Monday, December 24, 2018

முதுமையின் அடையாளங்கள்

முதுமையின் சில அடையாளங்கள் என Mythili Varadarajan mam பதிவுக்கு..என் பதில்..என் அப்பாவின் மன நிலையிலிருந்து..

தூக்க மருந்து  தாலாட்டுமுன்
தூக்கிப் போடுமே இருமல்
என் லொக் லொக்  சத்தம்
கொர் கொர் குறட்டைக்காரரையும்
கூப்பிட்டு எழுப்புமே..
தலைகாணி உயரமாகும்..
தலை விதி நொந்து..
தாரையாய் கண்ணீர் அருவி..
.
கோழிக் கூவும் நேரம்..
கண்ணும் சொக்கும் தூக்கம்..
எட்டு மணி ட்ரெயின் பிடித்து
எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து
ஓட்டமும் நடையுமாக..
ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..
ஓரமாய்..சின்ன நினைவாய்..
 விழிப்பும் ஒரு வழியாய் வர..
வேகத்தில் இயங்கும் வீடு..
பெண்ணும் பேத்தியும்..
பேச்சா..சண்டையா..??
புரியாத புதிராய் நான் முழிக்க..
சூடாக் குடித்த காபி..
சுட சுட செய்தியுடன் பேப்பர்
வெது வெது நீரில் குளியல்..
வேண்டுதல் நாளின் இனிமைக்கு..
பசித்து புசித்த காலம்..
பழங்கதையான ஏக்கம்..
மாத்திரைகள் பாதி உணவாக..
மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..
ஒற்றை வரியில் பேசிய நானோ
ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!
வலிகள் தரும் வேதனை..
விடுதலை வேண்டி ப்ராத்தனை..
கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய
நிகழும் காலம் நீளமாய்த் தெரிய
வரப்போகும் விடியல்..
விரட்டுமென் சோதனையென
விழித்தபடி படுத்திருக்கேன்..
விடிய இன்னும் நேரம் இருக்கே..

I feel women are more positive and energetic to surpass the ageing.
Thanks Mythili Varadarajan mam for kindling my thoughts.

Thursday, December 20, 2018

கா..கா..கா

@myclick ...
Chandrashekar Ramaswamy sir..ரொம்ப கேட்டேளே..காக்கா

அக்கம் பக்கம் பாருடா..சின்னராசா.
ஆகாஸப் பார்வை என்ன..
சொல்லு ராசா..
சிக்னல் என்ன மந்திரமா..
மனுஷன் என்ன எந்திரமா..
சார்ஜண்ட்டு..அங்கே இல்லை..
அர்ஜண்ட்டு ..உனக்கு என்ன..
அம்புக்குறி பார்த்து நீயும்.
வம்பு ஏதும் பண்ணாம..
தடத்திலே  ஓட்டு சாமீ
வழியும் கிடைச்சு விடும்..
வீடும் விரைவில் வரும்..
அக்கம் பக்கம் பாருடா..சின்ன ராசா

Friday, December 14, 2018

அழியாத கோலங்கள்

அழியாத கோலங்கள்..

அழியவே எழுதப்பட்ட
அழகான கோலங்கள்..
அழிக்கப் படும்போது..
அழுமே நெஞ்சமுமே..

கலைந்து சிதறிய கோலம்..
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்..
குட்டி எலி வேலையோ ..இல்லை
குட்டிச் சாத்தான்களின்
கும்மாளம் ..குதூகலம்..

துடைப்பத்துடன் வந்த
துப்புரவு பணியாளர்..
சுத்தம் சுத்தம்னு
சத்தம் போடுவியே..
அசுத்தம் இங்கே..
ஆசிட் கொண்டா..
அழுக்கு போகலையோ..
ஆளைத் தூக்கிடுவான்..
அலம்பல்..புலம்பலுடன்..

தூக்கில் ஏற்றி என்னை
தூ இவ்வளவுதானா..
தூசியாய் பார்த்த வேளை..
வாதம் என்னுடையது
வாதத்தில் தவித்த வேளை..

வாழ்க்கை பாடம்..
வளரும் வயதிலே..
வகையாய் கற்பித்தால்..
வாழ்வும் செழிக்குமே..
வளமை பெருகுமே..

நாகரீக நண்டுசிண்டுகள்..
நுனி நாக்கில் ஆங்கிலம்
நாலும் தெரிந்த பேச்சு.
'நான்' என்ற எண்ணம்..

வாண்டுகளின் வால்த்தனம்..
கண்டும் காணாமல்...
காணாமல் விட்ட தொடரின்
கதை கேட்டும் அம்மா ..

குறை சொல்ல நானில்லை..
கற்றுத் தரலாமோ கொஞ்சம்..
சுற்றியிருப்பதெல்லாம்..
சொத்து உனதல்ல வென்று..

நாளைய மன்னர்கள்..
நல்லது கற்கட்டும்..
நல்லாட்சி அமைக்கட்டும்
நலமோடு வாழட்டும்..

Wednesday, December 12, 2018

புயல் நாள்

வேரோடு வீழ்ந்த மரங்கள்..
வெறிச்சோடிய தெருக்கள்....
விளக்கில்லா வீடுகள்..
விரும்பாத இவைகள்..
வருடாந்திர விருந்தாளி..

வேலை பளுவில்லா அம்மா..
வீட்டுக்குத் திரும்பிய அப்பா..
வெட்டி அரட்டை அடிக்க ஆளில்லா அண்ணா..
வெறுமனே ஃபோனை நோண்டாத தங்கை..
மெகா சீரியல் இல்லா தாத்தா பாட்டி..
உருண்டை பிடித்து கையில் சாதம்..
ஊர்க்கதை பேச நேரம்..
விளையாட்டும் சிரிப்பும்..
வேடிக்கை பேச்சும்..
விடியும் வரை ஓடும்..
விளக்கில்லா ஒரு நாள்..
விளக்கிடுமோ..
வாழ்வின் பிடிப்பை..

ek KitKat break tho bantha hai Yar

Saturday, December 8, 2018

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 '25 தானே.'.
இல்ல்..லை 32..
டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.
என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை
  tally ஆனதே இல்லை..
சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..
சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..
வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..
அரைக்கிழம் ஆனபோதும்..
ஆசை விடுவதில்லை..
ஆடி அசைந்து செல்லும்..
பெட்டிகளின் கணக்கு
பெரும் புதிரே என்றுமெனக்கு..
ஒண்ணு.இரண்டு ..மூணு..
எண்ணத் தொடங்க..
அம்மா..ப்ளீஸ் என்றாள்..
அவளுக்கென்ன தெரியும்..
அதிலிருக்கும் மகிழ்ச்சி..
அடப்போடா..
யார் பார்த்தால் என்ன..
தொடர்ந்தேன்..
நாலு..அஞ்சு..ஆறு..

கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..
கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..
கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..
போனது போகட்டும்..
புதுசாய் துவங்குவோம்..
புது வருடக் கணக்கை
Advance happy new year friends

Tuesday, December 4, 2018

நம்பிக்கை

நம்பிக்கை
"எத்தனை தடவை சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிண்டு..reminder கொடுத்துண்டே இருப்பியா...?" சீறினேன்   சின்னவளிடம்..
சாமியிடம் கைக்கூப்பி  வரங்கள் வரிசையாய்க் கேட்டபடி பூஜையிலிருந்த நான்..
'சாமி பாவம் ம்மா'..நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்தாள்.. எப்படியும் தன் வேலை அம்மா செய்து முடித்து விடுவாள் என்ற நம்பிக்கையில்..

Friday, November 30, 2018

உலகமயமாக்கல்

Starting a morning with a positive note..nothing is impossible or unreachable ..
Thanks my friend

டைலர் காலில் விழுந்தவனெல்லாம்..
Reid and Taylor உடுத்துகிறான்..
ரெடிமேட் பேரே அறியாதவனோ..
Raymond சட்டையில் உலவுகிறான்..
காக்கித் துணி சட்டை விட்டு..
colorplus ஆல் வண்ணமறிகின்றான்..
ஒட்டி தைத்து போட்டவனெல்லாம்..
Otto வுக்கு ஓட்டுபோடறான்..
புள்ளி போட்ட ரவிக்ககாரி..
புளியம்பு சேலைகாரிகளோ..
போத்தீஸும்..நல்லியும்..
போகாத நாளில்லை..
காஞ்சிப் பட்டுடுத்திய தேவதைகள்..
கோரா சில்க்குக்கு மாறியாச்சு..
ஆயிரம் யோசனை..
அதுவா..இதுவா..எதுவென்றே..
அள்ளி குமிஞ்ச அலமாரியுமே..
அழாத குறையில்..அறைக்குள்ளே..
படிப்பும் உழைப்பும் உயர்ந்த்தனால்
பழைய வாழ்வு ஒழிந்ததுவே..
உலகமயமாக்கல்....கொள்கையொன்று
உபகாரமாய்..
உபகரணமாய்..
உலகம் புதிதை உணர்த்தியதே..
நிலையில்லா வாழ்வினிலே..
நினைத்தும்் பாராதது நிகழ்கையிலே..
நாமும்..கொஞ்சம் ..
நம் மனம் போல் வாழ்வோமே

Monday, November 26, 2018

மனிதற்கு மொழியே..தேவைதான்..

மனிதற்கு மொழியே..தேவைதான்..

ஆட்டோல போகணும்் ..app வேணும்.
அரிசி வாங்க போகணும் ..app வேணும்..
எலக்ட்ரீஷுயன் வந்தா app வேணும்..
ஏதாவது கேட்கணுமா..app வேணும்..
வேற என்ன ..learn Kannada app தான்..

இன்னுமா இந்த வீட்டு வழக்கம் கத்துக்கலனு ..கல்யாணமான பொண்களை கலாய்க்கற மாதிரி..இன்னுமா..நீ..கன்னடம் கத்துக்கலை.. கரெக்ட்தானே..
 வந்து வருஷம் நாலாச்சு..வாழும் இடத்தின் மொழி கற்பது மிக அவசியமாச்சே..
ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு அழகு..
relate பண்ணி படிக்க ஆரம்பிக்க இந்திய மொழிகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து கிடக்கும் அற்புதம் புரிகிறது.
 ஹிந்தியுடன் உயிர் வாழலாம்..ஆனால்..சில உணர்வுகள் புரிய ..learning local language is a must)
எங்க ஊர் செய்தித்தாளும்..நானும் இருக்க பயமேன்னு சொல்ல..
வார்த்தைகள்.. சின்ன sentence கத்துண்டாச்சு..
but எதிர்ல் யாராவது பிரவாகமா..பேசினால்..வாயிலிருந்து தெரிந்த..கற்ற வார்த்தை கூட..வர மாட்டேங்குறது..
ஜுனூன் பார்த்து கற்ற இந்தியுடன் வாழ்க்கை தொடங்க..குழந்தைகளோடு நானும் கற்றேன் பேச ..எழுத..
இப்பொழுது மீண்டும்..பாடம் துவக்கம்..
I loved this quote too..
"If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes to his heart.❞
‒Nelson Mandela..

இந்த today's word..நானும் சொல்ல வாழ்த்துங்களேன் friends..

Happy Sunday

Wednesday, November 21, 2018

வேண்டும் வேண்டும்

வீராப்பு நிறைய பேசினாலும் சில விஷயங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை..

இது இல்லாமல் என்னால இருக்கவே முடியாது....இதோ..

கண் முழிச்சதும் காபி டீ தண்ணீ கண்டிப்பா வேணும்..
ஃப்ரிஜ்ல எப்பவும் 2 நாளுக்கு சமைக்க ்வேண்டிய காய் இருக்கணும்.. (சமைச்சு வெச்சு expiry date ஒட்டினது தவிர..)

தலைகாணிக்கு அடியில் விக்ஸ் அமிர்தாஞ்சன் இருந்தே ஆகணும்.

படிக்கிறேனோ படிக்கலையோ புஸ்தகம், highlighter இருக்கணும்..

மழையோ குளிரோ..fan சுத்தணும்..

உதைச்சாலும், ஓட்டித் தள்ளினாலும் ஒப்புரவா இருக்கும் என் செல்ல scooty வேணும்.

பசங்களுக்கு பிரசங்கம் பண்ணினானும் வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் வேணும்.

செல்லுமிடமெல்லாம்..செல்லுல சார்ஜ் வேணும்..
என்கூட என் காமெராவும் இருக்கணும்..

வரும் விருந்தாளிக்கு தர ஜூஸும் காப்பியும் இருக்கோ இல்லையோ WiFi password தந்து பரம்பரை கெளரவம் காக்கணும்..

முகநூல் நட்பூஸ்களின் பதிவுகளைப் படிக்கணும்..

லிஸ்ட் வளர்ந்தபடி..இருக்கு..

உங்களுக்கும் உண்டா இப்படி ஒரு limitless list?

Monday, November 19, 2018

Happy men's day

Happy men's day

ஆபீஸிலிருந்து
அந்தி சாயுமுன்
அதிசயமா..
வந்த அத்தான்..
அத்தி பூத்த மாதிரி..
அல்வாவும்...அடுக்கு மல்லியும்
அரை வாண்டுக்கு..
அழகா ஒரு சட்டையும்..
 தந்தபடி சொன்னாராம்..
ஆண்கள் தினமாமே இன்னிக்கி..
அதான் வாங்கியாந்தேன்..
அட ராசா..
அதெப்புடி நான் மறந்தேன்..
எதிர்ப்பார்ப்பே இல்லா..
எம்புட்டு நல்ல மனசு..
பெண்கள் தினமுன்னு..
பெருமையா கொண்டாடினது
பொட்டில் அறைஞ்சாப்போல..
நினைவுக்கு வர..
ஆமாம்.. மறந்திட்டேன்..
அவசர வேலையிலே..
அமைதியா...நாஞ்சொல்ல..
அங்க அவரில்லை..
ஏற்கனவே..போயாச்சு..
கிரிக்கெட்டு மேட்ச் பார்க்க..

தேன்மொழி

எச to Saraswathi Gayathri

தேன்மொழி
ஒல்லியா தெரியற என்றால்..
உச்சி குளிர்வாளே
கொஞ்சம் சதை போட்டியோ என்றால்..
நெஞ்சும் சுருங்கிப் போவாளே..
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேனு..
எதுத்த வீட்டு் அம்மாவை நினைப்பாள்..
உபாதைகளை ..
ஊருக்கெல்லாம் சொல்வாள்..
google செய்தே
cancer எனக்கில்லையே என்று..
கலங்கியும் போவாளே..
argue செய்வாள்..
அடங்கியும் போவாள்

harmony கெடுக்கும்..இந்த
hormone வேலையை..
மாத்திரை மருந்தோடு..கொஞ்சம்..
மன உறுதியும் சேர்த்துக் கொள்வோம்..
அசுரர் இவரை வெல்ல..
ஆயுதம்..இது ஒன்றே..

Saturday, November 10, 2018

kindergarten முதல் college வரை ( கல்லறை வரையும் கூட)

kindergarten முதல் college வரை
( கல்லறை வரையும் கூட)

டீல் தான் எப்பவும் லைஃப்ல..ஸ்கூல் அட்மிஷனுக்கு சுக்லாம்பரதரம் போட்ட நேரம். வீட்டுக்காரர் கிட்ட 'அபியும் நானும்' ஐஸ்வர்யா மாதிரி கண்டிஷனுடன்..' capitals to capitation fee வரை உங்க syllabus. கரோல் பாக்..கத்திரிக்காய் எல்லாம் என்னோடுதுனு பாகம் பிரிச்சாச்சு.
நடுக்கத்தோடு பிரின்சிபால் ரூம் கதவை தட்ட..ரம்பம்பம் .ஆரம்பம்..ரம்பம்பம் ..பேரின்பம் ..intro எல்லாம் முடிஞ்சது..பக்கத்திலிருந்த coordinator ஐ பார்த்தபடி principal ' கேள்விகளை நீ கேட்கிறாயா..நானே கேட்கட்டுமா என்ற தொனியில்..
தொண்டையில் கிச் கிச் கணைத்தபடி  coordinator என் கணவரைப் பார்த்தபடி being an engineer we hope that you will help your daughter in her studies. வேகமா அவர் மண்டையாட்ட..கேள்விகள் இப்போ என்னை குறி வைத்து..
' உங்களுக்கு பாடத் தெரியுமா..ஆடத் தெரியுமா..(rhymes சொல்லி கொடுக்க)
கதை சொல்லத் தெரியுமா..
copy, paste தெரியுமா..கட் பண்ணி ஒட்டத் தெரியுமா..collage தெரியுமா..
வீட்டில  magazines வாங்கறீங்களா..அதுல வர அட்வெர்டைஸ்மெண்ட் எல்லாம் collect பண்ணி வெச்சிருக்கீங்களா..see we want creativity in every project we do.
well..
ஆலாய்ப் பறந்த அட்மிஷன் அல்வா மாதிரி கிடைக்க..
welcome to our ________ group of institutions. these years are going to be very crucial for  your child ...coordinator கை குலுக்குவார்.
இதே கதை தான் ஒவ்வொரு ஊர்..ஒவ்வொரு கிளாஸும் மாறும் போது..these years are going to be very crucial in your child's life.
middle school வந்தபோதும்..மீண்டும் orientation. mike பிடித்த madam கள் மழையாய்  advice. அம்மாக்களின் மொழி அறிவு பெருகும் நேரம். கதை, கவிதை, கட்டுரை ( எங்கே போனாலும் ஹிந்தி இங்கிலீஷ்  புஸ்கதம் வாங்கி அடுக்கப்படும்). science project ..பல்பு மாட்டி respiratory system, nervous system எல்லாம் செய்யணும்..இருக்கும் அறிவு பத்தாத நிலையில் விலை கொடுத்து சந்து பொந்து தேடி project ready made ஆ விற்பவர் காலில் விழுந்து வாங்கினால் internal லில் அரை மார்க் கூடும். அடுத்த ஊர் அடுத்த ஸ்கூல்..அதே welcome address.. இன்னும் கொஞ்சம் extra பயமுறுத்தலுடன்.ரிசல்ட் ரொம்ப முக்கியம். hardஆ hard work பண்ணனும்.கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், quilt லிருந்து வெளிவரா முடியா குளிரிலும்...குழந்தைகள் படிப்பு.
அப்பாடா..ஒரு வழியா.இப்போ இறுதி கட்டத்துக்கு வந்தேன்..அதான் காலேஜ்க்கு..
அதே பல்லவி,சரணம்..இன்னும் improvised version. ' we prepare the students to face corporate pressures'
இது என்னடா...இந்த அம்மாவுக்கு வந்த சோதனை..
படுக்கை தட்டி தூங்கபோகும் போது..டொக் டொக்னு மெசேஜ் மழை பெண்ணின் வாட்சப்பில் பொழியும்..தூங்காத விழிகள் நாலாய் நாங்க மாறணும்..
விடியறதுக்குள்ள ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, பேர் சூட்டி, பொருளை வித்து, profit காண்பிச்சு, மார்க்கெட் சர்வே எடுத்து..competitor strategy analyse பண்ணி, மாத்திரை போட்டுக்க போகும் அப்பாவை , மைக் பிடிச்சு இண்டெர்வியூ பண்றம மாதிரி ஃபோட்டோவும் எடுத்து...audio ,video எல்லாம் ஒட்டி ஒரு ppt பண்ணி printout எடுக்க 'போயேப் போச்சு தூக்கம்..நான் கிளாஸில் தூங்கிக்கறேன்மா என்று..app ல் எடுக்கும் attendance ..ஆப்பு அடிக்குமுன் அவள் ஓட..
ஆறிப்போன காபி டம்ளருடன்..இப்படித்தான்...நம்ம வாழ்க்கை..this is going to be a crucial phase என்று..present ஐ அனுபவிக்க நேரமுன்றி..எதிர்காலத்த்தை நோக்கி எகிறிப் பாய்ந்தபடி.
ஜன்னல் திறக்கிறேன்..வேலைக்கு போகும் தன் மகனை ஆதரவாய் தலையை கோதியபடி..' இப்ப ஓடாம எப்படா ' என்றபடி இன்னோரு அம்மா..

Thursday, November 8, 2018

எங்கேயோ கேட்ட விசில்...

எங்கேயோ கேட்ட விசில்...


( காலங்கார்த்தால மணி அடித்தபடி வந்த குப்பை வண்டி, ரிவர்ஸ் பண்ணுனு விசில் பாஷையில் சொன்னபடி பணியாளர்..
ஆ..விசில்.. எங்கும் விசில்..எதிலும் விசில்.. விசிலடிச்சேன்..
ரைட்..ரைட்..(write)..

கடுப்பிலிருக்கும் கண்டக்டர்
காட்டமாக அடிக்கும் விசில்
கிளம்பச் சொல்லி கொடிகாட்டும் 'கா'ர்ட்டின்  டாடா விசில்.
பொங்கி வழியட்டுமா என்றே
பால் குக்கர் கூவும் விசில்
போதுமே வெந்த தென்று
ப்ரெஸ்டீஜ் பொங்கும் ் விசில்
பிரம்பும் கையுமாக அலையும்
பி. டி . மாஸ்டர்  பய விசில்..
விடலைப் பசங்க ளடிக்கும்
விவேகமில்லா வெத்து விசில்..
வசூல் ராஜாக்கள் வாயினிலே
விரட்டி மிரட்டி பிடிங்கும் விசில்..
விழுந்தடித்து ஓட வைக்கும்
watsapp toneல் விசில்..

கத்துக்கலாமே அடிக்கவென்றால்
காத்து தானே வருகுது
கிழவிக்கென்ன கேடாச்சு
கிறுக்கா நீயு் மென்றே
கைக்கொட்டி கலாய்த்தபடி
 கேலி பேசுதே உலகமிங்கே..
( காலங்கார்த்தால மணி அடித்தபடி வந்த குப்பை வண்டி, ரிவர்ஸ் பண்ணுனு விசில் பாஷையில் சொன்னபடி பணியாளர்..
ஆ..விசில்.. எங்கும் விசில்..எதிலும் விசில்.. விசிலடிச்சேன்..
ரைட்..ரைட்..(write)..

கடுப்பிலிருக்கும் கண்டக்டர்
காட்டமாக அடிக்கும் விசில்
கிளம்பச் சொல்லி கொடிகாட்டும் 'கா'ர்ட்டின்  டாடா விசில்.
பொங்கி வழியட்டுமா என்றே
பால் குக்கர் கூவும் விசில்
போதுமே வெந்த தென்று
ப்ரெஸ்டீஜ் பொங்கும் ் விசில்
பிரம்பும் கையுமாக அலையும்
பி. டி . மாஸ்டர்  பய விசில்..
விடலைப் பசங்க ளடிக்கும்
விவேகமில்லா வெத்து விசில்..
வசூல் ராஜாக்கள் வாயினிலே
விரட்டி மிரட்டி பிடிங்கும் விசில்..
விழுந்தடித்து ஓட வைக்கும்
watsapp toneல் விசில்..

கத்துக்கலாமே அடிக்கவென்றால்
காத்து தானே வருகுது
கிழவிக்கென்ன கேடாச்சு
கிறுக்கா நீயு் மென்றே
கைக்கொட்டி கலாய்த்தபடி
 கேலி பேசுதே உலகமிங்கே..

Monday, November 5, 2018

நல்ல மனம் வாழ்க.

நல்ல மனம் வாழ்க.

பேஷா இருந்தது எல்லாம்..
புல்லரித்தது..
பந்தியிலிருந்த..
பிராமணர் சொன்னபோது..

நானே..நானா..
என் சமையல் தானா..
அமைஞ்சே போச்சா..
அட..ஆகாசத்தில் நானா..

ஆவலாய் சுவைக்க..
அலற வைத்தது..
அவரையில் உப்பு...
வடையோ..
வடிக்க வடிக்க எண்ணை..
கல்லாய் போனது..
எள்ளு்ருண்டையும்..
அதிரசமோ..
அள்ளும்படி..
திரட்டுப்பாலோ..
ரப்பர் பாலோ....

வாய் திறக்காமல்..
வாழ்த்தி விட்டு போன..
வேதமோதும் வித்தகருக்கு..
வந்தனம் பல சொல்லி..

கோணல்களை நேராக்கி..
குடும்பத்துக்கு பரிமாறி..
பூரித்த வேளை
கும்பிடத் தோன்றியது..
குற்றங்  காணா ..இவர்
நெஞ்சங்கண்டு..

Thursday, November 1, 2018

தாயத்து

கோயிலில் கண்ட காட்சி..

காத்து கருப்பு பட்டதோ
கருத்தோடு கட்டினாள்
கையில் தாயத்து..
காதல் நோயது ..தன்வீட்டு
காளைக்கு வந்ததறியா
கவலையில் தாய்.

மந்திரத் தாயத்து
மாற்றணுமே மகனிவனை
மருமக வரணுமே..எல்லார்
மனசையும் கவரும்படி..

வேடிக்கை மனிதரென
வேங்கடனும் நினைப்பானோ..
வேடிக்கை விட்டு..என்
வேண்டுதலை தொடர்ந்தேனே

மழைக்காலம் மேகம் ஒன்று..

மழைக்காலம் மேகம் ஒன்று..

'பொத்துக் கிட்டு ஊத்துமடி வானம்...
சொட்டு கூட புலம்பலில்லா காலம்.'

அப்போ எல்லாம்  வீட்டு ரமணன்கள் அப்பாக்கள் தான்.. பேப்பரை மேஞ்சு மேஞ்சு படிப்பு.. அதில் weather forecast வரும். map ல கூப்பிட்டு காண்பிப்பார்கள்..கிழக்கிலிருந்து மேகம் தெற்கு நோக்கி வரது பாரு.  ஒரு சுழல் மாதிரி தெரியறதா..அது அப்படியே நகரும்னு கிளாஸ் எடுக்கப்படும்.  நம்ம வீட்டு வாசலில் நாளை மழை பெய்யும் கண்டிப்பா அடித்து சொல்வர். google map, google earth எல்லாம் குடும்பத் ்தலைவர்களே..
கண் விழிச்சதும் வாசலில் வந்து கை நீட்டிப் பார்க்கப்படும்..
அடுத்த நடவடிக்கை. raincoat..
 தங்கத்தில குடை ஜிமிக்கி போட்டு அனுப்புவா ஸ்கூலுக்கு...சத்தியமா குடை மட்டும் தரமாட்டார்கள்.
தொலைச்சுட்டு வந்து நிப்பேனு வசவு விழும். கலர் குடை கொண்டு வரும் ஃப்ரண்டை பார்த்தா ஒரு காண்டாகும்.
பீரோலேர்ந்து பாண்ட்ஸ் பவுடர் போட்டுண்ட பஞ்சு மிட்டாய் ரெயின் கோட் எடுத்து தரப்படும்..கவரோட பத்திரமா கொண்டுவானு கட்டளையுடன்.லேசா தூறல் போட ரெயின் கோட்டின் பவுடரும் கரைந்து ஒடும்.. ஹவாய் செருப்பு கரும்புள்ளி செம்புள்ளி அடிக்கும். அந்த பிளாஸ்டிக் ஒரு 'க'ப்படிக்க..மழையின் ஜில் காற்றை அனுபவிக்க முடியாதபடி் புழுங்கித் தள்ளும். தெரு முனை தாண்டியதும்...ரெயின்கோட் பைக்குள் போகும்..ஆனந்த கூத்தாட்டம் கொட்டும் மழையிலே..
அடுத்த குஷி..மாநிலச் செய்தியில் லீவ் சொல்லிடுவார் செல்வராஜ். லேசா தூற ஆரம்பிச்சதும் கரண்ட் கட் ஆகிடும். inverter இல்லாத இன்பமான காலம்..no படிப்பு.no home work..எல்லார் வீட்டு வாசலிலும் குட்டி குட்டி மாநாடு நடக்கும்..குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம்..ராம ராம ராம சொல்லுங்கோ கரண்ட் வரும்னு வயசான பாட்டி சொல்ல..வரக்கூடாது லைட்டுனு வேண்டியபடி ராம மந்திரம் தெருவில் ஒலிக்கும்..
பளபளனு துடைச்சு வெச்ச லாந்தர் விளக்குகள் மின்மினிப் பூச்சி மாதிரி அழகா எரியும்.அம்மாக்கள் சூடா சாதம் வெச்சு, காலையில் செய்த ரசத்தில் மிளகும் பெருங்காயமும்,
கருவேப்பிலையும் போட்டு கொதிக்கவிடும் வாசம் ஊரைத் தூக்கும்.பசியைக் கிளறும்..மெழுகு வர்த்தியும் அங்கங்கு எரிய.. ஆவி பறக்கும் சாப்பாடு அரை நொடியில் காலியாகும்.சாப்பிட்டு முடித்து இருட்டில் இன்னோரு ரவுண்டு anthakshari  நடக்கும்.
புயல் பற்றி பெரியவர்கள் பேச..பொழுது நாளைக்கு எப்படி கழிக்கலாம்னு வாண்டூஸ் ப்ளான் நடக்கும்.
ஒருவழியாக அவரவர் வீட்டுக்குள் தஞ்சம் அடைய..
நானும் அப்பாவும் காற்றில் ஆடும் மரத்தையும், கருமை கட்டிய வானத்தையும் பார்த்தபடி உட்கார்ந்திருக்க...சரக் சரக் என்று சிலரின்  செருப்பு சத்தம் மட்டும் கேட்க..
மழை நாட்கள்..மனசுக்கு பிடித்த நாட்களாய் இருந்ததை..இன்னும் மனசு நினைத்து ஏங்குவது ஏனோ?

Sunday, October 28, 2018

புல்லு..மண்ணு..கீரைக்கட்டு

புல்லு..மண்ணு..கீரைக்கட்டு

கீரை ...பச்சை பசேல்னு பார்த்ததும் நாக்கில் ஜலம் ஊறும். கொஞ்சம் பருப்பும் தேங்காயும் போட்டு கடைந்து உண்டால் தேவலோக சுகம்..
'அக்கா ..ரெண்டு கட்டு எடுத்துக்கோ' என்றாள் என் ஆஸ்தான காய்க்காரம்மா.
கட்டைப் பிரிக்கும் முன் தேடி எடுத்தேந் என் க்ளவுஸ்..அத்தனை மண்ணு.. குடலைப் பெரட்டி எடுக்க..
வாட்ஸப்பில் வந்த வயிற்றை கலக்கும் வீடியோவும் நினைவுக்கு வர ..சர்ப்பம் எதுவும் சயனத்தில் இருக்குமோங்கற பயத்தில் .பக்தியோட கட்டைப் பிரிச்சேன்..அப்பாடா..அப்படி எதுவும் இல்ல..
 மண்ணும் புல்லும் ஃபுல்லா இருக்க..
ஆராய்ச்சி பண்ணி ஆய்ந்து வெச்சாச்சு..
இப்போ அடுத்தது அலம்பி எடுக்ணும்..
அள்ள..அள்ள குறையா..மண்ணு..
அரை டாங்க் தண்ணி  காலி. நெத்தி வேர்வை நிலத்தில் விழ..சுத்தம் பண்ணியாச்சு..
ரெண்டு கட்டு கீரை..ரெண்டு கரண்டியாச்சு வெந்ததும்...
அப்போதான்..மனசு இறக்கை கட்டி சீரங்கத்தை நோக்கி பறந்தது..
சித்திரை வீதியில் வித்தாலும..்வீட்டு வாசலில் வந்து வித்தாலும்..
கீரை கடையும் மணம்..கிறங்க வெக்குமே எப்பொதும்..
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..
அதெல்லாம் திரும்பியே வராதா..நல்ல் சுத்தமான  காயெல்லாம் சமைக்க..சாப்பிட காலம் மறுபடியும் வராதா..ஏக்கத்துடன் அகிலா..
சரி..சரி..ஓவரா செண்டி போடாத..மைண்ட் வாய்ஸ் சொல்லி..போன வருஷம் போட்ட பாட்டை மார்க்கு ஞாபகப் படுத்த..
விரைகிறேன்..ஒரு வெட்டு வெட்ட

கீரை ஆய்தல்

கடைந்த பாற்கடலில்..
கிளம்பி வெளியேறியது...
ஆலகால விஷமென்றால்..
கடையும்..
கீரை எம்மாத்திரம்..
பழுதும்..பழுப்பும்..
படியும் அழுக்கும்..
பாங்காய் விலக்கி..
பருப்போடு கடைந்து..
A விட்டமின் சத்தோடு
அன்புமும் கூட சேர்த்து..
மசித்த கீரை..
மயக்க வைக்காதெனினும்
மறுபடி கேட்க வைக்குமே.

Saturday, October 20, 2018

தீபாவளி

Count down..
Celebration.. Mood..
Sweets and snacks..
Shopping and greetings..
Trials and errors..

Its diwali time...

சட்டியிலேயே  ஒட்டிய..
அல்வாவும்..
பல்லை உடைக்கும்.
பர்ஃபிக்களும்...
கோணிப் போன
முறுக்குகளும்..
கல்லாய்ப் போன..
மைசூர் பாக்களும்..
பாதி வெந்த
பாதுஷாக்களும்..
பிறவிப் பயனை அடையா
(லட்டு)பூந்திகளும்..
கோல்ட் நிறம் மாறிய..
globe(gulab)..ஜாமுன்களும்..
உருட்டுக் கட்டைகளாய்..
ரவா..பயத்தம் உருண்டகளும்
வெந்த புண்ணில் வேல் போல..
நெட்டில் கண்ட ரெசிப்பிக்களும்
நிஜத்தில்..நோகடிக்க
போன வருஷம்..
பட்டது போதும்..
ஃபோனைப் போடு..
'மாமி...மிக்ஸரும்..மைசூர்ப்பாவும்..
முதல் நாளே அனுப்பிடுங்கோ..
இனிமே...நிம்மதியா.
போத்தீஸ்..நல்லி..குமரன்..
ஷாப்பிங்...ஷாப்பிங்..ஷாப்பிங்..

( Geetha Chandra mam...உப்புமால ஆரம்பிச்சது..அடுத்த வாரம்..twist and turns உடன்..பல பதிவுகள் முக நூலில் வலம் வரும்..திடமா இருங்க..)

Friday, October 12, 2018

கெளரி கல்யாணம் வைபோகமே..

கெளரி கல்யாணம் வைபோகமே..

'சுகன்யா..ரெடியா..நாழியாச்சும்மா..
ப்ளான் பண்ணபடி எல்லாம் எடுத்து வெச்சியா? வாட்சப் க்ரூப்பில எதுக்கும் செக் பண்ணிடு..அப்பறம் அது இல்ல இது இல்லனு சொன்னா கூட அங்கே எதுவும் கிடைக்காது..நாணா அடுக்கிக் கொண்டே போனான். ராதுக் குட்டி தன் பையுடன் ரெடி..அப்பா..அப்பா.. அண்ணா..அக்கா எல்லாரும் வராளாப்பா..ஜாலியா இருக்குப்பா..என்றாள்..
நாணா ஃபோனும் கையுமா..டேய் சுந்து கிளம்பிட்டியா ..map அனுப்பி இருக்கேன் பார் க்ரூப்பில..
அதுக்குள்..மூர்த்தி கிட்டேர்ந்து ஃபோன் வரதுடா..நாம நேரா பேசலாம்..
லலிதா அக்காவையும் அத்திம்பேர் குழந்தைகளை நீ பிக் அப் பண்ணிடுடா..
ராமு  குடும்பம் சுகந்தி கார்ல வந்துடுவா.. பாட்டி, தாத்தா, பெரிம்மாவுக்கு நான் வண்டி அனுப்பிச்சுட்டேன'்..ரெடியான
சுகன்யா கிளம்பலாமானு முறைக்க..ஒரு வழியா கேட் பூட்டி கிளம்பியாச்சு..
வழியெல்லாம் ராஜா ரஹ்மான் துள்ளல் இசையில் பயணம்..
ஹையா..அப்பா resort வந்தாச்சு..ராது குட்டி குதிக்க..அங்கே ஏற்கனெவே சுந்து வந்தாச்சு. ஒவ்வொருவரா வர..பொண்டுகள் எல்லாம் பளபளனு ..புடவை,நகை,சீரியல்..
பேச்சுக்கா பஞ்சம்..
குழந்தைகள்..ஒரு சூப்பர் மழலைப் பட்டாளம்..இங்கேயும் அங்கேயும் ஓடி ஒடி ஆட்டம்..தாத்தாக்கள் ஒரு க்ரூப்..சித்தி,பெரிம்மா அத்தை எல்லாம்
இன்னொரு க்ரூப்..கும்மாளம் தான்..
சிரிப்புதான். குழந்தைகளா எல்லாரும் காலம்பற மூணு மணிக்கு எழுந்துக்கணும் ..போய்த் தூங்குங்கோ..பெருசெல்லாம் மிரட்டிட்டு சீட்டு கச்சேரியில் மூழ்க
அலாரம் அடிக்கும் முன்னாடியே கண்ணைக் கசக்கிண்டு ஒவ்வொருத்தரா முழிக்க..பாட்டி சூடாக் காய்ச்சின எண்ணெயும் கையுமா..மணையில் உக்கார வெச்சு..வெத்தலை குடுத்து கெளரிக் கல்யாணம் பாடி எண்ணை வெக்க..சீனு சித்தப்பா பட படனு ஒரு 1000 வாலா கொளுத்த..குளிச்சுட்டு வந்தவாளுக்கு ரெடியா மருந்து..குட்டீஸ் எல்லாம் புதுத் துணி போட்டுண்டு மத்தாப்பு கொளுத்த..டிபன் சாப்பாடு, ஃபோட்டோ என ....சந்தோஷம் பொங்கும் வேளையில் நாணாவுக்கு நாலு வருஷம் முன்னாடி அவன் வீட்டு தீபாவளி க்கு வந்த அத்தை கண் முன்னே வந்தாள்.
'நாணா..பண்டி்கைக்கு தான் எல்லாம் ரெடிமேட் ஆ வாங்கி வெச்சுருக்கே..எனக்கு ஒரே ஒரு ஆசை..
இங்கே இருக்கிற ராமு, சுந்து, மூர்த்தி லலிதா எல்லாரையும் தீபாவளிக்கு கூப்பிடேன் என்றதுதான்.. முதலில் தயங்கி சாக்கு போக்கு சொன்னவர்கள் , அத்தையின் ஆசை என்றதும் ஆமோதித்தார்கள். அன்று ஆரம்பித்தது தான் இந்த family reunion. ஒவ்வொரு வருஷமும் ஒரு ஒரு cousin வீட்டில்..குழந்தைகளுடன்..
அவள் செய்த பெரிய புரட்சி.. எல்லா உறவுகளையும் ஒன்று சேர்த்ததுதான்.. இந்த வருஷம் ஒரு மாறுதலா..
ஏன் resort ல கல்யாணம் தான் பண்ண்னுமா..கங்கா ஸ்நானமும் பண்ணி தீபாவளியும் கொண்டாடலாமே..அதான் இன்னிக்கு ஒண்ணா இங்கே எல்லாரும்..அத்தை நம்மள பார்த்து இப்போ சந்தோஷப்படுவா டா..மூர்த்தி கலங்கினான்...டேய்..FB ல நம்ம ஃபோட்டோ எல்லாம் பாத்துட்டு கலிஃபோர்னியா லேர்ந்து கண்ணன் புலம்பித் தள்றாண்டா..தானும் அடுத்த வருஷம் வருவானாம்..
சந்தோஷத்தில் மிதந்தபடி ..கார்கள் கிளம்பத் தொடங்கின..அவரவர் வீடு நோக்கி.. நெஞ்சு நிறைய ஆனந்தத்துடன்..
பண்டிகை அப்படி கொண்டாடினோம் இப்படிக் கொண்டாடினோம்..இப்போ ஒண்ணுமே இல்ல என்று ஒரு பக்கம் இருக்க..
இப்படி பாலமாய் ஒரு அத்தையோ சித்தியோ..எத்தனை சுகம்
அப்ப்டி யாருமே இல்லாவிட்டால்..நாமே ஏன் செய்யக்கூடாது..
பணம்..பொருள் விட்டுப் போகும் வேகத்தில் உறவுப் பாலம் அமைக்க மறக்கலாமோ..நமக்கு பின் நம் குழந்தைகளும் நாம் பெற்ற இன்பம் பெறட்டுமே..
time and place are not constraints if we have the will..

Wednesday, October 10, 2018

சக்தி

ஏதாவது ஒரு விஷயம் நிச்சயம் அம்மாவை ஞாபகப்படுத்தி விடும்.
இன்றும் அதேபோல.. போன வருடம் எழுதிய பதிவு..
நினைவலைகள் தொடரும்..

அரசுப் பணி வேலை..என்
அம்மா ஞாபகம் வரவைத்தது..
SSLC தேர்வில் ..
மாவட்ட முதலவள்..
தலைமை ஆசியிரியை.
தாராளமாக சொன்னார்..
மருத்துவ படிப்புக்கு..
மானியம் நான் தரேன்னு..
குடும்ப நிலமை..
கூறாமல் புரிய..
அரசு வேலை..
அவள் பருவம் பதினாறில்
குட்டிப் பெண்ணவளுக்கு.
எட்டா மேசை..
உயரமாய் நாற்காலி..
சிறிய வேலையில் சேர்ந்து
பெரிய பதவி வரை.
அம்மா..ஒரு all rounder
உள்ளத்தில் உறுதியோடு..
ஊறுகள் வந்த போதும்..
உறுதியாய் நின்று..
உடன் பிறந்தோருக்கு
புது உலகம் அமைத்தவள்..
என்னைப் பொறுத்தவரை..
இவளும் ...
 சக்தியின் வடிவந்தான்..
இவள் போல்..
பல சக்திகள் இங்குண்டு
வெளியே வராத..
வெளிச்சம் போட்டு காட்டப்படா..
எத்தனையோ..
சாதனையாளிகள்..

Thursday, September 27, 2018

ஒரு நாள் ராணி

Thanks Santhi Rajagopalan ..உங்கள் பதிவு..கிளறியது சில பழைய நினைவுகளை)

ஒரு நாள் ராணி..

வத்தல் குழம்பு
வடாம் பொரிச்சது..
வடுமாங்காயோடு..
வெண்ணையாய் ..தயிர்சாதம்..
வாழையிலையில் கட்டி..
வாய் முழுதும் பல்லாக(செட்டாக)
வழியனுப்புவாள் என் பாட்டி..
தாத்தாவை ஊருக்கு..

நாலுமணி பஸ்ஸில் போனாதான்..
நாலு வேலையும்..நடக்குமென்றே..
கட்டு சாத மூட்டையோடு..
கிளம்பிடுவார் என் தாத்தா..

ஆல் இந்தியா ரேடியோவின்..
அலறல் இன்றில்லை..
வந்தே மாதரம் வரும்போது..
வரிசையாய் உருவப்படும்
விரிப்பும் தலையணையும்..
கட்டாந் தரையிலே..
தவக்களை படுக்கையில்லை
தப்பிச்சோம் இன்னிக்குனு..
தாராளத் தூக்கம்..
வீச்சென்று அலறும்..
விவித் பாரதி இன்று..

எட்டு மணி யாச்சு..
எங்கே இரண்டாவது காப்பி..
பத்து மணியாச்சு..
பெருக்கித் தொடக்கலையா..
பூஜைக்கு நாழியாச்சு..
பதினொன்றறை யாச்சு..
பசி உயிர் போறது..
பன்னெண்டு மணியாச்சு..
பாங்க் வேலை முடிக்கணும்
ரெண்டு மணியாச்சு..
ரெடியா..காப்பி..
நாலு மணியாச்சு..
நல்ல சூடா டிபன்..
செல்வராஜ் செய்தி வாசிப்பு..
செவக்காமல் சுட்ட அப்பளம்..
ஒன்பது மணியாச்சு..
ஒரு மோர் சாதம் போதும்..
கடிகாரம் பார்த்து.
காரியம் இன்றில்லை..

வாடகை நூல் நிலயம்..
வாசலில் விழும் புத்தகம்..
வாரி எடுத்து..
வரி விடாமல் படிக்க..
வசதியான நாளிது..
வெளியே போனவர்..
வீட்டுக்கு வரும்வரை..
விலங்குகளில்லா..
விரும்பும் வாழ்க்கை..
வாசலில் காத்திருப்பு..
வர கொஞ்சம் நேரமானால்...

நாள் முழுதும் சுத்திய களைப்பில்
நாய் முகம் காட்ட..
நான் இல்லனா..
நிம்மதியா இருந்திருப்பியே..
பதிலே பேசாமல்..
பறிமாறுவாள் பாட்டி..

பழகிய..வார்த்தைகள்..
புதுசாய் என்ன வலி?...

Sunday, September 23, 2018

புத்தா

syllabus complete செய்த களைப்பில்
self study பண்ணுங்கோனு..
சயனத்தில் இருக்கும்..
சித்தார்த்தனே..

உன் (போதி)மரப் பாடம்..இந்த
மர மண்டைக்குள் போகலையே..
மிகச் சுலபம் என்றாய் நீ..
முழி பிதுங்குகிறதே..
நுனிப்புல் மேயும் எமக்கே..

தேர்வு நேரம் எமக்கு..
என்ன தூக்கம் உனக்கு..
புதுக் கொள்கை..பாடத்திட்டம்..
பிறகு யோசிக்கலாம்..

சோதனை வேளையிது..
சுப்ரபாதம் பாட நேரமில்லை..
சித்தம் என் கலங்குமுன்..
சித்தார்த்தா..எழு நீயே..

Thursday, September 20, 2018

மாமி சுண்டல் 2017

மாமி சுண்டல் -2

பிக் பாஸ் day 2 மாதிரி இன்னிக்கு மாமி சுண்டல் 2 ம் நாள்..
அகம் டீவியெல்லாம் இங்கே இல்ல..அக்கம் பக்கம் எல்லாம் ஒண்ணா ஒரே frame க்குள் இந்த ஒன்பது நாளும்.
சீதாப்பழ பாயசம் ..புடவை நாளைக்கு என்ன கலர்னு எல்லாரும் பேசறத்துக்கு complan தெம்பு தர..
பச்சைக்கு ஒரு சிலர் பச்சை கொடி..மஞ்சள் தான் மங்கலம் ..இன்னொரு க்ரூப்..ரெட்டுக்கு TRP ரொம்ப கம்மி..ஒரு வழியா தலைய பிச்சுண்டு ப்ளூனு முடிவு..கூட்டம் இங்கே கலைந்து...watsapp ல் மீண்டும் கூடியது..
என் கிட்ட இருக்கிற ப்ளூ..கொஞ்சம் பழசு..ear ring என்கிட்ட quillling wala தான் இருக்கு..என்கிட்ட மயில் கழுத்து ப்ளூ தான் இருக்கு..இந்த புடவையில் இப்போதான் வாட்ஸப் profile ..no way..
ஒரே பிரச்சினை..
கடைசியில் முடிவு செய்தபடி..எல்லாரும் அவரவர்களுக்கு பிடித்த கலர் புடவையில் ப்ரகாசமாக ..பிரசன்னம்..
என்ன ஒத்துமை..ஒருத்தர் கூட ப்ளூ கட்டிக்கல..
சஹஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சாச்சு. எப்பவுமே yummy பிரசாதம் கொண்டு வரும் மாமி , டப்பாவோடு உள்ளே நுழைய ..எல்லாரும் அந்த டப்பாக்குள் என்ன இருக்கும்னு ஒரு question mark லுக் விட்டபடி தொடர்ந்தோம்..முடித்தோம்..ஆரத்தி ஆச்சு..
டப்பா திறந்தா..
நூல்கண்டா மெல்லிசா ஃபேணி..அது மேல அப்படியே சக்கரை பொடி தூவி..
இங்கே தான் மாமியின் கை வண்ணம்..
 எப்போதும்போல் அதோட ஒரு ஙேனு ஒரு சக்கரை கம்மி பால் இல்லாமல்..சூப்பரா ரோஸ் மில்க்கோடு.
( உங்க மெனுவை மாத்தி பண்ணி பாருங்கோ லேடீஸ்...மழையா பாராட்டு கொட்டும்..நான் guarantee)
ஒரு பால் ஃபேணி..
ஆஹா..பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்குனு உறிஞ்சு குடித்த வண்ணம்.
மீண்டும் ஆரம்பித்தோம் நேற்று விட்ட இடத்திலிருந்து புடவை கலர் கதை..

நவராத்திரி... நளபாகத்தோடு ...
Happy navarathri

Monday, September 10, 2018

அம்மா நினைவு

10 th September.

கவனிப்பார் யாருமில்லையென
கலங்காத என் வீட்டு செடிகள்.

வறண்ட நாட்களும்
வர்தா புயலும்
வந்தும் தான் போயின.
வாடிப் போனாலும்
வாரி அடித்து சென்றாலும்.
மீண்டு(ம்) எழுந்தது
மருந்தான மணத்தக்காளியும்..
மணம்  தரும் கருவேப்பிலையும்.

அம்மா..இட்ட உரம்..
மரஞ்செடிக்கு மட்டுமல்ல..என்
மனதுக்கும் கூடத்தான்..
miss u maa

வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை மனிதர்கள்

வேடிக்கை மனிதரை
வலைவீசி தேடாதே
வீண்சிரமம் ஏனுனக்கு
வேறெங்கும் தேடியேதான்..
நாடித்தான் ஓடாதே
நானிருக்கேன் உன்னுள்ளே
நையாண்டி தான்பேசி
நகைத்தது என்மனமே..!!!


கண்விழித்த வேளை முதல்
கண்ணுறங்கும் வேளை வரை
கண்கட்டி வித்தை காட்டும்
கள்ளமில்லா வேடிக்கை மனம்.

 என்வீட்டு தோட்டத்தில்
ஏராள மலருண்டு
எண்ணமது தோன்றிடுமே
அடுத்தவிட்டு அடுக்குமல்லி
எட்டித்தான் பறித்திடவே !!!!
வேடிக்கை மனமிதுவே..

 
கொத்தவால் சாவடி சென்றே
மொத்தமாய் விலை பேசினாலும்
கொத்தமல்லி கொசுறு தந்த
கடைக்காரன் பேர் சொல்லி
கொடைவள்ளல் பட்டம் சூட்டும்..
வேடிக்கை மனமிதுவே..

  பிள்ளைகளே உலகமென்றே
பிணைந்தே கிடக்குமே-அவர்
சுண்டுவிரல் பிடித்தே
தண்டையுடன் நடந்தவேளை
கண்டதுவே ஓர்சுகமே -அவர்
 சிரிக்கும் வேளை
தெறிக்கும் கண்ணீரும்
சென்றிதயம் சுட்டிடுமே
வேடிக்கை மனமதுவே

 
அடித்தே அடக்க எண்ணும்
அடம் பிடிக்கும் பிள்ளைதனை
லாடம் அடித்த குதிரையாய்
பாடம் படிக்கும் பிள்ளைக்கும்
ஓட்டமே வெற்றிக்கு வித்தென
ஊட்டியே தான் வளர்க்கும்
வேடிக்கை மனமதுவே


 காலதோஷமது கழிந்திடவே
 கோயிலது சென்றிடினும்
கதவோரம் கழற்றிய 
காலணியது காணாமல்
களவாகி விடுமென்ற
கலக்கமுடன் கைக்கூப்பி
 கடவுளை தொழுதிடும்
வேடிக்கை மனமதுவே


நாடிய வளமெலாம்
நலமாய் கிட்டிடவே
கோடிகள் பலசேர
வரமொன்று கோரியே
கேடுதரும் முன்வினைகள்
 தீங்கின்றி நீங்கிடவே
நாடிபிடி ஜோசியரை
 தேடித்தான் ஓடிடுமே
வேடிக்கை மனமதுவே

 இப்பிறவி போதுமென்றே
இறைவனடி நாடிடுமே
இறைஞ்சிடுமே எப்போதும்
இன்னல் இல்லா
இன்னொரு பிறவி
இனியேனும் தாஎன்றே
வேடிக்கை மனமதுவே..


வேடிக்கை வாழ்க்கையிது
தத்துவங்கள் இங்குண்டு
கற்பனைகள் பலவுண்டு
கனவுக்கும் மடலிட்டு
நல்லசேதி ஒன்று
நாளையாவது நல்கு நீ -என்ற
நம்பிக்கை மனமுண்டு.


வயதொரு பொருட்டில்லை
படிப்பொரு தடையில்லை
ஒளிந்து கிடந்திடுமே
ஒவ்வொரு மனிதனுள்ளும்
ஒன்றிபோன இயல்புடனே...
வேடிக்கை மனமிதுவே..

தங்கமணி book release write up

2012. மே மாதம். ஸ்கூலில் இருந்து prize  ம் ,பையுமா ஓடி வந்தாள் என் பெண். இரண்டு certifcate, 2 புக் . புக்கைத் திருப்பி பார்த்தேன். கங்கை ஆற்றைப் பற்றி ஒருவர் பக்தியோடு, தேசப் பற்றோடும் இந்தியில் எழுதிய கவிதைத் தொகுப்பு. free ஆ school க்கு distribute பண்ணச் சொல்லிட்டார் போல இருக்கு. அதனால் 2புக்கும்.ஒரே புக்..அவரே publisher ம் கூட..
திடீர்னு எதோ ஐடியா தோண ,வீட்டுக்காரருக்கு ஃபோன் போட்டு சொன்னேன்.. உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..இந்த வேலையெல்லாம் அவர் எப்படி செய்வார்..எங்கியாவது போய் வாங்கிக் கட்டிண்டு வராதேனு ஒரே அட்வைஸ்..
ஒரு சுப முகூர்த்த நாளில் அந்த writer cum publisher கிட்ட போனேன் ..என் மாமியார் தங்கமணி சிவபெருமான் மேல் தினமும் எழுதிக் குவித்த கவிதைகளை எடுத்துண்டு.  publishing க்கு வந்திருக்கேன் என்று சொன்னதும் வாயெல்லாம் பல்லானவர், பல்பு வாங்கின மாதிரி ஆனார் நான் நீட்டிய தூய தமிழ் கவிதைகளைப் பார்த்து..yeah kaunsi basha mein hai  ...
நான் ரொம்ப பெருமையா இது தமிழ் என்றேன்..behenji yeah nahi ho payega..sorry. aap Chinnai ( Chennai அப்படி அழுத்திி தான் சொல்வா அங்கே எல்லாம்.. ரொம்ப ஏமாற்றத்தோட வீடு திரும்பின கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து ஒரு SMS. I am ready to take this project.
தமிழ் வாசமே இல்லாத தேவ பூமி தேஹ்ராதூனில் , முதல் முதலாக ஒரு தமிழ்ப் புத்தக அச்சடிப்பு துவக்கம். முதல் கட்ட பிழை திருத்தங்கள் சந்த வசந்த ஐயா இலந்தையும், அனந்த், சிவசிவா அனைவரும் செய்து தர..நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் புத்தக வேலை நடப்பு. தினமும் proof reading. correction. correction க்கு correction.
thangamani அம்மாவிடம் சொன்னதும், தனக்கே உரிய அடக்கத்தோடு ' அதெல்லாம் எதுக்கு செலவு அகிலா.. blog போதும் எனக்கு' ..நீயும் அலையாதே மழையிலெல்லாம்..( அது மழை கொட்டும் காலம் அப்போ)..அந்த வாஞ்சை..அப்பப்பா..இதுக்கே  இவளுக்கு ஏதாவது செஞ்சுடணும்னு ஒரு வைராக்கியம்.
அட்டை கலர் selected. படம் வேணுமே..அந்த publisher நிறைய modern art of Shiva எல்லாம் காண்பிச்சு அதுக்கு தனி ரேட் பேசினார். திடீர்னு ஒரு ஐடியா எனக்கு..' ஐஷு ..நீ தான் drawing பண்ணுவியே..simple ஆ நம்மூர் கோயில் கோபுரம்..ஒரு சிவ லிங்கம் try பன்ணு என்றேன்..அவள் வரைந்த்தது அட்டைப் படமாய் அச்சில். தங்கமணிக்கு ஏக சந்தோஷம்.
book publishing..மிக எளிமையான முறையில் கனாடாவிலிருந்து வந்த எங்கள் தமிழ் ஆசான் அனந்த் மாமா கையால், tupkeshwar shiva temple ,Dehradun  சன்னதியில் ஒரு கொட்டும் மழை நாளில் , மந்திரங்கள் முழங்க , அமைதியாய் நடைப் பெற்றது.
this day that year 2012, an unforgettable day in our life.what was thought impossible was made possible.
'என் பணி அரன் துதி' புத்தகம் வெளியிடப்பட்ட நாள்..எங்கள் வாழ்வில் எதையொ பெரிசா சாதித்த நிறைவைத் தந்த நாள்.
இன்னும் நிறைய பாடல்கள் குவிந்திருக்கிறது . தேவபூமியில் அருள் செய்தவன்..மீதி இருக்கும் அவள் பாடல்களைத் தொகுத்து வெளியிட எங்களுக்கு கூடிய விரைவில் அருள வேணும்.
you rocked thangamani..

அரசு அலுவலக அனுபவம் (மத்யமர்) 09-09-18


#அரசு_அலுவலக_அனுபவம்

மிடுக்காக அந்த பெண் ஆஃபிஸர் உள்ளே தன்
சின்ன..ஒரு பழைய கால மின்விசிறி சுற்றும் கேபினுக்குள் நுழையும்போதே..வழியில் ஃபைலோடும் பெட்டிஷன் லெட்டரோடும் உட்கார்ந்திருப்பவர்களை ஓரக் கண்ணால் பார்த்தபடியே செல்வார்கள்.

வரிசையா வெச்சிருக்கேன் மேடம் எல்லா ஃபைலும் என்று உதவி அதிகாரி சொல்லும் முன்னே..அங்கே பச்சை புடவை கட்டிக்கிட்டு ஒரு அம்மாவும் அவங்க பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற பையனையும் உடனே அனுப்பு என்பார்.
கொஞ்சம் ஏமாற்றறத்துடன் ..(இதே வேலை இந்த அம்மாவுக்கு..நான் தான் எல்லா அடுக்கி வெச்சிருக்கேனே..உதவியின் மை.வாய்ஸ் சொல்ல..' எனக்கு தெரியாதா..யாரைக் கூப்பிடணும்னு' ஆஃபிஸர் எச மைண்ட் வாய்ஸ் பேச..
பென்ஷன் , வந்தது வர வேண்டியது, arrears கணக்கு, அன்ன்னிக்கு காலம்பற வந்த G.O
எல்லாம் விரல் நுனியில் இருக்கும்.
நாம் எல்லாம் government என்னும்  machinery ந் அங்கம். நம் பொறுப்பு உணர்ந்து பணியாற்றணும்நு லெக்சர் கொடுக்கும் ஒருவர்.
வீட்டாள் வெளியாள் வித்தியாசமே கிடையாது.
உங்கள் உழைப்புக்கு இது கண்டிப்பா கிடைக்கணும்னு உறுதி அளித்தபடி அந்த ஆஃபீஸர்.
வேற யாருமில்லைங்க எங்க அம்மா தான்.
 ஒரே ஒரு நாள் ஆபீஸ் போனேன்.
ஒரு சமயம் "அம்பி" இன்னொரு சமயம் ரெமோ..
குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்கும் , நட்பு வட்டங்களுக்கும், தெரிந்த தெரியாத எல்லாருக்கும் பென்ஷன்னு சொன்னதும் எங்க அம்மா பேர் தான் ஞாபகம் வரும்.
.ஜோசியர் சொன்னாரு..இந்த திசையில் இருக்குற வூட்ல தான் பேப்பர் திருத்தறாங்கனு
மஞ்சப் பையோடு வீட்டு வாசலில் டிபார்ட்மெண்ட் தேர்வுகள் முடிஞ்சவுடன் காத்திருக்கும் ஒரு கும்பல். மஞ்சப் பை காண்பிச்சா மயங்கிடுவேனானு மறுபரிசீலனைக்கே இடமில்ல்லை..போங்க இங்கிருந்துநு அவர்களை அனுப்ப அம்மாவுடன் சேர்ந்து நானும் பாடு பட்டிருக்கேன்.


ரிடையர் ஆகிய போதும் , எல்லா ஆர்டரும் டிப்பில் வைத்து உடனே யார் யாருக்கு என்ன வரும்..அதுக்கு என்ன என்ன செய்யணும்னு ஃபோன் பண்ணி சொல்லிடுவாள்.

எங்க அம்மா எழுதிய கடைசி மெயிலும் கூட கணவனை இழந்த ஒரு சகோதரிக்கு இன்னும் அவர்களுக்கு வர வேண்டிய தொகையை கணக்கு போட்டு ..இந்த இந்த ரெகார்ட்ஸ் எல்லாம் எடுத்துப் போய் செய்து முடி' என்றது தான்.

நேற்றும் கூட எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பர் சொன்னார்.." அம்மா இருந்திருந்தா..கரெக்டா எங்களுக்கு சொல்லிடுவாங்க'..

பாஸ்போர்ட் வாங்க காசும், ட்ரைவிங் லைசென்ஸ் வாங்க காசும் கொடுத்து அலைந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்து அம்மா படத்திலிருந்து சிரிக்கிற மாதிரி இருக்கு.

இந்தப் பதிவு என் அம்மா போன்ற பல அரசு ஊழியர்களுக்கு என் dedication கூட.

இந்த தலைப்பில் என்னை அவள் என்னை விட்டுப் பிரிந்த இந்நாளில் (நாளை)எழுத வைத்த மத்யமருக்கு நன்றி.




Amma 10th September

எங்கே அவள் என்றே மனம்..

ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..
ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.

அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.
ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..
school student மாதிரி ஆனா..
சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.
திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.

எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..
MND ( motor neuron disease) என்ற எமன்..
வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..
பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.
மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..
் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..
இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..
ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..
விடை தெரியல..

Amma..10 -09-18

எங்கே அவள் என்றே மனம்..

ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..
ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.

அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.
ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..
school student மாதிரி ஆனா..
சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.
திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.

எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..
MND ( motor neuron disease) என்ற எமன்..
வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..
பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.
மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..
் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..
இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..
ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..
விடை தெரியல..

Tuesday, September 4, 2018

தோகை இளம் புறா

உன்னை அடக்கும் முயற்சியில்..
நான் தான் அடைபட்டேன்..
என் சமையலறை..
சிறையானது..

தோகை விரித்து நீ ..
ஜாலம் செய்தாலும்…என்
ஜன்னல் வழி திறவாது..

உன்னைத் தெரியாதா எனக்கு..
இடத்தைக் கொடுத்தால்..
மடத்தைப் பிடிப்பாயே..
மாடப் புறாவே..

Saturday, September 1, 2018

அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை

ஒரு குட்டி ஷாப்பிங் போகணும்மா..commercial street போலாமா என்றாள் பெண்.
அம்மா தாயே நான் இந்த ஆட்டத்துக்கு வரல..வெள்ளிகிழமை சாயந்திரம் Bangalore ல வெளியே போனா..week end முடிஞ்சு தான் வரமுடியும்..இப்போவே பார்..வாசல்ல எப்படி traffic. வேணும்னா jayanagar போனால் ..நடு ஜாமத்துக்குள்ள வரலாம்
.. 4 கிலோமீட்டர் தூரம் ஒருவழியா ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்தாச்சு. வேலை என்னாமொ அரை மணி தான்.
இப்போ ஆட்டோ வேட்டை. ( குருப் பெயர்ச்சி வருமுன்னே குளிர் ஜுரத்தோட படுத்த படுக்கையா workshop ல இருக்கு என் செல்லக்குட்டி..என் Scooty . அதான் இந்த ஆட்டோக்கு அலையல்)
 கை காட்டினதும் வந்தார் ஒரு ஆட்டோகாரர். என் இடத்தை சொன்னேன். வழி நீங்களே சொல்லுங்க என்றார். ( அதானே பார்த்தேன் ஏரியாவுக்கு புதுசு போல..சாமனியத்தில எங்க ஏரியா பக்கம் வந்துட மாட்டாங்களே..அம்பூட்டு பயம் அங்கே இருக்கும் வண்டி நெரிசலுக்கு)
இடது வலதுனு நான் சொல்ல சொல்ல ஓட்டினார். கொஞ்சம் கொஞ்சமா வண்டி மெதுவா ஊர ஆரம்பித்தது. ஒரு லெவெலில் நாலாப் பக்கம் two wheeler,four wheeler,ஒரே ஹாரன் சத்தம்.ஒரு இஞ்ச் கூட நகர வழியில்லை. சிக்னல் எல்லாம் செத்து ரொம்ப நாளாச்சு. traffic constable எல்லாம் tea குடிக்க போய்ட்டாங்களோ என்னமோ. ..
என்ன தோணித்தோ அந்த ஆட்டோக்காரருக்கு.. வண்டி போகாதும்மா..வேற ஆட்டோ ல போங்க ..இங்கேருந்து நகர முடியாது இப்போ ..என்றார். வேற வழி..இறங்கிட்டு 25 ரூபாய் எடுக்க பர்ஸை துழாவினேன். காசு வேண்டாம் போம்மா என்றார். இல்ல வெச்சுக்கோங்க என்று நான் சொல்ல அவர் பிடிவாதமா மறுத்து விட்டார்.
அங்கேரிந்து சொல்ப்ப (ஆஹா..கன்னடம்) தூரம் நடக்க இன்னொரு ஆட்டோ வந்தது. இப்பவும் ஆச்சரியம். எங்க ஏரியா பேர் சொன்னதும் மூஞ்சி சுளிச்சு அங்க traffic ல எவன் மாட்ட்டுவான்னு கடுப்ப்டடிக்காமல் சர்னு கிளம்பினார். ஒரு ஒண்ணேகால் கிலோமீட்டர் வந்தோம் ஊர்ந்து ஊர்ந்து. மீண்டும் action replay ..வண்டி வண்டியாய் வண்டி..இம்மி கூட இடமில்லை நகர. பொறுமையிழந்த அந்த ஆட்டோக்காரர் நீங்க இறங்கி நடங்கம்மா...ஆட்டோ போகாது என்றார். அட ராமா...இது என்ன சோதனனு இறங்கி ரூபாய் எடுக்க..காசு வேண்டாம்..நீங்க  opposite side ல போய் வண்டி எடுங்க என்று அட்வைஸும் கொடுத்தார்.
இறங்கிட்டோமே ஒழிய..நடக்கறது எப்படி? pedestrian பாதையெல்லாம் பைக் பாதையாகி எத்தனையோ காலமாச்சு இங்கே.
இப்போ cross பண்ணி முக்குல நிக்க , இன்னோரு ஆட்டோ பிடித்து மீண்டும் அதே பிஸி ரோடில் ..
ஆட்டோ கொஞ்ச கொஞ்சமா slow ஆச்சு. சீக்காளியான சிக்னல்.ஒரு சைடு செவப்பே எரியறது..இன்னொரு சைடு பச்சை மட்டுமே.. பொறுமை இழந்த் கூட்டம். தாறுமாறா ஓட்ட.. குறுக்கும் நெடுக்குமா வண்டிகள்..இப்போ ஒருத்தர் கூட நகர முடியாதபடி நிலமை.
எங்களைப் பார்த்து பாவமா அந்த ஆட்டோக்காரர்..நீங்க வேற ஆட்டோ பிடிச்சுக்கோங்க மா..நவுறாது இப்போ வண்டி என்றார். காசை நீட்ட வேண்டவே வேண்டாம்னு மறுத்துட்டார்.
இப்போ ஆட்டோ நின்ன இடத்திலேர்ந்து வீடு கிட்டக்க..பொடி நடையா வந்து சேர்ந்தோம். (இதை முன்னாடியே பண்ணியிருக்கலாம்னு நீங்க எல்லாம் முணுமுணுக்கறது என் காதில விழறது.).
செஞ்சோற்றுக் கடன் மாதிரி இப்போ இந்த ஆட்டோ கடனை எப்படி தீர்க்கறதுனு ஒரு பக்கம் யோசனை..
மறுபக்கம்..அதெப்படி ஒரே நாளில் இப்படி ஒரே மாதிரி  மனிதர்களை சந்திக்க நேர்ந்தது.
ஆச்சரியம்

Thursday, August 30, 2018

மாகி(மை)

மாகி(மை)
maggiyananda Mayi.என் கடைக்குட்டியின் செல்லப் பேர் ஒரு காலத்தில். A for apple சொல்லும்போது கூட M for maggiனு சொல்வோம் நாங்க.மாகி ban ஆனப்போ ஆடிப்போன குடும்பத்தில் நாங்களும் ஒண்ணு.
மாகி படைத்து விட்டால்
மாமலையும் ஓர் கடுகாய்
மளமளனு வேலை நடக்கும்.
காலம் மாறித்தானே போகும்.

ஏன்னா...இப்போ கொஞ்சம் வளர்ந்துட்டோமே.. weight conscious..diet plan..etc..etc..மாகிக்கு வந்தது முதல் வேட்டு.பாக்கெட் பாக்கெட்டா ரொம்பி வழிஞ்சது போய்..
போதும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரு மாசத்துக்குனு மனதை அடக்க ஆரம்பிப்பு.
இரண்டு நாள் முன்னாடி ..இருந்த பொட்டலமெல்லாம் காலியாக எங்களுக்குள் நடந்த conversation.
அவள்: அம்மா..மாகி காலி.வாங்கிண்டு வா. ஒரே ஒரு பாக்கெட் போதும்.என்னை tempt பண்ற மாதிரி offer ல கிடச்சுதுனு அள்ளிண்டு வராதே.ஆமாம் சொல்லிட்டேன்.
நான்: அட என செல்லமே மாகியானந்தமயி..உன் சித்தம் என் பாக்கியம்.
பையை தூக்கிண்டு கடைக்கும் போயாச்சு.எல்லா சாமானும் வாங்கினப்பறம் என்னவோ மிஸ் ஆறதேனு மண்டை குடைய..(மைண்ட் வாய்ஸ் இதுக்குத்தான் வயசான காலத்தில லிஸ்ட் எழுதிண்டு வரணுங்கறதுனு என்னை உசுப்பித்து.)
பில் போடும் வேளையில் ..கண்டேன் சீதையை..மாகி ..மாகி..வரிசையா அடுக்கி வைத்தபடி ,என்ன தேடறீங்க அக்கா..என்னைக் கேட்டாள் கடையில் வேலை செய்யும் பெண்.இதே தான் ம்மா..
ஒரு பாக்கெட் கொடு என்றேன். பழக்கப்பட்ட அவள் சொன்னாள்..அக்கா இப்போ ஒரு பாக்கெட் வாங்கினா ஒரு சூப்பர் மாகி bowl free க்கா..இந்த offer
இப்பவே முடிஞ்சிடும் . ஒரு இரண்டாவது எடுத்துப் போங்க என்றாள்..ஓசிக்கு ஆசை யாரை விட்டது. very colorful and catchy bowl. வாங்கியாச்சு.
வீட்டுக்கு வந்ததும் மகளைக் கூப்பிட்டு மாகி இந்தாம்மா என்றேன்.
யக்..இது யார் கேட்டா..எனக்கு இந்த flavour பிடிக்காதே..அதைக் கூட பாக்க மாட்டியா.. ஏம்மா free கிடைச்சதால்் என் favourite மறந்து போச்சா ..சரி சரி..போ..adjust பண்ணிக்கறேன் இந்த டைம் என்றாள்.
டீவில  ஓடிக் கொண்டிருந்த ரஜினி பாட்டு..என்
காதில் இப்படி விழுந்தது..

cupக்கும் , glassக்கும், spoonக்கும் ஆசைப்பட்டு..
வாழ்கின்ற வாழ்வுக்கு
என்றைக்கும் அர்த்தமில்ல..
இதைப் புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..?
 culprit நான் தானே?

Wednesday, August 29, 2018

.உன்னை விட

உன்னை விட..

விதையே இருக்காது..
 காயே கனியாய் இனிக்கும்..
நான் வெச்ச கொய்யா மரம்..

இது என் பொண்ணு
நட்ட மாமரம்..
மல்கோவா ...சுவையோ சுவை..
மண்ணு நல்ல மண்ணு இது..

அளவில சிறிசுதானாலும்
அன்னாசிப் பழம்..
அருமையா இருக்கும்..

வாழை இலைக்கு..
வெளியே போறதே இல்லை

இந்த மரக் கிளை இருக்கே
மங்களத்தின் அடையாளம்..

இந்தப் பூச்செடி ..
புது வகையாக்கும்..
பார்க்கவே கொள்ளை அழகு..

பக்கத்து வீடு நல்லவங்க..
பக்கத்துணையா இருப்பாங்க..

சுவற்றில் தொங்கும் படம்..
சின்னப் பைய்யன் வரைஞ்சது..

அணில் புறா மைனா எல்லாம்..
அடிக்கடி வந்து விளையாடும்..

தண்ணீர் வருகை பார்த்து
தவறாமல் மோட்டார் போடணும்..
இந்த குழாய் மட்டும்..
கொஞ்சம் தண்ணீ கம்மி வரும்..

திருட்டு பயமே இல்லையிங்கே..
தைரியமா இருக்கலாம்..

ராசியான வீடுங்க..
வரிசையாய்..விளக்கங்கள்

வீட்டுச் சாவியை
வீட்டுச் சொந்தக்காரர் கையில்
் கவலையுடன் கொடுத்தபடி.
பல ஆண்டாய்...
குடியிருந்தவர்..

வாங்கிய வீடோ..
வாடகை வீடோ..
வாழ்ந்த விட்டை
விட்டு வரும் வலி..
வலி ....வலி்தான்...

பிடிக்கும்..பிடிக்கும்..

பிடிக்கும்..பிடிக்கும்..

அடித்து அணைத்த அலாரம் பிடிக்கும்
அப்போது காணும் கனா பிடிக்கும்.
சுப்ரபாதம் பிடிக்கும்..பாடும்
சுப்புலக்ஷ்மி அம்மா பிடிக்கும்.
இழுத்துப் போர்த்தி தூங்கப் பிடிக்கும்..அங்கே
இழுக்கும் காபி மணம் பிடிக்கும்

என் வீட்டுத் தோட்டம் பிடிக்கும் ..அங்கே
கூடு கட்டும் குருவி பிடிக்கும்.
கரைந்துண்ணும் காகம் பிடிக்கும்..அங்கே
காத்திருக்கும் அணில் பிடிக்கும்.

கொள்ளை அழகு கனகாம்பரம் பிடிக்கும்...அங்கே
 துரத்தும் பட்டாம்பூச்சி பிடிக்கும்.
பக்கத்து வீட்டு மாங்காய் பிடிக்கும்..அதை
பறித்துத் தரும் பாட்டி பிடிக்கும்.

கொட்டும் மழை பிடிக்கும்..அதில்
குட்டிக் கப்பலோட்டப் பிடிக்கும்.
ஐந்து ஓட்டையிட்ட அடை பிடிக்கும்..அதோடு
ஆனியன் ரவாவும் பிடிக்கும்(திருச்சியில்ல நாங்க)

அரட்டை ரொம்ப பிடிக்கும்..அதோடு
நொறுக்கும் தீனி பிடிக்கும்..

வாழ்க்கை இதை மிகப் பிடிக்கும்..அதில்
வரும் சவால்கள் அதைவிடப் பிடிக்கும்..
என் சிறு உலகம் பிடிக்கும்..அதில்
சிறகடிக்கும் நட்புப் பறவைகள் பிடிக்கும்

பிடிக்குமென்பது பல இருக்கு
பிடிக்காததைப்  பேசியே..
பொழுதும் போகுமிங்கே..
நேர்மறைச் சிந்தனையது
நாளும் வழிகாட்ட
நாமும் வாழ்ந்து காட்டுவோம்..
நமக்குப் பிடித்தபடி
நல்லதை அனுபவித்தபடி..

Thanks Saratha Sanal for your thought provoking post.
And Shiv K Kumar Sir's poetic comments

Sunday, August 26, 2018

Mother theresa

'உதவறேன்னு போய் உதை வாங்கிட்டு வரப்போற..உனக்கென்ன பெரிய மதர் தெரஸானு நினப்பா'..ஆஃபீஸ் தோழிகள் ஒரே இடி இடித்தார்கள்.
மதர் தெரஸா. .அந்தப் பேரைச் சொல்லும்போதே ஒரு சுகம் எப்போதும். எப்படி இப்படி இருக்க ஒருத்தரால் முடியும் ..நாள் பூரா அவர்களைச் சுற்றியது என் எண்ணம்.
வீடு வந்து சேர்ந்ததும் சாப்பிட்டு முடித்து
 டீவி ஆன் செய்ய ..மதர் தெரஸா அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்த செய்திகள் வாசிக்கப்பட்ட 1991 ம் ஆண்டின் ஓர் இரவு. ஏதோ ஒரு மன உளைச்சல். அப்படியே தூங்கிட்டேன்.
ஆழ்ந்த உறக்கத்தில..அதோ தெரிந்தது.. ஆஸ்பத்திரி படுக்கையில்  அன்னை தெரஸா..ஈனஸ்வர்த்தில் அருகிலிருந்த சிஸ்டரை கூப்பிடுகிறார்..எனக்கு ஒரு உதவி செய். அதோ அங்கே குரோம்பேட்டை யில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் அவளை கல்கத்தாவுக்கு கூட்டி வாருங்கள்..எனக்குப் பிறகு இந்த மக்களுக்கு அவள் சேவை செய்வாள்.டைலாக் முடிவதற்குள் கனவைக் கலைத்தாள் அம்மா..தண்ணி நின்னு போய்டும் ..சீக்கிரம் எழுந்திரு..வேக வேக..மிக வேக வேகமா ஓடி ஓடி .அம்மாக்கு ஒத்தாசைப் பண்ணி..ஓடி ஓடி ஃபுட்போர்டில் பஸ் ஏறி..சிக்னலில் குதிச்சு ஆஃபீஸ் போயாச்சு.தோழிகளைக் கூப்பிட்டு கனவைச் சொன்னேன். ஒரே கிண்டல்..
கேலிதான்.

கனவு மெய்ப்பட வேண்டும்..ஆசை எப்போதும் உண்டு.ஆனால் இந்தக் கனவு மெய்ப்பட மனப்பக்குவம் வேண்டும். மதர் தெரஸா..பேர் சொல்லும் போதே மெய் சிலிர்க்கிறது இன்றும்.
இன்று அன்னை தெரஸாவின்  பிறந்த் தினமாம். என்னைப் பொறுத்தவரை எந்த இடத்தில்  அன்பும் இரக்கமும்  பிறக்கிறதோ..அந்த க்ஷணத்தில் பிறந்து கொண்டே இருப்பாள் இந்த அன்னை.. என் பிரார்த்தனை இவரிடம் இன்று.
என்னுள்ளும் ஒரு தெரஸா் இருக்கிறாள். அவளை நான் அடிக்கடி தட்டி எழுப்பணும்..முடிந்த வரை நல்லது செய்யணும்..
mother Teresa...

Saturday, August 25, 2018

கண்ணா வருவாயா..2

வெல்ல சீடை..
உப்பு சீடை..
தட்டை..
தேன்குழல்..
அவல் பாயசம்..
வடை..
பால்..பழம்...
தயிர் ..வெண்ணை..
எல்லாம் வெச்சாச்சு..
வாசலில்லேர்ந்து..
உள் வரை..
உன் காலும் போட்டாச்சு..
விளக்கும் ஏற்றி..
ஆயர் பாடி மாளிகையில்..
cassette பூரா பாடியாச்சு..
எப்பவும்..வந்துடுவியே..
இன்னிக்கு எங்கே காணோம் இன்னும்..
பக்கத்து வீட்டில் ஏதோ சத்தம் கேட்க..
என்னனு போய் எட்டிப் பார்த்தேன்..
என்னத்த சொல்ல..
நீயுமா..கண்ணா..இப்படி..
கையில் pizza piece ம்..
வாயில் maggi யும் ரொப்பிண்டு..
ரொம்ப நன்னா இருக்கு..
பேஷ் பேஷ் னு..
இனிமே மெனுவை மாத்துங்கோ..
I need a change ..
சொல்றது நீதானா..
fast food க்கு..
flat ஆகிட்டயா நீயும்..

சந்தோஷத்தில்...
வரும் சந்ததிகள்..
கண்ணா..so sweet..
கொஞ்சலும் ..கூத்தும்..

Happy janmashtami ..

கண்ணா வருவாயா

கண்ணா வருவாயா...???

அம்மா..
பாப்பா கூக்கி (தூக்கியின் மழலை)
குட்டிப் பாப்பா கெஞ்ச..
கொஞ்சம் இருடா..
 கிருஷ்ணா உம்மாச்சி வருவாரே..
குடுகுடுனு ஓடி விளையாடுவாரே..
அவருக்கு இன்னிக்கு  birthday ஆச்சே..
பார்ட்டிக்கு எல்லாம் ரெடியாக்கனுமே..
சிணுங்கலுடன்...பின் சமாதானம்..
பாயசம் கண்டதும்..
பரவசம் வந்தது..
என் வீட்டு கிருஷ்ணிக்கு.
கண்ணா...உம்மாச்சி வருவார்
உட்கார்ந்து சாப்பிடுவார்..
அப்பறந்தான்..நமக்கு..

தூங்க வெச்சு அவளை..
குட்டிக் கால் போட்டு..
மற்ற வேலை கவனிப்பு..
அனுமாஷ்ய சக்தி ஒன்று
ஹாலுக்கு என்னை இட்டுசெல்ல
என் சுட்டி வால்..
ஒன்னு வுடாமல்..
காலை அழிக்கும் மும்முரத்தில்..
அம்மா..அழுக்கு..!!!
என்ன சொல்வேன்?

நெய்வேத்தியம் ரெடி..
என் வீட்டு குட்டியின் ..
அலைபாயும்..
கையை கட்டி..
ஓம் பூர் புவ ஸு்வ..சொல்லி..
எல்லாம் ஆச்சு..
மம் மம் சாப்பிடலாமானு ..கேட்க..
இடதும் வலதுமாய் வேகமாய்த்
தலை ஆட்டி..
மம் மம் வேண்டாம்....
அது கிருஷ்ணா க்கு..
பண்ணிய பட்சணங்கள்.
படைத்த பழங்கள்..
பரிதாபமாய் எனை பார்க்க..
பண்படனுமோ நாம இன்னும்..
பசினு பாயசம் கேட்டது..
அந்த மாயக் கண்ணன் தானோ..???

கண்ணா வருவாயா..
எப்போவாவது வந்திருக்கியா...???
கேள்வி ....குடைய நான்..!!!

Happy janmashtami

Friday, August 24, 2018

காலமிது காலமிது

காலமிது..காலமிது..
கண்டுக்காதீங்க அம்மாக்களே
ஆனந்த யாழ்கள்
ஆசை கீதம் பாடட்டும்

மடிக்கப்படாத போர்வை
மின்னும் மடிக்கணினி
மூடாத பேனா
மூடியிழந்த பெர்ஃப்யூம்

விரிக்கப்பட்ட யோகா பாய்
சுருட்டி எறியப்பட்ட் துணி
முறுக்கிக் கிடக்கும் வயர்கள்
காய்ந்து கிடக்கும் கப்புகள்

கண் மை துடைத்த பஞ்சு
காது குடைந்த buds
கழற்றி வைத்த காது வளையம்
கதவோரம் சுற்றும் முடிக்கொத்து
மூக்கொழுகும் ஷாம்ப்பூ
முடியோடு சீப்பு
முடிவே இல்லையா
முடியலையே சுத்தமாக்க..

இடிப்பாரே என்னையும்
வளர்ர்ப்பு இதுவா என்று
வாதமும் ் செய்யவே
வந்தது பதிலுமே..

போட்டது போட்டபடி இருந்தால்
பொங்கும் இன்ப வீடாமதென்றாள்
பொங்கிய பொய்ச் சினமடக்கி
போடா..உன் பேச்சென்றேன்..

போகட்டும் போ..
போய் விடுவாள்
புக்ககம் ஒருநாள்..
பார்த்து வளர்ந்தவள்
பக்குவமாவாள்..
பார் என் வீடிதென்று
பீற்றுவாள் ஓர்நாளும்

அன்னையின் பாடம்
அழியாது என்னாளும்
அந்த நாளுக்காக்வே
அடியேனும் காத்திருக்கேன்..

(டிஸ்கி: 'மகள்களைப் பெற்ற  அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் ..
சுத்தம் சத்தம் போட வேண்டிய விஷய்மல்ல என்று'..(ஆனந்த யாழ் effect)

Sunday, August 19, 2018

My cam

My cam ..
My forever companion..
Through the tiny lens..
learning to look around.
The big beautiful world..

Journeys ..long or short..
With you
Worthy my trips..

கருப்போ..கலரோ..
கதை பல சொல்லும்..

கருப்பா இருந்ததா என் கூந்தல்..
கண்ணாடி போடாம..எப்படி இருந்தேன்..
இன்னும் கொஞ்சம்..கம்மியா makeup
போட்டு இருக்கலாமோ..
கல்யாண ஆல்பம்..கவலை கொள்ளச் செய்யும்..
எத்தனை ஊர்கள்..
எத்தனை வழிகள்..
எத்தனை மனிதர்கள்..
எல்லாவற்றையும்..
எனக்குத் தோணும் போதெல்லாம்..
புரட்டி ப் பார்க்க உதவும்..
புகைப்படங்கள்..
உயிர் கொடுக்கும்....
உன்னத நினவலைக்கு..
என்னோடு..வா வா என்று..
எப்போதுமே சொல்லுவேன்..
கையிலும்..கண்ணிலும் வைத்து
கண்ணுங் கருத்துமாய் காப்பேன்..
Thanks for being with me ..always my dear cam

Friday, August 10, 2018

மூழ்காத ship ..friendship aa

மீள்கள்..மீண்டு வரா நாட்கள்

மூழ்காத ship..ஏ friendship aa..

எத்தன தடவ சொல்றது இந்த ராஜியோட சேர்ந்து மழையில கும்மாளம் அடிக்காதேனு....லொக்கு லொக்குனு இரும்பிண்டு..தொண்டை வலி வந்து அவளா கஷ்டப்படறா..இதே பொழப்பா போச்சு உனக்கு..
அம்மா ,சித்திகளின் திட்டுகளின் மழையில்..
எப்ப போனாலும் அந்த டாக்டர் 50 ரூபாய் வாங்கிண்டு அதே pendits எழுதி கொடுக்கப்போறார்...வீட்டிலிருந்த tablet போட்டுண்டு..school க்கு ஓடி..ஒரு பாவ மூஞ்சி வெச்சுண்டு..friends எல்லாரும்..miss miss இவளுக்கு ரொம்ப தொண்டை வலினு சொல்ல..ஒரு சோக கீதம் தான்..
இப்படியே..நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண மாய்..என் தொண்டை அடைபட..ஒரு level க்கு மேல..காலம்பற எழுந்து good morning சொல்லலாம்னா..காத்து மட்டுமே வரும்..எல்லாம் உப்பு தண்ணி போடு கொப்பளிச்சா.. சரியாகிடும்..காப்பி கிடைக்காது.. உப்பு தண்ணி தான்....அம்மா அப்போ..finance officer....எல்லா மெடிகல் காலேஜ் professor paybill table ல வந்து குவியும்.. கண்ணு ..கண்ணுனு..ஒரு கடைநிலை ஊழியர்..பாப்பாவுக்கு எப்பபார்த்தாலும் கஷ்டப்படுதே..இங்கின் இருக்கற நல்ல specialist கிட்ட காட்டலாமேனு வழி சொல்ல..
 ENT department head..தலைமையில் சிகிச்சை ஆரம்பம்..
நீங்க MMC வந்துடுங்கோ ..அங்கே எல்லா check up பண்ணிடலாம்நு சொல்லிட்டு..தலை சொறிந்தவாறே..madam..arrears வரணும்   ..கொஞ்சம் ஹெல்ப் பண்னுங்கோ..
ஐயோ..சாமி..எங்கே வந்து மாட்டிண்டோம்னு நானும் அம்மாவும் விழிக்க..
நான் ENT ward நுழஞ்சதும்...ஒரு பெரிய சாய்வு நாற்காலியில் உட்கார வெச்சுடுவா.. திடீர்னு..திபுதிபுனு..ஒரு பத்து பதினஞ்சு வெள்ளை க் கோட்டு போட்டுண்டு students ...எல்லாரும் என்ன சுத்தி நிப்பா..டாக்டர்..வரார்..டாக்டர் வரார்..ஆஜானுபாவான டாக்டர்..என்னோட வாயை ஒரு clip போட்டு திறந்து வெச்சு..இது ஒரு serious case of tonsillitis.. கேள்வி க் கணைகளை தொடுக்க ஆரம்பிப்பார்..நீயெல்லாம் எப்படி முன்னேறப் போற..திட்டு வேற..(வசூல் ராஜா.. அந்த கால ஸ்டைல்)...doctor..doctor..என் வாய் வலிக்கறது....சொல்ல முடியாமல்..திரு திரு முழியில் நான்..என்னைப் பார்த்ததும்..பல்லை நற நறனு கடிச்சு..எனக்கு சாபம் கொடுக்கும்..students .
அந்த நாளும் வந்தது..ஆபரேஷன் தான்..முடிவாச்சு..ராஜீயும் கூட கண்கலங்க...மயக்க மருந்து கொடுத்தாச்சு..உலகம் கொஞ்சம் கொஞ்சமாக..
நழுவியது..எல்லார்க்கும் பத்து நிமிஷத்தில நடக்கற விஷயம்..நமக்கு ஒரு மணி நேரம் ஆச்சு..ரொம்ப சோர்ந்து போன டாக்டர்..'its a medical miracle'...என்னொட தொண்டையிலிருந்த எடுத்த சதை போல..இதுவரை யாருக்குமே..இருந்ததில்லையாம்..
அப்பறம் என்ன..இது வரை ice cream கண்ணால கூட பார்க்கக் கூடாதுநு மெரட்டிய அப்பா...டப்பா டப்பாவா.ice cream வாங்கி வர..ஐயோ...எறியுது எறியுது..ice cream வேண்டாம்.. ஒன்னும் வேண்டாம்னு..நான் அழ....
சொட்டு தண்ணீர் பட்டாலே சொர்ருனு எறியற தொண்டையில...ஒரு கரண்டி உப்பை போட்டு..மூணு வேளையும்.. கொப்பளிச்சு..எனக்காக வாங்கிண்டு வந்த குலாப் ஜாமுன்..எல்லாரும் ரசிச்சு ருசிக்க...
national channel 1.30 மணி news வாசிக்கறாப்போல..சைகையில் காரியம் நடக்க..
ஒரு பத்து நாள்..பண்டிகை போல எல்லாரும் ஒரே தாங்கல்..
பதினோறாவது நாள்...எப்பவும் போல.. திறந்தா ..காத்து தானே வரப்போறதுனு பழக்க தோஷத்தில் ..நினக்க..ஆஹா..என் குரல் வெளியே வர...
ஓ..என் குரலா....ராஜீ....ராஜீ... மூணாவது மாடியில் குடியிருந்த அவள்..பாரதிராஜா தேவதைகள் style இல் slow motion ல ஓடி வர..
இனிமேல் canteen la ice cream சாப்பிடலாம் ஜாலியா மழையில நனையலாம்..அவள் சொல்ல.
அங்கே வந்து ஆடி மாசம் அம்மன் போல என் சித்தி வந்து பிரசன்னமாக..
எத்தன தடவை சொல்றது..இவ கூட சேராதேனு..அதே பல்லவி..

இன்றுவரை உறுதியாய்..
தொடர்கிறது எங்கள் நட்பு..
Friends for ever

பவழமல்லி

#nammabengaluru_drizzle

பொழிந்த சிறுமழையில்
நனைந்த பவளமல்லிகள்
பார்த்து எடுக்கோணும்..
கோர்த்து மாலையாக்க..

நாட்டு மருந்தாமே
நலமும் தருமாமே
காம்பும் தருமாமே
கலரும் ..டஸ்ஸர் பட்டுக்கு

வீட்டுக்கு வெளியே
விழுமே வழியிலுமே
வருவோர் போவோர்
வசதியாய் வாரிச்செல்ல..

அழகின் இலக்கணமே
அழைப்பாய் வாசமுடனே
அருளும் பெறுவேனே
அவனுக்கு சூட்டியுனையே

Thursday, June 21, 2018

சந்தோஷம் பொங்குதே..

சந்தோஷம் பொங்குதே..

கண் விழிச்ச நேரம்..சூரியன் கொஞ்சம் இன்னிக்கு நான் ரெஸ்ட் எடுத்துவிட்டு லேட்டா வருவேன்னு பர்மிஷன் போட்டப்போது ஒரு சந்தோஷம்😃

 சமையல் experiment இன்னிக்கு மீண்டும் செய்து..மீந்த சப்பாத்தி மோர்க்கூழாகி ..fb ல ஃபோட்டோ போட்டதும் லைக்கும் கமெண்ட்டும் புது ரெசிபிகளும்  நட்பூஸ் ஷேர் செய்ய ஒரு சின்ன  சந்தோஷம்😃.

கோயில் கதவு மூடுமுன் ஓடிப் போய் தரிசனம் பண்ணி, கடைசி ஆளாய் ஒட்ட வழித்த புளியோதரை.. தொன்னையில் கிடைக்க ..பெரிய சந்தோஷம்😃.

பாங்க்கில் பேனா கடன் வாங்கியவர் மூடியுடன் திருப்பிக் கொடுத்தபோது ஒரு வெற்றி  சந்தோஷம்😃

'அம்மா..என் ஃப்ரண்ட்க்கு கஷ்டம். எல்லாம் சரியாகணும்னு நீயும்  வேண்டிக்கோ ' பெண் தொலைபேசியில் சொன்னபோது ,அவள் அக்கறையில் சந்தோஷம் 😃

ரோடெல்லாம் மெட்ரோவுக்காக தோண்டிப் போட..மாலுக்குள் காலார நடந்து . ஒவ்வொரு வளையமாய் சுற்றி வந்து, ஹோம் டெக்கார்ஸ்ஸில் புத்தரும்,பிள்ளையாரும், செடிகளும்..was 2995 now 999 என்ற price tag உடன் சுண்டியிழுக்க..வலையில் விழாமல் வெறுங்கையுடன் வெளியே வந்த சந்தோஷம் 😃.

எஸ்கலேட்டரில் ஏறப்  பயந்த நடுத்தர வயது பெண்ணை ,கைபிடித்து, தைரியம் சொல்லி அவள் முதல் எஸ்கலேட்டர் பயணத்திற்கு உதவியதுி (எவெரெஸ்ட்  ஏற உதவினது போல பெரிய சந்தோஷம் 😃

நாலு நாளாய் வேலை பெண்டு நிமிர்த்த..மத்யமர் தரிசனம் ஜன்னல் வழியா நடக்க.. ஒரு பதிவு போட்டு ஓடிடலாம் என்று எழுத உட்கார்ந்த  சந்தோஷம்😃.

முல்லையும் மல்லியும் உதிரியாய் வாங்கி ,கைப்பழக்கம் மறக்காது லாவகமாக தொடுத்தபோது வந்த சந்தோஷ வாசனை..
மனதில் வந்த சிந்தனை..
மத்யமரும் ..இப்படி கோர்த்த மாலையாய் எங்கும் மணம் வீசணும்னு மனமும் வேண்டிய போது ..ஒரு திருப்தியான  சந்தோஷம்😃.

எத்தனை மகிழ்ச்சி நம்மை சுற்றி.
உங்களோட இன்றைய சந்தோஷம் என்ன..கொஞ்சம் அசை போடுங்களேன்

Monday, June 18, 2018

Airport

airport...

வானூர்தி நிலையம்..
வழக்கமான ...
வழி அனுப்புதலும்..
வரவேற்புகளும்..

விடை கொடுக்க மனமின்றி..
விம்மும் நெஞ்சங்கள்..
'பத்திரமா போய் வா' க்கள்..
நினைவுகளை படம்பிடித்து
miss you என்ற
status update கள்..

கண்ணில் வழியும் நீரை..
யாரும் காணாமல் துடைக்கும்..
நட்பும்..
கைகாட்டி வழி அனுப்பி..
கண் எட்டும் வரை..
எம்பி எம்பி பார்த்து
எட்டாத் தூரம் செல்லும்வரை..
விட்டுச் செல்ல மனமில்லாத
பிணைப்புகள்..

வருவோரை வரவேற்க..
வருமே ஒரு கூட்டம்..

சொர்க்க வாசல் திறப்பு போல..
அர்த்த ராவிலும்..
அசராது காத்திருக்கும்..
அன்புள்ளங்கள்..

தள்ள முடியா trolley யுடன்..
தன் சொந்தங்களைத் தேடும் கண்கள்..
ஆனந்த கண்ணீரோடு..
அள்ளிக் கொண்டாட
ஆசையாய் ஓடிச் செல்லும்
அம்மா ..அப்பாக்கள்..

பத்து வயது குறைந்திடும்..
பேரக் குழந்தைகளைப் கண்டதும்..
துள்ளியோடிய தாத்தா பாட்டிகள்..
பிஞ்சுக் கை பிடித்து...அது
கொஞ்சும் மொழி கேட்டு..
தனை மறக்குந் தருணங்கள்..

பன்மொழியில்..
பாச வரிகள்..
வீசிய..பாச வலைகள்..

கணிணிப் பையுடன்.
காலை மாலை மறந்து..
களைப்புக் கண்ணோடு..
கார் டிரைவரைத் தேடும்..
கடமைக் கண்ணாயிரங்கள்...

அடைப்பே பாராத கடைகள்
காபி டீ முதல்..
continental வரை..
காசு மட்டுமே பேசுமிடம். .

சிரத்தையாய் கூட்டிப் பெருக்கி..
மீண்டும் தூக்கத்தை தொடரும்..
துப்புரவுப் பணியாளர்கள்..
அவர்களின் வேலைப் பளுவைக் குறைத்த..
swachh bharath abhiyan..

 மிடுக்காய் உடையணிந்து..
மலர்ந்த முகத்தோடு..
இரவையும் பகலாக்கும்..
புன்னகை குத்தகையெடுத்த
புதுயுக சுறுசுறு இளைஞர்கள்..

மகள் வரவுக்காக..
காத்திருந்த மூன்று மணி நேரம்..
பாலு மகேந்திரா இயக்கத்தில்..
ராஜாவின் பின்னனியில்..
மனிதர்கள்..
மனங்கள்..எல்லாம் கலந்த..
airport..ஒரு
art film போல..
எண்ணத்தை விட்டகல மறுக்கிறது..

முன்ன மாதிரி இப்போ..
யாரும் இல்லனு..
புலம்புவர்களுக்கு...
இந்த விமான நிலையக் காட்சி..
ஒரு எதிர் தரப்பு சாட்சி...

Saturday, June 16, 2018

சிரிப்பாசிரிப்போம்- மத்யமர்

#சிரிப்பாசிரிப்போம்

' காரும் கசந்ததையா..வர வர காரும் கசந்ததையா'..

வாசல் திண்ணையை தேச்சபடி உட்கார்ந்திருந்த ஒரு ரம்மியமான சாயங்கால வேளை..
விளையாடிண்டு இருந்த பெண் ..' அம்மா.கார்..அம்மா கார்'னு என் கையை பிடிச்சு இழுத்து காண்பிச்சா..
ரொம்ப மெதுவா ஒரு அம்மா கை நடுங்க ஒட்டிண்டு..கார் தலை மேல ஒரு போர்ட்.' ராதிகா ட்ரைவிங் ஸ்கூல்'
மனசில ஒரு பல்பு..எத்தனை நாள் இந்த ஸ்கூட்டியில 8 போட்டு பல பேருக்கு ஏழரையா இருந்தாச்சு..இப்போ நாலு சக்கரத்துக்கு ப்ரமோஷன் ஆகலாமா..

ஒரு சுபயோக தினத்தில் டிரைவிங் ஸ்கூல்ல முள்ளங்கி ்பத்தையாட்டம் 1500 பணமும் கட்டியாச்சு.
' வாங்க மேடம்..என்று கார் கதவை திறக்க..மனசு அப்படியே பறக்க ஆரம்பிச்சது. சீட்ல உட்கார்ந்ததுமே அந்த இன்ஸ்ட்ரக்டரை பார்த்து ' சார் எனக்கு வருமா இதெல்லாம் ' நு சிந்து பைரவி சுலக்‌ஷணா ஸ்டைலில் கேட்ட் மாத்திரம்..'மேடம்..பாருங்க நீங்க வேணா..ஒரு கார் என்ன..நாலு கார்  ஓட்டுவீங்க' என்று வீர சபதம் எடுத்தார்.

உட்கார்ந்ததும் பார்த்தா அங்கே குட்டி பிள்ளையார் ஒட்டிண்டு உட்கார்ந்திருக்க..அனுமார் சஞ்சீவினி மலையைத் தூக்கிண்டு ஊஞ்சலாட..சீரியல் லைட்டில் சீனிவாச பெருமாளும் தாயாரும் அருள் பாலிக்க..'கஜானனம் பூத ஆரம்பிச்சு காக்க காக்க கனகவேல் காக்க சொல்லி அஸாத்ய சாதகஸ் ஸ்வாமின் சொல்லி பைரவரையும் மதுரை வீரா..கருப்பானு நான் சொல்லிண்டே போக..'மேடம்...அரை மணி முடிஞ்சுடிச்சு..இன்னும் அரை மணி நேரம் தான் உங்களுக்கு .
இப்போ basics ஆரம்பிக்கலாமா?
வேகமா நான் தலையாட்ட
' முதல்ல  அந்த கண்ணாடியைக் கொஞ்சம் சரி பண்ணுங்க..சரியா view கிடைக்கும்"
 ஓ..ஓகே சார்னு சொல்லிட்டு ...என் கண்ணாடியை சரி பண்ணியபடி.. ம்ம்ம்..எனக்கு view சரியா தெரியறதே'.. நான் சொல்ல..சொல்ல.." மேடம்..உங்க கண்ணாடியைச் சொல்லலை..அந்த rear view mirror ஐ சொன்னேன்..அவர் அந்த கண்ணாடியை முன்னாடி காண்பிச்சதும்..உடனே ' ஓ என் பொட்டு கொஞ்சம் ஓரமா போயிருக்கே..இருப்பா சரி பண்ணிடறேன்'..
கடுப்பில் கொந்தளித்த கார் டீச்சர்..' மேடம் ..'இது கதக்..இது குச்சிப்புடி'ங்கற ஸ்டைல இது க்ளட்சு, இது ஆக்ஸ்லேட்டர் , இது ப்ரேக்குனு சொல்ல ஆரம்பிச்சார்.
ஐயோ ஆண்டவா..என்கிட்ட இருப்பதோ ரெண்டே கால்..இந்த மூணுல எப்படி காலை வைக்கிறதுனு அவரை பாவமா பார்த்தேன். 'இருங்க இது காலுக்கு..இப்போ நீங்க இந்த கையும் இப்படி இப்படி சுத்தணும்நு அது பேரு என்ன..ஆங்..அந்த ஸ்டியரிங்கை காட்ட.(இது என்னடா இந்த அகிலாவுக்கு வந்த சோதனை.' கற்பூரம் காண்பிச்சிண்டே மணியும் அடிங்கற' மாதிரி ஏதோ சொல்றாரேனு பயத்தில் நான்.)

ஐயோ..இது என்ன சேவை நாழி மாதிரி இருக்கு..இதை ஃபுல்லா சுத்தணுமா..கேட்டுண்டே எதேச்சையாக வலது காலை அழுத்த ..வண்டி வேகம் எடுத்து டிஸ்கோ டான்ஸ் ஆட ஆரம்பிச்சது..
'மேடம்..மேடம்..லேசா அந்த ஸ்டியரிங்கை லெஃப்டல ஒடைங்க..
'ஒடைக்கணுமா'..ஐயோ என்கிட்ட சுத்தியல் இல்லையேனு மை.வா புலம்ப..பின்னாடி உயிருக்கு பயந்து நெருக்கி உட்கார்ந்துண்டு இருந்த மத்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் உயிருக்கு பயந்து கதவை திறந்து இறங்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்க.
.வெயிட்டெல்லாம் குறைஞ்ச வண்டி ..சல்லுனு காத்து மாதிரி சைடில் வெட்டியிருந்த பாதாள சாக்கடை நோக்கி வேகமா படையெடுக்க..
'.ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருதுனு என்னைப் பார்த்து கிண்டலடிச்சபடி ஒரு விடலைப் பைய்யன் எதிரே வர..
கார் டீச்சர்..' ப்ரேக் ப்ரேக்னு கத்தி அவர் கால்ல இருக்க்ற ப்ரேக்கை அழுத்த முயற்சிக்க..நான் சும்மா இல்லாமல் இன்னும் வேகமா ஆக்ஸ்லேட்டரை அழுத்த..
பைய்யன் பயத்தில் கீழே விழுந்துட்டான்.

தன்னிச்சையா என் கை சேவை நாழியை அதான் ஸ்டியரிங்கை ஒரு திருப்பு திருப்பி டங்குனு ட்ரைவிங் ஸ்கூல் சுவற்றில்  மோதி..குத்துயிரும் கொலையுயிருமா கார் நிற்க...
நான் பக்கத்தில் கதி கலங்கி போய் உட்கார்ந்திருந்த இன்ஸ்ட்ரக்டரிடம்..
' சார்..இடிச்சுடுச்சு' நு 'ஆண்பாவம்' படத்தில பாண்டியராஜன் டையலாக் சொல்ல
அப்புறமென்ன..எனக்கு சொல்லித்தரவே பல ஓட்டைக் கார்கள் முதலாளி வாங்க ஆரம்பிச்சார்.
அவர் வாக்கு பலித்தது..' ஒண்ணு என்னங்க..நாலு காரு ஓட்டுவீங்கனு' அவர் சொன்ன வாக்கு அவருக்கே பலிச்சது.
நான் வரேன்னு சொன்னதுமே கடையை மூடிண்டு RTO office க்கு போறேன்னு ஜகா வாங்கிடுவாங்க.

அப்படியும் விடாக் கண்டணாய்..கொஞ்சம் ஓட்ட கத்துண்டாச்சு. என் ஸ்கூட்டி நான் அதை வெளியேவே அழைச்சிண்டு போறதில்லைனு ஒரே துக்கமாகிடுத்து.

ஆனா பாவம்..என்னால நிறைய பேருக்கு வேலை போச்சு..முதலாளிக்கு நஷ்டம் வேற..ஏன்னா..நான் கத்துக்கற ட்ரிப்ல யாரும் உயிரைப் பணயம் வெச்சு வரத் தயாராக இல்ல..எனக்கே எனக்கு மட்டும் காசு வாங்கின தோஷத்துக்கு கார் சொல்லிக் கொடுத்த அந்த எந்தரோ மஹானுபாவர்.

இந்த கத்துக்குட்டி , காட்டில் இருந்த போதெல்லாம் கார் ஓட்டினேன். ஆனால் இப்போது ந(ர)கர வாழ்க்கை.
நமக்கு கார் ஓட்டணும்னா ரோடெல்லாம் காலியா இருக்கணும்..நடக்குமா இந்த பெங்களூர்ல..
அதான் என் செல்ல ஸ்கூட்டியோட ..' 'உன்னை விட மாட்டேன்..காரும் இனி வேண்டேன்' நு பவதாரிணி குரல்ல பாடிண்டு நானும் என் உடன் பிறவா பெப்போடு(pep)..நாளும் நகர்வலம் தான்.

மது வாங்கித் தந்த கடிகாரம்

விலை மதிப்பில்லாதது..
நேரம் மட்டுமல்ல..
நீ பொழியும் அன்பும் தான்..
இதைப் பொக்கிஷமா..பூட்டிவைக்கலாமா..?..
போட்டு மகிழலாமா..??
ஒரு இன்பக் குழப்பம்..
Thanks Madhu Ramasami .

என் வீட்டுத் தோட்டத்தின்...

என் வீட்டுத் தோட்டத்தின்...

வருட மொரு விடுமுறை வரும்
விடாமல் செல்லும் அம்மா இடம்.
வளர்ச்சிப் பாதையில் ஊர் செல்ல
வாயைப் பிளந்து நான் பார்ப்பேன்.

மாறிப் போச்சே ஊர் என்றே
மலைப்பும் மகிழ்ச்சியும் தான் கூடும்.
அடிக்கொரு கடையென களை கட்டி
அணிவகுத்த பல மாடிக் கட்டிடங்கள்
நகையும் ஜவுளியும் நடக்கும் தொலைவில்
நள பாகமெல்லாம் செயலி வழியில்.

அல்லாடிய நாட்கள் இப்போ இல்லை
இல்லை என்பதெ இங்கு எதுவுமில்லை.
பாலைவனமாய் இருந்த இடம்..
பளபளப்பாய் இப்போ மாறிப்போச்சே.

வரவு அறிந்து வந்தார் பலர்.
'ஆளே மாறிட்டே' என் கண்ணே
அழுத்தி தலையை வார லையோ
அம்புட்டு முடியும் கொட்டிப் போச்சேனு
ஆதரவாய் என் தலை தடவி
அன்பில் அணைத்தாள் அம்மாவின் வலக்கரம்.

தோட்டத்தை சுற்றி வந்தேன்
தோண்டிய பல நினைவோடு..
புயலும் மழையும் வந்தாலும்
பூமியும்  காய்ந்தே போனாலும்
மாறாதது என்றும் ஒன்றுண்டு
மண்ணின் வாசத்துடன் என்வீடு
அதில்.
மலரத் தயாரான மல்லிமொட்டு.

Thursday, June 14, 2018

ஓடும் மேகங்களே..ஒரு சொல் கேளீரோ..

ஓடும் மேகங்களே..ஒரு சொல் கேளீரோ..

பஞ்சு பஞ்சாய் மேகங்கள்
பரபரப்பாய் ஓட்டமெங்கே
பருவ மழை பெய்யுமெப்போ?
பாவி சனமும் வாடுதிங்கே..

கூடிக் கூடி கும்மியடித்து
கொட்டாமல் கலையும் கர்வமென்ன
மாநாடு கள் போதும்
மசோதாக்கள் போதும்
நிறைவேறட்டும் தீர்மானம்
நிறையட்டும் குளமும் ஏரியும்
வருத்தியது போதும் வருணா
வரம் தா நீயும்
வான்மழை பொழிந்திடவே
வையகம் உயிர் பெறவே..

Sunday, June 3, 2018

நான் வள்ர்கிறேனே மம்மி

நான் வளர்கிறேனே..மம்மி..

வளரும் பிள்ளைகள்..
தளரும்..நம் கைப்பிடி..
விலகும்..நம்மைவிட்டு..
விரும்பியே ஏற்கணுமிதை..
பக்குவமாகணும்..
கோபத்தைக் குறைக்கணும்..
தோழி போல இருக்கணும்..

புடவை தலைப்பில் ஒளிந்தது போய்..
புது உலகம் காணப் புறப்படும்..

கடைகடையாய்  சுற்றியது போய்..
கார்டுடன் தனியாய்ப் போகும்..

அரவணைப்பில் அயர்ந்தது போய்
அடுத்த அறை தள்ளிப் போகும்..

வாய் ஓயாத பேச்செல்லாம்..
வரலாறாய் ஓர் நாள் ஆகும்..

இஷ்ட்டமேனு செய்த தெல்லாம்..
இப்ப வேணாம் அப்பற மாகும்..

ஆசையாய் சேர்த்த தெல்லாம்..
அய்யோ... old fashion ஆகும்

குழந்தடா..நீ என்றால்..
குமுறிக் கொந்தளிக்கும்..

வளர்ந்தும் இப்படியா என்றால்..
வளைந்து கழுத்து கட்டிக் கொஞ்சும்..

தோழியாட்டம்  சமத்தா இருன்னா..
அவள் அம்மா போல் நீ மாறு என்கும்..

அடுக்கிய அலமாரி அலங்கோலமாகும் ..
அழகிப்போட்டி நடை நடக்கும் ..அறைக்குள்ளே..

செக்கிழுத் தெண்ணை செழிப்பாகிய கூந்தல்..
சிக்கெடுக்கா..செம்பட்டை யாகும்.

எங்கே போறே ங்கற கேள்வி..
எதிரியாய் நமை எடுத்துக் காட்டும்..

யாரோடு போறே நு கேட்டாலோ..
ஆறாத சீன மாகும்..

பத்திரமா போ என்றால்..
பாப்பாவா நான் ..பதிலடிக்கும்..

பழைய புராணம் பாடாம..
பட்டும் படாமலும் இருக்கணும்..

வேறு கோணத்திலே..
வாழ்க்கையை ரசிக்கணும்..

ஏட்டிக்குப் போட்டி..
எப்போதும் வாதங்கள்..

வீட்டிலே..சிங்கம்..
வெளியிலே தங்கம்...

எதிர் வீட்டு மாமி
ஏகமாய்ப் புகழ்வாள்..
என்ன ஒரு சமத்துக் குழந்த..
என்னமா வளர்த்திருக்கே..
எனக்கும் சொல்லிக் கொடேன்னு..

அற்ப சந்தோஷங்கள்..
அரை நொடியில் பறக்கும்..
அனல் தெறிக்கும்...argument..
அடச்சீ..போ..விலகல்கள்..

அந்த நாளும் வரும்..
....
'என்ன இருந்தாலும்..
என் அம்மா போல வருமா.'.!!!
இன்று நான் சொல்வதை..
இவர்களும் சொல்லும் ..
இனிய காலம் வரும்..!!!

Tuesday, May 15, 2018

Happy mothers day

happy mother's day maa..

பிறந்தநாள் உனக்கு
பாயசம் வெச்சியா என்றால்
பழக்கமே இல்லை என்பாள்.
எப்போது பேசினாலும்
எடுத்தவுடன் கேட்பாள்
சாப்பிட்டியா நீயென்பாள்
சாம்பார் பொடி இருக்கா
ரசப் பொடி காலியாயிருக்குமே
எங்கோ இருந்தபடி
எடை போடுவாள் எல்லாம்
குரல் வைத்தே கண்டுபிடிப்பாள்
கோபமா..குதூகலமா என்றே
அப்பறம் பேசறேன் என்பேன்
எப்போவுமே நீ இப்படி என்பாள்
உற்றார் உறவினர் கதையெல்லாம்
ஒன்று விடாமல் சொல்வாள்
பேத்திகளுக்கு பிடித்ததெல்லாம்
அத்துப்படி அவளுக்கென்றும்
பார்த்து பார்த்து செய்வதில்
பரம சந்தோஷம் அடைவாள்
அன்னையர் தினமெல்லாம்..
அவளும் கொண்டாடியதில்லை..
எடுத்துச் சொன்னாலும்
எதுக்கிந்த ஆரவாரமென்பாள்..
சண்டை பல பொழுது
சலிக்காமல் நடந்தாலும்
சமாதானக் கொடி பிடித்து
சரி சரி விடென்பாள்.
என்னை விட்டு நீ சென்றாலும்
எங்கம்மா இப்படித்தான் பண்ணுவானு
என்னை நான் நிலை நாட்டிக்க
அடிக்கடி வரும் உன் நினைவு
அன்னையர் தினத்தில்
மட்டும் தானா என்ன..?

Tuesday, May 8, 2018

ஓ..பாப்பா..லாலி.( மத்யமர்)

ஓ..பாப்பா..லாலி..

ஒரு ஃப்ரண்ட் வீட்டுக்குப் போனேன் சாயந்திரம். ஆபீஸிலிருந்து வந்தவள் ரொம்ப சோகமாக உட்கார்ந்திருக்க, அவள் மூணு வயது பைய்யன் அடங்காமல் அழுது கொண்டிருந்தான்.
கண்ணா..ஏன் செல்லம் அழறேனு கேட்டேன். அதுக்கு துடுக்குனு ஒரு பதில்..'aunty..டாட்டா.aunty ..டாட்டா' என்றான்.
என்ன நடக்கறது இங்கேனு அவளை விசாரிக்க..அழுதுவிடும் நிலையில் என் தோழி..' நான் ஆபீஸ் போறதால ஒரு baby sitter இவனை பார்த்துக்க வருகிறாள். வீட்டில் மாமியார் இருந்தாலும் வயசானவர். அவரால் இவன் பின்னாடி ஓட முடியலை. ரொம்ப நல்ல பொண்ணு..ரொம்ப அன்பா இவனை கவனிக்கிறாள். ரொம்ப ஒட்டிக் கொண்டு விட்டான். அதனால் தினமும் அவள் சாயங்காலம் கிளம்பிப் போனதும் இப்படித்தான் அழுகை என்று அவளும் விசும்பினாள். என் கிட்ட கொஞ்ச நேரம் வரவே மாட்டான். அவன் சமாதானமாகும் போது தூங்கி விடுகிறான்.இப்படியே போனால் என்னையே யார்னு கேட்பானோனு பயமாயிருக்கு என்றாள் நியாயமான கவலையில்.

வேலை ..விட முடியாது..
ஆளை..விட முடியாது..
வேறு வழி?

இப்போது இதெல்லாம் ரொம்ப சகஜமாகி விட்ட போதிலும் ஏனோ மனது பாரமானது.

எப்போதோ எழுதியது மீண்டும் நினைவுக்கு வந்தது.

ஓ..பாப்பா..லாலி..

ஆயா(aunty) வந்ததும் தான்
அம்மாவுக்கு உயிரே வரும்
அவசர ஆணைகள் பிறப்பித்தே
அவளும் ஒப்படைப்பாள்..தன்
அன்புச் செல்லத்தை..
அலுவலகம் ஓடியபடி..

ஆயாம்மா..
பாலும் சோறும் தருவாள்
பாதி அவளும் தின்பாள்.
(தெம்பு வேணுமே)

பாப்பாவுக்கு பிடித்த தெல்லாம்
ஆயாவுக்கு ரொம்ப அத்துப்படி

'கவனிப்பாள்' தன் குழந்தைபோல
'கவனிப்பாள்' எசமானியு மென்றே
ஆட்டுவாள் தலை எப்போதும்
ஆட்டுவிக்கும் பாப்பாவின் பொம்மையாய்
பொழுதைக் கழிக்கும் வித்தையில்
பல்கலைக் கழக பட்டதாரியிவள்.

முள்ளும் ஆறைத் தாண்ட
முள் மேல் இருப்பாளே
மூச்சும் வந்திடுமே..எசமானி
முகம் கண்டேதுமே..

பையை எடுத்து புறப்பட்டு
'பை''பை' சொல்ல..அவள்
புடவைத் தலைப்பை இழுத்து
போகாதே..நானும் வரேன்னு
பிடிவாத அழுகையில்
படுத்துமே பாப்பாவும்..

பயமும் பிடித்ததே..
பதிக்கணுமே  மனதிலே
பாப்பாவின் அம்மா..
படுபாவி நானென்று.

அரை நேர அம்மாக்களாக
ஆயாக்கள் ஆனபிறகு..
அக்குழந்தைக்கு தெரிவதில்லை..
ஆறு வித்தியாசங்கள்..
ஆயாவுக்கும் அம்மாவுக்கும்..

மங்கையாராய் பிறப்பதற்கே..(மத்யமர்)

மங்கையாராய் பிறப்பதற்கே..

இவள் ஒரு time keeper.
அலாரத்துக்கே ஆப்பு வைப்பவள்.

இவள் ஒரு master chef.
மனு போடாமலே மெனு தயாராக்குபவள்.

இவள் ஒரு advisor
அருவியாய் அறிவுரை கொட்டுபவள்.

இவள் ஒரு engineer.
உறவுப் பாலம் கெட்டியாய் அமைப்பவள்.

இவள் ஒரு HR.
வலையில் தேடி பல க்ரூப்பில் இருப்பவள்.

இவள் ஒரு store keeper.
ஷெல்ஃபும் பரணியும் கைவசமாக்கியவள்.

இவள் ஒரு CBI officer.
ஆதாரத்தோடு அமுக்கி பிடிப்பவள்.

இவள் ஒரு finance minister
debit credit தெரியாமலே deficit காட்டுபவள்.

இவள் ஒரு defence minister.
கராத்தே, குங்ஃபூ கற்காமலே குடும்பத்தைக் காப்பவள்.

இவள் ஒரு சுறுசுறு transporter
சாரதி வேலையில் சலிக்காதவள்.

இவள் ஒரு saviour.
அஞ்சறைப் பெட்டியிலும் பதுக்கி urgent க்கு உதவுபவள்.

இவள் ஒரு நடமாடும் encyclopedia.
விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பவள்.

எல்லாவற்றுக்கும் மேல்..

இவள் ஒரு திறமையான artist.
வீட்டையே கோவிலாக மாற்றுபவள்.

வீட்டிலோ,வெளியிலோ, வேலையிலோ..
 portfolio எதுவானாலும்
பின்னிப் பெடல் எடுக்கும்
பெண்மணிகள்..என்றும்
கண்மணிகள்...கண்ணின்..மணிகள்.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

Weekend (மத்யமர்)

Weekend வந்தாச்சு. எல்லாரும் பிஸி ஆகிடுவீங்க..
Walking போகும்போது, காதுக்குள்ள ஃபோனை மாட்டிக்காமல், கொஞ்சம் சுத்தி பார்த்து enjoy பண்ணுங்க.

எப்பவோ எழுதினது ..நீங்களும் இதையெல்லாம் தினம் பார்த்து ரசித்தபடி நடப்பீர்கள் தானே?

புத்தம் புது காலை..

good morning சொன்னது
கொஞ்சியே..குயில்கள்..
பூபாளம் இசைத்தது..
பட்டாம் பூச்சிகள்..
கடைசி சொட்டு தூக்கத்தை
விட்டுக் கொடுத்து..
விரிய விழைந்த பூக்கள்..

பரீட்சைக்கு நேரமாச்சு
பதறியபடி..பள்ளிச்சிறார்கள்..
குழந்தைகளை பஸ் ஏற்றி
குட்டி மாநாடு போடும்...அம்மாக்கள்.

jogging நு சொல்லி ஜகா வாங்கி
jolly அரட்டை அடிக்கும்...அப்பாக்கள்
மருமகளுக்கு டிமிக்கு கொடுத்து
மாங்கு மாங்கென்று
exercise செய்யும்..மாமியார்கள்

மாமி கொடுத்த காபி!(கஷாயம்..) மறக்க
MTR வாசலில் க்யூவில் நிற்கும்..மாமாக்கள்..

காதலியின் தரிசனம் காலையிலேயே கிடைக்க காத்துக் கிடக்கும்..கட்டிளங் காளையர்கள..

senior citizens சிரிப்பது எப்படினு ..
seriousஆ கத்துக்கும்..laughter clubs
(என்னையும் கேட்டார்கள்.. கொஞ்ச நாள் போட்டும்னேன்)

வாக்கிங் வந்தும் வானத்தை பார்த்து
வாழ்க்கை யோசனையோடு ஒரு சிலர்
இப்படி தினம் வந்து போவோரை ந்ம்பி
வியாபாரம் நடத்தும் ஒரு கூட்டம்....

காலை வீசி நடக்கத் தானே வந்தே.
கதை என்ன வேண்டிக் கிடக்கு..
கடமை நினைவில் வர..
நடக்க ஆரம்பித்தேன்...
இந்த நாள் நல்ல நாளாய்
எல்லாருக்கும் இருக்கனும் என்று..

good day to all

little extras ..but not extremes.(மத்யமர்)

little extras ..but not extremes..

ஒரு கஷ்டம் வரது..இல்ல கஷ்ட்டமே வந்தபடி இருக்கு. அது வேலை சம்மந்தமானதாக இருக்கலாம். பணம் சம்மந்தப்பட்டதாக இருக்கலாம். உறவு that is relationship சம்மந்தப்பட்டதாக இருக்கலாம். எல்லாத்துக்கும் மேலே உடல்நலத்தோட தொடர்புடையதாக இருக்கலாம்.

இந்த நாலு வகைக்குள் எதோ ஒரு வட்டத்தில் சிக்கி மீண்டு வரும்போது அடுத்த வட்டம் ,வா..நான் உனக்காகத்தான் காத்திருக்கிறேன்னு மாலையோட மேள தாளத்தோடு காத்திருக்கு.தப்பிக்க முடியாது..தலை நிமிர்ந்து எதிர்கொள்ளணும்னு ஒரு திடம் கொஞ்ச கொஞ்சமா கரைந்து எதைத் தின்னா பித்தம் தெளியும்னு ஒரு நிலைக்கு தள்ளப் படுகிறோம்.

இப்படி வரிசை கட்டி வருத்தங்கள் வரும்போது உடனே என்ன தோணும்?

எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம்.
இதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்கறோம்.

'பரிகாரம் செய்' ..
எல்லாம் சரியாய்ப் போய்டும்னு நிறைய நமக்கு சொல்வதைக் கேட்டு..யார் என்ன சொன்னாலும் போய் செய்து..அது சில சமயம் பலிக்கும்..சில சமயம் அடுத்த சுற்றுக்கும் இழுத்துச் செல்ல..நம் வாழ்வின் focus மாறிப்போய் விடும் நிலைமை.

சில சமயம் எனக்குத் தோன்றும்..
இந்தக் கஷ்டமெல்லாம் கடல் அலையாய் வருவதே நாம் எவ்வளவு பலம்/பலமீனமானவர் என்பதை சோதிக்க த்தானோ..

for example..ஒரு இலையில் எல்லாமே இனிப்பாக பரிமாற ப் பட்டால் நம்மால் சாப்பிட முடிகிறதா..கொஞ்சம் உப்பு காரம் தேடுகிறோம். வாழ்க்கையும் அப்படித்தானே?

ஒரு சின்ன சந்திப்பை இங்கே ஷேர் செய்ய விரும்புகிறேன்.

நேற்று நான் ஒரு குருவின் மடத்திற்கு சென்றேன். அங்கே ஒரு நடுத்தர வயதுக்காரர் பம்பரம் போல வேலை செய்து அத்தனையும் தன் கண்காணிப்பில் ஒன்று கூட தப்பாகி விடக்கூடாதே என்று அப்படி ஒரு dedicated வேலை செய்து கொண்டிருந்தார் . என்னைப் போல போனோமா..பூஜை பார்த்தோமா.. சாப்பிட்டு வந்தோமா என்றில்லை அவரோட போக்கு.

பேச்சு கொடுத்த போது தெரிய வந்தது ஒரு அதிர்ச்சித் தகவல்.
அவருக்கு ஏழரை நாட்டுச் சனியாம்.எதைத் தொட்டாலும் செய்தாலும் கஷ்டம்.கஷ்டம் ..கஷ்ட்டமே..

பரிகாரம் ஏதாவது உண்டானு அவர் தேடி அலைந்தபோது..அவரின் ஆன்மீக குருவின் கட்டளைப் படி ஏழரை ஆண்டு குடும்பத்தை விட்டு ,ஏதாவது ஒரு முற்றும் துறந்தவருக்கு பணிவிடை செய்தால் பாவமெல்லாம் பறந்தோடிடும் என்று சொல்ல..பரிவாரத்தை விட்டு விட்டு பரிகாரம்.செய்தபடி அவர் அங்கே..

இவர் குடும்பம்?
பிள்ளைகள் இப்போ வேலையில் இருக்கிறார்களாம். அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் என் அறிந்தேன்.
இருந்தாலும் ..இது சரியா

 குடும்பத்தலைவன்  கண்காணாமல் தன் கடமை விட்டு , துறவியுடன் இருக்க..
என்னதான் சமாதானம் சொல்லிக் கொண்டு அவர்கள் குடும்பம் வாழ்ந்தாலும் எப்போதும் ஒரு restless ஆகத்தானே வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.

சம்பாதிக்கும் பிள்ளைகள்..என்ன கவலை என்று வாதிடலாம்..
இதுதான் நல்லதுனு சொல்லும்போது ..செய்யாமல் இருந்தால் இன்னும் கஷ்டம் வந்து விடுமோனு பயமும் இருக்கலாம்.

ஏழரை வருஷம்தானே ஏழு நிமிஷம் மாதிரி ஓடிடும்னு மனதை திடப் படுத்திக் கொண்டாலும்..ஏழரை வருஷத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பொறுப்புகள் எல்லாம் எங்கே போகும்?

விட்டு வந்த வேலையோ/ சொந்தத் தொழிலோ..தலை தூக்க முடியுமா..இரு நான் போய் பரிகாரம் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகும்போது?

தெய்வ பக்தி,பரிகாரம் எல்லாம் தேவைதான்.

ஆனால் 
why me..என்று புலம்பினாலும்..

try me என்று அடிக்கடி குஸ்திக்கு ரெடி ஆகி இன்னும் கொஞ்சம் extra உழைப்பு, extra care ,extra தைரியம், extra நம்பிக்கை அதுவும் தன்னம்பிக்கை..
எடுத்து extreme step க்கு போகாமல் எதிர்நீச்சல் போட்டு வாழப் பழகணும் இல்லையா...

அப்போது தான் திரும்பிப் பார்க்கும்போது நாம்  எப்படிக் கடந்தோம் இத்தனை கல்லும் முள்ளும் நிறைந்த கடினப் பாதை ...என்றும் ஒரு நிறைவும் சந்தோஷமும் தரும் தருணங்கள் அலாதிதானே?

mission of life..making every struggle a milestone..அதுதானே friends?

வேறென்ன விட்டுப் போகணும் நம்ம குழந்தைகளுக்கு காய(ல)த்தினால் கிடைத்த வலிமையா? வலியா?

Sunday, April 8, 2018

ஆப்பு வைக்கும் app

ஆட்டோல போகும்ணும்் ..app வேணும்.
அரிசி வாங்க போகணும் ..app வேணும்..
எலக்ட்ரீஷுயன் வந்தா app வேணும்..
ஏதாவது கேட்கணுமா..app வேணும்..
வேற என்ன ..learn Kannada app தான்..
இன்னுமா இந்த வீட்டு வழக்கம் கத்துக்கலனு ..கல்யாணமான பொண்களை கலாய்க்கற மாதிரி..இன்னுமா..நீ..கன்னடம் கத்துக்கலை.. கரெக்ட்தானே..
 வந்து வருஷம் நாலாச்சு..வாழும் இடத்தின் மொழி கற்பது மிக அவசியமாச்சே..
ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு அழகு..
relate பண்ணி படிக்க ஆரம்பிக்க இந்திய மொழிகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து கிடக்கும் அற்புதம் புரிகிறது.
எங்க ஊர் செய்தித்தாளும்..நானும் இருக்க பயமேன்னு சொல்ல..
வார்த்தைகள்.. சின்ன sentence கத்துண்டாச்சு..
but எதிர்ல் யாராவது பிரவாகமா..பேசினால்..வாயிலிருந்து தெரிந்த..கற்ற வார்த்தை கூட..வர மாட்டேங்குறது..
ஜுனூன் பார்த்து கற்ற இந்தியுடன் வாழ்க்கை தொடங்க..குழந்தைகளோடு நானும் கற்றேன் பேச ..எழுத..
மீண்டும்..பாடம் துவக்கம்..
I loved this quote too
If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes to his heart.❞
‒Nelson Mandela..

Packing

கன்னம் கிள்ளும் மாமி..
காதைத் திருகும் மாமா..
............,.........
போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு..
ஜோதிகா ் ஆடிக் கொண்டிருக்க..
ஆஹா..
கட்டுச்சாதைக் கூடை மணமணக்க ரெடி..
கண்ணீரும் கம்பலையுமா நான் அழ..அப்பா அம்மா அழ..
யார் டெல்ல்லிக்கு வந்தாலும் டப்பா டப்பாவா சாமான் ..தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கொஞ்சம் தடம் புரண்டு போனாலும் என் பேர் அதில் மாட்டிக்கும்..பொடிகள், அப்பளம், நொறுக்குத் தீனி, அரிசி மாவு...அதைவிட..காய்ச்சிய நெய்..அஞ்சாறு சம்ப்டத்தை திறக்க அரைக் கிலோ நெய்..கவர் கட்டி, துணியால் கட்டி மாவடு, ஆவக்காய்.காப்பிப் பொடிக்கு ஒரு தனி பாக்கிங்...
.இப்படி ஒரு லிஸ்ட்..

டெல்லில எல்லாம் புடவை விலை ஜாஸ்தினு பண்டிகைக்கு புடவைகள்.மாட்ச்சிங் ப்ளவுஸ்..
ஃபோன் அடிக்கடி பேச முடியாது..ஒரு நிமிஷம் பேசினாலே 300 ரூபாய் சொளையா எடுத்து வெக்கணும்..ஒரு புடவைக்குள் பத்திரமா இருக்கிற மாதிரி அம்மா அப்பாவின் லெட்டர்ஸ்.. முதல்ல வேகமா படிச்சு முடிச்சுட்டு..திரும்பத் திரும்ப ஞாபகம் வரும்போதெல்லாம் எடுத்து படித்து..
இதே காலப் போக்கில் ஊர்கள் பழக..இதெல்லாம் அங்கெயே கிடைக்கிறதம்மா..ரெசிபி சொல்லு நானே ட்ரை பண்றேனு..கை காலை சுட்டபடி..கற்றுக் கொள்ள ஆரம்பித்து..பின் ஒவ்வொரு முறை பிறந்தகம் வரும்போதும் புதுசா கற்றுக் கொண்டதை டப்பாவில் கொண்டு வந்து கொடுத்து..வீடே மணக்க நான் சமைக்கிறேன் என்று அம்மாவை ஒரங்கட்டி..( சாமான் யத்தில கிச்சன் தர மாட்டா அம்மா..)
எத்தனை instant , ready to eat வந்தாலும்..இந்தப் பழக்கம் இன்னும் நம்மிடையே ஒட்டிக் கொண்டுதான் இருக்கு. இப்போ எல்லாம் அம்மா.. மாமியார் எல்லாரும் expert ..domestic ,international pack செய்து அனுப்புவதில்..
காலி டப்பாக்கள் கதை பல சொல்லும்..
வருஷம் போனாலென்ன..வயசும் ஆனாலென்ன..
இந்த tradition இன்னும் தொடர்கிறது..

போளியா..போதி மரமா

போளியா ...போதி மரமா.!!!

போகிப் பண்டிகை என்றாலே
போளியில்லாமல் உண்டோனு
புதுக்கோட்டை ராசா..(அட..என் அப்பாதான்)
போட்டாரே ஒரு போடு..
என்னடா இது..இந்த
அகிலாவுக்கு வந்த சோதனைனு..
அரண்டு போய் ஆரம்பிச்சேன்..
ஆண்டவனை வேண்டினேன்.

இளகலான மாவு..கொஞ்சம்
இறுகலான பூரணம்..
உள்ளங்கை மட்டுமே..
உற்ற துணை யிங்கே..
பதினொன்றே போதுமென்று
பாகம் பிரித்து உருண்டைகள்
எண்ணெயில் தோய்ந்த மைதா..
என்ன பாடு படுத்துதப்பா..
ஓட்டம் பிடிக்குதப்பா..
ஓட்டையும் விழுந்ததப்பா..
இரண்டாவது உருட்டி தட்ட
இரண்டாய் கிழிந்ததப்பா..
மூன்றாவது போளியோ..
மெத்தென்று இல்லாமல்
முறுகலாச்சு ஓரத்தில்..
நாலாவதோ ..
நான் வரலை விளையாட்டுக்கென
நடுங்கி ஒளிஞ்சதப்பா
அஞ்சாவது உருண்டையோ..
அஞ்சாதே என்னைக் கண்டு
அழகாய் உருட்டி..
அடைப்பாய் பூரணம்..
அமுதமாய் இனிப்பேன்
அனைவருக்கும் படைப்பாயென
ஆசியும் வழங்க..
அப்புற மென்ன..
ஆறு ..ஏழு..எட்டு.
அருமையாய் அடுக்கினேன்..
ஒன்பது..பத்து ..பதினொன்று...
ஒரு நொடியில் முடிக்க..

கை வண்ணம் காட்ட நினைக்கையில்
கைக்கொட்டி சிரித்தது காலியான பாத்திரம்.
போளி சொல்லும் பாடமாக
போதி மர ஞானியானேன்.

பாதி வாழ்க்கை போனபின்னே
பாதை தெரிய ஆரம்பிக்கும்..
பார்த்துடலாம் வாழ்ந்தென்று
பறக்க நினைக்கையிலே
படக்கென முடிந்துவிடும்..

பிறந்ததுமே கற்றறிய
பள்ளிக் கூடமிங்கேது
படபடப்பாய் கடக்கையிலே
பாடமாகும் வாழ்க்கையிங்கே..

படைத்தவன் தந்தான்..இந்தப்
பாத்திரம் (வாழ்க்கை)நாடகத்தில்
படைப்போமே சரித்திரம்..
போளி தந்த போதனை..
போலியில்லை..உண்மை..உண்மை.
























வல்லமை தாராயோ

மூட்டு வலி..முதுகு வலி
முணுமுணுப்பில் உறக்கம்
மறக்காமல் எழுப்பும் கடிகாரம்
முடிந்ததா இரவு..
விடிந்ததே விரைவிலென்று
வாரிச் சுருட்டி எழுச்சி..
"உனக்கென்ன ..
உபாதை ஒன்றுண்டா..
உரிய நேரத்தில் வந்து
உன் வேலை தொடங்குகிறாய்.."
சூரியனுக்கு சுளுக்கில்லை
சந்திரனுக்கு சளித் தொல்லையில்லை
நட்சத்திரத்துக்கு நரம்பு தளர்ச்சியில்லை
மேகத்துக்கு முதுகு வலியில்லை
அசதியுடன் விழித்தாலும்
அசத்தலாக்குகிறேன் என் நாளை
சூட்சுமம் அறிந்தேன்..
சுருங்கியவள் விரிந்தேன்.
மறையும் மதியும் மலரும் காலையும்
மறக்காமல்  சொல்லுமே சேதி
வலி கொடுத்த ஆண்டவன்..மன
வலிமையும் கொடுப்பான்
வழியும் திறப்பான்..
நாளைத் துவங்க..
நாளெல்லாம் திருநாளாக்க

திருமணம் ஒன்று...தீ'மண'த்துடன்

திருமணம் ஒன்று...தீ'மண'த்துடன்
jan 23 rd 2004..
மறக்கமுடியாமல் தவிக்கும் போது மார்க்கு மீண்டும் வந்து வந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கார் முகநூலில்..

சீரங்கம்..
சீரங்கம்..
சோகத்தில் தத்தளித்த நாள்..
சீவிச் சிங்காரிச்சு சென்றவரில் சிலர்
சீறிய நெருப்பில்..
செத்து மடிந்த கோர நாள்..
ரங்கா..ரங்கா..ரங்கா..
கங்கும் தீயில் கதறினார் பலர்.
கல்யாணம் ஒன்று காரியத்தில் முடிவு..
பூ சரியா வெச்சிருக்கேனா..
புடவை இந்த கலர் சரியா.
புதுப் பெண்போல புறப்பட்டாள்..
பூகம்பம் காத்திருப்பது அறியாமலே
அலங்கரித்த மேடை..
அழகாய் மணமக்கள்..
அவசரமாய் போட்ட பந்தல்
அதில் வந்தான் எமன்..
வீடியோ பிடிக்க வந்தவனோ
விதியை மாற்ற வந்தவனோ..
சிறுபொறியை புறக்கணிக்க
சீரழிந்தது பலர் வாழ்வு..
சிறு வழி ஒன்றுதான்..
சிக்கிய பெருங்கூட்டம்..
தப்பிக்க வழியில்லை..
தலையில் விழுந்தது நெருப்பு
அமைதியாய் இருப்பவள்
அழுத குரல் கேட்கலையே..
அலறல்கள் வானைப் பிளக்க..
அரங்கனும் கலங்கியிருப்பானோ
புதுசாய் போட்ட மூக்குத்தி
பளிச்சென்று காட்டியது
போர்த்திய அவள் உடலை..

ஆண்டு பதினைன்ந்து ஆனாலும்..
ஆறாத காயம் நெஞ்சில்..
அன்பான என் சித்தி..
அவனடி சேர்ந்து விட்டாள்..

உயிர் பெற்று உற்சாகத்துடன்
உயிர் குடித்த மண்டபம்..
தெருவழியே நடந்த போது..
தாரையாய் கண்ணீர் ..தடுக்க முடியவில்லை..

தீயில் சுட்ட இந்தப் புண் ஆறவே மாட்டேங்கிறதே..
எத்தனை குடும்பங்கள்..இழந்தன சொந்தங்களை..
எந்த ஒரு function என்றாலும்..safety measures சரியாக இருக்கா என்று முதலில் பார்க்க..அரங்கன் கொடுத்த அலாரமோ..
















exam....நல்ல exam.

exam....நல்ல exam..
அப்ளிகேஷன் கொடுத்த என்னை ஏற இறங்க பார்த்தபடி..கவுண்டரில் இருந்தவர் .
மேடம்..அங்க study material கொடுப்பாங்க வாங்கிட்டு போங்க என்றார். ஒரு குட்டி booklet கொடுத்தாள் அங்கே இருந்த பணிப்பெண்.புரட்டி பார்த்தேன்.. அதான் எனக்கு தெரியுமேனு எப்பவும் போல மண்டைகனம்.
விழுந்து விழுந்து படிக்க நேரமில்லாததால் ஒரு ரவுண்டு அடிச்சு படிச்சேன்.
பரீட்சை நாள்..ஹாலுக்கு.போறதுக்கு முன்னாடி குச்சி ஒண்ணு கையில் வெச்சுண்டு குச்சியா ஒரு பைய(ன்)ர் revision கொடுத்தார். 15 க்கு 10  மார்க் வாங்கினாதான் பாஸ். எங்க reputation எல்லாரும் காப்பாத்தணும்னு வேற சொல்லிட்டு போய்ட்டார்.பரீட்சை ஹாலுக்கு போறதுக்கு முன்னாடி டாகுமெண்ட் சரி பார்த்தல். என் அப்ளிகேஷன் நம்பரப் போட்டதும் பளிச்சுனு நான்.. ஃபோட்டோஷாப்பில் அழகாக்கின ஃபோட்டோ வர..அடுத்ததாக..identity verification. aadhaar நம்பர் கொடுக்க..
அசமஞ்சம் மாதிரி ஒரு ஃபோட்டோ வர..அங்கே இருந்த கம்ப்யூட்டர் தூக்கில் தொங்கிடுத்து..அதான் hang ஆகிடுத்து.ஒரு பத்து நிமிஷம்..பாவம் அந்த BPO பைய்யன்..
ஒரு வழியா..நீயா..இது நீயானு அது பல தடவை மேல கீழ பார்த்துட்டு ஓகே பண்ண..
அங்கே இருந்த சிப்பந்தி..'நெக்ஸ்ட் பாட்ச்ல தான் போகணும் நீங்க..போய் உட்கார்ந்துக்கோங்க ' என்றாள். நானும் பொழுது போகாமல் வாட்ஸப்பில் மொக்கை போட..பக்கத்தில் ஒரு இளவயசுப் பையன் சீரியஸா mock test எழுதிண்டிருந்தான்..ஓஹோ..இதுக்கெல்லாம் கூட இப்படி வெப்சைட் இருக்கானு ஆச்சரியத்தில் நானும் .. உடனே கூகுள் search பண்ண..நிறைய உதவிக்கரமிருக்க..
உடனே ஆரம்பிச்சேன் நானும் ரிவிஷன். முதல் டெஸ்ட் 2 மார்க்கு..இரண்டாவதில் கொஞ்சம் முயற்சி பண்ண 5 மார்க்.
அப்போ அங்கே வந்த அந்த instructor பையர்..10 எடுத்தாதான் பாஸ்..இல்ல பூட்ட கேஸுனு என்ன பார்த்து கேலியா சிரிக்க..
அங்கே என் ரோல் நம்பர் கூ்ப்பிட உள்ளே போனேன். ரூம் பூரா கம்ப்யூட்டர்கள் என்னைப் பார்த்து கண்ண்டிச்சது..
login and password வாங்கிக்கோங்க..உங்களுக்கு ஒரு PC allot ஆகுமென்றார் invigilator.
இஷ்ட தெய்வமெல்லாம் வேண்டியாச்சு.
கொடுத்த கணினி முன் உட்கார்ந்தாச்சு..
ready steady po ..நான் திரு திருனு முழிக்க..பக்கத்தில் வந்து நின்ற invigilator.. டி..டி..டி..முணுமுனுக்க..நான் அவரை.. 'இது என்ன என்னை மரியாதையில்லாமல் டி.டி..நு சொல்றாரேனு ஒரு முரை  விட..
மேடம்..இதுக்கு option D answer..tick maadu நு என் தலையில் கொட்ட..ஐயோ நன்னி சாரேனு..சொல்றதுக்குள்ள..அடுத்த கேள்வி திரையில்..வேர்த்து விறுவிறுத்து கேள்வி படிக்க..எல்லா ஆப்ஷனுமே கரெக்டா இருக்கே..dip dip dip ..my blue ship போட்டு..பதிலை டிக்கடிக்க..என் score சென்னை வெயில் வேகத்தில் ஏறிடுத்து..ஆஹா..9 வாங்கியாச்சு..
இன்னும் ஒரே.கேள்வி.ஒரே கேள்வினு பாட்டு ஓட..ஆஹா.. பத்தாவது பதில் பட்டுனு தப்புனு சொல்லிடுத்து அந்த கம்ப்யூட்டர். பதினொன்று.. பன்னிரண்டு.. பதிமூணு..பதினாலு..பதினைஞ்சு..
ஆல் கரெக்ட்னு விடிலடிக்க..
14/15..ஆத்தா நான் பாஸாயிட்டேனு கூவ..என் மொபைலில் டொடங்னு வந்து விழுந்த மெசேஜ்..your learner's licence approved என்றபடி..
சாரதி வேலைக்கு..second innings..ஆரம்பம்.
அரைக் கிழம் ஆறு மாசம் கழிச்சுதான் ஆகப் போறேன்..அதுக்கு இப்பவே arrangement எல்லாம் ஆரம்பம்.
இன்னும் அடுத்தது ஓட்டிக் காண்பிச்சாதான் முழுசா லைசென்ஸ் கிடைக்கும்.
விசா வினாயகர் மாதிரி..லைசென்ஸ் வினாயகரை எங்கிருக்காரோ தெரில.அந்த தொப்பையுள்ள RTO officer தான் அருள் புரியணும்..இல்லனா.சுத்த வெச்சு சுளுக்கெடுப்பாராம்
எட்டு போட வெச்சு தட்டு தடுமாற வைப்பாராம்
இப்பவே விசாரிச்சு வெக்கணும்..அவருக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்னு..!!!

அட்மிஷன் வாங்கலையோ அட்மிஷன்.

அட்மிஷன் வாங்கலையோ அட்மிஷன்.
நவம்பரிலிருந்து ஆரம்பிச்சு ஏப்ரல் வரை நடக்கும் மேளா..இந்த அட்மிஷன் மேளா.
transfer ஆனவர்கள், பழைய ஸ்கூலிலிருந்து வேறு பள்ளிக்கு மாற விரும்புபவர்கள்..இப்படி பல வகை.
க்யூவில் நிற்கும் காலம் போய் இப்போது எல்லாம் கணினி மயமாயாச்சு.
ஒரு சில பள்ளிகள் மட்டும் கால் கடுக்க நிக்க வெச்சு அப்ளிகேஷன் தருகிறார்கள்.
என் பெண்களுக்காக 1995 லிருந்து பார்த்த பள்ளிகள் ஏராளம்..ஆனால் மாறாத சில விதிகள் மன உளைச்சலை தருகிறது.
LKG admission ..lottery system ல செலெக்ட் ஆனவர்  பெயர் வரும். அதற்கு பிறகு parents interview. அபியும் நானும் ப்ரகாஷ் ராஜும் ஐஷ்வர்யாக்கள் ஆவார்கள் அப்பா அம்மாக்கள். இது ஒரு லெவல்.
ஒரே பள்ளியில் பதிவு செய்து விட்டோம்னு சும்மா இருக்கமுடியாது. சுத்துப் பட்டு பதினெட்டு கிராமத்திலும் இருக்குற பள்ளிக்கு காசோலையுடன் பதிவு செய்யணும்.
பெரிய வகுப்புகளில் சேர்க்கணும் எனில் இன்னும் பல இடர்கள்.
தனித்தனி நாட்களில் பரீட்சை.
வேறு வேறு syllabus.
அதுவும் இந்த நுழைவுப் பரீட்சைகள் பள்ளி இறுதிப் பரீட்சை நேரத்தில் மோதுகிறது.
குழந்தைகள் எதைப் படிக்கும்?
for example - 10 ம் வகுப்பு model exam ம் practicals ம் நடக்கும் நேரத்தில் 11 th க்கான நுழைவு த் தேர்வு நடைபெறுகிறது. ஒரு பள்ளி அறிவியல், கணக்கு மற்றும் ஆங்கிலம். இதில் 9 th portion ம் அடங்கும். 10 ஆம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு 9/ம் கிளாஸ் பாடம் தெரியாதா என்று கேட்போம்..ஆனால் அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு பெரும் pressure ஆக இருக்கிறது. மாணவர்களின் 3 அல்லது 4 வருடத்திய ரிப்போர்ட் கார்டு வைத்து பரிசீலனை செய்து இது போன்ற 10 ம் வகுப்பு மாணவ/மாணவியருக்கு நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கலாமே..
அடுத்தது முக்கியமாக result.
ஒரு பள்ளி .உடனே ரிசல்ட் வெளியிட்டு குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கட்டச் சொல்லி வற்புறுத்துகிறது.
சில பள்ளிகளில் முடிவு காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் கிடைத்தை முதலில் பற்றிக் கொள்வோம்னு இதுக்கும் பணம் கட்டி, பிடித்த/காத்திருந்த பள்ளி முடிவு அறிவிக்கப்பட்டதும..் முன் கட்டிய பள்ளியில் பணத்தை forgo செய்ய வேண்டிய நிலை.
ஏன் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இருக்கும் பள்ளிகளின் தலைமைகள் ஒரு unanimous decision எடுத்து , publication of results and payment of fees ல் ஒரு regulation கொண்டு வரக்கூடாது?
it gives a fair chance to the parents and children to choose the school they wish to study also இல்லையா?.
காலம் மாறும்..நம்பிக்கையில் இன்றும்

Use and throw

use and throw...
நேற்று போல் இன்று இல்லை..இன்று போல் நாளை இல்லை..
தாத்தா கொடுத்த இங்க் பேனா..ஒவ்வொரு பரீட்சையின் போதும் பெட்டியிலிருந்து எடுத்து அழகா அலம்பி துடைத்து நிப் போட்டு..உபயோகப்படுத்தி இருக்கோம்.
வருஷ ஆரம்பத்தில் வாங்கிய ஜியாமெட்ரி பாக்ஸ் ..கூர் சீவி கடைசி வரை உபயோகித்த பென்சில்..அழித்து எழுத சொல்லிக் கொடுக்காததால்..வேலையே இல்லாமல் வெள்ளையாய் தேயாமல் இருந்த ரப்பர்..கஷ்டப்பட்டு காசு சேர்த்து வாங்கிய பீரோ, மிக்ஸி, க்ரைண்டர் இத்யாதி.
இதுக்கு எப்போ விடுதலை கொடுக்கப் போகிறாய்னு என் பழைய மிக்ஸியை பார்த்து கேட்போர் ஏராளம். ஒன்று..அதிலுள்ள sentimental attachment..
இன்னொன்று..இதைப் போல sturdy இப்போது கிடைப்பதில்லை..அப்படியே ரிப்பேர் ஆனாலும் ..எப்படியோ தேடிப் பிடித்து அதை ஓட்ட வைப்பதில் ஒரு சந்தோஷம்..
ஆனால்..இந்த சந்தோஷம் வடிந்து ஓடும்..
எப்போது என்று கேட்கிறீர்களா..?
 எப்போது இந்த use and throw concept க்கு வந்தோமோ அப்போது..
உதாரணத்திற்கு..மார்க்கெட்டில் இருக்கும்  மொபைல் பற்றி வலையிலும் கடையிலும் விலைப் பட்டியல், quality, efficiency, reviews எல்லாம் படித்து நம் பட்ஜெட்டிற்கு ஒத்து வரும் அல்லது emi ல் கட்டும் வலையில் விழுறோம்.
வாங்கி ஒரு வருடம் ஒன்றரை வருடம்..பாட்டரி சார்ஜ் கம்மியாகும்..அடிக்கடி hang ஆகும். இன்ன பிற சிக்க்ல்கள். கடைக்கு ரிப்பேர் செய்ய எடுத்துப் போனால் இதுக்கு பார்ட்ஸ் இப்போ வரதில்லை என்று ஒரு பதில். கூடவே ..இன்னொரு best model வந்திருக்கு..இந்த பழசை வெச்சுட்டு எதுக்கு அல்லாடறீங்கனு .கடைக்காரர் புதுசை ் அணி வகுக்க.. பழசு மனதிலிருந்து பின்னோக்கி போகும்..நமக்கு புது செலவு..
இந்த நிலமை ..எல்லாப் பொருள்களிலும் இப்போது..
ரிப்பேர் செய்தால் சில நூறு ஆகும் விஷயம்.அவர்கள் காண்பிக்கும் exchange offer என்னும் carrot க்கு காலில் விழுகிறோம். காசைக் கரியாக்குறோம்.
இந்த வலையில் விழாமல் உங்கள் பொருள்களை பாதுகாக்கிறீர்கள் என்றால்..கண்டிப்பாக ஒரு கைத்தட்டல் உங்களுக்கு..


USE ..after that throw ..ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்..சில சமயம் ..இது இல்லாமல் இருக்கவே முடியாது என்று வாங்கும் பொருட்கள் ..
உபயோகித்து அனுபவிக்காமலே வீசி எறியப்படுவதும் நடப்பதனால்.
change and exchange are inevitable for life ..என்று முடிக்காமல் எந்த conversation ம் இப்போது இல்லை.
காலம் நம்மை இழுத்துப் போனாலும் ..நமக்கு  கிடைத்த சில முதல் பொருள்கள்..முதல் முதலாய் முதலிட்டு வாங்கிய பொருள்கள் ..வீட்டின் மூலையில் இல்லாவிட்டாலும்..மனதின் மூலையில் இருக்கும் என்றும்..