Thursday, December 15, 2016

பிரியா விடை

தென்னை மரமேற ஆள் வருவான்
தெண்டச் செலவென திருப்பி அனுப்பல்..
பக்கத்து வீட்டு மாமரம்..
நம்பக்கம் காய் தருகையிலே..
அக்கப்போர் ஒன்னு வந்ததில்ல..
அது கிடக்கு விடுங்கனு..
அமைதிப் புறா பறக்கும்..
உலகக் கோப்பை கிரிக்கெ்ட் வரும்..
உளுத்த கம்பமும் சாய்ந்து போகும்.
இழுத்துக் கட்டு இப்போதைக்கு..
இன்னிங்ஸ் முடிஞ்சிடும்னு இம்சைகள்..
தன்னலம் ...தலை தூக்கும்

பாலம் பல கட்டணும்..
பாதை பல ஆகணும்..
புதிய ஊராய் மாறணும்
பாவப்பட்ட் மரங்களை
பலி கொடுத்தோம் என்றும்..
வரும் என் முறை எப்போனு
வருத்தத்தில் வாடிய மரத்துக்கு
வந்ததே வார்த் புயலும்..
வெட்டி வீழ்த்துமுன்..
வேரோடு சாய்க்கவே..
வலியில்லா...சாவோ..
வழியில் கிடக்கும் மரங்களுக்கு..
வண்டியில் ஏற்றுமுன்னே
வணங்கி வேண்டுவோம்..
வேரோ..விதையோ
 விட்டுப் போ..
வரும் சந்ததிக்கு காட்ட

No comments: