Tuesday, December 24, 2019

Happy birthday Jayanthi manni

Happy 60  Vaijayanthy Srinivasan MANNI.
You don't look like i swear.

வைஜயந்தி மன்னிக்கு ஒரு வாழ்த்து

மன்னிக்கு ஒரு வாழ்த்து..அன்பு
மன்னிக்கு  ஒரு வாழ்த்து..
வாழ்வில்  நல்லவை அமைவதற்கு..நான்
சொல்லும் தமிழ் பாட்டு.

நெய்வேலியில் பூத்த தங்கப்பூ..இவளை
நினைத்தாலே மனசில் தித்திப்பு.

ஓடி வந்து உதவுவதைப் பார்க்க..
எனக்குத் தோன்றும் திகைப்பு..

சுரங்கத்திலிருந்து வந்ததனால்..வற்றாது
சுரக்கும் எப்போதும் அன்பு.

நீல நிறம் இவள் பிடிப்பு
பிடிக்காது இவளுக்கு நடிப்பு.

 உறவு என்ற போதிலும்..அதைவிட
வேண்டும் என்றும் இவள் நட்பு.

எல்லைகள் தாண்டியும்
வைத்திப்ருப்பாள் தொடர்பு.

தகவல் களஞ்சியத்தின் கோப்பு
தருவாள் அள்ளி குறிப்பு.

#just_dial_Jayanthi என
ஜோக்காய் எங்கள் அழைப்பு

உனக்கு..
அறுபது என்றால்..
ஆச்சரியரம் எனக்கு..

போட மாட்டாயே மேக்கப்பு
உன்னோடிருந்தால் கலகலப்பு

என்றும் இளமை காப்பு
அந்த secret எனக்கு செப்பு ..

கொடுங்க எங்களுக்கு டிப்பு
நீங்க எப்பவுமே டாப்பூ..

உனக்கு ஒரு அன்பளிப்பு..இந்தச்
சின்னதா ஒரு கவிதைப்பூ..🎁🎂🌹🌺

Monday, December 23, 2019

வல்லமை தாராயோ..

வல்லமை தாராயோ..

மோட்டுவளையும் மாட்ச்சும் மாத்தி மாத்தி பார்க்கும் அப்பா..திடீரென்று நேத்திக்கு ' பக்கத்து கடைக்கு போய்ட்டு வரேன் ..லிஸ்ட் கொடு என்றார். விடுவேனா..ஒரு ஆள் வேலை செய்ய கிடைச்சால். ..

அவரெல்லாம் ரொம்ப systematic. ஒரு பேப்பர் எடுத்து பிள்ளையார் சுழி போட்டு தேதி போட்டு..உஸ் அப்பா..நான் அப்பறம் மறந்துடுவேன் என்று சொன்னதை கண்டுக்கவே இல்லை. எட்டு ஐட்டம் இருக்குப்பா..home delivery பண்ண சொல்லுங்கோ..நீங்க தூக்க வேண்டாம் என்றேன்.

கடைக்கு போய்ட்டு சைட்ல பேத்திக்கு கடலை மிட்டாயும் வாங்கி வீட்டுக்கு வந்தார்.

அவர் பொறுமையை சோதிச்சது..சாமான் வராமல்..நான் சரியாதானே சொன்னேன் அட்ரஸ் ..இன்னும் வரலையே..ஃபோன் வேணா பண்ணேன். ஒரே restless.
இந்த அபார்ட்மென்ட் வரும்போது கொண்டு வருவாம்ப்பானு நானும் சமாதானம் சொன்னபடி இருந்தேன்.

வந்தார் வந்தார் ..டெலிவரி பாய். தந்தார் தந்தார் சாமான் எல்லாம்.
உள்ளே எடுத்து வைக்கப் போனேன். ' இரு இரு ..எல்லாம் சரியா இருக்கானு செக் பண்றேன் அப்படின்னார். எப்பவும் தருபவர் தானேப் பா..why tension என்றேன்.

என் நேரம்..லிஸ்டில் 9 ஐட்டம்..என் கிட்ட 8 ஐட்டம். தோண்டி பார்த்ததில் ஒரு சந்திரிகா சோப் எக்ஸ்ட்ரா 25 ரூபாய்க்கு. கடையில் பில் பார்க்கலை.

நீ என்ன பண்ற காலம்பற கடை திறந்ததும் போய் அவன்கிட்ட சொல்லி 25 ரூபாய் வாங்கிண்டு வந்துடு. இனிமே நீயும் ஜாக்கிரதையா செக் பண்ணு. இன்னும் எவ்வளவு போச்சோ இப்படினு ஒரே புலம்பல்.

காலையில் எழுந்ததும் first reminder அதுதான்.
போனேன் கடைக்கு.நீங்க வாங்கினது தான்னு பில் போட்டவர் argue செய்ய..அப்பா எடுத்துண்டு போன லிஸ்ட்டை காண்பிச்சேன். இதுல இல்லையே..இப்பவாவது ஒத்துக்கறயா என்றேன். ' என்ன madam..இத்தனை வருஷமா வாங்கறீங்க ..ஒரு 25 ரூபாய்க்கு இப்படி பண்றீங்களே என்றார்.

ஒரு சின்ன க்ளாஸ் எடுக்க வேண்டியதாப் போச்சு அவருக்கு.
' என் அப்பா 82 வயசில தானே வந்து வாங்கணும்னு வந்தார். இப்போ இப்படி தப்பா போனால் தான் இதுக்கு கூட லாயக்கில்லையோனு சோர்ந்துடுவார்ப்பா..
அவரோட self confidence ம் போயிடும்..உன் மேல இருக்கும் confidence ம் போய்டும்.
பரவாயில்லையா..' என்று கேட்டேன்.

25 ரூபாயை திருப்பி கொடுத்து அந்த பில்லையும் சரி செய்து வாங்கி வந்து அப்பாகிட்ட காண்பித்தேன்.
ஒரு sigh of relief அவரிடம்.

அவர்கள் மன நிலையில் இருந்து யோசித்தேன்..இப்படித்தான் அவர்கள் மன ஒட்டம் இருக்குமோ..

தூக்க மருந்து  தாலாட்டுமுன்
தூக்கிப் போடுமே இருமல்
என் லொக் லொக்  சத்தம்
கொர் கொர் குறட்டைக்காரரையும்
கூப்பிட்டு எழுப்புமே..
தலைகாணி உயரமாகும்..
தலை விதி நொந்து..
தாரையாய் கண்ணீர்..
.
கோழிக் கூவும் நேரம்..
கண்ணும் சொக்கும் தூக்கம்..

எட்டு மணி ட்ரெயின் பிடித்து
எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து
ஓட்டமும் நடையுமாக..
ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..

ஓரமாய்..சின்ன நினைவாய்..
 விழிப்பும் ஒரு வழியாய் வர..
வேகத்தில் இயங்கும் வீடு..

பெண்ணும் பேத்தியும்..
பேச்சா..சண்டையா..??
புரியாத புதிராய் நான் முழிக்க..

சூடாக் குடித்த காபி..
சுட சுட செய்தியுடன் பேப்பர்
வெது வெது நீரில் குளியல்..
வேண்டுதல் நாளின் இனிமைக்கு..

பசித்து புசித்த காலம்..
பழங்கதையான ஏக்கம்..
மாத்திரைகள் பாதி உணவாக..
மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..

ஒற்றை வரியில் பேசிய நானோ
ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!

வலிகள் தரும் வேதனை..
விடுதலை வேண்டி ப்ராத்தனை.

கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய
நிகழும் காலம் நீளமாய்த் தெரிய
வரப்போகும் விடியல்..
விரட்டுமென் சோதனையென
விழித்தபடி படுத்திருக்கேன்..
விடிய இன்னும் நேரம் இருக்கே..
புரண்டு படுக்கையிலே..
புலப்பட்டத்து ஓர் ஒளி..
' நீ அவனில்லை..
நினைத்தை முடித்த..
நீ..அவனில்லை..'
நொடியில் மறைந்தது..
நிமிண்டிய அவ்வொளி..!!

சூரிய கிரணமும்..எனைச்
சுறுசுறுப்பாக்க..
"பழக்கம் எனக்குமுண்டு..
பழம் காய் வாங்க..
பக்கத்து கடைதானே..
பத்திரமாய் போய்வருவேன்"..
விக்கித்து நின்றாள் பெண்..
மோட்டுவளை பார்த்தவன்..
மீண்டெழுந்தேன்...
மீதமுள்ள நாட்களை..
மகிழ்ச்சியாய் கழிக்கும்..
மனத் திடத்துடனே..

வயோதிகம்..ஒரு வியாதியல்ல..மருந்து மாத்திரையுடன் தெம்பும் தன்னம்பிக்கை யும் தருவோம்.

மனம் ஒரு குரங்கு..

மனம் ஒரு குரங்கு..
( நீ செய்யும் வேலைக்கெல்லாம் பாவம் அது மேல ஏன் பழி போடறேனு மைண்ட் வாய்ஸ்)

ஒரு சின்ன incident.

கலிஃபோர்னியா லேர்ந்து ரொம்ப நாள் கழித்து ஒரு தோழி வந்திருக்கா.
நம்ம கும்பலோ பெரிசு. எப்போ யார் யார் எங்கே மீட் பண்ணப் போறோம்னு ஏற்கனவே வாட்சப்பில் ஒரு குரூப் form பண்ணி schedule போட்டாச்சு.
கிடைக்கும் கொஞ்ச நேரத்தை உற்ற தோழியுடன் எப்படி செலவழிக்கலாம்னு எல்லாரும் மாஸ்டர் ப்ளான் மல்லிகாவாக இருக்க..நாமதான் கொஞ்ச மு.கொ ஆச்சே..அழகா கோடு கட்டம் போட்டு எல்லார் பேர், அட்ரஸ் , ரூட் மேப், டைம் , மெனு ....எல்லாம் க்ரூப்ல போட்டாச்சு ( அட தேவுடானு..நீங்க சொல்றது காதில் கொஞ்சமா விழறது..)

எப்பவும் போல முதல் ரவுண்டு வேலை முடிச்சதும் ஒரு குட்டி அரட்டை அடிக்கும் தோழியின் ஃபோன் வந்தது.
எப்போதும்போல் நான் குஷியா இந்த முனையில்..
மறுமுனையில் பெரிசா ஓங்கின குரலில் 'நீ உன் மனசில என்ன பெரிய ஆளுன்னு நினைப்பா..என்னமோ உனக்குத்தான் எல்லாம் தெரியும், உன்னாலதான் ப்ளான் பண்ண முடியும்னு ரொம்ப கிடந்து ஆடறியே..அவ என் வீட்டுக்குதான்  முதல்ல வரணும். ..ஆமாம்னு சிங்கம் போல கர்ஜனை.
சரி..சரி..ஓகே..செஞ்சுடலாம்னு நான் சொல்ல..இன்னும் நிலைக்கு வராத அவள்..எதோ காலத்தில் போட்ட சின்ன சின்ன சண்டை, பூசல்  , திட்டினது வந்தது போனது எல்லாத்தையும் ஒண்ணு விடாம ஞாபகமா சொல்லி என்னை ஏச ஆரம்பித்தாள்.

சரி..அவ எதோ மனசு உளைச்சலில் இருப்பா ..நாமும் சேர்ந்து கத்தினா இன்னும் நிலமை மோசமாகும்னு நான் ஈனஸ்வரத்தில் பதில் கொடுத்தபடி இருந்தேன்.

ரொம்ப நேரம் பேசியதால் speaker on பண்ணிவிட்டுட்டேன்.

ஒரே கோவம். எப்படி இப்படி பேசலாம். இனிமே உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு மங்கம்மா சபதம் வேற எடுத்தாச்சு.

பின்ன என்னங்க..செய்யாத தப்புக்கு யாராவது திட்டு வாங்குவீங்களா?

ஏதோ ஒழுங்கா plan செய்தால், வரும் தோழியுடன் எல்லாரும் நல்ல quality time spend செய்யலாமேனு தான் மண்டை உடைச்சு போட்ட திட்டமெல்லாம்.

இப்போதான கதையில ஒரு திருப்பம்.

சாயந்திரம் walking போகும்போது பாட்டு கேட்க ஆரம்பிக்க..பாட்டுக்கு நடுவில் அவள் பாட்டும்..அதான் அவ என்னை போட்டு தாளிச்ச வசனமெல்லாம் ரீப்ளே ஆக..ஐயோ இதெப்படி ..நான் குழம்ப..
speaker off பண்ணும்போதோ..இல்ல சுவாரசியமா சண்டை போட்டபோதோ record button  on ஆகிவிட்டது போல இருக்கு.(உண்மையா.. வேணுமென்று செய்யலை..விரல் குண்டா இருக்குறதுனால் வர பிரச்சனை இது..!!!)

ஒரு நொடி..என் நல்ல மனசு சொல்லித்து..ஏய் இதை இப்பவே அழிச்சுடு..
இன்னொரு பக்கம்..' அப்படியே இருக்கட்டும். அழிக்காதே..நாளைக்கு அவள் ஏதாவது உல்டாவா பேசினால் prove பண்ண ஒரு evidence இருக்கும்.
இன்னொரு பக்கம்..சீ..சீ..என்ன கேவல புத்தி. இன்னிக்கு அடிச்சுப்போம்..நாளைக்கு சேர்ந்துப்போம். இதை முதல்ல அழி..தவறி ஆன ரெகார்டிங்..சுவடு தெரியாமல் அழியட்டும்..

இந்த மனசு இருக்கே..என்னமா டபுள்,ட்ரிபிள் ரோலெல்லாம் செய்கிறது.

ஒரே ஒரு. delete button தட்டினேன். மொபைலிலும் மனசிலும் இருந்ததை அழிக்க..அழித்தேன்..இப்போ நிம்மதியா இருக்கேன்.

P(B)ack Up

P(B)ack Up

ஒரு காலத்தில ஊருக்கு போறதுன்னா..வெறும் pack பண்ணி தான் போவோம்.
இப்போ ..back up இல்லாமல் போகமுடியுமா?

ஒரே நாள் தங்கறது என்றாலும்..ஒரு இரண்டு extra dress... எப்போ ஸ்ட்ரைக் வரும்..எப்போ ஊருக்கு போக முடியும்னு எந்த ஜோசியரும் சொல்ல முடியாது.

கணக்கா எப்படி பணம் எடுத்து போறது?
ஏதாவது அவசர செலவு வந்தால்..
ATM எல்லாம் இழுத்து மூடிட்டால்?

பர்ஸுக்குள்ள..புடவை மடிப்புக்குள்ளே..அது தனி back up..

பிஸ்கட்டுக்கு back up chips..
chips க்கு..ஒரு கடலை உருண்டை..

கண்ணாடி போடற..கண்ணம்மாக்கள்..(என்னை மாதிரி) கண்டிப்பா ஒரு எக்ஸ்ட்ரா கண்ணாடி வெச்சே ஆகணும்..எப்போ ஃப்ரேம் லேர்ந்து பிச்சுண்டு லென்ஸ் விழும் நு தெரியாது.

contact lens ..அது ஒரு எக்ஸ்ட்ரா pair.
அதுக்கு ஒரு liquid..(உஸ்..அப்பா).

எங்க வூட்டுக்காரர் மாதிரி முன் ஜாக்கிரதை முத்தண்ணா வீட்ல இருந்தா ..கேட்கவே வேணாம்.

மொபைல்..அதுக்கு ஒரு ஸ்டெப்னி மொபைல்..
அது ரெண்டிலும் இருக்கும் காலாவதியாகாத data pack..
அதுக்கு back up ஒரு dongle.
battery charger ரெண்டு.
சார்ஜ் பண்ணவே முடியாம மாட்டிக்கிட்டா என்ன பண்றது..? அதுக்கு ஒரு power bank.

நமக்கு எந்த ஊர் போனாலும்..கோயில் போய் பார்த்துடணும்..
அப்போ..பிரசாதம்..?
அது போட்டு வெச்சுக்க கொஞ்சம் zip lock..

அந்த ஒரு நாள்ள தான் நமக்கு ஏதோ பெரிய வியாதியெல்லாம் வந்துடும்னு பயத்தில் ஒரு செட் எல்லா மருந்தும்..

வீட்டில..அது தனி கதை..
எங்கியாவது லேட்டா போச்சுனா என்ன செய்யறது..?
back up க்கு தோசை மாவு..அடை மாவு..
( இதுக்கு நீ இங்கேயே இருனு என் வலக்கரம் இடி வேற..)

முக்கியமா..சொல்ல விட்டேனே..
வீட்டுச் சாவி🔑
handbag ல ஒண்ணு..ட்ரஸ் பையில் யாருக்கும் தெரியாம ஒளிச்சு ஒண்ணு..
ரெண்டுமே காணாமல் போனால் என்ன செய்யறது..?
எதிர்த்த வீடு..கீழ் வீடு..
இப்படியாக..back up உடன் நான் pack செய்ய..

"ஒரு நாள் trip தானே..? ..ஐயோ..அது சொல்ல மறந்தேனே..😱
இப்போ பஸ்ல வாங்கின டிக்கட்ல  போறதா..
எங்கியாவது காவேரி ப்ரச்சனைனு பஸ் ஓடாட்டி என்ன செய்யறதுநு back up.ஆக வாங்கி வெச்ச train ticket ல போகறதா?...

over make up ம்...over back up ம்..என்னிக்கும் worry தான் தரும்.( சும்மா..டி.ஆர்.ஷ்டைல்)
சரிதானே?

Sunday, December 22, 2019

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 '25 தானே.'.
இல்ல்..லை 32..
டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.
என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை
  tally ஆனதே இல்லை..
சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..
சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..
வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..
அரைக்கிழம் ஆனபோதும்..
ஆசை விடுவதில்லை..
ஆடி அசைந்து செல்லும்..
பெட்டிகளின் கணக்கு
பெரும் புதிரே என்றுமெனக்கு..
ஒண்ணு.இரண்டு ..மூணு..
எண்ணத் தொடங்க..
அம்மா..ப்ளீஸ் என்றாள்..
அவளுக்கென்ன தெரியும்..
அதிலிருக்கும் மகிழ்ச்சி..
அடப்போடா..
யார் பார்த்தால் என்ன..
தொடர்ந்தேன்..
நாலு..அஞ்சு..ஆறு..

கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..
கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..
கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..
போனது போகட்டும்..
புதுசாய் துவங்குவோம்..
புது வருடக் கணக்கை
Advance happy new year friends

Saturday, December 21, 2019

முள்ளண்டிரம்

ஊரும் உறவும் கூடி நடத்திய குடமுழுக்கு விழா

குடமுழுக்கு,கும்பாபிஷேகம்,ஜீர்ணோத்தாரணம்.. இப்படி பத்திரிகை வீட்டுக்கு வந்தால் என்ன செய்வோம்?
நமக்கு தெரிந்தவர் கொண்டு வந்து கொடுத்தால் ஒரு நூறோ இருநூறு கொடுப்போம். எங்கோ நடக்கிறது..போகிற அன்று உண்டியலில் பணம் போட்டு விடலாம் என தள்ளிப் போடுவோம்.
கும்பாபிஷேகம்.அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்று போகத் தயங்குவோம்.

இப்படித்தான் நானும் எங்கள் குடும்பமும் இருந்தோம் மூன்று ஆண்டு முன்பு வரை.

எங்கள்  குடும்பங்களில  குழப்பமும் குறைகளுமே நிரம்பி வழிய..வழி என்ன இதற்கு என்று தேடிய போதுதான் விஷயம் அறிந்தோம். குலதெய்வ வழிபாடு சரியாக நடக்கவில்லை என்று.
ஒவ்வொரு தலைமுறைப் பெரியோரும் ஒவ்வொரு கோயில் பேர் சொல்ல..பொதுவாக எல்லாருமே உச்சரித்த பெயர் ' முள்ளண்டிரம் பெருமாளும் சிவனும்'. (வேலூரிலிந்து 30 to 35 km)
இதென்ன பெருமாளும் சிவனும்..கேள்வி எழுகிறதா?
ப்ரசன்னம் போட்டு பார்த்து பல வகை ஆய்வுக்கு பின் முள்ளண்டிரம் ஊரில் இருக்கும் கோயில்கள் தான் முன்னோர் வழி பட்டது எனத் தெரிய வந்தது. அருணகிரி நாதரும் அப்பய தீக்ஷதரும் சிறப்பித்த பாடல் பெற்ற தலம் என்று அறிந்தோம்.

குல தெய்வம்  கோயிலை தரிசிக்க படையெடுக்க..் கண்முன்னே கண்டது
 புதர் மண்டிய பெருமாளும் சிதிலமடைந்த சிவலிங்கமும் தான்.
களையிழந்த கர்ப்பக்கிரஹம், ஒட்டடை மாலையில் உலகை அளந்த எம்பெருமான்.
அலங்காரப் பிரியன் அலங்கோல நிலையில் கண்டு அதிர்ந்தது ..அழுதது இதயம்.
வெளவால்கள் ஆக்கிரமித்த இடத்தை..அங்கிருந்த பொருள்களை வைத்து சுத்தம் செய்து, கிடைத்த மலரை சூட்டி, விளக்கு ஒன்று ஏற்றி வைத்து..மனமுருக வேண்டினோம் மனக்குறைகள் தீரவே..இது நடந்தது 2016 ம் ஆண்டு.
அயர்ந்து தூங்கும் போதும் அரங்கனும் சிவனும் நினைவினிலே..
எங்கேயிருந்து தொடங்குவது?
அடுத்து என்ன? கேள்வி மலையாய்த் தெரிய..
மனது இறங்கினான். வழியும் காட்டினான் அரங்கன்.
பல தலை முறையைச் சேர்ந்த குடும்பங்கள் ஒன்றானோம்.ஒரே ஒரு இலக்கு.
 கோயில்கள் கட்டுவது ...கட்டியே தீர்ப்பது என்று
அரசு சம்பந்தப்பட்ட வேலை , கட்டட வேலை, நிதி திரட்டுவது, ஸ்தபதி, சிலை வடிவமைப்பு என்று பல வேலைகள் வரிசையில்.
மலையாய் தெரியும் துயரெல்லாம் பனி போல விலகச் செய்யும் பெருமான்..ஒவ்வொன்றுக்கும் வழி வகுத்தான்.
இருண்டு கிடந்த ஊர் பிரகாசமாகத் தொடங்கியது. ஊர் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில். நம்மூரு கோயில் பழையபடி நல்லா ஆகணும் என்று ஒவ்வொரு அடியிலும் கை கொடுத்த #ஊர்மக்கள் அன்பு, ஆதரவு..என்ன சொல்வேன்.
#முள்ளண்டிரம்_இளைஞர்கள் இழுத்து போட்டுக் கொண்டு வேலு ,அன்பு என்ற இருவரின் தலைமையில் கல் பொறுக்குவதிலிருந்து, கற்சிலைகள் தூக்கி,கட் அவுட் வைப்பது, அன்னதானம்  வரை..அவர்களின் பங்கு சொல்லி மாளாது.

வீட்டில் நடக்கும் ஒரு கல்யாணத்தில் எத்தனை இடைஞ்சல்கள் , அவதிகள் வருமோ எல்லாம் பன் மடங்கில் இங்கே.
இடையூறுகள் எல்லாம் உடைத்து..கருவறை யில் குடியேறினான் பால வரதராஜப் பெருமான் ஸ்ரீதேவி பூதேவியுடன் சென்ற ஞாயிறன்று.
கும்பாபிஷேகம் நடக்க..குடும்பத்தில் எல்லார் கண்களும் நிரம்பியது குளமாய் ஆனந்தக் கண்ணீர்.

செய்யமுடியுமா..என்று நினைத்தோம். எங்கள் குடும்பத்தை கருவியாக்கினான் வரதன்.
குடும்பங்களைக் காக்க கோயிலுக்குள் மீண்டும் பொலிவுடன் இப்போது.

பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி,இன்று புனருத்தாரணம் வரை வடமிட்டு அவன் இழுக்க ,
வருவோரும் போவோரும் கூட உதவிக் கரம் நீட்ட உருவாகியது ஊருக்குள் உறங்கிக் கிடந்த எம்பெருமான் ஆலயம். கம்பீரமாய் இப்போது..
வரதன் வந்து விட்டான்..
அடுத்து சிவன் கோவில் வேலை ஆரம்பமாகும் சில நாளில்.
ஓய்வு பெற்றதும் என்ன செய்ய்ப் போகிறோம் என்று பலர் யோசனையில் நாட்கள் கடத்த என் அருமை அண்ணா ஷங்கர் பலருடைய ஆதரவு திரட்டி இக்கோயில் திருப்பணி செய்தது ,அதில் என்னையும் அணில் போல சேர்த்துக் கொண்டது.
முதல் முறையாக அஷ்டபந்தன கும்பாபிஷேகம் அருகில் இருந்து பார்த்து..படங்கள் எடுத்து..
சிறு உதவிகள் செய்ய அருள் பாலித்தான். இந்தப் பிறவியில் வேறென்ன வேண்டுமென்று வேண்டுவேன்?

பலம் கொடு பகவானே அடுத்த கோயிலையும் புனருத்தாரணம் செய்து முடிக்க என்ற தொடரும் வேண்டுதல்கள்.
ஊரும் உறவும் ஒன்று கூடினால்..
முடியாதது எதுவும் உண்டோ?

#ஒற்றுமையாய்_வாழ்வதாலே_உண்டு_ நன்மையே..கண்கூடாகக் கண்டேன் முள்ளண்டிரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில்.

சந்திப்போமா..இன்று சந்திப்போமா..

சந்திப்போமா..இன்று சந்திப்போமா..

அங்கங்கே தலை காட்டிய வெள்ளிக் கம்பிகளுக்கு 'டை ' அடிச்சாச்சு.. எந்த புடவை பாந்தமா இருக்கும்..தேடலுக்கு பின் தேர்ந்தெடுப்பு ஒரு சிவப்பு கறுப்பு புடவை..
ஃபோட்டோவில் இருப்பது போல இருக்கணுமே ..ஒரு கவலை..சின்ன விபூதிக் கீற்று பயம் போக்க இட்டாச்சு..வாட்ச் வடிவில் அம்மாவையும் கூட கூட்டிண்டாச்சு.
என்ன வாங்கிண்டு போகலாம்..?.பழமா..பலகாரமா..
வென்றது பழம்..பொறுக்கி எடுத்து வாங்கியாச்சு..புஸ்தகம் நிறைய படிப்பார்னு கேள்விப் பட்டிருக்கோமே..சரி ..புக் ஹவுஸில் ஒரு மேய் மேய்ந்து மனசுக்கு ஓகேனு சொன்ன ஒரு எழுத்தாளர் படைப்பை pack செய்தாச்சு..
எதில் ஆரம்பிக்கலாம்  பேச்சை...? இதுவரையில் எழுத்தில் தானே அறிமுகம்...
இந்த சந்திப்பு ஒரு மிக சந்தோஷமான ஒன்றாக இருக்கணுமே...ஆட்டோ பிடித்த வேளை..லேசாக ஒரு excitement. அபார்ட்மென்ட் வாசல் இறங்கியதும் பேரும் ஃபோட்டோவும் பிடித்த  செக்யூரிட்டி 'உள்ளே காத்திருக்கிறார்கள்' வழி சொன்னான். பிள்ளையார் சிலை ஒன்று போய் வா உள்ளே என்றது..வழியெங்கும் வண்ணப் பூக்கள்..சிவப்பாய் ஒரு மைக் பூ ஒன்று தலையாட்டி வரவேற்க..துறு துறு கைகள் காமிராவில் படம் பிடிக்க..அங்கே அழகான குழலூதும் கண்ணன் முன்  கானமிசைத்தபடி அங்கிருந்த வயதில் மூத்தோர்..
மணிகளும் தோரணமும் தொங்கும் வாசல் முன் நிற்க..படபட மனசை அடக்க..மணிச் சத்தம் கேட்டு வந்து திறந்தாள் ..பதிவுகள் மூலம் பரிச்சயமான saraswathi..நம்ம் Mythili Varadarajan  aunty ந் வலது கரம்.

எங்கே வந்தேன்னு புரிஞ்சதா..great meeting with such a wonderful fb friend Mythili Varadarajan aunty.

'உன்னை first time பார்க்கிற மாதிரியே இல்லையே.'.அவர் உதிர்த்த முதல் வாசகம்..சந்தோஷம் சந்தோஷம்.அப்பப்பா...
பேச்சு..பேச்சு..பேச்சு..
அடக்க முடியாமல் ஃபோட்டோ எடுக்கும் போது சிரித்துத் தள்ளும் Mythili aunty. கன்னடத்தில் செல்லமாய் கண்டித்த சரஸ்வதி..
அவரது அக்கா சரயூ aunty வீடு..
வீடல்ல..அது ஒரு அழகான art gallery.. ஒரு கோயில் போல..எல்லா ஊர்களையும் ஒரே இடத்தில் சுற்றி வந்த பிரமிப்பு..
பசுமையான செடிகள் தொட்டிகளிலும்.. தொங்கிக் கொண்டும்..
ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்.

நேரம் போனதே தெரியவில்லை..
மீண்டும் வந்து meet பண்றேன்..வாக்கு கொடுத்தபடி மனசில்லாமல் நான் கிளம்ப..
வீட்டில் கொடியிலிருந்து வெத்தலை பறித்து தாம்பூலம் கொடுத்து மிக அன்பாய் வழியனுப்பிய அவர் அக்கா.. (அந்த வெத்தலை மென்ற சுகம்..இன்னும் நாக்கில்)
வாசலை அடைவதற்கு முன் ..Facebook status போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட...ஒரு அருமையான நட்பை..
.என்ன தவம் செய்தனை..இத்தனை அன்பும் ஆசையும் கிடைக்கச் செய்த மார்க்குக்கு ஒரு சலாம் ..
FB உங்களைப் பொறுத்த வரை என்ன என்று பதிவில் கேட்டிருந்த Shankar Rajarathnam sir..
பதிவுகளும்..அதைத் தொடரும் unconditional அன்பு காட்டும் இந்த பந்தங்கள் தான் என் பதில்.

ஒரு வாண்டுக் கூட்டமே..

ஒரு வாண்டுக் கூட்டமே..

ஒரு குட்டி story telling session with very sssmall kutties . the story selected was Happy Prince by Oscar Wilde. power point ல் அழகா படமும், குட்டி குட்டி sentence ல் கதையுமா ஒரு presentation.
4 to 7 வயசு வாண்டூஸ்..first slide பார்த்ததுமே ஒரு வாண்டு 'aunty i know this story.. I will tellனு ஒரே enthu.கண்ணா கொஞ்சம் இருப்பா..எல்லாருக்கும் தெரியாது இல்ல..aunty சொல்வேனாம்..ஓகே வா..என்றதும் அரை மனசோடு தலையாட்டி இப்போ கேள்விக் கணைகள் தொடுக்க ரெடி ஆனான் சித்தார்த். கதை இதுதான். ஒரு happy prince  இருந்தான். அவன் இறந்ததும் அவனுக்கு ஊரின் நடுவில் சிலை வைக்கப்படுகிறது. சிலையில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்படுகிறது. கண்ணில் blue sapphire, வாளில் red ruby , சிலை முழுதும் தங்கத்தால் ஆன இலைகள். நாள் முழுதும் தன் மக்களைப் பார்த்துக் கொண்டே இருந்தான்..அவனிடம் வந்து சேர்ந்த பறவையின் உதவியுடன் தன் நாட்டில் கஷ்டப்படுபவருக்கேல்லாம் தன் சிலையிலிருந்த  ஒவ்வொரு precious stone and தங்க இலைகளை கொண்டு சேர்க்க சொன்னான்..அதில் மிகுந்த சந்தோஷம்.அடைந்தான்..சிலையிருந்த செல்வம் முழுவதும் தீர்ந்தது.
.பறவையும் இறந்தது.சிலை இப்போது சீக்காளி போல தோற்றமளிக்கவே...ஊர் மக்கள் அந்த சிலையைத் தகர்த்தனர்..இப்படி போகும் கதை..
என்ன ஒரு அருமையான கதை..தன் மக்கள் கஷ்டப்படுவதைக் காண முடியா ஒரு இளவரசன்..இருந்ததெல்லாம் வாரிக் கொடுத்த வள்ளல்.
வாண்டுகளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு இந்த கதை..why ் aunty that happy prince died?..how can the statue speak?..
statue பேசறதே..அதுக்கு பசிக்காதா..பல முரண் கேள்விகள் கேட்டாலும் ..எல்லாக் குட்டீஸுக்கும் பிடிச்சது அந்த swallow bird ம்..அந்த happy prince னுடைய caring heart and how he found happiness in helping others ம் தான்..
OK..OK..now tell me..how do  you care for others? கேட்டதுதான் தாமசம்..நான் நீன்னு..போட்டி போட்டபடி..
முதல் வாண்டு..
aunty..you know yesterday i helped my friend who forgot to bring his pencil box..
நான் சொல்றேன்..நான் சொல்றேன்னு கை தூக்கியபடி இன்னொரு வாண்டு..aunty ..i helped one Anna in my apartment who fell down while he was playing..கேட்க கேட்க மனசு ரொம்ப குஷியாச்சு..இந்த குட்டீஸ இதே் நல்ல மனசோடு  இருக்கணுமேனு ஒரு கவலையும் எட்டிப் பார்த்தது..
lastly ஒரு சின்ன project. they have to arrange the paper cuttings of the story in a proper order. அது group activity.
சொன்ன கதையை அழகா ஞாபகப்படுத்தி , வரிசையா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படம் எடுத்துத் தர..கொஞ்சம் பெரிய வாண்டு அதை எல்லாம் ஒட்டி..திருப்பி action replay கதை சொல்ல..இனிதே முடிந்தது..எங்கள் story telling session.
Real happiness lies in making others happy and nothing is more precious than a heart that cares for others.
வாழ்க்கைப் பாடம்..வாண்டுகளோடு நானும் கற்றேன்..

ஆஹா..காந்தி மகான்..

Thanks Shiv K Kumar Sir..

 எச to Your morning post
ஆஹா..காந்தி மகான்..

அஹிம்சை எல்லாம்
இம்சை என்றோம்..
non violence என்பதை
'நான் violent 'என்றோம்..
சாந்தி என்ற சொல்லே
சங்கடமென நினைத்தோம்

தூளி ஆட்டி ..
தாலாட்டுப் பாடி
தட்டிக் கொடுத்தோம்..
தூங்கட்டுமே ..
உண்மையென்றோம்..

பொய் பேச
கூச மாட்டோம்..

காந்தி ஜயந்தியன்று
காந்தி புகழ் பாடுவோம்..
ஆஹா.
காந்தி மகான் என்போம்..

காகத்தின் உறைவிடமாம்
காந்தி சிலையெல்லாம்..
காணுமே புதுப் பொலிவு..
கலர் கலர் மாலையிலே

தேடாதே..சிலை ஓடி..
தோண்டி எடு ..உன்னுள்ளே
தூங்கிக் கிடக்கும்
காந்தி மகானை..

கல்லாய்_இருந்தேன்

#குறுங்கதைப்_போட்டி.

#கல்லாய்_இருந்தேன்...

" கலை ' சிற்பக்கூடம்.
மகாபலிபுரம் கடற்கரை அருகில் அமைந்த ஒரு புகழ் பெற்ற சிற்பங்கள் செய்யுமிடம்

உளியின் ஓசையில்லாது ஒரு நாளும் இருந்ததே இல்லை.

ஸ்தபதி ராமன். அவர் கை பட்டால் போதும் உயிரோட்டமுள்ள ஒரு சிற்பம் உருவாகிவிடும்.
வேலையாட்கள், வருவோர் போவோர் என ஜே ஜேனு எப்பவும் இருக்கும் அவர் இடம்.

பக்கத்திலிருக்கும் சிற்பக் கூடமெல்லாம் பொறாமையில் பார்ப்பார்கள் இந்தக் கடையை.

அன்று.. அந்த பெரிய கார் வாசலில் வந்து நிற்க..அதிலிருந்து இறங்கிய பெரிய மனிதர்..அவருடன் புடை சூழ அவர் உதவியாளர்கள்.

கூடமே பரபரப்பானது.
அவர் உதவியாளர்கள் தங்கள் கையில் இருந்த ப்ரிண்ட்டை காண்பிக்க ஸ்தம்பித்து போனார் ஸ்தபதி ராமன். ' "இத்தனை அழகான லக்ஷணமான சிற்பங்களின்  டிசைன்கள்.

' இதை முடிச்சு கொடுங்க..வீட்டுக்குள்ளே ஒரு சின்ன கோயில் கட்டுறோம். உங்க திறமையைப் பார்த்து தான் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். எல்லா சிற்பங்களும் அருமையா வரணும் ' சொல்லிக் கொண்டே..அவர் அட்வான்ஸாக தந்தார் ஒரு தொகை.

பெரிய இடத்து ஆர்டர் என்பதால் ஒவ்வொருவரும் மிகுந்த சிரத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்தனர்

நானும்  உருவாக ஆரம்பித்தேன்.

"எனக்கு ஒரே ஆர்வமா இருக்கும் .. இவர்கள் என்னை முழுமையாக செய்து முடித்ததும் எப்படி இருப்பேன் என்று..கனவுலகில் நான் இருப்பேன்.

 பக்கத்து கூடச் சிற்பிகளெல்லாம் தினமும் ஒரு முறையாவது என்னை வந்து எட்டி பார்த்துட்டு போவாங்க..மூக்கும் முழியுமாக நான் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்ந்தேன்..

ஸ்தபதி ராமனுக்கு ஏகப்பட்ட ஆர்டர் குவிய..தான் மட்டும் அதில் லாபம் ஈட்டணுங்கற எண்ணமில்லாமல்.. தன்னோட பக்கத்தில் கடை வெச்சிருந்தவங்களுக்கும் சிறு சிறு வேலைகள் தருவார். நல்ல மனுஷன்.

சிலைகள் எல்லாம் அம்சமாக ரெடியாச்சு.

 மற்ற  சிலைகளெல்லாம் ஒவ்வொண்ணா  வண்டில போயாச்சு.

  ஜல வாசம்,தானிய வாசம், ரத்தின வாசம்னு இருக்க நானும் தயாராகிக் கொண்டிருந்தேன்.
 
  ஆனால்..நடந்ததோ..?

 அன்னிக்கு வந்த நியூஸ் பேப்பர் இடி ஒன்றைப் பெரிதாக தாங்கி வந்தது.
 எங்களையெல்லாம் செய்யச் சொன்ன பணக்காரர் சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டாராம்.

 எங்க ஸ்தபதி உடைஞ்சே விழுந்துட்டாரு. முதலில் வாங்கின அட்வான்ஸுக்கு அப்பறம்..வேலையை முடிச்சப்பறம் மீதியை வாங்கிக்கலாம்னு நினைச்சவர் நினைப்பில் மண் விழுந்தது.

 பெரிய மனுஷர் வீட்டில யாரையும் தொடர்பும் கொள்ள முடியல..

 ஒடிஞ்சு போய்ட்டார் ஸ்தபதி. எத்தனை உழைப்பு..எல்லாருக்கும் கூலி கொடுத்து , கடனை அடைச்சு...அப்பப்பா அவர் பட்ட கஷ்டம்.

 ' என் உயிரைக் கொடுத்து உன்னை செஞ்சேன்..நீ ஒரு நல்ல இடத்திற்கு போகணும்னு நினைச்சேன்' தழுதழுக்கும் குரலில் என்னைப் பார்த்து சொல்லியபடி
 கடையின் ஷட்டரை இழுத்து பூட்டி விட்டு என்னை வெளியே நிற்க வைத்து விட்டு போனவர்தான் ..அப்புறம் வரவே இல்லை..

 தெய்வமாகிட்டார்னு எல்லாரும் பேசிக்கிறாங்க..
 இனிமே..என்னோட நிலை?

 ஸ்தபதியின் ரெண்டு பசங்களும் அமெரிக்காவில் செட்டில் ஆனவங்களாம். அவங்களுக்கு இந்த சிற்பக் கலை பத்தியே ஒண்ணும் தெரியாதாம். அதனால் பக்கத்து கடைக்காரர் கிட்ட அவங்க ஃபோன் நம்பரைக் கொடுத்துட்டு போயிருக்காங்க..
யாராவது வந்து கேட்டால் என்னை விலை பேசி முடிக்க..

விலை கொடுத்து வாங்க யாரையும் காணோம்!
ஒரே ஒரு அலை வந்து என்னை இழுத்துச் செல்லக் கூடாதோ?
காத்திருக்கேன் நானும்..🙏

Live the present

live the present

வெளியூரிலிருந்து வந்த வூட்டுக்காரர் டமால்னு ஒரு வெடிகுண்டு போட்டார்.

ஆட்டோக்காரருக்கு இன்னிக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தேன்.

' ஐயோ ராசா..மெளனராகம் கார்த்திக் ஸ்டைலில் Mr. ராமசாமி..Mr.ராமசாமினு முள்ளங்கி பத்தை மாதிரி இரண்டாயிரமானு நானு துரத்த..என் BP high ஆகிட்டு சொல்றேன் இருனு ஆரம்பிச்சார்.

வழக்கம்போல ட்ரெயின் லேட்டா வர ஆட்டோ தேடிய வேளையில் எல்லாரும் சகட்டு மேனிக்கு விலை ஏத்த ..ஒரு முஸ்லீம் ஆட்டோக்காரர் ( இங்கே அவர் மதம் நமக்கு தேவையில்லை)
'சார் வாங்க இருனூற்றைம்பது கொடுங்க போதும் என்றாராம். இவரும் ஏற..வழியெல்லாம் ஒரே டென்சனாய் அவர் ஓட்ட..தானே என்ன தோன்றியதோ இவரிடம் புலம்ப் ஆரம்பித்தாராம்.

 ' என் மனைவியை இப்போ டெலிவரிக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கேன் . மூவாயிரம் காலைல பத்து மணிக்குள் க்ட்டணும் . சிசேரியன் செய்யணுமாம். என்கிட்ட காசு இல்ல சார். சொந்த பந்தம் நட்பு எல்லார்க்கிட்டயும் கேட்டேன் ..கை விரிச்சுட்டாங்க..இன்னிக்கு ராத்திரி பூரா ஓட்டினா எனக்கு எப்படியும் காசு கிடைச்சுடும். அதுக்காக அடாவடியா காசு கேட்க மாட்டேன்.
ஒரு தகப்பன் , கணவனுக்குரிய பதட்டத்துடன் அவர் பேசிக் கொண்டே வந்திருக்கார்.

வீடு வந்தாச்சு. இவர் எடுத்துத் தந்தார்..இரண்டாயிரம் ரூபாய். 'சார்..என்கிட்ட சேஞ்ச் இல்லையே..என்று அவர் சொல்ல..சீக்கிரம் மீதியை சம்பாதிச்சுட்டு ஹாஸ்பிடல் போங்க என்று கூறிய இவர்
..' பொண்ணு பிறந்தால் 'சோனா'(sona) நு வைங்க என்று வாழ்த்திட்டு வந்திருக்கார்.
sona  என்றால் ஹிந்தியில் தங்கம்..

தன்னுடைய அம்மாவின் திதிக்காக வந்தவர் ..தன்னலமே இன்றி வாழ்ந்த அவர் அம்மாவுக்காக இதை விட வேறு என்ன செய்ய முடியும்?
அவர் அம்மா..என் மாமியாரின் பெயர் தங்கமணி.

எப்பவும் ஃபோட்டோவில் இருந்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும் என் அம்மா..அன்பை அள்ளித் தந்த என் மாமிியார் இருவருடனும்  அடிக்கடி பேசுவேன்.

நேற்று கூட கேட்டேன்..' தங்கமணி..நீ நாளைக்கு வருவியே..உன்னை எப்படி நான் அடையாளம் கண்டு பிடிக்கிறது ' என்று.
அவள் ..எப்போதும்போல் அவள் பாணியில் காட்டி விட்டாள் போலிருக்கு.

'ஏம்ம்ப்பா..ஃபோன் நம்பர் வாங்கிண்டேளா'னு நான் கேட்டேன்.
' எதுக்கு ..உனக்கு செக் பண்ணணுமா ' என்றார்.
இல்லை இல்லை...அங்கே 'சோனா'  வா..இல்ல 'சோனு' வானு தெரிஞ்சிக்கத்தான் ' என்றேன்.

இது என்ன சொந்த சிந்து பாடவா இந்த்க தளம்னு கேட்க்கலாம்.

நம் ..மத்யமர் மனம்.. ' செய்த தர்மம் தலை காக்கும் ' அது future tense

 தக்க சமயத்தில் உயிர் காக்கும் ..காக்கணும்னு ' என்பது present.

(ஆட்டோக்காரரே..நீங்க நல்லவரா இருக்கணும்..நல்லபடியா இருக்கணும்..
என் அம்மாவும்( மாமியாரும்) இன்று உன் குடும்பத்தை வாழ்த்துவாள்.

Friday, December 20, 2019

போவோமா_2047

#ஸண்டே_ஸ்பெஷல்
#போவோமா_2047

' ஹாய்..பாட்டி..wazzup? ' பேரன் கேட்டதுமே பரவசமடையும் அகிலா பாட்டி.
மூட் அவுட்டில் இன்று.

 உர்ருனு உள்ளங்கையில் attach ஆகி இருக்கும் சோலார் எனர்ஜி ஆபரேடட் மொபைலை முறைத்தபடி இருந்தாள்.

பிள்ளையை திட்டியபடி உள்ளிருந்து வந்தாள் அகிலாவின் பெரிய பெண் மது.

" டேய்..டேய்..எல்லாத்துக்கும் காரணம் நீதாண்டா..இந்த hi tech மொபைல எதுக்குடா வாங்கி குடுத்த பாட்டிக்கு?'

அம்மா..பாட்டி always wants to get connected '
எப்பப்பாரு மொபைலும் கையுமா சுத்தறானு நீ கத்திண்டே இருந்தியா..i got an idea. அதான் பாட்டி palm ல் permanent ஆ அட்டாச் ஆகி இருக்கற மாதிரி வாங்கிக் கொடுத்தேன்.
 இதை பாட்டியோட palm size க்கு key board பண்றதுக்குள்ளே பட்ட பாடு எனக்கில தெரியும்?'

'அது சரி..அதுல ஒரு feature add பண்ணியிருக்கேனு சொன்னியா பாட்டிக்கு?
கடுப்பில் மது.

" yes. பாட்டிக்கு தெரியுமே.careful ஆ யூஸ் பண்ணுனு சொல்லிக் கொடுத்திருக்கேனே.  what's the problem now? '

'அதையேன் கேக்கற .
இன்னிக்கு பாட்டியோட மத்யமர் க்ரூப்ல யாரோ பால் காய்ச்சறது எப்படினு போஸ்ட் போட்டாளாம். 'இது ஒரு போஸ்ட் ..அதுக்கு ஒரு லைக்கு..அந்தக் காலத்துல நாங்கள்ளாம் ..பாட்டியோட மைண்ட் வாய்ஸை அது டைப் அடிச்சுடுத்தாம்'

"அப்புறம் என்னாச்சு?'

" எல்லாரும் பாட்டியை unfriend பண்ணிடப் போறாளோனு பயத்துல இருக்கா. கமெண்ட் டிலீட் பண்ணலாம்னா ..இங்கே இருக்கிற ஸ்னோஃபாலில்  சோலார்  மொபைலும் சார்ஜ் ஆகல..'

"தாத்தா..தாத்தா..why can't you help her. you know her life line is madhyamar'

இளையராஜா சிம்ஃபொனி கேட்டுக்கொண்டே தாத்தா ..ஒண்ணும் பண்ண முடிலனு ..ஒன்றரை மணி DD news கணக்கில் சைகை காட்டிட்டு..தலையாட்டலை continue பண்ண ஆரம்பிச்சுட்டார்.

'  கை வலிக்க ஒரு காலத்தில டைப் அடிச்சசேன்..அப்புறம் கரடியா கூகிள் வாய்ஸ்ல கத்தி கத்தி டைப் அடிச்ச்சேனு அன்னிக்கு கதை கதையா சொன்னா. அதான் செளகரியமா இருக்கட்டுமேனு மைண்ட்ல நினைக்கறதை அப்படியே டைப் ஆகும் புது டெக்னாலஜி இருக்கிறதை வாங்கிக் கொடுத்தேன் . இது இப்படி பிரச்சனை யில் கொண்டு போய் விட்டுடுத்தா?
"ok..I will take care '
என்று சொன்னபடி..
' பாட்டி உன்னோட ப்ராப்ளம் இப்போ சால்வ் பண்ணித் தரேன்..நீ போய்..உன் கையால..சுடச் சுட..

கூல் டவுன் ஆன பாட்டி..கிச்சனுக்குள் போக..

" அனிருத் வந்து சரி பண்ணித் தரேன்னுட்டாண்டி..இனிமே அம்மா நார்மல் ஆகிடுவா'..மது அவள் தங்கைக்கு status update செய்து கொண்டிருக்க..

காலிங் பெல் சத்தம்..

"அம்மா..யார் வந்திருக்கா பாரு..'

ஓடி வந்தவள் ..ஆச்சரியத்தில் திக்கு முக்காடிப் போனாள்..

அங்கே..அவள் மத்யமர் ஃப்ரண்ட்ஸ்..

" are you OK? ரெண்டு நாளா க்ரூப் பக்கமே நீ காணலை..அதான் கிளம்பி வந்துட்டோம்ப்பா உன்னைப் பார்க்க..'

அவர்கள் பேசப் பேச..ஆனந்தக் கண்ணீரில் அகிலா..

' இந்தாங்கோ..உங்க எல்லாரோட favourite .'

#உப்புமா தட்டை நீட்டியபடி அம்மாவின் உற்சாகத்தை ரசித்தபடி ..மகனுக்கு கண் ஜாடையில் நன்றி சொன்னாள் மது.

வருஷம் ஓடினாலும் மாறாதது..
#மணம்_மிகுந்த_மத்யமர்_நட்பும்..
#உப்புமாவும்.தான்..

'

Thursday, December 19, 2019

வயசுக்கோளாறு

#வயசுக்கோளாறு

' நடந்தெல்லாம் போய்ட்டு வர முடியாது'
சண்டை போட்டது சின்ன வயசில்

' அதுக்கென்ன ...பொடி நடையா போய்ட்டு வந்துடறேனு'
 சொல்றது இப்போ..

அரை சதம் அடிச்சதும் 😁😀

Tuesday, December 17, 2019

மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை

Happy children's day..

(தங்கிலீஷில் எழுதிட்டேன்..மன்னிச்சு மக்களே)

மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை..

ipad ல் ஆழாமல்
eye ஆக காக்கும்
 அப்பா அம்மா..

மெகாசீரியலுடன்
மூக்கை சிந்தாது
'midas touch' கதையால்
மகிழ்விக்கும் பாட்டி

senior citizen group ல்
சிலாகித்து போகாமல்
சீராட்டி ..காரோட்டி
விளையாடும் தாத்தா

அஞ்சலி.படம் போல
அண்ணா..அக்கா
சுத்தி சுத்தி வரும்
சித்தி அத்தை எல்லாம்

பின்னலும் பாவாடையும்
பளிச்செனெ அலங்காரம்
பாங்காய் செய்யும் மாமா..

'குடும்பமும'் 'வம்சமும்'
கூவிக் கதறாத டீவி.

வட்டமாய் அமர்ந்து
வேடிக்கை பேச்சோடு
வேளா வேளைக்கு
வயிற்றுப் பசியாற்றல்..

school எப்போதும்
cool ஆன இடமாச்சு..

குழந்தைகள் தினமதிலே
கொத்தாய்ப் பூக்களுடன்..
கொள்ளை அன்புடனே
கொண்டாடும் ஆசிரியர்..
fete உண்டு
photo உண்டு
போட்டிகள் உண்டு..
tasty food உண்டு.

இப்படி வளர்ந்தனரே
என் வீட்டுச் செல்லங்கள்..
திரும்பிப் பார்க்கிறேன்..
திரும்பி வரா நாட்களை..

சேமித்தது போதும்..
செலவழித்து மகிழுங்கள்
செல்லப் பொடிசுகளுடன்
கைகோர்த்தே காலமதை.

போனால் வராது..
பொன்னான நேரமிது

கிளிகள் பறந்து போகும்..
கிடக்குமே நினைவிலென்றும்
நித்தமும் கொண்டாடிய...
குழந்தைகள் தினம்தானே..

Happy children's day

கடிதம்

#எழுதுகிறேன் ஒர் கடிதம்- சீஸன் 3
2 வது கடிதம்

அன்புள்ள ஆனந்திக்கு

அம்மா எழுதுவது. புது ஊர் எப்படி இருக்கு?
கடையெல்லாம் பக்கத்தில் இருக்கா? குழந்தைகளுக்கு புது இடம் பிடிச்சிருக்கா?
ஸ்கூல் போய்ட்டு வருவது வசதியா இருக்கா?
அங்கே குளிர்காலம் முடியட்டும். நானும் அப்பாவும் வந்து கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசையா இருக்கு.

நீ இருக்கிற ஊரில் தான் இப்போ நம்ம சுப்பு அத்தை இருக்கா. அங்கே புதுசா , நிறைய வசதியோட முதியோர் இல்லம் ஒண்ணு இருக்கே. அதிலதான் இப்போ இருக்கா. மணி,ரவி ரெண்டு பேரும் அமெரிக்காவில் செட்டில் ஆகியாச்சு. மீனா துபாய்ல் இருக்கா. அத்திம்பேர் தவறிப் போனப்பறம் பாவம் அத்தையை இங்கே பார்த்த்துக்க யாரும் இல்ல. பெரிய வீட்டில் தனியாவும் இருக்க முடியாது. அப்பா கூட இங்கே எங்களோட வந்து இருக்கச் சொன்னா. ஆனா..வீட்டை வித்து எல்லாரும் பங்கு போட்டு இப்போ அத்தையை உங்கூரில் அந்த இல்லத்தில் சேர்த்துட்டு போய் இருக்கா.

நீ அங்கே வந்ததை சொன்னப்போ அத்தை ரொம்ப சந்தோஷப்பட்டா.
உனக்கு இது பிடிக்காதுனு தெரியும். இன்னும் பழசையே நினைச்சு உறவுகளை ..அதுவும் வயசானவர்களை நாம உதாசீனப் படுத்த கூடாது.

அந்த நாள்ல எல்லாரும் அத்தையை சுத்தி இருந்த காலத்தில் உன்னை  'ஒத்தை பொண்ணு நீ..உறவெல்லாம் உனக்கென்ன தெரியும்'னு எதோ ஒரு வேகத்தில் சொன்னதை இன்னும் மனசில வெச்சுண்டு உழப்பிக்க கூடாது. அந்த வார்த்தை அவா சொன்னப்பறம் நீ அத்தை கூட பேசறத நிறுத்தி பல வருஷமாச்சுனு எனக்கு தெரியும்.

தள்ளாமையை விட தனிமை ரொம்ப கொடுமை ஆனந்தி.
பழசெல்லாம் மறந்துட்டு அத்தையை இந்த வாரம் போய் பார். வாய்க்கு பிடிச்சா மாதிரி எதாவது பண்ணி எடுத்துண்டு போ.
முடிஞ்ச போது ஒரு ரெண்டு மூணு நாள் கூட்டி கொண்டு வந்து உன்னோட வெச்சுக்கோ.
நீ போய் பார்த்துட்டு வந்த விவரத்திற்கு கடுதாசு போடு. மாப்பிள்ளையை விசாரித்தாக சொல்.
கண்டிப்பா நீ போவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
அன்புடன்
அம்மா.

செல்லுமிடமெல்லாம் செல்லு.

செல்லுமிடமெல்லாம் செல்லு..

ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்.
காலிங்பெல்லை அழுத்த  கவச குண்டலம் மாதிரி "காதோடு தான் நான் பேசுவேன்" ஸ்டைலில் செல்லில் சொல்லாடியபடி..சைகையில் என்னை வரவேற்றாள்.

சோஃபாவைக் காண்பித்து உட்காரு..என்றாள் சைகையில்..
காஃபி கலக்கட்டுமா..டீயா என்று ஆத்திக் காண்பித்தாள்..

சரி பேசிண்டிருக்கா பாவம் என்று..
டீவியில் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழு மூஞ்சி சீரியலை மாற்றி..
அவள் புதுசா வாங்கியிருப்பதாக சொன்ன ஒரு புத்தா பொம்மையும் பார்த்துக் கொண்டே..

கிச்சனுக்குள் நுழைந்தேன்..
காஃபி ஆத்தறதுக்கு..இரண்டு கை வேணுமே..இப்போ ..அவள்..

 'செல்ஃபோன்"..காதுக்கும் கழுத்துக்கும் நடுவில் சாண்ட்விச்சாகி கொண்டிருந்தது..
அடிப்பாவி...கொடு ..நானே கப்பிலே விட்டுடறேன்..
"Snacks.. Snacks .."அங்கே இருந்த டப்பாக்களை காட்டி சொல்லவும் ..
ஒரு தட்டில் போட்டேன்..

சோஃபாவுக்கு மீண்டும் வந்தோம்.
" நான் அப்பறமா பேசறேன் அத்தை...இப்போ என் ஃப்ரண்ட் வந்திருக்கானு' ஒரு வழியா பேச்சை முடிச்சு..

" நான் பாதில கட் பண்ணினா அத்தைக்கு கோவம் வந்துடும்..என் கூட பேச மட்டும் உனக்கு டைமே கிடைக்காதுனு குத்தம் சொல்வாடி.. Hope you understand ' என்றாள்..

நானும் இப்படி யாராவது வரும்போது ..இதே மாதிரி ஃபோனில் மாட்டி அவஸ்தை பட்டிருக்கேன்.
எங்க அரட்டைக் கச்சேரி ஆரம்பிச்சது..

ஆனால்..
கழுத்தை சாய்ச்சுண்டே பேசிண்டிருந்தா..
ஃபோன் அதே சாண்ட்விச் நிலையில்..
சிரிப்பு தாங்கலை எனக்கு..
" ஏய்..வா ஒரு செஃல்பி எடுக்கலாம்" ..நான் சொல்ல..

எப்பவும் போல நாக்கை வெளியே தள்ளி,கண்ணை உருட்டி ஒரு போஸ் செட்டாக..
" ஐயோ..என் செல்லை காதிலேயே வெச்சிருக்கேனேடி ..பாவி ..சொல்லமாட்ட நீ"..
அன்புக் கோவத்தில் அவள்..என்னை அடிக்க ஓங்க..
ஆஹா..அற்புதமான எங்கள் candid photos click click..click..

இதனால் சொல்ல வருவது என்னவென்றால்..

" பேசுங்க..பேசுங்க..பேசிக் கிட்டே இருங்கனு" ..
ஃபோன் service providers சொல்லிக்கிட்டே இருப்பாங்க..
ஆனால்..நாம் தாங்க..நம்மள இந்த சுழல்லேர்ந்து காப்பாத்திக்கணும்..

கார் கட்டு

Ganesh Bala sir.
நானும் முயன்றேன் இந்தப் படத்துக்கு ஒரு கதை.

'கார்' கட்டு...(சிறுகதை)

' லோகு..எங்கடி போய்த் தொலைஞ்சான் உன் புள்ளையாண்டான் இன்னிக்கும்? மாப்பிளை அழைப்புக்கு இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு ' சாமிநாதன் போட்ட சத்தம்  கேட்டு ஓடிவந்தாள் பட்டு மாமி
' 'வந்துடுவாண்ணா.. ரோகு என்கிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கான்.ஏன் இப்படி கத்தி ஊரைக் கூட்டறேள்னு ' மாமா வாயை அடைத்தாள்.

" ஆமாம்டி..அவன் சரியான 'ரோகு' தான். மாமாவின் கோபம் தலைக்கேறியது.

மாமிக்கு 'ல' வராது. "எர்ராமே"..சாரி..சாரி..எல்லாமே "ர' தான்.

லோகு என்ற லோகநாதன் தன் அத்தை பெண்ணு சுதாவுடன் கடைசி நிமிஷ மேக்கப்புக்காக பார்லர் போயிருந்தான்.
வெளியே வந்து சுதாவைத் தேடியவனை நாலு குண்டர்கள் அலாக்காக தூக்கி...சுதாவுடைய சிவப்பு நிறக் காரின் ரூஃபில் போட்டு கட்ட ஆரம்பித்தனர்.
"என்னடா நடக்குது இங்கே..சுதா.. சுதா ..எங்கே இருக்கே..என்னை காப்பாத்து..காப்பாத்துனு அவன் கத்தலை காரின் ஸ்டியரிங்கில் ஸ்டைலாக உட்கார்ந்தபடி ரசித்துக் கொண்டிரருந்தாள் சுதா..

கார் மெதுவாக நகர ஆரம்பித்தது. பஸ்ஸிலும் பைக்கிலும் போவோர் வருவோர் எல்லாம் ஃபோட்டோ எடுக்க, லோகு ஒரு லோக்கல் ஹீரோ போல ஊர்வலம் வந்து கொண்டிருந்தான்.

' ஜானவாச கார்ல போக வேண்டியவனை இப்படி ஊர்வலமா இழுத்துண்டு போறியே ..சுதா நீ நன்னா இருப்பியா என்று அவன் குரல் ஹாரன்கள் சத்தத்தில் யாருக்கும் கேட்கவே இல்லை.

பஸ்ஸிலேர்ந்து இந்தக் கண்றாவியைப் பார்த்த.சாமிநாதனின் ஒண்ணு விட்ட மாது மாமா..' டேய் சாமிநாதா....உன் பிள்ளையாண்டான் ஜானவாசம் இப்படி நடத்தப் போறேனு சொல்லவே இல்லையேனு ஃபோனில் விஷயத்தை சொல்ல..
ட்ராஃபிக்கில் மாட்டி இருந்த காரை நோக்கி கொஞ்ச நேரத்தில் சாமிநாதன் பட்டு மாமி , விச்சு சித்தப்பா, அங்கிச்சி சித்தினு படையே கிளம்பி வந்து ரோட் ரோக்கோ பண்ண ஆரம்பித்தார்கள்.

"ஏண்டி சுதா..இப்படி செய்ய எப்படிடி உனக்கு மனசு வந்தது..உங்கம்மா ஸ்தானத்திலேர்ந்து பார்த்துக்கற எனக்கு ..நீ செய்யற உபகாரமா இது' ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் பட்டு மாமி.
 '  ஸ்டாப் ஸ்டாப்..நான் என்ன மாமி தப்பு பண்ணேன்..நீங்க தானே ரோகுக்கு ' 'கார்'கட்டு போட்டா எல்லாம் சரியாகிடும்னு சொன்னேள்..அதான் அவன் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க ஆசையை நிறைவேத்திடலாம்னு மாஸ்டர் ப்ளான் போட்டு .உஸ் அப்பா....அவள் தொடரவும்..

சுற்றியிருந்த எல்லாரும் கொல்லென்று சிரித்தே விட்டார்கள்..
பின்ன என்ன '#கால்கட்டு போட்டா சரியாகிடும்னு சொல்ல வேண்டியதை 'ல' வராத பட்டு மாமி #கார்_கட்டு போட்டா சரியாகிடும்னு சொன்னால்..பாவம் சுதா என்ன செய்வாள்.

அவள் வெகுளித்தனத்தை சொல்லிச் சிரித்தபடி கும்பல் கல்யாண மண்டபத்தை நோக்கி கலைய ஆரம்பித்தது.
கட்டை அவிழ்த்து வெளியே வந்து சுதாவை ஒரு லுக்  விட்டபடி உள்ளே போனான் லோகு.

 ' ஆசை வார்த்தை காட்டி என்னை ஏமாத்தி இப்போ பெரிய இடம் கிடைச்சுதுனு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கபோறயா நீ....
'ரோகு' ..உன் அம்மா உன்னை கூப்பிடறது சரிதாண்டா..என் ப்ளான் சக்ஸஸ்.
நடுத்தெருவில உன்னை கட்டிப் போட்டு.இழுத்துண்டு வந்தேன் பாரு..உனக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும்.

மண்டபத்தின் உள்ளே நுழைந்தவளின் கன்னத்தை கிள்ளி.பலரும் நமுட்டுச் சிரிப்புடன் வரவேற்றனர் #அசடு_அசடு ' என்று.

சமையல்_பாடம்

#சமையல்_பாடம்

"மாமி..பாயசம், தயிர் பச்சடி,ஸ்வீட் பச்சடி, கோஸ்மல்லி, கறி, அவியல்,போளி, துவையல் மாங்காய் பிசறல்..எல்லாம் வரிசையா வெச்சிருக்கேன். மிஸ் பண்ணாமல் பரிமாறுங்கோ'
 அஸிஸ்டெண்ட் ஆணை பிறப்பிக்க ..சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பரிமாறும் படலம் ..

இலை ரொம்பியாச்சு..சிக்னல் கிடைச்சாச்சு..அட்டாக் ஆரம்பம்..

என்னை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பது போல் ஒரு மை.வாய்ஸ்.

பாயஸத்தில் கை வைக்கும் நேரம்...
ஒன்பது கஜப் புடவை லேசாக தெரிய..காலில் இட்ட மஞ்சளும் குங்குமம் ஜொலிக்க..கதவோரத்திலிருந்து ரெண்டு கண்கள் மட்டும்..தேர்வு எழுதிய மாணவனாய்..

புரிந்தது..அவள் தவிப்பு..
சமைத்து கொடுத்து விட்டு...சாமியை வேண்டியபடி நின்றவள் உள்ளத்தை...
' கண்டு கொண்டேன் ..கண்டு கொண்டேன்'
அப்புறம் என்ன ஸ்டார்ட் மியூஜிக் தான்..

"பாயஸம் மதுரமா இருக்கு' ஆரம்பித்தேன் நான்.

பக்கத்திலிருந்த என் அத்தை பெண் ' மாமி போளி என் favourite . சூப்பரா இருக்கு' .

எதிரில் உட்கார்திருந்த ஒரு வயதான மாமி..' பருப்பு உசிலி வாயில போட்டு பார்...ஏக ஜோர்'

'மாமி..அந்த பைனாப்பிள் பச்சடி ரெசிபி எனக்கு கொடுங்கோ.
.'மாமி..இப்படி தெளுவா எப்படி ரசம் வெக்கறேள்'..
#Ripple_effect

வெந்து புழுங்கும் வெயிலில் பொங்கி போட வந்தவள்..மனசு  இன்பத்தில் வழிய..

' மாமி..உங்க அட்ரஸ் கொடுங்கோ' பரிமாறல்கள் ஆரம்பம்.

வெத்தலை பாக்கு வாங்கி கிளம்பும்போது.. 'மாமி.. இந்தாங்கோ ரெண்டு வடையும் போளியும் எடுத்துண்டு போங்கோ உங்க அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ' என்று special கவனிப்பு எனக்காக்கும்.

#பாராட்டு. .இது வாங்கும்போது சந்தோஷப் படறோம்.
கொடுக்கும்போது ஏன் கஞ்சத்தனம் படறோம்?

யார்  எதை எப்போது  செய்தாலும் ஒரே ஒரு சின்ன பாராட்டை கொடுத்துப் பாருங்க..
வ்டையும் போளியும் மட்டுமல்ல.
கூடை கூடையா அன்பும் கிடைக்கும்.

என்னடா இது..சனிக்கிழமை காலையில் சமாராதனை சாப்ப்பாட்ட்டுக்கு போயாச்சானு நினைக்கிறீங்களா..?
உள்ளே இருக்கும் அகிலானந்தமயி கொஞ்சம் வெளியே தலை காட்டினாள்..நீங்க மாட்டிக்கிட்டீங்க அம்புட்டுதேன்.😀😀

சமையல்_பாடம்

#சமையல்_பாடம்

"மாமி..பாயசம், தயிர் பச்சடி,ஸ்வீட் பச்சடி, கோஸ்மல்லி, கறி, அவியல்,போளி, துவையல் மாங்காய் பிசறல்..எல்லாம் வரிசையா வெச்சிருக்கேன். மிஸ் பண்ணாமல் பரிமாறுங்கோ'
 அஸிஸ்டெண்ட் ஆணை பிறப்பிக்க ..சுமங்கலிப் ப்ரார்த்தனைக்கு பரிமாறும் படலம் ..

இலை ரொம்பியாச்சு..சிக்னல் கிடைச்சாச்சு..அட்டாக் ஆரம்பம்..

என்னை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பது போல் ஒரு மை.வாய்ஸ்.

பாயஸத்தில் கை வைக்கும் நேரம்...
ஒன்பது கஜப் புடவை லேசாக தெரிய..காலில் இட்ட மஞ்சளும் குங்குமம் ஜொலிக்க..கதவோரத்திலிருந்து ரெண்டு கண்கள் மட்டும்..தேர்வு எழுதிய மாணவனாய்..

புரிந்தது..அவள் தவிப்பு..
சமைத்து கொடுத்து விட்டு...சாமியை வேண்டியபடி நின்றவள் உள்ளத்தை...
' கண்டு கொண்டேன் ..கண்டு கொண்டேன்'
அப்புறம் என்ன ஸ்டார்ட் மியூஜிக் தான்..

"பாயஸம் மதுரமா இருக்கு' ஆரம்பித்தேன் நான்.

பக்கத்திலிருந்த என் அத்தை பெண் ' மாமி போளி என் favourite . சூப்பரா இருக்கு' .

எதிரில் உட்கார்திருந்த ஒரு வயதான மாமி..' பருப்பு உசிலி வாயில போட்டு பார்...ஏக ஜோர்'

'மாமி..அந்த பைனாப்பிள் பச்சடி ரெசிபி எனக்கு கொடுங்கோ.
.'மாமி..இப்படி தெளுவா எப்படி ரசம் வெக்கறேள்'..
#Ripple_effect

வெந்து புழுங்கும் வெயிலில் பொங்கி போட வந்தவள்..மனசு  இன்பத்தில் வழிய..

' மாமி..உங்க அட்ரஸ் கொடுங்கோ' பரிமாறல்கள் ஆரம்பம்.

வெத்தலை பாக்கு வாங்கி கிளம்பும்போது.. 'மாமி.. இந்தாங்கோ ரெண்டு வடையும் போளியும் எடுத்துண்டு போங்கோ உங்க அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ' என்று special கவனிப்பு எனக்காக்கும்.

#பாராட்டு. .இது வாங்கும்போது சந்தோஷப் படறோம்.
கொடுக்கும்போது ஏன் கஞ்சத்தனம் படறோம்?

யார்  எதை எப்போது  செய்தாலும் ஒரே ஒரு சின்ன பாராட்டை கொடுத்துப் பாருங்க..
வ்டையும் போளியும் மட்டுமல்ல.
கூடை கூடையா அன்பும் கிடைக்கும்.

என்னடா இது..சனிக்கிழமை காலையில் சமாராதனை சாப்ப்பாட்ட்டுக்கு போயாச்சானு நினைக்கிறீங்களா..?
உள்ளே இருக்கும் அகிலானந்தமயி கொஞ்சம் வெளியே தலை காட்டினாள்..நீங்க மாட்டிக்கிட்டீங்க அம்புட்டுதேன்.😀😀

சொர்கத்தின் வாசப்படி..

சொர்கத்தின் வாசப்படி..

என்ன அப்பு..ராத்திரி நன்னா தூங்கினியா..
நான் போட்ட சூடான சுவையான hatti kaapi உறிஞ்சியபடி ஊரிலிருந்து வந்த அத்தை தன் அண்ணாவைப் பார்த்து கேட்க..
எங்க இப்போ எல்லாம் ..எத்தனை mg dosage ஏத்தினாலும் தூக்கம் மட்டும் வரமாட்டேங்கிறது.
போறாததுக்கு இந்த வயித்து பிரச்சினை வேற..பசியே இல்ல..சாப்பிடணுமேனு இருக்கு..
இதுக்கு நடுவுல பொட்டாசியம் ஜாஸ்தியாச்சு. சோடியம் ஒரேடியா இறங்கிடுத்து..BP யும் கூட சேர்த்து ஏறிக்கிடக்கு..அத விடு..உன்னோட சக்கரை என்ன சொல்றது..report வந்தாச்சா..
பதில் சொல்ல ரெடியாய் இருந்த அத்தை Eveready போல charge ஆனா..
அதை ஏன் கேட்கிற அப்பு..ஒரு சமயம் 100,200,250,300..ஏதோ கிரிக்கெட் score போல சொல்லத் துவங்கினாள். எலை தழை சாப்பிடுங்கறா சில பேர்..சாதமே கூடாதுங்கறா..பழம் பக்கமே போக முடியறதில்ல.இந்த மாத்திரை மருந்து இல்லாட்டி எப்பவோ டிக்கட் வாங்கியிருக்கணும்..ம்ம்ம்.
என்னத்த செய்ய..இப்படித்தான் காலத்தை ஓட்டணும்னு தலை எழுத்து.. .குழந்தைகளுக்கு சிரமத்தை கொடுத்துண்டு..
.கிச்சனிலிருந்து கரண்டியும் கையுமா இவாளை இந்தச் சோகக் கடலிலிருந்து காப்பாற்ற நான் ஓடி வந்தேன்.
அன்ணனும் தங்கையும் அந்த காலத்து விஷயத்தை..புதுக்கோட்டை பொக்கிஷங்களை எடுத்து விடுவேள்னு பார்த்தா..இப்படி சந்தோஷமில்லா சம்பாஷணையா..
அலோபதியும் ஆயுர்வேதமும் பேசவா இப்படி ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி ஓடோடி வந்தே அத்தை..நான் வீர வசனம் பேச..
அப்பறம் தோணித்து ..எத்தனை சுலபமா சொல்லிட்டேன்..
வலிகள்.. உடல் மன ரீதியாக வயதான காலத்தில் இவர்கள் படும் அவஸ்தை..நாம் நம் குழந்தை களுக்கு பாரமாகி விட்டோமோ என்கிற ஒரு உறுத்தும் உணர்வு..
அவர்கள் இன்றைய கவலை..நாளை எனக்கும் வரும்..
மனதளவில் தயார் படுத்திக் கொள்ள பள்ளிப்பாடம் எதுவுமில்லை.. மனத்தை பக்குவப்படுத்த கத்துக்கணும்..
Prayers for the dignity at the end of life for the elders and for myself too.

Monday, December 16, 2019

செல்லுமிடமெல்லாம் செல்லு..

செல்லுமிடமெல்லாம் செல்லு..

ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்.
காலிங்பெல்லை அழுத்த  கவச குண்டலம் மாதிரி "காதோடு தான் நான் பேசுவேன்" ஸ்டைலில் செல்லில் சொல்லாடியபடி..சைகையில் என்னை வரவேற்றாள்.
சோஃபாவைக் காண்பித்து உட்காரு..என்றாள் சைகையில்..
காஃபி கலக்கட்டுமா..டீயா என்று ஆத்திக் காண்பித்தாள்..
சரி பேசிண்டிருக்கா பாவம் என்று..
டீவியில் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழு மூஞ்சி சீரியலை மாற்றி..
அவள் புதுசா வாங்கியிருப்பதாக சொன்ன ஒரு புத்தா பொம்மையும் பார்த்துக் கொண்டே..
கிச்சனுக்குள் நுழைந்தேன்..
காஃபி ஆத்தறதுக்கு..இரண்டு கை வேணுமே..
இப்போ ..அவள் 'செல்ஃபோன்"..காதுக்கும் கழுத்துக்கும் நடுவில் சாண்ட்விச்சாகி கொண்டிருந்தது..
அடிப்பாவி...கொடு ..நானே கப்பிலே விட்டுடறேன்..
"Snacks.. Snacks .."அங்கே இருந்த டப்பாக்களை காட்டி சொல்லவும் ..
ஒரு தட்டில் போட்டேன்..

சோஃபாவுக்கு மீண்டும் வந்தோம்.
" நான் அப்பறமா பேசறேன் அத்தை...இப்போ என் ஃப்ரண்ட் வந்திருக்கானு' ஒரு வழியா பேச்சை முடிச்சு..
" நான் பாதில கட் பண்ணினா அத்தைக்கு கோவம் வந்துடும்..என் கூட பேச மட்டும் உனக்கு டைமே கிடைக்காதுனு குத்தம் சொல்வாடி.. Hope you understand ' என்றாள்..
நானும் இப்படி யாராவது வரும்போது ..இதே மாதிரி ஃபோனில் மாட்டி அவஸ்தை பட்டிருக்கேன்.
எங்க அரட்டைக் கச்சேரி ஆரம்பிச்சது..
ஆனால்..
கழுத்தை சாய்ச்சுண்டே பேசிண்டிருந்தா..
ஃபோன் அதே சாண்ட்விச் நிலையில்..
சிரிப்பு தாங்கலை எனக்கு..
" ஏய்..வா ஒரு செஃல்பி எடுக்கலாம்" ..நான் சொல்ல..
எப்பவும் போல நாக்கை வெளியே தள்ளி,கண்ணை உருட்டி ஒரு போஸ் செட்டாக..
" ஐயோ..என் செல்லை காதிலேயே வெச்சிருக்கேனேடி ..பாவி ..சொல்லமாட்ட நீ"..
அன்புக் கோவத்தில் அவள்..என்னை அடிக்க ஓங்க..
ஆஹா..அற்புதமான எங்கள் candid photos click click..click..

இதனால் சொல்ல வருவது என்னவென்றால்..

" பேசுங்க..பேசுங்க..பேசிக் கிட்டே இருங்கனு" ..
ஃபோன் service providers சொல்லிக்கிட்டே இருப்பாங்க..
ஆனால்..நாம் தாங்க..நம்மள இந்த சுழல்லேர்ந்து காப்பாத்திக்கணும்..

Sunday, December 15, 2019

என்னை மறந்ததேன்...???

என்னை மறந்ததேன்...???

நன்னா தேடு...அந்த புஸ்தக மூட்டைக்குள்ளே இருக்கா பாருடா..அதுலதான் இருக்கு அந்த  பழைய டைரி கடுப்பில ஏணியில் ஊஞ்சல் ஆடிண்டு இருந்த பையன்...அதே எல்லாம் எப்பவோ எடைக்கு போட்டு அம்மா mug வாங்கிட்டாப்பா..இப்போ எதுக்கு என்னை ஏத்தி வைச்சு உயிர வாங்கற...ஏணியில் இருந்து குதித்து மகன் ஓட..டேய்..அவசரமா ஒரு நம்பர் வேணும்டா....அங்கு வந்த தர்மபத்தினி.. க்கும்..செல்லுல எல்லாம் இருக்கும்போது..எதுக்கு இந்த லொள்ளு உங்களுக்குனு வசைபாட..ஐயோ..செத்துப் போன செல்லே..உயிர் உடனே வந்த Bsnl வழியா பேசக்கூட..இப்போ நீ வேண்டியிருக்கே....

காசு இல்லாம இருக்கலாம்..ஆனா..கைப்பேசி இல்லனா  ..technology க்கு salute செய்தாலும்..ரொம்ப அடிமையாகிட்டோமோ...எண்ணம் அப்பப்போ வரும்.
ஒரு flash back..
ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஆளைப் பிடிச்சு Bsnl connection வாங்கி..அதுக்கு ஒரு opening and closing password போட்டு பூட்டிப் பூட்டி..பில்லுக்கு பயந்து பேசிய காலம்..
எல்லாரோட டெலிஃபோன் நம்பரும் alphabetical order ல அழகா..அட்ரஸும் சேர்த்து எழுதி இருக்கும்.. புது வருஷ டைரி வந்ததும் அச்சு பிசகாம அதை copy வேற பண்ணி, பழைய டைரியயும் தூக்கிப் போடாம reference வெச்சுண்டு வாழ்ந்த நாட்கள்..
எல்லா நம்பர்களும் மனப்பாடம்..இப்போ மாதிரி வீட்டு நம்பரே செல் பார்த்து சொன்னதில்ல..
என் அம்மாவுக்கு ஆசையா வாங்கி கொடுத்தேன் ஒரு Nokia..அதை நோக்கியதே இல்லை அவள்..
அம்மா..இந்த landline phobia வை விடேன் என்றால்..இது தான் செளகரியம்...cost effective என்பாள்.அம்மா grow up என்பேன்..நான் தான் வளரல
எத்தனை digit ஆ இருந்தாலும் மூச்சு விடாம சொன்ன அம்மா எங்கே.. அந்த நம்பர் 23 ல முடியுமோ..இல்ல இல்ல..94 னு ஆரம்பிக்கும்....சட்டுனு ஞாபகத்துக்கு வர மாட்டேங்கிறது..அந்த செல்லைக் கொண்டா..சொல்லிடறேன்.. அந்த செல்லில் உள்ள contact list ஐ google ல வேற save பண்ணி இருக்கேன்..என்ன ப்ரயோசனம்..
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்...

மின்சாரம் இல்லாத போதும்..முழுமுச்சில் வேலை செய்யும் மூளையே..இன்னும் உன்னைக் கொஞ்சம் உபயோகிச்சு இருக்கலாமோனு தோணறது..

பழையன் கழிதலும்..புதியன புகுதலும் ஆனாலும்..இன்னும் என் அம்மா வீட்டில் அந்த ஃபோன் stand அதில் இருக்கும் telephone directory ம் அவள் கையெழுத்தில் எழுதப்பட்ட systematic telephone டைரியும்..nostalgic தான்.

Oh butterfly..butterfly..

Today's visitor..
Oh butterfly..butterfly..

திறந்த ஜன்னல் வழி..
தெரிந்து தான் வந்தாயா..???
தேடி எதுவும் வந்தாயா..???
தேவை என்ன சொல்..??
தட்டாமல் தருவேனே.
பட்டாம்பூச்சி உனக்கே..

அடைபடாதே ..சிறையிலிங்கே..
அங்கே தெரியுது பார்..
அழகான என் தோட்டம்..
ஓடிப் பிடிச்சு விளையாட..
ஓயும்போது நானும் வரேன்..
ஓடிப் போ நீயும்..
படபட பட்டாம்பூச்சியே..

Saturday, December 14, 2019

Seetharaman mama

சென்ற வருடம் ..வெள்ளம் வடிய ஆரம்பித்த வேளை..oven எல்லாம் இல்ல..சுட வைக்க...வாங்கோ ..சாப்பிடுடலாம்.' மாமி சொல்ல..என்றைக்குமே உடனே வந்து கலத்தில் உட்காராத மாமா..தட்டின் முன் உட்கார..வந்தது..நாளு நாளாய் காணாமல் போய் இருந்த கரெண்ட்..இரு இரு ..போய் motor போட்டுட்டு வந்துடறேன்..சட்டென கிளம்பினார்..
கொஞ்ச நேரம் ஆச்சு..என்ன இந்த மனுஷன் சத்ததையே காணும்..மோட்டார் போட்டுட்டு தோட்டத்தை நோண்ட போய்ட்டாரோ..பொறுமையிழந்த மாமி சமையல் கட்டிலிருந்து வெளிய வந்து பார்த்தாள்..அங்கே மாமா..மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறார்..
வந்த டாக்டர் சொன்னார் ..'மனுஷர் போய் சேர்ந்துட்டார்..அரை மணி ஆச்சு..shock அடிச்சிருக்கு..
electricity board ல் நல்ல பதவியும் பேரும் வாங்கிய இவருக்கு எப்படி..
மோட்டார் வயரைத் துருவிப் பார்த்ததில் ஒரு சிறு இடத்தில் இருந்த கசிவு ஒரு பேரிழப்புக்கு காரணமாயிற்று..
சீத்தாராமன் மாமா..சுத்தக் கார மாமா எப்போதும்..எங்கும் எதிலும் சுத்தம்..சுத்தம்..
எங்கள் குட்டி வீட்டில் வந்து வாழ்ந்த முதல் tenant..
இன்னிக்கி நான் ஊரெல்லாம் Scooty ல் சுத்த காரணம் அவர்தான்..என் ஆசான்..
அதோ அங்கே குழி இருக்குனு..அப்பா அலற வைத்த போது..
akils வாடா..பத்து தடவை எட்டு போடு..பறக்கலாம் நீனு
எனக்கு TVs champ ஓட்டக் கத்துத் தந்த மகராசன்..
காடு மேடெல்லாம் ஒட்ட உதவியது..அன்று அவர் கற்றுத் தந்த பாடம்....
miss you mama..
just through this post i request all my nears and dears to be doubly careful while handling the electrical equipments and please take all precautionary measures before hand to avoid accidents like this..
Disclaimer: I am not good at science..the reason for the untimely death as told written here

அவளுக்கும் அச(ட்)டு என்று பேர்.

14-12-18
அவளுக்கும் அச(ட்)டு  என்று பேர்.

அவள் நெஜமாவே இப்படித்தான் சொன்னாளா? இல்லை எனக்குத்தான் காதில அப்படி விழுந்ததா?
சே..சே..அவளுக்கு தான் தமிழ் தெரியாதே..
என் மை.வா. எனக்கு ஆறுதல் சொல்ல..
நடந்தது இதுதான்ங்க

morning walk முடிச்சு திரும்பி வரும் போது ரொம்ப நாளா பார்க்காத ஒரு தோழி எதிரில் வந்தாள்.
அபார்ட்மெண்ட் அரசல் புரசல் அரட்டை எல்லாம் முடிச்சோம்.
"உன்னோட NGO வேலையெல்லாம் எப்படி இருக்குனு 'நான் கேட்க ..அங்கே அவள் கொடுக்கும் training பற்றி சொல்லி சிலாகித்தாள்.
'ஒரு நாள் நானும் உன்னோட இதில் இணையணும் ' நு நான் சொல்ல..

சொன்னாளே ஒரு வார்த்தை.' you will be an asset' to us'. ஆ...மயக்கமே வந்துடுத்து.
பட்டர்ஃப்ளை தேவதை போல வந்தவள் bye சொல்லிச் சென்றாள் .

'அசடு' என்று எனக்கு நானே கொடுத்துக் கொண்ட டைட்டிலுக்கு..ஒரே ஒரு 'ட்' சேர்த்து
"asset' அசால்ட்டா சொல்லி அல்லேக்கா என்னை அந்த் வானத்துக்கே தூக்கிச் சென்ற அந்த வார்த்தை....அந்த நொடி..
இன்னிக்குப் பூரா..asset is the secret of my energyநு ..நடைப்பயிற்சியிலிருந்து வந்த என்ன ஓட ..பறக்க விட்ட வார்த்தை..

( நட்பூக்களே..'அகிலா நீ அசடு இல்ல'னு எனக்கு ஐஸ் வைக்காம..நீங்க இன்னிக்கு சொன்ன ..சொல்லப் போற அந்த வார்த்தை என்ன?..முடிவு பண்ணுங்க..
அன்புடன்
அகிலானந்தமயி

Friday, December 13, 2019

பிரியா விடை.....

பிரியா விடை.....

தென்னை மரமேற ஆள் வருவான்
தெண்டச் செலவென திருப்பி அனுப்பல்..
பக்கத்து வீட்டு மாமரம்..
நம்பக்கம் காய் தருகையிலே..
அக்கப்போர் ஒன்னு வந்ததில்ல..
அது கிடக்கு விடுங்கனு..
அமைதிப் புறா பறக்கும்..
உலகக் கோப்பை கிரிக்கெ்ட் வரும்..
உளுத்த கம்பமும் சாய்ந்து போகும்.
இழுத்துக் கட்டு இப்போதைக்கு..
இன்னிங்ஸ் முடிஞ்சிடும்னு இம்சைகள்..
தன்னலம் ...தலை தூக்கும்

பாலம் பல கட்டணும்..
பாதை பல ஆகணும்..
புதிய ஊராய் மாறணும்
பாவப்பட்ட் மரங்களை
பலி கொடுத்தோம் என்றும்..
வரும் என் முறை எப்போனு
வருத்தத்தில் வாடிய மரத்துக்கு
வந்ததே வார்த் புயலும்..
வெட்டி வீழ்த்துமுன்..
வேரோடு சாய்க்கவே..

வலியில்லா...சாவோ..
வழியில் கிடக்கும் மரங்களுக்கு..

வண்டியில் ஏற்றுமுன்னே
வணங்கி வேண்டுவோம்..
வேரோ..விதையோ
 விட்டுப் போ..வரும்
என்  சந்ததிக்கு காட்ட..

Wednesday, December 11, 2019

Comfort zone

11-12-18
#coming_out_of_your_comfortzone.
comfort zone..நமக்கு போட்டுக் கொள்ளும் ஒரு boundary.
இந்த வட்டத்துக்கள்தான் நமக்கு ஆறுதல், சுகம் இன்பம் எல்லாம் இருக்குநு ஒரு மாயை.
இதிலேர்ந்து வெளியே வர நம்மை தடுப்பது எது தெரியமா? nothing but பயம்.குழந்தை தன்னோட முதல் அடியை எப்படி பயந்து பயந்து வைக்குமோ..அப்படி ஒரு feeling.
ஒரு அடி எடுக்க..கால் முளைத்த பூக்கள் தான்.
இப்போ என்னையே எடுத்துக்கோங்க சீரியஸா ..செண்டிமெண்டா எழுதுவேன் எப்போதும். இப்போது இங்கே சில மூத்த முகனூல் நட்புகள் காமெடி பதிவு படிக்கும் போது , எப்படி இவங்களால் இப்படி யோசிக்க முடிந்ததுனு நானும் முயற்ச்சிக்கிறேன். உடனே success கிடைக்காது. ஆனால் சந்தோஷமா இருக்கு.

#ஒரு_சீன்.
#சீனா_ஏர்ப்போர்டில்_ட்ராலி_தேடணும்.
எனக்கு ஆங்கிலம் தெரியாது. மொபைலும் ஆப்பும் ஆப்பு கொடுத்தது..இப்போ என்ன செய்வேன்.

என் version இதோ

என்னிக்கு இந்த ரெண்டு பொண்ணுக்கும் சீனாவில கல்யாணம் பண்ணிக் கொடுத்தேனோ அன்னிலேர்ந்து இப்படி ஷாங்காய் ஏர்ப்போர்ட்டுக்கும் பெய்ஜிங் ஏர்ப்போர்ட்டுக்கும் சீ பட்டு அலையறேன்.

இன்னிக்கு பார்த்து மொபைல சார்ஜ் வேற இல்ல. பொரியவ என்னடானா..' பெங்களூரு ஏர்ப்போர்ட்லேர்ந்து ஆத்துக்கு போற நேரம் தான் ..2 மணி நேரத்தில் போய் எறங்கிடலாம்னு தேற்றி அனுப்பி விட்டா.
.ஃப்ளைட் லாண்ட் ஆகவும் லவுஞ்சுக்கு போய் முதல்ல ட்ராலி எடுத்துக்கோனு பெரியவ சொன்னது ஞாபகம் வர..என் முன்னாடி நடந்தவர் கொஞ்சம் நல்லவர் மாதிரி தெரிய..அவர் பின்னாடியே ஓடினேன். கிடுகிடு நடந்தவர் நேரே ஒரு பளபள ரூமுக்குள் நுழஞ்சார். ஜாங்கிரி எழுத்து ஒரு மண்ணும் புரியாட்டாலும் அங்க தொங்கிண்டிருந்த  பொம்மை பார்த்து அது பாத் ரூம்னு புரிஞ்சது.
நான் பராக்கு பார்த்த நேரம் அந்த மனுஷர் வெளியே வந்து நடக்க ஆரம்பிச்சு காஃபி ஷாப் கிட்ட நின்னுட்டார்.
ஐயோ இந்த மனுஷன் பாம்பு நூடுல்ஸ் வாங்கி தின்ற வரைக்கும் நான் இங்கே நிக்கணுமே பகவானேனு நினைக்க விருட்டுனு பெட்டி எல்லாம் உருண்டு வருமே அங்கே போய் நின்னுட்டார். பெரிய பெட்டி அவரோடது பல்ட்டி அடிச்சிண்டு வர.." பெருமாளே.அதுக்குள்ள இருக்கற ஊறுகாய் கொட்டாம இருக்கணுமேனு" அவர் வாய் விட்டு புலம்ப..." ஐயோ நீங்க தமிழா?..
என் வாயெல்லாம் 32 பல்லாக..
உங்களைப் பார்த்தா..நான் இழுக்க..' மாமி..எங்க அப்பா ஐயங்கார் ..அம்மா சைனா..
சப்பை மூக்கெல்லாம் சைனாக்காரனில்ல..புரிஞ்சதோனு பாடம் நடத்தி
ட்ராலி என்ன .ட்ராப்பும் பண்ணிட்டு போனார்.

எப்படி இருக்கு?. மொக்கைதான் . இருந்தாலும் ..அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

Radha Sriram Yoga Yogambal Selvi Shankar Mahadevan Srinivasan Venkatesh Veeraraghavan Radhai Sairam உங்க ஐடியா என்னப்பா?

Thursday, December 5, 2019

சந்திப்போமா..இன்று சந்திப்போமா..

சந்திப்போமா..இன்று சந்திப்போமா..

அங்கங்கே தலை காட்டிய வெள்ளிக் கம்பிகளுக்கு 'டை ' அடிச்சாச்சு.. எந்த புடவை பாந்தமா இருக்கும்..தேடலுக்கு பின் தேர்ந்தெடுப்பு ஒரு சிவப்பு கறுப்பு புடவை..
ஃபோட்டோவில் இருப்பது போல இருக்கணுமே ..ஒரு கவலை..சின்ன விபூதிக் கீற்று பயம் போக்க இட்டாச்சு..வாட்ச் வடிவில் அம்மாவையும் கூட கூட்டிண்டாச்சு.
என்ன வாங்கிண்டு போகலாம்..?.பழமா..பலகாரமா..
வென்றது பழம்..பொறுக்கி எடுத்து வாங்கியாச்சு..புஸ்தகம் நிறைய படிப்பார்னு கேள்விப் பட்டிருக்கோமே..சரி ..புக் ஹவுஸில் ஒரு மேய் மேய்ந்து மனசுக்கு ஓகேனு சொன்ன ஒரு எழுத்தாளர் படைப்பை pack செய்தாச்சு..
எதில் ஆரம்பிக்கலாம்  பேச்சை...? இதுவரையில் எழுத்தில் தானே அறிமுகம்...
இந்த சந்திப்பு ஒரு மிக சந்தோஷமான ஒன்றாக இருக்கணுமே...ஆட்டோ பிடித்த வேளை..லேசாக ஒரு excitement. அபார்ட்மென்ட் வாசல் இறங்கியதும் பேரும் ஃபோட்டோவும் பிடித்த  செக்யூரிட்டி 'உள்ளே காத்திருக்கிறார்கள்' வழி சொன்னான். பிள்ளையார் சிலை ஒன்று போய் வா உள்ளே என்றது..வழியெங்கும் வண்ணப் பூக்கள்..சிவப்பாய் ஒரு மைக் பூ ஒன்று தலையாட்டி வரவேற்க..துறு துறு கைகள் காமிராவில் படம் பிடிக்க..அங்கே அழகான குழலூதும் கண்ணன் முன்  கானமிசைத்தபடி அங்கிருந்த வயதில் மூத்தோர்..
மணிகளும் தோரணமும் தொங்கும் வாசல் முன் நிற்க..படபட மனசை அடக்க..மணிச் சத்தம் கேட்டு வந்து திறந்தாள் ..பதிவுகள் மூலம் பரிச்சயமான saraswathi..நம்ம் Mythili Varadarajan  aunty ந் வலது கரம்.

எங்கே வந்தேன்னு புரிஞ்சதா..great meeting with such a wonderful fb friend Mythili Varadarajan aunty.

'உன்னை first time பார்க்கிற மாதிரியே இல்லையே.'.அவர் உதிர்த்த முதல் வாசகம்..சந்தோஷம் சந்தோஷம்.அப்பப்பா...
பேச்சு..பேச்சு..பேச்சு..
அடக்க முடியாமல் ஃபோட்டோ எடுக்கும் போது சிரித்துத் தள்ளும் Mythili aunty. கன்னடத்தில் செல்லமாய் கண்டித்த சரஸ்வதி..
அவரது அக்கா சரயூ aunty வீடு..
வீடல்ல..அது ஒரு அழகான art gallery.. ஒரு கோயில் போல..எல்லா ஊர்களையும் ஒரே இடத்தில் சுற்றி வந்த பிரமிப்பு..
பசுமையான செடிகள் தொட்டிகளிலும்.. தொங்கிக் கொண்டும்..
ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்.

நேரம் போனதே தெரியவில்லை..
மீண்டும் வந்து meet பண்றேன்..வாக்கு கொடுத்தபடி மனசில்லாமல் நான் கிளம்ப..
வீட்டில் கொடியிலிருந்து வெத்தலை பறித்து தாம்பூலம் கொடுத்து மிக அன்பாய் வழியனுப்பிய அவர் அக்கா.. (அந்த வெத்தலை மென்ற சுகம்..இன்னும் நாக்கில்)
வாசலை அடைவதற்கு முன் ..Facebook status போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட...ஒரு அருமையான நட்பை..
.என்ன தவம் செய்தனை..இத்தனை அன்பும் ஆசையும் கிடைக்கச் செய்த மார்க்குக்கு ஒரு சலாம் ..
FB உங்களைப் பொறுத்த வரை என்ன என்று பதிவில் கேட்டிருந்த Shankar Rajarathnam sir..
பதிவுகளும்..அதைத் தொடரும் unconditional அன்பு காட்டும் இந்த பந்தங்கள் தான் என் பதில்.

Wednesday, December 4, 2019

சங்கல்பம்

#04-12-18

#start_your_day_with_a_சங்கல்பம்.

பூஜைக்கு மட்டுமல்ல..பொழுது விடியும்போதே செய்யப் பழகணும் சங்கல்பம்.

சங்கல்பம்..செய்வது ரொம்ப சிம்ம்பிள்..செயலில் காட்டுவதற்குு..கொஞ்சம் மெனக்கெடனும்.

நாம் எடுத்த சங்கல்பத்தை செங்கப்பொடி மாதிர் ஆக்க..சங்கடங்கள் பல வரும்.

வேற யாருமில்லை...சந்துக்குள் உட்கார்ந்திருக்கும் சோம்பேறித்தனம் தான் .. சிந்து பாட வந்துடும்.
' அது கிடக்கு..அப்பறம் செய்யலாம்னு அட்வைஸ் கொடுத்து , அரக்கனாய் மாறிடும்.

இது ஒரு பெரிய விஷயமில்லை.நம்மிடம் இருக்கும் சின்ன விஷத்தையும் வித்தாக மாற்றும்.
நம் மனசுக்கு நாமே போடும் ஒரு சின்ன கடிவாளம்..கட்டளை..அவ்வளவுதான்.

சங்கல்பம்..
அழித்து மாற்றும் பலப்பம் கொண்டு எழு்றீங்களோ..அழிக்க முடியாத ball point எழுதறீங்களோ..பலவீனம் ஆகாமல்..(மன)பலத்தோடு முன்னேற..
நாமும்_வாழ்க்கை_எனும்_போர்க்களத்தில் 'பயில்'வான்_ஆகலாம்.

' நீதான் என்னை எப்பப்பாரு படுத்தறம்மா' என்று சண்டை போட்ட காலமுண்டு.
' எப்படி வேண்டுமானாலும் வாழலாம்
இப்படித்தான் வாழணும்னு இருந்து பார்..அப்போது தெரியும் வாழ்வின் சுவை'
அம்மா சொல்லும் மந்திரம்..இன்னும் என் வீட்டில் ஒலிக்கிறது.

#sankalpa_is_a__promise_to_oneself
அன்புடன்
அகிலானந்தமியி😀🙏

Tuesday, December 3, 2019

பெங்களூரு ட்ராஃபிக்கு

03-12-18
#பெங்களூரு_traffic
#சிந்தனை_செய்மனமே_சிக்னலிலும்

#அலர்ட்டா இருக்கணும்..இல்லாவிடில் அலைக்கழிக்கும்.
ர்வூண்டு தூரத்தை அடைய ரவுண்ட்டு அடிக்க வைக்கும்.
one way ல் மாட்ட வைத்து 'ஓ' நு அழ வைக்கும்.
 #உசுப்பேத்தும்_சக்திகளுக்கு_ஓகே_சொல்லப்படாது.
பச்சை விழுமுன்னே..போ போனு ஹாரன் அடிச்சாலும் ..பரப்பிரம்மமா இருக்கணும்.

கோடு_தாண்டி நின்று காக்கி சட்டைக்கிட்ட கால்ல விழப்படாது.

தலைக்கவசம் போடாமல்..சஷ்டி கவசம் சொல்லிட்டேனு அசால்ட்டா இருக்கப் படாது..

'விதிகள் மீறுவதற்கே' என்று நம் தலை விதியை மாற்றாமல் இருக்க முயற்சிக்கணும்.

வாழ்க்கை பாடம்..எங்கும் எதிலும்.
சாலையிலும் ..சம்சாரத்திலும்..சமூகத்திலும்..
அன்புடன்
அகிலானந்தமயி்.

Monday, December 2, 2019

பொரி உருண்டை

தோழியைத் தேற்றினேன் ஃபோனில்..
.'ஏய் ..உருண்டையா இருந்தா என்ன..உடைச்சு தின்னா என்ன..? பொரி உருண்டைனு மட்டும்  சொல்லாதே..அவ்வளவுதானே..இதுக்குப் போய்.....வார்த்தை முடிப்பதற்குள் வள்ளென்று விழுந்தாள்..
ம்ம்ம்ம்..இருக்கட்டும்டி..இந்த தடவை அதிசயமா உருண்டை பிடிச்சிட்டேனு பெருமை பீத்தி ஃபோட்டோ போட்டுக்காதே..
டொக்...ஃபோன் கட்..
Happy karthigai friends

#karthigaikalakkam

Sunday, December 1, 2019

Jothika

கன்னம் கிள்ளும் மாமி..
காதைத் திருகும் மாமா..
............,.........
போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு..

ஜோதிகா  பூவெல்லாம் உன் வாசம்
பட த்தில ஆடிக் கொண்டிருக்க..

ஆஹா..
என் மனமும் கொஞ்சம் சிறகடித்து reverse ல் பறந்தது..
கட்டுச்சாதைக் கூடை மணமணக்க ரெடி..
கண்ணீரும் கம்பலையுமா நான் அழ..அப்பா அம்மா அழ..
யார் டெல்ல்லிக்கு வந்தாலும் டப்பா டப்பாவா சாமான் ..தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் கொஞ்சம் தடம் புரண்டு போனாலும் என் பேர் அதில் மாட்டிக்கும்..பொடிகள், அப்பளம், நொறுக்குத் தீனி, அரிசி மாவு...அதைவிட..காய்ச்சிய நெய்..அஞ்சாறு சம்ப்டத்தை திறக்க அரைக் கிலோ நெய்..கவர் கட்டி, துணியால் கட்டி மாவடு, ஆவக்காய்.காப்பிப் பொடிக்கு ஒரு தனி பாக்கிங்...
.இப்படி ஒரு லிஸ்ட்..

டெல்லில எல்லாம் புடவை விலை ஜாஸ்தினு பண்டிகைக்கு புடவைகள்.மாட்ச்சிங் ப்ளவுஸ்..
ஃபோன் அடிக்கடி பேச முடியாது..ஒரு நிமிஷம் பேசினாலே 300 ரூபாய் சொளையா எடுத்து வெக்கணும்..ஒரு புடவைக்குள் பத்திரமா இருக்கிற மாதிரி அம்மா அப்பாவின் லெட்டர்ஸ்.. முதல்ல வேகமா படிச்சு முடிச்சுட்டு..திரும்பத் திரும்ப ஞாபகம் வரும்போதெல்லாம் எடுத்து படித்து..
இதே காலப் போக்கில் ஊர்கள் பழக..இதெல்லாம் அங்கெயே கிடைக்கிறதம்மா..ரெசிபி சொல்லு நானே ட்ரை பண்றேனு..கை காலை சுட்டபடி..கற்றுக் கொள்ள ஆரம்பித்து..பின் ஒவ்வொரு முறை பிறந்தகம் வரும்போதும் புதுசா கற்றுக் கொண்டதை டப்பாவில் கொண்டு வந்து கொடுத்து..வீடே மணக்க நான் சமைக்கிறேன் என்று அம்மாவை ஒரங்கட்டி..( சாமான் யத்தில கிச்சன் தர மாட்டா அம்மா..)
எத்தனை instant , ready to eat வந்தாலும்..இந்தப் பழக்கம் இன்னும் நம்மிடையே ஒட்டிக் கொண்டுதான் இருக்கு. இப்போ எல்லாம் அம்மா.. மாமியார் எல்லாரும் expert ..domestic ,international pack செய்து அனுப்புவதில்..
காலி டப்பாக்கள் கதை பல சொல்லும்..
வருஷம் போனாலென்ன..வயசும் ஆனாலென்ன..
இந்த tradition இன்னும் தொடர்கிறதுதானே
01-12-2018
#december_not_a_deadend_a_doorway_to_delight
டிக் ..டிக் ..டிக்.
ஆஹா..
கடைசி மாதம் காலண்டரில் காண்பிக்க.. கடந்து வந்த பாதை ..குதூகலமும் கடினமும் கலந்து கட்டிய நாட்கள்..

இழந்தது..இணைந்தது ..இயற்கைச் சீற்றங்கள்..இப்படி ஒரு mixed menu நம்மோட வாழ்க்கையில்..

எடுத்த சபதங்கள்..எல்லாம் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்னு நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொண்டு..

' இந்த இடத்தில் வேற மாதிரி react பண்ணி இருக்கலாமோனு ' நம்மை நாமே நொந்து கொண்ட தருணங்கள்..
அடடே .' நானா ..இது நானா..' என்று சமாளித்த சவால்கள்..

rewind பட்டன் தட்டுவோம்
recollect பண்ணுவோம்
refine ஆகுவோம்
refresh mode ல்
receive பண்ணுவோம்..
வரப் போகும் வருஷத்தை..

so..மக்களே..இன்னும் 30 நாள்தான் இருக்கு..
முப்பது நாளில் மொழி கற்கிறோம்...
Life  எனும் ் language கொஞ்சம் கஷ்டம் தான்.

முயன்றால் முடியாதது இல்லை..

என்ன நான் சொல்றது?
அன்புடன்
அகிலானந்தமயி

ரயில் பயணம்

சும்மா..ஒக்கார முடியல..

காபி டீ போண்டா கூவல் ஒருபுறம் .
காள்  காள் கத்தும் சத்தம் மறுபுறம்

சிணுங்கும் செல்ஃபோன்  காதோடு ஒருபுறம்
சின்ன குழந்தை செல்லம் மறுபுறம்

சீனியர் சிட்டிசன் சீற்றம் ஒருபுறம்.
சீறிப்பாயும் சிறுபிள்ளத்தனம் மறுபுறம்..

குறட்டை விட்ட் கூட்டம் ஒருபுறம்.
கூவி வித்ததை கொறித்தது மறுபுறம்..

ஊர்க்கதை பேசிய உறவுகள் ஒருபுறம்..
உப்பு பெறாததை ஊதியது மறுபுறம்..

வயதான அம்மா..வாஞ்சை ஒருபுறம்..
வாயத் திறவென மிரட்டல் மறுபுறம்..

ஆபீஸ் வேலையில் ஆழ்ந்தோர் ஒருபுறம்..
அனந்த பத்மனாப சயனம் மறுபுறம்..

விடாது ஒலித்த ஒம் பூர்புவஸ்வ ஒருபுறம்..
விட்டதை பேசியே வீணான காசு மறுபுறம்..

வருமான வரி விவரித்தல் ஒருபுறம்
வரிசையில் நிக்கணுமே கவலை மறுபுறம்

அடைபட்ட இருக்கையில் நெளிந்தது ஒருபுறம்..
கொட்டுதா மழை யங்கே..கேள்வி மறுபுறம்..

சென்ட்ரல் வந்ததும்
சிதறும் இக்கூட்டம்..
சுவாரசியம் என்றும்..இந்த
சிக்கு புக்கு ரயில் பயணம்