Thursday, January 23, 2020

Srirangam

திருமணம் ஒன்று...தீ'மண'த்துடன்
jan 23 rd 2004..
மறக்கமுடியாமல் தவிக்கும் போது மார்க்கு மீண்டும் வந்து வந்து ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கார் முகநூலில்..

சீரங்கம்..
சீரங்கம்..
சோகத்தில் தத்தளித்த நாள்..
சீவிச் சிங்காரிச்சு சென்றவரில் சிலர்
சீறிய நெருப்பில்..
செத்து மடிந்த கோர நாள்..
ரங்கா..ரங்கா..ரங்கா..
கங்கும் தீயில் கதறினார் பலர்.
கல்யாணம் ஒன்று காரியத்தில் முடிவு..
பூ சரியா வெச்சிருக்கேனா..
புடவை இந்த கலர் சரியா.
புதுப் பெண்போல புறப்பட்டாள்..
பூகம்பம் காத்திருப்பது அறியாமலே
அலங்கரித்த மேடை..
அழகாய் மணமக்கள்..
அவசரமாய் போட்ட பந்தல்
அதில் வந்தான் எமன்..
வீடியோ பிடிக்க வந்தவனோ
விதியை மாற்ற வந்தவனோ..
சிறுபொறியை புறக்கணிக்க
சீரழிந்தது பலர் வாழ்வு..
சிறு வழி ஒன்றுதான்..
சிக்கிய பெருங்கூட்டம்..
தப்பிக்க வழியில்லை..
தலையில் விழுந்தது நெருப்பு
அமைதியாய் இருப்பவள்
அழுத குரல் கேட்கலையே..
அலறல்கள் வானைப் பிளக்க..
அரங்கனும் கலங்கியிருப்பானோ
புதுசாய் போட்ட மூக்குத்தி
பளிச்சென்று காட்டியது
போர்த்திய அவள் உடலை..

ஆண்டு பதினைன்ந்து ஆனாலும்..
ஆறாத காயம் நெஞ்சில்..
அன்பான என் சித்தி..
அவனடி சேர்ந்து விட்டாள்..

உயிர் பெற்று உற்சாகத்துடன்
உயிர் குடித்த மண்டபம்..
தெருவழியே நடந்த போது..
தாரையாய் கண்ணீர் ..தடுக்க முடியவில்லை..

தீயில் சுட்ட இந்தப் புண் ஆறவே மாட்டேங்கிறதே..
எத்தனை குடும்பங்கள்..இழந்தன சொந்தங்களை..
எந்த ஒரு function என்றாலும்..safety measures சரியாக இருக்கா என்று முதலில் பார்க்க..அரங்கன் கொடுத்த அலாரமோ..

Sunday, January 5, 2020

தாய்மொழி தினம்

தாய்மொழி தினம்

டெஹராடூன் விஷால் மெகா மார்ட்டில் வளையங்களை சுற்றி வந்து வாரிப் போட்டு சாமான் வாங்கிந வேளையில்..

' அங்கே போய் அந்த நல்லெண்ணெய் பாட்டில் எடுத்துண்டு வாங்க'னு ஒரு குரல்..
ட்ராலியையும் டெட்ரா பேக்கையும் போட்டுவிட்டு ஓடினேன்..அந்த குரல் வந்த திசை நோக்கி..
' கண்டேன் சீதையை' என்றது போல..கரை புரண்ட ஆனந்தத்தோடு  '

 நானும் தமிழ்னு' ராஜேஸ்வரி ஆண்ட்டியுடன் கைக் குலுக்கிய நாள்..
ஆனந்தம்..அப்படி ஒரு ஆனந்தம்.

garhwali பாஷையும் kumoani பாஷையும் ,pure Hindi ம் கேட்ட காதில் ..தேனாய் தமிழ் வந்து பாய்ந்த நேரம்..
மறக்க முடியாது..
எல்லா மொழியும் அழகு தான்..
ஆனால்..
தாய் மொழி..தாய் மொழிதான்.
சரிதானே.
அன்புடன்
....

ஆன்மிகம்

#ஆன்மீகம்
(மிக தாமதமாக பதிகிறேன். ஆனால் மனதில் உள்ளதை மத்யமர் நண்பர்களிடம் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?)

பூஜையெல்லாம் உண்டா உன் வீட்ல? நீ Buddhism க்கு மாறிவிட்டயாமே? இப்படி ஒரு சிலர்.Buddhism follow பண்றேன்னு சொல்ற..எங்கே வீட்டில் ஒரு புத்தர் படமும் காணோமே?.

இளக்காரத்தின் உச்சத்தில் பலர்..
இருக்காதா பின்னே? கேட்டவருக்கு சொல்கிறேன்..என்னிடமும் இருக்கு..உன்னிடமும் இருக்கு அந்த்க Buddha nature. அதைத்தான் நான் காண்கிறேன் என்பேன்.

பிள்ளையாரோடு பேச்சு வார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் அம்மா..
அருகம்புல் வைத்து அனுதினமும் பூஜை செய்வாள்.
அம்பாளின் பூரண அனுக்கிரஹம் பெற்றவள்..
அப்படிப்பட்டவளின் பெண்ணாகிய நான்..ஜப்பானிய மொழியில் ஒரு மந்திரம் chant செய்ய ஆரம்பித்தபோது அதிர்ந்தாள்.

இது என்ன நம்ம குடும்பத்தில் இல்லாத ஒரு நம்பிக்கை திடீர்னு உனக்கு எப்படி? தெய்வ குத்தம் ஆகிடும்..எனக்கு பயமா இருக்கு என்று புலம்ப ஆரம்பித்தாள்.
நீங்களும் என்னடாநு யோசிக்கறது புரிகிறது.

 நம்ம மதத்தில் இல்லாத எதைத் தேடி ..ஏன் அங்கே போகணும் ..இப்படி பல கேள்விகள் எழலாம்.
என்னைப் பொறுத்தவரை..என்றுமே வந்த வழி, வழிபட்ட தெய்வங்கள் என்றுமே என் துணை..
இந்த Buddhism என்பது எனக்கு philosophy of life புரிய வைத்தது. அதுவும் நான் வணங்கும் எல்லாத் தெய்வங்களின் செயல்தான் என்னை இந்த புத்த மதம் இழுத்ததற்கும் காரணமோ என்று நினைப்பேன்.

எந்த ஒரு பூஜையும் புனஸ்காரமும் நிறுத்தவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையம் உணர்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஒரு புத்துணர்ச்சி யுடன் தொடக்கம்.

what is the purpose of life? வேறென்ன..மகிழ்ச்சியான வாழ்க்கை..
அது எப்போது கிடைக்கும்?

inner transformation is the key to human revolution என்று ஒவ்வொரு நாளும் என் சொல்,செயல்,எண்ணம் fine tune செய்கிறேன்.
கெஞ்சி கூத்தாடி இதைத் தா அதைத் தா என்று கேட்டது போக..win or lose ,i determine to fight till the my last breathe என்ற மன உறுதி தருகிறது இந்த philosophy.

why me ? என்ற எண்ணம் போய்  try me என்ற எனர்ஜி.

குழப்பம்,கோபம் எல்லாம் இருந்தாலும் உடனே வெளியே வரச் செய்யும் என்னுடைய இந்த Nichiren Daishonin Buddhism practice.

lotus sutra வின் சாராம்சங்கள் படிக்க படிக்க மனம் லேசாக..
இப்போது முன்னை விட எல்லாவாற்றிலும் சிரத்தையாக ..பக்தியும் பூஜையும் அதிகமாக ..
வாழ்க்கை ஒட்டம்.

உலகம் பூராவும் ஒரு extended family எனக்கு.

I quit

#தற்கொலை_வேண்டாமே_கதை

" இங்கேயே வெயிட் பண்ணுமா. நான் ஓடிப் போய் ஸ்கூட்டி கீ எடுத்துண்டு  வரேன்'
சொல்லி விட்டு சிட்டாகப் பறந்தான் கவுதம்.

ரம்யா,அவன் அம்மா.. , அபார்ட்மெண்ட் லானில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் தன் இரண்டாவது மகனுடன் உட்கார்ந்து அவனோடு விளையாட ஆரம்பித்தாள்.

7 வது மாடியில் தன் வீட்டைத் திறந்தவன்..தன் ரூமுக்குள் போய் ஒரு பேப்பரில வேக வேகமாக  எழுதினான்  அந்த ஐந்தே எழுத்து..
#I_QUIT.

என் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் என் அப்பா அம்மா.
இன்னிக்கும் எனக்கு இப்படி ஒரு ரிஸல்ட் வந்தும் கூட ..எதுவுமே நடக்காதது போல .." இப்படி தோல்விகள் சகஜம் கண்ணா..அடுத்த முறை ட்ரை பண்ணு..you will succeed' என்று அம்மா..

ஃபோனில் பேசிய அப்பா "டேய் மக்கு நானெல்லாம் இப்படி பரீட்சையெல்லாம் தைரியமா போய் உட்கார்ந்து எழுதினது கூட இல்லடா..இந்த எக்ஸாமுக்கு செஞ்ச preparation உனக்கு வேற ஒரு இடத்தில் கண்டிப்பா உதவும்.
ஜாலியா ஃப்ரண்ட்ஸோட போய் ஒரு நல்ல சினிமா பாரு..ரிலாக்ஸ்' சாயந்தரம் பார்ப்போம்டா ' அப்பா..

ஆனாலும் மனசு ஆறவில்லை..so ..இந்த முடிவு.

அம்மா என்னை ஏன் ஒரு வார்த்தை கூட திட்டலை?
அப்பா..ஒரு அடியாவது கொடுத்திருக்கலாம்.
அவங்க நம்பிக்கையை இப்படி உடைச்சிட்டேனே என்ற குற்ற உணர்வு ..அந்த குற்ற உணர்வுதான் அவனை இந்த முடிவுக்கு கூட்டிச் சென்றது.
டைனிங் டேபிளில் ஒரு டம்ளரை வெய்ட்டாக வைத்து கதவை சார்த்தி விட்டு..காத்திருந்த லிஃப்டை விட்டுவேக வேகமாக படிகள் ஏறத் துவங்கினான்.

11 வது மாடியில் அவனைப் பார்த்த அவன் ஃப்ரண்ட் விஷால்..' டேய் எங்கடா போற..ஓடாதடா .நானும் வரேன்' துரத்தினான்.

16 வது மாடி..மொட்டை மாடி..
அங்குமிங்கும் ஓடினான் கவுதம். வாகாக எந்த இடம் இருக்குனு ஒரு தேடல்.

"என்னடா ஆச்சு' மூச்சிறைக்க வந்த விஷால்..

கெளதமின் கண்களைப் பார்த்தான்.

 அதில் இருந்த ஒரு வெறி, ஒரு துக்கம்..

" வாடா கீழே போகலாம்' அவன் இழுக்க  "விடுறா என்னை' திமிறிக் கொண்டு குதிக்க நினைத்தவனை " " அங்க பாருடா" என்ற விஷாலின் குரல் அவன் காட்டிய  திசையை நோக்க வைத்தது.

அம்மா..அங்கே தம்பியுடன்.
எப்போதும் அடம் செய்து அண்ணனை உட்காரவே விட மாட்டேன் என்று படுத்துபவனை.
.' இந்த சைட் அண்ணா சைட்..இது உன்னோட சைட்' தன் மடியினை பாகப் பிரிவினை செய்யும் அம்மா..இத்தனை தூரத்திலிருந்தும் அம்மாவின் அன்பு முகம் கவுதமுக்கு புரிந்தது.

"இந்த அம்மாவை ஏமாத்திட்டு நீ குதிக்கப்போறியா டா நீ...?"

விஷால் கேட்டுக் கொண்டே இருக்க..மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல கீழே இறங்கினான்.

ரூமுக்குள் சென்றான். எழுதிய வாசகம் தூள் தூளானது.

கீழே ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டான்.

என்னாச்சு இன்னிக்கு ..are you OK ?
எதுவுமே புரியாத ரம்யா.."கீ எங்கடா?

எப்போதும் எதிர்த்துப் பேசும் அவன் , "sorry ma" என்று மீண்டும் வீட்டை நோக்கி ஓட்டம் பிடிக்க..

டேய் உன் வீடு 7 th floor.
கிண்டலாகச் சொன்ன விஷாலை நன்றியுடன் பார்த்த்தான் கவுதம

பரவாயில்லைனு சொல்லி அப்பாவும் அம்மாவும் ..அவன் குற்ற உணர்வை இன்னும் அதிகமாக்கியதற்கு பதிலாக..அவனோடு உட்கார்ந்து பேசி . அவன் ப்ளஸ்ஸும் மைனஸும் பக்குவமாக எடுத்து சொல்லி ..அவனை ஊக்குவிப்பதும் பெற்றோர் கடமை..
இந்த மாதிரி சமயத்தில்..இந்த கால கட்டத்தில்..பசங்களுடன் கூடவே இருக்கணும்.
விஷால்  எனும் நண்பன் ரோலை  அம்மா அப்பாவும் எடுத்துக் கொண்டால்..?
எல்லா குழந்தைகளின் வாழ்வும் வளம்.தானே?

தற்கொலை என்பது தீர்வல்ல..
இன்று கவுதமுக்கு ஒரு விஷால் கிடைத்தான்.
என்றும் அப்படி கிடைக்குமா?
நம் நம்பிக்கை..போராடி ஜெயிப்பதில் இருக்க வேண்டுமே தவிர ..மாய்வதில்.அல்ல..

thank you Bala Hari for your  inspiring posts

அடையாளம்

அடையாளம்

குட்டி கண்ணா..பாலைக் குடிச்சிடுமா..சங்கர் மாமா..சங்கர் மாமா..சீக்கிரம் வாங்கோ..குழந்தையை டாடா கூட்டிண்டு போங்கோ...சொன்னது தான் தாமசம்..ஒரே உறியில் பால் உள்ளே போகும்..ஆச்சு அடுத்தது கொஞ்ச நேரத்தில நன்னா..குழைய பிசைஞ்சு மணக்க மணக்க நெய் விட்டு பருப்பும் ரசமும் கலந்து ஊட்டல் தொடங்கணும்..கண்ணப்பா..ஆ..அம்.tight lipped...ஆனை வரது..பூனை வரது ...என்ன சொன்னாலும்..திறக்காத வாய்..என் பெரியம்மா அடிக்கடி சொல்வா..இந்த குட்டீஸ் எல்லாத்துக்கும் ஒரு  zip வயத்தில இருந்தா எவ்வளவு நன்னா இருக்கும்பிசைஞ்சமா உள்ள அடைச்சோமா..ஆஹா..என்ன சூப்பர் ஐடியா..உனக்கும் பெப்பே..உங்கப்பனுக்கும் பெப்பேனு ..ஒரு வாய் ஊட்டறதுக்குள்ள உசுரு பாதி போய்டும்..ஒரே ஒரு மந்திரத்துக்கு அடங்கும்..அதோ யாரு பாரு..சங்கர் மாமானு நான் சொல்ல..கங்க்கர் மாமா..கஙக்கர் மாமானு பின்பாட்டு ..
மாமா..கோந்தையை என்ன சொல்லி கொஞ்சுவா..செல்லமே..என் லட்டுவே..என் ஜாங்கிரியே..என் மைசூர் பாகே..இல்லடா..
வாயில் ஜொள் வழிய..கங்க்கர் கங்க்கர்னு ஜபிச்சுண்டே ஆகாரம் இறங்கும்..மாமா எந்த வண்டில வருவானு கேட்டா..புர் புர் புர்னு எச்சல் தெறிக்க சொல்லுவா..
அடுத்து ஒரு ஆளு..அப்பு தாத்தா..
இவா ரெண்டு பேரும் இருந்தாதான் சாப்பாடு இறங்கும்..
டெல்லியிலிருந்து வரும் Bangalore express மெதுவா..station ல நுழைய ஆரம்பிச்சது..second class பயணம்..ஜன்னல் வழியா..நம்ம மனுஷாளைத் தேடல்..நானும் அவரும் பார்வையை ஓட விட.ரயிலின் ஆட்டத்தில் தள்ளாடியபடி நானு..நானுனு வந்த குட்டிச் செல்லம்..திடீர்னு high pitch ல கங்க்கர் மாமா..கங்க்கர் மாமாநு சந்தோஷத்தில் கத்த...
அந்த ஒரு நொடி உலக மகா சந்தோஷமான நொடி..
ஏன்னு கேட்கிறேளா..
ஆறு மாசக் குழந்தையா டெல்லி போனதிலிருந்து..அன்னி வரைக்கும் கங்க்கர் என்ற சங்கர் ஃபோட்டோ பார்த்தே வளர்ந்த குழந்தை..டக்குனு அத்தனை ஜனத்திரள் ல அதுவும் train moving ல இருக்கும்போதே கண்டுபிடிச்சு ..அவள் முகத்தில தெரிஞ்ச சந்தோஷம்.மறக்க முடியாது..
Watsapp,fb, Skype,face time இதெல்லாம் தெரியாத 90s life. Kodak and Konica எங்க குடும்பத்தினால் நிறைய லாபம் சம்பாதிச்சிருப்பான்..அத்தனை photo க்கள்.. அதை செலவுனு நினைச்சதெல்லாம் தூசாக்கினது..
அவள் காட்டிய அடையாளம்.

Result day

RESULT DAY

சில நினைவுகள்..
கணிணியில்லா..
கடந்த காலம்..

செல்லில்லா.
செய்தித்தாள் காலம்..

மாலை இதழ்கள்..
முடிவேந்தி வரும்..

பரீட்சை எண்கள்..
பக்கம் பூராவும்..

மேலிருந்து கீழா..
வடமிருந்து இடமா..

தேடல்..தேடல்..
ஒரு வழியா கண்டுபிடுச்சு..
'ஒ'..அம்மா நான் பாஸ்ஸாகிட்டேன்..

பச்சை கலர்..
மிட்டாய் வழங்கி...
பெரிசா சாதிச்ச
பெருமிதம்..

பள்ளிக்கு போனாதான்..
வண்டவாளந் தெரியும்..
வாங்கின மதிப்பெண்கள்
வெளியில சொல்ல முடியுமானு..

இறுதித் தேர்வு முடிவுகள்..

அன்றும் ..
tension..
இன்றும்..
tension..

இதில என்கதை..
வேற கதை..
அம்மா..
அரசு அதிகாரி..

நான் நீ என போட்டி..
என் மார்க் முதலில் பார்க்க.
அம்மா கொஞ்சம் senti..
செல்வராஜ் கிட்ட கொடுத்தா..
centum கண்டிப்பா வரும்..
சொல்லவா முடியும்..
எப்படிப் பார்த்தாலும்
எண்பதைத் தாண்டாதுனு..

இப்படியாக..
ஊருக்கு முன்னாடி..
மார்க்கும் தெரிந்து..
மன நிம்மதியும் போயி..
இதுக்குத்தான் அப்பவே சொன்னேன்..
இன்னும் கொஞ்சம்..
நன்னா படின்னு...
ஒரு பக்கம்...
அப்பாடா.
மறுபக்கம்..
அப்பப்பா..
போதுண்டா சாமி..
இந்த result ..
படுத்தும் பாடு..

எங்கே செல்லும் இந்தப் பாதை

எங்கே செல்லும் இந்தப் பாதை...

'address ஞாபகமா எடுத்துண்டு போம்மா' ..school கிளம்பும் அவசரத்திலும் என் பெண் சொல்லிட்டு போக..வேலையெல்லாம் முடித்து பையும் பர்சோடயும் முக்கியமா address ம் எடுத்துண்டு என்னோட TN registration Scooty துணை வர..( எந்த எடத்தில நிறுத்தினாலும்..'aap chinnai(சென்னையை இப்படித்தான் சொல்வார் கள்) se  ho kya..udhar ka masala dosa...mmmmm'
இப்படியே எல்லாக் கடையும் ஏறி இறங்கி பையை ரொப்பி..சரி சரி...இப்பொ கிளம்பினா சரியா இருக்கும்....நாற்புறமும் பிரியும் சாலை..எந்த வழியா வந்தேன்..ஒரே குழப்பம்..ஊருக்கு புதுசு வேற..கையில் இருந்த address ஐ வேகமா போய்ண்டிருந்த ஒருத்தரை நிறுத்தி.. bhaiyya..bhaiyya..வழி சொல்லேன் என்று கேட்க..அவரும் दाएं ,बाएं நு என்னை குழப்ப..correct ஆ தப்பான வழியில் என் செல்ல Scooty ஐ செலுத்த..சுத்தி சுத்தி வந்தீக..மாதிரி எத்தனை எட்டு போட்டும் நான் தேடும் address இல்லவே இல்லை..இப்படியே ஊருக்குள் இருக்கும் சந்து பொந்தெல்லாம் வர..ஐயோ இப்படி இருக்காதே.. அகலமான ரோட் ஆச்சே..வீட்டு வாசலில் பெரிய lawn ..அகலமா ஒரு gate..ஒரு வெள்ளை ஊஞ்சல் எல்லாம் இருக்குமே..ஐயோ ..கண்டுபிடிக்க முடியலையே.
ஊர் எல்லைக்கே வந்துட்டோமோனு கவலை வர..எனக்கு வழி சொன்ன ஆள் மீண்டும் என் எதிரில் தென்பட..
behanji..aap.. idhar ..??..us tharaf jaana tha aap ko..(நமக்கு இந்த tha,thi masculine feminine gender Hindi ல இன்னி வரைக்கும் புரியல..தவறிருந்தால் பொறுக்கவும்)
மீண்டும் அவர் வழி காட்ட.சில கிலோமீட்டர் கடந்த பிறகு..ஆஹ்ஹா..வந்துட்டமோ...இதோ இருக்கே அந்த பெரிய சாக்கடை..வழி நெடுக யூகலிப்டஸ் மரமா இருக்கே..அதோ பாபு கடை..அதே அதே..வந்தாச்சு..
சந்தோஷத்தில் Scooty பறக்க..
அம்மா..அம்மா..என்று என் பெண் குரல்.......sudden break போட்டு scooty ஐ நிறுத்த..எங்கே போற...இவ்வளவு நேரம்..காத்து காத்து காலெல்லாம் வலிக்கிறது....அடடே..நம்ம வீடு வந்தாச்சு..'கண்டு பிடிச்சேன் கண்டுபிடிச்சேன்..கடைசியாய் என் வீட்டைக் கண்டுபிடிச்சேனு rajini style ல மனம் துள்ள..
 எந்த புது ஊரில் குடி போனாலும் நடக்கும் தேடல் விழா..'bharat ek khoj' இது தானோ
( google map எல்லாம் அப்போ இல்லை..அப்படியே இருந்தாலும் இந்த மர மண்டையில் அது ஏறினதில்லை)..

அதுவும் Bangalore கேட்கவே வேண்டாம்..கண்டிப்பா எல்லா சிக்னல் மேலே இருக்கும் name board மேல மரக்கிளை ஒன்று படர்ந்து மறைச்சிருக்கும்..இன்னொரு  பயம்..போகும் போது இருக்கிற வழி,திரும்பும்போது  one way ஆகிடும்..அப்பறம் என்ன..என் வீட்டை..நானே..கஷ்டப்பட்டு தேடி வருவேன்..
அப்போ எல்லாம் தோணும்..அட்ரசஸ் கிடையாது..land mark கிடையாது..paint கிடையாது..இந்த குட்டிப் பறவை எல்லாம். எப்படி அழகா..வழி கேட்காமல் தன் கூட்டை வந்தடையுது என்று...
அதிசயம் தான் அவன் படைப்பு..

தண்ணீர் சிக்கனம்

#ஸண்டே_ஸ்பெஷல்
#தண்ணீர்_சிக்கனம்_தேவை_இக்கணம்

( மன்னிச்சு..மன்னிச்சு..எப்போதும் போல last minute submission)

#அந்த_யமுனா_நதியோரம்..அம்மா..அம்மா..

 டெல்லி ஸ்டேஷனில் வலது காலை எடுத்து வைக்கும் முன்னே..வூட்டுக்காரர் சொன்னார்..' பாஷை கத்துக்கறயோ இல்லயோ .."பானி' பத்திரமா சேமிக்க கத்துக்கோ" என்பதுதான்.

தலைநகரில் எனக்கு தலையில் விழுந்த கொட்டு..
'மோட்டார் டாலோ' ( மோட்டார் போடு என்பதன் ஜுனூன் effect) நாம் ஹிந்தியில் பேசிய முதல் sentence. . ஹவுஸ் ஓனரம்மா 'மோட்டார் சலாதோனு' சொல்லச் சொல்லு உன் பீவியை என்று பயமுறுத்தல்.

பணிக்கர் டிராவல் பக்கத்து வீடு. "வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த வீட்டில் தண்ணியேதுனு' ..உத்தரணி முதல் கொண்டு பானி ..பானி தான்.

அடுத்து போனோம்..
 #அந்த_நர்மதை_நதியோரம்
 ஆஹா..வாசலில் விந்தியமலை தரிசனம்
 வேலைக்கு போவார் வூட்டுக்காரர் நர்மதை நதி ப்ராஜக்ட்டுக்கு..வீட்ட்ல பக்கெட் பக்கெட்டா தண்ணி ரொப்பி வைச்சு தாவித் தாவிதான் நடக்கணும் பாத் ரூமுக்குள்ள..
 மூட்டை அடுத்து கட்டினோம்..

 டேஹ்ராடூன்..
#அந்த_கங்கைக்_கரையோரம்
 கங்கைக் கரை வாசம்னு போக..அங்கே கங்கா வாட்டர் சப்ளைனு லாரி லாரியா தண்ணீர் வாங்கணும் வெயில் காலத்தில்..
 சரி..கேதார் அடிவாரத்தில் குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்த வீட்டுக்காரரை பார்க்கப் போனால்..கங்கை ப்ரவாகமா வீட்டு சுவர் ஒட்டி அப்படி ஒரு சத்தத்தோடு ஓடும். ஆனால்..வீட்டுக்குள் பக்கெட் தண்ணிக்கு படாத பாடு..
' கங்கை ஆற்றில் நின்று கொண்டு நீரைத் தேடும் பெண் மானிவள்"னு சோக கீதம்.

 #அந்த_பாலாற்றங்கரையோரம்..
 லீவுக்கு சென்னை வந்தால் ,gate போட்டு மூடிய கிணறு.. பாலைவனமான பாலாறு தண்ணீர் தொட்டி..
 இப்போ சோகத்தையெல்லாம் கொட்டிட்டேனா..

 #தண்ணீர்_சிக்கனம்.
 எல்லாரும் நிறைய பாயிண்ட்ஸ் சொல்லிட்டீங்க..
 Adding some extra here;

• இப்போதெல்லாம் வாஷிங் மெஷின் இருப்பதால்..தோய்க்கும் தண்ணீர்னு கிடைக்கறதில்லை. அதனால் பாத் ரும்களை துணியால் துடைத்து விடுகிறோம். சுத்தமாகவும் இருக்கு.யாரும் வழுக்கி விழும் அபாயம் இருக்காது.

• பசங்க ஸ்கூல் வாட்டர் பாட்டில் மீந்த  தண்ணீரை வீட்ல இருக்கும் பக்கெட்டிலோ pot லயோ ஊற்றணும.

டம்ளர் டம்ளரா தண்ணீர் வைப்பதை நிறுத்தி ..டைனிங் டேபிளில் ஒரு கூஜாவில் தண்ணீர். ஒரு டம்ளருடன்.
வேண்டுமென்ற அளவு குடிக்கலாம்.

ஹோட்டலுக்கு போனாலும் வாங்கின வாட்டர் பாட்டிலில் இருக்கும் மீதமுள்ள தண்ணீரை எடுத்து கொண்டு வந்துடுவேன். ( செம்ம திட்டு ஒரு காலத்தில் விழுந்தது. இப்போ திட்டினவங்களும் ..திருந்திட்டாங்க)

•அபார்ட்மென்ட்களில் லான்களை பசுமையாக வைத்திருக்கணும்னு அவ்வளவு தண்ணீர் போகிறது.

•அதே போல ஒவ்வொரு அபார்ட்மென்ட் டிலும் swimming pool இருப்பதை குறைத்து..common swimming pool for each lane or area வுக்கு வகை செய்யணும்.

•இந்த முறை பெங்களூரிலேயே தண்ணீர் கஷ்டம் என்பதால்..water sense taps உபயோகிக்க சொல்லி உத்தரவு வந்தது எங்கள் அசோசியேஷனிடமிருந்து.

•எங்க வீட்டுக்கார்ர் ஆஃபிஸில் 
•waste  water treatment செய்த நீர்தான் floor cleaning and in wash rooms.

#கடைசியா_ஒண்ணு..
நம்மளோட எந்த பப்புவும் வேகாத இடம் நம் வலது கரம்.
' தண்ணி தான் வருதில்லனு' தா..ரா..ளமா செலவழிப்பவர்கள்.
கிச்சன் பைப்பை slow ஆ வரும்படி செய்து விட்டேன்.
Daily class தான்..lecture தான். ஐயோ அம்மணி..நான் தண்ணியை கம்மியாவே செலவழிக்கிறேன்னு கை கூப்பல்😀😀

#நம்ம_பக்கமும்_கொஞ்சம்_ திருத்திப்போமே..

வெய்யில் நேரம் பாத்திரம் காய்ந்து போகும். So..kitchen sink ல் outlet ஐ ஒரு துணியால் அடைத்துவிட்டு , கொஞ்சம் தண்ணீர் ரொப்பி பாத்திரத்திரத்தை ஊறப் போட்டு எடுக்க..தேய்த்து அலம்பும்போது தண்ணீர் consumption குறையும்.

அடுத்து..நாம் எத்தனை பாத்திரம் உபயோகிக்கிறோம்.

அடுப்பில வைக்க ஒண்ணு டேபிளில் வைக்க ஒண்ணு ஓவனில் சூடு பண்ண ஒண்ணு..கடைசியா..ஃப்ரிஜ்ட்க்குள் தள்ள ஒண்ணு..
#கடாய்_to_குளிர்சாதனம்_வரை
சொப்பு சொப்பாய் எத்தனை பாத்திரம். So ..cut the usage of vessels.

ப்ளாஸ்டிக் containers...air tight நு வாங்கிட்டு அதுல இருந்து வரும் மசாலா வாசனை போக்க..எத்தனை தேய்க்க வேண்டியிருக்கு.
Let's go back to stainless steel again.

நம் சந்ததிக்கு water tablet கொடுக்க வேண்டாம். Water table ஐ உயர்த்த நம்மால் ஆன எல்லா வழியும் மேற்கொள்வோம்.

நதிகள் தானாகவே இணைகிறது..
நாம் யார் தடுக்க அதை.

மார்க்கம் தெரிந்தும் ..மனம் இல்லாத கொடுமை..மாந்தர்கள் படும் அல்லல்.

வழி பிறக்கணும்..🙏🙏

வடை மாலை

வடா..வடா..ஆஞ்சு வடா..

'ஹனுமான்ஜி கோ "வடா மாலா' லகானேக்கா ப்ரார்த்தனா ஹை..ஆப் கரேங்கே க்யா' கேட்ட என்னைப் பார்த்து " "ஙேனு' முழித்தபடி அந்த டேஹ்ராடூன் கோயில் panditji ..' Abhi hojayega beti' என்றார்.

"தீயா வேலை செய்வாரோனு' நான் காத்திருக்க..அஞ்சே நிமிஷத்தில் ஆஞ்சுக்கு ஒரு " bada mala' உடன் ஆஜரானார்.

"Vasanthi " யை ' basanthi' என்று சொல்பவர்களாச்சே..
நான் சொன்ன "vada mala' அவருக்கு bada  mala வாக புரிய..
ஆஞ்சுக்கு ஆளுயர ஆரஞ்சு மஞ்சள் பூக்களில் "ப"டா மாலை..
இன்னிக்கு ஆஞ்சுக்கு இதுதான் வேணும்  போல இருக்கு என்கிட்டேர்ந்துனு மனசுக்குள் சந்தோஷம்.

' நாம ஏன் வீட்லயே செய்யக்கூடாதுனு
ட்ரை பண்ண ஆரம்பிச்சேன்

ஒரு தடவை ஒரே ரப்பர் மாதிரி இருக்கும்.
இன்னொரு முறை..எண்ணெய் குடித்து தள்ளாடும்..
சில சமயம் சுத்தியலால் அடிச்சு சாப்பிடற மாதிரி இருக்கும்.

இந்த 'வடா' வுடன் 'விடா' முயற்சி..
இப்போ வெற்றி ..வெற்றி தான்.

ஒவ்வொரு வடை தட்டும்போதும்..ராம நாமம் சொல்ல..

மாலையாக கோர்த்த வடை..மலை போல் வரும் துயரும் போக்குமென்றெ..
மாருதியை..சஞ்சீவினி மலை ஏந்தியவனைத் தொழ..
மனசு பாரமெல்லாம் பனியாய் விலகிடுமே..

லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து..
ஓம் ஷாந்தி..ஷாந்தி..ஷாந்தி..

இன்னிக்கு கோட்டா ஓவர் .

Now over to
Sumathi Manivannan V.n. Meenakshi

Friday, January 3, 2020

Toilet ekmprem.katha

toilet ek prem katha ..இல்லையில்லை..
toilet ek  பிரச்சனை கதை..

toilet ..ek prem katha நு ஒரு ஹிந்தி படம். தன் காதல் மனைவிக்காக தாஜ்மஹால் கட்டினது அந்தக் காலம். ஆனால் இதில் ஒரு கழிப்பறை கட்டித் தர படாத பாடுபட்டு ஜெயிக்கும் ஒரு கதை.
கல்யாணம் ஆன மறுநாள்..இருட்டு அப்பி இருக்கும் காலையில்..கையில் லோட்டாவுடன்.' கிளம்பு லோட்டா பார்ட்டிக்கு' என்று வெட்கத்துடன் சிரித்து அழைக்கும் கிராமத்துப் பெண்கள்..then the story goes on and on..

கிராமத்தில் இப்படி சீன் என்றால் நகரத்தில் இருந்தும் இல்லை போல இன்னும் பல சீன்கள்.

'ஏம்ப்பா..5.30 மணி பஸ் வந்திருக்கும்ல.இன்னும் இவளைக் காணுமே. பஸ் ஸ்டாப்பில் இருக்கும் அப்பா இவளைப் பார்த்தாரா இல்லையா..
அம்மா , புலம்பியபடி உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.
வாசல் கேட் சத்தம் கேட்டு ஓடினாள். ' கண்ணு பஸ் லேட்டா..என்ற அவள் கேள்விக்கு ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்..நகரும்மா...
என்றபடியே வேகமாக ஓடினாள் பாத் ரூமை நோக்கி அவள் பெண். நேற்று சாயந்திரம் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தவள். ஊர் வந்து சேருவதற்குள் அவஸ்தை. பின்ன nature's call முக்கியமா..மம்மி கேள்வி முக்கியமா?

ஊருக்கு கிளம்பும் நாளும், திரும்பும் நாளும் ,பஸ் பயணம் என்றால் பாதி பட்டினி தான் இங்கு பல பெண்களுக்கு.முக்கியமா தண்ணீர் குடிக்க ரொம்ப பயம்.

இதுதாங்க சீன்.
குஷன் சீட்டோ,குத்தற சீட்டோ பஸ் பயணம் என்றாலே முதலில் பயம் வருவது பாத் ரூமுக்கு என்ன செய்வோம்னு தான்.
வழியில் ஒரு பாடாவதி ஹோட்டலில் பஸ் நிற்கும். பாத் ரூம் எங்கே இருக்கு என்று கேட்டால்..' அதோ அந்தக் கோடியில கும்மிருட்டாய் இருக்கும் இடத்தை கை காட்டுவார்கள். அப்பாடா என்று நினைத்த மனம் ..ஐயோ இருட்டு என்று பின்வாங்கிடும்.குடும்பத்தோடு போகும் பெண்களுக்கு டார்ச் அடிக்க யாராவது நிற்பார்கள். தனியாகப் பயணம் செய்யும் பெண்கள்,யுவதிகள் படும் பாடு இருக்கே..
இவர்கள் யோசிப்பதற்குள் வண்டி விசிலடிக்க ஆரம்பிக்கும். சரி..சரி..அடுத்து ஏதாவது இரு டோல் இல்ல பெட்ரோல் பம்ப்ல நிக்க சொல்ல கேட்டுக்கலாம் என்று அடக்கி அமர்ந்து தொடரும் பயணம்.

அதுக்குள்ள நடுநிசி வந்துடும்.
நம்ம கஷ்டம் உணர்ந்து  டிரைவர் பெட்ரோல் பம்ப்பில் நிறுத்துவார்.
முக்கால் வாசிப் ப்யணிகள் குறட்டையில் இருப்பார்கள். அக்கம் பக்கம் பார்த்து இறங்க ,ட்யூட்டி முடிந்து அங்கேயே படுத்து தூங்கியபடி ஊழியர்கள். இவரகளையெல்லாம் தாண்டி அந்த ரெஸ்ட் ரூம் கண்டுபிடிப்பதற்குள் தொண்டை வரண்டு ஒரு அதீத பயம் கவ்வும்.
பாதி தூரம் போய்விட்டு ..' ஐயோ பயமா இருக்குனு திரும்பி வந்து..மீண்டும் தொடரும் அவஸ்தை.

இது போல அனுபவத்திற்கு பின் , என்ன ஆனாலும் சீட்டோட சீட்டா ஒரே பொசிஷன்ல உட்கார்ந்தே போய்டலாம்னு ஞானம் வந்துடும். பஸ் என்பது ஒரு part and parcel of life for many . அப்படி இருக்கும் போது ஏன் இன்னும் வசதிகள் அதுவும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லை?

( பஸ் பயணம் பிடிக்கும் எனக்கு. அதுவும் தனியாக சில ஊர்களுக்கு செல்ல பஸ்ஸே வசதி என்பதாலும். சில பஸ்கள் தான் பெரிய ரெஸ்டாரெண்ட் வாசலில் நிற்பார். என் அனுபவத்தில் அரசு மற்றும் சில ஆம்னி பஸ் நிறுத்தும் இடங்களெல்லாம் தண்ணீர் கூட குடிக்க முடியாது..)

இன்னொரு சீன்.
வெயில் காலமாயிருக்கு ..பெரிய water bottle எடுத்துண்டு போயேன் ..கண்ட தண்ணீ குடிச்சு பரீட்சை நேரத்தில் உடம்புக்கு வந்துடப் போறது..அம்மா சொல்வதை காதில் வாங்காமல் , பல சமயங்களில் எடுத்துச் சென்ற பாட்டிலும் பாதி அப்படியே கொண்டு வரப் படும்.
ஏனென்று கேட்டால்..பதில் இப்படி வரும்..
' கிடைக்க்றதே பத்து நிமிஷம் ப்ரேக்..சாப்பிடறதா .இல்ல போய் க்யூல வாஷ் ரூமுக்கு நிக்கறதா..அப்படியே போனாலும் தண்ணீர் பாதி நேரம் இருக்காது..என்ன பண்றது. ?

complaint பண்ண வேண்டியதுதானேனு கேட்டா..அதுக்கும் இன்ஸ்டண்ட் பதில் வரும்..'என்ன பெரிய நடக்கப் போகிறது. ரெண்டு நாள் சரியா இருக்கும். அதுக்கப்பறம் அதே பழைய் கதைதான்.
better not to use than getting infectionநு நச்னு ஒரு பதில் வரும்.
எல்லா institutions ம் அப்படினு நான் சாடலை. ஆனால் முக்கால் வாசிப் பேர் இதுக்கு முக்கியத்துவம் கொடுப்பத்தில்லை என்பதுதான் வருத்தம்.

சரி ..இப்போ மத்யமர் ல இதை போட்டு என்ன சாதிக்கப் போறீங்கனு ஒரு மைண்ட வாய்ஸ் கேட்டால்..
நான் செய்யும் சின்ன உதவி.
என்  கூட வரும் ..கஷ்டம் கண்ணில் தெரியும் யுவதிகளுக்கோ..சக பெண் பயணிக்கோ ..வாங்க சேர்ந்து போகலாம்னு உதவுவேன்.

ஆனால் அப்படி போகும்போது ஜாதகம் எல்லாம் கேட்டு குழந்தைகளை டென்சன் படுத்த கூடாது.  அப்பறம்.அவங்களுக்கு நாம நல்லவரா கெட்டவரானு நாயகன் ஸ்டைலில் கேள்வி உறுத்தும்.

ஸ்கூல் காலேஜில் கொஞ்சம் பெட்டிஷ்ன் பெரியநாயகி ஆவேன். PTA meeting ல் நான் இந்த topic ஆரம்பிக்க..என் பெண்கள் என்னை முறைக்க..ஆமாம் மேம்..ஆமாம்னு ஒரு அப்பா அம்மா கும்பல் சேர்ந்து கோரஸ் பாடுவர். கொஞ்ச நாளைக்கு விடிவு கிடைக்கும் குழந்தைகளுக்கு.

நிறைய குழந்தைகள் இப்போது தங்களின் பர்த்டே பார்ட்டிக்கு செலவு செய்வதை விட்டு இந்த மாதிரி கழிப்பறை கள் கட்டுவதற்கு உதவ முன் வருவது படிக்கும்போது..
நம்பிக்கையும் வருகிறது.

bathroom என்பது basic.. அதுக்காக கட்டியா தர முடியும்..முடியாதுதான்..
ஆனால்...கொஞ்சம் உதவி பண்ணலாம்..

Thursday, January 2, 2020

எண்பதிலும் ஆசை வரும்

#குறுங்கதைப்_போட்டி
எண்பதிலும் ஆசை வரும்

' இம்புட்டு நேரமாச்சு..இதோ வரேன்னு போன பேரப்புள்ளையை இன்னும் காணுமே.'
மருமவளுக்கு தெரிஞ்சா ஊரைக் கூட்டி , என்னை உண்டு இல்லனு ஆக்கிடுவாளே..
முனீஸ்வரா.. புள்ளையை பத்திரமா வூட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துடப்பா..'
மனசு பதை பதைக்க தங்கம் பாட்டி திண்ணையில் நிலை கொள்ளாமல் உட்கார்ந்துருக்கா..

எல்லாம் இந்த டீவியால் வந்தது. சீரியல் பார்த்துக் கிட்டு சும்மா இருக்காம..
நடுவில் வரும் விளம்பரத்தை பார்த்து பேரனிடம்..' இதெல்லாம் நமக்கு கொடுத்தே வைக்கலப்பா..இப்படியே இந்த ஜன்மம் போய்டும்' புலம்பியபடி உள்ளே சென்றது தான் காரணமாப் போச்சு.

அவள் பேசியதைக்  கேட்டபடி இருந்த பட்டிணத்திலேர்ந்து ஊருக்கு வந்திருந்த பேரன் சைக்கிளை எடுத்து விருட்டுனு கிளம்பிட்டான் . பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. ஐயோ தப்பா எதுவும் சொல்லிட்டோமோ என்று தவிக்க ஆரம்பித்தாள்.

ஆசை யாரை விட்டது. கேட்டிருக்க வேண்டாமோ..தெய்வமே..எப்புடி இந்தப் புள்ளையப் போய்த் தேடுவேன் என்று விசனத்தில் திண்ணையில் கவலையோடு இருப்புக் கொள்ளாமல் உட்கார்ந்திருந்தாள்.
யார்க்கிட்டயாவது சொல்லி தேடச் சொல்லலாமா..?
அவங்க அம்மாவுக்கு போன் போட்டு சொல்லிடலாமா..?
'என்ன பாட்டி..வெளியே உட்கார்ந்திருக்கேனு கேக்கறவங்களுக்கு பதில் சொல்ல சொல்ல இன்னும் படபடப்பு கூடிப்போச்சு.
உட்கார்ந்தபடியே அப்படி கண்ணசர்ந்தாள்..

" பாட்டி..பாட்டி..'தூக்கி வாரிப் போட்டு முழிப்பு வந்து பார்த்தபோது..
கண்முன்னே பேரன்.

"ராசா..எங்கப்பா போய்ட்ட? ' அழுகை யும் கோபத்தோடும் அவள் கேட்க..
சைக்கிள் காரியரில் இருந்து மெதுவாக அந்த பெரிய கலரான டப்பாவை எடுத்து

"இந்தா பாட்டி  நீ கேட்டது'..

திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியம்.பார்க்கவே கொள்ளை அழகு. அவள் நினைச்ச மாதிரியே அலங்காரத்துடன்.

" சூடு ஆறதுக்குள்ள சாப்பிடு' பேரன் சொல்லச் சொல்ல.

 பாசத்தோடு பார்த்தாள் பேரனையும் அவன் வாங்கி வந்த பிட்ஸாவையும்.

தேடல்

06-12-18
#மனதில்_தோன்றிய_முதல்_வார்த்தை.
#தேடல்
மூக்கு கண்ணாடி எங்கேனு தேடலோட ஆரம்பிக்கும் விடியல்.
மூக்குக்கு மேல இருந்தாலும்..துழாவித் துழாவி..எங்கே வெச்சேன்னு சில சமயம்..
கண்ணுக்கெதிரிலேயே இருக்கும் சாவி கொத்தை கண்ட இடமெல்லாம் தேடல்.
வீட்டிலும் தேடல்..வெளியிலும் தேடல்..

தேடல் இல்லாத் வாழ்க்கை...தொய்ந்து போன ஒரு நடைப் பயணம்.

" அம்மா..என்னோட நோட் எங்கனு பாரு' இது கேட்காத வீடு இல்லை..சரினு தேடப் போனால்..எப்பவோ தொலைந்து போனது என்று முடிவு கட்டின முக்கியமான பொருள் ஒண்று கிடைக்கும்.

தேடல் ..ஆனால் நிறைய பாடம் கற்றுத் தரும்.
முதலில் எதைத் தேடறோம் என்கிற தெளிவு வேண்டும்.
அடுத்து, சில தேடல்கள்..பழசை தூசி தட்ட வைக்கும். புதுசாவும் வழிகாட்டும்.

இரையைத் தேடும்போது கொஞ்சம் இறையையும் தேடுவோம்.

" நான் இங்கிருக்கேன்..நான் இங்கேயும் இருக்கேன் ' என்று நம்மை கூப்பிட்டபடி இருக்கும் இறைவனைக் காண்போம்.

கடுமையா பேச நினைக்கும் போது இனிமையான வார்த்தை தேடுவோம்.

' உனை எங்கேத் தேடுவேன்..'என்று சும்மா இருக்காமல்..சுறுசுறுப்பாக இருப்போம்.
தேடிக் கொண்டே இருங்கள் எதையாவது.
வாழ்க்கையின் பக்கங்கள் வழி காட்டும் தேடல் வரிகளால் நிரம்பட்டும்.

#அதுசரி..இன்னிக்கு உங்களுக்கு தோன்றிய முதல் வார்த்தை என்ன மக்களே?