Friday, September 23, 2016

விழி..எழு.

syllabus complete செய்த களைப்பில்
self study பண்ணுங்கோனு..
சயனத்தில் இருக்கும்..
சித்தார்த்தனே..
உன் (போதி)மரப் பாடம்..இந்த
மர மண்டைக்குள் போகலையே..
மிகச் சுலபம் என்றாய் நீ..
முழி பிதுங்குகிறதே..
நுனிப்புல் மேயும் எமக்கே..
தேர்வு நேரம் எமக்கு..
என்ன தூக்கம் உனக்கு..
புதுக் கொள்கை..பாடத்திட்டம்..
பிறகு யோசிக்கலாம்..
சோதனை வேளையிது..
சுப்ரபாதம் பாட நேரமில்லை..
சித்தம் என் கலங்குமுன்..
சித்தார்த்தா..எழு நீயே.

No comments: