Saturday, December 21, 2019

Live the present

live the present

வெளியூரிலிருந்து வந்த வூட்டுக்காரர் டமால்னு ஒரு வெடிகுண்டு போட்டார்.

ஆட்டோக்காரருக்கு இன்னிக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தேன்.

' ஐயோ ராசா..மெளனராகம் கார்த்திக் ஸ்டைலில் Mr. ராமசாமி..Mr.ராமசாமினு முள்ளங்கி பத்தை மாதிரி இரண்டாயிரமானு நானு துரத்த..என் BP high ஆகிட்டு சொல்றேன் இருனு ஆரம்பிச்சார்.

வழக்கம்போல ட்ரெயின் லேட்டா வர ஆட்டோ தேடிய வேளையில் எல்லாரும் சகட்டு மேனிக்கு விலை ஏத்த ..ஒரு முஸ்லீம் ஆட்டோக்காரர் ( இங்கே அவர் மதம் நமக்கு தேவையில்லை)
'சார் வாங்க இருனூற்றைம்பது கொடுங்க போதும் என்றாராம். இவரும் ஏற..வழியெல்லாம் ஒரே டென்சனாய் அவர் ஓட்ட..தானே என்ன தோன்றியதோ இவரிடம் புலம்ப் ஆரம்பித்தாராம்.

 ' என் மனைவியை இப்போ டெலிவரிக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கேன் . மூவாயிரம் காலைல பத்து மணிக்குள் க்ட்டணும் . சிசேரியன் செய்யணுமாம். என்கிட்ட காசு இல்ல சார். சொந்த பந்தம் நட்பு எல்லார்க்கிட்டயும் கேட்டேன் ..கை விரிச்சுட்டாங்க..இன்னிக்கு ராத்திரி பூரா ஓட்டினா எனக்கு எப்படியும் காசு கிடைச்சுடும். அதுக்காக அடாவடியா காசு கேட்க மாட்டேன்.
ஒரு தகப்பன் , கணவனுக்குரிய பதட்டத்துடன் அவர் பேசிக் கொண்டே வந்திருக்கார்.

வீடு வந்தாச்சு. இவர் எடுத்துத் தந்தார்..இரண்டாயிரம் ரூபாய். 'சார்..என்கிட்ட சேஞ்ச் இல்லையே..என்று அவர் சொல்ல..சீக்கிரம் மீதியை சம்பாதிச்சுட்டு ஹாஸ்பிடல் போங்க என்று கூறிய இவர்
..' பொண்ணு பிறந்தால் 'சோனா'(sona) நு வைங்க என்று வாழ்த்திட்டு வந்திருக்கார்.
sona  என்றால் ஹிந்தியில் தங்கம்..

தன்னுடைய அம்மாவின் திதிக்காக வந்தவர் ..தன்னலமே இன்றி வாழ்ந்த அவர் அம்மாவுக்காக இதை விட வேறு என்ன செய்ய முடியும்?
அவர் அம்மா..என் மாமியாரின் பெயர் தங்கமணி.

எப்பவும் ஃபோட்டோவில் இருந்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும் என் அம்மா..அன்பை அள்ளித் தந்த என் மாமிியார் இருவருடனும்  அடிக்கடி பேசுவேன்.

நேற்று கூட கேட்டேன்..' தங்கமணி..நீ நாளைக்கு வருவியே..உன்னை எப்படி நான் அடையாளம் கண்டு பிடிக்கிறது ' என்று.
அவள் ..எப்போதும்போல் அவள் பாணியில் காட்டி விட்டாள் போலிருக்கு.

'ஏம்ம்ப்பா..ஃபோன் நம்பர் வாங்கிண்டேளா'னு நான் கேட்டேன்.
' எதுக்கு ..உனக்கு செக் பண்ணணுமா ' என்றார்.
இல்லை இல்லை...அங்கே 'சோனா'  வா..இல்ல 'சோனு' வானு தெரிஞ்சிக்கத்தான் ' என்றேன்.

இது என்ன சொந்த சிந்து பாடவா இந்த்க தளம்னு கேட்க்கலாம்.

நம் ..மத்யமர் மனம்.. ' செய்த தர்மம் தலை காக்கும் ' அது future tense

 தக்க சமயத்தில் உயிர் காக்கும் ..காக்கணும்னு ' என்பது present.

(ஆட்டோக்காரரே..நீங்க நல்லவரா இருக்கணும்..நல்லபடியா இருக்கணும்..
என் அம்மாவும்( மாமியாரும்) இன்று உன் குடும்பத்தை வாழ்த்துவாள்.

No comments: