Tuesday, December 17, 2019

மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை

Happy children's day..

(தங்கிலீஷில் எழுதிட்டேன்..மன்னிச்சு மக்களே)

மலர்கள் கேட்டேன்..வனமே தந்தனை..

ipad ல் ஆழாமல்
eye ஆக காக்கும்
 அப்பா அம்மா..

மெகாசீரியலுடன்
மூக்கை சிந்தாது
'midas touch' கதையால்
மகிழ்விக்கும் பாட்டி

senior citizen group ல்
சிலாகித்து போகாமல்
சீராட்டி ..காரோட்டி
விளையாடும் தாத்தா

அஞ்சலி.படம் போல
அண்ணா..அக்கா
சுத்தி சுத்தி வரும்
சித்தி அத்தை எல்லாம்

பின்னலும் பாவாடையும்
பளிச்செனெ அலங்காரம்
பாங்காய் செய்யும் மாமா..

'குடும்பமும'் 'வம்சமும்'
கூவிக் கதறாத டீவி.

வட்டமாய் அமர்ந்து
வேடிக்கை பேச்சோடு
வேளா வேளைக்கு
வயிற்றுப் பசியாற்றல்..

school எப்போதும்
cool ஆன இடமாச்சு..

குழந்தைகள் தினமதிலே
கொத்தாய்ப் பூக்களுடன்..
கொள்ளை அன்புடனே
கொண்டாடும் ஆசிரியர்..
fete உண்டு
photo உண்டு
போட்டிகள் உண்டு..
tasty food உண்டு.

இப்படி வளர்ந்தனரே
என் வீட்டுச் செல்லங்கள்..
திரும்பிப் பார்க்கிறேன்..
திரும்பி வரா நாட்களை..

சேமித்தது போதும்..
செலவழித்து மகிழுங்கள்
செல்லப் பொடிசுகளுடன்
கைகோர்த்தே காலமதை.

போனால் வராது..
பொன்னான நேரமிது

கிளிகள் பறந்து போகும்..
கிடக்குமே நினைவிலென்றும்
நித்தமும் கொண்டாடிய...
குழந்தைகள் தினம்தானே..

Happy children's day

No comments: