Saturday, December 21, 2019

ஒரு வாண்டுக் கூட்டமே..

ஒரு வாண்டுக் கூட்டமே..

ஒரு குட்டி story telling session with very sssmall kutties . the story selected was Happy Prince by Oscar Wilde. power point ல் அழகா படமும், குட்டி குட்டி sentence ல் கதையுமா ஒரு presentation.
4 to 7 வயசு வாண்டூஸ்..first slide பார்த்ததுமே ஒரு வாண்டு 'aunty i know this story.. I will tellனு ஒரே enthu.கண்ணா கொஞ்சம் இருப்பா..எல்லாருக்கும் தெரியாது இல்ல..aunty சொல்வேனாம்..ஓகே வா..என்றதும் அரை மனசோடு தலையாட்டி இப்போ கேள்விக் கணைகள் தொடுக்க ரெடி ஆனான் சித்தார்த். கதை இதுதான். ஒரு happy prince  இருந்தான். அவன் இறந்ததும் அவனுக்கு ஊரின் நடுவில் சிலை வைக்கப்படுகிறது. சிலையில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்படுகிறது. கண்ணில் blue sapphire, வாளில் red ruby , சிலை முழுதும் தங்கத்தால் ஆன இலைகள். நாள் முழுதும் தன் மக்களைப் பார்த்துக் கொண்டே இருந்தான்..அவனிடம் வந்து சேர்ந்த பறவையின் உதவியுடன் தன் நாட்டில் கஷ்டப்படுபவருக்கேல்லாம் தன் சிலையிலிருந்த  ஒவ்வொரு precious stone and தங்க இலைகளை கொண்டு சேர்க்க சொன்னான்..அதில் மிகுந்த சந்தோஷம்.அடைந்தான்..சிலையிருந்த செல்வம் முழுவதும் தீர்ந்தது.
.பறவையும் இறந்தது.சிலை இப்போது சீக்காளி போல தோற்றமளிக்கவே...ஊர் மக்கள் அந்த சிலையைத் தகர்த்தனர்..இப்படி போகும் கதை..
என்ன ஒரு அருமையான கதை..தன் மக்கள் கஷ்டப்படுவதைக் காண முடியா ஒரு இளவரசன்..இருந்ததெல்லாம் வாரிக் கொடுத்த வள்ளல்.
வாண்டுகளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு இந்த கதை..why ் aunty that happy prince died?..how can the statue speak?..
statue பேசறதே..அதுக்கு பசிக்காதா..பல முரண் கேள்விகள் கேட்டாலும் ..எல்லாக் குட்டீஸுக்கும் பிடிச்சது அந்த swallow bird ம்..அந்த happy prince னுடைய caring heart and how he found happiness in helping others ம் தான்..
OK..OK..now tell me..how do  you care for others? கேட்டதுதான் தாமசம்..நான் நீன்னு..போட்டி போட்டபடி..
முதல் வாண்டு..
aunty..you know yesterday i helped my friend who forgot to bring his pencil box..
நான் சொல்றேன்..நான் சொல்றேன்னு கை தூக்கியபடி இன்னொரு வாண்டு..aunty ..i helped one Anna in my apartment who fell down while he was playing..கேட்க கேட்க மனசு ரொம்ப குஷியாச்சு..இந்த குட்டீஸ இதே் நல்ல மனசோடு  இருக்கணுமேனு ஒரு கவலையும் எட்டிப் பார்த்தது..
lastly ஒரு சின்ன project. they have to arrange the paper cuttings of the story in a proper order. அது group activity.
சொன்ன கதையை அழகா ஞாபகப்படுத்தி , வரிசையா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படம் எடுத்துத் தர..கொஞ்சம் பெரிய வாண்டு அதை எல்லாம் ஒட்டி..திருப்பி action replay கதை சொல்ல..இனிதே முடிந்தது..எங்கள் story telling session.
Real happiness lies in making others happy and nothing is more precious than a heart that cares for others.
வாழ்க்கைப் பாடம்..வாண்டுகளோடு நானும் கற்றேன்..

No comments: