Friday, August 10, 2018

பவழமல்லி

#nammabengaluru_drizzle

பொழிந்த சிறுமழையில்
நனைந்த பவளமல்லிகள்
பார்த்து எடுக்கோணும்..
கோர்த்து மாலையாக்க..

நாட்டு மருந்தாமே
நலமும் தருமாமே
காம்பும் தருமாமே
கலரும் ..டஸ்ஸர் பட்டுக்கு

வீட்டுக்கு வெளியே
விழுமே வழியிலுமே
வருவோர் போவோர்
வசதியாய் வாரிச்செல்ல..

அழகின் இலக்கணமே
அழைப்பாய் வாசமுடனே
அருளும் பெறுவேனே
அவனுக்கு சூட்டியுனையே

No comments: