Saturday, August 25, 2018

கண்ணா வருவாயா

கண்ணா வருவாயா...???

அம்மா..
பாப்பா கூக்கி (தூக்கியின் மழலை)
குட்டிப் பாப்பா கெஞ்ச..
கொஞ்சம் இருடா..
 கிருஷ்ணா உம்மாச்சி வருவாரே..
குடுகுடுனு ஓடி விளையாடுவாரே..
அவருக்கு இன்னிக்கு  birthday ஆச்சே..
பார்ட்டிக்கு எல்லாம் ரெடியாக்கனுமே..
சிணுங்கலுடன்...பின் சமாதானம்..
பாயசம் கண்டதும்..
பரவசம் வந்தது..
என் வீட்டு கிருஷ்ணிக்கு.
கண்ணா...உம்மாச்சி வருவார்
உட்கார்ந்து சாப்பிடுவார்..
அப்பறந்தான்..நமக்கு..

தூங்க வெச்சு அவளை..
குட்டிக் கால் போட்டு..
மற்ற வேலை கவனிப்பு..
அனுமாஷ்ய சக்தி ஒன்று
ஹாலுக்கு என்னை இட்டுசெல்ல
என் சுட்டி வால்..
ஒன்னு வுடாமல்..
காலை அழிக்கும் மும்முரத்தில்..
அம்மா..அழுக்கு..!!!
என்ன சொல்வேன்?

நெய்வேத்தியம் ரெடி..
என் வீட்டு குட்டியின் ..
அலைபாயும்..
கையை கட்டி..
ஓம் பூர் புவ ஸு்வ..சொல்லி..
எல்லாம் ஆச்சு..
மம் மம் சாப்பிடலாமானு ..கேட்க..
இடதும் வலதுமாய் வேகமாய்த்
தலை ஆட்டி..
மம் மம் வேண்டாம்....
அது கிருஷ்ணா க்கு..
பண்ணிய பட்சணங்கள்.
படைத்த பழங்கள்..
பரிதாபமாய் எனை பார்க்க..
பண்படனுமோ நாம இன்னும்..
பசினு பாயசம் கேட்டது..
அந்த மாயக் கண்ணன் தானோ..???

கண்ணா வருவாயா..
எப்போவாவது வந்திருக்கியா...???
கேள்வி ....குடைய நான்..!!!

Happy janmashtami

No comments: