Thursday, January 2, 2020

தேடல்

06-12-18
#மனதில்_தோன்றிய_முதல்_வார்த்தை.
#தேடல்
மூக்கு கண்ணாடி எங்கேனு தேடலோட ஆரம்பிக்கும் விடியல்.
மூக்குக்கு மேல இருந்தாலும்..துழாவித் துழாவி..எங்கே வெச்சேன்னு சில சமயம்..
கண்ணுக்கெதிரிலேயே இருக்கும் சாவி கொத்தை கண்ட இடமெல்லாம் தேடல்.
வீட்டிலும் தேடல்..வெளியிலும் தேடல்..

தேடல் இல்லாத் வாழ்க்கை...தொய்ந்து போன ஒரு நடைப் பயணம்.

" அம்மா..என்னோட நோட் எங்கனு பாரு' இது கேட்காத வீடு இல்லை..சரினு தேடப் போனால்..எப்பவோ தொலைந்து போனது என்று முடிவு கட்டின முக்கியமான பொருள் ஒண்று கிடைக்கும்.

தேடல் ..ஆனால் நிறைய பாடம் கற்றுத் தரும்.
முதலில் எதைத் தேடறோம் என்கிற தெளிவு வேண்டும்.
அடுத்து, சில தேடல்கள்..பழசை தூசி தட்ட வைக்கும். புதுசாவும் வழிகாட்டும்.

இரையைத் தேடும்போது கொஞ்சம் இறையையும் தேடுவோம்.

" நான் இங்கிருக்கேன்..நான் இங்கேயும் இருக்கேன் ' என்று நம்மை கூப்பிட்டபடி இருக்கும் இறைவனைக் காண்போம்.

கடுமையா பேச நினைக்கும் போது இனிமையான வார்த்தை தேடுவோம்.

' உனை எங்கேத் தேடுவேன்..'என்று சும்மா இருக்காமல்..சுறுசுறுப்பாக இருப்போம்.
தேடிக் கொண்டே இருங்கள் எதையாவது.
வாழ்க்கையின் பக்கங்கள் வழி காட்டும் தேடல் வரிகளால் நிரம்பட்டும்.

#அதுசரி..இன்னிக்கு உங்களுக்கு தோன்றிய முதல் வார்த்தை என்ன மக்களே?

No comments: