Saturday, October 14, 2023

கோலக்கதை

 #கோலக்கதைத்துவம்


இந்த ரங்கோலி மனசில் வந்ததும்..ஒரு குட்டிக் கதையும் எழுதலாமானு தோணித்து..😄😄


Bird 1- அந்த மரம் எத்தனை அழகா இருக்குல்ல..வாயேன் அங்கே போகலாம்.🐦🐦


Bird -2 : no.. no..என் dress எல்லாம் அழுக்காகிடும். அந்த மரம் ஒரே colorful aa இருக்கே🕊️🕊️

Bird -1: அட பைத்தியமே..கலர் போய் ஒட்டுமா..அழகழகா பூவும் பழமும் இருக்கே..போகலாமே..( கெஞ்சலுடன்)


Bird -2: சொன்னால் புரியாதா..இந்த மாதிரி மரத்தில தான்  வேடர்கள் வலை விரிச்சிருப்பாங்களாம்..

நான் வரலைப்பா..👀


Bird-1 : ஐயோ..அப்படியா..ஆனால் எனக்கு ஆசையா இருக்கே..


Bird-2: ஆசைப்படறது சில சமயம் ஆபத்தில் முடியும்னு தெரியும் தானே உனக்கு...வேணும்னா..

அங்கே கீழே விழுந்திருக்கே..அதை எடுத்து சாப்பிடு..🍋🍋🍋


Bird-2: ரிஸ்க் எடுக்காம எப்படி ரஸ்க் சாப்பிடறதாம்..நீ போ.நான் ஜாலியா இந்த மரத்தில் enjoy பண்ணிட்டு வரேன்..😄😄😄


Bird -2 : அடிபட்டால் தான் உனக்கு புத்தி வரும்னு நினைக்கிறேன்..bye..bye.🙏🙏


Bird 1 ..சந்தோஷமா பறந்து அந்த மரத்தில் உட்கார்ந்து தான் நினைச்சதை சாதித்ததா??

இல்ல..bird 2 சொன்னது போல வேடன் கிட்ட மாட்டிண்டதா..


எப்புடி கண்டுபிடிக்கறது..??


நம்ம வாழ்க்கையிலும் இப்படித்தானே..


தூரத்தில் இருந்து பார்த்து judge பண்ணி ..

சிலவற்றை கோட்டை விடறோம்..


கோடு தாண்டலாம் வான்னு போகும்போது ..கோட்டைக்குள் சிக்கிக்கறோம்..


வாழ்க்கையே ஒரு நாடகம்..

அதில் wisdom தான் முக்கிய பாத்திரம்..


சரியா..😄😄😄


No comments: