Tuesday, December 19, 2023

வயசு கோளாறு

 #வயசுக்கோளாறு


' நடந்தெல்லாம் போய்ட்டு வர முடியாது' 

சண்டை போட்டது சின்ன வயசில்


' அதுக்கென்ன ...பொடி நடையா போய்ட்டு வந்துடறேனு' 

 சொல்றது இப்போ..


அரை சதம் அடிச்சதும் 😁😀

Thursday, November 16, 2023

Diwali அலப்பறை

 தீபாவளி அலப்பறைஸ்😋😃💪


உலக சகிப்புத் தன்மை நாளாமே இன்னிக்கு😃😃


வூட்டுக்காரர்: அடடே.நாக்குல ஒட்டாம பிரமாதமா அல்வா பண்ணிட்டயே?😋


என் மை.வாய்ஸ்; இதை செய்யறதுக்குள்ள.. ..என் 👅 தள்ளிப் போனது எனக்குத்தானே தெரியும்😃


Wednesday, November 8, 2023

உறவுகள்..தொடர்கதையல்ல..

 காலை வணக்கத்துடன் கண்ணில் பட்டது முதலில் Kovai Anuradha Kovai sir post..

உடற்பயிற்சி, நம் பெரியோர்கள் பற்றி அழகாக எழுதியிருந்தார்..அதை யோசித்த வேளை ..கண் முன் வந்தாள்..இந்த அத்தை பாட்டி


உறவுகள்..தொடர்கதையல்ல..


அத்தை பாட்டி..

ஆங்கரைப் பாட்டி..


ஆரஞ்சு மிட்டாயோடு..

மஞ்சப் பைக்குள்ளே..

மடிப்பு கலையா

மடிப் புடவையோடு..


கூன்விழுந்தாலும்..

கண் மங்கினாலும்..

குழந்தைகள் என்றால்..

குதூகலம் இவளுக்கு..


எச்சில் பத்து பார்ப்பாள்..

எட்ட நில்லு ..

மடி என்பாள்.

சினிமா டிராமா..

சீச்சீ என்பாள்..


சிவ நாமம் ஒன்றே

சிந்தனையில் கொள்வாள்.

'திரிசூலம் ' பார்த்தோம் என்றால்..

வெள்ளியா..தங்கமா என்பாள்

சிவாஜி படம் என்றால்..

சீறுவாள்...காசு கரியென்பாள்..


வந்த நாள் முதல்..

விரட்டி வேலை வாங்குவாள்..

வயசாகலையா...

வரணும் புத்தி என்பாள்..


சுருக்குப் பைதான்..

சொத்து எனதென்பாள்..

கசங்கிய ஒரு ரூபாய்..

காலணா..எட்டணா..

கணக்கு வைத்திருப்பாள்..


ஒரு வாரம் இருப்பேனென்பாள்..

ஒயாமல்..

ஊர் புராணஞ் சொல்வாள்...

வரேன் போய்ட்டு என்பாள்..

வெளிச்சமாகும் ..எம்முகமே..

விதிகள் தளரும்..கொஞ்சம்

வெறுமையும் சூழுமே..


வரவில்லை ..அவளும்..

வாரங்களான போதும்..

வினவிய போது..

விம்மலுடன்..

விண்மீன் காட்டினர்..

வீட்டுப் பெரியோர்..


புரிதலுக்குமுன்..

பறந்து போன...

உறவுப் பறவைகள்..

உள்ளத்தில் எத்தனையோ..!!

Monday, October 16, 2023

Happy navratri 2023

 கொலு என்றாலே..கொண்டாட்டம் தான்..

வரிசையாய் அடுக்கப்பட்ட பொம்மைகளும் ..

வரவேற்பும், வாழ்த்துக்களும்..

வரம் தரும் தேவியின் நாமமும்..

வாய்க்கு சுவையான உணவும்..

வேறென்ன வேணும்..

ஒன்பது நாளும்..

ஒரு நொடியில் பறப்பது போல இருக்கும்..


அவள் நினைவில் ..

அவள் பாதம் பணிந்து..

அவளருள் பெறுவோம்..


அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்..


Happy navratri dears.🙏🙏🙏


வீட்டில் கொலு வைக்காவிட்டாலும்..

வீடியோ உண்டு..😄😄

வரவேற்பு உண்டு..😄😄😄


Saturday, October 14, 2023

கோலத்துவம்

 இதெல்லாம் நமக்கு ஜுஜுபினு சில வேலை ஆரம்பிச்சால்..


அது நம்மள ஜூப்பரா சுத்த விட்டுடும்..😄😄😄


அப்படித்தான் இன்னிக்கும்..

அட இது என்ன..சின்ன வயசிலேர்ந்து போடற கோலம்னு அசால்ட்டா ஆரம்பிக்க..


கலர் கொடுக்கும்போது..

கைகலப்பு ஏற்பட்டு..

கசா முசா ஆகிடுத்து..😭😭


Confidence வேணும் எல்லாத்துக்கும்..

Over confidence நம்மள சில சமயம் ஓரமா தள்ளிடும்..

( எனக்கு நானே சொல்லிக்கறேன்)💪💪💪


அரைக்கிழம் ஆன பிறகும்..

ஆழம் புரியாமல் கால் விட்டுட்டேனோ..moment..😄😄


திங்களை வரவேற்போம்


வாழ்க்கை பாடம்

 #கோலத்துவம்.


மூணே புள்ளிதான்..

மூளையை கொஞ்சம் கசக்க..

மலர்ந்து விரிந்தது..


மலர் மேல் விளக்கு..


சின்னச் சின்ன புள்ளிகள் தான்..

சிந்தனையும் தூண்டிடுமே..


விரிக்க விரிக்க விரிந்தது..

வாசல் தான் போதவில்லை..


மனம் எனும் வாசல் விரிய

மகிழ்ச்சி எல்லை விரியுமே..


வாசலில் போட்ட கோலம்..

வாழ்க்கைப் பாடம் உணர்த்திடுமே..


சின்னச் சின்ன அன்பும்தான்

சிதற உதவும் புன்னகையே..


இந்த நாள் இனிய நாளாகட்டும்

கோலக்கதை

 #கோலக்கதைத்துவம்


இந்த ரங்கோலி மனசில் வந்ததும்..ஒரு குட்டிக் கதையும் எழுதலாமானு தோணித்து..😄😄


Bird 1- அந்த மரம் எத்தனை அழகா இருக்குல்ல..வாயேன் அங்கே போகலாம்.🐦🐦


Bird -2 : no.. no..என் dress எல்லாம் அழுக்காகிடும். அந்த மரம் ஒரே colorful aa இருக்கே🕊️🕊️

Bird -1: அட பைத்தியமே..கலர் போய் ஒட்டுமா..அழகழகா பூவும் பழமும் இருக்கே..போகலாமே..( கெஞ்சலுடன்)


Bird -2: சொன்னால் புரியாதா..இந்த மாதிரி மரத்தில தான்  வேடர்கள் வலை விரிச்சிருப்பாங்களாம்..

நான் வரலைப்பா..👀


Bird-1 : ஐயோ..அப்படியா..ஆனால் எனக்கு ஆசையா இருக்கே..


Bird-2: ஆசைப்படறது சில சமயம் ஆபத்தில் முடியும்னு தெரியும் தானே உனக்கு...வேணும்னா..

அங்கே கீழே விழுந்திருக்கே..அதை எடுத்து சாப்பிடு..🍋🍋🍋


Bird-2: ரிஸ்க் எடுக்காம எப்படி ரஸ்க் சாப்பிடறதாம்..நீ போ.நான் ஜாலியா இந்த மரத்தில் enjoy பண்ணிட்டு வரேன்..😄😄😄


Bird -2 : அடிபட்டால் தான் உனக்கு புத்தி வரும்னு நினைக்கிறேன்..bye..bye.🙏🙏


Bird 1 ..சந்தோஷமா பறந்து அந்த மரத்தில் உட்கார்ந்து தான் நினைச்சதை சாதித்ததா??

இல்ல..bird 2 சொன்னது போல வேடன் கிட்ட மாட்டிண்டதா..


எப்புடி கண்டுபிடிக்கறது..??


நம்ம வாழ்க்கையிலும் இப்படித்தானே..


தூரத்தில் இருந்து பார்த்து judge பண்ணி ..

சிலவற்றை கோட்டை விடறோம்..


கோடு தாண்டலாம் வான்னு போகும்போது ..கோட்டைக்குள் சிக்கிக்கறோம்..


வாழ்க்கையே ஒரு நாடகம்..

அதில் wisdom தான் முக்கிய பாத்திரம்..


சரியா..😄😄😄


மார்கழி கோலம்

 ஹையா..pink teddy எனக்கு பிடிக்கும்னு எப்படி தெரியும் உனக்கு..Santa?..அதுவும் ஒரு அழகான heart உடன்❤️❤️❤️


வாசல்ல வந்து ஜம்முனு உட்கார்ந்திருக்கியே..😘


எத்தனை வயசானாலும் இந்த Teddy bears தரும் happiness..I love it.


Soft ஆ..கஷ்க்கு முஷ்க்குனு..


#Teddyத்துவம் ...1

உள்ளுக்குள் இருக்கற குழந்தையை ..அப்பப்ப..வெளியே கொண்டு வரணும்..

Correct aa😄😄


#Teddyத்துவம் 2

பிங்க் கலர் ரங்கோலி ..ரொம்ப நைஸா இருந்தது. White சேர்த்தும்..நைஸ் அவ்வளவா குறையல..


சரி..சரினு..போட ஆரம்பிச்சால்..ஆஹா..அப்படியே ஒரு soft Teddy impact கொடுத்தது..நல்லவேளை..இன்னும் கொர கொர மாவு சேர்க்காமல் விட்டது நல்லதாப்போச்சு


இப்படித்தாங்க..இது நல்லாவே இருக்காதுனு நினைக்கிற விஷயம்..best ஆ..மனசுக்கு திருப்தியா அமையும்.😄😄😄


கடைசியா. 

Base color.. எடுத்துக் கொடுக்கணுமே..

நேத்து கோலத்தின் collected மாவு..


Daily collect பண்ணி வைக்க..different shades கிடைக்கும்.


எப்புடி ஐடியா💪💪💪😄


Post எழுதிண்டு இருக்கும்போது ...paper பையன் வந்தார்..


மேடம்..இது..ஸ்டிக்கரா.?


இல்லப்பா..நான் போட்ட 

கோலம்.


ரொம்ப ரொம்ப அழகா இருக்கு .."..


ஆஹா..you made my day தம்பி..😄😄😄


பிள்ளயார் பிள்ளையார்

 பிள்ளையார்..பிள்ளையார்


பேஷ் பேஷ் ..

எல்லாம் நன்னா இருக்கே❤️❤️

இன்னும் ஒரு கொழுக்கட்டை..

வேணும் எனக்குனு சொன்னாரே..🤤


அலங்காரம் ஜோரா இருக்கே..

பூவெல்லாம் பிரமாதமா இருக்கே..🪴🌺


களிமண் கணேஷாவும்

கொழுக்கட்டை கணேஷாவும்

கொள்ளை அழகா இருக்காளே..😍


குழந்தைகளின் ஆரத்தியில்..

நெஞ்சம் நன்னா நிறைஞ்சதே...❤️❤️


நேரே வந்தால் இதெல்லாம் சொல்லி இருப்பாரோ..!!!


ஆசைதான் மனசுக்குள்..

அவன் ஒருநாளாவது வர மாட்டானா என்று..

ஏக்கம் உண்டு எப்போதும்


எதிரில் வந்தால் தானா..

என்னுள்ளேயே..இருப்பவன் நீயன்றோ..🙏🙏🙏


விஷ்வ விநாயகா ..சரணம் சரணம்🙏🙏🙏


கணக்கு போட்டு கோலம் வந்தது

 கணக்கு போட்டு..

கோலம் வந்தது..

கச்சிதமாய்..

வாசல் நிறைத்தது..


கணித மேதை ராமானுஜம் அவர்கள் பிறந்த தினம் இன்று.

National mathematics day.

கணக்கின் மீது பலருக்கு காதல் கொள்ளச் செய்தவர்.


கணக்கு..பிணக்கல்ல..

வாழ்க்கையோடு பிணைந்தது. ..சரிதானே..💪💪😄


ஆனா..இப்போ வருவோம் நம்ம தத்துவத்துக்கு.🙄


மேலே இருக்கற ஒருத்தர் போடற கணக்கு இருக்கே..


ஒரு பூவிலும் .. Petal லிலும் கூட..அம்புட்டு கணக்கு போடறவரு...நம்ம வாழ்க்கையின் கூட்டல் ,கழித்தல், வகுத்தல் ,பெருக்கல்..

எல்லாமே அவன் கையில் தான்.🙏🙏🙏


என்னவோ இருக்கட்டும்.


கணக்கு பாருங்க..no objection.


அன்பு காட்டுவதில் மட்டும்..

கணக்கு பார்க்க வேணாமே❤️❤️


இத்துடன் இன்றைய தத்துவம் நிறைவடைந்தது.

நாளை மீண்டும் ஒரு #கோலத்துவத்துடன் சந்திப்போம்.


அதுவரை ..விடைபெறுவது..


Happy birthday mallika mam

 Happy birthday Mallika Ponnusamy  mam.


சிக்கு கோலம்..

சிக்கலில்லாமல் ..போடும் 

சகல கலா வல்லி..


சிரித்த முகம் ..

சிந்தனையில் தெளிவு..


மல்லிகா மேம் என்றாலே

மரியாதை மனதில் கூடும்..


மிக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  mam💐💐💐💐


பெங்களூர் மீட்டில் எடுத்த ஃபோட்டோ..


அப்பவே எங்களுக்கு advance ஆ sweet கொடுத்துட்டாங்க😄😄😄


பஜ்ஜி puzzle

 பஜ்ஜி puzzle


எனக்கும் எங்க neighbour க்கும் always ஒரு barter exchange உண்டு.


என்னோட உளுந்து வடைக்கு ஈடா..

அவங்க உலகத்தையே....


No..no..

ஒரு தட்டு full of ...பஜ்ஜி ..பஜ்ஜி செஞ்சு கொடுத்துடுவா..


சும்மா..அதிருதில்லனு..

செம்ம டேஸ்ட்டா இருக்கும்.


அப்படியே அந்த மேல் கடலை மாவு கவர்..கரகர ..மொறு மொறுனு..சுவையோ சுவையா இருக்கும்.


நமக்கு தான் உடனே ரெசிபி கேட்காட்டி மண்டை வெடிச்சுடுமே..

கஜினி முகமது படையெடுப்பு மாதிரி..

அவங்க ஒவ்வொரு தடவையும் பஜ்ஜி தட்டு நீட்டும் போது..

" கொஞ்சம் அந்த பஜ்ஜி ரகசியம் சொல்லுங்களேனு ..கேட்டுக் கொண்டே இருப்பேன்.


அவங்களும்..

"அது என்ன பெரிய proportion..

 கடலை மாவு,அரிசி மாவு, கொஞ்சம் எண்ணெய் காய விட்டு சேர்த்தால்..தானா வரும் '..


நமக்கு மட்டும் இந்த டேஸ்ட் ஏன் வரலைனு ..எப்பவும் ஒரு சோகம்.


அன்னிக்கு எதேச்சையாக provision வாங்கும்போது , ஒரு பஜ்ஜி இன்ஸ்டண்ட் மிக்ஸ் ..என்னை வாங்கு வாங்குனு கெஞ்சித்து.

சரி ..ஒரு பாக்கெட் வாங்கிண்டு வந்து..


கத்திரிக்காய்,வாழைக்காய்  நறுக்கி மாவில் தோய்த்து போட..


ஆஹா..கண்டேன் ..

கண்டேன்..

அதே எதிர்த்த வீட்டு பஜ்ஜி மணம்,சுவை...


மாமி....இதுதானா secret.

இதைச் சொல்லி இருக்கப்படாதோ முன்னாடியே..😄😄😄😄


எப்படியோ..பஜ்ஜி puzzle solved.😄😄😄😄💃💃💃


கோலங்கள்

 மூச்சு விடாம ..பாட முடியுமா?

முடியாது..

கை எடுக்காம கோலம் போட முடியுமா?..


ம்ஹூம்..🙄


இருந்தாலும்..ஒரு try.

எல்லாம் எங்க #kola_queen Mallika Ponnusamy  mam கொடுக்கும் ஊக்கம் தான்.💪


ஆனால்..இந்தக் கோலம் போடும் போது..ஒரு #தத்துவம் தோணித்து.😀


கையெடுக்காம..புள்ளி இழுத்துப் போகும் பாதையில் சரியா ...கவனமா போக..correct aa முதலும் முடிவும் meet ஆகுது.💪


அதே போல தான்..நம்ம லைஃபும்.


ஆண்டவன் சொல்றான்..நம்பள்  கேட்கிறான்னு ..

அப்படியே ..அவன் கைப்பிடித்து..செல்ல..சரணாகதி செய்ய..


வாழ்க்கை ஜிங்கலாலா தான்..💃💃💃


தம்மாத்தூண்டு கோலத்துக்கு..

உங்க மை வா புரியறது.😀😀😀


கோலத்தை எடுத்துக் காட்டற மாதிரி..ஒரு super back drop..

Super இல்ல..😀😀😀


Friday, October 6, 2023

Madhyamar-backup

 P(B)ack Up


ஒரு காலத்தில ஊருக்கு போறதுன்னா..வெறும் pack பண்ணி தான் போவோம்.

இப்போ ..back up இல்லாமல் போகமுடியுமா?


ஒரே நாள் தங்கறது என்றாலும்..ஒரு இரண்டு extra dress... எப்போ ஸ்ட்ரைக் வரும்..எப்போ ஊருக்கு போக முடியும்னு எந்த ஜோசியரும் சொல்ல முடியாது.


கணக்கா எப்படி பணம் எடுத்து போறது? 

ஏதாவது அவசர செலவு வந்தால்..

ATM எல்லாம் இழுத்து மூடிட்டால்?


பர்ஸுக்குள்ள..புடவை மடிப்புக்குள்ளே..அது தனி back up..


பிஸ்கட்டுக்கு back up chips..

chips க்கு..ஒரு கடலை உருண்டை..


கண்ணாடி போடற..கண்ணம்மாக்கள்..(என்னை மாதிரி) கண்டிப்பா ஒரு எக்ஸ்ட்ரா கண்ணாடி வெச்சே ஆகணும்..எப்போ ஃப்ரேம் லேர்ந்து பிச்சுண்டு லென்ஸ் விழும் நு தெரியாது.


contact lens ..அது ஒரு எக்ஸ்ட்ரா pair.

அதுக்கு ஒரு liquid..(உஸ்..அப்பா).


எங்க வூட்டுக்காரர் மாதிரி முன் ஜாக்கிரதை முத்தண்ணா வீட்ல இருந்தா ..கேட்கவே வேணாம்.


மொபைல்..அதுக்கு ஒரு ஸ்டெப்னி மொபைல்..

அது ரெண்டிலும் இருக்கும் காலாவதியாகாத data pack..

அதுக்கு back up ஒரு dongle.

battery charger ரெண்டு.

சார்ஜ் பண்ணவே முடியாம மாட்டிக்கிட்டா என்ன பண்றது..? அதுக்கு ஒரு power bank.


நமக்கு எந்த ஊர் போனாலும்..கோயில் போய் பார்த்துடணும்..

அப்போ..பிரசாதம்..?

அது போட்டு வெச்சுக்க கொஞ்சம் zip lock..


அந்த ஒரு நாள்ள தான் நமக்கு ஏதோ பெரிய வியாதியெல்லாம் வந்துடும்னு பயத்தில் ஒரு செட் எல்லா மருந்தும்..


வீட்டில..அது தனி கதை..

எங்கியாவது லேட்டா போச்சுனா என்ன செய்யறது..?

back up க்கு தோசை மாவு..அடை மாவு..

( இதுக்கு நீ இங்கேயே இருனு என் வலக்கரம் இடி வேற..)


முக்கியமா..சொல்ல விட்டேனே..

வீட்டுச் சாவி🔑

handbag ல ஒண்ணு..ட்ரஸ் பையில் யாருக்கும் தெரியாம ஒளிச்சு ஒண்ணு..

ரெண்டுமே காணாமல் போனால் என்ன செய்யறது..?

எதிர்த்த வீடு..கீழ் வீடு..

இப்படியாக..back up உடன் நான் pack செய்ய..


"ஒரு நாள் trip தானே..? ..ஐயோ..அது சொல்ல மறந்தேனே..😱

இப்போ பஸ்ல வாங்கின டிக்கட்ல  போறதா..

எங்கியாவது காவேரி ப்ரச்சனைனு பஸ் ஓடாட்டி என்ன செய்யறதுநு back up.ஆக வாங்கி வெச்ச train ticket ல போகறதா?...


over make up ம்...over back up ம்..என்னிக்கும் worry தான் தரும்.( சும்மா..டி.ஆர்.ஷ்டைல்)

சரிதானே?

Madhyamar- happy teachers day

 #happy_teachersday.


"good morning teacher" .குதூகலக் குரல் ஒலிக்கும் பள்ளிகளின் காலை நேரம்.


miss .miss..,நான் தூக்கிட்டு வரட்டுமா?..டீச்சரின் சுமையை சுளுவாக்க நினைக்கும் சிட்டுக்கள்.


டீச்சரின் புடவையை அவளறிய மாட்டாள் என்று தொட்டு பார்த்து தோழிகளிடம் சமிக்ஞை செய்த தருணங்கள்..


கொஞ்சம் முகம் வாடி இருந்தால்..' டீச்சருக்கு என்னவோ மனசு சரியில்லை போல இருக்கு'.கற்பனை செய்து கவலைப் படும் கண்மணிகள்..


பிறந்த நாளுக்கு முதல் சாக்லேட்டை தனக்கு பிடித்த டீச்சருக்கு கொடுத்து மகிழும் மகிழம்பூக்கள்..


சில டீச்சர்களின் உச்சரிப்பில் மயங்கி அவர்கள் சொல்லும் வார்த்தையை திருப்பி திருப்பி சொல்லிப் பார்க்கும் ரசிகர்கள்


பரீட்சை,ப்ராஜக்ட், மதிப்பெண்கள் என்று பல கிலி தந்தாலும்..டீச்சர் என்றால் ஒரு ஜாலி தான்.


பிரியா விடை கொடுத்து பெரிய ஆளா வரணும்னு ஆசீர்வதிக்கும் ஆசிரியர்கள்.


தன்்கிட்ட படிச்சவன்(ள்) இப்போ நல்ல நிலையில் இருப்பதை நினைத்து் பெருமை கொள்ளும் ஆசான்கள்.


அற்புதப் பணி..


என்னுடைய.. என் மகள்களுடைய டீச்சர்களோடு பல வருடம்..


டீச்சராய்..ஒரீரு வருடம்..


can't stop thinking of Helen Keller and Anne Sullivan this day. what a wonderful bond that was?


happy teacher's day sankari , Santhavel Kpm sir, Ruku Jey Saraswathi Gayathri and all those great teachers of madhyamar.

Madhyamar- சிறுகதை

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை


#என்_ஜீவன்_நீதானே..


"ஏங்க..அந்த நியூஸ் பேப்பரை நொட்டுறு பண்ணது போதும்.மடமடனு குளிச்சு டிஃபன் சாப்பிட்டு கிளம்பலாம் . மார்க்கெட்டில் போய் ஃப்ரஷ்ஷா காய் வாங்கிட்டு, அப்படியே அரிசி மண்டில சாமான் லிஸ்ட் கொடுக்கணும். பாங்க் வேற நாலு நாள் இருக்காதாம் . கொஞ்சம் பணம்  எடுக்கணும். ஒரேடியா முடிச்சுட்டு வந்துடலாம்' கட்டளை பறந்தது காவேரி அம்மாளிடமிருந்து.


"ஏம்மா..உன்னோட வேடிக்கை பார்த்துண்டு வரதுக்கு ..நீ ஒரு ஒரு காயும் பழமும் வாங்கறதுக்குள்ள காலெல்லாம் வலிக்க ஆரம்பிச்சுடுமே..


நான் பாட்டு அக்கடானு டீவி பார்த்துண்டு இருப்பேனே' ..சுந்தரம் சொன்னதை கண்டுக்காமல் ஜருகண்டியில் இறங்கினாள் காவேரி.


சுந்தரம் ஒரு துணிக் கடையில் வேலை பார்த்தார். காலையில் போனால்..வீடு வர பாதி ராத்திரி ஆகிடும்.

 பசங்க படிப்பு, ஸ்கூல், வீடு ,உள் வேலை, வெளி வேலை எல்லாம் காவேரி தான்.


 பையன்கள் ரெண்டு பேரும் நல்ல வேலையில் வந்த பிறகு ..வயதும் ஆகி விட்டதால் கடை வேலைக்கு போவதை நிறுத்தி இரண்டு வருடமாச்சு.


தினமும் இதே கூத்துதான். தினமும் குறைந்தது 2 மணி நேரம் வெளியே இழுத்துச் சென்று விடுவாள். 


அன்றும் அப்படித்தான்..வெளியே போய் வந்து..சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசர, ஏதோ முனகல் சத்தம் அவரை எழுப்பியது. காவேரி தான். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்.


மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்து முடிந்தது. "காவேரி.".. "காவேரி"..அவர் குரல் காதில் விழவில்லை அவளுக்கு...கண் மூடினாள். 


சுந்தரம் சுருண்டு போனார். தன் அறைக்குள்ளேயே முடங்கிப் போனார். விட்டத்தை் பார்த்தபடி..


" நாளையிலேர்ந்து காரியம் ஆரம்பிக்கணும். காய்கறி லிஸ்ட் எல்லாம் போட்டாச்சு..சாமான் ஒண்ணு விடாம ரெடி பண்ணி வெச்சுக்கணும்.." 

மருமகள்கள் பேச்சுக் குரல்..


ஏதோ மண்டையில் அடித்தாற்போல ஒரு உணர்வு. வேகமாக எழுந்து எப்போதும் எடுத்துப் போகும் பைகளை எடுத்தார்.


"கொடுங்கம்மா..எல்லாத்தையும் பார்த்து நான் வாங்கி வந்துடறேன்.."..

"மாமா..நீங்க?...மருமகள்கள் கேட்க..

" எனக்கு ஒவ்வொண்ணும் உன் மாமியார் சொல்லிக் கொடுத்திருக்காம்மா..நீங்க உள் வேலையை கவனிங்கோ..நான் போய்ட்டு வரேன்".


அவர்கள் எப்போதும் காய்கறி வாங்கும் பெருமாள் கடை முன் நின்றார்..


"நல்ல பிஞ்சா பார்த்து நானே பொறுக்கி எடுத்துக்கறேனேப்பா..'..காவேரியின் குரல் அங்கே அவருக்கு மட்டும் கேட்டது..

Madhyamar- சிறுகதை

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை

கொடுப்பினை


"ஏங்க..இந்த அரை டிராயரைப் போட்டுண்டு வெளிய வராதீங்கனு எத்தனை தடவை சொல்றது..அவங்க எல்லாம் என்ன நினைச்சுப்பாங்க" என்று கிரிஜா கேட்கவும்.."போடி போ..என் ட்ரஸ்ஸை யார் பார்க்கப் போறாங்க அங்கேனு" நக்கலடித்தபடி கைலாசம் மாமா.

அந்த பெரிய பில்டிங்கின் கேட் முன் சென்றதும்..வாசலில் நின்றிருந்த செக்யூரிட்டி சலாமடித்தபடி.." எல்லாரும் உங்களுக்காக தான் காத்துக்கிட்டிருக்காங்க ..போங்க சீக்கிரம் நு வாய் நிறைய வரவேற்றான்.

இண்டர்காமில் சொன்னது தான் தாமதம்..

"ச்கலை..வந்துட்டீங்களா..' மூணாவது மாடிலேர்ந்து மாதவன்.

டேய்..கைலாசம்..சீக்கிரம் வர மாட்டியா..கிளம்பணும் கிளம்பணும்னு கால்ல கஞ்சியோட பறப்பியே அப்பறம்..சீனு பெரியப்பா சிட்டாய் வந்தார்.

அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்த சேகர்..வாரத்தில் இந்த ஒரு நாளுக்காக தாண்டா காத்திண்டு இருக்கேன் என்று நட்பின் உரிமையோடு..

"ஏய் கிரிஜா் ..வந்தாச்சா..வா..வா..இங்க க்ளப் ஹவுஸில் எல்லாரும் உனக்காக தான் காத்திட்டிருக்கோம். அவள் கையை இழுத்தபடி..கோமதி மாமி.


தன் கையில் கொண்டு வந்திருந்த கிருஷ்ண ஜயந்தி பட்சணமெல்லாம் எல்லாருக்கும் கொடுத்தாள் கிரிஜா

சொல்லு சொல்லு ..போன வாரம் கல்யாணத்துக்கு போனியே..எப்படி இருந்தது..

யார் யார் வந்தா..என்ன மெனு.. வரிசையாக் கேள்விகள்.

இவர் செளக்கியமா..அவர்கள் செளக்கியமா.. ஒருத்தரை விடாமல் விசாரிப்புகள்.

அந்தப் பக்கம்..கைலாசம் மாமாவுடன் சேர்ந்து வெடிச் சிரிப்பு சத்தம் அந்த காம்பவுண்ட்டிலே எதிரொலித்தது..


மணி அஞ்சு அடிக்கவும்..கைலாசமும் கிரிஜாவும் கிளம்ப ஆரம்பிக்க..இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருந்துட்டு போங்களேன் என்று அன்புக் கட்டளைகள்.

ஒரு வழியா..அஞ்சே முக்காலுக்கு..இனிமே ரொம்ப நேரமாகிடும்..கிளம்பிடுங்கோனு அவர்களே சொல்ல..அடுத்த வாரம் பார்க்கலாம் ...பார்த்து போங்க ரெண்டு பேரும்..அன்புக் குரல்கள்.


அந்த காம்பவுண்டு கேட்டை கடக்கையில்..

"happy old age home ' என்ற பெயர்ப் பலகையின்  பின்..கலங்கிய கண்களுடன் .கை..வலிக்க வலிக்க ..டாட்டா காட்டிய உறவு மற்றும் நட்புகள்.


"அப்பா..எங்கே இருக்கீங்க..நான் வந்து பிக் அப் பண்ணட்டுமா?"..என்ற மகனின் குரல் தேனாய் காதுகளில்..

Madhyamar-கடை பலகாரம்

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை


கடை(கலப்பட) பலகாரம்


"ஏய் புள்ள..என்ன மச மசனு நிக்குற.சனிக்கிளமை..வியாபாரம் சூடு புடிக்கிற நேரம் எங்கின போய்ட்ட.?"

"இருய்யா..ஒரு மாசமா பஜ்ஜி போடற எண்ணெய் ..ஒரே கசடு..கருப்பா ஆகி கிடக்கு..கொஞ்சமாவது வடிகட்ட வேணாமா..?

கஸ்ட்டமர் பார்த்தாங்கன்னா என்னாவுறது..?


அவள் பேசிக் கொண்டே இருக்க...

வேலு ..மஞ்சூரியனுக்கு காலிஃப்ளவர் வெட்ட ஆரம்பிச்சான். 

நறுக்கும்போதே கப்புனு ஒரு வாடை..நல்ல வளர்ந்த புழுவெல்லாம் மிளகாய்ப் பொடி ,உப்பு மசாலாவோடு சுடும் என்ணெயில் ..


அங்கே வந்த பக்கத்து கடை ரமேஸு..

"அண்ணே உங்க கடையில் சரக்கு எப்பவும் சூப்பருண்ணே ".என்றான் ஜொள் விட்டபடி.


"யக்கா...மீன் வறுவல் ரெடி ஆவலையா?..உன் கடை ஸ்பெசல் அதானே..எனக்கும் ஒண்ணு சூடா கொடுக்கா.".என்றான்.

'எலேய்..அப்பால வா..உனக்கு எடுத்து தனியா வெக்குறேன் "என்று வேலு விரட்டினான்..

எங்கியாவது தன்னோட வியாபார் யுக்தி கண்டுபிடிச்சிடுவானோனு பயத்தில..


வண்டியில் ் அடுக்கி இருந்த  ஒரு பையிலேர்ந்து சின்னதும் பெருசுமா..மீன்..( டேய் ..டேய்..அழுகிப் போய் ..நாறுதுடா..தள்ளு வண்டயின்  மை.வா)

"ஏ..புள்ள ..அந்த கலர் பொடியை கொட்டு இதுல..

அங்கே கிடக்கு பாரு..மைதா..கார்ன்ஃபளோர் ..

(ஐயோ..அதுல வண்டும் பூச்சியும் இருக்கேனு..வண்டி மை.வாய்ஸில்)


கடலலை பாக்க வந்த யாரும் வேலுவோட தள்ளு வண்டில சாப்பிடாம போக முடியாது..


முக்க்கால் வாசி வித்துப் போச்சு. 

"காசு மேல  காசு வந்து கொட்டுகிற நேரமிது" பாட்டை.விசிலடித்தபடி மூட்டைக் கட்ட ஆரம்பித்தான் மீதி இருந்த எல்லாத்தையும்.


 நாளைக்கு இதைக் கொஞ்சம் சரி செஞ்சு ஒப்பேத்திடலாம். ஞாயித்துக் கிழமை கூட்டத்தில் எல்லாம் வித்து போய்டும்.


ப்ளாஸ்டிக் பைகளில் மிச்சம் மீதி ..வெந்ததும்..வேகாததும்..வண்டியை பத்திரமாக மூடி கட்டினான். கல் வைத்து தடை ஏற்படுத்தினான்.


நகரவே முடியாத தள்ளு வண்டி.. 


நாற்றம் பிடுங்குதே..கடவுளே..

கடல் தாயிடம் வேண்டியது...

"ஒரே ஒரு பெரிய அலை என்னை மட்டும் வந்து அடித்து செல்ல அனுப்பு தாயே..'

நிறைவேறி இருக்குமா..இந்த வேண்டுதல்?

Madhyamar- படம் பார்த்து கதை

 #சண்டே_ஸ்பெஷல்

#படம்_பார்த்து_கதை


ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்.


அப்பா..ப்ளீஸ்ப்பா..ப்ளீஸ்ப்பா..அம்மாகிட்ட பேசி பர்மிஷன் வாங்கி தர வேண்டியது  உன்னோட பொறுப்புப்பா.. மகள் அனிஷா சொன்னதும் ஆடித்தான் போனான் அர்ஜுன்.


' baby ..நான் சொல்றதைக் கேளுடா

எங்க இரண்டு பேராலயும்.உன்னை விட்டு எப்படி இருக்க மு்டியும் சொல்லு..அதுவும் அம்மாவுக்கு எல்லாமே நீ தாண்டா..உடைஞ்சு போய்டுவா.. தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தான்.


அப்பா..அதனால தான் சொல்றேன். காலம்பற எழுந்ததுலேர்ந்து..எனக்கு சாப்பாடு, என் துணிமணி சரி பண்றது, எங்கே போனும்னாலும் அலுக்காமல் என்னை கொண்டு போய் விட்டு கூட்டிண்டு வந்து....நான் எப்போ கத்துப்பேன் வெளி உலகம்?.நீங்க எத்தனை தியரி சொன்னாலும் எனக்கு அந்த experience வேணும்ப்பா

ஹாஸ்ட்டல இருந்தா..எல்லாம் கத்துக்க எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்ப்பா..


2 மணி நேரம் ..காரை எடுத்தால் நீங்க அங்கே வந்துடலாம்ப்பா.. நானும் weekend ஓடி வந்துடுவேன்..ஓகேயா என்றாள்.

அதெப்படி ம்மா..பழைய பல்லவி ஆரம்பித்தான் அர்ஜுன்.

பொறுமை இழந்த அனிஷா..கோபத்துடன்

"அப்பா.....உனக்கு தெரியுமா ..அம்மா பேர் இப்போ என்னனு?

Mrs Arjun னு சொன்னால்தான் இங்கே எல்லாருக்கும் தெரியும். அங்கே என் ஃப்ரண்ட்ஸ் சர்க்கிள், ஸ்கூல் எல்லாத்திலும் அனிஷாவோட அம்மா..

எங்கேப்பா...காணாமல் போச்சு...'ஸ்வாதி'ங்கற

அழகான பேர்?

 இருபத்தினாலு மணி நேரமும் நம்மைச் சுத்தியே இருக்காப்பா..

அம்மாவுக்கு ஒரு புது உலகம் காண்பிக்க வேண்டியது நம்ம கடமையில்லையா.. அவளுக்கு பிடிச்சது செய்ய ஆரம்பிக்கணும்.. அதுக்கு அவளுக்கே அவளுக்குனு ஃப்ரீ டைம் கிடைக்கணும். கரெக்டாப்பா...?


ஹாஸ்டல் வாழ்க்கை ஆரம்பித்து 2 மாதம் ஓடிப்போச்சு. 

அம்மாவிடமிருந்து குட்மார்னிங்குடன் அனிஷா செய்ய வேண்டிய வேலைகளின் லிஸ்ட் வந்து உள்டப்பியில் விழும். 

 அதோடு சேர்த்து அம்மா volunteer ஆக இருக்கும் NGO  வின் அன்றைய schedule வந்து விழும்.

சாயங்காலம் ..கண்டிப்பா அம்மா எடுத்த ஃபோட்டோக்கள் அனிஷா அர்ஜுன் ஃபோனின் மெமரியை நிரப்பும். 


அப்பாவுக்கு ஸ்மைலியுடன் மெசேஜ் அனுப்புவாள் .." எப்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்' என்று .

Madhyamar-இதுக்கு போய் அலட்டிக்கலாமா

 இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

"சொன்னபடி கேளுு மக்கர் பண்ணாதே"னு பாடினப்பறமும் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலை.

எந்தக் கிக்குக்கும்..கிக்கே ஆகாமல்..மெளனமே பார்வையாய்..

'ஸ்கூட்டி இல்லாத வாழ்வு என்னது.?.என்று ரேவதி ஸ்டைலில் என் மை.வா. பாட..

"நான் அசைந்தால் அசையும் அகில(லா)மெல்லாமும்'னு என் ஸ்கூட்டி எச பாட..

என் சோகத்தை பார்த்த பக்கத்தில் கருமமே கண்ணாய் கார் துடைத்தபடி இருந்த பையன்..'என் கிட்ட மோதாதேனு'  வீரமா ஸ்கூட்டியை உதை உதைனு உதைக்க ஆரம்பிச்சான்.

'உனக்கும் பெப்பே..உங்க அப்பாவுக்கும் பெப்பேனு ' என் 'pep'.. நக்கலாய் ஒரு சிரிப்புடன்.

hato  hato..mein karunga நு நேபாளி செக்யூரிடி வந்து ஒரே கிக்..வண்டி வேதனையில் முனக ஆரம்புச்சது..அடுத்த அடியில்.."பறந்து செல்லவா..பறந்து செல்லவா" நு பாட்டு பாட ஆரம்பிச்சது..


செக்யூரிட்டி ஒரே குஷியில் ' mere paas maa hai' என்று கழுத்தில் போட்ட டாலரை கண்ணில் ஒற்றியபடி..கார் துடைத்த பையனுக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பித்தார்.

பாவம்..அந்தப் பையன்..கால் மணி நேரம் போராடியதன் பலனை செக்யூரிட்டி தட்டிச் சென்றார். இவன் செக்யூரிட்டி இல்லை..சகலகலா வல்லவன்னு அந்த வழியா போன மாமா..கொஞ்சம் ஐஸ் வெச்சுவிட்டு போனார்.


நன்றி சொல்லவே எனக்கு ஒரு வார்த்தையில்லையேனு சுவர்ணலதா என் மன BGM ல் ..

ஃப்ரண்டுக்காக காத்திருந்த வேளையில்..இப்படி எத்தனை பல்பு வாங்கியிருக்கோம்னு ஒரு 

மண்டையில் flash back ஓடியது..


'பா'ட்டில் மூடியே தாழ் திறவாய'்னு  தட்டிப் பார்த்து..திருகு திருகுனு திருகினப்பறம் கழற்ற வராத மூடி..

வூட்டுக்காரர் 'திறந்திடு சீசே(சா)'நு சொல்றதுக்கு முன்னாடியே..வாயைப் பிளக்க..

அதெல்லாம் ஒரு technique நு சொல்லிண்டே போக  .நானோ..'உன்  பார்வையில் ஓராயிரம்  சயின்ஸ் நான் தெரிஞ்சுப்பேன்..வாழ்வில் தானேனு '  அம்மன் கோயில் கிழக்காலே ராதா மாதிரி ஆனந்தக் கண்ணீருடன் .


flash back வளையம் இன்னொரு முறை சுற்றியது. இப்போ..பெண்ணோட turn.


பெண்ணின் கட்டுரைப் போட்டிக்கு கண் முழிச்சு..நோட்ஸ் எடுத்து ..கருத்து கொப்பளிக்க எழுதி கொடுக்க..அங்கே வந்த தோழி..ஒரே ஒரு quote  சொன்னாள்.

ஸ்கூல் போய்ட்டு வந்த பெண்..Amma..aunty சொன்ன quote...made my day என்று சொல்ல.. heart ல லேசா  crack விழற சத்தம்..

'பெத்த மனசு..பித்தத்திலும் பித்தமடானு..அடுத்த போட்டிக்கு நோட்ஸ் ரெடி செய்ய துவங்கினது..ஞாபகம் வர..


ஹலோ..எந்த உலகத்தில இருக்கே? எத்தனை தடவை ஃபோன் பண்ணியிருக்கேன் பாருனு..என்ன மத்யமருக்கு எழுத ஏதேனும் topic கிடைச்சுடுத்தா.. வா கிளம்பலாம்னு வண்டியை கிளப்ப..

அங்கே ஒரு scene.் என் அபார்மெண்ட்டின் குட்டி வால்..அவன் குட்டி சைக்கிளின் செயின் கழன்று..அவன் கூட இன்னும் சில வாண்டுகள் பிரம்ம பிரயத்தனத்தில் செயினை மாட்ட..

அப்போது அங்கே வந்த அபார்ட்மெண்ட்டின் அண்ணங்கள் ரெண்டு பேர்..அசால்ட்டா மாட்டிக் கொடுத்துவிட்டு போக...'அண்ணா சூப்பர் ண்ணா..' வாழ்த்து மழை


' இதுக்குப் போய் அலட்டிக்கலாமா..' என்ற SPB யின் குரல்..எங்கிருந்தோ காதில் வந்து விழுந்தது.

Madhyamar-வெள்ளம்

 #வெள்ளம்_ஸ்பெஷல்

மடை திறந்து பாயும் (கங்கை) நதி  நான்..


geometry, geography,geology எல்லாத்துக்கும் மேல் GK ..இந்த எல்லா G யும் நமக்கும் ரொம்ப தூரம்.


 ஆனா..வாழ்க்கைத் துணைவரோ hydro engineering ,dam construction நு வேலை.

டெல்லியில் இருந்தபோது முதல் முதலா பூகம்பம் எப்படி இருக்கும்னு அறிந்தேன். எல்லாரும் கொஞ்ச நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து நின்று விட்டு , ஒண்ணுமே நடக்காதது போல வீட்டுக்குள் போய் விடுவோம்.


தேஹ்ராதூன் வாழ்க்கை ஆரம்பம். ஜூன் மாசம் ஆரம்பித்தால் newspaper முழுதுமே..மழையில் நனைந்தபடி, cloud burst ,landslide நு வந்தபடி இருக்கும். பேய் மழை கொட்டறதுனு என் வீட்டுக்காரர் ukimath லேர்ந்து சொல்லுவார். புரண்டு பெருகி ஓடும் கங்கையின் சத்தம் நிசப்தமான ராத்திரியில் ஃபோன் வழியாக கேட்கும்போது..நித்திரையோடு..நிம்மதியும் தொலையும்.


ஒரு வாரம் லீவ் கிடைச்சாலும்் உடனே மூட்டை கட்டிடுவோம் . சில சமயம் ஜோஷிமத்,பத்ரிநாத் சிலசமயம் ukimath. 

எப்போது மழை கொட்டும் , மலையும் சரியும், பாதை மூடுமென்று சொல்ல முடியாது.


இப்படி ஒரு ஆகஸ்ட் மழையில்..மாட்டிக் கொண்டோம் மலைப் பாதையில்.

சின்னக்கோடாக ஹிமாலயத்திலிருந்து வழிந்த நீர்..சீறிப் பாய ஆரம்பிக்க..

கங்கை..கலங்கி ஓட..கலக்கம் வயிற்றில்..இரண்டு பெண்களுடன் நடு ரோடில்( ரோடு மறைந்து மண் பாதை).


கண்ணெதிரில் பட படவென்று சரியும் மண்ணும் கல்லும்..ஒற்றை வழிப் பாதை தான் அங்கே..

ரெண்டு பக்கமும் வாகனங்கள். 

ஒரு பக்கம் மலை..இன்னொரு பக்கம் கங்கை சீறும் மடு..

நாம் கிளம்பிந வண்டி எப்போது போய்ச் சேரும் என்று யாருக்கும் தெரியாது.


ஆனால் அங்கே பார்த்தேன்..மனித மனம். உதவும் குணம்.crisis management.

ஃபோன் எல்லாம் வேலை செய்யாது. chalo bhai..hum karlenge..இப்படி குரல்களுடன் களத்தில் இறங்கிய எல்லா வயது ஆண்கள். ஆச்சரியம். இவர்கள் செய்யும்போதே ஒரு வழியாக அரசு உதவி வண்டிகள் வர..அவர்கள் தான் வந்தாச்சே என்று கைகட்டி நிற்காமல்..வேலையை சுளுவாக்கிய வேகம்.


ஒரு இடம் இப்படி தாண்ட. கொஞ்ச தூரம் நகரவும் மீண்டும் ரோடே மறைந்து ..கங்கை ஜாலியா ஜாகிங் பண்ணியபடி..

இனிமேல் இங்கேயே தான்..வழி கிடையாது.


hemkund sahib தீர்த்த யாத்திரை போகும் நேரமாதலால் எங்கு பார்த்தாலும் ஒரு டெண்ட் அமைத்து langar எனப்படும் free kitchen. ரொட்டிகளும் பன்னீர் சப்ஜியும் டாலும்..அத்தனை சுறுசுறுப்பாக ரொட்டி செய்து வந்தோர் பசியாற்றிய அத்தனை சீக்கியப் பெண்களும் ஆண்களும் அவர்களுக்கு உதவி புரிந்த வழியில் மாட்டிக்கொண்ட அத்தனை நல்ல் உள்ளங்களும்..


மதமாவது..மொழியாவது..பசியும் தாகமும் வந்தால் பத்தும் பறந்து போகும்.

அவரவர் பைகளிலிருந்து எல்லா ஊர் திண்பண்டமும் distribution. 


ஒரே ஒருத்தர் ரெண்டு பேர் ஃபோன் வேலை செய்ய..தகவல் சொல்ல தன் கைப்பேசி கொடுத்து உதவியவர்கள்.

குழந்தைகள் குழப்பம் புரியாமல் புது நண்பர்கள் கிடைத்த சந்தோஷத்தில் கும்மாளம்.

ஆனாலும்..எல்லார் மனதிலும் நம் வீட்டை திரும்பிப் போய் பார்ப்போமா..என்ற திகில்.

ரோடிலே 20/மணி நேரம். எப்போது மலை சரியும் என்ற திகில். 

பேரிடர் குழுக்கள்..உயிரைப் பணயம் வைத்து ஊருக்கு போக வழி செய்ய..


உள்ளூர் மக்கள் இது எப்பவும் நடக்கிறதுதானே என்பது போல எந்த வண்டிக்கும் காத்திராமல் நடராஜா சர்வீஸில்...தம் வழிக்கு சாப்பிட வைத்திருந்த ரொட்டிகளை குழந்தைகளுக்கு கொடுக்க..


அங்கே ஒரு புது இந்தியா கண்டேன்..காண்பித்தேன் என் குழந்தைகளுக்கு.


வரைபடம் பார்க்கத் தெரியாத எனக்கு..விரிந்த சிந்தனையும் எண்ணமும் தர ஆரம்பித்தது இந்த மாதிரி பல சம்பவங்கள்.


கான்கிரீட் காட்டுக்குள் வந்து ஒடுங்கி..அந்த கங்கையையும் கேதாரனையும் பத்ரிநாதனையும் இன்னொரு முறை போய்ப் பார்ப்பேனா..ஆதங்கத்தில் நான்..


இங்குள்ள படங்கள்..நான் எடுத்ததுதான்

pic1..கொட்டும் கற்கள்

pic 2. ..you can see the difference in the color of water alaknanda and mandakini at karnayaprayag

pic 3..water water everywhere

pic 4..rescue

pic5..ரொம்ப முக்கியம்..langar..லங்கணத்திலிருந்து காத்த லட்சியவாதிகள்

pic 6..கல்லும் பாறையும் கங்கைக்கு மெத்தை

pic 7..men in action.

Madhyamar-attitude

 #சுதந்திரதின_ஸ்பெஷல்.

இந்தியாவின் பிரச்சனை..

attitude..


ஒரே ஒரு தடவை..

அந்த க்யூவை விட்டு சைட் வழியா நுழைஞ்சால் என்ன?

ஒரே ஒரு தடவை லஞ்சம் கொடுத்தால் என்ன?

ஒரே ஒரு தடவை இந்த சாலை விதியை மீறினால் தான் என்ன?

ஒரே ஒரு தடவை வரிப் பணத்தை கட்டாமல் ஏமாற்றினால் என்ன?

ஒரே ஒரு தடவை கஜானாவை கொள்ளை அடித்தால் என்ன?

ஒரே ஒரு தடவை  குப்பையை ரோடில் வீசி எறிந்தால் என்ன?

ஒரே ஒரு தடவை கலப்படம் செய்தால் என்ன?

ஒரே ஒரு தடவை ஜாதிக் கலவரம் செய்தால் என்ன?

ஒரே ஒரு தடவை வன்முறையைத் தூண்டினால்  என்ன?

ஒரே ஒரு தடவை பதவியில் அமர்ந்தால் என்ன?

ஒரே ஒரு தடவை காசு கொடுத்து சீட் வாங்கினால் என்ன?

இப்படி..

ஒரே ஒரு தடவை ..ஒரே ஒரு தடவை என்று கோடிக் கணக்கான மக்களின் ஒரே ஒரு ஒரு முறை செய்தால் என்ன பெரிதா தப்பாகிடப் போகிறது என்ற எண்ணத்தை ஒழிப்போம்.


தூண்டும் யாரையும் நம்மைத் அண்ட விடாமல் ஆணவமாய் ஒரு "no' சொல்வோம்.


இவன் பெரிய நியாயஸ்தன் என்று கேலி பேசினாலும்..ஒரே ஒரு முறை தலை நிமிர்ந்து 

குறுக்கு வழியில்லா நேர் வழியில் சென்று வெற்றி காண முயல்வோம்.


சின்னப் புள்ளிகள் தான் ஒரு பெரும் கோலம் உருவாக்கும்.

சின்ன சின்ன மழைத்துளிகள் தான் பெரு வெள்ளமாகும்.


ஒரே ஒரு முறை.. let's change the attitude. 


take a 'vow' ..

i will be the pillar of this nation. I will be the eyes of this nation. this is my vow and i will never forsake it' 

சபதம் எடுப்போம் ..சகதியில் வீழோம் என்று.


நாம் எடுக்கும் vow..ஒரு நாள் நம்மை ஏய்ப்போரையும் ஏளனம் செய்வோரையும் 

" wow' என்று சொல்ல வைக்கும்..

வைக்கணும்.

ஜெய் ஹிந்த்

Madhyamar-ஆரஞ்சு மிட்டாய்

 #சுதந்திரதின_ஸ்பெஷல்


ஆரஞ்சு மிட்டாய் to Adidas bag.


வீழ்ச்சி வீழ்ச்சி என்ற வார்த்தை காதில் விழுந்தபடி இருக்கும்போது வளர்ச்சி..அதுவும் ஒரு சிறு வளர்ச்சி பற்றி எழுத வாய்ப்பு கொடுத்த அட்மினுக்கு வந்தனம்.


80 களில் ..ஊரை விட்டு வெளியே ஒரு ப்ளாட்.. அதில் சின்னதா ஒரு வீடு. பஸ் ஸ்டாண்டிலிருந்து தெரியும் வீடு. 


இரவானால் வோல்டேஜ் குறைந்து அழுது வடியும் விளக்குகள்.

சரக் சரக் செருப்பு சத்தம் .. கிழிக்கும் நிசப்தம்.


சின்ன காலனிக்குள் ஒரு மைதானம். மழைக்காலத்தில் புதர் மண்டி இருக்கும்.

ஒரே ஒரு ஊஞ்சல் ( பேய் படத்தில் வருமே) ஆடியபடி இருக்கும். 

குப்பை கொட்டுவோர்க்கு வசதியான இடம்.

சாயங்கால நேரம் புதுசாய் புகைபிடிக்க கற்றுக் கொண்ட road side ரோமியோக்களின் புகலிடம்.

 அவர்களிடமிருந்து வெளிவரும் புகையுடன் ..பேச்சும்..கேலியும். 


காத்திருப்போம் காலனி மக்கள் சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும்.


பளிச் விளக்குகள், எல்லார் வீட்டிலிருந்தும் கொண்டு வரப்படும் நாற்காலிகள், மேசைகள்.

சட்டையில் குத்த கொடி ரெடியாகும். பாட்டு ப்ராக்டிஸ் நடக்கும்.பூக்கள் அலங்காரம் , கோலம் எல்லாம் களை கட்டும்.


அந்தந்த வருஷம் பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியவருக்கு பரிசும் உண்டு.


பேனா வேண்டுமா..பை வேண்டுமா என்று செக்ரட்டரி மாமா கேட்க..கனவோடு வாய் பிளந்து ..ஜிப் வைத்து மழையில் நனையாத  adidas bag வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். வரிசையில் நின்று மிட்டாய் வாங்கித் தின்று..

இரண்டு நாள் காலனியே ஜக ஜோதியாய்.

எல்லா வீட்டிலும் தன் வீட்டு விசேஷம் போல சின்ன சின்ன வேலைகள் செய்து கொடுப்போம்.


எல்லாம் முடியும்..மீண்டும் அதே இருள் சூழும்.


இப்படியே சில வருடம் போக..


ரிடையர் ஆகி வீட்டில் உட்கார ஆரம்பித்த சில அரசு ஊழியர்கள்.. ' ஏதாவது செய்வோம் நல்லது இந்தக் காலனிக்கு ' என்று நாயகன் ஸ்டைலில் களத்தில் இறங்கினர். எங்கே தட்டினால் கதவும் திறக்கும் உதவி கிடைக்கும் என்று அரசுப் பணிகளில் இருந்த நேர்மையான அனுபவம் கைக் கொடுக்க..


புல்லும் புதரும்..பதர்களும் இருந்த மைதானம் புதுசாக புதுப் பொலிவு பெற ஆரம்பித்தது. 

காம்பவுண்ட் சுவர்களில் திருக்குறளும் விவேகானந்தரின் வார்த்தைகளும் வண்ணமயமாக எண்ணத்தை தூண்ட எழுதப்பட..

ஒற்றை ஊஞ்சல் போய்.. ஊஞ்சல்களும் ,சறுக்கு மரமும் கலர் கலராக..கண்ணைக் கவர..

சின்ன சின்ன பாத்திகளில்  பூக்கள் மலர..

காலாற நடக்க அழகான நடை பாதையும், அசதி போக்க அமரும் இருக்கைகள் அமைக்கப்பட

குழந்தைகள் ஒரு பக்கம் விளையாட..பேச்சும் நடையுமாய் பெற்றோரும் ,பேரன் பேத்திகளுடன் தாத்தா பாட்டிகளும்..


இப்பொழுது எல்லா நாளும் சுதந்திர தினம் தான்.


சுதந்திரமாய் கால் வீசி நடக்க..சுதந்திரமாய் குட்டீஸ் விளையாட, சுதந்திரமாய் அரட்டை அடிக்க..உருவாகி இன்று ஒரு மாடல் பூங்காவாக திகழும் எங்கள் காலனிப் பூங்கா.

ஓடி ஓடி இதற்காக உழைத்த என் அப்பா..( எப்பவும் என்ன தெரு முனையில் கூடிக் கூடிப் பேச்சு என்று அம்மா ஏசலையும் மீறி)

தலைவரே..எங்க வீட்டில தண்ணீ வரலை..குப்பை எடுத்து போகலை..இப்படி சின்ன சின்ன வேலையிலிருந்து மனம் கோணாமல் அப்பாவும் அவர் நண்பர்களும் செய்த ப்ராஜக்ட்.


வாலிபத்தில் வருமானத்துக்காக ஓடி..

வயது முதிர்ந்த போது..ஒரு சின்ன வளர்ச்சிக்காக உழைத்த இவர்கள் ..


"என்னால் என்ன உபயோகம்?" வயது காரணமாக அப்பா விரக்தியில் பேசும்போது..

நான் உபயோகிக்கும் ஒரு எனர்ஜி அஸ்திரம்..இந்த பார்க்கின் ஃபோட்டோ.


இன்று ஆரஞ்சு மிட்டாய் மறைந்து  mothi choor லட்டுவும் மிக்ஸர் பாக்கெட்டும் ..

adidas bag மறைந்து அழகாய் certificate ..


எப்போது சென்றாலும் என் வீட்டுத் திண்ணையில் நின்றபடி..இந்த வளர்ச்சியை ரசிக்கும் ஒரு சாதாரண நான்.


ஜெய் ஹிந்த்

Madhyamar-ஓம் நமசிவாய

 #ஆன்மீகம்.

( புத்தனை பற்றி எழுதிய எனக்கு ..அந்தப் பித்தன் எனை் காத்ததை எழுதாவிட்டால் ..அவ்வுலகம் கிட்டாது)

மீள் தான்..ஆனாலும் இன்றும் மெய் சிலிரிக்கும் அனுபவம்


(உயிர்)பிச்சை பாத்திரம் ஏந்தி நின்றேன்..ஐயனே..என் ஐயனே..


உத்ராகண்டில் வாசம். யார் வந்தாலும் ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத் எல்லா இடத்துக்கும் tour guide ஆ கிளம்பிடுவேன்.ஒரு ஏக்கம் எப்போதும் உண்டு..kedarnath அடிவாரத்தில் வீட்டுக்காரர் வேலையில் இருந்த போதும்..ஏதோ காரணத்தால் இந்தப் பயணம் மட்டும் தட்டிக் கொண்டே போனது.


2009. கோயம்புத்தூர் சித்தி சித்தப்பா, மகன், நான் என் மகள்கள்..கிளம்பிட்டோம் யாத்ரா.

ஆகஸ்ட் மாதம்..அசகாய மழை பெய்யும். இப்ப போய் ரிஸ்க் எடுக்கறீர்களே என்று சொன்ன எல்லாருக்கும் ஒரு புன்னகை பதிலாக கொடுத்து விட்டு..மூட்டை கட்டியாச்சு..


gauri kund . just இன்னும் 14 km மலை ஏறிட்டால் ...அவனைக் காணலாம்.

குதிரை சவாரிகளின் பேரம்..palanquin கள் வரிசையில். நான் என் பெரியவள், சித்தி பையன் ..குதிரை யிலும்..சித்தி, சித்தப்பா, சின்னவள் palanquin யிலும் செல்ல முடிவாச்சு.


பணம் கட்டினதும் மூணு குதிரைகள் ..இது Champa..இது ்chameli..இது Kavitha..

குதிரைக்காரர் formal aa introduce செஞ்சு வெச்சார். ஹலோ நு நாங்கள் சொல்ல..நல்லா வேகமா தலையாட்டித்து.


 counter ல் இருந்த ஆள் குதிரைக்காரரின் licence ஐ எங்கள் கையில் கொடுத்தார்..ஓஹோ..இவர் குடுமி எங்க கையிலனு குதூகலிச்ச போது..உன் life ஏ என் கையில் இப்போ என்பது போல ஒரு சிரிப்பு சிரித்தார் அவர்.


குதிரை மேலபொரு வழியா வழுக்கி வழுக்கி ஏறியாச்சு. என்ன மாதிரி ஒரு அறிவாளி  குதிரைகள். Champa தான் அக்காகாரியாம்.அவள் முன்னாடி நடக்க..குறும்பு குட்டி கவிதா..அவளை தாண்டாமல்..என்ன ஒரு technical walk.. படியே இல்லாவிட்டாலும்..பார்த்து பார்த்து காலை வைத்துச் செல்லும் லாவகம்.உச்சா வருதுன்னு ஓரமா ஒதுங்கும் ஒரு ஒழுங்கு..


மலைத்தபடி..மலை ராணியையும் மந்தாகினி யையும் ரசித்த படி எங்கள் பயணம். செல்ஃபோனில் பேச முடிந்ததால் எல்லாருக்கும் எங்கள் சவாரி பற்றி சிலாகித்தபடி சென்றோம்.


கூட்டமே இல்லை கோயிலில். கேதார நாதனைக் கண்குளிரக் கண்டோம். அரை மணி நேரத்துக்கும் மேலே அசையாமல் அவனை நினைத்தபடி..அங்கேயே அமர்ந்திருந்தோம்.விட்டு வரவே மனமில்லை.அப்படி ஒரு ஆகர்ஷிக்கும் சன்னதி. ஜருகண்டி சொல்ல ஆளில்லாத ஜோ எனக் கொட்டும் மழைக்காலம்.

மனசு நிறைய அவன் நாமம் சொல்லி..பிரகாரத்தில் உட்கார்ந்திருந்த அகோரர்களை ஆ வென பார்த்தபடி ..கீழே இறங்கத் துவங்கினோம்.


மத்தியான நேரம்..மந்தாகினி ஓசை. அக்கா தங்கைகள் வந்து நிற்க ..மீண்டும் குதிரை சவாரி.


திடீரென்று அப்படி ஒரு மேகம் . லேசான தூறலாய் ஆரம்பித்த மழை..சில நொடிகளில் கொட்டோ கொட்டென்று கொட்ட..கைக்கு அடங்காமல் குதிரைகள் ஓட்டமெடுத்தது..வலது பக்கம் மலையிலிருந்து கொட்டும் மழை..அதற்கு பயந்து குதிரைகள் ஓட நினைக்க.. இடது பக்கம் அதள பாதாளம். கைப்பிடி நழுவ கீழே விழ ஆரம்பித்தோம். குதிரைகள் ஒரு புறம் ஓட..கோடாவாலா..அதன் பின் ஓட..நாங்கள் நடுவழியில் அம்போ என்று விடப்பட்டோம்.


ram bada வில் சாப்பிட்ட அத்தனை ஆலு பராட்டாவும் ஆவியாக..மொபைல் மழையில் நனைந்து மூச்சு நின்று போக.ஆள் நடமாட்டமில்லா வழியில் நாங்கள் மூவர்.( season இல்லாததால் ஆளே இல்லை). 


இப்படி ஒரு திவ்ய தரிசனம் செய்து விட்டு வரும்போது இது என்ன சோதனை சிவபகவானே..palanquin ல் போன சின்ன மகள், சித்தியைப் பற்றி ஒரே கவலை..


வேறெதுவும் தோன்றவில்லை..சிவனே நீ தான் கதி..எங்களைக் காப்பாற்று..கண்ணில் தாரையாக நீர்.

வேறு வழியில்லை. நடக்க ஆரம்பித்தோம். ஒம் நமச் சிவாய..ஓம் நமச் சிவாய..என்றபடி.


மாஜி..மாஜி..யாரோ கூப்பிடும் குரல். திரும்பிப் பார்க்கவோ ,நிற்கவோ பயம். வெகு அருகில் அந்தக் குரல். தைரியம் வரவழைத்து..திரும்பினேன்..


மூன்று சின்ன குதிரைகளுடன் ஒரு நடுத்தர வயதுப் பையன். ' aao maaji .ismein beto aap log' என்றான். nahi baiyya என்று மறுத்தேன். 

என் மனதில் ஓடியதைப் படித்த அவன்..' நான் உன் மகன் போல. நான் சொல்வதைக் கேள். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே கும்மிருட்டாகும். மிருக ஜந்துக்களின் நடமாட்டம் வரும். தயவு செய்து என்னை நம்பு. இதில் ஏறுங்கள்..நான் உங்களை பத்திரமா கொண்டு போய் விடறேன். காசு கேட்பேனு பயப்படாதே..எனக்கு அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ' என்றான்.


 வேறு வழியே இல்லை..ஏறினோம். அவன் கதை அவன் அம்மாவை வருடத்தில் ஒரு முறை தான் பார்ப்பானாம். அவனுக்காக அவன் அம்மா  காத்திருக்கும் அழகை அவன் மொழியில் விவரித்தான்.28 கிமீ  தினமும் ஏறி இறங்கினாலும் ..கிடைக்கும் சம்பளம் மிகக் குறைவு என்று குறைப்பட்டான். கொட்டும் மழையில் அவன் கதை கேட்டபடி..அந்தக் கேதாரனைப் பிரார்த்தித்தபடி..மாலை ஆறரை மணிக்கு கீழே வந்து சேர..அங்கே முன்னமே வந்து சேர்ந்த சித்தியும் சித்தப்பாவும் எங்களை கட்டிக் கொண்டு அழ..


நன்றி..நன்றி என நூறு தடவை அந்தப் பையனுக்கு சொல்லி எங்கள் கையிலிருந்த காசையெல்லாம் திணிக்க..மூன்றே மூன்று நூறு ரூபாய் வாங்கிய அவன்..' meri maa ko ek sari Lena hai' என்றான்.


cloud burst என்று அடிக்கடி அங்கே பேப்பரில வரும்  செய்திகள்.. 

கண்ணெதிரில். பொத்துக் கொட்டும் மழை..ஜலப் பிரளயம்.


காசு...கைப்பேசி..எதுவும் உதவிக்கு வரவில்லை.. அடித்துச் செல்லப்பட்டு..ஆள் அடையாளம் காண முடியாது காணாமல் போயிருப்போம். 

எங்களைக் காக்க வந்தவன்..சாட்சாத் அந்த சிவனே ..சிவனே

அவன் தந்த உயிர்ப் பிச்சையில் நான் ..


எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும்  பகவானே ..எனக்கு யார் மூலமாவது நல்ல வழி காட்டு..அதே போல்..நானும் ஏதாவது வகையில் யாருக்கேனும் உதவியாய் இருக்கணும் என்று ஒரு வேண்டுதல் செய்வேன். No prayers go unanswered


வந்தான்..காத்தான்..ஜோதி மயமானவன்.

Madhyamar-இரண்டு கைகள்

 #பெண்_ரொம்ப_பாவம்

எச to Shankar Rajarathnam


இரண்டு கைகள் நான்கானால்…


அப்பாடா.. ரெண்டு வண்டிய கிளப்பியாச்சு..இனிமே ஒரு walking..ஜோல்னா பையுடன் … வர வழியில் கிடைச்சதை வாங்கிப் போட்டு வந்தால்.. ஒரு பெரிய வேலை முடியும்.. சாமான் வாங்கி வந்துடலாம்.. அதை எடுத்து வைக்க ஒரு பெரிய பொறுமை வேணும்.. அரிசி பருப்பை டப்பால கொட்டணும்.. காய்கறி ஒண்ணொண்ணும் பார்த்து cover la போட்டு.. பச்சை மிளகாயை காம்பு கிள்ளி , கொத்தமல்லி , புதினா எல்லாம் ஆய்ந்து தனியா பிரிச்சு.. (இப்படி எடுத்து வைக்கலைனா என்னனு என் பெண்கள் கேட்கும் போது.. குல வழக்கம் டா.. குல வழக்கம்னு ஒரு dialogue விட்டு). 


….ஒரு பக்கம் grinder.. இன்னொரு பக்கம் ரொம்ப பத்திரமா சேர்த்து வைச்ச பாலாடையை எடுத்து வெண்ணை எடுக்கல்.. ஐயோ மணியாச்சே.... cooker வைத்து, குழம்பு ஏற்றி…..இதுக்கு நடுவுல நமக்கு எப்பவும் துணையா இருக்கிற MSS ல ஆரம்பிச்சு..


 ராஜா ,ரஹ்மானோடு.. பாரதி பாஸ்கர் ,TTR speech, இவர்களை எல்லாம்  you tube தேடி..  FB ல என்ன update , watsapp ல என்ன profile pic போடலாம்னு ஒரு குழம்பு குழம்பும் வேளையில்.. ஒரு பக்கம் cooker விசிலோ விசிலாய் அடித்து என்னை கூவ.. அதற்குள் தொலைபேசி அழைக்க..”எவுரம்மா நீவு”னு ஒரு குரல்.. அம்மா பகவதி.. நீங்க தானே phone பண்ணிணீங்கனு.. நான் சொல்ல.. தேவுடானு.. நான் சொல்ல வேண்டியதை அந்த அம்மா சொல்லி இணைப்பைத் துண்டிக்க..

ரொம்ப நேரமா உன் ஃபோன் பிஸியாவே இருக்கே.. 


வூட்டுக்காரர் ஃபோன் வரும். 

அந்த OTP வந்திருக்கு பாரு..என் சம்பந்தப்பட்ட மெசேஜ் எதுவுமே உன் கண்ல படாதேனு ஒரு கோபமும் கவலையும் தோய்ந்த குரல். 

எந்த மொபைல்னு தேட..OTP time out நு சொல்ல..

சரி சரி..விடு என டொக் என துண்டிக்கபடும் லைன்.


 ஐயோ குக்கர்னு ஓடிப் போய் ஆஃப் பண்ண.. ..

 மாவு மாஆஆவாக..

இதோ வரேன் உன்னை கவனிக்கனு மாவை எடுக்க ஆரம்பிக்க.. சொல்லி வைத்தாற்போல  காலிங் பெல் அடிக்க.. வாசலில் ப்ரசன்னம்.. துணி இருக்கானு கேட்டு இஸ்திரி போடும் பெண்....


நாளைக்கு ப்ராஜக்ட் டே க்கு யூனிுஃபார்ம் ரெடி பண்ண சொல்ல..


 அப்போனு பார்த்து கையில் ஒட்டிய மாவு பாசமாய் என் கையை விட்டகல மறுக்க.. ஒரு வழியாய் அவளை வழியனுப்பி…கட கடனு மாவை டப்பால போட்டு, வர மறுத்த வெண்ணையை.. விடாப்பிடியா வரவழைத்து.. காய்ச்சி எடுத்து முடிச்சு.. final touch up கொடுத்து சமையல் முடித்து.. சாதம் பறிமாறி.. பாத்திரம் ஒழித்து..


 அப்பாடா … வேலை முடிஞ்சது… சோபாவில் சாய்ந்து … நிம்மதி பெருமூச்சு விட்ட வேளை.. ஒரு ஃபோன்கால்.. ஐயோ இப்பொ ஏன் கூப்பிடறா.. என்ன சொல்லப் போறாளோனு.. மனம் பதை பதைக்க.. என் ஆருயிர்.. என் உடன் பிறவா வின் குரல்..”madam.. aaj mein kaam pe nahi aa rahi hoon.. “ என் வலக்கரம்.. என் வீட்டு வேலைக்கு உதவும் நேபாளி சகோதரியின் குரல்.. அவளிடம் “koi baath nahi..”  சொல்லி விட்டு.. மீண்டும் நுழைந்தேன்.. விட்ட இடத்திலிருந்து வேலை தொடங்க.. 


 FM ரேடியோவைத் திருக..”வேலை இல்லாதவன் தான்.. வேலை தெரிஞ்சவந்தான்.. வீரமான வேலைக்காரன் “ பாட்டு timing ஆ வர.. அப்பறம் என்ன… 

ஆவி புகுந்த வேகத்தில வேலை செஞ்சு முடிக்க…  என் வேலை பா “உனக்கென்னம்மா... ஜாலியா tv பார்த்துண்டு இருப்பேனு” லஞ்ச் டைமில் காத்து வாங்க வந்த வீட்டுக்காரர் சொல்ல..


இப்படியே..இப்படியே..இடியுடன்..