Wednesday, November 26, 2008

மேகமே.. மேகமே..

வெண்ணிற மேகமே..
கண்ணீரும் ஏன் தானோ????
காற்றது கலைப்பதனால்
கலங்காதே நீயுந்தான்..

ஓடியே திரிந்தாலும்
ஓர்சக்தி உனக்குண்டு..
ஓளிபரப்பும் கதிரவனை
ஒளியவே வைக்கவுந்தான்..

வாழ்க்கை பாடமதுவே.
வலிமையது உண்டுனக்கு
உணர்ந்திடு உன் திறனை
உலகமது உன்கையிலே..

Tuesday, November 25, 2008

கற்பனை என்றாலும்...

தட்டிவிட்டேன் கற்பனை குதிரையை..
அது..
ஓடி ஓடி களைத்தவேளை ..
கண்முன் நின்றது..
கசக்கும் நிஜம் .!!!!

கடவுள் உள்ளமே..


கண்விழித்தேன் உன்பேர் சொல்லி..-தின
கடமை முடித்தேன் உன் நாமத்தோடு..
ஆதியும் அந்தமும் நீயானாய்..-எந்த
தூணிலும் துரும்பிலும் வடிவானாய்..
கவிதை எனும் பெயராலே-நல்ல
கருத்துக்கள் பாட அருள்வாயே..