Saturday, October 2, 2021

Badamhalwaத்துவம்

 #Badamhalwaத்துவம்



பாதாம் ஹல்வாவில் பதம் ரொம்ப முக்கியம்.


அடுப்பிலேயே வெச்சு கிளறி..கடக் மொடக் பீஸ் போட முடியாது..


அது ஒரு immature தோசை மாவு பதத்தில் இருக்கும்போதே அடுப்பிலிருந்து இறக்கி..கை வலிக்க..வலிக்க..கிளறணும்..

சூடா..பக்கத்தில் நெய் இருக்கணும்..


கொஞ்ச நேரத்தில் ..அப்படி ஒரு heaviness நம்ம கையில் feel ஆகும். போதும் போ..இப்படியே இருக்கட்டும்னு டப்பால எடுத்து வெச்சால்....

உன்னை விடமாட்டேன்னு..பாட்டு பாடி ..வாயிலே..ஒட்டோ ஒட்டுனு ஒட்டும்..


என்னதான் ஆகட்டும் பார்ப்போம் ஒரு கை என்று கை விடாமல்..கிளற..

அப்படியே கரண்டியிலும்  ஒட்டாமல், பாத்திரத்திலும் ஒட்டாமல் ..

இத்தனை நேரம் வலிச்ச கையிலிருந்து வழுக்கிப் போகும்.. 

Heavy ஆ இருந்து சுத்தி சுத்தி வந்தது..அப்படியே light ஆகிடும்..


வாயில் போட்டால்..கரையும்..இனிப்பும் அளவான நெய்யும் சேர..ஒரு குட்டி சொர்க்கம்..


நம்ம வாழ்க்கையும் இப்படித்தானே..


எப்போ நமக்கு அந்த ஒரு light feeling.. ஒரு inner light feeling கிடைக்கிறதோ..

ஒட்டாமல் இருக்கும் பக்குவம் வருகிறதோ..

அப்போது தொடங்கும் வாழ்க்கையின் இனிப்பு..


ஆனால்..அது அவ்வளவு easy ஆ என்ன?


அன்புடன்😀

No comments: