Thursday, July 28, 2016

பொதிகை..

ஏதோ ஒரு channel  ல் இன்னிக்கு duet படம்..அதில்  ஒரு scene..
அப்பா..aerobics பண்ணி..மொட்டைமாடியில் இருக்கும்...antennaவை  கழுத்தைத் திருகிஅழ வைக்க..கீழே இருந்து .. பெண் left ,right னு
கட்டளை பிறப்பிக்க..
கொஞ்சம்..
பின்னோக்கிப் போனேன் நானும்..

Doordarshan..
இதன் தரிசனம் கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்ட நாட்கள்..
ஒட்டுக் கேட்ட நாட்கள்..ஜன்னல் வழி தெரியாதா என்று தேடிய நாட்கள்..
தெலுங்குக் கார வீட்டுக்கார மாமி புண்ணியத்தில... TV slot ஒதுக்கல் குடித்தனக்காரர்களுக்கு கொண்டாட்டம்..
சுண்டல் வியாபாரம் சூப்பரா பண்ணி யிருக்கலாம்..செம்ம கும்பல் இருக்கும்..
(ஒரு start up அப்ப இல்லாம போச்சே)
ஓடிப் போய்..சோபனா ரவியின் புடவையும் நகையும் கருப்பு வெள்ளையில் ரசித்த நாட்கள்..
ஒளியும் ஒலியும் ஓசியில் பார்த்த நாட்கள்..
அம்மாகிட்ட permission வாங்கி ..அவசர அவசரமா படிச்சு... அரக்க பரக்க ஒடினா  ..
குலேபகாவலினு...கொலை வெறி வரச் செய்த நாட்கள்..
எங்களுக்கும் காலம் வந்து...
solidaire   TV
advertisement கனவு..
நிஜமான து...
solidaire ..for Sunday movies..

geetanjali Iyer, neethi ravindran ம்..
news பார்க்க வைத்த நாட்கள்..
நாங்கள்ளாம்..ujala க்கு மாறிய நாட்கள்..
தமிழோடு.., hum log கூட..
nukkad ம்,  chitrahaar ம், rangoli யும்..
ஹிந்தி யை கற்க தூண்டிய நாட்கள்..
bharat ek khoj ...பார்த்த புண்ணியம்..
நிஜ வாழ்வில் கிடைத்தது..
ramananda sagar மூலமா..
ராமாயணம் அறிந்த நாட்கள்...
கடுகு வெடிக்கறதையே காட்டினாலும்..
கண் கொட்டாமல் கண்ட மாநில மொழிப் படங்கள்..(படிப்பைத் தவிர எதுவும் OK..)
வயலும் வாழ்வும் கூட..
வாய் பிளந்து பார்த்த நாட்கள்..


ரெண்டே ரெண்டு channel..தான்..
ஆனா..வீட்டை ரெண்டாக்காத நிகழ்ச்சிகள்..
remote இல்லாத..ரம்மிய நாட்கள்...
இன்னும் ஒரு முறை எப்போ பார்ப்போம்னு.
ஏங்க வைத்த நிகழ்ச்சி கள்..

அளவுக்கு மீறினா......
அதேதான் இப்போ..
யாரைப் பார்த்தாலும்..நாயகன் style ல ' நீங்க நல்லவரா.. கெட்டவரானு'..கேட்கத் தோணுது..
இப்படி பொலம்ப வெச்சுட்டாங்களேயா..

மீண்டும் பொதிகையைத் தேடி ..நான்..(யாரும் வீட்டில் இல்லாத போது) ...
மன்னிக்கனும்....
பழக்க தோஷம்...மெகா சீரியல் effect..
சுருக்கமா சொல்ல நினைச்சேன்..முடியலையே..

கோவில் பிரசாதம்.

கோவில் பிரசாதம்..
கோவில் பிரசாதம்..

வாக்கிங் போகும்வழி..
வருமே சிவன் கோவில்..
வலமாய்ச் சுற்றி வந்து..
வரமே வேண்டி நின்று..
வெளியே வரும் வேளை..
வழியும் நெய்யோடு
வாரியிறைத்த முந்திரியுடன்..
வட்டில் வெண்பொங்கல்....
வழங்கி மகிழ்ந்தாரே..

எரித்த கொழுப்பெல்லாம்..
ஏளனமாய் பார்த்திடுமே..

சொர்க்கம் காட்டி நீ..
சோதனையே செய்தாலும்..
சொக்கிட மாட்டேனே..
சொக்க நாதாவே..!!!

பொட்டல த்தில் கட்டியுமே..
விட்ட நடைத் தொடர்ந்தேனே
வீட்டுக்கு போய் அங்கே..
பொதுவாய் பங்கிட்டுண்ண..

Thursday, July 21, 2016

Letter to my beloved late friend

Champa ...fragrance...that was you my dear friend..
the soft spoken,ever smiling,  energetic,enthusiastic, affectionate..... adjectives fall short to say about you...

your way of welcoming ' வாருங்கோ'..
your hour long telephonic conversations..
your art of keeping in touch with people ...
your eyes ever speaking the language of love..
your heart to help anyone who knocks the door..
your face glowing with happiness..
your passion for pilgrimages..
your love for my kids..
your impartial attitude..
your calm and simple nature...
your craze for shopping..
your concern for everyone around you..
your way of receptiveness
your filled dining table ...
your favourite recipes..
your hospitality..
everything is fresh in my mind..
today, is your son's marriage..your dream wedding ..without you..
சொர்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம்..
அந்த சொர்கத்தை ...ஒரு புது சொந்தத்தை..
மகனுக்கு காட்டிவிட்டு..
சொர்கத்திலிருந்து..சந்தோஷித்திருப்பாய்..
நிச்சயமாய் நீ இன்று..
looking back at my Madhya Pradesh days, I really feel blessed for that posting of my hubby..
otherwise ,i would have missed a chance to meet such a  friend in my life..
one year gone ...you became a prey to the dreadful dengue... you were to finish the 108 divya desams pilgrimage..but Almighty had some other plan..
probably, in heaven too there might have been shortage of Champas like you...he had to call his beloved back to HIM.. for this reason ,i can't forgive HIM....



Monday, July 4, 2016

புத்தன்

உன்னில் உறங்கும் எனை..
ஊரெல்லாம் ஏன் தேடல்??
'என் வழியை'..
உன் வழியே..
ஊடகமாய் பார்த்திடவே..
உன் மனமும் வைப்பாயே..

உள்ளக்கதவு திற..
உண்மை உலகும்..
உள்ளத்து மலர்ச்சியும்..
உயிர்களிடம் அன்பும்
உன்னையே நீ அறியும்..
ஒர் நாளும் வந்திடுமே..

ஆழ்ந்த உறக்கத்தில் நானல்ல..
நீயேதான்..
அமைதியாய்க் காத்திருக்கேன்..
நீ விழித்தெழும்..
அந்த நாளுக்காக..

Sunday, July 3, 2016

ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்

ஸ்ரீராம்..ஜயராம்..ஜயஜயராம்..
ராமநாமம் சொல்லும் பேர்க்கு
நானிருக்கேன் என்பான் இவன்..
பொட்டிட்டு வேண்டும் பக்தரின்
பெருவினையும் பொடியாக்குவன் இவன்..
வடை மாலை சார்த்தி வழிபடுவோர்க்கு
வர மாலை தந்தருளுவன் இவன்..
அச்சம் தவிர்ப்பவன் இவன்..
அன்பரின் நண்பன் இவன்..
மலையாய்த் துயரம்..
பனிபோல் விலகும்..
மாருதி நாமம் சொல்கையிலே..
இவன் என் தோழன்.
என் மனம றிந்தவன்..
அசாத்தியன் இவன்..

அஞ்சனி புத்திரன் இவனைத்
தஞ்சம் அடந்தோர்க்கு..
சஞ்சீவன் இவன்..
பாதம் இவன் தொழுகையிலே..
பாவம் யாவும் விலகிடுமே..