Saturday, March 30, 2019

அடுப்படி எனக்கென்ன சொந்தமா...? பழைய நினைப்பு.. படை போல் குடும்பம் பொடிசு முதல் பெரியவர்கள் பானையில் சோறு பருப்புக் குழம்பு பொரியலும்..வறுவலும்.. பொதுவாய் சமையல். பந்தியில் அமர்ந்து பாங்காய் பரிமாறல் பங்கிட்டு உணவு பழசுக்கு இடமேது.. பொசுக்கும் வெய்யிலில் பொழுதும் போகவே அப்பளமும் வடாமும் அழகாய் இடுவாளே.. அம்மியும் ஆட்டுக்கல்லும் அங்கே கைகொடுக்குமே தேய்த்தல் துவைத்தல் துடைத்தல் எல்லாமே துரிதமா நடக்குமங்கே தட்ட ஒரு மெஷினில்லாமலே.. இப்பவும் யோசனைதான் எப்படி இப்படி எல்லாம் முடிஞ்சதென்று.. பள்ளியெழுச்சி முதல் படுக்கப் போகும் வரை பம்பரமாய் வேலை எம்பிரானே ஏனென்றேன்.. காப்பி ஒருத்தருக்கு காம்ப்ளான் ஒருத்தருக்கு அருகம்புல் ஜூஸ் ஆறின கஞ்சி ஒருத்தருக்கு திரிஃபலா ஒருத்தருக்கு டீத் தண்ணி ஒருத்தருக்கு காப்பிக் கடையே.. கதவும் மூடாதே.. சுக்கா ரொட்டி சுருள வதக்கிய வெண்டை கடைஞ்ச பருப்பு கெட்டித் தயிர்.. பன்னீர் பட்டர் ஒருத்தருக்கு பத்திய சாப்பாடு ஒருத்தருக்கு பிரியாணி ஒருத்தருக்கு பாஸ்டா ஒருத்தருக்கு.. என்னதான் ஆனாலும் ஒட ஒட ரசமும் ஒரு வடு தொட்ட மோரும் ஒரு வழி வழிக்கலையோ ஒரு திருப்தி வராதே.. ஓஞ்சு போகுதே ஒரு வேளை சமைச்சதுமே.. வகைகள் இப்போ வதையும் ஆச்சே வத்தலும் வடாமும் வகையாய் நொறுக்கலும் விலைக்கு வாங்கும் நிலையும் ஆச்சே.. பகட்டே இல்லா பழைய வாழ்வு பகல் கனவாச்சே ஓடி வந்தாச்சு ஒரு பெருந்தூரம் திரும்பிப் பார்ப்போம்.. திரும்பிப் போகாவிட்டாலும்..

அடுப்படி எனக்கென்ன சொந்தமா...?

பழைய நினைப்பு..

படை போல் குடும்பம்
பொடிசு முதல் பெரியவர்கள்
பானையில் சோறு
பருப்புக் குழம்பு
பொரியலும்..வறுவலும்..
பொதுவாய் சமையல்.
பந்தியில் அமர்ந்து
பாங்காய் பரிமாறல்
பங்கிட்டு உணவு
பழசுக்கு இடமேது..

பொசுக்கும் வெய்யிலில்
பொழுதும் போகவே
அப்பளமும் வடாமும்
அழகாய் இடுவாளே..
அம்மியும் ஆட்டுக்கல்லும்
அங்கே கைகொடுக்குமே
தேய்த்தல் துவைத்தல்
துடைத்தல் எல்லாமே
துரிதமா நடக்குமங்கே
தட்ட ஒரு மெஷினில்லாமலே..

இப்பவும் யோசனைதான்
எப்படி இப்படி
எல்லாம் முடிஞ்சதென்று..

பள்ளியெழுச்சி முதல்
படுக்கப் போகும் வரை
பம்பரமாய் வேலை
எம்பிரானே ஏனென்றேன்..

காப்பி ஒருத்தருக்கு
காம்ப்ளான் ஒருத்தருக்கு
அருகம்புல் ஜூஸ்
ஆறின கஞ்சி ஒருத்தருக்கு
திரிஃபலா ஒருத்தருக்கு
டீத் தண்ணி ஒருத்தருக்கு

காப்பிக் கடையே..
கதவும் மூடாதே..

சுக்கா ரொட்டி
சுருள வதக்கிய வெண்டை
கடைஞ்ச பருப்பு
கெட்டித் தயிர்..
பன்னீர் பட்டர் ஒருத்தருக்கு
பத்திய சாப்பாடு ஒருத்தருக்கு
பிரியாணி ஒருத்தருக்கு
பாஸ்டா ஒருத்தருக்கு..

என்னதான் ஆனாலும்
ஒட ஒட ரசமும்
ஒரு வடு தொட்ட மோரும்
ஒரு வழி வழிக்கலையோ
ஒரு திருப்தி வராதே..

ஓஞ்சு போகுதே
ஒரு வேளை சமைச்சதுமே..

வகைகள் இப்போ
வதையும் ஆச்சே
வத்தலும் வடாமும்
வகையாய் நொறுக்கலும்
விலைக்கு வாங்கும்
நிலையும் ஆச்சே..
பகட்டே இல்லா
பழைய வாழ்வு
பகல் கனவாச்சே

ஓடி வந்தாச்சு
ஒரு பெருந்தூரம்
திரும்பிப் பார்ப்போம்..
திரும்பிப் போகாவிட்டாலும்..

Thursday, March 28, 2019

தங்கமணி

சத்தம் போடாத..
சாதனை யாளர்கள்.
சரித்திரத்தில்...... பலர்
எம் குடும்ப ….. சரித்திர நாயகி..
எங்கள் தங்கமணி நீதானே…

”வயசாச்சு எனக்கு..
வேறெதுவும் முடியாதுனு..”
வெறுமை வாழ்க்கை.. உனக்கில்லை
Versatile blogger award….
விருதுக்கு சொந்தக்காரி நீ

திருக்கயிலை நாதன் முதல்..
..திருவொற்றி யுறைக்கோன் வரையில்
திரும்பிய திசையெலாம்..
திருக்கோலம் கொண்டவனை..
தேடிப் போய்ப் பார்த்ததில்லை..
தேன் சொட்டும் பாவின் வழி
”என் பணி அரன்  துதியென்று”..
என்னாளும் துதித்த நீ..
எம்மை விட்டுச் சென்ற நாள்..

இன்னாள்..28-03-2014
வருத்தங்கள்….. …
தேடுது.. வார்த்தைகளை..
Miss you thangamani..

தோற்றம்  : 05-10-1939        மறைவு  : 28-03-2014
thangamani blog: http://kavidhaithuligal.blogspot.in/

Friday, March 22, 2019

அழகி..நீ பேரழகி

@myclick
அழகி..நீ..பேரழகி..

மஞ்சள் அழகி நீ
மலர்ந்த பூவழகி
தெளித்த சிவப்பழகில்
மிளிரும் மென்மை  நீ..

கண்ணாடியில் காட்டட்டுமா
கவரும் உன்னழகை..தலைக்
கனம் வந்திடாதே
மண்ணில் அழகி நானென்று..

காக்கும் கண்ணிமை..நம்
கண்ணுக்குப் புலப்படுவதில்லை
காக்கும் இறைவனும்..
கண்ணெதிரே வருவதில்லை..
உன்னழகும் என்றுமே..
உனக்குத் தெரிவதில்லை
ஊரார் உரைக்கையிலே
உனக்கிங்கே உறைத்திடுமோ

நாடகமாம் இவ்வுலகில்
நாள்கணக்கு உனக்கு..
நாளும் இருக்கென்ற
நம்பிக்கை வாழ்வெனக்கு..

நானும் இங்கு செய்யணும்..
நல்லது நாலு பேருக்கு..
நாதனவன் பாதமதை..
நானும் அடையுமுன்னே

தண்ணீர்..தண்ணீர்.

தண்ணீர்..தண்ணீர்.

ஒரு கப் சக்கரையும் காப்பி பொடியும் கடன் வாங்கும் காலம் போய் ஒரு கப் தண்ணீ இருக்கா..அடுத்த மாசம் திருப்பித் தரேனே மாமி எனலாம்..

அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..அவள் ஆத்துக்காரர் அரை லிட்டர் தண்ணீ வாங்கிண்டு வந்ததை கேட்டேளா..பட்டு மாமி பொறாமையில் மூக்கை சிந்தலாம்..

அப்பா..அப்பா..ஏன் எனக்கு தண்ணிகாசலம் னு பேர் வெச்ச..என் friends எல்லாம் கேலி பண்றாப்பா..என்று அடம்பிடிக்கும் மகனிடம்..அது மூதாதையர் பேருடானு சொல்லலாம்..

Demonetization சமயத்தில் ஒரே ஒரு 500 ரூபாயும் ,ஆயிரம் ரூபாயும் தனியா எடுத்து உண்டியல் அடியில் போட்டு  வெச்சு காண்பிச்சோமே..இந்த தண்ணீரை இவங்களுக்கு எப்படி இருக்கும்னு காட்ட எடுத்து வெச்சிருக்கலாமோனு வருந்தலாம்.

'கண்ணீர் சுத்திகரிப்பு' நிலையங்கள் பல உருவாகலாம்..அதிகம் அழுவோர்க்கு மானியம் தரப்படலாம்.

திரவப்பொருளில் தண்ணீர் என்றதும் திருதிருனு முழிக்கலாம்..

நிலத்தடி நீர் தேடப்போனவர்கள் ..நிலத்தடி அபார்ட்மெண்ட்டுகள் கட்டலாம்..
அங்கேயே IT companies ஆரம்பிச்சு..பல மூர்த்திகள் முன்னுக்கு வரலாம்.

Education loan,home loan எல்லாம் போய் water loan வாங்கி அதுக்கு emi கட்டலாம்.

கோடை விடுமுறைக்கு தண்ணீர் கிடைக்கும் mars க்கு சுற்றுலாப் பயணம் போகலாம்..

ஐயோ ..
நினைக்கவே நடுங்குதே..
நீயில்லாமல் நானா
நீரில்லாமல் வாழ்வா..?

நிறமில்லா நீர்..
நதியாய்..ஆறாய்
நானிலம் காக்க
சுயநல வாழ்வில்
கயவராய் மாறினோம்
தண்ணீர் தானே...
தாராளமாய்..
தண்ணீராய் செலவு..

விளைவோ..

ஒரு குடம் நீருக்கு
ஒரு மணி காத்திருப்பு

தவிக்கும் வாய்க்கு
தண்ணீர் தரவே
தயக்கமும்  ஆச்சு.

சேமித்த காசு..நீர்
சேந்தித் தரல..
சிந்திய துளிகளும்
சேர்க்க முடியல..

கங்கையும் யமுனையும்
காவிரியும் நர்மதையும்
கைக் கோர்க்கட்டும்..
கண்ணீர் துடைக்கட்டும்

நதியெல்லாம் இணையட்டும்..
நலமெல்லாம் பெருகட்டும்..
நாளை வரும் சந்ததிக்கு
நம்மால் முடிந்த உதவி..
நல்லக் குடிநீரும்
நோயில்லா வாழ்வுந்தானே..

Wednesday, March 20, 2019

Happiness day

happy இன்று முதல் happy

இந்த உலகத்திலே பெரிய பணக்காரன் யாரு?.கொஞ்சம் லிஸ்ட் போடுங்க..

கார் வெச்சிருப்பவரா..
கரன்ஸி கட்டு கட்டா வெச்சிருப்பவரா..
வீடு பெரிசா வெச்சுருப்பவரா..
நல்ல வேலையில் இருப்பவரா..
வெற்றி வாகை சூடுபவரா?
பெரிய பதவியில் இருப்பவரா..
பெரும் புகழோடு இருப்பவரா..

இத்தனையும் இருந்தாலும் இல்லாட்டியும் ...சந்தோஷமா happy ஆ யாரால் இருக்க முடிகிறதோ அவர்தானே உண்மையான பணக்காரர். சரிதானே?

கால் கிலோ கத்திரிக்காய் கொடுனு என்கிறமாதிரி எந்த சூப்பர் மார்க்கெட்லயாவது விற்கிறதா இந்த சந்தோஷம்?

எங்கே தேடுவேன்..சந்தோஷம் உனை
எங்கே தேடுவேன்னு எல்லாரும் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையறோமா இல்லையா..
கவிதை என்னும் பேரில் நான் உளற ஆரம்பிச்ச புதுசு.
இப்படி ஒரு மொக்கை எழுதி வெச்சேன்.
'இறைவா
வேண்டும் இன்னொரு பிறவி..
போராட அல்ல..
வாழ்வதற்கு..'
இன்னிக்கு அதைப் படிக்கும்போது..என் மேலே வெறுப்பா வரும்.
போராடி ஜெயிக்கும் சந்தோஷம் போல உலகத்தில் வேற ஏதாவது சந்தோஷம் உண்டா..

பூக்கள் மகிழ்ச்சி..
பூலோகம் மகிழ்ச்சி
இயற்கை மகிழ்ச்சி
இல்லம் மகிழ்ச்சி.
இதெல்லாம் எப்போ மகிழ்ச்சியா தெரியுமென்றால்..நம் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான்.
மகிழ்ச்சியா இருக்கணும்நு சொல்லித் தர பல பேர் இப்போ கிளம்பி இருக்காங்க.

நிஜமாகவே தேடிக் கிடைக்கும் பொருளா..சந்தோஷம் என்பது.
நம்முள் எப்போதும் இருந்து கொண்டு வெளியில் வரத்் துடிக்கிறது..
டேய் சும்மா அடங்கு...இதுக்கெல்லாம் சந்தோசப்பட்டா என்ன ஆவுறதுனு அதை தட்டி உள்ளே உட்கார வெச்சிட்டு..அடுத்தது எது நமக்கு சந்தோஷம் தரும்னு தேடி அலையறோம்.
நல்ல சூப்பரா டிரஸ் பண்ணிட்டு சந்தோஷமா வெளியே கிளம்புவோம்..எதிர் வூட்டுக்காரம்மா ஒரு சோகக் குரலில் 'என்ன இன்னிக்கு கொஞ்சம் டல்லா இருக்கீகநு ' கேட்டதுமே..அத்தனை சந்தோஷமும் ஓட்டை விழுந்த பலூனாய் புஸ்ஸுனு இறங்ககிடும்.

நம்மைச் சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் கோடானு கோடி negative energy சுற்றியபடி இருக்கு.
நாம் ஒரு நிமிஷம் தள்ளாடும் போது..டபால்னு வந்து நம் மேல உட்கார்ந்துக்கும். அப்பறம் சந்தோஷமா..அப்படின்னா என்னனு கேட்டு..டன் டன் ஆ சோகமோ..சோகம் தான்.
சந்தோஷம் என்பது ஒரு சின்ன விதை..
அதை நம் மனசிலும் , நம் சுற்றியுள்ளவர் மனசிலும் விதைக்கணும்.
நான் சந்தோஷமா இருக்கணும்னா அடுத்தவன் சாகணும் என்பது சந்தோஷமல்ல..

நாம் இருக்கும் இடத்தை, வீட்டை முதலில் சந்தோஷம் என்னும் சிமெண்ட் போட்டு strong ஆக்கணும்.

அதுக்காக இளிச்ச வாயனா இருக்க சொல்லலை..
நாம்.. எப்போ..எங்கே இருந்தாலும் அங்கே சந்தோஷ, மகிழ்ச்சி அலைகள் கரை புரண்டோடணும் ஒரு பிரதிக்ஞை எடுத்துக்கணும். ஐயொ..வந்துட்டாடா..ஒப்பாரி வைக்கணு யாரும் சொல்லக்கூடாது.

எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை..
நான் சந்தோஷமா இருக்கிறேன்..இருப்பேன் என்பதை நாம் தான் நிர்ணயிக்கிறோம். live this moment happily.
இன்னிக்கு international day of happiness ஆமே..
வாங்க ..
let's be happy i say and spread the fragrance of happiness everywhere.

happy இன்று முதல் happy தான்.

சரிதானே..friends.
 Thanks  Chandrashekar Ramaswamy sir.
Your status today is the seed to this post

Tuesday, March 5, 2019

Acche din

Acche din..
The wait is on..

அஞ்சறைப் பெட்டியிலும்
அரிசி டப்பாவிலும்
அடுக்கின புடவையிலும்
அலமாரி இடுக்கிலும்

 மடித்தும் சுருட்டியும்
மறைச்சு வெச்சேனே
மாங்கா நெக்லெஸும்
முத்து வளையலுமா
மாறும் ஒருநாள்
மகளுக்கு சீராகனு

விளக்கேற்றிய மாலை
வீட்டோர் எல்லாம்
விறுவிறு சீரியலில்
வாய்பிளந்த வேளை
அறிக்கை வந்தது
ஆயிரமும் ஐநூறும்
அந்திமக் கிரியையில்

ஆசையாய் வளர்ந்தது
அழுது புலம்பியபடி
அம்மாவைப் பிரிந்தது
அவளருமைக் குழந்தை.

அப்பவும் நம்பிக்கை
'அச்சே தின்'
அதோ வந்திடுமென்று
காத்திருப்பு
கருப்பொழிந்து
வெள்ளைப் பூக்கள்
வாழ்வில் மலருமென்று..

சொந்தக் காசும்
சொந்தமில்லாமல்..
வந்த காசும்
வாழ விடாமல்..

வழியெல்லாம் அடைப்பு
வளர்ச்சியென மார்த்தட்டல்
வருமொரு நல்ல நாள்
வெறும் கனவாகிடுமோ..!!

நம்பிக்கைக் கவிதை
நவம்பர் மாதத்தில்
மன உளைச்சல்
மார்ச் மாதத்தில்
வானிலை மாற்றமாய்
வாக்குகள் மாற
வாக்காளன் பாடு
வீதியிலே..வரிசையிலே..

'அச்சே தின்'
அவ்வப்போது..
அழுத்திச் சொல்கிறேன்..
அப்படியாவது
வராதா என்று..