Saturday, November 27, 2021

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?

 எதிலும் இங்கு  இருப்பான் அவன் யாரோ?


Baby corn க்குள்ளும் தெரியும் பகவான்..


ஒவ்வொரு layer ஆ பிரிக்கப் பிரிக்க..

மண் வாசனையோடு..

பட்டு வஸ்த்திரத்தில் ..

சுத்தி வைத்த குழந்தை போல..

அழகா..ஒய்யாரமா ..படுத்துண்டு..

இந்த baby corn.


இந்த சின்ன சோளத்துக்கே ..இப்படி பாதுகாப்பு வளையம் தருபவன்..

நம்மையும் காப்பான்..காப்பான்..🙏🙏


God tussi great ho🙏🙏


Friday, November 26, 2021

எனக்கொரு மிஷின் வேண்டு..மடா..

 எனக்கொரு மிஷின் வேண்டு..மடா..



நெல்லு பொரியா..அவல் பொரியா..

எந்த பொரியானால் என்ன..?


எலி கூட சிக்கும் பொறியில்..ஆனால் இந்த சின்னப் பொரி இருக்கே சிக்காது என்னோட சின்ன கையில்..


பாகு பதம் பல இருக்காம். கம்பிப் பதம், தக்காளிப் பதம்..டங் பதம்

கம்பியில நடக்கற மாதிரி தான். balance கொஞ்சம் போக ..கம்பி ..கயிறு மாதிரி ஆகும்..கம்மர்கட் கண்டிப்பா கிடைக்கும்.

பொரி உருண்டை ...


பொல பொலனு கொட்டும் சில சமயம்..

'பா'ல் மாதிரி போட்டு விளையாடலாம் சில சமயம்.

பிடிக்க வந்தா உருண்டை...இல்லாட்டி தூள்தும்பட்டை.

இதுதான் நம்ம பொரி பாலிஸி.


ஒட்டுகிறதே பாகு என்று பொரியோடு கலக்க..

மாலில் கிடைக்கும் caramalised popcorn மாதிரி தனித்தனியா முழித்து நிற்கும்..


கூட்டணி முறிந்து தனி சீட்டு கேட்டு பொரி(றி) பறக்கும்.

நாலு உருண்டை பிடிப்பதற்குள் நாக்கு தள்ளிடும்.

சுடறதேனு சும்மா இருக்க முடியாது...உஸ் உஸ்னு கைக்குள் அமுக்கினாலும் உனக்கும் 'பெ'ப்பேனு ஓடிப் பிடிச்சு விளையாடும்.


உதிர்ந்து போனாலோ..

உருவாகும்  பல பலகாரம்.

அதுக்கு Meena Anand Bhavani Santhanam mam எல்லாரும் நம்மை enlighten பண்ணுவார்கள்.


விக்ரம் வேதாள் மாதிரி..

விடாது முயற்சி..

வருஷா வருஷம்.


எதற்கெல்லாமோ மெஷின் இருக்க..

இதுக்கு ஒரு மெஷின் வேண்டுமடானு..

கேட்கறது யாராவது காதில் விழட்டும்.

வெல்லமும் பொரியும் கலந்து போட்டதும்..

வெளியே வரணும் வட்டமாய் ஒரு பொரி உருண்டை..


நம்ம புலம்பல் எல்லாம் முடிந்து..இப்பொழுது ப்ராத்தனையும் செய்யலாம்.


அப்பமோ அடையோ..

அலண்டு போன

அவல் பொரி உருண்டையோ..

ஆசையாய் படைக்க..

அங்கே வருவான்..

அருணாச்சலன் அவன்தான்..

அருளும் தருவான்..

இருளும் அகற்றுவான்.


பொறுமையா படிச்சவங்களுக்கு பொரி உருண்டை கொடுக்கத்த்தான் ஆசை.

(அடடா..இது என்ன சோதனை நு உங்க மை.வா. கேட்கிறது)

அடுத்த வருஷம் பார்ப்போம்..

மெஷின் வருதா இல்லை..

முன்னேறுகிறேனா நான் என்றே..


மிக இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்

Thursday, November 25, 2021

மனிதற்கு மொழியே..தேவைதான்..

 மனிதற்கு மொழியே..தேவைதான்..


ஆட்டோல போகணும்் ..app வேணும்.

அரிசி வாங்க போகணும் ..app வேணும்..

எலக்ட்ரீஷுயன் வந்தா app வேணும்..

ஏதாவது கேட்கணுமா..app வேணும்..

வேற என்ன ..learn Kannada app தான்..


இன்னுமா இந்த வீட்டு வழக்கம் கத்துக்கலனு ..கல்யாணமான பொண்களை கலாய்க்கற மாதிரி..இன்னுமா..நீ..கன்னடம் கத்துக்கலை.. கரெக்ட்தானே..

 வந்து வருஷம் நாலாச்சு..வாழும் இடத்தின் மொழி கற்பது மிக அவசியமாச்சே..

ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு அழகு..

relate பண்ணி படிக்க ஆரம்பிக்க இந்திய மொழிகளும் ஒன்றுக்கொன்று பிணைந்து கிடக்கும் அற்புதம் புரிகிறது.

 ஹிந்தியுடன் உயிர் வாழலாம்..ஆனால்..சில உணர்வுகள் புரிய ..learning local language is a must)

எங்க ஊர் செய்தித்தாளும்..நானும் இருக்க பயமேன்னு சொல்ல..

வார்த்தைகள்.. சின்ன sentence கத்துண்டாச்சு..

but எதிர்ல் யாராவது பிரவாகமா..பேசினால்..வாயிலிருந்து தெரிந்த..கற்ற வார்த்தை கூட..வர மாட்டேங்குறது..

ஜுனூன் பார்த்து கற்ற இந்தியுடன் வாழ்க்கை தொடங்க..குழந்தைகளோடு நானும் கற்றேன் பேச ..எழுத..

இப்பொழுது மீண்டும்..பாடம் துவக்கம்..

I loved this quote too..

"If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his own language, that goes to his heart.❞

‒Nelson Mandela..


இந்த today's word..நானும் சொல்ல வாழ்த்துங்களேன் friends..


Happy Sunday

உன்னை நினைச்சேன்.

 உன்னை நினைச்சேன்.


.

பஜ்ஜி பண்ணினேன்..தங்கமே..ஞானத் தங்கமே..


சென்னையில..தான்..

புயலும் ..மழையும் ..சரி..

பெங்களூர்ல..

எதுக்கு பஜ்ஜி..?


அங்க அடிக்கற காத்து effecttu..

இங்கேயும் சில்லுனு இருக்குல்ல..😄😄


நிவர்...

சென்னையில் இப்போ..எங்கும் river..

உன்னைப் பார்த்தாலே இப்போ..shiver.

பயத்தில வருது fever...


காட்டாதே உன் பவர்..

ஏற்கனவே போயாச்சு power..


எடுத்து சுத்தாதீங்க..

உங்க கார்..டூவீலர்..


வீட்டுக்குள்ளே இருந்து..

பார்த்துக் கொண்டே இருங்க..

Facebook சுவர்..

அது ஒண்ணுதான்..இப்போ

Entertainer.


செய்வோம் prayer..

அது ஒன்றே நம் saviour


நிவர்க்கு நிவாரணம்..கடலை மாவு

கவர்க்குள் இருக்கும் வாழைக்காய் ..வெங்காயம்..😄😄

Purkal youth development dehradun

 Blessed to be with the children of Purkal Youth Development Society. An opportunity to meet the wonderful person Mr.Swami for making a revolution and difference in  enhancing the stree sakthi. I owe to   SPIC MACAY Doon  for showing me the another face of life.. Thanks Rupi Mahindroo and Vidya Srinivasan


Sharon lowen

 The SPIC MACAY volunteers with Sharon Lowen


Kumaresh violin

 Its time for unlimited magical music..

Kumaresh ji the Fiddling Monk was in action for a SPICMACAY program...mesmerizing all through.. 

Generally doctors check your pulse...but this Fiddling monk caught hold of the pulses budding doctors...his master plan lies there..

Transformed the auditorium to a magical world...thestudents of Bangalore medical college taking a break from their mundane routines...clapped,questioned and interacted with this maestro.

 Shri manjunath ji in mridangam and Trichy krishnaswamy in ghatam...casually conversing with their instruments..

The joy is unbound..


செம்மை_மாதர்

 #ஸண்டே_ஸ்பெஷல்

#செம்மை_மாதர்

ஒவ்வொரு முகமாய் என் கண்ணில் வந்து போகிறது. செம்மை மாதர்..

பொறுமையின் சிகரமாக இருந்த 

 பாட்டியா..

அன்போடு அனைத்தும் கற்றுத் தந்த அம்மாவா..

வளர்த்த சித்தியா..

மனங்களை படிக்க கற்றுக் கொடுத்த மாமியாரா..

நானிருக்கேன் என்று கரம் எப்போதும் நீட்டும் நாத்தனாரா..


துணை நானெனும் தோழிகளா..


மண்டலேஷ்வர் கிராமத்தில் வயல் வரப்புகளிலும் கல்லிலும் முள்ளிலும் சர்ப்பங்கள் எங்கே இருந்து சிரம் நீட்டும் என்று தெரியாவிட்டாலும் ,விட்டு ஓடிப் போன கணவனை நினைத்து ஒப்பாரி வைக்காமல் தன் பெண்ணை வளர்க்க போராடிய மன்னு பாயா..


விரட்டும் கணவன் முன் வீம்பாய் இருக்காமல் அன்பால் கட்டிப் போடும் சகுந்தலா மாமியா?


 என் பெண்களுக்கு பாடங்களோடு வாழ்க்கை யும் சொல்லித் தந்த ரூபா டீச்சரா..


அக்கா..ஒரு வாரமா பூ வாங்க வரலையேனு அனுசரனையோடு விசாரிக்கும் பூக்கார நாகு வா?


மஸூரியில் கைவிடப்பட்ட பெண்கள் குழந்தைகளின் மறு வாழ்வுக்கு வழி வகுத்த purkal youth  development அமைத்த சின்னி மேம் ஆ..


பாட்டும் பரதமும் தெரியாவிட்டால் என்ன..வாலண்டியர் வேலை செய் ..ஃபோட்டோ எடு, வீடியோ பதிவு செய் என்று என்னை உசுப்பிய SPIC MACAY chairperson Rupi Mahindroo ஆ..


உனக்குள்ளே இருக்கும் புத்தனை ஏன் தாலாட்டி தூங்க வைக்கிறாய்..வெளியே கொண்டு வா.. உன் எதிரில் இருப்பவரிடமும் தேடு என்று சொல்லிக் கொடுத்த புவனாவா?


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

என் வாழ்க்கையில் இவர்களுக்கு நன்றி கூறாவிட்டால் நரகம் தான் .


ஆனால் ..எந்த அளவு ஒருவரின் பாஸிடிவ் சிந்தனை என்னை தூக்கியதோ..

அந்த அளவு சிலரின் நெகடிவ் சிந்தனை என்னை தாக்கியது.

இப்படி என் வாழ்க்கையில் எந்நாளும்.இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொள்ளவும் உதவியவர்களும் என்னைப் பொறுத்தவரை செம்மை மாதர்கள் தான்.

Saturday, November 20, 2021

Happy birthday Usha Venkat

 Happy birthday Usha Venkat



Happy birthday usha..


உஷா என்றால் உதயம்..நட்பில் 

இருப்பாள் பலரின் இதயம்.


English ல சொன்ன்னால்..dawn (னு)

கவிதை எழுதவே இவள் born (னு)


இவளிடம் உறைகிறாள் சரஸ்வதி..

இவள் எண்ணமெல்லாம் பாயும் நதி..

கதையோ கவிதையோ..எழுதித் தள்ளுவாள் ஊதி..

இவள் வலிமை..இவளின் அமைதி

இவளிடம் கற்கணும் இந்த உத்தி..


சபையிலே பேசுபவள்..

சங்கீத நுணுக்கம் அறிந்தவள்..

சங்கிலிக் கவிதைகள் எழுதுபவள்..

சகதோழி எனக்கென்று ..

சந்தோஷம் என்றும் உண்டு..


நினைத்துப் பார்க்கிறேன்..

நெஞ்சில் ஏன் நின்றாள் இவளென்றே...!!


என்னைக் கவர்ந்தது..


இவளின் வெண்பாவா?

கலிப்பாவா?.


அதையும் விட மேல்..

இவள் காட்டும்..

அன்பு எனும் அம்போ?


மேடைகள் பல நீங்கள் கண்டு..

வரணும் பெரிய ரவுண்டு..


தந்தேன் ஒரு மலர்ச் செண்டு💐💐💐

வாழ்க.. நீ..பல்லாண்டு🙏🙏

Happy birthday thenmozhi rajendran

 மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

 Thenmozhi Rajendran mam.


தேன்மொழி ஆச்சி..

நீங்க செய்யறீங்க எங்க மனசுல ஆட்சி..


மதுரை மகளிர் அணியில் ஒரு அங்கம்..

மனசோ சொக்கத் தங்கம்..


இவள் போடும் கஞ்சியும் கற்கண்டே..

இவள் பிடிக்கும் மாவுருண்டை வாயில்  கரையுமே..


மூலிகை விவரம் முற்றும் அறிந்தவள்..

முக்கண்ணனை மும்முறை தொழுபவள்..


ஓதுவாள் திருவாசகம் உலக நன்மைக்கு..

ஒரு ஊர் விடாமல் சுற்றிக் களிப்பாள்.


குருவிக்கும் கூடு கட்ட இடமளிப்பாள்..அதன்

கும்மாளத்தை அழகாய் ரசிப்பாள்..


Smile please என்று YouTube channel ..

சொல்லித் தருவாள் சூப்பும் 😋 சமையல் சூட்சமும்..


ஆண்டுகள் போனாலும்..

ஆச்சி..எப்போதும் யங் தான்.💪


பிறந்தநாள் வாழ்த்து சொன்னேன்..

 சிரிப்போடும் சிறப்போடும் வாழணும் நீங்க..🙏🙏💐


limitless_list

 #limitless_list..

எங்கிட்ட இருக்கு..

உங்க கிட்ட இருக்கா?


வீராப்பு நிறைய பேசினாலும் சில விஷயங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை..


இது இல்லாமல் என்னால இருக்கவே முடியாது....இதோ..


கண் முழிச்சதும் காபி டீ தண்ணீ கண்டிப்பா வேணும்..

ஃப்ரிஜ்ல எப்பவும் 2 நாளுக்கு சமைக்க ்வேண்டிய காய் இருக்கணும்.. (சமைச்சு வெச்சு expiry date ஒட்டினது தவிர..)


தலைகாணிக்கு அடியில் விக்ஸ் அமிர்தாஞ்சன் இருந்தே ஆகணும்.


படிக்கிறேனோ படிக்கலையோ புஸ்தகம், highlighter இருக்கணும்..


மழையோ குளிரோ..fan சுத்தணும்..


உதைச்சாலும், ஓட்டித் தள்ளினாலும் ஒப்புரவா இருக்கும் என் செல்ல scooty வேணும்.


பசங்களுக்கு பிரசங்கம் பண்ணினானும் வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் வேணும்.


செல்லுமிடமெல்லாம்..செல்லுல சார்ஜ் வேணும்..

என்கூட என் காமெராவும் இருக்கணும்..


வரும் விருந்தாளிக்கு தர ஜூஸும் காப்பியும் இருக்கோ இல்லையோ WiFi password தந்து பரம்பரை கெளரவம் காக்கணும்..


முகநூல் நட்பூஸ்களின் பதிவுகளைப் படிக்கணும்..


லிஸ்ட் வளர்ந்தபடி..இருக்கு..


உங்களுக்கும் உண்டா இப்படி ஒரு limitless list?

Thursday, November 11, 2021

தேங்குழல்த்துவம்

 #தேங்குழல்த்துவம்



என்னடா இது ..இப்படி snacks ஆ போட்டு கொல்றேனேனு..நினைக்கறீங்களா?


ஒவ்வொரு தேன்குழலும்..

சொல்லிடுமே..

ஒப்பிலா...தத்துவம்..


என்னனு கேக்கறீங்களா?


நாம எல்லாரும் எத்தனை பரீட்சை எழுத போயிருக்கோம்..

நம்ம அம்மாவோ..டீச்சரோ..

என்ன சொல்லி அனுப்புவார்கள்.?


முதல்ல ஈஸியா இருக்கற கேள்வியை எழுது..

அப்பத்தான்..கஷ்டமான கேள்வியை எழுத ஒரு confidence and courage கிடைக்கும்..


அது போலத்தான்..

எது ஈஸியோ..அதுலேர்ந்து துவங்கினேன்..😀😀😀


ஆனால்..

இதே concept ஐ..வாழ்க்கையில் apply பண்ண முடியுமா?😄


முடியாதே?😃😁


ஏன்னா..நமக்கு கேள்வியே தெரியாதே?


எந்த கேள்வி ..எப்போ வரும்..

Preparation செய்து கொண்டு யாரும் வாழ்க்கைப் பரீட்சை எழுதவே முடியாது😄


அதனால்...


அன்புடன்😄

Tuesday, November 9, 2021

Conveyor_beltத்துவம்

 #Conveyor_beltத்துவம்..


இந்த conveyor belt இருக்கே..

ஒரு நிமிஷம் கண் அசந்தால்..

நம்ம லக்கேஜ் இன்னொரு சுத்துக்கு ஓடிடும்..


இங்கே fb post அப்படித்தான்..

பார்த்து படித்து ஒரு நிமிஷம் நம் திசை திரும்ப போஸ்ட் ,திரும்பி ஒரு ரவுண்டடிக்க போய்டுது..😀


நம்ம வாழ்க்கையும் அப்படித்தான்..

அந்த தருணத்தை விட்டோம்னா..திரும்பி ஒரு சுத்து சுத்திட்டு தான் வர வேண்டியிருக்கு..


அதனால....


அன்புடன்😀

Monday, November 1, 2021

கோயிலில் கண்ட காட்சி..

 கோயிலில் கண்ட காட்சி..


காத்து கருப்பு பட்டதோ

கருத்தோடு கட்டினாள் 

கையில் தாயத்து..

காதல் நோயது ..தன்வீட்டு

காளைக்கு வந்ததறியா

கவலையில் தாய்.


மந்திரத் தாயத்து

மாற்றணுமே மகனிவனை

மருமக வரணுமே..எல்லார்

மனசையும் கவரும்படி..


வேடிக்கை மனிதரென

வேங்கடனும் நினைப்பானோ..

வேடிக்கை விட்டு..என்

வேண்டுதலை தொடர்ந்தேனே

மழைக்காலம் மேகம் ஒன்று..

 மழைக்காலம் மேகம் ஒன்று..


'பொத்துக் கிட்டு ஊத்துமடி வானம்...

சொட்டு கூட புலம்பலில்லா காலம்.'


அப்போ எல்லாம்  வீட்டு ரமணன்கள் அப்பாக்கள் தான்.. பேப்பரை மேஞ்சு மேஞ்சு படிப்பு.. அதில் weather forecast வரும். map ல கூப்பிட்டு காண்பிப்பார்கள்..கிழக்கிலிருந்து மேகம் தெற்கு நோக்கி வரது பாரு.  ஒரு சுழல் மாதிரி தெரியறதா..அது அப்படியே நகரும்னு கிளாஸ் எடுக்கப்படும்.  நம்ம வீட்டு வாசலில் நாளை மழை பெய்யும் கண்டிப்பா அடித்து சொல்வர். google map, google earth எல்லாம் குடும்பத் ்தலைவர்களே..

கண் விழிச்சதும் வாசலில் வந்து கை நீட்டிப் பார்க்கப்படும்..

அடுத்த நடவடிக்கை. raincoat..

 தங்கத்தில குடை ஜிமிக்கி போட்டு அனுப்புவா ஸ்கூலுக்கு...சத்தியமா குடை மட்டும் தரமாட்டார்கள்.

தொலைச்சுட்டு வந்து நிப்பேனு வசவு விழும். கலர் குடை கொண்டு வரும் ஃப்ரண்டை பார்த்தா ஒரு காண்டாகும்.

பீரோலேர்ந்து பாண்ட்ஸ் பவுடர் போட்டுண்ட பஞ்சு மிட்டாய் ரெயின் கோட் எடுத்து தரப்படும்..கவரோட பத்திரமா கொண்டுவானு கட்டளையுடன்.லேசா தூறல் போட ரெயின் கோட்டின் பவுடரும் கரைந்து ஒடும்.. ஹவாய் செருப்பு கரும்புள்ளி செம்புள்ளி அடிக்கும். அந்த பிளாஸ்டிக் ஒரு 'க'ப்படிக்க..மழையின் ஜில் காற்றை அனுபவிக்க முடியாதபடி் புழுங்கித் தள்ளும். தெரு முனை தாண்டியதும்...ரெயின்கோட் பைக்குள் போகும்..ஆனந்த கூத்தாட்டம் கொட்டும் மழையிலே..

அடுத்த குஷி..மாநிலச் செய்தியில் லீவ் சொல்லிடுவார் செல்வராஜ். லேசா தூற ஆரம்பிச்சதும் கரண்ட் கட் ஆகிடும். inverter இல்லாத இன்பமான காலம்..no படிப்பு.no home work..எல்லார் வீட்டு வாசலிலும் குட்டி குட்டி மாநாடு நடக்கும்..குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம்..ராம ராம ராம சொல்லுங்கோ கரண்ட் வரும்னு வயசான பாட்டி சொல்ல..வரக்கூடாது லைட்டுனு வேண்டியபடி ராம மந்திரம் தெருவில் ஒலிக்கும்..

பளபளனு துடைச்சு வெச்ச லாந்தர் விளக்குகள் மின்மினிப் பூச்சி மாதிரி அழகா எரியும்.அம்மாக்கள் சூடா சாதம் வெச்சு, காலையில் செய்த ரசத்தில் மிளகும் பெருங்காயமும்,

கருவேப்பிலையும் போட்டு கொதிக்கவிடும் வாசம் ஊரைத் தூக்கும்.பசியைக் கிளறும்..மெழுகு வர்த்தியும் அங்கங்கு எரிய.. ஆவி பறக்கும் சாப்பாடு அரை நொடியில் காலியாகும்.சாப்பிட்டு முடித்து இருட்டில் இன்னோரு ரவுண்டு anthakshari  நடக்கும். 

புயல் பற்றி பெரியவர்கள் பேச..பொழுது நாளைக்கு எப்படி கழிக்கலாம்னு வாண்டூஸ் ப்ளான் நடக்கும்.

ஒருவழியாக அவரவர் வீட்டுக்குள் தஞ்சம் அடைய..

நானும் அப்பாவும் காற்றில் ஆடும் மரத்தையும், கருமை கட்டிய வானத்தையும் பார்த்தபடி உட்கார்ந்திருக்க...சரக் சரக் என்று சிலரின்  செருப்பு சத்தம் மட்டும் கேட்க..

மழை நாட்கள்..மனசுக்கு பிடித்த நாட்களாய் இருந்ததை..இன்னும் மனசு நினைத்து ஏங்குவது ஏனோ?