Thursday, December 29, 2022

Door)Mat finish..😃😃😃🌟⭐

 (Door)Mat finish..😃😃😃🌟⭐


போட்டிருந்தேன் வேறொரு திட்டம்..

பொழுதைப் புதிதாக்க அழகாய் ஒரு பூக்கோலம்..


வாசலில் இருந்த மிதியடியோ..

வாட்டமாய் எனை பார்க்க..

வந்ததே ஒரு எண்ணம்..

வா..வா..என்றேன்..

வண்ணத்தை அதில் நுழைத்தேன்..

வாவ்..வாவ்..என சொல்ல வைத்தது..

வஞ்சி நான் போட்ட கோலம்..

(நாமளே சொல்லிப்போம்😃😃💪)..


மிதி தாங்கும்   உன் விதியை..

மாற்றினேன் இன்று ஒரு நாள் மட்டும்..


மகிழ்ந்திருப்பாய் நீயும்..

மலர்ந்த புது திங்கள் நாளில்..


Let's bring a broad smile in everyone and everything around us..


Mogambo kush hua..இல்ல இல்ல..

எங்க வீட்டு door mat ம் இன்று மகிழ்ச்சியில்😃😃


Border..ம்ம்ம்ம் நிச்சயம் உண்டு😃😃


அன்புடன்😃😃


என் உருவைக் கொஞ்சம் மாற்றி

 என்னைக் கொஞ்சம் மாற்றி..

என் உருவைக் கொஞ்சம் மாற்றி..

----------------------------------------------------

நேற்றும் இன்றும் வேறு..🎵🎵🎵🎵🎶🎼


இந்தப் பாட்டை .நான் பாடலை..எங்க வீட்டு அப்பம் பாடியதே..🤦


ஆசையாகச் செய்தேன்..

ஆனைமுகனுக்கு அப்பம்..

அடுப்பிலிருந்து எடுத்துக் கொடுக்க..

Awesome awesome என்றார்கள்..


அடுத்த நாள் கேட்க..

அப்புறம் சாப்பிடறேனே..என்று

அங்கிருந்து நகர்ந்தார்கள்..

வேற யாரு..நம்ம வீட்டு மக்கள் தான்..


ஐஸ் பெட்டிக்குள் வைத்தேன்..

அக்கடானு உள்ளே இருனு..

'அவனில்'(oven) சுட வைத்ததில்..

ஆளுக்கு அரை உள்ளே போச்சு..


நாலே நாலு..மீந்து போக..

ஸேல் இதை எப்படி செய்வேன்னு திணற.


உள்ளே பிரகாசித்தது..

ஒளி தரும் பல்பு ஒண்ணு...💡💡💡💡💡


உதிர்த்தேன் அப்பத்தை..

ஓட விட்டேன் மிக்ஸியில்..

வெல்லமும் ஏலமும் சேர்த்து பொடி செய்ய..


நெய்யில் முந்திரி வறுத்து..

நெய்யப்ப பொடியை..

நோகாமல் சேர்த்தேன்..

நொடியில் ஒரு டிஷ் ரெடி..


அவலப்பம்..அவலப்பம்..

ஏலம் போடாமலேயே..

எல்லாமே காலி..

இன்னும் இல்லையானு கேள்வி😄😄😄😄😄


இது எப்படி இருக்கு..


யாரு கிட்ட???💪💪💪


என்_சமையலறை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#என்_சமையலறை


Shankar sir ..நிறைய டிப்ஸ் கேட்டிருந்தார் இந்த டாபிக்கில்.


அதெல்லாம்..எனக்கு தெரியாது.

ஏன்னு கேட்டால்..இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை ஊர் ஊரா திரிஞ்சு..இன்று வரை அதே நிலமைதான்.


கண்டது..கிச்சன்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.


ஒரு ஆள் மட்டுமே நிற்கக்கூடிய  கிச்சன்.. சதுர கிச்சான்.செவ்வக கிச்சன்..டெல்லி வீட்டில்..ரூம் எல்லாம் தாண்டி வெளியே இருக்கும் கிச்சன்...


நமக்கு ஏத்த மாதிரி இல்லனா என்ன?..நாம அதை நமக்கு ஏத்த மாதிரி  மாத்திடுவோம்னு இன்று வரை தொடரும் ..கிச்சன் வைபவங்கள்.


பாத்திரங்கள் எண்ணிக்கையை விட..எங்க கிச்சனில் சமைத்த பாத்திரங்கள் ..

அதாங்க characters ஏராளம்.😄😄😄


உங்க கிச்சனுக்குள்ள வரலாமானு யாரும் கேட்டுடக் கூடாது..🤣


இக்கட சூடு, அல்லி நோடு, உதர் தேகோ....இப்படி எல்லா சாமான்களையும் காண்பிச்சுவிட்டு

உன்னால் முடியும் தம்பி ..மனோரமா ஸ்டைலில்..me ..enjoy தான்.💪💪


" சமையலறை..எனக்கு மட்டும் சொந்தமா.?..நீயும் வந்து சமைத்து பாருனு" ..வரவங்களையும் இழுத்துப் போட்டுடுவோம்ல.


என்ன செய்யறது..நம்ம டிசைன் அப்படி..


கல்யாணம் முடிஞ்சு ,டெல்லிக்கு போனால்..அங்கே ஞாயிற்று கிழமைகளில் என் கிச்சன்..இவரோட ஃப்ரண்ட்ஸ் பேச்சிலர்கள் கையில் போக..நான் பேச்சு மூச்சு இல்லாம அவங்க அட்டகாசத்தை பார்த்து..மயங்கி விழாத குறைதான்.


ஒரே குக்கரில் ஓஹோ production செய்யும் ஒருத்தர்..

ஒண்ணு விடாம் எல்லாப் பாத்திரத்தை யும் அள்ளிப் போடும் ஒருத்தர்..

சமைத்தபடியே..துடைக்கும் ஒருத்தர்..( வேற யாரு எங்க அம்மா தான்)..

கப்பும் டம்ளரும் அடுக்குப் பாத்திரமும் ,டவராவும் ஸ்பூனும் அழகா பார்த்து பார்த்து அடுக்கும் ஒருத்தர்..( என் மாமியார் தான்)


எங்க வீட்டு கிச்சன் மேடைகள் ..எத்தனை பேரை ..master chef ஆக்கின புகழ்பெற்ற மேடைகள் தெரியுமா?..


இவரோட ஃப்ரண்ட்ஸ், என் பெண்கள், அவங்களோட ஃப்ரண்ட்ஸ் ,அவங்க அம்மாக்கள், மாமியார், அம்மா, அத்தை, சித்தி, நாத்தனார் ,கொழுந்தனார்னு எல்லாரையுமே அவங்க signature dish அரங்கேற உதவியது ..my super kitchen மேடை.


இப்போ லேட்டஸ்ட்டா என் வூட்டுக்காரரையும் நள பாகத்தில் இறக்கி, பெருமைப்படுத்திய மேடையாக்கும்..

இன்னும்..மாப்பிள்ளை மட்டும் வந்து ..அவர் திறமையைக் காட்டணும்..me ..waiting


அந்த அடுப்பு இருக்கே ..அடுப்பு..

அப்படியே மூளையில பொறி பறக்க வைக்கும் ஒரு creativity.


பாஸ்ட்டாக்கள்..வெறும் டோஸ்ட்டாக மாறினால்கூட..டேஸ்ட்டாக..பாஸ் மார்க்கு வாங்குமிடம்..

பிட்ஸாக்கள் ..best ஆ மாறுமிடம்

பக்கோடாக்கள்..பக்காவா கிடைக்குமிடம்..

தோசைகள்..உருமாறும்.


உப்மாக்களோ..உவகை தரும்..


பானி பூரிக்கள்..பூரித்து மகிழும்


சாட் ஐட்டமெல்லாம்..சகட்டு மேனிக்கு கிடைக்குமிடம்..


ஜவ்வரிசி கள் ..ஜாலம் காட்டுமிடம்..

வடையோ..தடையில்லாமல் கிடைக்கும்..


"வந்தவரெல்லாம் தங்கி விட்டால்..இந்த அகிலாவுக்கு கிச்சனில் வேலையேதுனு"...உங்க மை வாய்ஸ் கேக்கறது.😄


அப்போ நீ எப்போதான் சமையல் செய்வ..?..

கரெக்ட்டு தான்..

நிறைய செய்வேன்.நிறைவாகச் செய்வேன்.


துடைப்பது, அடுக்குவது, தூஸி தட்றது..

எல்லாமே..வலது கை செய்ய்றது இடதுகைக்கு தெரியாது.


புடிச்சது சுத்தம்..

இல்லாட்டி..வீட்ல சத்தம் தான்.


நம்ம சமையலறை என்பது..வெறும் மசாலாக்களும் பொடிகளும், பாத்திரமும் மட்டும் இருக்கும் இடமல்ல..நிறைய memories ம் இருக்குமிடம். 


வாணலியைப் பார்த்து...ஹலோ இன்னிக்கு உன்னைத்தான் போட்டு வறுக்கப் போறேன்னு சொல்லுவேன்..


குக்கரே..இன்று ..நோ மக்கர்னு சொல்லி ..வேலை ஆரம்பிப்பேன்..


பால் வழியும் பாத்திரமாகிடாதேனு..பால் பாத்திரத்துக்கு சொல்லிடுவேன்.


கட்டரே..வெட்டு நீ காயை மட்டும்னு caution செய்வேன்..


ஒரு positive vibration கொண்டு வந்ததால்..

என் சமையலறை ..மையல் கொள்ள வைக்கும் அறை..


ஒவ்வொரு shelf லும்..பல நினைவுப் பொக்கிஷங்கள் உண்டு..


இருந்த கிச்சன் , இருக்கும் கிச்சன் எல்லாம் பெரிசா ஒரு aesthetic sense இல்லாட்டாலும்..

இங்கே தான் "அகிலாஸ்..அசத்தல்" சமையல் நடக்கும்.


என் சமையலறை ..எங்கேயும் எப்போதும் இப்படித்தான்.


 இந்த போட்டோ எங்கம்மா வீட்டு கிச்சன்😄😄


Wednesday, December 28, 2022

முருகனை நினை மனமே..

 முருகனை நினை மனமே..



ஆமாம்..இன்னிக்கு வருஷத்தின் கடைசி சஷ்டி விரதம்..


என்ன கோலம் போடலாம்னு யோசனை..


ஆஹா..

madhubani..

மாக்கோலத்தில் வருமா?..


சரி. சரி..அவன் பெயர் சொல்லி போட ஆரம்பிக்க..

அவனே கொடுத்தான் ஐடியா..


மயிலிறகை..வேல் போல் வரை என்று..


முருகா..முடிஞ்ச அளவு முயற்சிக்கிறேன்னு...


வண்ணம் நிரப்ப..நிரப்ப..

வாசலில் வந்தாடியது அழகு மயில்..


தோகைகள் வேல் போல விரிய..

வேலுண்டு..வினையில்லை..

மயிலுண்டு ..

மனக்கவலையில்லை..


முருகா..முடியப் போகும் வருடம்..

முழுமையாய் வாழ்ந்தேனா தெரியவில்லை..


மலரப் போகும் வருடம்..

மாந்தர்க்கெல்லாம் மகிழ்ச்சி தரட்டும் என்ற பிரார்த்தனை யுடன்..


இந்த நாள் இனிய நாள்


ரங்கோலியிலும் எனை நினைக்க..

அங்கே வந்து மகிழ்வேன் என்றான்..


அவன் தத்துவம்

Monday, December 26, 2022

Sikku kolam..கம்பி கோலம்..

 Sikku kolam..கம்பி கோலம்..


#சிக்குத்துவம்


இதுக்குள்ள சிக்கினா நமக்கு வெளியே வரத் தெரியாதுனு..எப்பவும் ஒரு பயம்..


அன்பு வலையில் சிக்கற ஆளு நாம..

கம்பி கோலத்துக்குள் எப்படி போறது..


ஆரம்பித்தால் கை எடுக்காம போடணும்..

அங்கிங்கு கவனம் போச்சோ..

அம்புட்டுதேன்..

ஆட்டம் close...

Adjust எல்லாம் பண்ண முடியாது..


எத்தனை பாடம் இந்த கோலத்துக்குள்..


Mallika Ponnusamy  mam..போடும் கோலம்.பார்த்து ..

மலைத்துப் போவேன் நான்..


#inspiration அவங்க தான்..


Ration இல்லாம கிடைக்கும் ஒன்று..

நம்மை வளர்க்கும் ஒன்று..இந்த

Inspiration தாங்க..


முயற்சி இருந்தால்..

மாமலையும் ஓர் கடுகாம்..

.

அதுதான்..

குட்டிக் கோலத்தில் ஆரம்பம்..( இந்த தம்மாத்தூண்டு கோலத்துக்கு..

இம்மாம் பெரிய அலப்பறையா?..

உங்க மை.வாய்ஸ் கேட்குதே😃😃😃😃)


அம்மா..சொன்னது நினைவில் வந்தது..

தோசை வார்க்குமுன் குட்டி தோசையில் ஆரம்பிக்கணும்..

சிறுகக் கட்டி பெருக வாழ்..

எப்போதும் சொல்வாள்..


இப்படி தத்துவத்தில் சிக்க வைத்ததே .

இந்த..

Sikku kolam😃😃😃😃


அன்புடன்😃😃


கோலக்கதைத்துவம்

 #கோலக்கதைத்துவம்


இந்த ரங்கோலி மனசில் வந்ததும்..ஒரு குட்டிக் கதையும் எழுதலாமானு தோணித்து..😄😄


Bird 1- அந்த மரம் எத்தனை அழகா இருக்குல்ல..வாயேன் அங்கே போகலாம்.🐦🐦


Bird -2 : no.. no..என் dress எல்லாம் அழுக்காகிடும். அந்த மரம் ஒரே colorful aa இருக்கே🕊️🕊️

Bird -1: அட பைத்தியமே..கலர் போய் ஒட்டுமா..அழகழகா பூவும் பழமும் இருக்கே..போகலாமே..( கெஞ்சலுடன்)


Bird -2: சொன்னால் புரியாதா..இந்த மாதிரி மரத்தில தான்  வேடர்கள் வலை விரிச்சிருப்பாங்களாம்..

நான் வரலைப்பா..👀


Bird-1 : ஐயோ..அப்படியா..ஆனால் எனக்கு ஆசையா இருக்கே..


Bird-2: ஆசைப்படறது சில சமயம் ஆபத்தில் முடியும்னு தெரியும் தானே உனக்கு...வேணும்னா..

அங்கே கீழே விழுந்திருக்கே..அதை எடுத்து சாப்பிடு..🍋🍋🍋


Bird-2: ரிஸ்க் எடுக்காம எப்படி ரஸ்க் சாப்பிடறதாம்..நீ போ.நான் ஜாலியா இந்த மரத்தில் enjoy பண்ணிட்டு வரேன்..😄😄😄


Bird -2 : அடிபட்டால் தான் உனக்கு புத்தி வரும்னு நினைக்கிறேன்..bye..bye.🙏🙏


Bird 1 ..சந்தோஷமா பறந்து அந்த மரத்தில் உட்கார்ந்து தான் நினைச்சதை சாதித்ததா??

இல்ல..bird 2 சொன்னது போல வேடன் கிட்ட மாட்டிண்டதா..


எப்புடி கண்டுபிடிக்கறது..??


நம்ம வாழ்க்கையிலும் இப்படித்தானே..


தூரத்தில் இருந்து பார்த்து judge பண்ணி ..

சிலவற்றை கோட்டை விடறோம்..


கோடு தாண்டலாம் வான்னு போகும்போது ..கோட்டைக்குள் சிக்கிக்கறோம்..


வாழ்க்கையே ஒரு நாடகம்..

அதில் wisdom தான் முக்கிய பாத்திரம்..


சரியா..😄😄😄


Happy birthday Mythili aunty

 Happy birthday Mythili aunty


Mythili aunty..என்

மனம் கவர் aunty.

மனசில் இருப்பதை சொல்வாள்

மனதில் என்றும் நிற்பாள்.


மகளும் பேத்தியும் சகலமுமென்றாலும்

மத்யமரில் மாபெரும் உலகம் கண்டாள்.

மதிப்பிற்குரிய இடம் பிடித்தாள்..

மேடம்..மாமி என உறவானாள்..


Spring..samosa..sunset..savoury..

the S(ess)ence of her life..

 potato and rice..her

forever choice..


 waves of a beach and 

wind of the himalayas

wander she wishes..

with a book in hand..


albums of her grand daughter

all time her pastime..

humor she likes..

honesty she salutes..


plunging into her bookshelf..

passionate about her writing..

Living the present 

Munching the past

Inspiring everyone..


உபாதைகள் பல இருந்தபோதும்..

உறுதி மட்டும் விடாதவள்..

ஊக்குவிப்பாள் தன் பதிவால்..என்

உள்ளத்திற்கு என்றும் அருகிலிருப்பாள்..


முகநூலில் மின்னும் நட்சத்திரம் 🌟

Mythili எனும் நட்சத்திரம்.


வாழ்த்த வயதில்லை..

வணங்குகிறேன் மேம்..


அன்புடன்

Akila


Happy birthday Mythili Varadarajan  mam


நானறிந்த சூப்பர் சீனியர் சிட்டிஸன்களிலே ..இவரைப் போல சூப்பர் பெண்மணியைக் கண்டதில்லை.


எதையுமே ஒரு தராசில் வைத்து 

தரமான கருத்துக்கள் ..

Positive ஊக்கம் தரும் 

அற்புதப் பெண்ணிவர்.


என்னை ' அகிலா எப்போ வர என்னைப் பார்க்க ? ' உரிமையுடன் அன்புடன் கேட்கும் அன்பு வட்டத்தில் முக்கியமானவர்.


பட்டென்று மனதில் இருப்பதை சொல்லக்கூடிய இவரின் straight forwardness எனக்கு மிகவும் பிடிக்கும்.



விரைவில் இந்த வைரஸ் பயம் ஒழிந்து..

வயதானவர்கள் எல்லாரையும் சென்று பார்க்கணும்..


மீட்..ஸ்வீட்டு, ஸ்நாக்ஸ்...


Love you mam.

Happy birthday to you.🎊🎉🎂💐🎁

எனக்கு ரொம்ப பிடிச்ச ஃபோட்டோ இது😄



Saturday, December 24, 2022

முதுமையின் சில அடையாளங்கள்

 முதுமையின் சில அடையாளங்கள் என Mythili Varadarajan mam பதிவுக்கு..என் பதில்..என் அப்பாவின் மன நிலையிலிருந்து..


தூக்க மருந்து  தாலாட்டுமுன்

தூக்கிப் போடுமே இருமல்

என் லொக் லொக்  சத்தம்

கொர் கொர் குறட்டைக்காரரையும்

கூப்பிட்டு எழுப்புமே..

தலைகாணி உயரமாகும்..

தலை விதி நொந்து..

தாரையாய் கண்ணீர் அருவி..

.

கோழிக் கூவும் நேரம்..

கண்ணும் சொக்கும் தூக்கம்..

எட்டு மணி ட்ரெயின் பிடித்து

எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து

ஓட்டமும் நடையுமாக..

ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..

ஓரமாய்..சின்ன நினைவாய்..

 விழிப்பும் ஒரு வழியாய் வர..

வேகத்தில் இயங்கும் வீடு..

பெண்ணும் பேத்தியும்..

பேச்சா..சண்டையா..??

புரியாத புதிராய் நான் முழிக்க..

சூடாக் குடித்த காபி..

சுட சுட செய்தியுடன் பேப்பர்

வெது வெது நீரில் குளியல்..

வேண்டுதல் நாளின் இனிமைக்கு..

பசித்து புசித்த காலம்..

பழங்கதையான ஏக்கம்..

மாத்திரைகள் பாதி உணவாக..

மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..

ஒற்றை வரியில் பேசிய நானோ

ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!

வலிகள் தரும் வேதனை..

விடுதலை வேண்டி ப்ராத்தனை..

கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய

நிகழும் காலம் நீளமாய்த் தெரிய

வரப்போகும் விடியல்..

விரட்டுமென் சோதனையென

விழித்தபடி படுத்திருக்கேன்..

விடிய இன்னும் நேரம் இருக்கே..


I feel women are more positive and energetic to surpass the ageing.

Thanks Mythili Varadarajan mam for kindling my thoughts.

Happy 60 Vaijayanthy Srinivasan MANNI.

 Happy 60  Vaijayanthy Srinivasan MANNI.

You don't look like i swear.


வைஜயந்தி மன்னிக்கு ஒரு வாழ்த்து


மன்னிக்கு ஒரு வாழ்த்து..அன்பு 

மன்னிக்கு  ஒரு வாழ்த்து..

வாழ்வில்  நல்லவை அமைவதற்கு..நான்

சொல்லும் தமிழ் பாட்டு.


நெய்வேலியில் பூத்த தங்கப்பூ..இவளை

நினைத்தாலே மனசில் தித்திப்பு.


ஓடி வந்து உதவுவதைப் பார்க்க..

எனக்குத் தோன்றும் திகைப்பு..


சுரங்கத்திலிருந்து வந்ததனால்..வற்றாது

சுரக்கும் எப்போதும் அன்பு.


நீல நிறம் இவள் பிடிப்பு

பிடிக்காது இவளுக்கு நடிப்பு.


 உறவு என்ற போதிலும்..அதைவிட

வேண்டும் என்றும் இவள் நட்பு.


எல்லைகள் தாண்டியும்

வைத்திப்ருப்பாள் தொடர்பு.


தகவல் களஞ்சியத்தின் கோப்பு

தருவாள் அள்ளி குறிப்பு.


#just_dial_Jayanthi என 

ஜோக்காய் எங்கள் அழைப்பு


உனக்கு..

அறுபது என்றால்..

ஆச்சரியரம் எனக்கு..


போட மாட்டாயே மேக்கப்பு

உன்னோடிருந்தால் கலகலப்பு


என்றும் இளமை காப்பு

அந்த secret எனக்கு செப்பு ..


கொடுங்க எங்களுக்கு டிப்பு

நீங்க எப்பவுமே டாப்பூ..


உனக்கு ஒரு அன்பளிப்பு..இந்தச்

சின்னதா ஒரு கவிதைப்பூ..🎁🎂🌹🌺

3D kolam

 3D kolam


போடேன் ..

Friend சொன்னாள்..


அதுக்கெல்லாம் ஞானம் வேணும்..ஞானம் வேண்டும் டோய் ..கரெக்டா😃😃😃


நமக்கு புடிச்ச.. 3D..


Determination 

Dedication

Devotion....


இதிலேர்ந்து deviation இல்லாமல் dynamic ஆ கொஞ்சம் denomination கூட இருக்க..

வாழ்க்கை சொர்க்கம்தான்..


கரெக்டா😃😃😃😃


அன்புடன்😃😃

Friday, December 23, 2022

எளியமனிதர்கள்

 #எளியமனிதர்கள்


"உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லே யா..அரே ஹோயானு ரஜினி பாட்டு பாடிண்டே பதிவெல்லாம் படிக்கலாம்..ஹே யா..அரே ஹோயா..


சிலிண்டர் சுப்பையா..


(rhyming க்காக இல்லை இந்தப் பெயர்)


'கவலையேப் படாதீங்க ம்மா..காலைல 8.10 க்கு நீ வூடு பூட்டறதுக்கு முன்னால நான் முதோ லோட்ல உங்களுக்கு கொண்டாந்து போட்டு போயிர்ரேன்..

சொன்னபடி .ஏஜன்சியில் லோட் வந்ததும் ஒரு மெரி மிரிச்சு எங்கத் தெருவில வேலைக்கு போகும் அம்மாக்களுக்கு சிிலிண்டர் வந்து இறக்கிட்டுப் போகும் சுப்பையா அண்ணா.

5 ரூவா கொடுத்தாலே ஏதோ லட்சம் கிடைத்த திருப்தி..


சிலிண்டரை செக் பண்ணிட்டு 'அம்மா..அடுப்பு துடைக்க ஞாயிற்றுக்கிழமை வந்துடறேன்.

சுத்தமா கெரசின் போட்டு ஓட்டையெல்லாம் அடைப்பை சரி செஞ்சு பளபளக்க வைப்பார்.


பாவம் ..ஞாயிறு கிடைக்கும் அரை நாள் லீவிலும் இதேப் போல எல்லார் விட்டிலும் வேலை. 

ஒரு நாள் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகோயேன் ப்பானு அப்பா சொல்லும்போது..' இன்னா சார் பண்றது ..ரெண்டு பிள்ளைகளை படிக்க வெக்கணுமே..என்னை மாதிரி அவங்களும் ஆகிடக் கூடாது..அதான் சார்.


மிகக் குறைந்த ஆட்களுடன் இயங்கிய அந்த ஏஜென்சியில் ஒரு நாள் எத்தனை ட்ரிப் அடிப்பார் என்பது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.


சில வருடங்களுக்கு பின்..

டெல்லிலேர்ந்து வந்து சூறாவளிச் சுற்றுப் பயணத்தில்  இருந்தேன். திருச்சியில் இருந்து ட்ரெயினில் வர..அப்பா ஃபோன் செய்தார். ஸ்டேஷனுக்கு சுப்பையா வருவார். நீ அவரோட வீட்டுக்கு வந்துடுனு சொல்லி டொக்குனு ் லைன் கட்.


தாம்பரம் ஸ்டேஷனில் இறங்கியதும் என் கோச் வாசலில் வரவேற்ற சுப்பையா அண்ணா..'அப்பாவுக்கு பாவம் அவசர வேலை..அதான் என்னை அனுப்பிச்சாரு.. நடந்துகொண்டே பேசியவர்..பளபளக்கும் ஆட்டோவை காண்பித்து ..

' குந்தும்மா..நம்ம வண்டிதான்..மூணு சக்கர வண்டி மெரிச்சு முட்டிக்காலெல்லாம் வீங்க ஆரம்பிச்சது..கடனை உடனை வாங்கி இந்த ஆட்டோ வாங்கி ஓட்டறேன். வருமானம் பரவாயில்ல..என் பையனுக்கு மெரிட்ல சீட் கிடைச்சு காரைக்குடில படிக்கிறான்மா..

வாயைப் பிளந்தபடி அவர் கதையை கேட்டு வந்தேன்.


விடிகாலம் வண்டி எடுத்தேன்னா..வூடு போய் சேரும்போது நடுநிசி ஆகிடுதும்மா என்றார். அண்ணா உங்க உடம்பையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க என்றேன்.


அப்பா அம்மாவுக்கு ஆஸ்பிட்டல் போறது, கடைத்தெரு ,பாங்க் எல்லா இடமும் கூட்டிக் கொண்டு போக ஒரு நம்பிக்கையான ஆள். எங்க காலனிக்கேனு சொல்லலாம்.


அடுத்த வருடம் போனபோது..' சின்னதா ஒரு கிரவுண்ட் வாங்கி ஒரு ரூம் கட்டிட்டேன்மா' என்றார். அதுகொஞ்சம் கடன் இருக்கு இப்போ..அடுத்த வருசம் புள்ளைக்கு காம்பஸ்ல வேலை கிடைச்சா கொஞ்சம் காசு சேர்த்து பொண்ணை ஒரு நல்ல எடத்தில புடிச்சி கொடுக்கணும்..


அதெல்லாம் உங்களுக்கு அருமையா கிடைக்கும்ண்ணா என்றேன்.


எப்போதும்போல உலக விஷயம் ஒலிபரப்பும் அம்மா ஒரு நாள் சொன்னாள்.' 'சொல்ல மறந்துட்டேனே்..நம்ம சுப்பையா பையனுக்கு நல்ல வேலை கிடைச்சு இப்போ US போறானாம்.பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டான்.


அவன் கனவும் உழைப்பும் வீண் போகலை..

ஆனா..என்ன ..இன்னும் முடிஞ்ச வரைக்கும் ஆட்டோ ஓட்டி சம்பாரிக்கறேங்கறான்.


அம்மா இறந்தபோது கூடமாட உதவிக்கு வந்த சுப்பையா அண்ணா சொன்னார்..

' வாழ்க்கையில் இப்படி ஒரு நல்ல நிலைக்கு வருவேன்னு நினைச்சு கூட பார்த்ததில்லை கண்ணு..எனக்கு தெரிஞ்சதெல்லாம் உண்மையா இருக்கணும்..ஓடாத் தேஞ்சாலும் உழைக்கணும்.

பக்கத்தில் நின்றிருந்த அவர் மனைவி கண்ணில் ஒரு பெருமிதம்.

Thursday, December 22, 2022

மார்கழி

 ஒரே மரத்தில் பூத்தாலும்.

ஒவ்வொரு பூவுக்கும் ஒரு 

தனி அழகுண்டு..


இறைவன் படைத்த தோட்டத்து

அழகுப் பூக்கள் நாம்..


இந்த வாழ்க்கை வரமே..

வரங்களைக் கொண்டாடுவோம்..

வலிகளை 💪 வலிமைகளாக மாற்றுவோம்..


( எல்லா பூவும் ஒரே அளவில் வராவிட்டாலும்..

அட்வைஸ் வந்துடுத்தே..😃😃😃😃)


நான் escapeuuuuu😃😃😃😃😃😃


அன்புடன்😃😃


ஸில்


கதை_எழுதலாம்_வாங்க_5

 #கதை_எழுதலாம்_வாங்க_5


#முள்வேலி


"ரேணு..ரேணு..இப்ப நான் சொல்றதை கேட்கப் போறியா இல்லையா?"

கோபத்தின் உச்சஸ்தாயியில் கத்தினான் சந்துரு.

"நீங்க கொடுக்கற மருந்தை நான் சாப்பிட மாட்டேன்.. என்னை கொல்லலாம்னு பார்க்கறீங்களா இந்த மருந்தை கொடுத்து..???"வெறி பிடித்துக் கத்தினாள் ரேணு.


"ரேணு..உனக்கு ஏன் புரிய மாட்டேங்கிறது. இந்த மருந்து நீ டயத்துக்கு எடுத்துக்கலை என்றால் உன் உயிருக்கே ஆபத்துனு டாக்டர் சொன்னது உனக்கு ஞாபகமில்லையா?.."

கெஞ்சலும் அதட்டலுமாக அவன் அவளை விடாமல் தொடர்ந்தான்.


டாக்டர் கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார். ஒரு மாதத்திற்கு  இரவில் டிப்ரஷனுக்காக கொடுத்த மாத்திரைகள் ரேணு சாப்பிட்டே ஆகணும் என்று.

இன்று அடம் கொஞ்சம் அதிகமாகவே பிடித்தாள். 


"அவளோட சந்தோஷமா இருந்துட்டு வந்துட்டு எனக்கு மருந்து கொடுத்து கொல்லப் பாக்கறீங்களா?'..அவள் கத்த..கத்த..இழுத்து பிடித்து அவளை உட்கார வைக்க முயல..ரேணு திமிறினாள்..


"மாட்டேன் மாட்டேன்..என்னை விட்டுடுங்க...என்னை விட்டுடுங்க..'

அவள் கத்திக் கொண்டிருந்த  நேரம் ....

ரேணுவின் அலறல் கேட்டு வாசல் கதவின் பக்கம் செருப்புகள் போட இருந்த சிமிண்ட் ஸ்லாபில் ஏறி..ஜன்னல் வழியே பார்த்தாள் பக்கத்து வீட்டுக்கு புதிதாகக் குடி வந்திருந்த சுஜா..

கலங்கிப் போனாள். 

"என்ன நடக்கிறது இங்கே?'

" ஐயோ இப்படி ஒரு முரடனா?'.பயந்து போனவள் வாய் திறக்காமல் வந்து வீட்டின் கதவை தாழிட்டாள். 

"பெண்டாட்டியை இப்படி கொடுமைப் படுத்தறானே?..

போலீஸ்ல சொல்லலாமா?"

 வீட்டுக்கு வந்து கணவனிடம் சொல்ல.." "அவங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ?..நீ எதுக்கு இப்போ தலையை நுழைச்சுக்கிட்டு' வெடுக்கென்று பேசி விட்டுச் சென்றான்.


அடுத்த நாள் காலை..


சந்துரு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். ரேணு ஓடி வந்து..

"இந்தாங்க இன்னிக்கு உங்களுக்கு பிடிச்ச புலவ் ரைஸ் வெச்சிருக்கேன். இன்னிக்கு ஈவினிங் ஷோ புக் பண்ணி இருக்கோம் .ஞாபகம் இருக்குல்ல..சீக்கிரம் வந்துடுங்க'..அவள் பேசுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜா..


 மண்டையே சுற்றியது..

நேத்து ராத்திரி எதுவுமே நடக்காதது போல ..எப்படி இப்படி இருக்கறா இவள்? '..


என்னமோ போ என்று நினைத்தபடி உள்ளே சென்று விட்டாள்.


அன்று மார்க்கெட்டுக்கு போன சுஜா...ரேணுவின் அம்மாவைப் பார்த்தாள்.


நலம் விசாரித்து முடித்த பின்..

" வாம்மா..வீட்டுக்கு வந்து ஒரு காபி குடிச்சுட்டு போயேன்' 

ஒத்துக் கொண்டாள் சுஜா. 


பேச்சு எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்க ..மனசில் அரித்துக் கொண்டிருக்கும் அந்த விஷயத்தை கேட்டு விடலாமா ? தயக்கம் தடை போட்டது..


" உங்க வீட்டுக்காரர் என்ன வேலை பாக்கறாரு? ..என்று ஆரம்பித்த ரேணுவின் அம்மா..' என் மாப்பிள்ளை சொக்கத் தங்கம். என் பொண்ணுக்கு இப்படி ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைப்பாருனு நாங்க கனவில கூட நினைக்கலை..'..


அவள் பேசிக் கொண்டே போக..சுஜாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை..


" இது அவங்க ரெண்டு பேருக்குமே இரண்டாவது கல்யாணம்ம்மா..

ரேணுவுக்கு முதல் கல்யாணம் ரொம்ப விமரிசையாச் செஞ்சோம். யார் கண்ணு பட்டதோ..மாப்பிள்ளை மூணே மாசத்தில் ஒரு கார் ஆக்ஸ்டெண்ட்டில் இறந்துட்டார்.

ரேணுவுக்கு கொஞ்சம் மாறுதல் கிடைக்கட்டுமேனு  அவங்க அத்தை வீட்டுக்கு அனுப்பி வெச்சோம். 

என் நாத்தனார் பையன் தான்  சந்துரு.


"ஏன் மாமா ..ரேணுவுக்கு சம்மதம்னா நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்க தயார்னு அவன் சொன்னபோது எங்களுக்கு கிடைச்ச சந்தோஷம் இருக்கு பாரு....".

ஆனால்..

ஆனால் ..ஆனால்..என்ன? ஆர்வத்தில் சுஜா கேட்க..

" சந்துருவுக்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து ஆனவன். அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒத்தே போகவில்லை. பிரியறது தான் உசிதம்னு டைவோர்ஸ் வாங்கிட்டாங்க..

எங்களுக்குத் தான் பயம்..இது சரிப்படுமானு..


" அதெல்லாம் ஒண்ணும் இல்லை மாமா. எதிர்காலம் தான்  முக்கியம். போனதை நினைப்பதில் என்ன பிரயோசனம்?.. சந்துரு எங்க எல்லாரையும் சம்மதிக்க வைச்சான். 


எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. ரேணு அப்ப மாசமா இருந்தா.. அப்படித் தாங்குவான் சந்துரு. எங்களைக் கூட எதுவும் செய்ய விட மாட்டான்.


ஆனால் எங்க கெட்ட நேரம் ..குழந்தை இறந்தே பொறந்தது. '


அழ ஆரம்பித்தாள் ரேணுவின் அம்மா..

" அப்பலேர்ந்து பிரமை புடிச்ச மாறி ஆகிட்டா ரேணு. போகாத கோயில் இல்ல..பார்க்காத வைத்தியமில்ல.. அவ எப்போ நல்லா இருப்பா..எப்போ கத்துவானு யாருக்குமே புரியலை..ஆனால் சும்மா சொல்லக் கூடாது என் மாப்பிள்ளை.. அவளைக் குழந்தை மாறிப் பாத்துக்கறாரு..நாங்க செஞ்ச புண்ணியம் ம்ம்மா அது..' விக்கி விக்கி அவள் அழுதபடி

" அந்தக் குழந்தை அவ கை விட்டுப் போனதிலேர்ந்து அவ மனசுக்குள் சந்தேகப் பேயும் வந்து உட்கார்ந்துடுச்சு..'..


ஒரு நாள் என் மாப்பிள்ளை ஆபீஸிலேர்ந்து லேட்டா வந்தாலும்..அவனோட முதப் பொண்ட்டாடியோட இருந்துட்டு வரியானு..மல்லுக்கு நிக்கறா..அதுவும் இப்போ கொஞ்ச நாளா ..ரொம்ப அதிகமாக் கத்தி அமர்க்களம். 

எங்க பார்த்தாலும் சந்துருவின் முதல் மனைவி முகம் தான் தெரியுதாம். 


" இங்கேயே தான்ம்மா இருக்கா அவ..எங்களை விட்டு போகலைம்மா..இந்த ரூம்ல என் படுக்கைல இருக்கா ம்மா..இவரு அவளோடயும் குடும்பம் நடத்தறாரும்மா..'இப்படியேத்தான்ம்மா புலம்பல்.


டாக்டர் கொடுக்கற மருந்தை அவளுக்கு கொடுக்கறதுக்குள்ள அவர் படற பாடு இருக்கே..தெய்வம் ஏன் தான் இப்படி எங்களை சோதனை பண்ணுதோ தெரியல..'..தன் மனசின் பெரிய பாரத்தை இறக்கினாள் ரேணுவின் அம்மா.


ச்சே..ஒரு நல்ல மனுஷனை தப்பா நினைச்சிட்டோமே என்று எண்ணியபடி சுஜா கிளம்பினாள்.

மனசெல்லாம் அதே நினைப்பாக இருந்தது.


அன்று இரவும் 

'என் புடவையைக் கட்டிட்டு இருக்கா பாரு உன் முதல் பொண்டாட்டி..எப்படி தலை விரிச்சுப் போட்டு என்னைப் முரைக்கறா பாரு " ..ரேணுவின் அலறல் சத்தம்.


சுஜாவிற்கு பாவமாக இருந்தது. 


அவள் வீட்டிக்கு பக்கத்தில் இருந்த கோவிலுக்குச் சென்று ரேணுவுக்காக வேண்டிக் கொண்டாள். 

அங்கே இருந்த பூசாரிக்கும் ரேணுவைப் பற்றித் தெரியும்.


" சாமி..ரேணுவுக்கு குணமாகற வழி இருந்தால் சொல்லுங்களேன்..அந்தக் குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்கணும்' ..சுஜா கேட்க..

கொஞ்ச நேரம் கண் மூடி தியானத்தில் இருந்தவர்..' நம்மூரு எல்லையில சுடுகாட்டுக்கு பக்கத்திலே ஒரு காளி கோயில் இருக்கு. அங்கே யாரும் போகறதில்ல..ஒரு பூசாரி மட்டும் இருக்காரு. அவருக்கிட்ட சொல்லி ..அந்த உக்கிரக் காளிக்கு ஒரு பூசை பண்ணச் சொல்லுங்க..எல்லாம் அவ பார்த்துப்பா..என்ன முடியுமோ அதை காணிக்கையா அவருகிட்ட கொடுங்க போதும்..'..


பூசாரி சொன்னதை ரேணுவின் அம்மாவிடம் ஃபோன் செய்து சொன்னாள்..


ஆபீஸில் சந்துருவின் லஞ்ச் டைம்.

ஃபோன் அடிக்க..மறுமுனையில் ரேணுவின் அம்மா.

மாப்பிள்ளை.. இதை மட்டும் செஞ்சு பார்க்கலாமா? ..தயங்கித் தயங்கி சுஜா சொன்னதைச் சொன்னாள்.


" அவ்வளவுதானே..செய்யறேன்ம்மா'..

மறுபேச்சு பேசவில்லை..


ஞாயிற்றுக்கிழமை மாலை.

" கிளம்பு ரேணு..கார்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வரலாம்..அப்படியே ரெஸ்டாரெண்டல் டின்னர் முடிச்சுடலாம்'..

கண் சிமிட்டினான்..

குழந்தை இறந்து மூன்று மாதமாகி..இன்றுதான் ரேணு அவனுடன் வெளியே வரச் சம்மதித்து இருக்கிறாள்.


ஒரு லாங் ட்ரைவ் போகலாம்..


' ஒரு நாள் உன்னோடு ஒருநாள்'..ஜானகியின் குரல் எஃப்.எம்மில் ஒலிக்க..

" என்ன ..சார் இன்னிக்கு செம்ம மூட்ல இருக்கப்போல இருக்கு'..

ரேணு கேட்க..

தலையாட்டிக் கொண்டே வண்டியை ஓட்டியவன்..ஊர் எல்லையில் இருந்த அந்த சுடுகாட்டின் பக்கத்தில் காரை நிறுத்தினான்.

" ஒரு நிமிஷம் உள்ளே உட்கார்ந்திரு..இதோ வந்திடறேன்'...

இறங்கி...அங்கிருந்த காளி கோயில் நோக்கி நடக்க..

ஓடி வந்தார் பூசாரி..

" இந்தக் கோயிலிலுக்கு இனிமேல் மாசா மாசம் விளக்கேற்ற எண்ணெய்க்கு ஆகும் செலவை நான் ஏத்துக்கறேன்..இந்தாங்க ..இரண்டு மாசத்துக்குரிய பணம் இதில் இருக்கு..'..

அவன் அவர் கையில் பணத்தைக் கொடுக்க..

" எங்கடி இங்கே வந்தே..என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா நீ'??.

காரின் கதவைத் திறந்து கொண்டு..

வானத்தைப் பார்த்தபடி..

' பாருங்க..நான் சொன்னா நம்ப மாட்டேங்கறீங்களே..அதோ .தலை விரி கோலமாய்..கண்ல வெறியோடு..உங்களை என்கிட்டேர்ந்து பிரிக்க வரா பாருங்க'..அடங்காமல் ஓட ஆரம்பித்தாள்.

ஒருவழியாக அவளைச் சமாதானப்படுத்தி காரில் அமர்த்தி..ஆசுவாசப்படுத்தியவன்..

ஏதோ தோன்றியது போல காரை வேகமாகச் செலுத்தினான்.

' நிதானத்துக்கு வந்தவள்..' நான் ஏன் இப்படி இருக்கேன்னு..என்னை மன்னிச்சுடுங்க' ..அவள் பேசியது எதுவுமே காதில் விழவில்லை அவனுக்கு..


கார் ..கிரீச் என்ற சத்தமிட்டு ஒரு வீட்டின் முன் நின்றது.

காரை விட்டு இறங்கியவன்..

வெளியே வா..ரேணு என்றான்..

ஒன்றும் புரியாமல் திருதிருனு அவள் முழித்த வேளை..


"வாங்க சந்துரு..வாங்க..எப்படி இருக்கீங்க? இது தான் உங்க வைஃபா..? 

வாட் எ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ் ..!! 

வேறு யாருமல்ல..சந்துருவின் முதல் மனைவி ரம்யா..

இவளை ஃபோட்டோவில் மட்டுமே பார்த்திருக்கிறாள் ரேணு. 


"ஏங்க ..யாரு வந்திருக்காங்கனு பாருங்க..'

என்று கூப்பிட...

வெளியே வந்தான் மிடுக்கான அவள் கணவன்.

 "ஐ ஆம் குமரன்' ..அறிமுகப்படுத்திக் கொண்டவன்..

மிக ஜாலியாகப் பேச ஆரம்பித்தான்.


"இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க..இங்கேயே நாம எல்லாரும்.ஒண்ணா சாப்பிடலாமே..அரை மணியில் ரெடி செய்யறேன் ' கிச்சனுக்குள் நுழைந்த ரம்யாவின் பின்னால் .." நானும் உதவறேன் வாங்க' சகஜமாக உள்ளே நுழைந்தாள் ரேணு.


பேச்சும் அரட்டையும் முடிந்து பை சொல்லி விட்டு கிளம்பும்போது..

' சில விஷயங்கள் நம் கை விட்டுப் போறதும் நல்லதுக்குத்தான். அது ஒரு புது ஆரம்பத்துக்கும் வழி காட்டலாம். பிடிக்கலை..ஒத்துப் போகலைனு பிரிஞ்சோம். ..ஆனா..நாம நல்ல நண்பர்களாக இருக்கலாம் இல்ல?'..

ரம்யா சொன்னபோது....


தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்டிருந்த ஒரு முள்வேலியிருந்து வெளியே வந்து..

தன் கணவன் சந்துருவைக் காதலுடன் பார்த்தாள் ரேணு..


'இனி எலாம் சுகமே'..எஃப் எம்மில் ராஜாவின் பாட்டு ..


அடுத்த நாள் முதல்..அந்த வீட்டிலிருந்து எந்த சத்தமும் இல்லை..


" நாம சொன்னது..இவங்களுக்கு நல்லதாப் போச்சு என்று சுஜா நினைக்க..


சந்துரு....தன் ஐடியா ஜெயித்தது என்று நினைக்க..


என்னவாக இருந்தால் என்ன...?

அவர்கள் வாழ்வில் இனி ஆனந்த ராகம் தான்.


Monday, December 19, 2022

Happy birthday Radha Sriram ஐம்பது காணும் ..

 Happy birthday Radha Sriram 

ஐம்பது காணும் ..

அன்பு ராதாவுக்கு..

அள்ளி அள்ளி வழங்குவோம்..

அன்பு வாழ்த்துக்கள்.💐💐💐💐💐


தத்துவம் சொல்லுவாள்..

தெறிக்கும் அரசியல் பேசுவாள்..

தைரிய லக்ஷ்மி இவள்..

தட்டிக்கேட்பாள் ..தவறுகளை..


பதிவுகள்..

சில

பட்டாசாய் ..சில

பாசமாய்..சில

பண்டங்களாய்..சில

பரபரப்பாய்..சில

படிப்போருக்கு..m

புரியாதததாய்

( just kidding radha)..😄😄😄


உள்ளத்தில் இருப்பதை வடிகட்டாமல் சொல்லும்...

உண்மை நட்புக்கு இலக்கணம்.

 குஜராத்தின் கர்ஜிக்கும் குரல்..

 கொண்டாடும் பிறந்தநாள் ..🎁🎂🎉🎉🎉🎊🌟

 இன்பங்கள் சேர்க்கட்டும்..

 இனிமையால் நிரம்பட்டும்..

 வாழ்த்திடுவோம் நாமே..

 வாழிய பல்லாண்டு என்று..⭐⭐💐💐💐

Thursday, December 15, 2022

என்னை மறந்ததேன்...???

 என்னை மறந்ததேன்...??? 


நன்னா தேடு...அந்த புஸ்தக மூட்டைக்குள்ளே இருக்கா பாருடா..அதுலதான் இருக்கு அந்த  பழைய டைரி கடுப்பில ஏணியில் ஊஞ்சல் ஆடிண்டு இருந்த பையன்...அதே எல்லாம் எப்பவோ எடைக்கு போட்டு அம்மா mug வாங்கிட்டாப்பா..இப்போ எதுக்கு என்னை ஏத்தி வைச்சு உயிர வாங்கற...ஏணியில் இருந்து குதித்து மகன் ஓட..டேய்..அவசரமா ஒரு நம்பர் வேணும்டா....அங்கு வந்த தர்மபத்தினி.. க்கும்..செல்லுல எல்லாம் இருக்கும்போது..எதுக்கு இந்த லொள்ளு உங்களுக்குனு வசைபாட..ஐயோ..செத்துப் போன செல்லே..உயிர் உடனே வந்த Bsnl வழியா பேசக்கூட..இப்போ நீ வேண்டியிருக்கே....


காசு இல்லாம இருக்கலாம்..ஆனா..கைப்பேசி இல்லனா  ..technology க்கு salute செய்தாலும்..ரொம்ப அடிமையாகிட்டோமோ...எண்ணம் அப்பப்போ வரும்.

ஒரு flash back..

ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஆளைப் பிடிச்சு Bsnl connection வாங்கி..அதுக்கு ஒரு opening and closing password போட்டு பூட்டிப் பூட்டி..பில்லுக்கு பயந்து பேசிய காலம்..

எல்லாரோட டெலிஃபோன் நம்பரும் alphabetical order ல அழகா..அட்ரஸும் சேர்த்து எழுதி இருக்கும்.. புது வருஷ டைரி வந்ததும் அச்சு பிசகாம அதை copy வேற பண்ணி, பழைய டைரியயும் தூக்கிப் போடாம reference வெச்சுண்டு வாழ்ந்த நாட்கள்..

எல்லா நம்பர்களும் மனப்பாடம்..இப்போ மாதிரி வீட்டு நம்பரே செல் பார்த்து சொன்னதில்ல..

என் அம்மாவுக்கு ஆசையா வாங்கி கொடுத்தேன் ஒரு Nokia..அதை நோக்கியதே இல்லை அவள்..

அம்மா..இந்த landline phobia வை விடேன் என்றால்..இது தான் செளகரியம்...cost effective என்பாள்.அம்மா grow up என்பேன்..நான் தான் வளரல

எத்தனை digit ஆ இருந்தாலும் மூச்சு விடாம சொன்ன அம்மா எங்கே.. அந்த நம்பர் 23 ல முடியுமோ..இல்ல இல்ல..94 னு ஆரம்பிக்கும்....சட்டுனு ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிறது..அந்த செல்லைக் கொண்டா..சொல்லிடறேன்.. அந்த செல்லில் உள்ள contact list ஐ google ல வேற save பண்ணி இருக்கேன்..என்ன ப்ரயோசனம்..

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்...


மின்சாரம் இல்லாத போதும்..முழுமுச்சில் வேலை செய்யும் மூளையே..இன்னும் உன்னைக் கொஞ்சம் உபயோகிச்சு இருக்கலாமோனு தோணறது..


பழையன் கழிதலும்..புதியன புகுதலும் ஆனாலும்..இன்னும் என் அம்மா வீட்டில் அந்த ஃபோன் stand அதில் இருக்கும் telephone directory ம் அவள் கையெழுத்தில் எழுதப்பட்ட systematic telephone டைரியும்..nostalgic தான்.

Table manners ..

 Table manners ..

திருதிருனு ..நான் முழிக்கையில்..


Tension விடு..

சிதறிச் செல்..

சில வெண்மணிகளை..


சேதி சொல்ல வந்ததோ..?


பக்கத்து டேபிளில்...

பந்தி முடிந்ததைக் கண்டு

பறந்து வந்த..

.சிட்டுக்குருவி..


Monday, December 12, 2022

use and throw...

 use and throw...

நேற்று போல் இன்று இல்லை..இன்று போல் நாளை இல்லை..

தாத்தா கொடுத்த இங்க் பேனா..ஒவ்வொரு பரீட்சையின் போதும் பெட்டியிலிருந்து எடுத்து அழகா அலம்பி துடைத்து நிப் போட்டு..உபயோகப்படுத்தி இருக்கோம்.


வருஷ ஆரம்பத்தில் வாங்கிய ஜியாமெட்ரி பாக்ஸ் ..கூர் சீவி கடைசி வரை உபயோகித்த பென்சில்..அழித்து எழுத சொல்லிக் கொடுக்காததால் வேலையே இல்லாமல் வெள்ளையாய் தேயாமல் இருந்த ரப்பர்..கஷ்டப்பட்டு காசு சேர்த்து வாங்கிய பீரோ, மிக்ஸி, க்ரைண்டர் இத்யாதி.


இதுக்கு எப்போ விடுதலை கொடுக்கப் போகிறாய்னு என் பழைய மிக்ஸியை பார்த்து கேட்போர் ஏராளம். ஒன்று..அதிலுள்ள sentimental attachment..இன்னொன்று..இதைப் போல sturdy இப்போது கிடைப்பதில்லை..அப்படியே ரிப்பேர் ஆனாலும் ..எப்படியோ தேடிப் பிடித்து அதை ஓட்ட வைப்பதில் ஒரு சந்தோஷம்..

ஆனால்..இந்த சந்தோஷம் வடிந்து ஓடும்..

எப்போது என்று கேட்கிறீர்களா..?

 

எப்போது இந்த use and throw concept க்கு வந்தோமோ அப்போது..

உதாரணத்திற்கு..மார்க்கெட்டில் இருக்கும்  மொபைல் பற்றி வலையிலும் கடையிலும் விலைப் பட்டியல், quality, efficiency, reviews எல்லாம் படித்து நம் பட்ஜெட்டிற்கு ஒத்து வரும் அல்லது emi ல் கட்டும் வலையில் விழுறோம்.

வாங்கி ஒரு வருடம் ஒன்றரை வருடம்..பாட்டரி சார்ஜ் கம்மியாகும்..அடிக்கடி hang ஆகும். இன்ன பிற சிக்க்ல்கள். கடைக்கு ரிப்பேர் செய்ய எடுத்துப் போனால் இதுக்கு பார்ட்ஸ் இப்போ வரதில்லை என்று ஒரு பதில். கூடவே ..இன்னொரு best model வந்திருக்கு..இந்த பழசை வெச்சுட்டு எதுக்கு அல்லாடறீங்கனு .கடைக்காரர் புதுசை ் அணி வகுக்க.. பழசு மனதிலிருந்து பின்னோக்கி போகும்..நமக்கு புது செலவு..

இந்த நிலமை ..எல்லாப் பொருள்களிலும் இப்போது..

ரிப்பேர் செய்தால் சில நூறு ஆகும் விஷயம்.அவர்கள் காண்பிக்கும் exchange offer என்னும் carrot க்கு காலில் விழுகிறோம். காசைக் கரியாக்குறோம்.

இந்த வலையில் விழாமல் உங்கள் பொருள்களை பாதுகாக்கிறீர்கள் என்றால்..கண்டிப்பாக ஒரு கைத்தட்டல் உங்களுக்கு..


USE ..after that throw ..ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்..சில சமயம் ..இது இல்லாமல் இருக்கவே முடியாது என்று வாங்கும் பொருட்கள் ..

உபயோகித்து அனுபவிக்காமலே வீசி எறியப்படுவதும் நடப்பதனால்.

change and exchange are inevitable for life ..என்று முடிக்காமல் எந்த conversation ம் இப்போது இல்லை.

காலம் நம்மை இழுத்துப் போனாலும் ..நமக்கு  கிடைத்த சில முதல் பொருள்கள்..முதல் முதலாய் முதலிட்டு வாங்கிய பொருள்கள் ..வீட்டின் மூலையில் இல்லாவிட்டாலும்..மனதின் மூலையில் இருக்கும் என்றும்

தப்புக்கணக்கு

 #Sunday_topic

#தப்புக்கணக்கு..


அதை ஏன் கேக்கறீங்க..என் சோகக் கதையை..😭😭😭


3 idiots ல வரும் அப்பா அம்மா மாதிரி..என் பிஞ்சு முகத்தை பார்த்ததுமே..பெரிய பாடகியா வருவானு அப்பா போட்ட தப்புக் கணக்கு..இவ பெரிய ஆபிஸரா வருவானு அம்மா போட்ட தப்புக் கணக்கு...😀😀


என்ன செய்யறது..அவங்க ரெண்டு பேரும் கணக்கர்களாக பணியாற்றியும் எனக்குனு போட்ட கணக்கு..ரொம்ப தப்பா போச்சு..


சரி..சரி..அடுத்த லிஸ்ட்டுக்கு போவோம்..


அடடே..இந்தக் க்யூவில ஆளு கம்மியா இருக்கேனு போய் நின்னா..நம்ம கணக்கு தப்பாகி..

பக்கத்து லைன் வேகமா நகரும் போது..மனசு நொறுங்கும் பாருங்க..😄😄


எப்பவும் ஏறு முகம் தான் இந்த ஷேர்னு வாங்க..ஸ்டாக் மார்க்கெட்டே சரியும் பாருங்க..

நம்ம கணக்கு..தப்பு கணக்குனு..

கொட்டும் மழைக் காலம்..உப்பு விற்க போனேன்னு..BGM ஓடும்🤦🤦


பக்கத்து வீட்ல நல்லா உழைக்குதுனு சொன்ன பொருளை ..நமக்கும் அப்படியே நிறைய நாள் உழைக்கும்கற தப்பு கணக்கு  இருக்கே....

பக்கத்து வீட்டு பெருமையை பார்க்கும்போது பெருமூச்சு வரும்..🤦🤦


அட..இதென்ன பெரிய விஷயம்..

Mallika Ponnusamy  தான் கோலம் போடுவாங்களா நானும் போடுவேனேனு ஆரம்பிக்க..

முதல் சிக்குல ஆரம்பிச்ச சிக்கல்..நம்ம கணக்கு தப்பு..கோலத்தில் மட்டுமல்லனு..மண்டைல அடிக்கும்..


"நீ என்ன என்னை கேள்வி கேட்கறது?..நானே எல்லாத்தையும் உளறிக் கொட்டிடறேன்னு".

 அப்பாவியா.. எல்லா உண்மையும் சொல்ல..இதெல்லாம் எனக்கெதுக்கு சொல்றனு..எதிராளி பார்க்கற பார்வை இருக்கே..நம்ம கணக்கு ரொம்ப தப்புனு ..தப் தப்னு கன்னத்தில போட்டு....


எப்படியும் கோயிலுக்கு போனால் ப்ரசாதம் கிடைக்கும்னு ,ஜொள்ளு விட்டுக் கொண்டு போக..அங்கே வெறும் திராட்சைப் பழம் கொடுக்கும்போது." தப்பிப் போச்சே கணக்குனு...துக்கமா போகும்..🤤🤤🤤🤤


இதோ பக்கத்து தெருவுல இருக்கற கடைக்கு போய்ட்டு பத்தே நிமிஷத்தில் வந்துடுடலாம்னு தப்பு கணக்கு போட்டு..பெங்களூர் டிராஃபிக்கில் முழி பிதுங்கி..இப்போ ரொம்ப தெளிவு..🤣🤣🤣


"நீதான் accounts person ஆச்சே..உனக்கு தெரியாத பட்ஜெட்டா?..வீட்டுக்காரர் பாவம்..ஜெட் வேகத்தில் டப்பு செலவழியும்போது...கேட்க

 "ஐயா..என்னப் பத்தி தப்பு கணக்கு போட்டீரே..நானே எதோ க்ளாஸ் எல்லாம் கட் பண்ணினாலும்.."ஆத்தா நான் பாஸாயிட்டேன் " லெவல் தான்னு.....🥁🥁🥁🥁


அதெல்லாம் விட ..தினமும் போடும் தப்பு கணக்கு..திருந்தவே முடியாத ஒண்ணு இருக்கு.


என்ன ..தெரியுமா?


சமைக்கற பாத்திரம்..அதுலேர்ந்து டேபிளுக்கு கொண்டு வைக்க பாத்திரம்.மாற்றல்..

கடைசி..கடைசியா ..ஃப்ரிட்ஜுக்குள் தள்ள எடுக்கும் பாத்திரம்..

என் தப்புக்கணக்கின் height சொல்லும். ஒண்ணா ரொம்பி வழியும்.. இல்லனா..ரொம்ப பெரிசா இருக்கும்..😄😄😄🤦


நாம இந்த வேலையை செய்யாட்டி ..வீடே நின்னுடும்..🌏 உலகமே ஸ்தம்பிக்கும்னு தப்பு கணக்கு மட்டுமே போடவே கூடாது என்று நான் கற்றேன்.

For example..நமக்கு ஒரு போஸ்ட் எழுத ஐடியா வரும்..எதோ வேலையில் இருப்போம்..இப்போ நான் இதைச் செய்யலைனா என்ன நடக்கும்னு த.கணக்கு போட்டு...

அப்புறமென்ன..நாம ஆடிப் பாடி எழுத உட்காரும்போது..காத்து தான் வருதுனு ...அடுத்த ஐடியாவுக்கு காத்து இருக்கணும்..😄😄😄


இதெல்லாம் சகஜமப்பானு மனசு சொன்னாலும்..ஒரே ஒரு ஆறாத தப்புக்கணக்கு ஒண்ணு..இன்னும் உறுத்தல் தான்.

எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு பெங்களூர் கூட்டி வந்துவிட்டேன். 

குழந்தை மாதிரி சென்னைக்கு போகணும் ..சென்னைக்கு போகணும்னு சொல்வா.

இரும்மா..இவ quarterly exam முடியட்டும் ..ஒரு வாரம் போய் உன் வீட்ல இருனு சொன்னேன்..

ஆனா..நான் போட்ட கணக்கு ..கடவுளுக்கே பொறுக்கலை..அம்மாவை உயிரோடு அங்கே கூட்டிப் போகமுடியலை. 😭😭


எல்லா கணக்கும் கரெக்ட்டாவே போட்டால்..ஒரு த்ரில் இருக்குமா வாழ்க்கையில்?


தப்பா கணக்கு போடும்போது தான் ..மண்டை குடையும்..எந்த ஸ்டெப்பில் தப்பு நடந்ததுனு analyse செய்ய வைக்கும்..

அடி எங்க பலமா விழும்னு நம்மள உஷாராக்கும்..


ஆதலால்..

தப்பு கணக்கு ..நல்லதே..💪💪💪💪

Wednesday, November 30, 2022

MTR idli mix கொழுக்கட்டை

 #appraisal_அலைப்பறைஸ்


போன வாரம் என்னவெல்லாம் செய்தேன் என்று....ப்ராஜக்ட் அப்ரைஸல் பிராண நாதர் செய்ய ஆரம்பிச்சார்..


அந்த ப்ரெட் ஹல்வால..இன்னும் ஒரு ஸ்பூன் ..நெய் சேர்த்து இருந்தால்..heaven ஆ இருந்திருக்கும்..


சொர்க்கமே என்றாலும்..ப்ரெட் அல்வாவைப் போலாகுமானு ' பாடி நான் குடுக்க வேண்டிய மார்க்கு..narrowly miss பண்ணிட்டம்மா..


இன்னொன்னு என்னமோ பண்ணினியே..அந்த ..#🍅#பஜ்ஜிசாட்...


"சாட்டிலே இருப்பதென்ன கன்னி இளமானே..தக்காளியோ..உருளையோ.கன்னி இளமானேனு'..என்னையே குழம்ப வெச்சதால்

"பஜ்ஜிக்கு நான் அடிமைனு' பாட வேண்டிய  நான்.. ..' ஒண்ணுமே புரியல ..பஜ்ஜிக்குள்ளனு'  என்னை புலம வெச்சதால்

but you missed the chance of getting full marks..


#பொள்ளவடை..ஆஹ்ஹா..மொறு மொறுனு..ஆனா..பாரு..அதுக்கு பேரு அரிசி வடை....பேரை மாத்தி plagiarism செஞ்சு ..( மாமி..பழி வாங்கிட்டேளேனு ..என்.மை.வா)..

அதுக்கு நான் உன் சமையலையே ஸஸ்பெண்ட்.செய்யணும்.

ஆனா..ஹஸ்பெண்ட் ஆச்சே..அதனால..

( ஐயா..அடுத்த வேளை சோறு கிடைக்கணுமேனு..😭 பயம்..இருக்கட்டும் ..என் மை .வா)


கடைசியா..அந்த #கடலை....out of the world..

ஆமா..அதுல போட்ட காரத்துக்கு..நாம எல்லாரும் out of the world தான்..

So அங்கே கொஞ்சம் மார்க்கு கம்மி..🤔


So ,...அப்பாவையும் discuss பண்ணி..


சாயந்தரம் என்ன டிஃபன் வேணும்னு சொல்றேன்னு....( ஆஹா..கொரோனா க்கு அப்புறம்..நம்ம crown ஐ..காக்கா தூக்கிண்டு போய்டும் போல இருக்கே..தேவுடா..)


பேசிக் கொண்டே ..தன்னோட மூக்குக் கண்ணாடியைத் துடைக்க..


"மாப்பிள்ளை.. கொடுங்கோ..அதை நன்னா..#பவுடர் போட்டு துடைச்சு தரேன்னு."பாசமழை..ஒரே..

(ஆனாலும் இவங்க ரெண்டு பேரும் இருக்காங்களே)


இந்தப் பவுடர் இருக்கே..பவுடர்..

எங்கப்பா..அழ அழ..அதை யூஸ் பண்ணுவார்.


கர்ச்சிப்பில் பௌடரைப் போட்டு அலாக்கா அதை fold பண்ணி..சட்டை collar அழுக்காகாமல் போட்டுப்பார்


மழைக்காலம்.முடிஞ்சதும்..குடைக்குள் தூவி வைப்பார்.அடுத்த வருஷம் ' "மழைக்கால மேகமொன்று' வரும்போது..முதல்ல குடையை மழையில குளிப்பாட்டணும்..


Rain coat ம் அப்படித்தான்.. Powder coat க்கு மாறி powerless ஆ pouring எப்போது ஆரம்பிக்கும்னு பீரோல தாச்சி தூங்கும்..


கீ போர்ட் வாசிக்க ..தொட்டுக்க contact lens  டப்பால..cuticura powder இருக்கும்..


பவுடர் பத்தி யோசிக்க..பளிச்சுனு ஒரு பல்பு..


ஆஹா..சாயந்திரம் என்ன டிஃபன்னு எனக்கு ஐடியா வந்தாச்சுனு நான் குதிக்க..


ஐயோ..பாண்ட்ஸ், சாண்டல்..இப்படி எதையாவது போட்டு 

" என்ன செய்யப் போகிறாய்னு' வூட்டுக்காரர் பாவமா பார்க்க..


" ஒரே ஒரு  பவுடர்....ஓராயிரம் வேலை பண்றது தானே'....அப்ப்போ..இந்தப் பவுடரும்..


நான் காண்பிச்ச பவுடரைப் பார்த்ததும் தான் அவருக்கு போன உயிர் வந்தது..


'MTR rava idli ' mix..


என் வழி தனி வழி..நகருங்கோ..

கிச்சனில் நுழைந்தேன்..


கொதிக்க வைத்தேன்..2 டம்ளர் தண்ணி..

கலந்தேன்..1 டம்ளர் மிக்ஸ்.

கிளறினேன்..கொஞ்சம் உப்பும் மிளகும் சேர்த்து..

தூவினேன்..தேங்காயும் கருவேப்பிலையும்..

பிடித்தேன் கொழுக்கட்டை.

வைத்தேன் ஆவியில்....

பரிமாறினேன்..instant கடலை மாவு மோர்க்குழம்புடன்..

#ரவா_இட்லிமிக்ஸ்_கொழுக்கட்டை


" மாத்தி யோசி boss'..

மாத்தி யோசி..


அடுத்த முறை..இதை ஒரு bread crumbs coating கொடுத்து fry பண்ணிஅசத்தலாம்..

Fried கொழக்கட்டையை..உதிர்த்து..உ.கி

சேர்த்து..ஊ..ல..லானு..chat செஞ்சுடலாம்..


கடைசில..மார்க்கு...?

உனக்கு  appraisal  பண்ணினா..இப்படி

Surprise எல்லாம் கிடைக்குமா ?

  So..மீண்டும்..அடுத்த டிஷ்லேர்ந்து அப்ரைஸல் ஆரம்பிக்கலாம்னு அவர் சொல்ல.


  ' திருப்பியும் முதல்லேர்ந்தா..சாமி..நான் ஜீட்'.


( பாவம்..என் வூட்டுக்காரர்..நான் எது செஞ்சாலும் "அமைஞ்சுடுத்தும்மானு'/சாப்பிட்டுடுவார்..சாரி..முழுங்கிடுவார்)


Tuesday, November 29, 2022

அம்மாவின்_கிச்சன்

 சாப்பிடலாம் வாங்க அடை மாவு குணுக்கு


#அம்மாவின்_கிச்சன்..


#நான்_செய்த_குணுக்கு..

#உண்டாச்சு_வியப்பு..😁😁


அது என்னமோ தெரில..

அம்மா கிச்சன் ல நுழைஞ்சதும் ..என் சமையல் கூட சூப்பர் டேஸ்ட்டா இருக்கற மாதிரி இருக்கு..


"எப்ப்பாரு என்ன கிச்சனல வேலைனு" அவளிடம் சிடுசிடுத்த நாட்களுண்டு..


யாருக்கோ சொல்ற மாதிரி..கருமமே கண்ணாயினாராய் இருப்பாள் ... அம்மா..


இன்னிக்கு கூட..

அடைக்கு அரைத்ததில்..

ஒரு ரெண்டு எண்ணெயில் போட்டு பொரித்தேன்.


ஆஹா..கரகர மொறுமொறுனு..

"அம்மா நீ பண்ற மாதிரியே இருக்கு.".

பேசினேன் அவள் படத்துடன்..

ஏனோ ..அணை போட முடியவில்லை..அழுகைக்கு..


#Amma_is_there


very_easy_vadai

 #வாங்க_சாப்பிடலாம்

#very_easy_vadai


உளுந்து ஊற வைக்கணுமா?

No..

அரைச்சு எடுக்கும் வேலை இருக்கா?

No.

தண்ணி ஜாஸ்தியா..கம்மியா? டென்ஷனா?

No..No..

அப்போ என்னதான் செய்யணும்?

சொல்றேன் சொல்றேன்.


நம்ம கிச்சன்ல , ஃப்ரிட்ஜில இருக்கிற ஐட்டம்ஸ் எல்லாம் எடுங்க..

கலக்குங்க..

காட்டுங்க உங்க creativity😋


For 15 vada

Soft dosai  -2 ( fresh ஆ ரெண்டு பண்ணுங்க)

Bread -2

புளிக்காத தயிர் ஒரு 2கரண்டி

தோசையும் ப்ரெட்டும் தயிரில் ஊறவைக்கவும்.( thanks Raghupathy N sir for the idea 🙏)

உளுத்தம் மாவு - ஒரு கரண்டி

அரிசி மாவு - 1 ஸ்பூன்

உருளை ஒன்று சின்னதா வேகவைத்தது

(Optional)

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

தேங்காய்ப் பல்

மிளகு

கொத்த்மல்லி

தேவையான உப்பு.

எலாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யுங்க.


( உளுத்தம் மாவு last ஆ சேர்க்கணும்.)

எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுங்க..

Crispy tasty vada ready😀


இதை உதிர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்ட 

#வடை_உப்புமா ரெடி Bala Hari


உளுந்துக்கும் உண்டே ..உள்ளம்.

 உளுந்துக்கும் உண்டே ..உள்ளம்.


.


"ஊறத் தெரிஞ்சிகிட்டேன்..

உருவம் பல எடுப்பேன் ..

கண்மணி ..என் கண்மணி..😄😄😄


எங்க வீட்டு உளுந்தெல்லாம்..

எசப்பாட்டு பாடும் பார்...🎵🎵🎵🎵


பந்து போல வரணும்..

பந்தியிலே செல்லுபடியாக..வடையும்..


பஞ்சு போல இட்லிக்கு..

பக்குவமா அரைக்கோணும்..


பூரண உசிலிக்கோ..

பொர பொரனு இருக்கணும்..


பார்த்து செய்யும்மா...

பிள்ளையாரு வருவாரு..

அள்ளிக் கொடுப்பாரு...

வெள்ளமாய் வரங்களையும்..


விநாயகனை வரவேற்போம்..

விக்னமெல்லாம் நீங்க..

வேண்டுவோம்..🙏🙏🙏🙏


அது சரி..

உங்க வீட்டுக் கவியும் ..கொட்டட்டுமிங்கே

ரவா தோசை

 #MM_DINNER


Tippu ஒண்ணு வெச்சுருக்கேன்..

ரவா தோசைக்கு..

டிப்பு ஒண்ணு வெச்சுருக்கேன்..


கரைச்ச மாவை கரண்டியால் தோசைக்கல்லில் விடாமல்..

கையில்  எடுத்து மாவை தெளிக்க..


ஓட்டை ஓட்டை ரவா தோசை..

ஹோட்டல் தோசை மாதிரி இருக்குமே..


ஜோடிக் கிளியாக காரச் சட்னி இருக்க..

ஜோராய் இருக்குமே..ரொம்ப..

ஜோராய் இருக்குமே


Bake..ஓ....beku..

 Bake..ஓ....beku..


அம்மா..can we bake something today?..

கேட்டுக் கொண்டேன் கிச்சனுக்குள் பெண் நுழைய..

டேய்....நானே ஒரு பேக்கு....

So..நீயே..பேக்கு..

நான் ..only ' நோக்கு:.. என்று நகர..


அம்மா..சொல்லாதே..சாக்கு

போதும் உன் 'talku'

காட்டாதே போக்கு..

 உன் கைப்பட்டால் ஆகும் ஷோக்கு...

 You always 'rocku'நு ..என்னை கொக்கிபோட..

 

Let's start #mug_cake நு அவள் சொல்ல.


டேய்..டேய்..அப்போ பேக்குனு சொன்ன..இப்போ மக்குனு சொல்ற..


"அம்மா..makku இல்ல..mug .."


சரி..சரி...

வேணும் உன்னோட ஹெல்ப்பு..இல்லாட்டா

வாங்கட்டுமா...பக்கத்து விட்டு anuty's  dishhunu..

குண்டைப் போட..


ஐயோ..சாமி..நாமளே பண்ணலாம்..

போன வாரம் ..பொல்லாத 6 கப் கேக்குக்கு 300 ரூவா வாங்கிட்டாளேனு நான் புலம்பினதை..எடுத்து விட்டாள் ஒரு ட்ரம்ப் கார்டு..


இப்போ நீயே செய்யறயா..நான் செய்யட்டுமானு கேட்டாள்..


நான் ரொம்ப புத்திசாலி மாதிரி ..நீயே செய்னு நழுவ..


ஹலோ..இரும்மா..: "தள்ளிப் போகாதே எனையும்னு' sid  குரலில்..


இப்போ..we are going to make 

#Banana_mug_cake..


#2வாழைப்பழம் இருக்கா.. அந்த fork ஆல மசிச்சுடும்மானு சொன்னதும்..

மகுடிக்கு அடங்கின பாம்பா..நான் சிரத்தையா செஞ்சுட்டு நகரப் பார்க்க..

இரு..இரு..

Yellow color microwave cup எங்கே..

Wash பண்ணித்தாம்மானு அவள் கேட்க..

Wash பண்ணிட்டு விடலாம் ஜீட்டுனு நினைச்ச என் நினைப்புக்கு வெச்சாள் வேட்டு.

#மைதா_3_டேபிள்ஸ்பூன் கொடு பார்ப்போம்..

(ஓடிப்போய் ஃப்ரிட்ஜுக்குள் ளேர்ந்து மைதாவை எடுத்து தர்)

அந்த #sugar_powder ஒரு இரண்டு ஸ்பூன் தரியா.. 

அப்படியே சைட்டில்.. #2_ஸ்பூன்_unsalted butter கொஞ்சம் melt பண்ணுடறியா..

#Half_spoon_baking_powder போடறியா....

#பால் ..ஒரு #3_spoon விடு..

இன்னும் சொட்டு விடு..அப்போதான்..நன்னா தோசை மாவு மாதிரி ஆகும்..


Last ஆ..அப்படி கொஞ்சம் #walnut ஐ..பொடியா கட் பண்றியா..

எல்லாம் மிக்ஸ் பண்ணினாள்..


 அந்த microwave கொஞ்சம் திறக்கறியா..

 1min 30 seconds போதும்..நடுவுல கொஞ்சம் திறந்து பாரு..ஒரு two minutes ..fan காத்துல நின்னுட்டு வரேன்..

 

இப்படியாக..

"Mast ஆ இருக்குல்ல mug cake நு சொன்னவ..

மடமடனு....ஒரு pineapple..

ஒரு kesar mug cake

Fresh mango mug cake and finally

Chocolate mug cake..

Vennila cake

செஞ்சு முடிக்க..

கமகம..சுடச்சுட..


மொத்தமாவே..15 spoon maida

1 tumbler க்க்கும் குறைவாக பால்..

100 gm க்கும் குறைவா butter..


Most important ..அதே கப்பில் ஒவ்வொரு flavour ம் மிக்ஸ் பண்ணி.. அப்படியே microwave ல் வெச்சு எடுத்ததால் பாத்திரம் விழலை..விழவே இல்லை.


எப்போ..நாக்கு கேக்கறதோ..அப்ப்போ ஒரு 5 நிமிஷத்தில் ..ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு ரெடி பண்ணி ..சாப்பிடலாம்..😀


அரை மணியில் அரை டஜன் கேக்..


குறைந்த செலவில்..குறையே இல்லாத...கமகம கேக்...


இனிமே அவள் கேக்காமலேயே..

பேக்கா கேக்குனு..பேக்கிடலாம்னு முடிவுடன்..😀😀


Unlock_1.0 #குட்டிக்கதை

 #Unlock_1.0

#குட்டிக்கதை

"ஏங்க..அடுத்த திங்கள் முதல் வேலைக்கு வர ஆரம்பிக்கணும்னு மெயில் வந்திருக்கு..'

 மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்த கோபி குட்டியின் தலையை வருடியபடி கவலையில் ஆழ்ந்தாள் சரயு.

 

" எப்படி இருந்தாலும் வேலைக்கு போய்த் தானே ஆகணும்ப்பா..இப்படி வீட்லயே உட்கார்ந்து இருக்க முடியுமா?'

அவள் கணவன் க்ருஷ்.


"இல்லங்க..இந்த மூணு மாசமா வீட்லயே இருந்திட்டேனா..இவன் இப்ப என்னை விடவே மாட்டேங்கிறான்..எல்லாம் நானே செஞ்சு செஞ்சு பழகிட்டான்ங்க..இப்போ பழையபடி  விட்டுட்டு போனால்..உடம்புக்கு எதுனாச்சும் வந்துடுமோனு பயமா இருக்கு'..

ஒரு அம்மாவின் கவலையில் சரயு..


உள்ளிருந்து இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார் பாக்கியம்..

" நான் தான் இருக்கேன்ல..ஒரு ரெண்டு நாள்ள சரியாகிடுவான்' என்றாள்.


சரயு ஒரு பெரிய மாலில் பில்லிங் செக்‌ஷனில் வேலை பார்க்கிறாள்.

காலையில் கிளம்பினால் ராத்திரி ஆகிடும் வீட் வந்து சேர.அவள் கணவன் கிருஷ்...மெடிக்கல் ஷாப் வைத்து இருக்கிறான்.

அவ்வப்போது வீட்டுக்கு வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவான்.


அவர்கள் உலகமே கோபிதான்.


நான் ஒரு ஐடியா சொல்றேன் ஆரம்பித்தான் க்ருஷ்..


" நாளையிலேர்ந்து நீ என்ன செய்வியாம்..சும்மா பையைத் தூக்கிட்டு அவனுக்கு டாட்டா காட்டிட்டு வெளியே போற மாதிரி போ.. 

எப்படியாவது இந்த ஒரு வாரத்துக்குள்ள அவனை ட்ரெயின் பண்ணிடுவோம்" சமாதானப் படுத்தினான்.

'ஆனால்..மாஸ்க் போட்டுக்ககணும் கண்டிப்பா' என்று சொல்லி கண்ணடித்தான்.


அடுத்த நாள் காலை..


"கோபி..செல்லம்..அம்மா டாடா போய்ட்டு இதோ வந்துடுவேனாம்..சமத்தா நீ இருப்பியாம்'

சரயு சொல்லிக் கொண்டே

ஹேண்ட் பேக்கை மாட்டிக கொண்டாள்..


"டாடா...அம்மா ..டாடா.." அவள் கையசைக்க..


 கோபி குட்டி வேக வேகமாக அவளோட வெளியே கிளம்ப  தாவினான்.

 

 பாவம்..அவனுந்தான் வெளியே போய் எவ்வளவு நாளாச்சு..ஆனால் குழந்தைகளும் பெரியவர்களும் வெளியே தலை காட்டக் கூடாது என்ற தடையை மீற முடியாதே..


"அவனும் என்  கூட வரணுமாம் பாருங்க.".சிரித்தபடியே சரயு..


" நீ பாட்டி  கிட்ட கொஞ்ச நேரம்.இருப்பியாம்..சரியா..?என்று மழலையில் கொஞ்சினாள்.


ஒவ்வொரு நாளும் வெளியே இருக்கும் நேரத்தை அதிகரித்தாள்.

கிளம்பும் முன்னமே அவனுக்கு கொஞ்சம் வயிற்றை ரொப்பினாள். பக்கத்தில் அவனுக்கு பிடித்த விளையாட்டு சாமானெல்லாம் பரத்தி வைத்தாள்.


" அம்மா..அவன் மேல ஒரு கண் வெச்சுக்கோங்க' என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு கிளம்புவாள் சரயு..


' இது ஒண்ணுதுக்கே இந்தப் பாடா?


பாக்கியம் மனசுக்குள்ளே சிரித்துக் கொள்வாள்..


சரயு வெளியே இருந்து வருவது தான் தாமதம்..

இத்தனை நேரம் அவளைக் காணாத ஏக்கத்தில்  அவளை விடவே மாட்டேன்னு ஒரே அடம் பிடிப்பான் கோபி..


இப்போது ..கொஞ்சம்.கொஞ்சம் மாமியாரிடம் செல்ல ஆரம்பித்திருக்கிறான்


ஆச்சு..எதிர்ப்பார்த்த திங்கட் கிழமை வந்தது....

க்ருஷ் காலையிலேயே போய் விட்டான்..


சரயுவும் ..வேலைக்கு கிளம்பி விட்டாள்..

"பத்திரமா பார்த்துக்கோங்கம்மா.. எதுவானாலும் ஃபோன் பண்ணுங்க". சரயு சொல்லிக் கொண்டே புறப்ப்ட்டாள்.

மனசெல்லாம் வீட்டிலேயே இருந்தது..


அடிக்கடி வீட்டுக்கு ஃபோன் செய்து கேட்டுக் கொண்டே இருந்தாள்..


அப்பாடா..ஒரு வழியா வேலை முடிஞ்சு கிளம்பினாள்..


" அம்மா..கோபியை உள்ளேயே வெச்சிருங்க..நான் குளிச்சுட்டு சானிடைஸர் எல்லாம் போட்டுட்டு வர வரைக்கும் என்னை பார்க்க வேண்டாம் அவன்'..


பூனை போல வீட்டுக்குள் நுழைந்து சுத்தம் செய்து ஹாலுக்கு வந்த போது..


ஒரே ஓட்டமாக வந்து அவள் மேல் ஏறி துகைத்து கொஞ்சி..மடியில் படுத்துக் கொண்டு ..அவள் முகத்தையே பார்த்தான் கோபி.


' பாட்டி கிட்ட சமத்தா இருந்தியா ..? Good boy..'

அவள் தன்னோட செல்ல நாய்க்குட்டி கோபியை கொஞ்ச..


 'சீக்கிரமே இவனோட விளையாட ஒரு கேசவ் பொறக்கணும் ...கிருஷ்ணா.. கண் திறப்பா'.🙏🙏.மனதுக்குள் நினைத்தபடி..

 தோசை தட்டை நீட்டினாள்  பாக்கியம்.

உப்மா

 நெட்ல பார்த்த ரெசிபி நாக்கில் ஊற..நாமும் செஞ்சு பார்ப்போமே இத்தனை சிம்ப்பிள் தோசை தானேனு ஜொள்ளுடன்..


millet மூணு மணி நேரம் ஊறினா போதும் கோதுமை ரவையும் ஒரு மணி நேரம் ஊறினா போதும். வெய்யிலில் சீக்கிரம் ferment ஆகி brunch க்கு வித்தியாசமா சாப்பிடலாம்னு ஐடியா.


நடு ராத்திரி எழுந்து ஊற வெச்சாச்சு.

காஃபி குடிச்சு எனெர்ஜி ஏத்தி, மிக்ஸில மில்லட்டை போட..


நேற்று பெய்த சொட்டு மழை..கரண்ட் கட் வேலை நடக்கிறது எப்போ கரண்ட் வரும்னு சொல்ல முடியாதுனு அபார்ட்மென்ட் எலக்ட்ரீஷியன் ஜாலி மூடில்.


சோக கீதம் நான் பாடும் வேளையில் டொக்கென்று விழுந்த watsapp msg.


"'never tell anyone your plans

show them your results ''


என் plan அப்பளமாய் நொறுங்க ..வேறொறு டிஷ் ரெடி ..


அதாங்க உப்புமா..

கைகொடுக்கும் கை..

( உப்புமா breakfast க்கு தான் சாப்பிடணும்நு இல்லை..சரிதானே..)


#holidaymood


வெண்டை கொண்டை வெந்தய தோசை..

 வாங்க சாப்பிடலாம் ..

.வெண்டை கொண்டை வெந்தய தோசை..

VKV dosa..

வழ வழா குழ குழானு இருக்குமோனு பயந்தேன்..வாகாய் எடுக்க வந்த very tasty dosai. (Priya Venkatakrishnan athai..

Raji அத்தை சொல்லித்தந்தது .)

என் சித்தியின்  sister in law சொல்லித் தந்த ரெசிபி....experiment பண்ணலைனா நமக்குத்தான் மண்டை வெடிச்சிடுமே..

வெட்டிப் போட்ட வெண்டை தலையை வைத்து எதாவது ஒரு ஷேப் பண்ணுவோம்..

அந்த வெட்டின தலையை மிக்ஸியில் அரைத்து , ஒரு பாகம் மாவு தனியா எடுத்து இந்த குழகுழாவை கலக்க..

பொங்கி வரும் மாவு..பெரும் சுவையோடு தோசையாச்சு.

ஊத்தப்பமும் சூப்பர்..

வெண்டை வாசம் சுத்தமா வரலை தோசையில்..

#சாப்பாட்டுராமி


soup_dosa

 வாங்க..வாங்க.


சைட் டிஷ் இல்லாமலேயே

அப்படியே சாப்பிடலாம்..


#நான்_கண்டுபிடிச்ச_தோசை.


#soup_dosa



இருந்ததோ ஒரே ஒரு கப்பு தோசை மாவு..

என்ன செய்யலாம்னு யோசிக்க...


சேர்த்தேன்..

1 spoon rava, 2 spoon அரிசி மாவு, 1 spoon கடலை மாவு..

மிக்ஸ் பண்ணியாச்சு


இப்போதான் வருது கதையில twist.


Soup செய்ய வேக வைத்து அரைத்து வைத்திருந்த கோஸ், காரட், வெங்காயம் ,தாக்காளி போட்டு கலக்கினேன் இதை மாவுடன்.


தாளித்தேன் கடுகு,ஜீரகம் ,மிளகு.

கிள்ளிப் போட்டேன் கருவேப்பிலை, கொத்தமல்லி..


கொண்டா..கொண்டா..என்று..

அண்டா காலி😁

பாரம்பரியஉணவு

 #பாரம்பரியஉணவு


"இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்ததாம்..

ஈரோட்டு மாமனுக்கு தொந்தி வந்ததாம்.."

இதுதான் குடும்ப பாட்டு இட்லிக்கு எங்க வீட்ல..


இட்லி தோசையில்லா வாழ்வு என்னது?

சட்னி சாம்பாரில்லா வாழ்வு என்னது?

இதுதான் பாரம்பரிய உணவா?

இதயம் சொல்லி விட்டதா?

சொல் மனமே.....


இட்லி மாவில்லாவிட்டால் ஏதோ கை ஒடிஞ்ச மாதிரி ஒரு உணர்வு..

ஃப்ரிட்ஜில் இவர் இல்லாட்டா..வீட்டில் கலாட்டா தான்.


நடுவில் கொஞ்சம் ரூட்டை மாத்தி எல்லாரும் உஜாலாவுக்கு போய்..விவேக் சொல்ற மாதிரி ஜல்லி மாதிரி ஒரு kellogs..அதை பாலில் ஊற வைச்சு தின்னோம்.


எங்க பாட்டி சொன்னா..எங்கம்மா சொன்னா..இப்போ டாக்டரும் அதே தான் சொல்றாங்க..ஒழுங்கா பழையபடி இட்லி தோசைக்கு வாங்க என்று.


இட்லியின்றி இன்பம் ஏது

தோசை இன்றி துள்ளல் ஏது

ஊத்தப்பம் தருமே உற்சாகம்..

மசாலா தோசை மயக்குமே எல்லாரையும்

குழி அப்பம் ..இதுக்கு கூட்டம் ஏராளம்.

சட்னியும் சாம்பாரும்..

சக தோழமைகள்..ஆனால்..

மிளகாய்ப் பொடி இட்லிக்கு

மவுசுதான் என்றுமே..

சத்தெல்லாம் மொத்தமாய் இதிலிருக்க

சொத்தை அழிக்கும்..

வெளி நாட்டு உணவு நமக்கு எதுக்கு?


இன்பம் இன்பம் இட்லி தோசை இன்பம்

படையே வந்தாலும் படைக்க..

சம்படம் மாவிருந்தால் போதும்.

இதுக்கு நான் என்ன ரெசிபி போடறது?

நீங்க எல்லாருமெர் இதில் experts.


புதியன புகட்டும்..

பழமை..என்றும் இனிமை..


வேறென்ன..வேறென்ன வேண்டும்?

வெந்த இட்லியும் சட்னியும் வேண்டும்

மொறு மொறு தோசை வேண்டும்னு..

பாட்டை மாத்துவோம்..

ரூட்டையும் மாத்துவோம்

அளவாய் சாப்பிட்டு ஆரோக்கியமாய் இருப்போம்.

பொறாமை_பாதி_பெருமை_பாதி

 #பொறாமை_பாதி_பெருமை_பாதி



வாட்ஸப்பை பாரு கொஞ்சம்

வார்க்கணும் ரவா தோசை

சேர்க்கணுமா மைதா என்றே

சீக்கிரம் சொல்லு நீயும்..

சீமந்த புத்திரியின் ..குறுஞ்

செய்தியும் வந்ததுவே.


போடு என்றதும்..

போட்டுத் தள்ளிடுவாளே..

பக்குவம் சொல்ல யோசிக்க

ஃபோட்டோவும் வந்தது..பட்டு

பட்டாய் முறுகல் ரவா ..


ஹெல்ப்புக்கு எனக்கு..

ஹெப்பார் கிச்சன் இருக்கு..

ஹாப்பியாய் அவள் சொல்ல

ஹார்ட்டே வெடிச்சதுவே..


என் இடத்தை பிடித்தது

இன்ஸ்டண்ட் ரெசிபிகளுமே..

பொறாமையில் புகைந்தாலும்..

பெருமையாய் இருந்ததுவே.


பின்னோக்கிப் போனேன்.. நானும்

அம்மாவின் குறிப்புகள்

அழகான டயரிக்குள்..

அப்படியே செய்வேன்..

அதிலவள் சந்தோஷம் கண்டேன்.


பிறிதொருனாள்..

மாமியார் சொல்லித் தந்தாரென்று

" வத்தல் குழம்பில்..

வெல்லம் சேர்த்தேனே..நீயும்

செய்து பாரு..சுவையிலே

அது ஜோரு என்றேன்.


வற்றிப் போனது ..அவள்

வதனம் என்றாலும்

வருவோர் போவோரிடம்

பெருமை பேசக் கண்டேன்..


இன்னும் என்ன டிப்பு எல்லாம் கற்றாய்

இன்முகத்துடன் கேட்டாலும்..அங்கே

பெருமையோடு..சிறு பொறாமை கண்டேன்..


கிளிக்கு இறக்கை முளைச்சுடுத்து moment..

அன்றும் இன்றும்.


அம்மா..அம்மா..தான்

ஹல்வாவுக்கே

 #MMSWEET


ஹல்வாவுக்கே


..ஹல்வா குடுப்போமே நாங்க..


அன்று..

அல்வா கிண்டுவாள் அம்மாவும்

அஞ்சு மணி நேரம் கை விடாமல்..

அவள் பெண் அகிலாவோ..

அஞ்சு நிமிஷத்தில் ..

அசத்திடுவாளே😃


அப்பாவுக்காக வறுத்தேன்

அபாரமாக கஞ்சி மாவு..


கோதுமையை வறுத்து ..பொடிக்க..

கம கமனு வாசனை..


1 டம்ளர் கோதுமைப் பொடி

2 டம்ளர் சக்கரை

1/4 டம்ளர் நெய்...( if you want add extra )


நெய்யில் கோதுமைப் பவுடரை வறுத்தேன்..

சக்கரையும் சேர்த்து பிரட்டி தனியாக வைத்தேன்

Boiled water..

மாவைக் கொட்டிக் கிளறினேன்..


Organic food color , elaichi, cashew add செய்தேன்..


Halwa ready..

வாங்க சாப்பிடலாம்.

 வாங்க சாப்பிடலாம்.

ரொம்ப நாளாச்சு கிச்சன்ல ஒரு experiment பண்ணி..

காலைல breakfast க்காக செஞ்ச சப்பாத்தி மீந்து முழி பிதுங்கி என்னை பார்க்க..

Idea..🙋

சப்பாத்தியை பிச்சு போட்டு ..Mixie ல் ஒரு grind. மோரில் கொஞ்ச நேரம் ஊறல். 

எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பெருங்காயம்,கருவேப்பிலை போட்டு மோர் மிளகாய் நாலைக் கிள்ளிப் போட்டு நல்லபடியா பாத்திரத்தை விடும் வரை கிளற..

சூப்பர் டிஷ் ரெடி.

கூலிங் கிளாஸ் போட்ட மாதிரி ஒரு decoration.

#dishoftheday

#cravingforfoodclub


 Prasadham today- day 2


Gulkhand sweet poha.


அவல் புட்டு பண்ண ஆரம்பிச்சு..


அப்படிக்கா ஒரு U turn எடுத்தேன்.


கொதிக்கும் வெந்நீரில் துள்ளிய அவல் ( ள்)


கொத்து பன்னீர் ரோஜாவில்..

கொஞ்சம் dry fruits சேர்த்த குல்கந்து என்னைப் பார்த்து சிரிக்க..


வா..கண்ணே ..வா..

வரம் தரேன் உனக்கு..

வாய்க்கு ருசியாவாய் எனக்குனு ...சொல்லி..


கலக்க..

..அப்புறம் என்ன?..


கொண்டா..கொண்டா..தான்..நம்ம..

குண்டக்க மண்டக்க டிஷ்ஷுக்கு....


பாயசத்திலும் போடலாம்..கேசரியிலும் போடலாம்..


குல்கந்து..ஒரு குட்டி பந்து..😄😄😄😄😄🌹🌹🌷🌹


இனிப்பரக்கன்

 இனிப்பரக்கன்


..


முதல்ல்...உங்களுக்கு எல்லாம்.ஒரு quiz..

 இது என்ன ஸ்வீட்டுனு சொல்லுங்க பார்ப்போம். ( ஓ..இது ஸ்வீட்டானு உங்க மை.வாய்ஸ் எனக்கு கேட்கிறது)

 ஏதாவது குண்டக்க மண்டக்கனு செஞ்சாலும் மத்யமர்ல ஷேர் பண்ணலைனா..மண்டை வெடிச்சுடுமே நமக்கு..

 

 சரி..சரி..கண்டுபிடிச்சாச்சா..என்ன ஸ்வீட்னு


இனிப்பு..இப்போ பாதி பேருக்கு பெரிய எதிரி..


என்னதான் நாட்டுச்சக்கரை ,வெல்லம் போட்டு adjust பண்ணினாலும்..என் நாக்கு இருக்கே..அது.." சக்கரை ..சக்கரை சக்கரை..போதும் உன் மேல அக்கறைனு" பாட்டு பாடும்.


நேற்று கோயிலுக்கு போய்ட்டு வந்தபோது..

வண்டிக்காரன் கூவிக் கூவி-------------- 

எடுத்துக்கலையோனு கூட்டம் கூட வைத்துக் கொண்டிருந்தார்..என் ஃப்ரண்டு போணியை முடிச்சுட்டு போ..நீயும்..வாங்கு ஒரு பையில் போனால் வராது இது போல டேஸ்ட்டு என்றாள்..

ஐயோ...சாமி..நம்ம வூட்ல ..இது விலை போகாதேனு ..யோசித்த வேளை. பல்பு ஒண்ணு எரிஞ்சது..

Raw வா கொடுத்தால் தானே நோ சொல்லுவாங்க..

'Wah re wah " நு சொல்லற மாதிரி ஒரு டிஷ் பண்ணிடுவோம்..

War ஆரம்பித்தது..நீயா..நானா என்று..


( என்ன கண்டுபிடிச்சாச்சா..)😁


சரிசரி..போஸ்ட்டை முடிக்கணும்..நானே சொல்லிடறேன்..


கோதுமை அல்வா சாப்பிட்டு இருப்பீங்க..

இது..இது..

கொய்யாப்பழ அல்வாங்கோ..( உங்க மை.வா..கேட்கிறது எனக்கு)


2 கொய்யாப்பழம்..( கட் பண்ணிட்டு கொஞ்சமா தண்ணி விட்டு ,குக்கரில் ஒரு விசில் விடவும்)

ஆறினதும்..நடுவில் இருக்கும் seeds  எல்லாம் எடுத்துடணும். மிக்ஸியில் நல்ல நைஸா அரைக்கணும்.

1 கப் பழ விழுதுக்கு 1 டம்ளர் சக்கரை.

4 or 5 teaspoon ghee.

கடாயில் நெய் விட்டு முந்திரி பாதாம் வறுத்து எடுத்து தனியா வைக்கணும்.

இப்போது விழுது+ சக்கரை+ 2 ஸ்பூன் நெய் விட்டு கிளறணும்.

Add food color of your choice.

Keep adding ghee. கடாயை ஒட்டாமல் வரும்போது ..greased plate ல் போடவும்.

Half an hour ..cooking time.


அடுத்தது..வேறென்ன..டேஸ்ட் பார்க்கும் முன்னே..டேக்கிடணும் ஒரு ஃபோட்டோ..

முந்திரியும் பாதாமும் என் பொஸிஷன் எது என்று பொலம்ப ஆரம்பிக்க..

வந்தது ஐடியா..

இன்னிக்கு உனக்கு அரக்கன் வேஷம்..

இனிப்பரக்கன் வேஷம்..

( அடப்பாவி..லபக் லபக்கு முழுங்கிட்டு..இப்படி அரக்கன்னு பேர் வைப்பியா?) .


சென்னையில் ஒரு கல்யாண முகூர்த்த சாப்பாட்டில்..இலையில் விழுந்த இந்த டிஷ்.

போய் ரெசிப்பியை கேட்டு வந்தது..இன்னிக்கு உபயோகமாச்சுதில்ல😁

உலக_உணவு_தினம்

 #உலக_உணவு_தினம்


 


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..அது கிடைத்த பின்னாலே பேச்சு வரும்..

சரிதானே..என்னது அதுனு யோசிச்சீங்களா?

Correct ...உணவு ..அதுதாங்க..


காலையில் எழுந்ததிலேர்ந்து ஒரே கேள்வி..

இன்னிக்கு என்ன சமையல்..

இன்னிக்கு என்ன சாப்பாடு..

ஃபோனை எடுத்தாலோ..பக்கத்து வீட்டோடு பேசினாலும்..முதல்ல கேக்கற கேள்வி..' சாப்புட்டாச்சா' ..


இன்னிக்கு உலக உணவு தினம்..

இதைப் பற்றி எல்லாரும் கூகுள் ஆண்டவர் துணையோட வரலாறு கண்டிப்பா தெரிஞ்சிண்டு இருப்பீங்க..


உணவு என்பது ஒரு basic right .

அது இல்லாமல் எத்தனை பேர் கஷ்ட்டப்படறாங்க..

எல்லாம் தெரியும் நமக்கு..


இந்த வருஷ theme.. 

“#Our_Actions_Are_Our_Future.

இதைப் படிச்சதும் எனக்கு தோன்றியது..

சின்ன வயதிலிருந்து நாம் கற்ற ஒரு விஷயம்..' உணவை எக்காரணத்தை கொண்டும் #waste பண்ணக்கூடாது..


எல்லாமே use and throw இப்போது. ஆனால் , காசின் அருமை தெரிந்தவர்கள்,ஒரு விவசாயியின் உழைப்பை அறிந்தவர் யாரும் ஒரு குந்துமணி கூட வீணாக்க மாட்டார்கள்.


எல்லா வீடுகளிளுமே..ரச வண்டியோ..குழம்பு கூட்டு என்று எது மீந்தாலும்..எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி ஒரு சூப்பர் சைட் டிஷ் தோசை இட்லிக்கு ரெடி பண்ணிடுவார்கள் பாட்டி அம்மா எல்லாரும்.


இப்போது மீண்டும் அந்த awareness நிறைய வீடுகளிலும் இடங்களிலும் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.


இந்த வருஷ நவராத்திரியில் நான் கற்றுக் கொண்ட சிலவற்றை ஷேர் பண்றேன்.


நவராத்திரி வந்தது..

எங்கே பார்த்தாலும் சுண்டல் பாக்கெட், 

கலந்த சாத வகைகள், .

என் அபார்ட்மென்ட் தோழிகள் எல்லாரும் மண்டை உடைச்சுண்டோம்..

ஒவ்வொரு பிரசாதமும் பிரமாதம்.

எப்படி வேஸ்ட் பண்றது?

வந்தது ஐடியா..


#சுண்டல்_தோசை புது ரெசிபி கண்டுபிடிச்சோம்.

Collection sundal  and mixed rice எல்லாத்த்கையும் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து..கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து சூப்பர் சுண்டல் தோசை பண்ணி சாப்ப்ட்டோம்.


#வெத்தலை..

அதை கூட விடலை..

வெத்தலையை ஓவனில் வெச்சு எடுத்து

சோம்பு, கல்கண்டு, ஏலக்காய் ,கிராம்பு, எல்லாம் சேர்த்து..மிக்ஸியில் அரைத்து பொடி ரெடி பண்ணி.. 

குல்கந்த் இருந்தால் சேர்க்கலாம்

சூப்பர் #paan ready.


அடுத்து ..நிறைய #எலுமிச்சம்பழத்தோல் சேர ஆரம்பிச்சது..

ஊறுகாய் ஐடியா ரெடி..


ஒரு டப்பால உப்பும் மஞ்சப் பொடியும் சேர்த்து போட்டு ..அதில் இந்த எலுமிச்சம் தோலை போட்டுக் கொண்டே வரணும்.

நல்லா ஊறும்.

பின்..வெந்நீர் ல இந்த எலுமிச்சை போட்டு கொதிக்க வைத்து..ஆறினதும் நிறைய பச்சை மிளகா , இஞ்சி சேர்த்து அரைத்து..

தாளித்து கொட்டி நன்றாக வதக்கி எடுத்து வைக்க..

வகை வகையாய் சாப்பிட்ட வாய்க்கு..தயிர் சாதத்துடன் தேவாமிர்தமாகும்..


இப்படி சின்ன சின்ன டிப்புகள்..நம்மை டாப்புக்கு உயர்த்தும்.

Charity மட்டுமல்ல..conservation also begins at home.


இந்த உலக உணவு தினத்தில்..

உற்பத்தி எவ்வளவு முக்கியமோ..

உட்கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ..

அதை விட முக்கியம்..

உணவில் ஊதாரித்தனமாக இல்லாமல் இருப்பது..


Taste bhi..health  bhi and no waste bhi..

Curfew_சமையல்

 #Curfew_சமையல்..


'க' வும் "கொ'வும்..சேர்ந்த கர்ஃப்யூ சமையல்..


அது என்ன க..கொ..

கடலை மாவு..

கொத்தவரங்காய்..

அதான்..


"கொதிக்கும் எண்ணெயில் என்னைத் தவிக்க விடுவாய்..

கொஞ்சம் தயிரோடு சேர்த்து முகத்தில் பூசுவாய்..

இதற்குத்தானா நான் ஆசைப்பட்டேன்..

காயிலும்,குழம்பிலும் என்னைச் சேர்த்து ..

கரையேற்ற மாட்டாயானு 

கடலை மாவு கண்ணீரும் கம்பலையுமா..ஒரு பக்கம்..


ஏற்கனவே..நான் வத்தல் தொத்தல்..

இன்னும் எத்தனை நாளைக்கு இழுத்துண்டு இருக்கணுமோ..தெய்வமே என்று..

கொத்த"வரங்"காய்..வரம் கேட்க..


"கொத்தவரங்காய். ..அதுக்கு டிமாண்டு இல்ல..


என் மனசு ஒண்ணும் ரொம்ப கல்லு இல்லை..' 


என்று ஆறுதலாய் நான் எச பாட..


இந்த #க வும் ,#கொ வும் கைக்கோர்த்து..

கூட்டணி அமைத்து..


கொத்தவரங்காய்..இனி..

நம் குடும்பத்தில் ..

ஓர் காய்னு... ஆன நாளிது..


வித வித size ல் நறுக்க..

வெரைட்டி..guarantee..


நீளவாக்கில் கொஞ்சம்..

பொடிப் பொடியா மீதி..


#கடலைமாவு கரைச்சு விட்ட #கொத்தவரங்காய்_மோர்க்குழம்பு

#கடலைமாவு_கொத்தவரை_பொரியல்..

#கொத்தவரை தேங்காய் பொரியல் (அப்பாவுக்கு)


#மோர்க்குழம்பு


நீள வாக்கில் நறுக்கினதை..லேசா உப்பும்,சக்கரயும் ,மஞ்சளும் சேர்த்து கலந்து வைத்து..

ஒரு அரை மணி கழிச்சு..தாளிப்பில் நன்றாக fry பண்ணி ,தனியாக வைத்து விடவும். ( உங்க கிட்ட வத்தல் இருந்தால் ஓகே..ஆனால். Fresh fry இன்னும் 😋 )


இப்போ தயிரை தண்ணி விடாமல் கடைந்து..அதில் 

#ஒரு_ஸ்பூன்_கடலைமாவு, ஒன்றரை ஸ்பூன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாகி தயிரில் கலக்கி..

பின் கடாயில் , தாளிப்பிற்கு பின் இந்தக் கலவையை தண்ணி கொஞ்சம் தாராளமா ஊற்றி கொதிக்க விடணும்..

1 டம்ளர் தயிருக்கு...ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம்.

கடைசியில் ..வறுத்து வைத்து இருக்கும் கொத்தவரங்காய் அப்படியே மேலே தூவ..

கர கர மொறு மொறு ..மோர்க்குழம்பு ரெடி


#கடலைமாவு_கொத்தவரை_கறி..

எங்க பாட்டி special.

தாளித்து, வெங்காயம்  வதக்கி விட்டு,

வெந்த கொத்தவரையையும் சேர்த்து கடலை மாவை கொஞ்சம் semi solid பதத்தில் கரைத்து வைத்து..

அப்படியே அந்த காயில் சேர்த்து நன்றாக கலப்பாள்..


ஆஹா..கொத்தவரையும் கடலை மாவும்..


"நீயும் நானும் இன்று

 கைகள் கோர்த்துக் கொண்டுனு" டூயட் பாடிண்டே..

"வாழ்வின் எல்லைக்கே' நம்மை கொண்டு போகுமாக்கும்.


#தேங்காய் போட்ட பொரியல் எப்போதும் போல..


பருப்பு உசிலி பண்ணலாம்..பக்கோடா பண்ணலாம்..பொரித்த கூட்டு பண்ணலாம்..புளியிட்ட கூட்டு பண்ணலாம்

புளிக்குழம்பில் போடலாம்..இன்னும் இன்னும்..


எது செய்தாலும் இப்போ கொண்டா கொண்டானு சாப்பிடும் நேரம்.

இது தான் சமயம் நமக்கு..

Fast food லேர்ந்து மீண்டு..

நம் பாரம்பரிய feast food க்கு 

நம் குடும்பத்தினரை கூட்டிச் செல்வோம்..


Curfew ஒன்றே..

Cuisine ம் ஒன்றே..


"


சவாலே_சமாளி

 #crisis_management

#சவாலே_சமாளி

#அம்மா_கணக்கு


கல்யாணம் ஆகி டெல்லி போன புதுசு. வீட்டுக்காரர் bachelor accommodation ல் தங்கி சங்கரன் என்பவர் போடும் தயிர் சாதம் இட்லி பொட்டலத்தோடும் காலையும் மத்யமும் போக, சாயந்தரம் அவர்கள் நள பாகம். 


" பீட் ரூட், கோஸ், டிண்டா நு ஊரில் இருக்கும் அத்தனை காயும் போட்டு ஒரு ஓஹோ சாம்பார் இவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த நேரம்..


' மணமகளே..மணமகளே' நு டில்லி ஸ்டேஷனில் வந்து என்னை ஒரு பெரிய நட்பு வட்டம் வரவேற்றது.

எனக்கு at a stretch அஞ்சு பேருக்கு தான் சமைக்க தெரியும்.

அதுவும் வூட்டுக்காரர் ரொம்ப நல்லவரு. எதை போட்டாலும் சாப்பிட்டுடுவார். 


so எல்லா ஞாயித்துகிழமையும் turn போட்டு , காய்ந்து போன வயிறில் ஒரு ஐந்து வயிறு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப் படும் ,என் சின்ன கரோல் பாக் வீட்டில் "சாப் பா டுப்போ டப்படும்". 


மாமி..நாளைக்கு நம்ம வீட்ல பூஜை.திருநெல்வேலி லேர்ந்து எங்க குரு வரார். சமையல் நீங்க தான்."

ஃபில்டர் காஃபியை உறிஞ்சபடி இவர் ஃப்ரண்ட் சுந்தரம் ஒரு சனிக்கிழமை சாயந்திரம் வந்து சொல்ல..


அந்த மாமி வேற யாரு..சாட்சாத் நாந்தேன். (என்னை விட பெரியவர் எல்லாம் என்னை மாமினு கூப்பிட்டு என் இதயம் சுக்கு நூறாக வெடிக்கும்.. )

என்னடா இது ..இந்த அகிலாவுக்கு வந்த சோதனைனு சிவாஜி மை.வா வில் டயலாக் அடிக்க..

ஆஹா..பேஷா பண்ணிடலாமேனு கொஞ்சம் நடுக்கத்தோட தலை ஆட்டியாச்சு.


ஞாயிற்றுகிழமை காலையில் ..அவங்க வீட்டுக்கு போனால்..ஒரு ரூம் ஃபுல்லா கோஸும்,காரட்டும், கத்திரி,உருளை 🍅, பச்சை மிளகாய் நு ஒரு சின்ன கொத்தவால் சாவடி பார்த்ததும் ஒரே திடுக்.

"சுந்தரம்..எத்தனை பேர் சாப்பட போறாங்கநு கேட்க..

மாமி..just ஒரு 50 இல்ல 60 பேர் தான். casual  ஆ சொல்லிட்டார்..

நான் causality போய் admit ஆகிடுவேனோனு ஒரே டென்ஷன்.


எங்கேர்ந்து ஆரம்பிக்கறதுனு புரிலை.

சரி..பாயசத்திலேர்ந்து ஆரம்பிப்ப்போம்நு யோசிக்க..ஒரு 20 பாக்கெட் (பக்கெட்)் பால்..ஒரு 5 பாக்கெட் சேமியாவை நீட்டி ..' இது போதுமா..மாமி..இது போதுமானு கேட்க..

நமக்கு ஒரு குண்டானுக்கு மேல செய்ய்த் தெரியாது.ஆனால் இவங்க ஒவ்வொருத்தரும் ஒரு குண்டான் குடிப்பாங்களே..அம்பாளே என்னைக் காப்பாத்துனு களத்தில் குதிச்சேன்.. 


so கணக்கு போட ஆரம்பிச்சேன். 4 பேர்ருக்கு இத்தனை பால், சக்கரை, சேமியா,ஏலக்காய் போட்டு பண்னணும்னா என்ன அளவோ ..அதை 60 க்கு மாத்தினேன்.

அரை கிலோ முந்திரி மிதக்க ..ஒரு சூப்பர் பாயசம் ரெடி.


பெரிய டென்ச்ன் காய்கறிதான்.ஃபோன் எல்லாம் இப்ப மாதிரி கிடையாது ..

அப்புறமென்ன..

எப்படி செய்யப்போறேன்னு நினச்சப்போ..ஒரு அறிவு பல்பு எறிஞ்சது..

அதுதான் " அம்மா..கணக்கு'.


கூட்டுக்கு, கறிக்கெல்லாம் அம்மா சூப்பரா கூறு கட்டுவா..பத்து பேர் சாப்பிட வராங்க என்றால்..

கறி செய்யணும்னா..ஒரு கப் அளவுக்கு ஒருத்தருக்கு காய் ..with added தேங்காய்..


அதே கூட்டு. என்றால் பாதி காய் போதும் மீதி பருப்பு தேங்காய் அரைச்சு விட.. கரெக்டா இருக்கும்னு அம்மா கன கச்சிதமா..மீறாமல் அதே சமயம் எல்லாரும் நிறைவா சாப்பிடற மாதிரி செய்யறது ஞாபகம் வந்தது.


அடி தூள்..

பாயசம், பச்சடி, தண்ணி காண்பிச்ச வடைக்கு..கொஞ்சம் உருளையும்,கோஸ் காரட் போட்டு வெஜிடபிள் வடையாக்க..

பெரிய அண்டாவில் சாம்பார் ரசம், அப்பளம்..


பூஜை நடக்க..நடக்க..டென்ஷன்..

இலை போடப் போறோமே..taste பண்ணாத சாப்பாடு..


பரிமாறி முடிஞ்சு குருஜி பாயசத்தை ஒரு சொட்டு வைத்தவர் ' மதுரமாயிட்டு' என்றார். நான் சுந்தரத்தை பார்க்க..' மாமி..ஜெயிச்சுட்டேள்..அகிலா..நீங்க ஜெய்ச்சுட்டேள்' நு ஒரே பாட்டு பாட.. குருஜி "அந்த அம்பாளே வந்து பிறப்பாள் உனக்கு'னு ஆசிர்வாதம் செய்தார்.


அப்பொ என் பெரிய மகளை conceive ஆன நேரம். எப்படி இப்படி வேலை செஞ்சேனு எனக்கே ஆச்சரியம்


ஒரு சொட்டு மீதியாகாமல்..எல்லா. ஒட்ட காலி பண்ணியாச்சு.


இது ஜூலை மாதம் நடந்தது. சுந்தரம் செப்டம்பர் மாதம்  சென்னை போய் எங்கம்மாவை பார்த்தபோது..' எங்கம்மா ..தன் சமையல் technique எல்லாம் பேச்சு வாக்கில் எடுத்துவிட..ஒரு look விட்ட அவர்..

' அங்கே வந்து பாருங்க..எங்க மாமி ஒன்ணு இல்ல..ஒரு படைக்கே சமைச்சு போடறாங்க என்று சொல்ல..


' அன்று சாயந்திரமே பக்கத்து வீட்டு ஃபோனில் கூப்பிட்ட அம்மா..அடிப்பாவி.. மாசமா இருக்கும்போது இப்படி ஏதாவது பண்ணலாமா என்று ஏகமாய் திட்ட..


.ஒவ்வொரு நாளும் ஒரு சவாலோடு வாழ்க்கை..


பல ஊர்களில்..பல நெருக்கடிகளில்..


ஆனால்..ஒரு extra பெயருடன்..அகிலா என்றால் அன்னபூரணி என்று.


"

மாத்தி_யோசி

 #curfew_சமையல்..

#மாத்தி_யோசி


..


பிரிக்க முடியாத எது?

சேர்ந்தே இருப்பது எது..?

அகிலாவும் கிச்சனும் தான் ..வேறென்ன..?


"நாளை ..நாளை ..நாளை என்று என்னை வெறுக்காதே..என்னை வெறுக்காதேனு.."

ரஹ்மான் பாட்டிலே..முட்டை கோஸ் முகாரி பாட..


இரு..மாத்தி யோசிக்கறேன்ப்பானு சொல்றதுக்குள்ள..


"என்னை கண்டாலும் தொடுவாரில்லைனு'

விஜயகுமாரி மாதிரி..விம்மி விம்மி  கோஸ் அழ ஆரம்பிச்சது..


"எனக்கொரு identity வேணுமடானு..' போர்க்கொடி  வேற தூக்க ஆரம்பிச்சது..


#மாத்தி_யோசி..

வந்தது ..மத்தாப்பாய் ஐடியா..


Curfew இருந்தாலும் இல்லாவிட்டாலும்..

கைகொடுக்கும் கோஸே..

கொடுப்பேன் உனக்கொரு அட்ரஸே..என்று அகிலா சூளுரைத்தேன்..


கோஸ்னு  சொன்னதுமே..

டோஸ் விழும் நமக்கு..


Cabbage நு சொன்னதுமே.

Baggage தூக்கி கிளம்பிடுவாங்க..


கோஸ் கறி இன்னிக்குனு சொன்னதுமே..

Cold war ஆரம்பிக்கும்..


கோஸா...கோச்சுண்டு..வெளினடப்பும் நடக்கும்..


சரி..#சூப் செஞ்சு கொடுத்தால்...பசியை அது கிளறிவிட்டு..பகாசுரனாகிடுவார்.


#பொரிச்ச_கூட்டு தட்டில் நீட்டும் முன்னே..

பொரிஞ்சு தள்ளுவார்.


#மோர்க்கூட்டு....#yeh_DIL_nahi_maange  more நு..போருக்கு ரெடியாவார்..


#Cabbage_rice நு பெயர் சூட்டி விழா எடுக்க..கொண்டா கொண்டானு காலியாகும்..


#Cabbage_வடை..தடையில்லாமல் உள்ளே தள்ளப்படும்..


#கோஸ்_தயிர்_பச்சடி..இதுக்கு கொஞ்சம் அடிதடி உண்டு..


#கோஸ்_துவையல்..உப்பு,புளி, தேங்காய்..சொட்டு வெல்லம் வெச்சு அரைக்க...முட்டைக் கோஸ் மேல ஒரு மையல் வரும்..


 ஒரு புது முகவரி கிடைத்தது ..

 முட்டைக் கோஸுக்கு..

#கோஸ்_besan_curry.


(Besan- கடலை மாவு😀)


கோஸ்..நீளவாக்கில் நறுக்கி

Onion...நீள வாக்கில்

Carrot..நீளமா துருவி..


உப்பும் கொஞ்சம் சக்கரை மஞ்சப் பொடி போட்டு கலந்து வெச்சேன்.


அரை மணி நேரம் கழித்து..


1 spoon ..besan

Mirch powder, 1 spoon suji, (if you like ..add garam.masala, ginger paste)

Mix all these.

Now add the cabbage mix in this .


Then in non stick kadai..with less oil..you will get yummy sabzi.


அப்படியே சாப்பிடலாம்..you can eat with rice, chapathi, chapaththi roll..

or spread on dosai.

Stuff and make bonda.

So, கோஸ்னு ..சொன்னதும்..இப்போ பேஷ் பேஷ் தான்.


கோஸுக்கொரு மவுஸு வந்ததென்ன..!!

கொண்டா கொண்டானு சாப்பிட்டதென்ன?

Monday, November 28, 2022

குணம்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#குணம்..


குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்..


கரெக்ட் தாங்க..இதுல பிரச்சனை என்னன்னா..

நானு.. மத்தவங்க  குணம் என்னதுனு நாடி பிடிச்சு பார்க்கற வர்க்கமுங்க..

அதனால் தான் என்னவோ..


என் குற்றம் என்னனு..நாடி பிடிச்சு பார்க்கறவங்களையும்..கடந்து போக முடியுது..


உள்ளுக்குள்ளே ஒரு குரல் கேட்கும்..

" எதுக்கு ரியாக்ட் பண்ற..உன் குணத்தை ஏன் மாத்திக்கறனு.."..

கரெக்ட்தானே..!!!


பாராட்டுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்..சின்னச் சின்ன சந்தோஷங்கள் தரும் பாராட்டுக்களை அள்ளி வீசுவதில் கஞ்சத்தனமே கிடையாதுங்க..அதுனால் எப்பவுமே குட்டீஸ் எல்லாம் என்னை சுத்தி வருவாங்க..ஜாலி ஜாலிதான் எப்பவும்..😃👍


பணத்தை அள்ளிக் கொடுக்கறேனோ இல்லையோ..நான் பண்ணும் பண்டங்களை 🍩🍰🍰🍿🍜🍛அள்ளிக் கொடுப்பேன்..யான் பெற்ற இன்பம்..கொடுமைக்கார குணம்ங்க..😀


வீட்டில திட்டு வாங்கும் ஒரு கெட்ட குணம்..'

ஏதாவது விஷயம் யாராவது சொல்லவந்தால்.. "அதான் தெரியுமேனு'.. சொல்லிட்டு..கொஞ்ச நேரம் கழித்து..

" என்னம்மோ சொன்னீங்களே ..' திருப்பி சொல்லுனு கேட்பேன்..

ரொம்ப கெட்ட குணம்..


Learn to say no..கண்டிப்பா இந்தக் குணம் தேவையென்றாலும்..சுட்டு போட்டாலும் வர மாட்டேங்கிறது..


என்னோட நாற்பதாவது வயதுக்கு வாழ்த்து சொல்ல அப்பா ஃபோன் பண்ணினார்.. ' இது பாரும்மா..இனிமே தான் உனக்கு நிறைய பொறுப்பு இருக்கு..அமைதியா இருக்கணும், அவசர புத்தி கூடாது..ஆழ்ந்து யோசித்து எந்த முடிவும் எடுக்கணும்..அகலக்கால் எடுத்து வைக்கக்கூடாது..' 

அன்று புரியாதது..நாளாக நாளாக சுர்ருனு உரைக்க ஆரம்பிச்சது..

உன்கிட்ட இதெல்லாம் சரி பண்ணனும்னு அப்பா சொல்லி இருந்தால் சண்டை தான் வந்திருக்கும்..ஆனால் அவர் சொன்ன விதம் இருக்கே..என்னோட எத்தனையோ குணங்களை எடை போட்டு..பலம் பலவீனம்னு பிரிக்க உதவியது.


குணம்..சில மாறும்..சில மாறவே மாறாது.


எந்த மாற்றமும் நன்மைக்காக இருக்கணும்..


எது மாறினாலும்..unconditional அன்பு மட்டும் மாறக்கூடாது என்று பிரார்த்தனை எப்போதும் உண்டு..


அரக்க குணம் கிடையாதுங்க..

ஆசை அளவோடு உண்டுங்க

இரக்க குணம் உண்டு..

ஈகையும் கொஞ்சம் உண்டு..

உண்மை பேசும் குணம் உண்டுங்கோ

ஊக்கமளிப்பதும்..உண்டுங்கோ

எதிர்ப்பார்க்கும் குணமுண்டுங்கோ..

ஏளனம் செய்யும் குணமில்லைங்கோ..

ஐஸ் வைக்கும் குணமில்லங்கோ

ஒத்துப் போகும் குணமுண்டுங்கோ..

ஓசியில் குளிர்காயும் குணமில்லங்கோ..

ஒளவியம் பேசற குணமில்லைங்கோ..


நம்ம குணம் எது..குற்றம் எது என்று தெளிவு பிறக்கவே காலம் போதவில்லை என்ற நிலையில்..


தெரிந்த முகங்கள் பல என்றாலும்..தெரியாத குணங்கள் ஏராளம் இருக்கும் நிலையில்


எப்பப்பாரு ஒரு weighing machine தூக்கிட்டு அலையக்கூடாதுங்க..

எல்லாரையும்.அவங்க அவங்க ப்ளஸ் மைனஸுடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்  வளர்த்துக் கொள்ள..

நம்ம இந்தக் குணம்..சில மாற்றங்களை அவர்களிடத்தில் தானாகவே உருவாக்கும்.


அவ்வளவுதான்..

குணம்..nature


பிறவிக்குணம் சிலவற்றை மாற்ற முடியாது என்றாலும்..

பிறகு வந்து ஒட்டிக் கொள்ளும்.குணங்களை..கொஞ்சம் கவனித்தால் ..வாழ்க்கை சொர்க்கம்ங்க..


பூதக் கண்ணாடிகள் கொண்டு..மற்றவர் குணம் குற்றம் காணுமுன்..

ஒரேஒரு முறை..நிலைக் கண்ணாடி முன் நின்று..' என் குணம் சரியா?' ..என்று கேட்டுக் கொள்வோமே..