Tuesday, August 25, 2020

Janmashtami

 வெல்ல சீடை..

உப்பு சீடை..

தட்டை..

தேன்குழல்..

அவல் பாயசம்..

வடை..

பால்..பழம்...

தயிர் ..வெண்ணை..

எல்லாம் வெச்சாச்சு..

வாசலில்லேர்ந்து..

உள் வரை..

உன் காலும் போட்டாச்சு..

விளக்கும் ஏற்றி..

ஆயர் பாடி மாளிகையில்..

cassette பூரா பாடியாச்சு..

எப்பவும்..வந்துடுவியே..

இன்னிக்கு எங்கே காணோம் இன்னும்..

பக்கத்து வீட்டில் ஏதோ சத்தம் கேட்க..

என்னனு போய் எட்டிப் பார்த்தேன்..

என்னத்த சொல்ல..

நீயுமா..கண்ணா..இப்படி..

கையில் pizza piece ம்..

வாயில் maggi யும் ரொப்பிண்டு..

ரொம்ப நன்னா இருக்கு..

பேஷ் பேஷ் னு..

இனிமே மெனுவை மாத்துங்கோ..

I need a change ..

சொல்றது நீதானா..

fast food க்கு..

flat ஆகிட்டயா நீயும்..


சந்தோஷத்தில்...

வரும் சந்ததிகள்..

கண்ணா..so sweet..

கொஞ்சலும் ..கூத்தும்..


Happy janmashtami ..

கண்ணா வருவாயா

 கண்ணா வருவாயா...???


அம்மா..

பாப்பா கூக்கி (தூக்கியின் மழலை)

குட்டிப் பாப்பா கெஞ்ச..

கொஞ்சம் இருடா..

 கிருஷ்ணா உம்மாச்சி வருவாரே..

குடுகுடுனு ஓடி விளையாடுவாரே..

அவருக்கு இன்னிக்கு  birthday ஆச்சே..

பார்ட்டிக்கு எல்லாம் ரெடியாக்கனுமே..

சிணுங்கலுடன்...பின் சமாதானம்..

பாயசம் கண்டதும்..

பரவசம் வந்தது..

என் வீட்டு கிருஷ்ணிக்கு.

கண்ணா...உம்மாச்சி வருவார்

உட்கார்ந்து சாப்பிடுவார்..

அப்பறந்தான்..நமக்கு..


தூங்க வெச்சு அவளை..

குட்டிக் கால் போட்டு..

மற்ற வேலை கவனிப்பு..

அனுமாஷ்ய சக்தி ஒன்று

ஹாலுக்கு என்னை இட்டுசெல்ல

என் சுட்டி வால்..

ஒன்னு வுடாமல்..

காலை அழிக்கும் மும்முரத்தில்..

அம்மா..அழுக்கு..!!!

என்ன சொல்வேன்?


நெய்வேத்தியம் ரெடி..

என் வீட்டு குட்டியின் ..

அலைபாயும்..

கையை கட்டி..

ஓம் பூர் புவ ஸு்வ..சொல்லி..

எல்லாம் ஆச்சு..

மம் மம் சாப்பிடலாமானு ..கேட்க..

இடதும் வலதுமாய் வேகமாய்த் 

தலை ஆட்டி..

மம் மம் வேண்டாம்....

அது கிருஷ்ணா க்கு..

பண்ணிய பட்சணங்கள்.

படைத்த பழங்கள்..

பரிதாபமாய் எனை பார்க்க..

பண்படனுமோ நாம இன்னும்..

பசினு பாயசம் கேட்டது..

அந்த மாயக் கண்ணன் தானோ..???


கண்ணா வருவாயா..

எப்போவாவது வந்திருக்கியா...???

கேள்வி ....குடைய நான்..!!!


Happy janmashtami

Sunday, August 9, 2020

ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...

 ஆயிரம் இருந்தும்..வசதிகள் இருந்தும்...


வெடித்து வெளியேறிய கடுகு..

வா வேகமா என்றது

வெந்து முடித்த வாழை

வதக்கி எடு என்றது

விசிலடுத்து ஓய்ந்த குக்கர்

வெடிக்கட்டுமா நான் என்றது..

வாசனை போய்விடுமே.

வந்தணை என்றது ரசம்

வத்தல் போட்ட குழம்போ

வாட்டாதே எனை என்றது

வெக்கையில் வெந்த இட்லி

வெளியே விடென விரட்டியது


நிமிஷத்தில் சுடும் மின்சார அடுப்பு

நாலு எரிப்பானுடன் நாகரீக அடுப்பு

நளபாகம் தயாரிக்கும்் நுண்ணலை அடுப்பு

நாலும் இருப்பினும்..நம்மிடமோ 

இரண்டே கைகள்..

இதை எடுப்பதா..அதை எடுப்பதா

இரண்டுங் கெட்டான் நிலமை..

உள்ளம் ஏங்குதே..

உருண்டோடிய நினைவாலே..


ஊதி எறிந்த விறகடுப்பு

ஊற்றி எறிந்த கெரோசின் ஸ்டவ்வு

ஊருக்கே பெரும் படையல் நடப்பு

உண்மையில் தருமே இன்றும் வியப்பு.

கும்பிடு போடச் சொல்லுதே

கூட்டத்துக்கே பசியும் ஆற்றிய

குடும்பத் தலைவிகள் அவர்களுக்கே..

Monday, August 3, 2020

போளியா..போதி மரமா

போளியா ...போதி மரமா.!!!

போகிப் பண்டிகை என்றாலே
போளியில்லாமல் உண்டோனு
புதுக்கோட்டை ராசா..(அட..என் அப்பாதான்)
போட்டாரே ஒரு போடு..
என்னடா இது..இந்த
அகிலாவுக்கு வந்த சோதனைனு..
அரண்டு போய் ஆரம்பிச்சேன்..
ஆண்டவனை வேண்டினேன்.

இளகலான மாவு..கொஞ்சம்
இறுகலான பூரணம்..
உள்ளங்கை மட்டுமே..
உற்ற துணை யிங்கே..

பதினொன்றே போதுமென்று
பாகம் பிரித்து உருண்டைகள்.

எண்ணெயில் தோய்ந்த மைதா..
என்ன பாடு படுத்துதப்பா..
ஓட்டம் பிடிக்குதப்பா..
ஓட்டையும் விழுந்ததப்பா..
இரண்டாவது உருட்டி தட்ட
இரண்டாய் கிழிந்ததப்பா..
மூன்றாவது போளியோ..
மெத்தென்று இல்லாமல்
முறுகலாச்சு ஓரத்தில்..
நாலாவதோ ..
நான் வரலை விளையாட்டுக்கென
நடுங்கி ஒளிஞ்சதப்பா
அஞ்சாவது உருண்டையோ..
அஞ்சாதே என்னைக் கண்டு
அழகாய் உருட்டி..
அடைப்பாய் பூரணம்..
அமுதமாய் இனிப்பேன்
அனைவருக்கும் படைப்பாயென
ஆசியும் வழங்க..
அப்புற மென்ன..
ஆறு ..ஏழு..எட்டு.
அருமையாய் அடுக்கினேன்..
ஒன்பது..பத்து ..பதினொன்று...
ஒரு நொடியில் முடிக்க..

கை வண்ணம் காட்ட நினைக்கையில்
கைக்கொட்டி சிரித்தது காலியான பாத்திரம்.
போளி சொல்லும் பாடமாக
போதி மர ஞானியானேன்.

பாதி வாழ்க்கை போனபின்னே
பாதை தெரிய ஆரம்பிக்கும்..
பார்த்துடலாம் வாழ்ந்தென்று
பறக்க நினைக்கையிலே
படக்கென முடிந்துவிடும்..

பிறந்ததுமே கற்றறிய
பள்ளிக் கூடமிங்கேது
படபடப்பாய் கடக்கையிலே
பாடமாகும் வாழ்க்கையிங்கே..

படைத்தவன் தந்தான்..இந்தப்
பாத்திரம் (வாழ்க்கை)நாடகத்தில்
படைப்போமே சரித்திரம்..
போளி தந்த போதனை..
போலியில்லை..உண்மை..உண்மை.