Friday, December 24, 2021

Queen or king

 Queen or king


ட்ரெயின் லேசாக ஒர் ஜெர்க்குடன் கிளம்பியது.

எதிர் சீட் மாமா, மாமி,அவர் களுடைய ஒரே பிள்ளை ..

Matrimony.com களை அலசி எடுத்துக் கொண்டிருந்தார்கள்..

முன் சீட்டு குட்டி வால்..தாத்தா தாத்தா..பேச்சோ பேச்சு..


இதெல்லாம் கொஞ்ச நேரம் தான்..

என் காதில் பிறகு எதுவுமே விழவில்லை.


சாய்..காஃபி..ஆட்கள் கடந்து போவது மட்டும் கண்ணில் தெரிந்தது..


வடை ..வாசனையில் உணர்ந்தேன்..

பஜ்ஜி..போண்டா..பக்கத்து சீட்டுக்காரர் அரக்க பரக்க சாப்பிடுவது மட்டும் புரிந்தது..

சுண்டல் ..சுண்டி இழுத்தாலும்..

கட்லெட்..கண்ணை பறித்த போதும்..


அசையாமல் இருந்தேன்..


அந்த சின்ன சீட்டுக்குள் என்னை குறுக்கிக் கொண்டு..


விசாலமான இன்ப உலகத்தில் பயணித்தேன்..


அகிலா..உனக்கு என்ன ஆச்சுனு டென்ஷனா?..


ஊருக்கு கிளம்பும் முன் #QUEEN episodes பார்க்கணும்னு app எல்லாம் இறக்கி வெச்சேன்..


சரி..சீரியலுக்கு முன்னாடி கொஞ்சம் பாட்டு கேட்போம்நு கேட்க ஆரம்பிச்சேன்..


கடைசியில் எப்பவும் போல என்னை ஆட்கொண்டது #Raaja தான்..


வேற யார்..நம்ம #இளையராஜா  சார் தான்..


அடுத்து அடுத்து என்று அடுக்கிக் கொண்டே போக..

இறங்கும் இடம் வந்தது..


#Queen இப்போது மீண்டும் queue  வில்..


பயணங்கள் ..நிறைவு பெறுவதில்லை..இவர் பாட்டைக் கேட்காமல்..


Rangoli

 3D kolam போடேன் ..

Friend சொன்னாள்..


அதுக்கெல்லாம் ஞானம் வேணும்..ஞானம் வேண்டும் டோய் ..கரெக்டா😃😃😃


நமக்கு புடிச்ச.. 3D..


Determination 

Dedication

Devotion....


இதிலேர்ந்து deviation இல்லாமல் dynamic ஆ கொஞ்சம் denomination கூட இருக்க..

வாழ்க்கை சொர்க்கம்தான்..


கரெக்டா😃😃😃😃


அன்புடன்😃😃


Tuesday, December 21, 2021

Madhyamar friends meet 20 dec 2018

 சபதம் எல்லாம் எடுக்க போகலைப்பா..

சத்தியமா..

சோறு தின்ன மட்டுமே போன  கூட்டம்.

#நாங்க_ரொம்ப_நல்லவங்க.

சாப்பாடு வாசனை மூக்கை துளைக்க..எலி, காக்கா,நாய் வந்தது கூட பரவாயில்லைங்க..

சமாதிலேர்ந்து எழுந்து வந்து யாராவது share கேப்பாங்களோனு

#லபக்_லபக்_moment


 Such a wonderful day for this whole year.

Thanks Selvi Shankar Meena Anand Shanthi Srinivasan Geethmala Raghavan Niranjana Balu Sumathi Manivannan revathi Aparna Mukundan


Madhu graduation

 "நான் எப்பவும் உன் கையில் தான்மா.."

'சந்தோஷ் சுப்ரமணியம்' moment.


வருஷம் கடந்தாலும்..

பொக்கிஷம் இந்தப் படம்..


Last year pic..but everlasting and evergreen  memories da..

Madhu Ramasami


ரங்கோலி

 (Door)Mat finish..😃😃😃🌟⭐


போட்டிருந்தேன் வேறொரு திட்டம்..

பொழுதைப் புதிதாக்க அழகாய் ஒரு பூக்கோலம்..


வாசலில் இருந்த மிதியடியோ..

வாட்டமாய் எனை பார்க்க..

வந்ததே ஒரு எண்ணம்..

வா..வா..என்றேன்..

வண்ணத்தை அதில் நுழைத்தேன்..

வாவ்..வாவ்..என சொல்ல வைத்தது..

வஞ்சி நான் போட்ட கோலம்..

(நாமளே சொல்லிப்போம்😃😃💪)..


மிதி தாங்கும்   உன் விதியை..

மாற்றினேன் இன்று ஒரு நாள் மட்டும்..


மகிழ்ந்திருப்பாய் நீயும்..

மலர்ந்த புது திங்கள் நாளில்..


Let's bring a broad smile in everyone and everything around us..


Mogambo kush hua..இல்ல இல்ல..

எங்க வீட்டு door mat ம் இன்று மகிழ்ச்சியில்😃😃


Border..ம்ம்ம்ம் நிச்சயம் உண்டு😃😃


அன்புடன்😃😃


Saturday, December 18, 2021

கல்யாண_வைபோகமே

 Sorry for posting late. 


#கல்யாண_வைபோகமே..

இந்த ஜாதகம் ரொம்ப சூப்பரா பொருந்தி இருக்கு.

பையனுக்கு டெல்லில வேலை ..என்ன proceed பண்ணலாமானு அப்பா..

அந்த ஜாதகத்தில் கோடு கட்டம் தாண்டி அவள் கண்ல பட்ட..அந்த வாசகம் ..' boy loves music'.

பாட்டு என்றாலே பத்தடி பாய்ந்து ஓடுபவளாச்சே..

" ஒரு பையனோட வாழ்க்கையோட விளையாடதப்பானு சொல்றதை கண்டுக்கவே கண்டுக்காத அப்பா


பொண்ணு பார்க்க  informal ஆ ஆஃபிஸில் வந்து பார்த்த பையன் வீட்டார் ' முல்லை மருதம் நெய்தல் பாலை' னு போஸ்டிங் எங்க வேணா இருக்கும்னு சொன்ன போது ' place is not the constraint .i can live anywhere னு பந்தா விட்ட பொண்ணு..

அதுக்கும் ஒரு படி மேல ..' பையனோட சிஸ்டருக்கு இப்பொ வர முடியாதாம்..so பொண்ணே வந்து பையனை பார்க்கட்டுமேனு ஏகபோக முடிவுக்கு ஓகே பண்ணி ஜம்முனு போய் இறங்கி பையனோட சிஸ்டர் சமைச்சதை சாப்பிட்டு ஓகே ஓகே கல்யாணத்தை எப்ப வெச்சிக்கலாம்னு பையனைக் கேட்டு முடிவு பண்ணிடுனு பச்சைக் கொடி காட்டின பொண்ணு..

நாந்தேன்..நானே தான்.


கல்யாண நாள் நெருங்க நெருங்க ..peer pressure .

பார்லர் போய் ப்ளீச்சும் மெஹந்தியும் போட்டுக்கோனு

தயங்கித் தயங்கி அம்மாகிட்ட கேட்க..' பளிச்சுனு இருக்கற மூஞ்சிக்கு ப்ளீச் எதுக்கு..

மருதாணி இலை இருக்க..மெஹந்தி கோனெதுக்குனு வீரமா வசனம் பேச...

என்னை பார்த்து பரிதாபப்பட்ட சித்தப்பா..

cost effective ஆ தீக்குச்சியால என் கையில் கோலம் போட்டு அதுதான் மெஹந்தினு சத்தியம் அடிச்சுட்டார்..ம்ம்ம்ம்..


அத்தை பின்னல் போட..சித்தி புடவையும் நகையும் போட்டு அலங்காரம் பண்ண..குட்டியூண்டு ரோஸ் பவுடர் டப்பாவை கல்யாணத்துக்கு வந்த எல்லாரும் ஷேர் பண்ண..சிக்கன சிகாமணிகள்.


எல்லா வீட்டு கல்யாணத்திலயும் ஸ்டோர் ரூம் இன் சார்ஜா இருந்த அப்பா , காண்ட்ராக்ட் ல விட்டுடுனு..யாருக்கு தெம்பு இருக்குனு அத்தைகள் சொல்ல..சங்கரன் மாமா புண்ணியத்தில் சாப்பாடு.


'உன் கல்யாணத்தில மசால் தோசை சூப்பரா இருந்ததுனு இன்னும்.சப்புக் கொட்டி சொல்வார் பலர். 

எங்கே..நாம தான் கொலைப்பட்டினி யாச்சே முகூர்த்தம் முடியற வரைக்கும். 

டேஸ்டே பார்க்கலை..


ஆனால் வேஸ்ட்டே எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் சங்கரன் மாமா.


ஒத்தையா பிறந்த எனக்கு..ஜெம்மா ஒரு மாமியார்,ஜம் ஜம்முனு ஒரு நாத்தனார்,மன்னி மன்னி என்று வாய் நிறைய கூப்பிடும் மச்சினர்..

அமைதியின் உருவான அகத்துக்காரர்..


இவர்களையெல்லாம் தாண்டி..நான் ஏங்கிக் கொண்டிருந்த "அண்ணா" என்ற உறவு என் நாத்தனார் கணவர்  Sankar Viswanathan வடிவில்.


பாசமலர் அண்ணாவெல்லாம் என்ன கூடப் பிறந்தால் தான் கிடைக்குமா என்ன?


ஆச்சு 25 வருஷம். எனக்கு எல்லா நேரத்திலும் எங்கே இருந்தாலும்..' நான் இருக்கேன்மா..எல்லாம் செஞ்சுடலாம் என்று என் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் shankar Anna..


என் கல்யாண வைபோகத்தில் கிடைத்த காலத்தால் அழியா உறவென்னும் பரிசு my Anna.

நேற்று_இல்லாத_மாற்றம்

 எச to Bala Hari

ஒரு நல்ல பாட்டை கேட்க வைச்சு அதை நாராசமாக்கிய எனக்கு நரகம் தான்


Nimmi suresh  judge வாங்கப்பா


#நேற்று_இல்லாத_மாற்றம்


நேற்று போட்ட போஸ்ட்டு உன்னுது

மார்க்கு என் காதில்  ஏனோ சொன்னது

இது தான்  போஸ்ட் என்பதா..

கமெண்ட்டு பொங்கி விட்டதா.

லைக்கு அள்ளி விட்டதா

சொல் மனமே..(2)


1st interlude


காமெடி இல்லை என்றேன்

குருவைக் காணும் வரை

கர்ஜனை இல்லை என்றேன்

 குஜராத்தை கேட்கும் வரை..சில

பதிவு பிட்டேன்று சொன்னேன்

உண்மை தெரியும் வரை..


கீர்த்தி போஸ்ட்டின் சுவை

அர்த்தம் புரியும் வரை

கார்ட்டுன் அழகின் சுவை..

ரேவதியை காணும் வரை..

potw தா...னே..

போஸ்ட்டுக்கு கிடைக்கும் வரை..


(நேற்று போட்ட போஸ்ட்..உன்னுது)


(2nd interlude flute and chorus and other instruments)


போஸ்ட்டு...எழுதாமலே..

ஜெம்மும் நீ ஆகலாம்..

எசயும்  போடச் சொல்லி

ஈஸியா உசுப்பே..த்தலாம்..

தலைப்பு கொடுக்காமல் போனால்

தலையே..வெடிச்சுடுமா?


விஷயம் இல்லாமலே..

வாயை மென்றிடலாம்..

கருத்து இல்லாமலே..

கவிதை நாம் பாடலாம்

fb இல்லாத வாழ்வில்

fun ம் இருந்திடுமா..


(நேற்று ..)


https://youtu.be/UuDzU2OTN50

Wednesday, December 15, 2021

Seetharaman mama

 சென்ற வருடம் ..வெள்ளம் வடிய ஆரம்பித்த வேளை..oven எல்லாம் இல்ல..சுட வைக்க...வாங்கோ ..சாப்பிடுடலாம்.' மாமி சொல்ல..என்றைக்குமே உடனே வந்து கலத்தில் உட்காராத மாமா..தட்டின் முன் உட்கார..வந்தது..நாளு நாளாய் காணாமல் போய் இருந்த கரெண்ட்..இரு இரு ..போய் motor போட்டுட்டு வந்துடறேன்..சட்டென கிளம்பினார்..

கொஞ்ச நேரம் ஆச்சு..என்ன இந்த மனுஷன் சத்ததையே காணும்..மோட்டார் போட்டுட்டு தோட்டத்தை நோண்ட போய்ட்டாரோ..பொறுமையிழந்த மாமி சமையல் கட்டிலிருந்து வெளிய வந்து பார்த்தாள்..அங்கே மாமா..மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறார்..

வந்த டாக்டர் சொன்னார் ..'மனுஷர் போய் சேர்ந்துட்டார்..அரை மணி ஆச்சு..shock அடிச்சிருக்கு..

electricity board ல் நல்ல பதவியும் பேரும் வாங்கிய இவருக்கு எப்படி.. 

மோட்டார் வயரைத் துருவிப் பார்த்ததில் ஒரு சிறு இடத்தில் இருந்த கசிவு ஒரு பேரிழப்புக்கு காரணமாயிற்று..

சீத்தாராமன் மாமா..சுத்தக் கார மாமா எப்போதும்..எங்கும் எதிலும் சுத்தம்..சுத்தம்..

எங்கள் குட்டி வீட்டில் வந்து வாழ்ந்த முதல் tenant..

இன்னிக்கி நான் ஊரெல்லாம் Scooty ல் சுத்த காரணம் அவர்தான்..என் ஆசான்..

அதோ அங்கே குழி இருக்குனு..அப்பா அலற வைத்த போது..

akils வாடா..பத்து தடவை எட்டு போடு..பறக்கலாம் நீனு

எனக்கு TVs champ ஓட்டக் கத்துத் தந்த மகராசன்..

காடு மேடெல்லாம் ஒட்ட உதவியது..அன்று அவர் கற்றுத் தந்த பாடம்....

miss you mama..

just through this post i request all my nears and dears to be doubly careful while handling the electrical equipments and please take all precautionary measures before hand to avoid accidents like this..

Disclaimer: I am not good at science..the reason for the untimely death as told written here

என்னை மறந்ததேன்...???

 என்னை மறந்ததேன்...??? 


நன்னா தேடு...அந்த புஸ்தக மூட்டைக்குள்ளே இருக்கா பாருடா..அதுலதான் இருக்கு அந்த  பழைய டைரி கடுப்பில ஏணியில் ஊஞ்சல் ஆடிண்டு இருந்த பையன்...அதே எல்லாம் எப்பவோ எடைக்கு போட்டு அம்மா mug வாங்கிட்டாப்பா..இப்போ எதுக்கு என்னை ஏத்தி வைச்சு உயிர வாங்கற...ஏணியில் இருந்து குதித்து மகன் ஓட..டேய்..அவசரமா ஒரு நம்பர் வேணும்டா....அங்கு வந்த தர்மபத்தினி.. க்கும்..செல்லுல எல்லாம் இருக்கும்போது..எதுக்கு இந்த லொள்ளு உங்களுக்குனு வசைபாட..ஐயோ..செத்துப் போன செல்லே..உயிர் உடனே வந்த Bsnl வழியா பேசக்கூட..இப்போ நீ வேண்டியிருக்கே....


காசு இல்லாம இருக்கலாம்..ஆனா..கைப்பேசி இல்லனா  ..technology க்கு salute செய்தாலும்..ரொம்ப அடிமையாகிட்டோமோ...எண்ணம் அப்பப்போ வரும்.

ஒரு flash back..

ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஆளைப் பிடிச்சு Bsnl connection வாங்கி..அதுக்கு ஒரு opening and closing password போட்டு பூட்டிப் பூட்டி..பில்லுக்கு பயந்து பேசிய காலம்..

எல்லாரோட டெலிஃபோன் நம்பரும் alphabetical order ல அழகா..அட்ரஸும் சேர்த்து எழுதி இருக்கும்.. புது வருஷ டைரி வந்ததும் அச்சு பிசகாம அதை copy வேற பண்ணி, பழைய டைரியயும் தூக்கிப் போடாம reference வெச்சுண்டு வாழ்ந்த நாட்கள்..

எல்லா நம்பர்களும் மனப்பாடம்..இப்போ மாதிரி வீட்டு நம்பரே செல் பார்த்து சொன்னதில்ல..

என் அம்மாவுக்கு ஆசையா வாங்கி கொடுத்தேன் ஒரு Nokia..அதை நோக்கியதே இல்லை அவள்..

அம்மா..இந்த landline phobia வை விடேன் என்றால்..இது தான் செளகரியம்...cost effective என்பாள்.அம்மா grow up என்பேன்..நான் தான் வளரல

எத்தனை digit ஆ இருந்தாலும் மூச்சு விடாம சொன்ன அம்மா எங்கே.. அந்த நம்பர் 23 ல முடியுமோ..இல்ல இல்ல..94 னு ஆரம்பிக்கும்....சட்டுனு ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிறது..அந்த செல்லைக் கொண்டா..சொல்லிடறேன்.. அந்த செல்லில் உள்ள contact list ஐ google ல வேற save பண்ணி இருக்கேன்..என்ன ப்ரயோசனம்..

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்...


மின்சாரம் இல்லாத போதும்..முழுமுச்சில் வேலை செய்யும் மூளையே..இன்னும் உன்னைக் கொஞ்சம் உபயோகிச்சு இருக்கலாமோனு தோணறது..


பழையன் கழிதலும்..புதியன புகுதலும் ஆனாலும்..இன்னும் என் அம்மா வீட்டில் அந்த ஃபோன் stand அதில் இருக்கும் telephone directory ம் அவள் கையெழுத்தில் எழுதப்பட்ட systematic telephone டைரியும்..nostalgic தான்.

Monday, December 13, 2021

Train journey

 economy 'க்ளாஸோ..'executive' க்ளாஸோ..enjoy பண்ணுவோம் வாழ்க்கைப் பயணத்தை.


destination வந்ததும் depart ஆகும் பயணத்தில் delighted ஆ இருப்போமே


 destiny என்று புலம்பாமல்  designer ஆகுவோம். Dynamic ஆக இருப்போமே..


அன்புடன்..

அகிலானந்தமயி


இப்போ இந்த பயணம் பற்றி நீங்க என்ன சொல்லப் போறீங்க ?

Filterத்துவம்

 #Filterத்துவம்



Filterல் போட்ட காஃபி...பேஷ்..பேஷ்

வடிகட்டின டீயோ..வாவ்..உஸ்தாத்..வாவ்..

சலித்த மாவில் snacks..ஆஹா..ஜோர்..

சுத்திகரிப்பட்ட தண்ணீர்..அடடா தேன்..


Vacuum cleaner ல் filter..பேசும்

வார்த்தையிலும் இருக்கணும் filter..


எண்ணெய் வடிகட்ட paper filter..

எண்ணத்திலும் இருக்கணும் filter.


எங்கெங்கு காணினும் ஃபில்ட்டரடா..

எனக்கு ஒண்ணுமே புரியலடா..


மணமும் சுவையும் சேர்க்கும் வடிகட்டல்..உண்மை

மனமதை சொல்லிடுமோ?..


வடிகட்டுதலுக்கு பழகி இங்கே..

வாழ்க்கை நாளும் ஓடுதடா..


Filter coffee photo எடுத்தால்..

எந்த filter வேணும்னு கேட்குது என் app ..🤔

எங்கே போய்ச் சொல்வேன்?

Filter க்கே filter ஆ..தாங்காதுப்பா ( தங்கப் பதக்கம் சிவாஜி😄😄)


நேர்மறை எண்ணங்கள் தங்கிடணும்..

எதிர்மறை எண்ணங்கள் எறிந்திடணும்..


வடிகட்டாத 

 என் வேண்டுதல் இதுவே..


ஆனால்..

வடிகட்டின..மு..ஆக மட்டும் இருக்கப்படாது..😄😄😄👍💪


அன்புடன்..😄😄


இந்த photo ல என் original coffee எது?😄😄😄

Tuesday, December 7, 2021

Happy birthday raghupathy uncle

 Wishing you a very very happy birthday Raghupathy N uncle..


நீங்க விற்punனராக இருந்தாலும்..

World பூரா சுத்தினாலும்..

வீற்றிருப்பவர் எங்கள் மனமென்னும் சிம்மாசனத்தில்..என்றும்


சார்னு கூப்பிட ஆரம்பித்து.இன்னிக்கு உரிமையாக..uncle என்று கூப்பிட வைத்தது..

வேறென்ன?

உங்கள் அன்பும், கரிசனமும், care ம் தான்.


NY ல் இப்போ இருந்தாலும்..

I am near to you என்று ..

எங்க எல்லாரிடமும் ..

Communication ல் இருக்கும் உங்களுக்கு..


பிறந்த நாள் வாழ்த்து சொல்ல

.பேறொன்று பெற்றேன் நான்..


என்னை இப்போ எடு ஒரு ஃபோட்டோ என்று..

நீங்க கொடுத்த pose..


Monday, December 6, 2021

நாளை..உனதே..

 நாளை..உனதே..


வீசி எறியப்பட்ட புத்தகப்பை..

விடுமுறை நாளையென சொல்லிடுமே


திறந்து கிடக்கும் பேனாவோ..

டீவிக்கு ஓடும் அவசரம் சொல்லிடுமே


_off செய்யாத மடிக்கணினி..

online இருப்பதை சொல்லிடுமே


போட்டுப் பார்த்து பரத்திய துணிகள்..

போக வேண்டிய பார்ட்டி சொல்லுமே.


அடுக்கி அழகாக்கிய அலமாரி.

அவள் தோழி வருவதை சொல்லிடுமே..


Green tea யில் காய்ந்த கப்

காலை வரை படிப்பை சொல்லிடுமே


கழுத்தைக் கட்டி கொஞ்சையிலே..

காரியம் எதுவென்று புரிந்திடுமே..


உருட்டல் மிரட்டல் வேகாது பருப்பு..

உனக்கு வேலையே இல்லையானு சலிப்பு


கிளிக்கு அங்கே இறக்கை முளைக்கும்..

விடுதலை பெற்று வெளியே பறக்கும்..


சத்தம் அடங்கும்..

சுத்தம் பெருகும்..

கத்தலில்லா..வாழ்வு..

கசக்கும் எட்டிக்காயாய்..

 காத்திருப்பு அதிகமாகும்..

ஏக்கம் நிறையுமங்கு..

வழி பார்த்து ..

விழி ஏங்கும்..

சீறியது போய்..

சிறுபிள்ளையாய்..

சின்ன மனம் ஏங்கும்..

செல்லமே..

எப்போ நீ வருவாயென்று..


வருவாய் நீயும்..

வீடே மாறி ப் போகும்

அம்மா..

ஏன் இப்படி அழுக்கா இருக்கு..

என்னை கேட்க ஆளாவாய் நீயும்..


தேடல்

 06-12-18

#மனதில்_தோன்றிய_முதல்_வார்த்தை.

#தேடல்

மூக்கு கண்ணாடி எங்கேனு தேடலோட ஆரம்பிக்கும் விடியல்.

மூக்குக்கு மேல இருந்தாலும்..துழாவித் துழாவி..எங்கே வெச்சேன்னு சில சமயம்..

கண்ணுக்கெதிரிலேயே இருக்கும் சாவி கொத்தை கண்ட இடமெல்லாம் தேடல்.

வீட்டிலும் தேடல்..வெளியிலும் தேடல்..


தேடல் இல்லாத் வாழ்க்கை...தொய்ந்து போன ஒரு நடைப் பயணம்.


" அம்மா..என்னோட நோட் எங்கனு பாரு' இது கேட்காத வீடு இல்லை..சரினு தேடப் போனால்..எப்பவோ தொலைந்து போனது என்று முடிவு கட்டின முக்கியமான பொருள் ஒண்று கிடைக்கும்.


தேடல் ..ஆனால் நிறைய பாடம் கற்றுத் தரும்.

முதலில் எதைத் தேடறோம் என்கிற தெளிவு வேண்டும்.

அடுத்து, சில தேடல்கள்..பழசை தூசி தட்ட வைக்கும். புதுசாவும் வழிகாட்டும்.


இரையைத் தேடும்போது கொஞ்சம் இறையையும் தேடுவோம்.


" நான் இங்கிருக்கேன்..நான் இங்கேயும் இருக்கேன் ' என்று நம்மை கூப்பிட்டபடி இருக்கும் இறைவனைக் காண்போம்.


கடுமையா பேச நினைக்கும் போது இனிமையான வார்த்தை தேடுவோம்.


' உனை எங்கேத் தேடுவேன்..'என்று சும்மா இருக்காமல்..சுறுசுறுப்பாக இருப்போம்.

தேடிக் கொண்டே இருங்கள் எதையாவது.

வாழ்க்கையின் பக்கங்கள் வழி காட்டும் தேடல் வரிகளால் நிரம்பட்டும்.


#அதுசரி..இன்னிக்கு உங்களுக்கு தோன்றிய முதல் வார்த்தை என்ன மக்களே?

#டிசம்பர்..டிசம்பர்..ஹாலிடே moodu

 #டிசம்பர்..டிசம்பர்..ஹாலிடே moodu..


( december போஸ்ட் ..கொஞ்சம் delay ஆச்சு..

என்கிட்டேர்ந்து தப்ப முடியாதே நீங்க ..நட்பூஸ்😀)


வருடத்தின் கடைசி மாதம்

வந்தாச்சு டிசம்பர் மாதம்..


நாட்கள் நொடியாய் பறந்திட

நாமும் வந்தோமே டிசம்பர்..


சுகமும் சோகமும் கலந்திங்கே

சுவையான பல அனுபவங்கள்.


திரும்பிப் பார்க்க வைத்திடுமே

கடந்த தடங்கள் யாவையுமே..


வாழ்க்கை தரும் பாடமுமே

வருடம் முழுதும் நடந்திடுமே


கற்றதும் பெற்றதும் பலவிங்கே

முற்றுப் புள்ளி ஏதிங்கே..


இருபதில் அடி எடுத்து வைக்க..

இருப்பதோ இன்னும் சில நாள்..


ஜனவரியில் போட்ட சபதங்கள்

ஜனித்ததா? ஜன்னியில் படுத்ததா..?


அசை போடும் நேரமிதுவே..self

Appraisal ஒன்று செய்வோமே..


Nineteen இப்போ சோகத்திலிருக்கோ..?

Teenage முடிந்து போச்சென்றே..!


 வருஷமும் வயதும் போனால் என்ன?

 வாழ்ந்தும் காட்டுவோம் ..வழியும் காட்டுவோம்..


அன்புடன் ...


Wednesday, December 1, 2021

Train..train

 சும்மா..ஒக்கார முடியல..


காபி டீ போண்டா கூவல் ஒருபுறம் .

காள்  காள் கத்தும் சத்தம் மறுபுறம்


சிணுங்கும் செல்ஃபோன்  காதோடு ஒருபுறம்

சின்ன குழந்தை செல்லம் மறுபுறம்


சீனியர் சிட்டிசன் சீற்றம் ஒருபுறம்.

சீறிப்பாயும் சிறுபிள்ளத்தனம் மறுபுறம்..


குறட்டை விட்ட் கூட்டம் ஒருபுறம்.

கூவி வித்ததை கொறித்தது மறுபுறம்..


ஊர்க்கதை பேசிய உறவுகள் ஒருபுறம்..

உப்பு பெறாததை ஊதியது மறுபுறம்..


வயதான அம்மா..வாஞ்சை ஒருபுறம்..

வாயத் திறவென மிரட்டல் மறுபுறம்..


ஆபீஸ் வேலையில் ஆழ்ந்தோர் ஒருபுறம்..

அனந்த பத்மனாப சயனம் மறுபுறம்..


விடாது ஒலித்த ஒம் பூர்புவஸ்வ ஒருபுறம்..

விட்டதை பேசியே வீணான காசு மறுபுறம்..


வருமான வரி விவரித்தல் ஒருபுறம்

வரிசையில் நிக்கணுமே கவலை மறுபுறம்


அடைபட்ட இருக்கையில் நெளிந்தது ஒருபுறம்..

கொட்டுதா மழை யங்கே..கேள்வி மறுபுறம்..


சென்ட்ரல் வந்ததும்

சிதறும் இக்கூட்டம்..

சுவாரசியம் என்றும்..இந்த

சிக்கு புக்கு ரயில் பயணம்

டப்பாக்கள் சொல்லும் கதை

 கன்னம் கிள்ளும் மாமி..

காதைத் திருகும் மாமா..

............,.........

போனவுடன் கடிதம் போடு

புதினாவும் கீரையும் சேரு..


ஜோதிகா  பூவெல்லாம் உன் வாசம் 

பட த்தில ஆடிக் கொண்டிருக்க..


ஆஹா..

என் மனமும் கொஞ்சம் சிறகடித்து reverse ல் பறந்தது..

கட்டுச்சாதைக் கூடை மணமணக்க ரெடி..

கண்ணீரும் கம்பலையுமா நான் அழ..அப்பா அம்மா அழ..

யார் டெல்ல்லிக்கு வந்தாலும் டப்பா டப்பாவா சாமான் ..தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கொஞ்சம் தடம் புரண்டு போனாலும் என் பேர் அதில் மாட்டிக்கும்..பொடிகள், அப்பளம், நொறுக்குத் தீனி, அரிசி மாவு...அதைவிட..காய்ச்சிய நெய்..அஞ்சாறு சம்ப்டத்தை திறக்க அரைக் கிலோ நெய்..கவர் கட்டி, துணியால் கட்டி மாவடு, ஆவக்காய்.காப்பிப் பொடிக்கு ஒரு தனி பாக்கிங்...

.இப்படி ஒரு லிஸ்ட்..


டெல்லில எல்லாம் புடவை விலை ஜாஸ்தினு பண்டிகைக்கு புடவைகள்.மாட்ச்சிங் ப்ளவுஸ்..

ஃபோன் அடிக்கடி பேச முடியாது..ஒரு நிமிஷம் பேசினாலே 300 ரூபாய் சொளையா எடுத்து வெக்கணும்..ஒரு புடவைக்குள் பத்திரமா இருக்கிற மாதிரி அம்மா அப்பாவின் லெட்டர்ஸ்.. முதல்ல வேகமா படிச்சு முடிச்சுட்டு..திரும்பத் திரும்ப ஞாபகம் வரும்போதெல்லாம் எடுத்து படித்து..

இதே காலப் போக்கில் ஊர்கள் பழக..இதெல்லாம் அங்கெயே கிடைக்கிறதம்மா..ரெசிபி சொல்லு நானே ட்ரை பண்றேனு..கை காலை சுட்டபடி..கற்றுக் கொள்ள ஆரம்பித்து..பின் ஒவ்வொரு முறை பிறந்தகம் வரும்போதும் புதுசா கற்றுக் கொண்டதை டப்பாவில் கொண்டு வந்து கொடுத்து..வீடே மணக்க நான் சமைக்கிறேன் என்று அம்மாவை ஒரங்கட்டி..( சாமான் யத்தில கிச்சன் தர மாட்டா அம்மா..)

எத்தனை instant , ready to eat வந்தாலும்..இந்தப் பழக்கம் இன்னும் நம்மிடையே ஒட்டிக் கொண்டுதான் இருக்கு. இப்போ எல்லாம் அம்மா.. மாமியார் எல்லாரும் expert ..domestic ,international pack செய்து அனுப்புவதில்..

காலி டப்பாக்கள் கதை பல சொல்லும்..

வருஷம் போனாலென்ன..வயசும் ஆனாலென்ன..

இந்த tradition இன்னும் தொடர்கிறதுதானே

Saturday, November 27, 2021

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?

 எதிலும் இங்கு  இருப்பான் அவன் யாரோ?


Baby corn க்குள்ளும் தெரியும் பகவான்..


ஒவ்வொரு layer ஆ பிரிக்கப் பிரிக்க..

மண் வாசனையோடு..

பட்டு வஸ்த்திரத்தில் ..

சுத்தி வைத்த குழந்தை போல..

அழகா..ஒய்யாரமா ..படுத்துண்டு..

இந்த baby corn.


இந்த சின்ன சோளத்துக்கே ..இப்படி பாதுகாப்பு வளையம் தருபவன்..

நம்மையும் காப்பான்..காப்பான்..🙏🙏


God tussi great ho🙏🙏


Friday, November 26, 2021

எனக்கொரு மிஷின் வேண்டு..மடா..

 எனக்கொரு மிஷின் வேண்டு..மடா..



நெல்லு பொரியா..அவல் பொரியா..

எந்த பொரியானால் என்ன..?


எலி கூட சிக்கும் பொறியில்..ஆனால் இந்த சின்னப் பொரி இருக்கே சிக்காது என்னோட சின்ன கையில்..


பாகு பதம் பல இருக்காம். கம்பிப் பதம், தக்காளிப் பதம்..டங் பதம்

கம்பியில நடக்கற மாதிரி தான். balance கொஞ்சம் போக ..கம்பி ..கயிறு மாதிரி ஆகும்..கம்மர்கட் கண்டிப்பா கிடைக்கும்.

பொரி உருண்டை ...


பொல பொலனு கொட்டும் சில சமயம்..

'பா'ல் மாதிரி போட்டு விளையாடலாம் சில சமயம்.

பிடிக்க வந்தா உருண்டை...இல்லாட்டி தூள்தும்பட்டை.

இதுதான் நம்ம பொரி பாலிஸி.


ஒட்டுகிறதே பாகு என்று பொரியோடு கலக்க..

மாலில் கிடைக்கும் caramalised popcorn மாதிரி தனித்தனியா முழித்து நிற்கும்..


கூட்டணி முறிந்து தனி சீட்டு கேட்டு பொரி(றி) பறக்கும்.

நாலு உருண்டை பிடிப்பதற்குள் நாக்கு தள்ளிடும்.

சுடறதேனு சும்மா இருக்க முடியாது...உஸ் உஸ்னு கைக்குள் அமுக்கினாலும் உனக்கும் 'பெ'ப்பேனு ஓடிப் பிடிச்சு விளையாடும்.


உதிர்ந்து போனாலோ..

உருவாகும்  பல பலகாரம்.

அதுக்கு Meena Anand Bhavani Santhanam mam எல்லாரும் நம்மை enlighten பண்ணுவார்கள்.


விக்ரம் வேதாள் மாதிரி..

விடாது முயற்சி..

வருஷா வருஷம்.


எதற்கெல்லாமோ மெஷின் இருக்க..

இதுக்கு ஒரு மெஷின் வேண்டுமடானு..

கேட்கறது யாராவது காதில் விழட்டும்.

வெல்லமும் பொரியும் கலந்து போட்டதும்..

வெளியே வரணும் வட்டமாய் ஒரு பொரி உருண்டை..


நம்ம புலம்பல் எல்லாம் முடிந்து..இப்பொழுது ப்ராத்தனையும் செய்யலாம்.


அப்பமோ அடையோ..

அலண்டு போன

அவல் பொரி உருண்டையோ..

ஆசையாய் படைக்க..

அங்கே வருவான்..

அருணாச்சலன் அவன்தான்..

அருளும் தருவான்..

இருளும் அகற்றுவான்.


பொறுமையா படிச்சவங்களுக்கு பொரி உருண்டை கொடுக்கத்த்தான் ஆசை.

(அடடா..இது என்ன சோதனை நு உங்க மை.வா. கேட்கிறது)

அடுத்த வருஷம் பார்ப்போம்..

மெஷின் வருதா இல்லை..

முன்னேறுகிறேனா நான் என்றே..


மிக இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

Thursday, November 25, 2021

மனிதற்கு மொழியே..தேவைதான்..

 மனிதற்கு மொழியே..தேவைதான்..


ஆட்டோல போகணும்் ..app வேணும்.

அரிசி வாங்க போகணும் ..app வேணும்..

எலக்ட்ரீஷுயன் வந்தா app வேணும்..

ஏதாவது கேட்கணுமா..app வேணும்..

வேற என்ன ..learn Kannada app தான்..


இன்னுமா இந்த வீட்டு வழக்கம் கத்துக்கலனு ..கல்யாணமான பொண்களை கலாய்க்கற மாதிரி..இன்னுமா..நீ..கன்னடம் கத்துக்கலை.. கரெக்ட்தானே..

 வந்து வருஷம் நாலாச்சு..வாழும் இடத்தின் மொழி கற்பது மிக அவசியமாச்சே..

ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு அழகு..

relate பண்ணி படிக்க ஆரம்பிக்க இந்திய மொழிகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து கிடக்கும் அற்புதம் புரிகிறது.

 ஹிந்தியுடன் உயிர் வாழலாம்..ஆனால்..சில உணர்வுகள் புரிய ..learning local language is a must)

எங்க ஊர் செய்தித்தாளும்..நானும் இருக்க பயமேன்னு சொல்ல..

வார்த்தைகள்.. சின்ன sentence கத்துண்டாச்சு..

but எதிர்ல் யாராவது பிரவாகமா..பேசினால்..வாயிலிருந்து தெரிந்த..கற்ற வார்த்தை கூட..வர மாட்டேங்குறது..

ஜுனூன் பார்த்து கற்ற இந்தியுடன் வாழ்க்கை தொடங்க..குழந்தைகளோடு நானும் கற்றேன் பேச ..எழுத..

இப்பொழுது மீண்டும்..பாடம் துவக்கம்..

I loved this quote too..

"If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes to his heart.❞

‒Nelson Mandela..


இந்த today's word..நானும் சொல்ல வாழ்த்துங்களேன் friends..


Happy Sunday

உன்னை நினைச்சேன்.

 உன்னை நினைச்சேன்.


.

பஜ்ஜி பண்ணினேன்..தங்கமே..ஞானத் தங்கமே..


சென்னையில..தான்..

புயலும் ..மழையும் ..சரி..

பெங்களூர்ல..

எதுக்கு பஜ்ஜி..?


அங்க அடிக்கற காத்து effecttu..

இங்கேயும் சில்லுனு இருக்குல்ல..😄😄


நிவர்...

சென்னையில் இப்போ..எங்கும் river..

உன்னைப் பார்த்தாலே இப்போ..shiver.

பயத்தில வருது fever...


காட்டாதே உன் பவர்..

ஏற்கனவே போயாச்சு power..


எடுத்து சுத்தாதீங்க..

உங்க கார்..டூவீலர்..


வீட்டுக்குள்ளே இருந்து..

பார்த்துக் கொண்டே இருங்க..

Facebook சுவர்..

அது ஒண்ணுதான்..இப்போ

Entertainer.


செய்வோம் prayer..

அது ஒன்றே நம் saviour


நிவர்க்கு நிவாரணம்..கடலை மாவு

கவர்க்குள் இருக்கும் வாழைக்காய் ..வெங்காயம்..😄😄

Purkal youth development dehradun

 Blessed to be with the children of Purkal Youth Development Society. An opportunity to meet the wonderful person Mr.Swami for making a revolution and difference in  enhancing the stree sakthi. I owe to   SPIC MACAY Doon  for showing me the another face of life.. Thanks Rupi Mahindroo and Vidya Srinivasan


Sharon lowen

 The SPIC MACAY volunteers with Sharon Lowen


Kumaresh violin

 Its time for unlimited magical music..

Kumaresh ji the Fiddling Monk was in action for a SPICMACAY program...mesmerizing all through.. 

Generally doctors check your pulse...but this Fiddling monk caught hold of the pulses budding doctors...his master plan lies there..

Transformed the auditorium to a magical world...thestudents of Bangalore medical college taking a break from their mundane routines...clapped,questioned and interacted with this maestro.

 Shri manjunath ji in mridangam and Trichy krishnaswamy in ghatam...casually conversing with their instruments..

The joy is unbound..


செம்மை_மாதர்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#செம்மை_மாதர்

ஒவ்வொரு முகமாய் என் கண்ணில் வந்து போகிறது. செம்மை மாதர்..

பொறுமையின் சிகரமாக இருந்த 

 பாட்டியா..

அன்போடு அனைத்தும் கற்றுத் தந்த அம்மாவா..

வளர்த்த சித்தியா..

மனங்களை படிக்க கற்றுக் கொடுத்த மாமியாரா..

நானிருக்கேன் என்று கரம் எப்போதும் நீட்டும் நாத்தனாரா..


துணை நானெனும் தோழிகளா..


மண்டலேஷ்வர் கிராமத்தில் வயல் வரப்புகளிலும் கல்லிலும் முள்ளிலும் சர்ப்பங்கள் எங்கே இருந்து சிரம் நீட்டும் என்று தெரியாவிட்டாலும் ,விட்டு ஓடிப் போன கணவனை நினைத்து ஒப்பாரி வைக்காமல் தன் பெண்ணை வளர்க்க போராடிய மன்னு பாயா..


விரட்டும் கணவன் முன் வீம்பாய் இருக்காமல் அன்பால் கட்டிப் போடும் சகுந்தலா மாமியா?


 என் பெண்களுக்கு பாடங்களோடு வாழ்க்கை யும் சொல்லித் தந்த ரூபா டீச்சரா..


அக்கா..ஒரு வாரமா பூ வாங்க வரலையேனு அனுசரனையோடு விசாரிக்கும் பூக்கார நாகு வா?


மஸூரியில் கைவிடப்பட்ட பெண்கள் குழந்தைகளின் மறு வாழ்வுக்கு வழி வகுத்த purkal youth  development அமைத்த சின்னி மேம் ஆ..


பாட்டும் பரதமும் தெரியாவிட்டால் என்ன..வாலண்டியர் வேலை செய் ..ஃபோட்டோ எடு, வீடியோ பதிவு செய் என்று என்னை உசுப்பிய SPIC MACAY chairperson Rupi Mahindroo ஆ..


உனக்குள்ளே இருக்கும் புத்தனை ஏன் தாலாட்டி தூங்க வைக்கிறாய்..வெளியே கொண்டு வா.. உன் எதிரில் இருப்பவரிடமும் தேடு என்று சொல்லிக் கொடுத்த புவனாவா?


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

என் வாழ்க்கையில் இவர்களுக்கு நன்றி கூறாவிட்டால் நரகம் தான் .


ஆனால் ..எந்த அளவு ஒருவரின் பாஸிடிவ் சிந்தனை என்னை தூக்கியதோ..

அந்த அளவு சிலரின் நெகடிவ் சிந்தனை என்னை தாக்கியது.

இப்படி என் வாழ்க்கையில் எந்நாளும்.இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொள்ளவும் உதவியவர்களும் என்னைப் பொறுத்தவரை செம்மை மாதர்கள் தான்.

Saturday, November 20, 2021

Happy birthday Usha Venkat

 Happy birthday Usha Venkat



Happy birthday usha..


உஷா என்றால் உதயம்..நட்பில் 

இருப்பாள் பலரின் இதயம்.


English ல சொன்ன்னால்..dawn (னு)

கவிதை எழுதவே இவள் born (னு)


இவளிடம் உறைகிறாள் சரஸ்வதி..

இவள் எண்ணமெல்லாம் பாயும் நதி..

கதையோ கவிதையோ..எழுதித் தள்ளுவாள் ஊதி..

இவள் வலிமை..இவளின் அமைதி

இவளிடம் கற்கணும் இந்த உத்தி..


சபையிலே பேசுபவள்..

சங்கீத நுணுக்கம் அறிந்தவள்..

சங்கிலிக் கவிதைகள் எழுதுபவள்..

சகதோழி எனக்கென்று ..

சந்தோஷம் என்றும் உண்டு..


நினைத்துப் பார்க்கிறேன்..

நெஞ்சில் ஏன் நின்றாள் இவளென்றே...!!


என்னைக் கவர்ந்தது..


இவளின் வெண்பாவா?

கலிப்பாவா?.


அதையும் விட மேல்..

இவள் காட்டும்..

அன்பு எனும் அம்போ?


மேடைகள் பல நீங்கள் கண்டு..

வரணும் பெரிய ரவுண்டு..


தந்தேன் ஒரு மலர்ச் செண்டு💐💐💐

வாழ்க.. நீ..பல்லாண்டு🙏🙏

Happy birthday thenmozhi rajendran

 மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

 Thenmozhi Rajendran mam.


தேன்மொழி ஆச்சி..

நீங்க செய்யறீங்க எங்க மனசுல ஆட்சி..


மதுரை மகளிர் அணியில் ஒரு அங்கம்..

மனசோ சொக்கத் தங்கம்..


இவள் போடும் கஞ்சியும் கற்கண்டே..

இவள் பிடிக்கும் மாவுருண்டை வாயில்  கரையுமே..


மூலிகை விவரம் முற்றும் அறிந்தவள்..

முக்கண்ணனை மும்முறை தொழுபவள்..


ஓதுவாள் திருவாசகம் உலக நன்மைக்கு..

ஒரு ஊர் விடாமல் சுற்றிக் களிப்பாள்.


குருவிக்கும் கூடு கட்ட இடமளிப்பாள்..அதன்

கும்மாளத்தை அழகாய் ரசிப்பாள்..


Smile please என்று YouTube channel ..

சொல்லித் தருவாள் சூப்பும் 😋 சமையல் சூட்சமும்..


ஆண்டுகள் போனாலும்..

ஆச்சி..எப்போதும் யங் தான்.💪


பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன்..

 சிரிப்போடும் சிறப்போடும் வாழணும் நீங்க..🙏🙏💐


limitless_list

 #limitless_list..

எங்கிட்ட இருக்கு..

உங்க கிட்ட இருக்கா?


வீராப்பு நிறைய பேசினாலும் சில விஷயங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை..


இது இல்லாமல் என்னால இருக்கவே முடியாது....இதோ..


கண் முழிச்சதும் காபி டீ தண்ணீ கண்டிப்பா வேணும்..

ஃப்ரிஜ்ல எப்பவும் 2 நாளுக்கு சமைக்க ்வேண்டிய காய் இருக்கணும்.. (சமைச்சு வெச்சு expiry date ஒட்டினது தவிர..)


தலைகாணிக்கு அடியில் விக்ஸ் அமிர்தாஞ்சன் இருந்தே ஆகணும்.


படிக்கிறேனோ படிக்கலையோ புஸ்தகம், highlighter இருக்கணும்..


மழையோ குளிரோ..fan சுத்தணும்..


உதைச்சாலும், ஓட்டித் தள்ளினாலும் ஒப்புரவா இருக்கும் என் செல்ல scooty வேணும்.


பசங்களுக்கு பிரசங்கம் பண்ணினானும் வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் வேணும்.


செல்லுமிடமெல்லாம்..செல்லுல சார்ஜ் வேணும்..

என்கூட என் காமெராவும் இருக்கணும்..


வரும் விருந்தாளிக்கு தர ஜூஸும் காப்பியும் இருக்கோ இல்லையோ WiFi password தந்து பரம்பரை கெளரவம் காக்கணும்..


முகநூல் நட்பூஸ்களின் பதிவுகளைப் படிக்கணும்..


லிஸ்ட் வளர்ந்தபடி..இருக்கு..


உங்களுக்கும் உண்டா இப்படி ஒரு limitless list?

Thursday, November 11, 2021

தேங்குழல்த்துவம்

 #தேங்குழல்த்துவம்



என்னடா இது ..இப்படி snacks ஆ போட்டு கொல்றேனேனு..நினைக்கறீங்களா?


ஒவ்வொரு தேன்குழலும்..

சொல்லிடுமே..

ஒப்பிலா...தத்துவம்..


என்னனு கேக்கறீங்களா?


நாம எல்லாரும் எத்தனை பரீட்சை எழுத போயிருக்கோம்..

நம்ம அம்மாவோ..டீச்சரோ..

என்ன சொல்லி அனுப்புவார்கள்.?


முதல்ல ஈஸியா இருக்கற கேள்வியை எழுது..

அப்பத்தான்..கஷ்டமான கேள்வியை எழுத ஒரு confidence and courage கிடைக்கும்..


அது போலத்தான்..

எது ஈஸியோ..அதுலேர்ந்து துவங்கினேன்..😀😀😀


ஆனால்..

இதே concept ஐ..வாழ்க்கையில் apply பண்ண முடியுமா?😄


முடியாதே?😃😁


ஏன்னா..நமக்கு கேள்வியே தெரியாதே?


எந்த கேள்வி ..எப்போ வரும்..

Preparation செய்து கொண்டு யாரும் வாழ்க்கைப் பரீட்சை எழுதவே முடியாது😄


அதனால்...


அன்புடன்😄

Tuesday, November 9, 2021

Conveyor_beltத்துவம்

 #Conveyor_beltத்துவம்..


இந்த conveyor belt இருக்கே..

ஒரு நிமிஷம் கண் அசந்தால்..

நம்ம லக்கேஜ் இன்னொரு சுத்துக்கு ஓடிடும்..


இங்கே fb post அப்படித்தான்..

பார்த்து படித்து ஒரு நிமிஷம் நம் திசை திரும்ப போஸ்ட் ,திரும்பி ஒரு ரவுண்டடிக்க போய்டுது..😀


நம்ம வாழ்க்கையும் அப்படித்தான்..

அந்த தருணத்தை விட்டோம்னா..திரும்பி ஒரு சுத்து சுத்திட்டு தான் வர வேண்டியிருக்கு..


அதனால....


அன்புடன்😀

Monday, November 1, 2021

கோயிலில் கண்ட காட்சி..

 கோயிலில் கண்ட காட்சி..


காத்து கருப்பு பட்டதோ

கருத்தோடு கட்டினாள் 

கையில் தாயத்து..

காதல் நோயது ..தன்வீட்டு

காளைக்கு வந்ததறியா

கவலையில் தாய்.


மந்திரத் தாயத்து

மாற்றணுமே மகனிவனை

மருமக வரணுமே..எல்லார்

மனசையும் கவரும்படி..


வேடிக்கை மனிதரென

வேங்கடனும் நினைப்பானோ..

வேடிக்கை விட்டு..என்

வேண்டுதலை தொடர்ந்தேனே

மழைக்காலம் மேகம் ஒன்று..

 மழைக்காலம் மேகம் ஒன்று..


'பொத்துக் கிட்டு ஊத்துமடி வானம்...

சொட்டு கூட புலம்பலில்லா காலம்.'


அப்போ எல்லாம்  வீட்டு ரமணன்கள் அப்பாக்கள் தான்.. பேப்பரை மேஞ்சு மேஞ்சு படிப்பு.. அதில் weather forecast வரும். map ல கூப்பிட்டு காண்பிப்பார்கள்..கிழக்கிலிருந்து மேகம் தெற்கு நோக்கி வரது பாரு.  ஒரு சுழல் மாதிரி தெரியறதா..அது அப்படியே நகரும்னு கிளாஸ் எடுக்கப்படும்.  நம்ம வீட்டு வாசலில் நாளை மழை பெய்யும் கண்டிப்பா அடித்து சொல்வர். google map, google earth எல்லாம் குடும்பத் ்தலைவர்களே..

கண் விழிச்சதும் வாசலில் வந்து கை நீட்டிப் பார்க்கப்படும்..

அடுத்த நடவடிக்கை. raincoat..

 தங்கத்தில குடை ஜிமிக்கி போட்டு அனுப்புவா ஸ்கூலுக்கு...சத்தியமா குடை மட்டும் தரமாட்டார்கள்.

தொலைச்சுட்டு வந்து நிப்பேனு வசவு விழும். கலர் குடை கொண்டு வரும் ஃப்ரண்டை பார்த்தா ஒரு காண்டாகும்.

பீரோலேர்ந்து பாண்ட்ஸ் பவுடர் போட்டுண்ட பஞ்சு மிட்டாய் ரெயின் கோட் எடுத்து தரப்படும்..கவரோட பத்திரமா கொண்டுவானு கட்டளையுடன்.லேசா தூறல் போட ரெயின் கோட்டின் பவுடரும் கரைந்து ஒடும்.. ஹவாய் செருப்பு கரும்புள்ளி செம்புள்ளி அடிக்கும். அந்த பிளாஸ்டிக் ஒரு 'க'ப்படிக்க..மழையின் ஜில் காற்றை அனுபவிக்க முடியாதபடி் புழுங்கித் தள்ளும். தெரு முனை தாண்டியதும்...ரெயின்கோட் பைக்குள் போகும்..ஆனந்த கூத்தாட்டம் கொட்டும் மழையிலே..

அடுத்த குஷி..மாநிலச் செய்தியில் லீவ் சொல்லிடுவார் செல்வராஜ். லேசா தூற ஆரம்பிச்சதும் கரண்ட் கட் ஆகிடும். inverter இல்லாத இன்பமான காலம்..no படிப்பு.no home work..எல்லார் வீட்டு வாசலிலும் குட்டி குட்டி மாநாடு நடக்கும்..குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம்..ராம ராம ராம சொல்லுங்கோ கரண்ட் வரும்னு வயசான பாட்டி சொல்ல..வரக்கூடாது லைட்டுனு வேண்டியபடி ராம மந்திரம் தெருவில் ஒலிக்கும்..

பளபளனு துடைச்சு வெச்ச லாந்தர் விளக்குகள் மின்மினிப் பூச்சி மாதிரி அழகா எரியும்.அம்மாக்கள் சூடா சாதம் வெச்சு, காலையில் செய்த ரசத்தில் மிளகும் பெருங்காயமும்,

கருவேப்பிலையும் போட்டு கொதிக்கவிடும் வாசம் ஊரைத் தூக்கும்.பசியைக் கிளறும்..மெழுகு வர்த்தியும் அங்கங்கு எரிய.. ஆவி பறக்கும் சாப்பாடு அரை நொடியில் காலியாகும்.சாப்பிட்டு முடித்து இருட்டில் இன்னோரு ரவுண்டு anthakshari  நடக்கும். 

புயல் பற்றி பெரியவர்கள் பேச..பொழுது நாளைக்கு எப்படி கழிக்கலாம்னு வாண்டூஸ் ப்ளான் நடக்கும்.

ஒருவழியாக அவரவர் வீட்டுக்குள் தஞ்சம் அடைய..

நானும் அப்பாவும் காற்றில் ஆடும் மரத்தையும், கருமை கட்டிய வானத்தையும் பார்த்தபடி உட்கார்ந்திருக்க...சரக் சரக் என்று சிலரின்  செருப்பு சத்தம் மட்டும் கேட்க..

மழை நாட்கள்..மனசுக்கு பிடித்த நாட்களாய் இருந்ததை..இன்னும் மனசு நினைத்து ஏங்குவது ஏனோ?

Monday, October 25, 2021

ஆசை

 கடையில் இருக்கறதெல்லாம் தலைகீழா கொட்டி தேடி முடிச்சப்பறம்..

அந்த பொம்மை போட்டு இருக்கிற டிசைன் தான் ...


😁😁👌

Prelude to diwali..

 Prelude to diwali..

ஒரு மாசம் முன்பே..

அட்டை டப்பாவில்..

புஸ்வாணமும்..சக்கரமும்..

லக்‌ஷ்மியும்..குருவியும்..

மத்தாப்பும்....ராக்கெட்டும்.

அட்டத்தை அடையும்..


வெயில் இருக்கானு பார்த்து..

வடாம் மாறி பரப்பி...

வரிசையா அடுக்கி வெச்சு..

தம்பியுடன் பாகம் பிரிச்சு..

தப்பக் கூடாது வாக்குனு..

தலையிலடிச்சு..சத்தியம் வாங்கி..

திருட்டுத் தனமா..

திருடு போகலயேனு..

திடம் பண்ணிண்டு..

தீபாவளி சூடுபிடிக்கும்..


முதல் நாள் சாயந்திரமே..

மூக்கை பிடிக்க..

மெனுக்கள் துவங்கும்..

போட்டது போட்டபடி..

கோப்புகளை விட்டுவிட்டு..

அம்மா ஓடி வருவாள்..

ஆபீஸ் வேலை விட்டு..


புகுந்த வீடு பெருமை காக்க

புதுக்கோட்டை வழக்கம்..

பஜ்ஜியும்..பக்கோடாவும்..

பறிமாறியே ஆகனும்..

இரவுச் சாப்பாடு..

இருக்குமே ஒரு லிஸ்ட்.

சேமியா பாயசமும்..

சின்ன வெங்காய சாம்பாரும்..

உருளைக்  கறியோடு..

அப்பளம் பொரியலோடு..

ஆடைத் தயிரோடும்..

கண்ணை சொருகும் தூக்கம்..


மூணு மணி அலாரம்..

முணுமுணுக்க தொடங்கும்...

பல் விளக்கி வருமுன்..

பலகையில் போட்ட கோலம்..

பாத்திர த்தில் நல்லெண்ணெய்..

பாங்காய் மடித்த ..

பாக்கு வெத்தலையுடன்..

கெளரி கல்யாணம் பாடி..

சொட்ட சொட்ட எண்ணெய்..

சீயக்காய் போட்டு நீராடி..

குங்கும மிட்ட துணியுடுத்தி..

பட்டாசு வெடிக்க..

சிட்டாய் பறக்கும் வேளை..

சின்ன கிண்ணியில்..

சுருளக் கிளறிய

மருந்து உருண்டை.

விடாது கருப்பாய் தொடர..

விட்டேன் ஜூட்டென்று..

வாசலுக்கு ஒடிப் போய்..

வெடிக்க துவக்கம்..

தம்பி..தைர்யசாலி..

நீள ஊதுவத்தி..

ஊதி ஊதி..

ஓடிப் போய் வைப்பான்..

சரமும்..யானையும்..

அட்டகாச atom bomb ம்..


அடுத்த வேலை..

பக்கத்து வீட்டுக்கெல்லாம்

பக்‌ஷண பரிமாறல்..

அங்கொரு பாட்டி உண்டு..

பத்து ரூவாய் தருவாள்..

பக்கத்து கடைக்குப் போய்..

கேப்பு வாங்கி வந்து.

சுத்தியலை வெச்சு..

ஒவ்வொண்ணா..அடிச்சு..

மிஞ்சிய ஒத்தையும் .

ஊசி வெடியும் 

மனசு வராமல்..

காலி பண்ணி. 

கடைசியில்..

சுருளும் பாம்புடன்..

குப்பையயும் சேர்த்து கொளுத்தி..

குட்பை...சொல்லி விட்டு..

குட்டித் தூக்கம் போட்டு..

புதுப்படம் ஒன்னு பார்த்து..

புதுத் துணிகள் கதை பேசி..

வந்திருந்த சித்தி சித்தப்பா..

தம்பியுடன் கிளம்பியதும்..

வெறிச்சோடிப் போகுமே..

வீடும் மனமும்..

ஆண்டுகள் போனாலும்..

அசை போடும் எண்ணங்கள்..

என்றென்றும்..சுகமே..சுகமே..

Saturday, October 23, 2021

Collegerocks

 Aishu: அம்மா..என்னோட earphone காணாப் போயிடுத்து..

நான்: ஏண்டா காலேஜ்லேர்ந்து வரும்போது டெஸ்கெல்லாம் செக் பண்ணிட்டு வர மாட்டியோ?

அவள்: அதை ஏன்மா கேக்கற..

அன்னிக்கு desk மேல வச்சுட்டு வந்த cost accounts note அடுத்தநாள் போனா அதே எடத்தில இருந்தது..ஆனா..நேத்திக்கு விட்டுட்டு வந்த earphone எங்க போச்சுனே தெரியல..!!

#collegerocks

உளவியல் பதிவு

 இது உணவுப் பதிவல்ல..

உளவியல் பதிவு


.. டிஸ்கி கொடுத்துட்டா நல்லது தானே😀😀


ஒரு டம்ளர் சேமியா எடுத்துக்கோ..

நல்லா வறுத்தியா..

வெங்காயம் நன்னா பளபளனு வேகணும்..

தக்காளி 🍅 பொடியா கட் பண்ணிக்கணும்..

பச்சை மிளகாய்..உன் இஷ்டம்

உப்பு ..namak shamak nu dance ஆடிண்டே போடாதே..

தண்ணீ..பார்த்து ஊற்று..கொழ கொழனு செஞ்சுடாதே..


இப்படி எந்த instruction ம் கொடுக்காமல்

தேமேனு அடுத்த ரூமில் ' லொக்கு  லொக்கு லொக்கு அரே  பாபா லொக்குனு ' நாம படுத்துக் கொண்டிருந்தாலே போதும்..


லுக்..லுக்..லுக்..அரே அம்மா லுக்..நு பாட்டு பாடிண்டே ப்ளேட்டில் வரும் ..

பாசக்கார பொண்ணு செய்த சேமியா உப்புமா..

'சேமி..yaa .இதை உன் உள்ளப் பெட்டகத்தில்னு..போட்டோ பிடிக்க..


#Keep_distance..

வாகனத்துக்கு மட்டுமல்ல..

வாரிசுகள்..வரிந்து கட்டி வேலை செய்யும்போதும்..


வைர(ல்) சிந்தனைகள்😀

சரிதானே..

அன்புடன்...

Monday, October 18, 2021

Youtubeத்துவம்

 #Youtubeத்துவம்


..


காலையில் எழுந்ததுமே..YouTube ல் ஸ்லோகம் , பாட்டு ஆரம்பிச்சுடும் என் கிச்சனில்..என் forever company அதுதான்..


Auto play on ல் இருப்பதால் ..அடுத்தடுத்த பாட்டு ஓடிக் கொண்டே இருக்கும்..


சில சமயம் ரொம்ப பிடிச்ச பாட்டு, சில சமயம் கேட்டே இருக்காத பாட்டு, சோகமா ஒரு பாட்டு, வீரமா ஒரு பேச்சு, கலகலனு காமெடி..


சில நாளுக்கு அதோட ரூட்டை மாத்தி எனக்கு புடிச்சதை மட்டும் கேட்கத் தோணும்..


சில நாள்..அது என்ன பாடறதோ அதே கேட்கலாமுனு தோணும்...


அதனால்..


நம்ம வாழ்க்கையும் ஒரு auto play on ஆகி இருக்கும் விஷயம் தான்..

அது போகிற போக்கில் போகும்போது சந்தோஷம்,சோகம், surprise எல்லாம் நிரம்பி இருக்கும்..


ஜாலியா வாழ்வோம்..


அன்புடன்..😀

Saturday, October 16, 2021

வாங்க போகலாம் shopping

 Shopping அலப்பறை இல்லாத தீபாவளி உண்டா?


வாங்க போகலாம் shopping 


 #kaun_banega_crorepati..ஸ்டைல்ல😀


Sony TV ல அமிதாப் பச்சனோடவா?


Ha..ha..haa..

எல்லாம் நம்ம தீபாவளி ஷாப்பிங்கல தான்.


வாங்க... ஆரம்பிக்கலாம்..நம்ம KBC.


முதல்ல #hotseat..க்கு போகணும் தானே


So #fastestfinger விளையாடணும்..

Options only 4 இல்ல..4000 கடைகள் இருக்கே.


ஆதி காலத்து ஆவி வந்த குமரன் ,நல்லி, சுந்தரி, ரங்காச்சாரி , போத்தீஸ், rmkv, nalli 100, Chennai silks, prasidhi , prashanthi..

அப்பறம் பக்கத்தில் இருக்கும் boutiques, apartment புடவை வியாபாரிகள்..

ரவுண்டு ரவுண்டா deletion பண்ணி.கடைசி கடைசியாக..

எங்கம்மாவும் அதே கடையில் வாங்குவா..பாட்டி கூட அங்கேதான் வாங்குவான்னு....  ஆவி வந்த கடை..as usual select ஆச்சு.

ஒரு பார்வையில் ஓராயிரம்..புடவகள் பார்த்தேன்..கவுண்ட்டரில் நானேனு..பாட்டு பாடிண்டே உள்ளே நுழைஞ்சாச்சு..


சரி..இங்கும் அங்கும் ஓடினாள் ஓடினாள் ஒரு புடவை எடுக்கனு டயலாக் மனசில் ஓட..

இப்போ ..முதல் #lifeline..

அதாங்க..#audiencepoll..


நம்ம எடுத்த புடவையை  கண்ணாடி கிட்ட போட்டு பார்க்கும்போது..

இது எந்த கவுண்ட்டரில் இருக்கு?..

நீங்க செலக்ட் பண்ணலைனா சொல்லுங்கனு ஒரு சில பேர் சொன்னாலொ..தூரத்திலேர்ந்து ஏக்கமா பார்த்தாலோ.


" அதை தனியா வெச்சுடுங்கனு' சொல்லி அடுத்த கவுண்ட்டருக்குள் நோட்டம் விடணும். கலர் கலராய் புடவை தோளில் சேர..

..நான் தேடும் செவ்வந்திப் பூ இதுனு பாடறதா..இல்ல..பச்சை நிறமே பச்சை நிறமே.. இல்ல..பிங்க்கு தான் எனக்கு புடிச்ச கலருனு எடுக்கறதா

இப்போ..confusion start..


 ஆனதும்..வீட்டுக்காரர் கிட்ட போய்..


#fifty_fifty  life line கேட்க..அவரு inky pinky ponky போட..

இது ரெண்டும் ஓகே..வா பில்லு போட்டுடலாம் உன் லொல்லு தாங்கலைனு அவர் நொந்து நூடுல்ஸ் ஆகும் வேளை..


ஐயோ..ஐத்தான்..அந்த கவுண்ட்டர் பார்க்கவே இல்லையேனு நான் ஓட

திரும்ப முதல்லேர்ந்தானு ..அவரு மண்டை காய..


நான் #flipthequestion ..life line க்கு போய்.."வேற என்ன புது டிசைன் இந்த தடவை introduce பண்ணி இருக்க்கீங்கனு சேல்ஸ்மேனை கேட்க..


அவரும் பாவம் ' இது கதக்கு..இது பரதநாட்டியம்' நு கமல் ஸ்டைல எடுத்துப் போட..


நான் முதல் முதல்ல ஒரு புடவை உங்க கிட்ட கொடுத்தேனே..உள்ளே வெக்க சொல்லி..அதையே அனுப்புங்க பில்லிங்க்கு சொல்லும் வேளை..


ஐயோ..wait wait..#phone_a_friend life line ல expert advice கேட்கணுமே என் உயிர் தோழி கிட்ட...

மயக்கமே வந்த வூட்டுக்காரர்.."ஏம்மா..நீ உன் ஃப்ரண்டையே கூட்டிண்டு வந்திருக்கலாமே..நான் நிம்மதியா வூட்ல KBC பார்த்திண்டு இருந்திருப்பேன் இல்ல 'என்று சோக கீதம் பாட..


சார்..இங்கே நாள் பூரா KBC தான் ..

எங்க நிலைமையை யோசிச்சு பாருங்க சார்னு அங்கே ஒரு சங்கம் கூட..


நாம நைஸா..அடுத்த ஃப்ளோரில்..


சீஸனுக்கு சீஸன்..புதுப் பொலிவுடன் #KBC..மட்டுமா..

#Kanjeevaram #Banaras #cottonsilk ம் தான்..


Group ல படிச்சவங்க...பாவம்..second time. ..என் சுவற்றில் மீண்டும்😀😀


படத்தில் ஒரு பக்கம் 

#amitabh_paa..

இன்னொரு பக்கம்..#என்னோட_paa😀

Friday, October 15, 2021

SPICMACAY

 It's only when you truly feel it, you can pen down something so nonchalantly !

A very heartwarming article written by Mrs. Akila Ramasami, a very talented and creative volunteer, about her experience with SPIC MACAY. 

SPIC MACAY is celebrating this year, as a year of volunteering. Therefore please come forward and share your thoughts and experience about SPIC MACAY at spicmacaydoon@gmail.com


Wednesday, October 13, 2021

கடுகுத்துவம்

 #கடுகுத்துவம்


..


 அஞ்சறைப் பெட்டியில் 

 Active member இவர்..


சின்னதா..பெரிசா..

மஞ்சளா..கறுப்பா..


கடுகடுனு இருப்பார்

குடுகுடுனு ஓடுவார்..


எண்ணெயில் போட்டதும்...

எகிறி குதிப்பார்.


தாளிப்பில்..தத்தளிப்பார்.

தந்திடுவார்..தேக ஆரோக்கியமும்


Mustard seeds.

Must என்றும்  நமக்கு..


வெடிக்கும் கடுகிலிருந்து..

வெளிவருமே..நறுமண எண்ணெய்..


வாய்க்கு 😋 ருசியும் தரும்..

வியாதிகளும் குணமாக்கும்..


குட்டியூண்டு..கடுகு இங்கு..

சுட்டியாக இருக்குதப்பா..


கடுகடு குடுகுடு கடுகுக்கு..

கடுகளவாவது ..நன்றியோட இருப்போமப்பா..


அன்புடன்😁😁😀


Start music 😁

Radha Sriram Meena Anand Shasri Shyamala Raghavendra Vaidehi Jagannathan😀..

யார் வேணுமானாலும் சொல்லுங்கப்பா..

கடுகுத்துவம்😁😁

Saturday, October 9, 2021

நவராத்திரி

 Flashback இல்லாத festival உண்டா என்ன?


அதுவும் 

நவராத்திரி நினைவுகள்..

நிலைக்குமே என்றும்


சாயங்காலம்  நேரம்

சக தோழிகளோடு..

சரசரக்கும் பாவாடையும்.

சரமாய்த் தொடுத்த மல்லியும்..

சளைக்காமல் அலங்கரித்து..

சுண்டல் மாமி ..சுண்டல்னு..

சுத்து சுத்துனு..சுத்தி வந்து..

சரளி வரிசையை..

சிரத்தையாய் பாடி..

சுருக்கு பையிலே..

சில்லறை சேர்த்துண்டு..(தீபாவளிக்கு யானை வெடி வாங்க)

தினங்கள் ஓடும்..


சரஸ்வதி பூஜை..

பிடிச்ச பண்டிகை

பூஜையறையில்..

புகலும்.. புத்தகங்கள்


ஆஹா..படிப்பில்லை..

படி படினு தொல்லையில்லை..

நகரக் கூடாதே

இந்த நாள்னு வேண்டிப்போம்..


விஜயதசமி பூஜை..

விழிக்குமுன்னே..

விறுவிறுனு பண்ணும் அம்மா.

புத்தகங்கள் எடுத்து கொடுத்து..

போய் படி இப்போ என்பாள்..

விரியும் புத்தகம்..

சுருங்கும் முகம்..


குரு ஆசி வாங்க..

கூட்டமாய் போவோம்..

வீணை மாமி வீட்டில்..

கலை வாணி அவளுக்கு

வாழ்த்தொன்று வாசித்து..

வழிபாடும் முடித்துவிட்டு..

வீடு வந்து சேர்வோம்..


விடுமுறையும் முடியும்..

விடிஞ்சா பள்ளிக்கூடம்..

காலாண்டுத் தேர்வின்..

வண்டவாளம் தண்டவாளமேறும்..

கவலையுடன் கண்மூட

கணக்கு மார்க்கு ..

காலைக் கனவில் வர

முப்பெரும் தேவியும்..

மீண்டும் வருவாள்..

அம்மா..சித்திகளின் வடிவில

கலங்கி விழித்து..

காத்து போன பலூனாய்

விடுமுறையின் சந்தோஷம்..

நடுக்கத்தில் முடியும்...😀😀


Saturday, October 2, 2021

நவராத்திரி_அலப்பறைஸ்

 #நவராத்திரி_அலப்பறைஸ்



சஹஸ்ரநாமம் சொன்னதும் சுண்டலோடு    ஸ்நாக்ஸும் கிடைக்கும் எங்க அபார்ட்மென்ட்😀

Badamhalwaத்துவம்

 #Badamhalwaத்துவம்



பாதாம் ஹல்வாவில் பதம் ரொம்ப முக்கியம்.


அடுப்பிலேயே வெச்சு கிளறி..கடக் மொடக் பீஸ் போட முடியாது..


அது ஒரு immature தோசை மாவு பதத்தில் இருக்கும்போதே அடுப்பிலிருந்து இறக்கி..கை வலிக்க..வலிக்க..கிளறணும்..

சூடா..பக்கத்தில் நெய் இருக்கணும்..


கொஞ்ச நேரத்தில் ..அப்படி ஒரு heaviness நம்ம கையில் feel ஆகும். போதும் போ..இப்படியே இருக்கட்டும்னு டப்பால எடுத்து வெச்சால்....

உன்னை விடமாட்டேன்னு..பாட்டு பாடி ..வாயிலே..ஒட்டோ ஒட்டுனு ஒட்டும்..


என்னதான் ஆகட்டும் பார்ப்போம் ஒரு கை என்று கை விடாமல்..கிளற..

அப்படியே கரண்டியிலும்  ஒட்டாமல், பாத்திரத்திலும் ஒட்டாமல் ..

இத்தனை நேரம் வலிச்ச கையிலிருந்து வழுக்கிப் போகும்.. 

Heavy ஆ இருந்து சுத்தி சுத்தி வந்தது..அப்படியே light ஆகிடும்..


வாயில் போட்டால்..கரையும்..இனிப்பும் அளவான நெய்யும் சேர..ஒரு குட்டி சொர்க்கம்..


நம்ம வாழ்க்கையும் இப்படித்தானே..


எப்போ நமக்கு அந்த ஒரு light feeling.. ஒரு inner light feeling கிடைக்கிறதோ..

ஒட்டாமல் இருக்கும் பக்குவம் வருகிறதோ..

அப்போது தொடங்கும் வாழ்க்கையின் இனிப்பு..


ஆனால்..அது அவ்வளவு easy ஆ என்ன?


அன்புடன்😀

Sunday, September 26, 2021

Building a brilliant self

 Building a brilliant self


😀


ஒத்திகை பார்க்காது

ஒரு வார்த்தையும் பேசுவதில்லை..

ஒட்டியும் வெட்டியும்...

ஒருவழியாய் முடிவெடுக்க..


ஆயத்தம் செய்வதிலே..

ஆயாசம் மேலிடவே..

அடப்போப்பா..

அமைதியே காத்திடலாம் என்றிருக்க..


முன் போலில்லை நீ.

மடை திறந்த வெள்ளமாய் பேசுவாயே..

முன் வைத்தார் குற்றச்சாட்டு


எது பேசினாலும்

எதிர்ப்புத்தான் அறிந்தேனே..

எடுத்தேனே ஆயுதத்தை..

எடிட் செய்ய ஆரம்பித்தேனே..😀


(இப்படி எல்லாம் இருக்கத்தான் ஆசை..நம்ம வாய் சும்மா இருக்காதே😀😀)

Friday, September 24, 2021

முகனூல் வாழ்க்கை

 காஃபி குடிக்கும்போது வாட்ஸப்பில் shasri

கவிதைப் போட்டியில் prize என்று.

I was in cloud nine.


எல்லாருக்கும் திறமை இருக்கு.

அது தூங்கிக்கிட்டு இருக்கு..

தட்டி எழுப்ப தானாக வெளி வருகிறது.

#மத்யமர் தளம் இருக்க

மனசில் இருக்கறதை கொட்ட..

Prize கிடைச்சதனால் ..இந்த

Praise இல்லை..

Prize முக்கியமில்லை..

Participation முக்கியம்னு 

 பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தது.

பின்னாளில் கை கொடுக்கிறது எனக்கு.

Thanks so much #madhyamar and my lovely friends there who keep me encouraging.


இன்னிக்கு நாலு வரி நான் எழுதுகிறேன்.என்றால்..அதுக்கு காரணம்..

ஏதாவது எழுது..உன் பாணியில் எழுது என்று என்னை ஊக்குவித்து விட்டு.என்னை விட்டுச் சென்ற என் மாமியார் thangamani

தங்கமணி எங்கே நீ..

உன் கிட்ட இதை காட்டணுமே..


இந்தக் கவிதைக்கு judges special mention certificate .


#மத்யமர்_கவிதைப்_போட்டி

#பதிவு 1

#இதுதான்_முகநூல்_வாழ்க்கை


நூலொன்று படியென்றால்

நுனிப்புல்லும் மேய்வேனே..

முகநூல் வந்திங்கே

மூழ்கடிக்குதே..நாளுமிங்கே


"ஏதாவது எழுதென்று"

என்னைத் தூண்டிடுமே

எதிர்ப்பார்க்க வைத்திடுமே

எத்தனை விரும்பிகளென்று..


#இதுவே_முகநூல்_வாழ்க்கை


விருப்பக் குறிகள்..பதிவின்

விதியை நிர்ணயிக்க..

வீழாமல் காக்குமே..

விழுதாய் நட்புக் குழாம்


#இதுவே_முகநூல் வாழ்க்கை.


முகமூடிகள் நடமாட்டம்

மனதிலோடும் பட்டிமன்றம்.

முடிவறியாப் போராட்டம்.

பட்டாலே புரிந்திடுமே..


#இதுவே_முகநூல்_வாழ்க்கை.


நீலச்சாயம் வெளுத்தாலும்

நிதர்சனங்கள் புரிந்தாலும்

நித்தமுனது தரிசனம்

 நகர்த்துமே... நாட்களை..


முடக்கத் தோன்றினாலோ

முடங்கும் பயமிருக்க

அடங்கிப் போனேனோ?

விடத்தில் வீழ்ந்தேனோ?


முகநூலில்லா வாழ்வு

முகாரி இசைக்குமென்று

மாயை வலையிலிலிங்கு

மீளா மாந்தரானோம்..


நடமாட்டம் கூடினாலும்

நகருவதும் நாடுவதும்

நாளும் பொழுதுமிங்கே

நிலையில்லா வாழ்க்கை..


#இதுவே_முகநூல்_வாழ்க்கை


 ..

Happy birthday Bala Kumar R

 Happy birthday Bala Kumar R


கும்பகோணத்து குடும்பத் தலைவி.

குடுப்பாள் டிமிக்கி சமையலுக்கு..

குடும்பத்தோடு செல்வாள் சுற்றுலா..

கும்மி அடித்து கொண்டாடுவாள் மன்னிகளுடன்..


அண்ணாக்களின் பாச மலர் 🌹 தங்கை..

அழகு மருமாள்களுக்கு மெத்தை இந்த அத்தை மடி..

அன்பைக் கொட்டும் அருமையான அம்மா..

ஆருயிர்த் தோழியும் இவள்தானே


அரிது அரிது...இவள்

சமைப்பது அரிது..


ஏகாதசி இன்று no cooking..

என்னமோ புடிக்கலை..no cooking..

எங்கியோ கல்யாணம்..no cooking..

எல்லாரும் வெளிய போனோம்..no cooking


அதனாலே தானோ..

காகம் வராமல்..

கரிச்சானை அனுப்பி

கலங்க வைக்கும் இவளை..


பவழ மல்லி பூத்துக் குலுங்கும் தோட்டம்..

பூக்குமே  கொன்றையும் இவள் வீட்டில்..


புன்னகை பூத்து போஸ் கொடுப்பாள்..

பார்த்ததில்லை இவளை என்றாலும்..

பல நாள் பழகிய ஒரு அன்னியோனியம்..

போடுவோம் அடிதடி உப்புமா போஸ்ட்டுக்கு


கும்பகோணத்து பாலாவுக்கு....

கம்பு சுத்தி ..இங்கே.

கல கல வாழ்த்து சொல்வோம் வாங்க..

பிறந்தநாள் ..

வாழ்த்து சொல்வோம்.வாங்க..


Happy birthday Revathy Srinivasan

 Happy birthday Revathy Srinivasan



நட்சத்திரம் 🌟 இவள்..


முகநூலில் ஒரு #புதிய_முகம்..


முன்னம் கண்டிராத ஒரு #அவதாரம்..


அடித்தது எங்களுக்கு #jackpot.


இவள் #மெளனராகம் பாட மாட்டாள்..


இவள் எல்லார்க்கும் #பிரியம்ங்க்கா


#மறுபடியும் மறுபடியும்..பார்க்கத் தூண்டும் இவள் நடிப்பு..

இவள் போடும் மீம்ஸ்..ரொம்ப #ஒஸ்தி..


ஆக்கிடுவாள் #ஆயுள்_கைதியாக இவள் நட்பிலே..


#உனக்காவே_வாழ்கிறேன் என்று ஸ்ரீனிவாசன் சொல்ல..

அவர் #இதயத்_தாமரையில் என்றும் இருக்கும் ரேவதிக்கு..


நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்..


உங்கள் திறமை இன்னும் நிறைய வெளிப்பட்டு..

புதிய ஒரு நாடகப் பயணம் தொடங்கணும் நீங்க..


இப்படியே என்னிக்கும் கலகலப்பாக..

களிப்புடன் இருக்க..


பிறந்தநாள் கொண்டாடும் உங்களுக்கு..

மனமார்ந்த வாழ்த்துக்கள் dear.


( நடிகை ரேவதி ..சினிமாப் பாடம் வெச்சு எழுதினேன்.. நீங்கள் எங்கள் சூப்பர் ஸ்டார் ஆச்சே)😀😀

Sunday, September 19, 2021

Subha dhileep anniversary

 Hi Srinivasan Dhileepan..

Not for just oneday..this wish comes to you both for all the years to come..

Late ...but a latest kavidhai for the made (mad)for each other couple..


ஜாடிக்கேத்த மூடி போல

 திலீபன் சுபா ஜோடியிது..

ஜொலிக்கும் வெள்ளி காணும்..

ஜாலியான ஜோடியிது..


கருவைக் காக்கும் மருத்துவர் இவள்..

தருவாள் நம்பிக்கை தம்பதி பலருக்கு

சிறுகூடு இவள் வீடு..

சிறிதும் பஞ்சமில்லை இன்பத்திற்கே..


அறுவை சிகிச்சைக்கு ஆதாரம்

அளவாய் தரும் அனஸ்தீஷியாவில்

அந்தக் கலை .. கைவந்தக் கலையாய்..

அரும்பணி புரியும் திலீபனிவரே..


மயக்க ஊசியில் மயக்குவர் இவரெனில்..

மந்திரப் புன்னகையில் மயங்க வைப்பாளிவளே

பல்லிசை வேந்தர் இவர் என்றாலோ

இல்ல  இசையின் நற் சுருதியும் இவளே..


நிலவு ஆயிரம் 

காண வாழ்த்து..

கனவு யாவும் ..கை...

வசப்பட ..வாழ்த்து..

நலமும் இன்பமும் 

நாடியே வரணும்..

நான்கு தலைமுறை..

நீங்களும் காணணும்..


தங்கம் வைரம் பிளாட்டினங்கள்..

சிங்கக் குட்டியாம்..

சீமந்த புத்திரனுடன்..

சீறும் சிறப்பாய் ..

சேர்ந்தே கொண்டாடணும்..

வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்கள்..


உருளைக்கு_வந்த_உளைச்ச்ல்

 #உருளைக்கு_வந்த_உளைச்ச்ல்



Alien மாதிரி ஒண்ணு..

அழகான வாத்து மாதிரி ஒண்ணு..


வெட்டப்போறாளே..

வறுக்கப் போறாளா..இல்ல..

வெங்காயத்தோட சேர்க்கப் போறாளா..?


குருமாக்குள்ள.. கூட்டத்தில ஒண்ணா இருக்கப் போறேனா?


தம் ஆலுவாகி..தனித்தன்மை காட்டப் போறேனா..?


Tikky ஆகப் போறேனா..இல்ல..இவ..

Trick எதுவும் செய்யப் போறாளா?


Chaat ஆக்கி ஸ்வாகா பண்ணப் போறாளா

சிப்ஸாக்கி..என்னை பீஸாக்கிடுவாளா?


Bake ஆகி பேக்காவேனா..ஆலு

போண்டாவாகி விடுவேனா?


போட்டோ மட்டும் புடிச்சுட்டு..என்ன

புலம்ப வெச்ச மகராசியே..


முகநூலில் மூழ்கியது போதும்...எனக்கு 

மோட்சம் கொடுக்க வாம்மா நீயும்..😭


வீழ்வேன் என்று நினைப்பாயோ..

வாயுவாக வந்து வதைப்பேனே😀😀


 Happy birthday V N Ganesh V N sir


கானம் பாடும் கணேஷ் இவர்.

கர்நாட்டிக்கும் பாடுவார்..

கானாவும் பாடுவார்..

காதல் ❤️ பாட்டும் பாடுவார்..

கருத்துள்ள பாட்டும் பாடுவார்..


கையில் மைக்கோடு இருக்கும்..

கணேஷ் இவர்..

கணக்கற்ற பாடல்கள் Smule ல்

கேட்கவே இனிமை என்றும்..


இவர்..காதில் இருக்கும் இயர் ஃபோன்..

இவர் பாடல்கள்..

கேட்போருக்கு காதில் பாயும் தேன்..


இசையோடு இணைந்த வாழ்வு...

இன்று போல் என்றும்..

இன்னிசையுடன்.. சப்த ஸ்வரங்களின்

ஓசையுடன் அமைய வாழ்த்துக்கள்.

Saturday, September 18, 2021

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..

 சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு..


ப்ளாட்ஃபார்மில் டிரெயின் வந்து நின்னதும், தடக் தடக் சத்ததோடு என் லப் டப்பும் ஜாஸ்தியாச்சு..்.இருக்கிற மூட்டை முடிச்சை இடம் பார்த்து உள்ளே தள்ளணுமே..பகவானே என் பெர்த்ல வர யாரும் சாமானே கொண்டு வரக்கூடாதுனு அராஜகமா ஒரு வேண்டுதல் வேற.

எல்லாத்தையும் ஒரு வழியா அடியில தள்ளி நிமிர்ந்தா..நங்குனு மண்டையில் ஒரு அடி..வேறென்ன..விரிக்கப்பட்ட மிடில் பர்த் வீங்க வெச்சது என் முன் சொட்ட மண்டையை. என் பொண்ணோ ..full energy ல் ஆட்டம்..மிடில் பர்த்தை போட்டு நொக்கு நொக்குனு நொக்கி தாளம் போட..மிடில் பர்த் மாமா குறட்டையில் ஆலாபனை செய்ய.எங்க கூ..சிக்கு புக்கு ரயில் பயணம் ஆரம்பம்..

நமக்குத்தான் 4 மணிக்கு முழிப்பு வந்துடுமே..வீட்டு ஞாபகத்தில் எழுந்திருக்க..மீண்டும் டொங்னு மண்டையில் ஒரு அடி..எங்கயும் காலை வெக்க முடியல..மெதுவா....முதுகை கோணலா ஒரு வளை வளைச்சு...தலையை மெதுவா நீட்ட..என் சிண்டை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சது மிடில் பர்த் சங்கிலி ..ஆ..வலி..கத்த கூட முடியல..

கால் எங்க வெக்கறது..சாமானெல்லாம் தூங்கிண்டிருக்கே..ஒரு வழியா சமாளிச்சு எழுந்து ..அப்பர் பர்த் ல் அக்கடானு தூங்கிண்டிருந்த அகத்துக்காரரை எழுப்பி..கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கோங்கோ..நான் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்..அப்ப்போதான் முதல் ரவுண்ட் வர காபி எனும் கஷாயத்தை குடிக்க முடியும்னு சொல்ல..அம்மா தாயே..வீட்ட்ல தான் அட்டகாசம்னா..இங்கேயுமா..சரி சரி போய்ட்டு வானு வழியனுப்பி வெச்சுட்டு..வாய் பிளந்து தூங்க 

. டாண்ணு ஆறு மணிக்கு என் காது குளிர' காபி..காபி'..'சாய்..சாய்' சத்தம்..என் பெர்த் கிட்ட வந்துட்டார் ..ஒரு காபி குடுங்க..சொன்னதுதான் தாம்தம் கொதிக்க கொதிக்க பேப்பர் கிளாஸில் ரொப்பிட்டு..madam 10 ரூபாய் தாங்க..

ஒரு நிமிஷம் ப்பா..பர்ஸ் பெண்ணின் தலைகாணிக்கடியில்...மெதுவா உருவலையோ.நான் அம்பேல்..ஆட்டம் ஆரம்பிப்பாளே..ஒரு கையில் காபி..மறு கையில் காசு..அப்பத்தான் ட்ரெயின் டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிக்க..என் கையிலிருந்த காபியும் சேர்ந்து ஸ்டெப்ஸ் போட..கடைசியில் எனக்கு கிடச்சது 2 ரூபாய் காப்பிதான்.

காபி குடிச்சா எப்படி தூக்கம் வரும்..ஆனந்த சயனத்தில் என்னை சுத்தி எல்லாரும். எனக்கோ வேடிக்கை பார்க்கணும்..

சூரியன் அழகா வெளிய வருமே..மேகமெல்லாம் என்னோட ஓட்டமா ஒடி வரதைப் பாக்கணும்..

மரம் வேகமா ஓடும்..சின்ன சின்ந பாலங்கள்..வயல்வெளி..மாட்டு வண்டி..

ஒவ்வொரு ஊர் ரெயில்வே கேட் கிட்ட நிக்கற ஸ்கூல் பசங்கள் பார்க்கணும்.

குட்டி ஸ்டேஷன் எல்லாம் ஓடி ஓடி வந்து தண்ணியும் ஒட்டகப் பாலும் விற்கும் குட்டீஸ். கொய்யா..ஆரஞ்சு வித்து ரெயில் கிளம்பிடுமோங்கிற பயத்தில் சிறு வியாபாரிகள்..

இத்தனையும் பேரழகன் சூர்யா போஸ்ல உட்கார்ந்த படியே ரசிச்சபடி ..

கொஞ்ச நேரமா ஒரே சைடாகிப்போன கழுத்தை அம்மா...என்று அழைத்தபடி என் பெண் ஒரு திருப்பு திருப்ப..ஆ..வலி..வலி..


அந்தக் கோணக் கழுத்தோடயே பால் கரைத்து கொடுத்தாச்சு்....கொஞ்ச நேரத்தில் இட்லி ஊட்டல்..தோசை தோசை விளையாட்டு .. தண்ணி கொட்டி ஈரமான துணியை மாற்றல் எல்லாம் இனிதே நடந்தேற..' சார்..லஞ்சுக்கு என்ன வேணும் உங்களுக்குனு pantry service கேட்க..

ஒண்ணுமே தெரியாதது போல மிடில் பர்த் மாமா..என்ன லஞ்ச்சா..நான் இன்னும் breakfast ஏ சாப்பிடலையேனு (விவேக் ஸ்டைலில)் ..இந்த மாதிரி long journey ல தான் நம்மைஅறியாம தூங்க முடியறது.. சரிப்பா..வெஜிடேரியன் மீல்ஸ் ஒண்ணு கொண்டு வந்துடு என்றபடி பல் தேய்க்கப் போனார்..எனக்கோ அப்பா..விடுதலை..திரும்பி வந்து பர்த்தை மடிச்சுடுவார்..மடங்கின என் கழுத்தும் பிழைக்குங்கிற நினைப்பில் மண்ணைப் போட்டார் மகானுபாவர்..மீண்டும் தன் berth ல் ஏறி படுத்தபடி..

ஆங்..சொல்ல மறந்துட்டேன்..upper berth ல் படுத்திருந்த என்னவரை நாங்கள் அடித்த லூட்டி ஒரு வழியாய் எழுப்ப..நீயாச்சு உம்ம பொண்ணாச்சுனு  ரெண்டு பேரையும் கோர்த்து விட்டு..நான் கொட்டாவிக்கு பதில் சொல்ல குறட்டை விடலானேன்.

ரயில் பயணம் என்றும் சுகம்..மிடில் பெர்த் இடித்தாலும்..

இனிமே ஆறு மணிக்கு எல்லாரையும் எழுப்பிடுவாங்களாமே..

பரிதாபம்..அந்தோ பரிதாபம்..பாட்டு தான் இப்போ மனசில ஓடறது

Thangamani ..எங்கே நீ?

 பரிசு..


பரிசு..பெரிசா அப்படியெல்லாம் எதுவும் வாங்கியதில்லை.

ஆனால்..என் பசங்க வாங்கி வரும்போது நானே பெற்றது போல சந்தோஷத்தில் திளைத்திருக்கேன்.


முகநூலில் எழுத ஆரம்பித்து எனக்கு கிடைத்த முதல் பரிசு 🎁 


கடிதப் போட்டி சீஸன். ..3 

ஷேக் முஹமது and team நடத்திய ஒரு முகனூல் போட்டியில்.


முதல் நாற்பதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ,

புத்தகங்கள் நான்கு பரிசாக வந்த நாள்..

எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தேன்.


இன்று..

போன மாதம் ஆகஸ்ட் மங்கையர் மலர் இதழில் என் கவிதை வேறொருவர் பெயரில் வெளிவந்த போது கொஞ்சம் மனசு கஷ்ட்டப்பட்டது. 

தவறு நடந்து விட்டது என்று அவர்கள் சொன்னபோது நம்ம luck அவ்வளவுதான் என்று ஒரு மனசு அழுதாலும்....

ஆஹா..நாம் எழுதின ஒரு நாலு வரி publish ஆகி இருக்கேனு பயங்கர குஷி.


இன்று இன்னுமோர் இன்ப அதிர்ச்சி.


பரிசுத் தொகை 250 ரூபாயும் என்னைத் தேடி வந்தது.


கொஞ்சம் flash back


2008 ம் வருஷம் .தேஹ்ராதூனில்  ஒரு மத்யான வேளையில்  என் மாமியாரின் ஃபோன்.

ஊர் வம்பு அடிச்ச பிறகு , 

அகிலா..' தலைமுறை இடைவெளி' இந்தத் தலைப்பில் நாலஞ்சு வரி கவிதை எழுது பார்க்கலாம் 'என்றாள்.


அம்மா..are you kidding ..உங்களை மாதிரி நான் என்ன கவிதாயினியா ? என்றேன்.


நகை, ,புடவை கேட்டதில்லை என்னிடம் அவள் என்றும்.

அவள் ஆவலாய்க் கேட்டது ஒரு கவிதை.

மனதில் தோன்றியதை எழுதிப் படித்தேன்.


ஆஹா..ஓஹோ என்று புகழ்ந்து என் போக்கில் ..மரபுக்குள் வராத என் கவிதைகளை (கிறுக்கலை) ரசித்தவள் அவளே..


நானும் அவளும் கவிதை ,கட்டுரை பற்றி பேசியதுதான் அதிகம்..a bond envied by many.


Thangamani Srinivasan.இன்னிக்கு நாலு வரி எழுதுகிறேன் என்றால் ..அது உன்னால் தான். 

ஃபோட்டோவில் இருந்தபடியும் இன்னிக்கு என்ன எழுதப் போறேனு அன்பாய் மிரட்டுபவள் அவள்.


Thangamani ..எங்கே நீ?


மூக்குடன் ஒரு 🍅 தக்காளி

 மூக்குடன் ஒரு 🍅 தக்காளி


..


அதிலும் மூஷிக வாகனனே தெரிந்தான்..


 nose cut பண்ண மனசே வரலை..

அதான்..

கீரிடமும் கண்ணும் வைக்க..

கொள்ளை அழகாகக்

கஜானனன் போல எனக்குத் தெரிந்தான்..


பார்க்கும் பொருளிலெல்லாம்..

அந்த


பாசாங்குசதரன்..🙏🙏


யாருக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே 🙏🙏

அந்தக் காலம் ..ஒரு பொற்காலம்..

 அடடே..அகிலா..

2012 ல ..இசையோட இணைந்த வாழ்வு  வாழ்ந்தியே..


அந்தக் காலம் ..ஒரு பொற்காலம்..


With SPICMACAY ..முதல் முதலாக இப்படி பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட் ப்ரோக்ராம் எல்லாம் முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்து..

அவர்களுக்கு service பண்ணி..


Miss those Dehradun days


with classical guitarist Anders clemens and cellist and composer Gustavo Tavares


Friday, September 17, 2021

உப்புமா

 இட்லி மா..

அடை மா..

வடை மா..

ஒரே #dilemமா '😀


வென்றது என்னமோ..


#உப்புமா..

அவல் உப்புமா..

இது

இவள் உப்புமா😀


ஆயிரம் option இருந்தும்..தும்..தும்..


Terrific Thursday😀


Monday, September 13, 2021

Ganesha chathurthi

 கணேச சரணம்.


இசையோடு வருபவன்

இன்னல்கள் தீர்ப்பவன்

இல்லத்தில் அழைப்போம்

இதயத்தில் வைப்போம்

இல்லையென்று எதுவுமில்லை

இன்னமும் வேண்டுமா என்று

அள்ளித் தரும் வள்ளலாம்

அக் கஜானனை ஆராதிப்போம்

அவயத்தில் அன்பு ஓங்க

அவன் பாதம் பணிந்திடுவோம்.


happy ganesha chathurthi


வாட்ஸப்பிருக்க

 வாட்ஸப்பிருக்க..வாய்ஸ் கால் எதற்கு?


சதாப்தியில் செட்டில் ஆனதுமே..

சகலருக்கும் சகட்டு மேனிக்கு ஞானம் வரும்.

ஹலோ ஹலோக்கள் லோ லோ என்று முழங்க


லோக க்ஷேமத்தில் தொடங்கி..

லோக்கல் பாலிடிக்ஸ் வரை..


பக்கத்து சீட்டு மாமா..மாமிக்கு போட்ட ஃபோன்..( ஒட்டு கேக்கலைப்பா..அவர் பேசினது ஊருக்கே கேட்டது)😀


ஒண்ணு கேட்க மறந்துட்டேனு ஆரம்பிச்சவர் தான்..


ஒருலிட்டர் பாக்கெட்டா?

இரண்டு அரை லிட்டரா.? 


ஃப்ரீஸரில் வைக்கணுமா..

Chill tray லயா?..அந்த


a2b பக்கோடா..

அந்தரா..பாஹரா..?


கல்யாண முறுக்கு

கடக்குனு போய்டாதா..?


வலது கரம் வந்தால்

வார்க்கணுமா தோசை?


அரிசிக்கு ஜலம் எத்தனை?

பருப்பும் வைக்கணுமா?..


அடுக்கிக் கொண்டே போக..

ஆவேசக் குரலில் மாமி..

'அட ராமா..

நல்லி கடையிலே..

நாலாயிரம். புடவை குவிய்லில்

நல்லதா ஒண்ணு தேடிண்டு இருக்கேன்

நிம்மதியா ஷாப்பிங் பண்ண விட மாட்டீரோ..

நானே வந்து எல்லாம் பார்த்துக்கறேன் என்று இணைப்பை துண்டிக்க..


'அவள் அப்படித்தான்" என்று ஒரு ஸ்மைலில் சொல்லி..அசடு வழிய..


அடுத்தடுத்து..செல் ஃபோன் மணிகள் சிணுங்க..

ஆறு மணி நேரம்..அட்டகாச entertainment எனக்கு.


வண்டியில் ஏறினதும் கவச குண்டலமான hearing aid ஐ switch off செய்துவிட்டு..

அப்பா..அமைதியாய்..ஜன்னலோர சீட்டில் 

தாண்டிச் செல்லும் மரம் செடியை ரசித்தபடி..பழைய நினைவுகளை அசை போட்டபடி..

Friday, September 10, 2021

வேடிக்கை மனிதர்கள்

 வேடிக்கை மனிதர்கள்


வேடிக்கை மனிதரை

வலைவீசி தேடாதே 

வீண்சிரமம் ஏனுனக்கு

வேறெங்கும் தேடியேதான்..

நாடித்தான் ஓடாதே

நானிருக்கேன் உன்னுள்ளே 

நையாண்டி தான்பேசி

நகைத்தது என்மனமே..!!!


 

கண்விழித்த வேளை முதல் 

கண்ணுறங்கும் வேளை வரை

கண்கட்டி வித்தை காட்டும்

கள்ளமில்லா வேடிக்கை மனம்.


 என்வீட்டு தோட்டத்தில்

ஏராள மலருண்டு

எண்ணமது தோன்றிடுமே

அடுத்தவிட்டு அடுக்குமல்லி

எட்டித்தான் பறித்திடவே !!!!

வேடிக்கை மனமிதுவே..


  

கொத்தவால் சாவடி சென்றே

மொத்தமாய் விலை பேசினாலும்

கொத்தமல்லி கொசுறு தந்த

கடைக்காரன் பேர் சொல்லி

கொடைவள்ளல் பட்டம் சூட்டும்..

வேடிக்கை மனமிதுவே..


  பிள்ளைகளே உலகமென்றே

பிணைந்தே கிடக்குமே-அவர்

சுண்டுவிரல் பிடித்தே

தண்டையுடன் நடந்தவேளை

கண்டதுவே ஓர்சுகமே -அவர்

 சிரிக்கும் வேளை

தெறிக்கும் கண்ணீரும்

சென்றிதயம் சுட்டிடுமே

வேடிக்கை மனமதுவே 


  

அடித்தே அடக்க எண்ணும்

அடம் பிடிக்கும் பிள்ளைதனை

லாடம் அடித்த குதிரையாய்

பாடம் படிக்கும் பிள்ளைக்கும்

ஓட்டமே வெற்றிக்கு வித்தென

ஊட்டியே தான் வளர்க்கும்

வேடிக்கை மனமதுவே


 

 காலதோஷமது கழிந்திடவே

 கோயிலது சென்றிடினும்

கதவோரம் கழற்றிய  

காலணியது காணாமல் 

களவாகி விடுமென்ற

கலக்கமுடன் கைக்கூப்பி

 கடவுளை தொழுதிடும் 

வேடிக்கை மனமதுவே


 

நாடிய வளமெலாம் 

நலமாய் கிட்டிடவே

கோடிகள் பலசேர 

வரமொன்று கோரியே

கேடுதரும் முன்வினைகள்

 தீங்கின்றி நீங்கிடவே

நாடிபிடி ஜோசியரை

 தேடித்தான் ஓடிடுமே

வேடிக்கை மனமதுவே


 இப்பிறவி போதுமென்றே

இறைவனடி நாடிடுமே

இறைஞ்சிடுமே எப்போதும்

இன்னல் இல்லா

இன்னொரு பிறவி

இனியேனும் தாஎன்றே

வேடிக்கை மனமதுவே..


 

வேடிக்கை வாழ்க்கையிது

தத்துவங்கள் இங்குண்டு

கற்பனைகள் பலவுண்டு

கனவுக்கும் மடலிட்டு

நல்லசேதி ஒன்று

நாளையாவது நல்கு நீ -என்ற

நம்பிக்கை மனமுண்டு.


 

வயதொரு பொருட்டில்லை

படிப்பொரு தடையில்லை

ஒளிந்து கிடந்திடுமே

ஒவ்வொரு மனிதனுள்ளும்

ஒன்றிபோன இயல்புடனே...

வேடிக்கை மனமிதுவே..

Thangamani book release

 2012. மே மாதம். ஸ்கூலில் இருந்து prize  ம் ,பையுமா ஓடி வந்தாள் என் பெண். இரண்டு certifcate, 2 புக் . புக்கைத் திருப்பி பார்த்தேன். கங்கை ஆற்றைப் பற்றி ஒருவர் பக்தியோடு, தேசப் பற்றோடும் இந்தியில் எழுதிய கவிதைத் தொகுப்பு. free ஆ school க்கு distribute பண்ணச் சொல்லிட்டார் போல இருக்கு. அதனால் 2புக்கும்.ஒரே புக்..அவரே publisher ம் கூட..

திடீர்னு எதோ ஐடியா தோண ,வீட்டுக்காரருக்கு ஃபோன் போட்டு சொன்னேன்.. உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..இந்த வேலையெல்லாம் அவர் எப்படி செய்வார்..எங்கியாவது போய் வாங்கிக் கட்டிண்டு வராதேனு ஒரே அட்வைஸ்..

ஒரு சுப முகூர்த்த நாளில் அந்த writer cum publisher கிட்ட போனேன் ..என் மாமியார் தங்கமணி சிவபெருமான் மேல் தினமும் எழுதிக் குவித்த கவிதைகளை எடுத்துண்டு.  publishing க்கு வந்திருக்கேன் என்று சொன்னதும் வாயெல்லாம் பல்லானவர், பல்பு வாங்கின மாதிரி ஆனார் நான் நீட்டிய தூய தமிழ் கவிதைகளைப் பார்த்து..yeah kaunsi basha mein hai  ...

நான் ரொம்ப பெருமையா இது தமிழ் என்றேன்..behenji yeah nahi ho payega..sorry. aap Chinnai ( Chennai அப்படி அழுத்திி தான் சொல்வா அங்கே எல்லாம்.. ரொம்ப ஏமாற்றத்தோட வீடு திரும்பின கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து ஒரு SMS. I am ready to take this project. 

தமிழ் வாசமே இல்லாத தேவ பூமி தேஹ்ராதூனில் , முதல் முதலாக ஒரு தமிழ்ப் புத்தக அச்சடிப்பு துவக்கம். முதல் கட்ட பிழை திருத்தங்கள் சந்த வசந்த ஐயா இலந்தையும், அனந்த், சிவசிவா அனைவரும் செய்து தர..நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் புத்தக வேலை நடப்பு. தினமும் proof reading. correction. correction க்கு correction. 

thangamani அம்மாவிடம் சொன்னதும், தனக்கே உரிய அடக்கத்தோடு ' அதெல்லாம் எதுக்கு செலவு அகிலா.. blog போதும் எனக்கு' ..நீயும் அலையாதே மழையிலெல்லாம்..( அது மழை கொட்டும் காலம் அப்போ)..அந்த வாஞ்சை..அப்பப்பா..இதுக்கே  இவளுக்கு ஏதாவது செஞ்சுடணும்னு ஒரு வைராக்கியம். 

அட்டை கலர் selected. படம் வேணுமே..அந்த publisher நிறைய modern art of Shiva எல்லாம் காண்பிச்சு அதுக்கு தனி ரேட் பேசினார். திடீர்னு ஒரு ஐடியா எனக்கு..' ஐஷு ..நீ தான் drawing பண்ணுவியே..simple ஆ நம்மூர் கோயில் கோபுரம்..ஒரு சிவ லிங்கம் try பன்ணு என்றேன்..அவள் வரைந்த்தது அட்டைப் படமாய் அச்சில். தங்கமணிக்கு ஏக சந்தோஷம்.

book publishing..மிக எளிமையான முறையில் கனாடாவிலிருந்து வந்த எங்கள் தமிழ் ஆசான் அனந்த் மாமா கையால், tupkeshwar shiva temple ,Dehradun  சன்னதியில் ஒரு கொட்டும் மழை நாளில் , மந்திரங்கள் முழங்க , அமைதியாய் நடைப் பெற்றது.

this day that year 2012, an unforgettable day in our life.what was thought impossible was made possible. 

'என் பணி அரன் துதி' புத்தகம் வெளியிடப்பட்ட நாள்..எங்கள் வாழ்வில் எதையொ பெரிசா சாதித்த நிறைவைத் தந்த நாள்.

இன்னும் நிறைய பாடல்கள் குவிந்திருக்கிறது . தேவபூமியில் அருள் செய்தவன்..மீதி இருக்கும் அவள் பாடல்களைத் தொகுத்து வெளியிட எங்களுக்கு கூடிய விரைவில் அருள வேணும்.

you rocked thangamani..


Amma- எங்கே அவள் என்றே மனம்..

 எங்கே அவள் என்றே மனம்..


ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..

ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.


அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.

ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..

school student மாதிரி ஆனா..

சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.

திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.


எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..

MND ( motor neuron disease) என்ற எமன்..

வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..

பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.

மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..

் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..

இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..

ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..

விடை தெரியல..