Wednesday, September 28, 2016

ஒரு நாள் ராஜாங்கம்

வத்தல் குழம்பு
வடாம் பொரிச்சது..
வடுமாங்காயோடு..
வெண்ணையாய் பிசைந்த...
வாழையிலையில் கட்டிய..
தயிர் சாதம்..
வாய் முழுதும் பல்லாக(செட்டாக)
வழியனுப்புவாள் என் பாட்டி..
தாத்தாவை ஊருக்கு..

நாலுமணி பஸ்ஸில் போனாதான்..
நாலு வேலையும்..நடக்குமென்றே..
கட்டு சாத மூட்டையோடு..
கிளம்பிடுவார் என் தாத்தா..

ஆல் இந்தியா ரேடியோவின்..
அலறல் இன்றில்லை..
வந்தே மாதரம் வரும்போது..
வரிசையாய் உருவப்படும்
விரிப்பும் தலையணையும்..
கட்டாந்தரையிலே..
தவக்களை படுக்கையில்லை
தப்பிச்சோம் இன்னிக்குனு..
தாராளத் தூக்கம்..
விவித் பாரதி..
வீச்சென்று அலறும்..

எட்டு மணி யாச்சு..
எங்கே இரண்டாவது காப்பி..
பத்து மணியாச்சு..
பெருக்கித் தொடக்கலையா..
பூஜைக்கு நாழியாச்சு..
பதினொன்றறை யாச்சு..
பசி உயிர் போறது..
பன்னெண்டு மணியாச்சு..
பாங்க் வேலை முடிக்கணும்
ரெண்டு மணியாச்சு..
ரெடியா..காப்பி..
நாலு மணியாச்சு..
நல்ல சூடா டிபன்..
செல்வராஜ் செய்தி வாசிப்பு..
செவக்காமல் சுட்ட அப்பளம்..
ஒன்பது மணியாச்சு..
ஒரு மோர் சாதம் போதும்..
கடிகாரம் பார்த்து.
காரியம் இன்றில்லை..
வாடகை நூல் நிலயம்..
வாசலில் விழும் புத்தகம்..
வாரி எடுத்து..
வரி விடாமல் படிக்க..
வசதியான நாளிது..
வெளியே போனவர்..
வீட்டுக்கு வரும்வரை..
விலங்குகளில்லா..
விரும்பும் வாழ்க்கை..
வாசலில் காத்திருப்பு..
வர கொஞ்சம் நேரமானால்...

நாள் முழுதும் சுத்திய களைப்பில்
நாய் முகம் காட்ட..
நான் இல்லனா..
நிம்மதியா இருந்திருப்பியே..
பதிலே பேசாமல்..
பறிமாறுவாள் பாட்டி..
பழகிய வசவுகள்..
புதுசா என்ன வலி?

Friday, September 23, 2016

விழி..எழு.

syllabus complete செய்த களைப்பில்
self study பண்ணுங்கோனு..
சயனத்தில் இருக்கும்..
சித்தார்த்தனே..
உன் (போதி)மரப் பாடம்..இந்த
மர மண்டைக்குள் போகலையே..
மிகச் சுலபம் என்றாய் நீ..
முழி பிதுங்குகிறதே..
நுனிப்புல் மேயும் எமக்கே..
தேர்வு நேரம் எமக்கு..
என்ன தூக்கம் உனக்கு..
புதுக் கொள்கை..பாடத்திட்டம்..
பிறகு யோசிக்கலாம்..
சோதனை வேளையிது..
சுப்ரபாதம் பாட நேரமில்லை..
சித்தம் என் கலங்குமுன்..
சித்தார்த்தா..எழு நீயே.

தீர்த்தம்

அனுமார் கோவில்
அர்ச்சகர் .
உத்தரணியில் தந்த
துளசி தீர்த்தம்..
உள்ளத்தை தூய்மையாக்கினால்..
உவகை தானெ

Wednesday, September 21, 2016

Bandh day

எழுந்திருக்க மனமிலா..
சோம்பலான காலை..
எடுப்பாரன்றி..
வீசி எறியப்பட்ட...செய்தித்தாள்
தூக்கில் தொங்கும் பால் பாக்கெட்..
எதுக்குமே வாசப்படி இறங்க வேண்டாம்..
எது இருக்கோ..அதே போதும்..
அடைப்பட்ட குழந்தைகள்..
சனி ஞாயிறை விட..
சுகம் தருதோ..

சுற்றி எல்லாரும் இருக்கும்..
சுறுசுறுப்பை சூறையாடும்
சிற்றின்பம் சிலருக்கும்..
பேரிழப்பு ..
பொருளாதாரத்துக்கும்..
தரும்..
வேலை நிறுத்தங்கள்..
வழி காட்டுமா..
வளர்ச்சிக்கு..!!!!

Monday, September 19, 2016

Silver jubilee

ஜாடிக்கேத்த மூடி போல
 திலீபன் சுபா ஜோடியிது..
ஜொலிக்கும் வெள்ளி காணும்..
ஜாலியான ஜோடியிது..

கருவைக் காக்கும் மருத்துவர் இவள்..
தருவாள் நம்பிக்கை தம்பதி பலருக்கு
சிறுகூடு இவள் வீடு..
சிறிதும் பஞ்சமில்லை இன்பத்திற்கே..

அறுவை சிகிச்சைக்கு ஆதாரம்
அளவாய் தரும் அனஸ்தீஷியாவில்
அந்தக் கலை .. கைவந்தக் கலையாய்..
அரும்பணி புரியும் திலீபனிவரே..

மயக்க ஊசியில் மயக்குவர் இவரெனில்..
மந்திரப் புன்னகையில் மயங்க வைப்பாளிவளே
பல்லிசை வேந்தர் இவர் என்றாலோ
இல்ல  இசையின் நற் சுருதியும் இவளே..


நிலவு ஆயிரம்
காண வாழ்த்து..
கனவு யாவும் ..கை...
வசப்பட ..வாழ்த்து..
நலமும் இன்பமும்
நாடியே வரணும்..
நான்கு தலைமுறை..
நீங்களும் காணணும்..

தங்கம் வைரம் பிளாட்டினங்கள்..
சிங்கக் குட்டியாம்..
சீமந்த புத்திரனுடன்..
சீறும் சிறப்பாய் ..
சேர்ந்தே கொண்டாடணும்..
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..

Sunday, September 18, 2016

Exams..exams

flipping through the pages
focussing with attention

filling my mind
faith as the ink
flowing with energy
forging ahead always..
functions of protection
falling in front..
fail or pass..
fear for nothing
following mentors path
farther not the dreams
fine tuning our lives
fulfilling our mission..
firm is our faith
flaws flown away..

learning is fun..
leaning not to devils
lower not the life state
lament not the surrounding
light all   the path
leaders of kosen rufu

fail the fears
frail  the trials
future is ours
future is ours..

Wednesday, September 7, 2016

கண்ணா வருவாயா

கண்ணா வருவாயா
அம்மா..
பாப்பா கூக்கி (தூக்கியின் மழலை)
குட்டிப் பாப்பா கெஞ்ச..
கொஞ்சம் இருடா..
 கிருஷ்ணா உம்மாச்சி வருவாரே..
குடுகுடுனு ஓடி விளையாடுவாரே..
அவருக்கு இன்னிக்கு  birthday ஆச்சே..
பார்ட்டிக்கு எல்லாம் ரெடியாக்கனுமே..
சிணுங்கலுடன்...பின் சமாதானம்..
பாயசம் கண்டதும்..
பரவசம் வந்தது..
என் வீட்டு கிருஷ்ணிக்கு.
கண்ணா...உம்மாச்சி வருவார்
உட்கார்ந்து சாப்பிடுவார்..
அப்பறந்தான்..நமக்கு..

தூங்க வெச்சு அவளை..
குட்டிக் கால் போட்டு..
மற்ற வேலை கவனிப்பு..
அனுமாஷ்ய சக்தி ஒன்று
ஹாலுக்கு என்னை இட்டுசெல்ல
என் சுட்டி வால்..
ஒன்னு வுடாமல்..
காலை அழிக்கும் மும்முரத்தில்..
அம்மா..அழுக்கு..!!!
என்ன சொல்வேன்?

நெய்வேத்தியம் ரெடி..
என் வீட்டு குட்டியின் ..
அலைபாயும்..
கையை கட்டி..
ஓம் பூர் புவஸ்வ..சொல்லி..
எல்லாம் ஆச்சு..
மம் மம் சாப்பிடலாமானு ..கேட்க..
இடதும் வலதுமாய் வேகமாய்த்
தலை ஆட்டி..
மம் மம் வேண்டாம்....
அது கிருஷ்ணா க்கு..
பண்ணிய பட்சணங்கள்.
படைத்த பழங்கள்..
பரிதாபமாய் எனை பார்க்க..
பண்படனுமோ நாம இன்னும்..
பசினு பாயசம் கேட்டது..
அந்த மாயக் கண்ணன் தானோ..???

கண்ணா வருவாயா..
எப்போவாவது வந்திருக்கியா...???
கேள்வி குடைய நான்..!!!






கண்ணா வருவாயா
அம்மா..
பாப்பா கூக்கி (தூக்கியின் மழலை)
குட்டிப் பாப்பா கெஞ்ச..
கொஞ்சம் இருடா..
 கிருஷ்ணா உம்மாச்சி வருவாரே..
குடுகுடுனு ஓடி விளையாடுவாரே..
அவருக்கு இன்னிக்கு  birthday ஆச்சே..
பார்ட்டிக்கு எல்லாம் ரெடியாக்கனுமே..
சிணுங்கலுடன்...பின் சமாதானம்..
பாயசம் கண்டதும்..
பரவசம் வந்தது..
என் வீட்டு கிருஷ்ணிக்கு.
கண்ணா...உம்மாச்சி வருவார்
உட்கார்ந்து சாப்பிடுவார்..
அப்பறந்தான்..நமக்கு..

தூங்க வெச்சு அவளை..
குட்டிக் கால் போட்டு..
மற்ற வேலை கவனிப்பு..
அனுமாஷ்ய சக்தி ஒன்று
ஹாலுக்கு என்னை இட்டுசெல்ல
என் சுட்டி வால்..
ஒன்னு வுடாமல்..
காலை அழிக்கும் மும்முரத்தில்..
அம்மா..அழுக்கு..!!!
என்ன சொல்வேன்?

நெய்வேத்தியம் ரெடி..
என் வீட்டு குட்டியின் ..
அலைபாயும்..
கையை கட்டி..
ஓம் பூர் புவஸ்வ..சொல்லி..
எல்லாம் ஆச்சு..
மம் மம் சாப்பிடலாமானு ..கேட்க..
இடதும் வலதுமாய் வேகமாய்த்
தலை ஆட்டி..
மம் மம் வேண்டாம்....
அது கிருஷ்ணா க்கு..
பண்ணிய பட்சணங்கள்.
படைத்த பழங்கள்..
பரிதாபமாய் எனை பார்க்க..
பண்படனுமோ நாம இன்னும்..
பசினு பாயசம் கேட்டது..
அந்த மாயக் கண்ணன் தானோ..???

கண்ணா வருவாயா..
எப்போவாவது வந்திருக்கியா...???
கேள்வி குடைய நான்..!!!

























எங்கே தேடுவேன்

எங்கே தேடுவேன்..
எலி உனையே ..
எங்கே தேடுவேன்..


அனுமதி வாங்காமலே
எனக்குத் தெரியாமயே
என்வீட்டில்..
நுழஞ்ச உனை
எங்கே தேடுவேன்..

கட்டிலுக்கடியிலே
cupboard இடுக்கிலே
அட்டை டப்பாவிலே
அடைசல். பரணியிலே
எங்கே தேடுவேன்...

கண்டதெல்லாம்..நீயுமிங்கே
கடிச்சு குதறுவியா..
கம்பளி மட்டும்..உன்
கால் ..வயிற்றுக்கு..போதுமா..
எங்கே தேடுவேன்..

நிம்மதி போச்சதிங்கே
நித்திரையும் ஓடிப் போச்சே
நினப்பு எப்பவுமே
நீயாக இருக்கறியே..
எங்கே தேடுவேன்..

மசால் வடை வேணுமா..
bread butter போதுமா..
எது பிடிக்கும் உனக்குனு
எங்கிட்ட மட்டுஞ் சொல்லு..
எங்கே தேடுவேன்.

காணாததை தேடித் தரும்..
கால..பைரவருக்கு..
காசும் வெச்சாச்சு..
காலையும் புடிச்சாச்சு..
எங்கே தேடுவேன்..

காத்து கூட புகாத..
கான்க்ரீட்டு பொந்துக்குள்ளே..
வழிதவறி வந்த உன்னை..
வீடு தான் சேர்த்திடவே..
எங்கே தேடுவேன்..

சுதந்திரமா சுத்தின நீ
செல்லுக்குள்ள..
சிக்கிக்கொண்டு
சுகம் என்ன காண்பாயோ..
எங்கே தேடுவேன்..

வாய்ப் பேச்சு கேட்காத..
வயசுப் பசங்களை..நீ.
வந்த ஒரு நாளிலேயே
வழிக்கு கொண்டு வந்தியே..
எங்கே தேடுவேன்..

அலமாரி மூடியிருக்கு..
அடுக்கி எல்லாமிருக்கு..
அமைதி புரட்சியொன்று..
அரை நாளில் செய்த உனை..
எங்கே தேடுவேன்..

கொல்லி வெச்சு உனையிங்கே
கொல்ல எனக்கு் ஆசையில்ல..
சொல்லாம கொள்ளாம..
வந்த வழி போயி விடேன்..
எங்கே தேடுவேன்....

எம்பாடு புரியலையா..
என் சோகம் அறியலையா..
என்னோட தங்கம் நீ..
எம்மை விட்டு ஓடிவிடு..
எங்கே தேடுவேன்..

எலிகொரு எசைப்பாட்டு..
என்னை இங்கே.
பாட வெச்ச..
ஆண்டவா நீயே சொல்லு..
எங்கே தேடுவேன்..

தம்மாத்தூண்டு எலி ஒன்னு
இம்மாம் பாடு
படுத்துதடா..
இஷ்டதெய்வமெலாம்..எந்தன்
கஷ்டத்ததான் போக்கணுமே..









உன்ன விட....

உன்ன விட...

விதையே இருக்காது..
 காயே கனியாய் இனிக்கும்..
நான் வெச்ச கொய்யா மரம்..

இது என் பொண்ணு
நட்ட மாமரம்..
மல்கோவா ...சுவையோ சுவை..
மண்ணு நல்ல மண்ணு இது..

அளவில சிறிசுதானாலும்
அன்னாசிப் பழம்..
அருமையா இருக்கும்..

வாழை இலைக்கு..
வெளியே போறதே இல்லை

இந்த மரக் கிளை இருக்கே
மங்களத்தின் அடையாளம்..

இந்தப் பூச்செடி ..
புது வகையாக்கும்..
பார்க்கவே கொள்ளை அழகு..

பக்கத்து வீடு நல்லவங்க..
பக்க துணையா இருப்பாங்க..

சுவற்றில் தொங்கும் படம்..
சின்னப் பைய்யன் வரைஞ்சது..

அணில் புறா மைனா எல்லாம்..
அடிக்கடி வந்து விளையாடும்..

தண்ணீர் வருகை பார்த்து
தவறாமல் மோட்டார் போடணும்..
இந்த குழாய் மட்டும்..
கொஞ்சம் தண்ணீ கம்மி வரும்..

திருட்டு பயமே இல்லையிங்கே..
தைரியமா இருக்கலாம்..

ராசியான வீடுங்க..
வரிசையாய்..விளக்கங்கள்

வீட்டுச் சாவியை
வீட்டுச் சொந்தக்காரர் கையில்
் கவலையுடன் கொடுத்தபடி.
பல ஆண்டாய்...
குடியிருந்தவர்..

வாங்கிய வீடோ..
வாடகை வீடோ..
வாழ்ந்த விட்டை
விட்டு வரும் வலி..
வலி ....வலி்தான்...

விடியல்

விடியல்..
'கிழிக்கப் போற என்ன பெருசா இன்னிக்கு'
கேலி செய்தது..
கிழக்கு வெளுக்குமுன்னே..
கிழிக்கப்பட்ட  நாட்காட்டி..
நல்ல கெட்ட நேரம்..
ராகு எம கண்டம்..
சித்த அமிர்த யோகம்..
சேர்ந்த நாள்னு நீ சொன்னாலும்...
கடனேனு வாழாமல்..
கவிதையாய் வாழ்வேன்..
காத்திரு நீயும்..
கிழிக்க நான் வருவேன்..
நாளை மீண்டும்..
life is so beautiful..
live..live..live

Anniversary wish

Happy anniversary to the most charming couple I have ever met. Looking back ,I feel how mystic was our meeting .
 Your warm clear voice ,
 your wise and dignified manner ,
your ever encouraging words,
your unconditional love,
 your extended support,
your positive attitude toward life,
your lovely voice,
your smile,
your untiring hospitality,
your affectionate looks,
your goal of spreading happiness,
your concern from the bottom of the heart,
your prayers
your vibrant home
……….
The list is too long..
I know you are the best..
My prayers and loads and loads and loads of wishes this wonderful couple..
Happppppppppppy anniversary dear.

My small dedication to the couple I adore.
என்ன சொல்லி பாடுவதோ..
என்ன வார்த்தை கூறுவதோ..

புவனெங்கும் சுற்றிடினினும்..
புலப்படாத பதுமையிவள்
கைப்பிடித்த நாதனுடன்..
கனவெல்லாம் நிஜமாக்குபவள்

அன்பு எங்கோ..
அங்கே இவள்
ஆசை எங்கோ
அங்கே இவள்.
அமைதி எங்கோ
அங்கே இவள்
இசை எங்கோ
அங்கே இவள்
விசையாய் என்றும்
இயக்குவள் இவள்..

விஸ்வ நாதன் துணை..
புவனா இவள்..
நாதன் புகழோ..
நாமறிவோமே..
நல்லதன்றி நாவறியார்..
நம் மனமறிவார்..
நல்லூக்கம் அளிப்பார்..
நல்ல நண்பரிவர்..


உதாரணத் தம்பதி
உம்போல் வேறில்லை

இல்லறம் இனிமையாய்
இனிவரும் காலமெல்லாம்
இணைபிரியா வாழ்வினிலே
கொள்ளை இன்பத்துடன்..
குறையா நற்செல்வத்துடனும்..
இன்றுபோல் என்றும் வாழ..
இறைவா..அள்ளித்தா..
இவ்வுலகிலுள்ள இன்பமெலாம்..

அன்புடன்
Akila CSR