Friday, October 6, 2023

Madhyamar- சந்தை

 #சந்தை


#அம்மி குத்தலையோ..ஆட்டுக்கல் குத்தலையோ ..


இந்தக் குரல் நம் வீடு ,தெரு வாசல்களில் கேட்டு எத்தனை நாளாச்சு.


கரண்ட் இல்லை என்று எந்த ஒரு பதார்த்தம் செய்வதும் நின்றதில்லை சில வருடங்கள் முன் வரை.


அம்மி இருக்க..அருமையான சட்னி


ஆட்டுக்கல் இருக்க..அளவளாபியபடி இட்லி மாவு, அடை மாவு....


இந்த ருசி மறக்கடிக்க வந்தது மிக்ஸியும் கிரைண்டரும்.


அடுத்து நம் திருமணகளில் இன்றும் பின்பற்றப் படும் ஒரு சடங்கு.

அம்மி மிதிப்பது:

மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். "இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்" என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். 

எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.


சரி..சரி..நேரம் யாருக்கு இருக்கு என்று நீங்கள் புலம்புவது காதில் விழுகிறது.


ஆனால்..மீண்டும் பழைய சுவைக்கு நாக்கு ஏங்க..எல்லாக் கோயில் வாசலிலும் மார்க்கெட்களிலும் இப்போது அம்மி ஆட்டுக்கல் வியாபாரம் அபாரமா நடக்கிறது.


கிச்சனும் இவைகளைப் பொருத்த வடிவமைக்கப் படுகிறது.

உடம்புக்கு நல்ல பயிற்சி..எந்த ஜிம்முக்கும் போக வேண்டாம்.


என்ன..சின்ன சைஸ் பெரிய விலை.

நேரம் கிடைக்கும் போது இதில் அரைத்து..நம்ம குடும்பத்துக்கு நல்ல சுவையும் காண்பிப்போமே.


சந்தையில் கிடைக்கும் வாங்குவோம்..மீண்டும் ஆரோக்கிய அறுசுவை வாழ்வுக்கு திரும்புவோம்.


(இந்தப் முதல் படம்..என் அம்மா வீட்டில் தலை குப்புற படுத்து கிடக்கும் ஆட்டுக்கல்..

அரைக்க ஆள் தேடும் அம்மி..)

No comments: