தமோ..சந்தோஷமோ..
வரி விடாமல் பகிர்வோமே..

ஆச்சரியம் உண்டு இதிலே
ஆண்டு எட்டாச்சு..
அவளை இன்னும் பார்த்ததில்லை..
அதனால் துளி வருத்தமில்லை..

நட்பெனும் கடலினிலே
நல்லதொரு முத்து நீ..
நலமுடன் வாழ்க நீ..
கலை நீயும் என்றென்றும்..


இந்த உன்  பிறந்த நாள்..
இப்படியே கொண்டாடுவோம்..
அடுத்த வருஷமும் வரும்..
அதற்குள்ளாவது பார்ப்போமா..

Tuesday, December 6, 2016

போய் வா..மகளே.போய் வா

போய் வா..மகளே ..போய் வா

எப்போதும் போல வீட்டு எஜமானி ..எடுத்து வைத்தாள்..பழைய சோற்றை..வேலைக்கு உதவும் பெண்ணுக்கு..
ஐயே....சோறு வேண்டாம்மா .ரவைக்கே grinder ல மாவு போட்டாச்சு..mixie ல ஒரு சட்னி அரைச்சா போதும்...
laptop ல வேலை செய்யும் புள்ளைக்கு கொடுத்துட்டு..
table fan காத்தில..TV கொஞ்ச நேரம் பார்த்துட்டு...அடுத்த வேலைக்கு ஓடணும்..
அம்மா..உணவகம்..அம்மா..குடிநீர்..எங்களுக்கு என்ன குறை..
தலை நிமிர்ந்த பல குடும்பங்கள்... அம்மாவின்..அதே..
ஆற்றலுடன் முன்னேறும் மக்கள்..
இழந்தோம்....ஒரு சக்தியை....

வெண்ணிற ஆடையில்..
எங்கிருந்தோ வந்த
சந்திரோதயம் நீ..
யார் நீ என்றால்..
தனிபிறவி என்றாய் நீ
அடிமைப் பெண்ணல்ல நீ
சவாலே சமாளி நீ..
மணிமகுடம் சூடிய..
குமரிப் பெண் நீ.
எங்கள் தங்கம் நீ..
ஆதி பராசக்தி நீ
அன்னை வேளாங்கண்ணி நீ.
அன்னமிட்ட கை நீ..
சூரிய காந்தி நீ..
வைர நெஞ்சம் நீ
ஒளிவிளக்கு நீ..
அரச கட்டளையாய்
ஒரு தாய் மக்களென
புதிய பூமியாய்
நம் (தமிழ்) நாட்டை ..
காவல் காத்து..
பொம்மலாட்ட உலகில்..
திக்கு தெரியாத காட்டில்..
சக்தி லீலை புரிந்து..
குடியிருந்தாய் ..
மக்கள் மனமெனும்..
கோவிலிலே..
அன்பைத் தேடி ..
பட்டிக்காடும்..
பட்டணமும் விட்டு..
நதியை தேடும் கடலில்..
கரைந்தே போவாயோ..
கந்தன் கருணயுண்டு..
காவல்காரனில்லை இப்போ..
ரகசிய போலீசாய்...
காப்பாய்..
கண்டிப்பாய்..எம்மை..
Rest in peace Amma..

Monday, December 5, 2016

ரயில் பயணங்கள்

காபி டீ போண்டா கூவல் ஒருபுறம் .
காள்  காள் கத்தும் சத்தம் மறுபுறம்
சிணுங்கும் செல்ஃபோன்  காதோடு ஒருபுறம்
சின்ன குழந்தை செல்லம் மறுபுறம்
சீனியர் சிட்டிசன் சீற்றம் ஒருபுறம்.
சீறிப்பாயும் சிறுபிள்ளத்தனம் மறுபுறம்..
குறட்டை விட்ட் கூட்டம் ஒருபுறம்.
கூவி வித்ததை கொறித்தது மறுபுறம்..
ஊர்க்கதை பேசிய உறவுகள் ஒருபுறம்..
உப்பு பெறாததை ஊதியது மறுபுறம்..
வயதான அம்மா..வாஞ்சை ஒருபுறம்..
வாயத் திறவென மிரட்டல் மறுபுறம்..
ஆபீஸ் வேலையில் ஆழ்ந்தோர் ஒருபுறம்..
அனந்த பத்மனாப சயனம் மறுபுறம்..
விடாது ஒலித்த ஒம் பூர்புவஸ்வ ஒருபுறம்..
விட்டதை பேசியே வீணான காசு மறுபுறம்..
வருமான வரி விவரித்தல் ஒருபுறம்
வரிசையில் நிக்கணுமே கவலை மறுபுறம்
அடைபட்ட இருக்கையில் நெளிந்தது ஒருபுறம்..
கொட்டுதா மழை யங்கே..கேள்வி மறுபுறம்..

சென்ட்ரல் வந்ததும்
சிதறும் இக்கூட்டம்..
சுவாரசியம் என்றும்..இந்த
சிக்கு புக்கு ரயில் பயணம்

Tuesday, November 29, 2016

கொண்டை சேவல் கூவும் நேரம்

தானியம் தேடப் போனேன்..
தனமும் அங்கே கண்டேன்..
கொக்கரக்கோ மறந்தேன்..
கொட்டி இருக்கு பணமென்றேன்..
குறட்டை விட்டவனும்..
குப்பற அடிச்சு ஓடி வந்தான்..
செல்லாத நோட்டை கண்டான்..
சீறி விழுந்தான் என் மேலே
சுத்த அறிவு கெட்டவனே..
சொப்பனத்தில் நானிருந்தேன்..
கத்தையாய் நூறு நடுவில்..
நிம்மதியை கலைத்தேனோ..
நழுவினேன்..அங்கிருந்தே..
நாளை..
கூவலாமா..வேண்டாமா..
குழப்பத்துடன்..நானிங்கே

சகிப்புத் தன்மை

வாயில போடுமுன்னே
வளையல் போடணுமே..
வக்கணையா சமைச்ச கைக்குனு..
விழுங்கி முடிக்கும்....வீட்டுக்காரர்..
சகிப்புத் தன்மை தொடங்குமங்கே

வாரி இறைத்த புடவைக் குவியலில்..
வரிக் குதிரை டிசைன்..
வாங்கினதே இல்லனு..வாங்கி
விமர்சனமே இல்லையேனு..
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சல்..
சகிப்புத் தன்மை...உண்டிங்கே

amazon ..ஆடித் தள்ளுபடி.
அலுக்காமல்..ஆயிரம் தந்து
அதே செருப்பை வாங்கி..
அப்பா..எப்படி இருக்குனு
அருமை மகள் கேட்க..
அப்பா ..சகிப்புத் தன்மை..

மாப்பிள்ளைக்கு பிடிக்கும்னு
மாறாத மெனுவுடன்..
மாமியாரும் பறிமாற..
மண்டையாட்டி...
மாறாத அசடு வழிதலுடன்..
மாப்பிள்ளை..சகிப்புத் தன்மை..

senti போடாத..
சிரித்தே மழுப்பும்..
சகிப்புத் தன்மை..
சரிதானே..

Monday, November 28, 2016

அப்படியே சாப்பிடும்..
ஹார்லிக்ஸ் நீ..
அரக்க பறக்கும்..
காபி நான்..
சாந்தம் நீ..
சத்தம் நான்..
பாடல் நீ...
பருப்புப் பொடி நான்..
மாண்புமிகு...
மகரம் நீ..
விஷமில்லா..
விருச்சிகம் நான்..
விவேகம் நீ..
வேகம் நான்..
வலிமை நீ..
வளவள நான்..
பொறுப்பு நீ..
போராட்டம் நான்..
பொறுமை நீ..
புலம்பல் நான்..
கை பிடித்தோம்..அன்று
கடவுள் அமைத்த மேடையில்..
இரும்பு மனிதன் நீ..
இளகும் மனமும் நீ..
சாதுவும்...நீ..
சாமர்த்தியமும் நீ...
ஓயாத அலைகளை
ஒன்றாய் கடப்போம்
சோர்வை எறிந்து
சேர்ந்தே நடந்து..
சோதனைகள் கடந்து
சாதனை படைப்போம்..
சாகரமாம் இவ்வாழ்விலே

Saturday, November 26, 2016

நான் கண்ட பாரதம்

வீரபாண்டிய கட்டபொம்மன் style..
ATM வந்தது முதல்..
எட்டிப் பார்த்தாயா..
paytm வந்ததும்..
bank ஐ மறந்தாயா
fund transfer  வந்ததும்..
friend ஒருத்தர் உண்டா..

card வாங்கியதும்..
courtesy call உண்டா..
cheque எழுதினாயா..
draft எடுத்தாயா..
online  வந்தவுடன்
offline  ஆனவனே..கேள்.

மானேஜரா..கிளார்க்கா..
மரியாதையா..வரிசையில் நில்லு..

(ஐயோ சாமி..கட்ட பொம்மா..கனவில் நீருமா..?)
கொஞ்சம் பின்னோக்கி பார்க்க..

அம்மா சொல்லித் தர.
காசோலையும்.
.கணக்கிருப்பும்..
கடுப்பேற்றினாலும்
கால் கடுக்க நின்று..
கற்ற நாட்கள்..
கை கொடுத்ததே இப்போதும்

வருஷம் பல கடந்து..
வங்கி சென்றபோது..
வரதே இல்லயே இப்போ..
வருத்தமாய் கேட்ட குரல்கள்..
வந்து போகுமே..நினைவில்
வரிசையில் இப்போ..
வசைபாடி நிற்கும்போது..
சுகங்கள் கண்டதால்..
சுருங்கும் முகம் இன்று..

வருங்காலம் ....வரட்டும்
வஞ்சமிலா..லஞ்சமிலா
வழியை உணர்த்தட்டும்..
வலிகள் எல்லாம்..
வலிமை சேர்க்கட்டும்..
வாழ்வு மலரட்டும்..

நெஞ்சும் நிறைந்திடுமே

கொஞ்சும்  குழவியின் மழலை மொழியில்
நெஞ்சும் இங்கு நிறைந்திடுதே..
கூட்டில் வாழும் குருவிகள் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே..
கூடி வாழும் குடும்பம் கண்டு..
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
கும்பிடும் தெய்வம் கண்ணில் தெரிய..
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
இருள் நீக்கும் விடியல் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
வானில் மின்னும் விண்மீன் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
மழையும் நீரும் நதியும் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
காதல் சொல்லும் தென்றல் வருடலில்
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
பனியும் துளியும் படரும் கொடியும்
நெஞ்சும் இன்று நிறைத்திடுதே
மலையும் முகிலும் மோதக் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்தததுவே
பஞ்ச பூதங்கள் புவியைக் காக்க
நெஞ்சும் இன்று நிறைந்ததே..
பாவக் கறைகள் கற்பூரமாய் கரைய..
புது உலகம் ஒன்று பிறந்திடவே..
உண்மை,நேர்மை பொறுமை கொண்டே..
உள்ளங்கள் வெல்ல உழைப்போமே..
நெஞ்சும் நிமிர்த்தி சூளுரை செய்வோம்..
வஞ்சம் லஞ்சம் இங்கில்லை யென்றே..
மனிதமும் மானுடமும் ஓங்கும் தருணம்
நெஞ்சும் நிறையுமே
உண்மையில்..அன்று

before i die


வாசல் திறந்தேன்..
வாடிய.. நீ அங்கே..
வந்தாய் எப்படி...??
வருடினேன் உன்னையே..
மடியும் நாள் வந்தாச்சு..
மூச்சது முடியுமுன்..
உள்ளுக்குள் ஓர் ஆசை..
உவகையில் கேட்டேன்..
உன் உள்ளத்திலுள்ளது..
உதிருமுன் சொல்லென்றேன்..
ஒன்னும் பெரிசா இல்லை..
ஒரு போட்டோ புடி என்றாய்..
பள்ளிகொண்ட பெருமாள் போல்..
படுத்தபடி நீ இருக்க.
பருவப் பெண்ணைப் போல்..
புன்முறுவல் நீ பூக்க..
பிடித்தேன்..படம்
அடைத்தேன்..உன்னை
என் நெஞ்சுக் கூட்டில்..
போய் வா…இலையே
போய் வா..
மீண்டும் நீ வரும்போது..
மண்ணில் இருப்பேனோ
மறக்காமல் சொல்வேன்..
மகளும் அவளிடமே..

வருவாய் நீ என..

Friday, November 25, 2016

குட்டிக் குருவி...வருக வருக

காக்குருவி கூட்டினிலே..
குட்டிக் குருவி ஜனனமின்று...
காத்திருப்பு பல நாளாய்..
கலி தீர்க்க வருவாய் என..
கவி யொன்று புனைந்திங்கே
காலமும் ஆச்சு கண்ணே..
கண் துஞ்சா காத்திருப்பு..
கனவோடு பல ராவும்..
குருவியும் நீ வந்தாய்..
கண்ணீர் இனியில்லை..
காக்கும் கரம் உன்வரவால்
குலமென் தழைக்க வந்த..
குட்டிக் குருவியே..
குதூகல குடும்ப வலைக்குள்
கூடி  உனை வரவேற்கிறோம்..

குட்டிக் கிளை உனக்கும்...நம்
குடும்பமெனும் பெருமரத்தில்..
கூவி  நீ அழையாமலே..
கூடி உனைக் காப்போமே..

பெரியம்மா...நானானேன்
பிடிபடவில்லை..என்
பெருமையின்று..
பேணி உனைக் காப்போமே..
பேரோடும்.புகழும்..
பண்போடும்..அன்போடும்..
பல்லாண்டு வாழ்ந்திடவே..
பாமாலை..சூடுவேனே

மழை வருமோ..

இராத்திரியில் வராதே.
லைட்டும் போய்டுமே.
ராவெல்லாம் படிக்கணுமே..
வேண்டினான்..
பொதுத் தேர்வு மாணவன்..
காலையிலே வராதே..
காஞ்சிபுரம் பட்டுடுத்தி..
கல்யாணம் போகனுமே..
கவலையுடன்..கன்னியுமே..
மத்தியானம் வராதே..
மொறுமொறுனு..
மாவு வடாம் காயனுமேனு..
மாமியும் வேண்டினாளே..
சாயுங்காலம் வராதே..
சோடியோட..
சினிமா போணும்..
சின்னப் பையன்..
சேவித்து நின்றான்..
வெடித்து விரிந்த மண்ணோ..
என் வாசனை வந்து..
எத்தனை நாளாச்சு..
மழையே..
மறுபடியும் எப்போ வருவே..
மனிதக் குரல் கேட்குமுனக்கு..
மண் குரல் விழவில்லையா..
மழையே..வருவாயே..
மழையே வருவாயே..

யாதும் ஊரே யாவரும் கேளிர்

உடன்பிறப்பு இல்லையென
உள்ளூர அழுதேனே.
இருந்தும்...இல்லா
இக்கட்டு ஓரிடம்..
இல்லையென்பதால்..
இழந்தது ஒன்றில்லையென..
தெளிந்தேன்..அன்று..
வாழப் பழகினேன்..
வழங்கத் தெரிந்தேன்..
வானுமோர் எல்லையிலா..
வற்றாத அன்பையுமே..
பூங்குன்றன் பாடல் போல்.
பூந்தோட்டமாய் என் வாழ்வு..
கவிபாடும்..
காயத்திரி பூவும்
கண்டிப்பாய் அதிலுண்டு.
சுருங்கினாலும்..மலர்வோம்..
மணம் பரப்புவோம்..வா..
வெல்வோம்..வா

வெற்றி என் பக்கம்

பூவும் காயும் வித்து
பொழுதும் உழைக்கும் அம்மா..

பட்டம் பெறுவேன்..நானும்..
பட்டத்து ராணி..யாவாய் நீயும்..

வீணாகும் விளக்கு வெளிச்சம்..
விதி எமது மாற்றும்..

விட்டில் பூச்சி நானல்ல..
வீழ்ந்தே மடிய ..பிறப்பல்ல..
வருமிடர் களைந்தே நானும்..
தருவாய் தாங்குவேன் உனையே

கதையாகும்.. கடந்த காலமுமே
கரமுனது பிடித்தே நானும்..
கண்டு களிப்பேனே..அன்று
கையளவு உலகம் இதையுமே..

Tuesday, November 22, 2016

காக்குருவி...கதைகேளு

ஒத்தையா.. நீ
ஒடன்பொறப்பு??
ஒட்டு உறவெல்லாம்..
ஒனக்கெங்கே புரியும்..
மறைவிலும்..முகத்திலும்..
மோவாகட்டை இடித்து பேசி
மனசை புண்ணாக்கிய..
மஹானுபாவர்களுக்கு..
ஒட்டி உறவாடுனதெல்லாம்..
வெட்டியே..வெளியே போக..
ஒத்தை காக்குருவிக்கு
ஊரெல்லாம் சொந்தமாக..தன்
குஞ்சு குட்டிக்கெல்லாம்..
கத்து கொடுத்துச்சாம்..
கூடப் பொறந்தாதான்..
சொந்த பந்தமில்ல..
காட்டு ..உன் அன்பை
கலப்படம் இல்லாம..நீ.

கூவிக் கரஞ்சா போது..
கூட்டம் ஒன்னும் வந்திடுமே..
காலம் போனாலும்..
காக்குருவி எங்கூடு..
கலகலப்பா இருந்திடுமே..
பலகூட்டு பறவைங்க..
பறந்து வந்திடுமே..
விருந்தொன்னு..உண்பதற்கே

Saturday, November 19, 2016

Happy men's day

ஆபீஸிலிருந்து
அந்தி சாயுமுன்
வந்த அத்தான்..
அத்தி பூத்த மாதிரி..
அல்வாவும்...அடுக்கு மல்லியும்
அரை வாண்டுக்கு..
அழகா ஒரு சட்டையும்..
எடுத்து தந்தபடி சொன்னாராம்..
ஆண்கள் தினமாமே இன்னிக்கி..
அதான் வாங்கியாந்தேன்..
அட ராசா..
அதெப்புடி நான் மறந்தேன்..
எதிர்ப்பார்ப்பே இல்லா..
எம்புட்டு நல்ல மனசு..
பெண்கள் தினமுன்னு..
பெருமையா கொண்டாடினது
பொட்டில் அறைஞ்சாப்போல..
நினைவுக்கு வர..
ஆமாம்.. மறந்திட்டேன்..
அவசர வேலையிலே..
அமைதியா...நாஞ்சொல்ல..
அங்க அவரில்லை..
ஏற்கனவே..போயாச்சு..
கிரிக்கெட்டு மேட்ச் பார்க்க

morning click

அந்த வீட்டு கூரையில் மட்டும்..
அப்படி என்ன சுகம் கண்டாய்?
அசையாமல் அசை போடும்..

அந்த நினைவுகள் தான் என்னவோ?

Thursday, November 17, 2016

மை


மை...
அன்று உரிமை..
இன்று கடமை..
நேர்மை வழி நின்று..
கருமை களைவோம்..
பொறுமை காப்போ.

நான் கண்ட பாரதம்

வெள்ள நீரதுவுமே
வீதிியெல்லாம் புரண்ட வேளை
வீடுகளாய் உருமாறிய...
ஏரிபல அறிந்தேன்..அன்று

வெறியாய் சேமித்தது
வெற்றுத் தாளான வேளை..
வரிசையில் நிற்போர் கண்டு..
வழக்கமாய் ..வரும் சந்திலும்
வங்கி உளதென்றறிந்தேன்.. இன்று..

நாளை...
நானறியேன்..
queue  வில் நிற்கும்வேளை
quotes கூட தோணுமோ..

Monday, November 14, 2016

நான் கண்ட பாரதம் ...நேற்று

மூணு நூறு ரூபாய் கையில்.
மூக்கைப் பிடிக்க சாப்பிட ஆசை..
உணவகம் நுழைந்தேன்..
உவகையாய் உண்டேன் ..
சர்வர் வந்தார் பில் கொண்டு..
கர்வமாய் நீட்டினேன் கார்டையுமே..
சர்வர் டவுனு...சொறிந்தார் தலை..
சரியாப் போச்சு.. சங்கடத்தில் நான்..
இருப்பதைக் கொடுத்தால்..
இன்னிக்கு வீடு சேரமுடியாதே..
இக்கட்டில் சிக்கிய நேரம்..
இளையராஜா பாட்டு.
எல்லாரும் மாவாட்ட கத்துகிடணும்
என் மனதில் ஓட..
சகஜமாய் சொன்னார்..
சரி சரி ..நளைக்குத் தாங்க..
மனுசனுக்கு மனுசன்
உதவலனா எப்படி என்றே..

கடன் உறவை முறிக்கும்
கடையில் மாட்டிய போர்டு..
கண்சிமிட்டியது..
என்னைப் பார்த்து..

நான் கண்ட பாரதம்

வீட்டு வேலை எல்லாம் முடித்து
Water bottle biscuit சகிதம்..
வர ரொம்ப நாழியாகும்..
வழி மேல் விழி வைக்க வேண்டாம்..
வங்கியில் இன்று பணமெடுக்கணும்..
வேகமாய் கிளம்பினேன்..
வங்கி வாசல் வரை
கூட்டம் இருந்தது..
குழப்பம் இல்லை..
கத்தல் இல்லை..
சண்டை இல்லை..
தெரியாதவர் ..தெரிந்தவருக்கும்..
தெளிவாய் சொல்லித் தந்தனரே
தரும் ஃபாரம் எப்படி நிரப்ப என்று..
மடமட என்று நகர்ந்தது வரிசை..
மணிக் கணக்காகுமென்ற
மனக்கணக்கு தப்பியது..
அவரவர் உரிமையும்..
அவரவர் கடமையும்..
அவரவர் புரிந்து நடந்தமையால்..
அமைதியாய்...அரங்கேறுகிறது..
அசகாயப்் புரட்சி..
(நான் கண்ட பாரதமிது..என் அனுபவம் இந்த இரண்டு நாளில்)

Happy children's day

போட்டோ புடி என்னை'
பொங்கும் ஆசையில்..என்
பின்னே வந்தாள்.
பிரகாரம் சுற்றினாள்.

நில்லென்றேன்..நின்றாள்..
சிரியென்றேன் சிரித்தாள்..
நல்லா வருமா..என்றாள்
நண்பர்களும் சேர்த்தாள்.


உடுத்திய சீருடை..
உணரவைத்தது..
உள்ளூர் பள்ளியில்
ஒண்ணாம் வகுப்பென்று

வீடெது என்றேன்..
விரல் நீட்டி காட்டினாள்
கோயில் கோபுரம் முன்
குடிசை எனதென்றாள்..

பெயர் கேட்டேன்..
பூரிப்புடன்..
பிரியா..
விஷ்ணுப் பிரியா என்றாள்.

விலாசமிலா ..இவ்
விண்மீன்கள்..
விண்ணை எட்டட்டும்..
வெற்றி வாகை சூடட்டும்..

அடுத்த முறை போகணும்..
அவளிடம் கொடுக்கணும்..
அவளின் முக மலர்ச்சியை..
அழகா படம் பிடிக்கோணும்..

பட்டது மனதில்..
பளிச்சென்று உண்மை
படிக்கும் இவளோ..
படு அதிர்ஷ்ட்டக்காரியென்று

விட்டேன் ஊரை..
வழியில் கண்டேன்..
வழி பிறக்கா
வாண்டுகளை..

மாறுமெப்போ இந்நிலை..

பூ ..கட்டும்.. பூக்கள்
பூமி ஆளட்டும்..
பாத்திரம் விளக்கும்..
பிஞ்சுக் கரங்கள்..
பாரை வெல்லட்டும்..

தம்பியை தாலாட்டும்..
தளிர்கள் பலவும்..
தடையை உடைக்கட்டும்..
தரணி ஆளட்டும்..

கூலிக்காக..
பள்ளி மிதிக்கா..
பாலகரும்..
காலணி துடைக்கும்..
கறுத்த கரங்களும்
காவியம் படைக்கட்டும்

சின்ன பசங்களெல்லாம்
சிறை உடைக்கட்டும்..
சிட்டாய்ப் பறக்கட்டும்
சீறாய் வாழட்டும்..

நமக்கும் பங்குண்டு..
நல்லதை செய்வோமே..
நாலு காசு தருவதை விட்டு
நம் நேரமதை தருவோமே..
நல்ல சமுதாயம் படைப்போமே..





Thursday, November 10, 2016

என் சோகக் கதை கேளு தாய்க்குலமே

என் சோகக் கதைய கேளு தாய்க்குலமே..
அத கேட்டாக்க தாங்காதம்மா..
உங்க மனமே..
இட்லி தோசை விட்டு புட்டு
இத்தாலியனா மாறிப்புட்டேன்..
போண்டாவும் பஜ்ஜியும் ி விட்டு..
பிட்ஸாவும் பர்கர் தின்னேன்..
சாம்பாரும் ரசமும் விட்டு..
சப்ஜியும் டாலும் தின்னேன்..
வெண்டையும் சுண்டையும்  விட்டு..
வெங்காயமும் பூண்டும் தின்னேன்..
சட்டினியும் துவையல் விட்டு..
sauce ம் ketchup ம் தின்னேன்..
ready to eat வாங்கி வந்து..
ரெட்டை சரீரம் நானும் ஆனேன்..

மூணு பேர் இருக்கையிலே..
முப்பது வகை சமையல்் செஞ்சேன்..
லேகியமும் மறந்து புட்டு
மசாலாவில் எறங்கி விட்டேன்..

அண்டா குண்டா வித்துபுட்டு.
ஒவனுக்கு மாறி விட்டேன்..
பளபளக்கும் பாத்திரம் விட்டு..
பிளாஸ்டிக்கை நம்பி கெட்டேன்..

பாட்டி வைத்தியம் பழசு என்று..
டாக்டர் ஃபீஸ் அள்ளிக் கொடுத்தேன்..
வேலையும் அதிக மாச்சு..
வேலைக்கு ஆளை வெச்சேன்..
கம்முனு ..குந்தி..கிட்டு..
ஜிம்மு மட்டும் போய் வந்தேன்..

வாழ்க்கை இங்கே வெறுப்பாச்சு..
வழி ஒன்னும் பபுரியலையே..
கலப்பட உலகத்திலே..
நலம் வாழ வழி உளதோ..
(என் சோகக் கதைய கேளு..)

உறவுகள்..தொடர் கதையல்ல்

அத்தை பாட்டி..
ஆங்கரைப் பாட்டி..

ஆரஞ்சு மிட்டாயோடு..
மஞ்சப் பைக்குள்ளே..
மடிப்பு கலையா
மடிப் புடவையோடு..

கூன்விழுந்தாலும்..
கண் மங்கினாலும்..
குழந்தைகள் என்றால்..
குதூகலம் இவளுக்கு..

எச்சில் பத்து பார்ப்பாள்..
எட்ட நில்லு ..
மடி என்பாள்.
சினிமா டிராமா..
சீச்சீ என்பாள்..

சிவ நாமம் ஒன்றே
சிந்தனையில் கொள்வாள்.
'திரிசூலம் ' பார்த்தோம் என்றால்..
வெள்ளியா..தங்கமா என்பாள்
சிவாஜி படம் என்றால்..
சீறுவாள்...காசு கரியென்பாள்..

வந்த நாள் முதல்..
விரட்டி வேலை வாங்குவாள்..
வயசாகலையா...
வரணும் புத்தி என்பாள்..

சுருக்குப் பைதான்..
சொத்து எனதென்பாள்..
கசங்கிய ஒரு ரூபாய்..
காலணா..எட்டணா..
கணக்கு வைத்திருப்பாள்..

ஒரு வாரம் இருப்பேனென்பாள்..
ஒயாமல்..
ஊர் புராணஞ் சொல்வாள்...
வரேன் போய்ட்டு என்பாள்..
வெளிச்சமாகும் ..எம்முகமே..
விதிகள் தளரும்..கொஞ்சம்
வெறுமையும் சூழுமே..

வரவில்லை ..அவளும்..
வாரங்களான போதும்..
வினவிய போது..
விம்மலுடன்..
விண்மீன் காட்டினர்..
வீட்டுப் பெரியோர்..

புரிதலுக்குமுன்..
பறந்து போன...
உறவுப் பறவைகள்..
உள்ளத்தில் எத்தனையோ..!!

கவலையில்லா..மனிதர்கள்

காய்காறிக் காரம்மா..
ரொம்ப கறாரு தானம்மா.
காசெல்லாம்  வேண்டாம்..
கணக்கு வெச்சிக்கறேன்..
காசோலையா கொடுத்திடு..
கரீட்டா..ஆமாம். ..என்றாள்..
மருந்து கடைக்காரரோ
இருக்கு இன்னும் ரெண்டு நாளு..
இருக்கற ஐநூறு ஆயிரத்தில்
இங்க மருந்தும்..சோப்பும் வாங்கென்றார்..
தையல் காரரோ..
துணி இங்கே இருக்கட்டும்..
பணத்தோட வாங்க என்றார்...
ஊரைச் சுத்திட்டு..
நிலவரம் தெரிஞ்சிண்டு..
வீட்டுக்குள் நுழைய..
வந்தாள் ..
வேலைசெய்யும் லஷ்மியுமே...
ஐநூறும் ஆயிரமும்..
யாரிடமும் வாங்காதே..
செல்லாது இப்போ ...
சொன்ன நேரம்..
சிரித்தபடி சொன்னாள்..
வாங்குற சம்பளம் ..
அட்வான்ஸ் ல கழிஞ்சாச்சு..
எட்டணா கையில் இல்லை..
எங்கிட்டு போவேன்..
ஆயிரமும் ஐநூறும்..
வைத்திருப்பவருக்கே..
வயிறு கலங்கும்..

Tuesday, November 8, 2016

நல்ல மனம் வாழ்க

பேஷா இருந்தது எல்லாம்..
புல்லரித்தது..
பிராமணர் சொன்னபோது..
நானே..நானா..
என் சமையல் தானா..
அமைஞ்சே போச்சா..
அட..ஆகாசத்தில் நானா..
அதீத சந்தோஷத்தில்..
ஆவலாய் சுவைக்க..
அலற வைத்தது..
அவரையில் உப்பு...
வடையோ..
வடிக்க வடிக்க எண்ணை..
கல்லாய் போனது..
எள்ளு்ருண்டையும்..
அதிரசமோ..
அள்ளும்படி..
திரட்டுப்பாலோ..
ரப்பர் பாலோ....
வாய் திறக்காமல்..
வாழ்த்தி விட்டு போன..
வேதமோதும் வித்தகருக்கு..
வந்தனம் பல சொல்லி..
கோணல்களை நேராக்கி..
குடும்பத்துக்கு பரிமாறி..
பூரித்த வேளை
கும்பிடத் தோன்றியது..
குற்றங்  காணா ..இவர்
நெஞ்சங்கண்டு

Friday, November 4, 2016

Mullandiram koil

Dear all
Two days of trip..thousands of memories.. Treasurable moments..
Divine..serene.. And tranquil...
முள்ளண்டிரம்
மெய் சிலிர்க்கும்..
அனுபவம்..
அடைந்தேன்..
அடையபலம்..
அடைந்தேன்
பேரானந்தம்..
காலகண்டேஸ்வரர்..
காலந் தவறாத பூஜை..
கலக்கம் யாவும்..
கலங்கி ஓடுமிடம்..
அங்கிருந்து பயணம்..
அருகிலுள்ள முள்ளண்டிரம்..
ரேணுகாம்பாள் சன்னதி
மனதுக்கு நிம்மதி
பெருமாளைக் காண...
பேராசைக் கொண்டேன்..
கண்டேன் அங்கே..
கண்கொள்ளா அவன்
காட்சி தரும் கோலம்..
சிதிலமானாலும்..
சிறப்பில் குறைவில்லை..
சற்று தொலைவில்..
சிவன் கோயில்..
நமச்சிவாய நாமம்..
நாலு புறமும் முழங்க..
நாதனைக் காண..
நடந்தேன்..
கல்முள் பாதைவழி..
ஆண்டுகள் பல ஆச்சு
ஆண்டவன் இவனுக்கு
அர்ச்சனை இல்லை
அன்னம் நீர் இல்லை..
இருள் நீங்கும்...
இவன் பேர்பாட..
இல்லை இங்கே..
இவனை கவனிக்க..
அக்கிரஹாரம்..
அங்கிருக்கு..
ஆராதிப்போர்..
யாருமில்லை..
அபயஹஸ்தனும்..
அனாதையாய்..
அவலத்தில் ..
அவன் கோலம் ..
நல்ல காலம்..
முக்கண் இவன்
திறக்குமுன்..
விழித்தோம்..
..நாமும்..
குல தெய்வம்..
குடும்பங்களை..
கூட வைத்தது..
கூட்டுப் ப்ராத்தனை..
கூடி வரும் நன்மை..
கைகோர்ப்போம்...
கரம் குவிப்போம்..
பொன்னும்..பொருளும்..
பொங்கி பெருகட்டும்..
திருத்தலம் உருவாகட்டும்..
தொலையட்டும்..
தொல்லை யாவும்..
அன்புடன்
Akila Ramasami

அம்மா..கதை

how was d trip?..
அசதியாய் நுழைந்த என்னை..
அதி சுறுசுறுப்பாகிய ..கேள்வி..
ஆர்வமாய் ஆரம்பிக்குமுன்..
அறைக்குள் போய்..
அமெரிக்க நேரத்தில்..
அவள் வேலை தொடர்ந்தாள்..
சீமந்த புத்திரியுமே..
அடுத்து வந்த சின்னவள்..
ஹாய் மா..என்றாள்..
அடுத்த நாள் ப்ராஜக்ட்..
அதீத வேலை..
அவசரத்தில்..அவளும்..
அறை நோக்கிச் சென்றாள்..
அசை போட்டேன்..
அந்த நாளை..
யாராவது ஊர் போய் வந்தால்..
'ஆ 'என வாய்பிளந்து..
ஆதி முதல் அந்தம் வரை..
அவர் சொல்லும் கதை கேட்டு..
ஆஹா..என்ன அனுபவம்..
அமையுமோ நமக்குமென்று..
நம்பிக்கையில் வாழ்ந்த நாட்கள்..

வேலை முடித்ததும்...
விசேஷம் என்ன என்றாள்..
மூடில்லை இப்பொதென்று..
முறுக்கிக் கொள்ளாமல்
விவரித்தேன்...
வரிசையாய்..
நாளை ஒன்று வரும்..
அவள் பிள்ளை
ஆசையாய் கேட்குமே
அம்மா ..கதை ..
அப்போது..உதவுமே..
இப்பொ நான் சொல்லுவது..

நல்லாட்சி

குறட்டையோடு..
குட்டித் தூக்கம்..
குளறும் பேச்சு..
குதப்பும் பீடா..

கரை வேட்டி கும்பல்..
கட்சி கூட்டம்..
வேட்டிக் கரை சொல்லும்..
வேஷம் இப்போ எதுவென்று..

மந்திரிகள் சூழ
மப்பிலேயே ராஜாங்கம்..

குளங்கள்..
குப்பை கொட்ட..
சாய்க்கப்படும் மரங்கள்..
ஸ்டீல் பாலம் போட..

பெருந்தலைவர் வீட்டை
பெருக்கித் துடைக்கும்
போலீஸ்காரர்கள்..
தலையாட்டும்..
தீவிர தொண்டர்படை

கோப்புக்கள் ..சூழ
கோப்பையுடன்..
இவர்...
கையெழுத்து...பலர்
தலையெழுத்தாகும்..

 பிரச்சினைகள்..
படமெடுத்தாலும்..
பாதி தூக்கத்தில்..
புரியுமா இவருக்கு.

நீருக்கு.. நீயா நானா..
நீதிக்கு தலைவணங்கா..
நெஞ்சில் ஈரமிலா..
நம் நாட்டு மன்னரிவர்கள்..

நல்லாட்சி ...
நமக்கு..கானல் நீரா..???

Monday, October 24, 2016

என்னையும் எங்கூர எட்டி பார்க்க வைச்சது. Shiv K Kumar sir

திருச்சி வாசம்..
TST bus..
TMS பாட்டு..
ஓர சீட்டில் ..
ஊரை வேடிக்கை..

மலைக்கோட்டை வரும்..
மாங்கு..மாங்குனு..
தெப்பகுளம் வழியா..
தாயுமானவருக்கு..
தோப்புக்கரணம் போட்டு..
சாரதாஸிலும்..கீதாஸிலும்..
கிடீஸ் கார்னரிலும்..
துணி வாங்கி..
பசியாற..போவோம்..
வசந்த் பவனுக்கு..
குடும்பம்..ரொம்ப ஒத்துமையா..
எல்லாரும்..ஒரே அயிட்டம்..
மசாலா தோசை ஆர்டர் பண்ணி..
முடிக்க முடியாம ..முழுங்கி..
தின்ன தோசை..
சீரணமாக..
பொடி நடையா நடந்து ..

மைக்கேல்ஸில் ..
ஐஸ்கிரீம் முடித்து

வீடு வந்து சேர்வோம்..
வாங்கி வந்த துணியை
தினமும் எடுத்து பார்த்து..
புது வாசம் முகர்ந்து பார்த்து..
எப்போ தீபாவளி வரும்..
முதல் ஆளா..ரெடி ஆகி..
புதுத் துணி போட்டு
பட்டாசு வெடிச்சு..
ஊரை எழுப்பிய கதையெல்லாம்..
இப்போ சொன்னா..
So cheap ங்கறாங்க..
திரும்பிப் பார்த்தேன்..
திரும்பி வரா நாட்களை..

Thursday, October 20, 2016

Diwali sweets

சட்டியிலேயே  ஒட்டிய..
அல்வாவும்..
பல்லை உடைக்கும்.
பர்ஃபிக்களும்...
கோணிப் போன
முறுக்குகளும்..
கல்லாய்ப் போன..
மைசூர் பாக்களும்..
பாதி வெந்த
பாதுஷாக்களும்..
பிறவிப் பயனை அடையா
(லட்டு)பூந்திகளும்..
கோல்ட் நிறம் மாறிய..
globe(gulab)..ஜாமுன்களும்..
உருட்டுக் கட்டைகளாய்..
ரவா..பயத்தம் உருண்டகளும்
வெந்த புண்ணில் வேல் போல..
நெட்டில் கண்ட ரெசிப்பிக்களும்
நிஜத்தில்..நோகடிக்க
போன வருஷம்..
பட்டது போதும்..
ஃபோனைப் போடு..
'மாமி...மிக்ஸரும்..மைசூர்ப்பாவும்..
முதல் நாளே அனுப்பிடுங்கோ..
இனிமே...நிம்மதியா.
போத்தீஸ்..நல்லி..குமரன்..
ஷாப்பிங்...ஷாப்பிங்..ஷாப்பிங்..

Wednesday, October 19, 2016

Karwa chauth

karan johar படங்கள்..
karwa chauth பாடங்கள்..
கையில் மெஹந்தி
கல்யாண lehenga
கலகலக்கும் வளையல்
காய்ந்த வயிறு..
'அந்த நிலாவைத்தான்..
நான் சல்லடையில் பிடிப்பேன்..
என் ராசாவுக்காக' ...
கையில் விளக்கேந்தி
நிலவுக்கு வெளிச்சம் காட்டுவர்..
கண்ணாமூச்சி காட்டுமே..
கள்ள நிலாவும்..
ஒவராய் senti போடும்..
over makeup மங்கைகள்..
'ஓ...வெண்ணிலாவே..
வா ஓடி வா ...னு பாட..
(karan johar படத்தில..எப்படி .ilayaraja sir ...situation song ..இசைஞானி இல்லாமலா..)
சண்டித்தன நிலவு..
சமயம் கழித்து
கீற்றாய் கண்ணில் பட..

கண்ணாளனுக்கு..
ஆரத்தி எடுத்து..
அவன் கையால் ..
நீர் அருந்தி...
நமஸ்கரித்து..(ஒரு நாள் கூத்து)
கடையில் வாங்கிய லட்டுவை.
கிள்ளி வாயில் போட்டு..
karwa  chauth....
பண்டிகை முடிய..
பழைய அவதாரத்துக்கு..
தாரம் ..மாற....
'பசி உயிர் போறது..
போலாம் வாங்க..
பக்கத்து ஹோட்டலுக்கு..
முடிஞ்சது ராஜாங்கம்..
order பண்ணிய உணவுக்கெல்லாம்..
தலையாட்டியபடி...
வரும்..வரும்..
 karwa   chauth
அடுத்த வருஷம்...
அதுவரை...

Monday, October 17, 2016

பூம்பூம் மாட்டுக்காரன்

பூம்பூம் மாட்டுக்காரன்..
பார்த்ததுமே..
பயந்து நகருவேன்..
அவன் விதவித முண்டாசும்..
அவன் சொல்லுவதெற்கெல்லாம்..
புரிந்ததோ..இல்லையோ..
பூரிப்பாய் தலை யாட்டும்
பூம்பூம் மாடும்...

இன்றும் கண்டேன்...
சின்னத் தெருவொன்றில்..
நகர்ந்து ஓடிடலாம்..
நினைத்த நேரம்..
நிற்க வைத்தது..
அவன் சின்ன நாதஸ்வரம்..
அதிலிருந்து எழுந்த நாதம்..

ஆனந்த பைரவியில்..
palukke bangaramayena.வை
பிசகாமல் வாசித்து..
அவனோடு அழகாய்
தலையாட்டிய மாடு..

கற்றதா..
காற்றில் கேட்டதா....

அம்மணி...
எதனாச்சும் இருந்தா கொடு...
அவன் குரல்...
எண்ணத்தை..கலைக்க..


கோதண்டராமா..
எப்போ உன் கடைக்கண் அருள் கிட்டும்.?

Sunday, October 16, 2016

கல்யாணி அக்காக்கள்

கல்யாணி அக்காக்கள்..
காப்பினா..
கல்யாணி போடறதுதான்..
கோலம் போட்டா..
கண்ணுலயே நிக்கும்..
அவ சமையல்..
ஊரே மணக்கும்..
எம்பிராய்டரி பண்றதுல..
எமகாதகி..
எதுக்கு படிப்பு..
எட்டாங்கிளாஸ் போதும்..
எப்படியும்..
எங்காத்துல ..
எசமானி அவதான்..
எம் புள்ளை..
என்னிக்கும்
என் பேச்சை தட்ட மாட்டான்..
அத்தை assurance கொடுக்க..
அவள் வயசு பொண்கள்..
கல்யாணக் கவலையில் ..
இவளோ...கனவுலகில்..
CA முடித்தான் கிட்டு..
எம் புள்ளைக்கு
எட்டாங்கிளாஸ் பொண்ணா..
ஜாதகம் பொருந்தலை..
சால்ஜாப்பு சொல்லி..
ஜோடிய பிரிச்சு..
அவ உனக்கு சரியில்லடானு..
வேதம் ஓதி..
வேறு இடத்தில் சம்பந்தம்..
நிச்சயதார்த்தம் அன்று..
 கோலம் போட..
காப்பி கொடுக்க..
அடுக்களை சமாளிக்க..
அழைப்பு..
 கல்யாணிக்கு..

Tuesday, October 11, 2016

தசமி நாள்


சூலமேந்திய..
சக்தி நானும் தான்
தேடும் அசுரன் ..
வேறெங்குமில்லை..

என் கோபத்திலே..
என் குரூரத்திலே..
என் ஆசையிலே..
விளையும் பேராசையிலே..
என் எண்ணத்திலே..
என் செயல்களிலே...
என் பேச்சினிலே..
என்னை ஆட்டுமிவனை..
தசமி நாளிதில்..
தகனம் செய்கிறேன்..
தேவியே..
உயிர்த்தெழுதல்...
வேண்டாமே இவனுக்கு..


Monday, October 10, 2016

சக்தி தரிசனம்

அரசுப் பணி வேலை..என்
அம்மா ஞாபகம் வரவைத்தது..
SSLC தேர்வில் ..
மாவட்ட முதலவள்..
தலைமை ஆசியிரியை.
தாராளமாக சொன்னார்..
மருத்துவ படிப்புக்கு..
மானியம் நான் தரேன்னு..
குடும்ப நிலமை..
கூறாமல் புரிய..
அரசு வேலை..
அவள் பருவம் பதினாறில்
குட்டிப் பெண்ணவளுக்கு.
எட்டா மேசை..
உயரமாய் நாற்காலி..
சிறிய வேலையில் சேர்ந்து
பெரிய பதவி வரை.
அம்மா..ஒரு all rounder
உள்ளத்தில் உறுதியோடு..
ஊறுகள் வந்த போதும்..
உறுதியாய் நின்று..
உடன் பிறந்தோருக்கு
புது உலகம் அமைத்தவள்..
என்னைப் பொறுத்தவரை..
இவளும் ...
 சக்தியின் வடிவந்தான்..
இவள் போல்..
பல சக்திகள் இங்குண்டு..(உன்னையும் சேர்த்தே)
வெளியே வராத..
வெளிச்சம் போட்டு காட்டப்படா..
எத்தனையோ..
சாதனையாளிகள்..

நவராத்திரி.. நினைவுகள்

நவராத்திரி..
சில நினைவுகள்..
சாயங்காலம்  நேரம்
சக தோழிகளோடு..
சரசரக்கும் பாவாடையும்.
சரமாய்த் தொடுத்த மல்லியும்..
சளைக்காமல் அலங்கரித்து..
சுண்டல் மாமி ..சுண்டல்னு..
சுத்து சுத்துனு..சுத்தி வந்து..
சரளி வரிசையை..
சிரத்தையாய் பாடி..
சுருக்கு பையிலே..
சில்லறை சேர்த்துண்டு..(தீபாவளிக்கு யானை வெடி வாங்க)
தினங்கள் ஓடும்..

சரஸ்வதி பூஜை..
பிடிச்ச பண்டிகை
பூஜையறையில்..
புகலும்.. புத்தகங்கள்

ஆஹா..படிப்பில்லை..
படி படினு தொல்லையில்லை..
நகரக் கூடாதே
இந்த நாள்னு வேண்டிப்போம்..

விஜயதசமி பூஜை..
விழிக்குமுன்னே..
விறுவிறுனு பண்ணும் அம்மா.
புத்தகங்கள் எடுத்து கொடுத்து..
போய் படி இப்போ என்பாள்..
விரியும் புத்தகம்..
சுருங்கும் முகம்..

குரு ஆசி வாங்க..
கூட்டமாய் போவோம்..
வீணை மாமி வீட்டில்..
கலை வாணி அவளுக்கு
வாழ்த்தொன்று வாசித்து..
வழிபாடும் முடித்துவிட்டு..
வீடு வந்து சேர்வோம்..

விடுமுறையும் முடியும்..
விடிஞ்சா பள்ளிக்கூடம்..
காலாண்டுத் தேர்வின்..
வண்டவாளம் தண்டவாளமேறும்..
கவலையுடன் கண்மூட
கணக்கு மார்க்கு ..
காலைக் கனவில் வர
கலங்கி விழித்து..
காத்து போன பலூனாய்
விடுமுறையின் சந்தோஷம்..
நடுக்கத்தில் முடியும்..

முப்பெரும் தேவியும்..
மீண்டும் வருவாள்..
அம்மா..சித்திகளின் வடிவில்..

Thursday, October 6, 2016

தாயுமானவன்

தந்தை..
தட்டிக் கேட்பவன்
தோளில் சாய்த்து..
தட்டி வளர்ப்பவன்..
உள்ளங்கையில்
பிள்ளை பாதம்..
முள் தைக்காமல்..
முன்னேறச் செய்பவன்..
கொட்டித் தீர்க்க மாட்டான்..(தேள் போல)
கொட்டித் துன்புறுத்த அறியான்..
சட்டியில் இல்லாவிடினும்..
ஆப்பையில் வரவைப்பான்..
மன(ண்) கோட்டையும்..
கட்டிடமாகும் இவன்
விடாத உழைப்பில்..
இவன்..
கண்டிப்பின் பின்னே
கருணை உண்டு..
கண்ணுருட்டல் பின்னே
கண்ணீரும் உண்டு..
இவன்..
மெளனத்தின் பின்னே..
மன உறுதியுண்டு..
தகப்பன் ...சாமிதான்..
கண்டேன் இங்கே..
என் தந்தையிலும்..
என் பிள்ளைகளின்
தந்தையிடமும்..

நவராத்திரி ....

அட்டவணை போட்டு..
வரிசையாய்...பாராயணம்..
அழைத்த இல்லமெல்லாம்..
ஆசையாய் சென்று வந்து...
அவரசரமாய் பிரிக்கிறேன்..
அவர்கள் தந்த பையை..
என்ன கொடுத்திருப்பா..
நான் வாங்கி வைத்திருப்பதையே..
அவர்களும் தந்திருக்க கூடாதே..
..கவலையில்..நான்..
( இதுக்கு கூட நாங்க கவலைப் படுவோம்..!!!)

நவராத்திரி

நவராத்திரி..
்(அவரவர்)..அம்மா அலமாரி முதல் (முன் ஜாக்கிரதை தான்)
அன்றையத் தேதி
டிசைன் புடவைகள் வரை..
பாதுகாப்பு பெட்டகதிலிருந்து..
புது விடுதலை காணும்..
பளிச்சிடும் நகைகள்..
பாப் வெட்டிய சுட்டிகள்..
பட்டு கட்டிய பட்டாம்பூச்சிகள்..
அபார்ட்மெண்ட் வாழ்க்கை..
அலுப்பே இல்லா கொண்டாட்டங்கள்.
குஜராத்தியும்..கன்னடரும்..
தமிழரும்..தெலுங்கரும்..
மலையாளமும் மராட்டியரும்..
ஓரிடம் கூடி..
அம்பாள் நாமம்..
ஆயிரமதை
அவரவர் மொழி வடிவில்
அழகாய்ச் சொல்லி..
ஆரத்தி எடுத்து..
அவனியில் அன்பைத் தா என்று..
பாடி முடித்து..
பாக்கும்  வெத்தலையும்..
பாங்காய் பெற்றுக் கொண்டு..
நாளை என் வீட்டில்..
ஞாபகமாய் வரணும்னு சொல்லி..
நங்கைகள் நயமாய்
விடை பெறுவோம்..
எங்கிருந்தோ வந்தோம்.
இணைந்தோம்...
இவள் அருள் வேண்டி..
ஒன்பது நாள் ..
ஓடியேப் போகும்
ஒன்றிப் போகுமே
உள்ளங்கள்..

நவராத்திரி....நாயகிகள்
நம்மில்லம் வரட்டும்.
நல்லருள் தரட்டும்..
நன்மைகள் பெருகட்டு.

Wednesday, September 28, 2016

ஒரு நாள் ராஜாங்கம்

வத்தல் குழம்பு
வடாம் பொரிச்சது..
வடுமாங்காயோடு..
வெண்ணையாய் பிசைந்த...
வாழையிலையில் கட்டிய..
தயிர் சாதம்..
வாய் முழுதும் பல்லாக(செட்டாக)
வழியனுப்புவாள் என் பாட்டி..
தாத்தாவை ஊருக்கு..

நாலுமணி பஸ்ஸில் போனாதான்..
நாலு வேலையும்..நடக்குமென்றே..
கட்டு சாத மூட்டையோடு..
கிளம்பிடுவார் என் தாத்தா..

ஆல் இந்தியா ரேடியோவின்..
அலறல் இன்றில்லை..
வந்தே மாதரம் வரும்போது..
வரிசையாய் உருவப்படும்
விரிப்பும் தலையணையும்..
கட்டாந்தரையிலே..
தவக்களை படுக்கையில்லை
தப்பிச்சோம் இன்னிக்குனு..
தாராளத் தூக்கம்..
விவித் பாரதி..
வீச்சென்று அலறும்..

எட்டு மணி யாச்சு..
எங்கே இரண்டாவது காப்பி..
பத்து மணியாச்சு..
பெருக்கித் தொடக்கலையா..
பூஜைக்கு நாழியாச்சு..
பதினொன்றறை யாச்சு..
பசி உயிர் போறது..
பன்னெண்டு மணியாச்சு..
பாங்க் வேலை முடிக்கணும்
ரெண்டு மணியாச்சு..
ரெடியா..காப்பி..
நாலு மணியாச்சு..
நல்ல சூடா டிபன்..
செல்வராஜ் செய்தி வாசிப்பு..
செவக்காமல் சுட்ட அப்பளம்..
ஒன்பது மணியாச்சு..
ஒரு மோர் சாதம் போதும்..
கடிகாரம் பார்த்து.
காரியம் இன்றில்லை..
வாடகை நூல் நிலயம்..
வாசலில் விழும் புத்தகம்..
வாரி எடுத்து..
வரி விடாமல் படிக்க..
வசதியான நாளிது..
வெளியே போனவர்..
வீட்டுக்கு வரும்வரை..
விலங்குகளில்லா..
விரும்பும் வாழ்க்கை..
வாசலில் காத்திருப்பு..
வர கொஞ்சம் நேரமானால்...

நாள் முழுதும் சுத்திய களைப்பில்
நாய் முகம் காட்ட..
நான் இல்லனா..
நிம்மதியா இருந்திருப்பியே..
பதிலே பேசாமல்..
பறிமாறுவாள் பாட்டி..
பழகிய வசவுகள்..
புதுசா என்ன வலி?

Friday, September 23, 2016

விழி..எழு.

syllabus complete செய்த களைப்பில்
self study பண்ணுங்கோனு..
சயனத்தில் இருக்கும்..
சித்தார்த்தனே..
உன் (போதி)மரப் பாடம்..இந்த
மர மண்டைக்குள் போகலையே..
மிகச் சுலபம் என்றாய் நீ..
முழி பிதுங்குகிறதே..
நுனிப்புல் மேயும் எமக்கே..
தேர்வு நேரம் எமக்கு..
என்ன தூக்கம் உனக்கு..
புதுக் கொள்கை..பாடத்திட்டம்..
பிறகு யோசிக்கலாம்..
சோதனை வேளையிது..
சுப்ரபாதம் பாட நேரமில்லை..
சித்தம் என் கலங்குமுன்..
சித்தார்த்தா..எழு நீயே.

தீர்த்தம்

அனுமார் கோவில்
அர்ச்சகர் .
உத்தரணியில் தந்த
துளசி தீர்த்தம்..
உள்ளத்தை தூய்மையாக்கினால்..
உவகை தானெ

Wednesday, September 21, 2016

Bandh day

எழுந்திருக்க மனமிலா..
சோம்பலான காலை..
எடுப்பாரன்றி..
வீசி எறியப்பட்ட...செய்தித்தாள்
தூக்கில் தொங்கும் பால் பாக்கெட்..
எதுக்குமே வாசப்படி இறங்க வேண்டாம்..
எது இருக்கோ..அதே போதும்..
அடைப்பட்ட குழந்தைகள்..
சனி ஞாயிறை விட..
சுகம் தருதோ..

சுற்றி எல்லாரும் இருக்கும்..
சுறுசுறுப்பை சூறையாடும்
சிற்றின்பம் சிலருக்கும்..
பேரிழப்பு ..
பொருளாதாரத்துக்கும்..
தரும்..
வேலை நிறுத்தங்கள்..
வழி காட்டுமா..
வளர்ச்சிக்கு..!!!!

Monday, September 19, 2016

Silver jubilee

ஜாடிக்கேத்த மூடி போல
 திலீபன் சுபா ஜோடியிது..
ஜொலிக்கும் வெள்ளி காணும்..
ஜாலியான ஜோடியிது..

கருவைக் காக்கும் மருத்துவர் இவள்..
தருவாள் நம்பிக்கை தம்பதி பலருக்கு
சிறுகூடு இவள் வீடு..
சிறிதும் பஞ்சமில்லை இன்பத்திற்கே..

அறுவை சிகிச்சைக்கு ஆதாரம்
அளவாய் தரும் அனஸ்தீஷியாவில்
அந்தக் கலை .. கைவந்தக் கலையாய்..
அரும்பணி புரியும் திலீபனிவரே..

மயக்க ஊசியில் மயக்குவர் இவரெனில்..
மந்திரப் புன்னகையில் மயங்க வைப்பாளிவளே
பல்லிசை வேந்தர் இவர் என்றாலோ
இல்ல  இசையின் நற் சுருதியும் இவளே..


நிலவு ஆயிரம்
காண வாழ்த்து..
கனவு யாவும் ..கை...
வசப்பட ..வாழ்த்து..
நலமும் இன்பமும்
நாடியே வரணும்..
நான்கு தலைமுறை..
நீங்களும் காணணும்..

தங்கம் வைரம் பிளாட்டினங்கள்..
சிங்கக் குட்டியாம்..
சீமந்த புத்திரனுடன்..
சீறும் சிறப்பாய் ..
சேர்ந்தே கொண்டாடணும்..
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..

Sunday, September 18, 2016

Exams..exams

flipping through the pages
focussing with attention

filling my mind
faith as the ink
flowing with energy
forging ahead always..
functions of protection
falling in front..
fail or pass..
fear for nothing
following mentors path
farther not the dreams
fine tuning our lives
fulfilling our mission..
firm is our faith
flaws flown away..

learning is fun..
leaning not to devils
lower not the life state
lament not the surrounding
light all   the path
leaders of kosen rufu

fail the fears
frail  the trials
future is ours
future is ours..

Wednesday, September 7, 2016

கண்ணா வருவாயா

கண்ணா வருவாயா
அம்மா..
பாப்பா கூக்கி (தூக்கியின் மழலை)
குட்டிப் பாப்பா கெஞ்ச..
கொஞ்சம் இருடா..
 கிருஷ்ணா உம்மாச்சி வருவாரே..
குடுகுடுனு ஓடி விளையாடுவாரே..
அவருக்கு இன்னிக்கு  birthday ஆச்சே..
பார்ட்டிக்கு எல்லாம் ரெடியாக்கனுமே..
சிணுங்கலுடன்...பின் சமாதானம்..
பாயசம் கண்டதும்..
பரவசம் வந்தது..
என் வீட்டு கிருஷ்ணிக்கு.
கண்ணா...உம்மாச்சி வருவார்
உட்கார்ந்து சாப்பிடுவார்..
அப்பறந்தான்..நமக்கு..

தூங்க வெச்சு அவளை..
குட்டிக் கால் போட்டு..
மற்ற வேலை கவனிப்பு..
அனுமாஷ்ய சக்தி ஒன்று
ஹாலுக்கு என்னை இட்டுசெல்ல
என் சுட்டி வால்..
ஒன்னு வுடாமல்..
காலை அழிக்கும் மும்முரத்தில்..
அம்மா..அழுக்கு..!!!
என்ன சொல்வேன்?

நெய்வேத்தியம் ரெடி..
என் வீட்டு குட்டியின் ..
அலைபாயும்..
கையை கட்டி..
ஓம் பூர் புவஸ்வ..சொல்லி..
எல்லாம் ஆச்சு..
மம் மம் சாப்பிடலாமானு ..கேட்க..
இடதும் வலதுமாய் வேகமாய்த்
தலை ஆட்டி..
மம் மம் வேண்டாம்....
அது கிருஷ்ணா க்கு..
பண்ணிய பட்சணங்கள்.
படைத்த பழங்கள்..
பரிதாபமாய் எனை பார்க்க..
பண்படனுமோ நாம இன்னும்..
பசினு பாயசம் கேட்டது..
அந்த மாயக் கண்ணன் தானோ..???

கண்ணா வருவாயா..
எப்போவாவது வந்திருக்கியா...???
கேள்வி குடைய நான்..!!!






கண்ணா வருவாயா
அம்மா..
பாப்பா கூக்கி (தூக்கியின் மழலை)
குட்டிப் பாப்பா கெஞ்ச..
கொஞ்சம் இருடா..
 கிருஷ்ணா உம்மாச்சி வருவாரே..
குடுகுடுனு ஓடி விளையாடுவாரே..
அவருக்கு இன்னிக்கு  birthday ஆச்சே..
பார்ட்டிக்கு எல்லாம் ரெடியாக்கனுமே..
சிணுங்கலுடன்...பின் சமாதானம்..
பாயசம் கண்டதும்..
பரவசம் வந்தது..
என் வீட்டு கிருஷ்ணிக்கு.
கண்ணா...உம்மாச்சி வருவார்
உட்கார்ந்து சாப்பிடுவார்..
அப்பறந்தான்..நமக்கு..

தூங்க வெச்சு அவளை..
குட்டிக் கால் போட்டு..
மற்ற வேலை கவனிப்பு..
அனுமாஷ்ய சக்தி ஒன்று
ஹாலுக்கு என்னை இட்டுசெல்ல
என் சுட்டி வால்..
ஒன்னு வுடாமல்..
காலை அழிக்கும் மும்முரத்தில்..
அம்மா..அழுக்கு..!!!
என்ன சொல்வேன்?

நெய்வேத்தியம் ரெடி..
என் வீட்டு குட்டியின் ..
அலைபாயும்..
கையை கட்டி..
ஓம் பூர் புவஸ்வ..சொல்லி..
எல்லாம் ஆச்சு..
மம் மம் சாப்பிடலாமானு ..கேட்க..
இடதும் வலதுமாய் வேகமாய்த்
தலை ஆட்டி..
மம் மம் வேண்டாம்....
அது கிருஷ்ணா க்கு..
பண்ணிய பட்சணங்கள்.
படைத்த பழங்கள்..
பரிதாபமாய் எனை பார்க்க..
பண்படனுமோ நாம இன்னும்..
பசினு பாயசம் கேட்டது..
அந்த மாயக் கண்ணன் தானோ..???

கண்ணா வருவாயா..
எப்போவாவது வந்திருக்கியா...???
கேள்வி குடைய நான்..!!!

























எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன்..
எலி உனையே ..
எங்கே தேடுவேன்..


அனுமதி வாங்காமலே
எனக்குத் தெரியாமயே
என்வீட்டில்..
நுழஞ்ச உனை
எங்கே தேடுவேன்..

கட்டிலுக்கடியிலே
cupboard இடுக்கிலே
அட்டை டப்பாவிலே
அடைசல். பரணியிலே
எங்கே தேடுவேன்...

கண்டதெல்லாம்..நீயுமிங்கே
கடிச்சு குதறுவியா..
கம்பளி மட்டும்..உன்
கால் ..வயிற்றுக்கு..போதுமா..
எங்கே தேடுவேன்..

நிம்மதி போச்சதிங்கே
நித்திரையும் ஓடிப் போச்சே
நினப்பு எப்பவுமே
நீயாக இருக்கறியே..
எங்கே தேடுவேன்..

மசால் வடை வேணுமா..
bread butter போதுமா..
எது பிடிக்கும் உனக்குனு
எங்கிட்ட மட்டுஞ் சொல்லு..
எங்கே தேடுவேன்.

காணாததை தேடித் தரும்..
கால..பைரவருக்கு..
காசும் வெச்சாச்சு..
காலையும் புடிச்சாச்சு..
எங்கே தேடுவேன்..

காத்து கூட புகாத..
கான்க்ரீட்டு பொந்துக்குள்ளே..
வழிதவறி வந்த உன்னை..
வீடு தான் சேர்த்திடவே..
எங்கே தேடுவேன்..

சுதந்திரமா சுத்தின நீ
செல்லுக்குள்ள..
சிக்கிக்கொண்டு
சுகம் என்ன காண்பாயோ..
எங்கே தேடுவேன்..

வாய்ப் பேச்சு கேட்காத..
வயசுப் பசங்களை..நீ.
வந்த ஒரு நாளிலேயே
வழிக்கு கொண்டு வந்தியே..
எங்கே தேடுவேன்..

அலமாரி மூடியிருக்கு..
அடுக்கி எல்லாமிருக்கு..
அமைதி புரட்சியொன்று..
அரை நாளில் செய்த உனை..
எங்கே தேடுவேன்..

கொல்லி வெச்சு உனையிங்கே
கொல்ல எனக்கு் ஆசையில்ல..
சொல்லாம கொள்ளாம..
வந்த வழி போயி விடேன்..
எங்கே தேடுவேன்....

எம்பாடு புரியலையா..
என் சோகம் அறியலையா..
என்னோட தங்கம் நீ..
எம்மை விட்டு ஓடிவிடு..
எங்கே தேடுவேன்..

எலிகொரு எசைப்பாட்டு..
என்னை இங்கே.
பாட வெச்ச..
ஆண்டவா நீயே சொல்லு..
எங்கே தேடுவேன்..

தம்மாத்தூண்டு எலி ஒன்னு
இம்மாம் பாடு
படுத்துதடா..
இஷ்டதெய்வமெலாம்..எந்தன்
கஷ்டத்ததான் போக்கணுமே..









உன்ன விட....

உன்ன விட...

விதையே இருக்காது..
 காயே கனியாய் இனிக்கும்..
நான் வெச்ச கொய்யா மரம்..

இது என் பொண்ணு
நட்ட மாமரம்..
மல்கோவா ...சுவையோ சுவை..
மண்ணு நல்ல மண்ணு இது..

அளவில சிறிசுதானாலும்
அன்னாசிப் பழம்..
அருமையா இருக்கும்..

வாழை இலைக்கு..
வெளியே போறதே இல்லை

இந்த மரக் கிளை இருக்கே
மங்களத்தின் அடையாளம்..

இந்தப் பூச்செடி ..
புது வகையாக்கும்..
பார்க்கவே கொள்ளை அழகு..

பக்கத்து வீடு நல்லவங்க..
பக்க துணையா இருப்பாங்க..

சுவற்றில் தொங்கும் படம்..
சின்னப் பைய்யன் வரைஞ்சது..

அணில் புறா மைனா எல்லாம்..
அடிக்கடி வந்து விளையாடும்..

தண்ணீர் வருகை பார்த்து
தவறாமல் மோட்டார் போடணும்..
இந்த குழாய் மட்டும்..
கொஞ்சம் தண்ணீ கம்மி வரும்..

திருட்டு பயமே இல்லையிங்கே..
தைரியமா இருக்கலாம்..

ராசியான வீடுங்க..
வரிசையாய்..விளக்கங்கள்

வீட்டுச் சாவியை
வீட்டுச் சொந்தக்காரர் கையில்
் கவலையுடன் கொடுத்தபடி.
பல ஆண்டாய்...
குடியிருந்தவர்..

வாங்கிய வீடோ..
வாடகை வீடோ..
வாழ்ந்த விட்டை
விட்டு வரும் வலி..
வலி ....வலி்தான்...

விடியல்

விடியல்..
'கிழிக்கப் போற என்ன பெருசா இன்னிக்கு'
கேலி செய்தது..
கிழக்கு வெளுக்குமுன்னே..
கிழிக்கப்பட்ட  நாட்காட்டி..
நல்ல கெட்ட நேரம்..
ராகு எம கண்டம்..
சித்த அமிர்த யோகம்..
சேர்ந்த நாள்னு நீ சொன்னாலும்...
கடனேனு வாழாமல்..
கவிதையாய் வாழ்வேன்..
காத்திரு நீயும்..
கிழிக்க நான் வருவேன்..
நாளை மீண்டும்..
life is so beautiful..
live..live..live

Anniversary wish

Happy anniversary to the most charming couple I have ever met. Looking back ,I feel how mystic was our meeting .
 Your warm clear voice ,
 your wise and dignified manner ,
your ever encouraging words,
your unconditional love,
 your extended support,
your positive attitude toward life,
your lovely voice,
your smile,
your untiring hospitality,
your affectionate looks,
your goal of spreading happiness,
your concern from the bottom of the heart,
your prayers
your vibrant home
……….
The list is too long..
I know you are the best..
My prayers and loads and loads and loads of wishes this wonderful couple..
Happppppppppppy anniversary dear.

My small dedication to the couple I adore.
என்ன சொல்லி பாடுவதோ..
என்ன வார்த்தை கூறுவதோ..

புவனெங்கும் சுற்றிடினினும்..
புலப்படாத பதுமையிவள்
கைப்பிடித்த நாதனுடன்..
கனவெல்லாம் நிஜமாக்குபவள்

அன்பு எங்கோ..
அங்கே இவள்
ஆசை எங்கோ
அங்கே இவள்.
அமைதி எங்கோ
அங்கே இவள்
இசை எங்கோ
அங்கே இவள்
விசையாய் என்றும்
இயக்குவள் இவள்..

விஸ்வ நாதன் துணை..
புவனா இவள்..
நாதன் புகழோ..
நாமறிவோமே..
நல்லதன்றி நாவறியார்..
நம் மனமறிவார்..
நல்லூக்கம் அளிப்பார்..
நல்ல நண்பரிவர்..


உதாரணத் தம்பதி
உம்போல் வேறில்லை

இல்லறம் இனிமையாய்
இனிவரும் காலமெல்லாம்
இணைபிரியா வாழ்வினிலே
கொள்ளை இன்பத்துடன்..
குறையா நற்செல்வத்துடனும்..
இன்றுபோல் என்றும் வாழ..
இறைவா..அள்ளித்தா..
இவ்வுலகிலுள்ள இன்பமெலாம்..

அன்புடன்
Akila CSR

Thursday, August 25, 2016

Janmashtami

வெல்ல சீடை..
உப்பு சீடை..
தட்டை..
தேன்குழல்..
அவல் பாயசம்..
வடை..
பால்..பழம்...
தயிர் ..வெண்ணை..
எல்லாம் வெச்சாச்சு..
வாசலில்லேர்ந்து..
உள் வரை..
உன் காலும் போட்டாச்சு..
விளக்கும் ஏற்றி..
ஆயர் பாடி மாளிகையில்..
cassette பூரா பாடியாச்சு..
எப்பவும்..வந்துடுவியே..
இன்னிக்கு எங்கே காணோம் இன்னும்..
பக்கத்து வீட்டில் ஏதோ சத்தம் கேட்க..
என்னனு போய் எட்டிப் பார்த்தேன்..
என்னத்த சொல்ல..
நீயுமா..கண்ணா..இப்படி..
கையில் pizza piece ம்..
வாயில் maggi யும் ரொப்பிண்டு..
ரொம்ப நன்னா இருக்கு..
பேஷ் பேஷ் னு..
இனிமே மெனுவை மாத்துங்கோ..
I need a change ..
சொல்றது நீதானா..
fast food க்கு..
flat ஆகிட்டயா நீயும்..

சந்தோஷத்தில்...
வரும் சந்ததிகள்..
கண்ணா..so sweet..

Sunday, August 21, 2016

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

ஆண்டுதோறும் வரும்..
ஆவணி அவிட்டம்..
அசைபோடும் மனது..
அந்த நாள் நினைவுகளில்..

திருநெல்வேலி...
திருவனந்தபுரம்..
திருச்சி..
தாரமங்கலம்..
கோவில்பட்டி..
வேலூர்..
எல்லா ஊரும் என்
சின்னஞ்சிறு..
டெல்லி வீட்டில்..
நண்பர்கள் வடிவில்..

கை நிறைய காசு..
பையில் கொஞ்சம்..
காய் பழம்..
வாழை இலை..
வானை எட்டும் விலையில்..
காய்கறி வியாபாரி..
கோடீஸ்வர ராய்த் தெரிவார்..
(இலையை அலம்பி எடுத்து recycle பண்ணலாமானு idea கொடுக்கும் மாண்புமிகு மச்சினர் dhileepan)

பாண்ட் சர்ட் போட்டவரெல்லாம்..
பட்டு வேட்டி சர சரக்க..
பட்டைப் பட்டையாய்..
வீபூதியோடு..
ஒரு சிலர் சிரத்தையாய் ..
ஒரு சிலர்..
செஞ்ச பாவத்துக்கு ஒரு ஓம்..
செய்யும் பாவத்துக்கு ஒரு ஓம்..
செய்யப்போறதுக்கு ஒரு ஓம் ..சொல்லி
புதுப் பூணல் போட்டு..
புதுப் பொலிவோடு..
ஆரத்தி எடுத்து..
அட்சதை போட்டுண்டு
மாமி ..சமையல் ரெடியானு..(நான்தான் மாமி எல்லாருக்கும்)
மடமனு இலை போட்டு..
வட்டமாய் உட்கார்ந்து..
வடையும் பாயசமும்..
கூட்டும் குழம்பும்..
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போகும்..
கவலை எட்டிப்பார்க்கும்..
இன்னொரு round கேட்டு..
இல்லனு சொல்லாம..
நிறைவா இருக்கனுமேனு

(என் சமையலையும்..சிலாகித்து... என்னை
ஊக்குவித்த என் கணவரின் அன்பு நட்பு வட்டம்)

வயிறு நிரம்பியதும்..
செவிக்குணவு ஆரம்பம்..
ராஜாவும் ரஹ்மானும்..
இந்த பாட்டு..
அந்த ராகம்..
analysis..
அனல் பறக்க..
பின்..
ஒரு குட்டித் தூக்கம்..
filter coffee..
விடை பெறுதல்..
( தொட்டி்யில ்ரொம்பிய பாத்திரம்..தாயம்மா வந்ததும் பளபளக்கும்..
இத்தன பேரை ஏம்மா கூப்பிடறே..என்பாள்..)..
கால ஓட்டம்...அவரவர் திசையில்..வேலை ..குடும்பம்..
இப்போ..மிச்சம் இருப்பது இந்த இனிய நினைவுகள் ...
திரும்பி வராத
தித்திப்பான தருணங்கள்...

தேடல்

எல்லாம் வாங்கியாச்சா..
எத்தனை பேர் சாப்பாடு..
காலைல எழுந்ததும்..
காத்துல பறந்துடும் நேரம்..
காய் கறி நறுக்கி..
கோலத்துக்கு அரைச்சு..
சாமி உள் சுத்தம் பண்ணு
வெல்லம் பொடிச்சுடு..
விடு விடுனு வேலை ஆகும்..
கரெண்ட் போறதுக்குள்ள..
grinder ,mixie வேலையாகட்டும்.
சமையல் மேடை ..
சகதியா இருக்கப்படாது..
பளிச்சுனு இருக்கணும்...
கீழ மேல சிந்தாமல்..
பாந்தமாய் வேலை செய்யனும்..


மாமி வந்தாச்சு பாரு..
நலங்கிட்டு..நமஸ்காரம் பண்ணு..
நன்னா..சாப்பிடுங்கோனு..
நாலும் கேட்டு பறிமாறு..
இந்த புடவை எடுப்பா அமைஞ்சிருக்கு..
நன்னா..select பண்ணியிருக்கே..

சாயந்திரம் சஹஸ்ரநாமம் பாராயணத்துக்கு..
சுண்டலும்..கேசரியும் பண்ணு..
பையில வெத்தல பாக்கோட
பழமும் தேங்காயும்...
pack பண்ணி வெச்சுடு...
பாராயணம் முடிஞ்சு..
எல்லாரும் போயாச்சு..
காலம்பறலேர்ந்து..பம்பரமா சுத்திட்டே..
நாளைக்கு லீவு நாள் தானே..
நிம்மதியா கொஞ்சம் தூங்கு..
நல்லபடியா எல்லாம் ஆச்சு..

எப்போதும் போல் என் அம்மா..
என்னை....ஆட்டுவிக்க..
எனக்குள்ளே ஒரு கேள்வி..!!!

இத்தனை பேரில்..
யாராய் நீ வந்தேமா.
எப்போ வந்தே..
எனக்கு அடையாளம் தெரியலயே..
நான் கவலையாய் கேட்க..
புன்னகை ஒன்றே பதிலாய்..
photo வில் நீ..

Thursday, August 11, 2016

Exam

எத்தனை முறை படித்தாலும்
ஏமாற்றுமே புதுப்புது கேள்விகள்.
தோல்வியால் துவளமாட்டேன்..
அடிபட்டாலும்..
எழுவேன் நிதமும்..
இந்த வாழ்க்கைப் பாடத்தில்..
என்றாவது  ஒருநாள்..
வெற்றி கிட்டுமென்று..

Good morning

my pallette of life...
blended with..
shades of sober and bright..
oh my lord..
bestow thy blessings..
fill my heart..
flowing with one and only..
color....
that's the purest..
white..white..white...

Tuesday, August 9, 2016

சந்திப்பு

விடிந்ததிலிருந்தே..
வேளை இன்னிக்கு ..
ஒழுங்கா போனுமே..
தொண்டை க் குழியில்..
இனம் புரியா..இடைஞ்சல்..

சூட்டிகைனு சொல்லுவாளா..
சுறுசுறுப்பு..சபாஷ் கிட்டுமா..
மகிழ்ச்சியா இருக்காம்பாளா..
மந்த்ம் சரியான என்பாளா..
பொறுப்பு ..என்பாளா..
பொறுமையே..யில்லைம்பாளா.
அரட்டை என்பாளா..
அசமஞ்சம் எப்போதும்பாளா..
மரியாதையே இல்லம்பாளா..
மதிச்சு நடக்கறாம்பாளா..
'கலகல' என்பாளா..
கடுகு போட்டா வெடிக்குதென்பாளா..
லாயக்கே இல்லைம்பாளா..
லட்சத்ததில் ஒருத்திம்பாளா..
முன்னேற்றம் என்பாளா..
முடியாது இவளோடன்பாளா..
மனசிலே கலக்கத்துடன்..
'may i come in madam'..என்றேன்..
parent teacher meeting இன்று..

Thursday, July 28, 2016

பொதிகை..

ஏதோ ஒரு channel  ல் இன்னிக்கு duet படம்..அதில்  ஒரு scene..
அப்பா..aerobics பண்ணி..மொட்டைமாடியில் இருக்கும்...antennaவை  கழுத்தைத் திருகிஅழ வைக்க..கீழே இருந்து .. பெண் left ,right னு
கட்டளை பிறப்பிக்க..
கொஞ்சம்..
பின்னோக்கிப் போனேன் நானும்..

Doordarshan..
இதன் தரிசனம் கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்ட நாட்கள்..
ஒட்டுக் கேட்ட நாட்கள்..ஜன்னல் வழி தெரியாதா என்று தேடிய நாட்கள்..
தெலுங்குக் கார வீட்டுக்கார மாமி புண்ணியத்தில... TV slot ஒதுக்கல் குடித்தனக்காரர்களுக்கு கொண்டாட்டம்..
சுண்டல் வியாபாரம் சூப்பரா பண்ணி யிருக்கலாம்..செம்ம கும்பல் இருக்கும்..
(ஒரு start up அப்ப இல்லாம போச்சே)
ஓடிப் போய்..சோபனா ரவியின் புடவையும் நகையும் கருப்பு வெள்ளையில் ரசித்த நாட்கள்..
ஒளியும் ஒலியும் ஓசியில் பார்த்த நாட்கள்..
அம்மாகிட்ட permission வாங்கி ..அவசர அவசரமா படிச்சு... அரக்க பரக்க ஒடினா  ..
குலேபகாவலினு...கொலை வெறி வரச் செய்த நாட்கள்..
எங்களுக்கும் காலம் வந்து...
solidaire   TV
advertisement கனவு..
நிஜமான து...
solidaire ..for Sunday movies..

geetanjali Iyer, neethi ravindran ம்..
news பார்க்க வைத்த நாட்கள்..
நாங்கள்ளாம்..ujala க்கு மாறிய நாட்கள்..
தமிழோடு.., hum log கூட..
nukkad ம்,  chitrahaar ம், rangoli யும்..
ஹிந்தி யை கற்க தூண்டிய நாட்கள்..
bharat ek khoj ...பார்த்த புண்ணியம்..
நிஜ வாழ்வில் கிடைத்தது..
ramananda sagar மூலமா..
ராமாயணம் அறிந்த நாட்கள்...
கடுகு வெடிக்கறதையே காட்டினாலும்..
கண் கொட்டாமல் கண்ட மாநில மொழிப் படங்கள்..(படிப்பைத் தவிர எதுவும் OK..)
வயலும் வாழ்வும் கூட..
வாய் பிளந்து பார்த்த நாட்கள்..


ரெண்டே ரெண்டு channel..தான்..
ஆனா..வீட்டை ரெண்டாக்காத நிகழ்ச்சிகள்..
remote இல்லாத..ரம்மிய நாட்கள்...
இன்னும் ஒரு முறை எப்போ பார்ப்போம்னு.
ஏங்க வைத்த நிகழ்ச்சி கள்..

அளவுக்கு மீறினா......
அதேதான் இப்போ..
யாரைப் பார்த்தாலும்..நாயகன் style ல ' நீங்க நல்லவரா.. கெட்டவரானு'..கேட்கத் தோணுது..
இப்படி பொலம்ப வெச்சுட்டாங்களேயா..

மீண்டும் பொதிகையைத் தேடி ..நான்..(யாரும் வீட்டில் இல்லாத போது) ...
மன்னிக்கனும்....
பழக்க தோஷம்...மெகா சீரியல் effect..
சுருக்கமா சொல்ல நினைச்சேன்..முடியலையே..

கோவில் பிரசாதம்.

கோவில் பிரசாதம்..
கோவில் பிரசாதம்..

வாக்கிங் போகும்வழி..
வருமே சிவன் கோவில்..
வலமாய்ச் சுற்றி வந்து..
வரமே வேண்டி நின்று..
வெளியே வரும் வேளை..
வழியும் நெய்யோடு
வாரியிறைத்த முந்திரியுடன்..
வட்டில் வெண்பொங்கல்....
வழங்கி மகிழ்ந்தாரே..

எரித்த கொழுப்பெல்லாம்..
ஏளனமாய் பார்த்திடுமே..

சொர்க்கம் காட்டி நீ..
சோதனையே செய்தாலும்..
சொக்கிட மாட்டேனே..
சொக்க நாதாவே..!!!

பொட்டல த்தில் கட்டியுமே..
விட்ட நடைத் தொடர்ந்தேனே
வீட்டுக்கு போய் அங்கே..
பொதுவாய் பங்கிட்டுண்ண..

Thursday, July 21, 2016

Letter to my beloved late friend

Champa ...fragrance...that was you my dear friend..
the soft spoken,ever smiling,  energetic,enthusiastic, affectionate..... adjectives fall short to say about you...

your way of welcoming ' வாருங்கோ'..
your hour long telephonic conversations..
your art of keeping in touch with people ...
your eyes ever speaking the language of love..
your heart to help anyone who knocks the door..
your face glowing with happiness..
your passion for pilgrimages..
your love for my kids..
your impartial attitude..
your calm and simple nature...
your craze for shopping..
your concern for everyone around you..
your way of receptiveness
your filled dining table ...
your favourite recipes..
your hospitality..
everything is fresh in my mind..
today, is your son's marriage..your dream wedding ..without you..
சொர்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம்..
அந்த சொர்கத்தை ...ஒரு புது சொந்தத்தை..
மகனுக்கு காட்டிவிட்டு..
சொர்கத்திலிருந்து..சந்தோஷித்திருப்பாய்..
நிச்சயமாய் நீ இன்று..
looking back at my Madhya Pradesh days, I really feel blessed for that posting of my hubby..
otherwise ,i would have missed a chance to meet such a  friend in my life..
one year gone ...you became a prey to the dreadful dengue... you were to finish the 108 divya desams pilgrimage..but Almighty had some other plan..
probably, in heaven too there might have been shortage of Champas like you...he had to call his beloved back to HIM.. for this reason ,i can't forgive HIM....



Monday, July 4, 2016

புத்தன்

உன்னில் உறங்கும் எனை..
ஊரெல்லாம் ஏன் தேடல்??
'என் வழியை'..
உன் வழியே..
ஊடகமாய் பார்த்திடவே..
உன் மனமும் வைப்பாயே..

உள்ளக்கதவு திற..
உண்மை உலகும்..
உள்ளத்து மலர்ச்சியும்..
உயிர்களிடம் அன்பும்
உன்னையே நீ அறியும்..
ஒர் நாளும் வந்திடுமே..

ஆழ்ந்த உறக்கத்தில் நானல்ல..
நீயேதான்..
அமைதியாய்க் காத்திருக்கேன்..
நீ விழித்தெழும்..
அந்த நாளுக்காக..