Wednesday, December 4, 2019

சங்கல்பம்

#04-12-18

#start_your_day_with_a_சங்கல்பம்.

பூஜைக்கு மட்டுமல்ல..பொழுது விடியும்போதே செய்யப் பழகணும் சங்கல்பம்.

சங்கல்பம்..செய்வது ரொம்ப சிம்ம்பிள்..செயலில் காட்டுவதற்குு..கொஞ்சம் மெனக்கெடனும்.

நாம் எடுத்த சங்கல்பத்தை செங்கப்பொடி மாதிர் ஆக்க..சங்கடங்கள் பல வரும்.

வேற யாருமில்லை...சந்துக்குள் உட்கார்ந்திருக்கும் சோம்பேறித்தனம் தான் .. சிந்து பாட வந்துடும்.
' அது கிடக்கு..அப்பறம் செய்யலாம்னு அட்வைஸ் கொடுத்து , அரக்கனாய் மாறிடும்.

இது ஒரு பெரிய விஷயமில்லை.நம்மிடம் இருக்கும் சின்ன விஷத்தையும் வித்தாக மாற்றும்.
நம் மனசுக்கு நாமே போடும் ஒரு சின்ன கடிவாளம்..கட்டளை..அவ்வளவுதான்.

சங்கல்பம்..
அழித்து மாற்றும் பலப்பம் கொண்டு எழு்றீங்களோ..அழிக்க முடியாத ball point எழுதறீங்களோ..பலவீனம் ஆகாமல்..(மன)பலத்தோடு முன்னேற..
நாமும்_வாழ்க்கை_எனும்_போர்க்களத்தில் 'பயில்'வான்_ஆகலாம்.

' நீதான் என்னை எப்பப்பாரு படுத்தறம்மா' என்று சண்டை போட்ட காலமுண்டு.
' எப்படி வேண்டுமானாலும் வாழலாம்
இப்படித்தான் வாழணும்னு இருந்து பார்..அப்போது தெரியும் வாழ்வின் சுவை'
அம்மா சொல்லும் மந்திரம்..இன்னும் என் வீட்டில் ஒலிக்கிறது.

#sankalpa_is_a__promise_to_oneself
அன்புடன்
அகிலானந்தமியி😀🙏

No comments: