Friday, October 6, 2023

Madhyamar-செயற்கை நுண்ணறிவு

 செயற்கை நுண்ணறிவு..காப்பாற்றுமா?

(Artificial Intelligence).


அப்படி என்றால் என்ன?

நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்ச நிலையாம் இது இப்போது.


ஒரு கம்யூட்டர் கோர்ஸ் சேர்க்க என் பெண்ணுடன் போனபோது அங்கிருந்த ஒருவர் இந்த AI பற்றி technical.ஆக பேசிக் கொண்டே சென்றார்.


சார்..கொஞ்சம் புரியும் படி சொல்ல முடியுமா என்று கேட்டேன்.

அவர் சொன்னது..


உங்க ஃப்ரிட்ஜல என்ன என்ன பொருள் அதிகமா அழுகிண்டு இருக்கு..

எதோட stock குறையறது..

உடனே ஆர்டர் செய்வது..

நீங்க லைட் சுவிட்ச் எப்போ போடுவீங்கனு கூட தெரிஞ்சு செய்யும்.

இப்படி ஆராம்பிச்சு..


நீங்க வெளியூர் போய் இருக்கீங்க..பக்கத்து வீட்ல சாவியை கொடுத்து இதைச் செய் அதைச் செய்னு சொல்வீங்க..

அதெல்லாம் தேவையில்லாமல் ஆக்கிடும் இந்த தொழில் நுட்பம்.


வெளியூரில் இருந்துகொண்டு, உங்க ் வீட்டை நிர்வகிக்கவும் காவல் செய்யவும் முடியும். 

உங்க  வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்ற முடியும். 

செடிகளுக்கு நீர் பாய்ச்ச முடியும்.

 வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறக்கவோ, மூடவோ முடியும். குளிர்சாதனம், மின் விசிறிகளை இயக்க முடியும். 

'மைக்ரோ வோவன்', துணி துவைக்கும் இயந்திரம் போன்றவற்றை இயக்கலாம்.

 வீட்டினை முழுவதுமாகக் கண்காணிக்க முடியும். இவை அனைத்தும் கைபேசிக் கருவி (Mobile Phone) வாயிலாகச் சாத்தியம்.


இன்னிக்கு வெளிவந்து இருக்கும் ஒரு குழந்தையின் அவலம்..

இந்த செயற்கை நுண்ணறிவு ..பெண் குழந்தைக்கு ஒரு பாதுக்காப்பும்..

அவங்க குடும்பத்துக்கு ஒரு அபாய அலாரமும்..

கிராதகர்களை நெருங்க விடாமல் செய்யும்.ஒரு நெருப்பு வளையமாக மாறுமென்றால்..


ஓலா ஊபரில் ஏறும்போதே ஓட்டுவது ஓநாய் ..இறங்கிடுனு சொல்லிடுமா?


வாட்ச்மேன் இல்லை..வல்லூறு என்று சொல்லிடுமா?


அம்மாவுக்கு புரிய வைக்குமா..பெண் சொல்லாத/சொல்ல முடியாத ஒன்று?


இப்படி எல்லாம் செய்யும் என்றால்..

 

இந்த தொழில் நுட்பம் முதல்ல நம்ம நாட்ல சீக்கிரம் வரணும்னு நினைக்கிறேன்.


( என் சிறிய அறிவுக்கு எட்டியதை பகிர்ந்தேன்.

Keerthivasan Rajamani போன்ற கம்ப்யூட்டர் ஜாம்பவான் கள் தான் சொல்லணும் என் பதிவு சரியா என்று?

No comments: