Friday, October 6, 2023

Madhyamar-கண்ணா நீ தூங்கடா

 Revathi Balaji mam.


Try பண்ணியிருக்கேன் .

படிச்சு பாருங்க

( எனக்கு பிடிச்ச ..' கண்ணா நீ தூங்கடா' baahubali பாட்டை எடுத்தேன்)


கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..

படுக்கையும் மடிச்சுவெச்சு

பல்லையும் பளிச்சுனு தேச்சு

மூஞ்சியையும் முழுசா அலம்பி

முள்ளு முடியையும் ஒழுங்கா வார..

கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..


சட்டையும் இங்கேருக்கு

செருப்பும் அங்கே இருக்கு

செவியும் சாய்த்திங்கே

சொல்ற பேச்சை கேட்டிடவே..

கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..


புஸ்தகமும் எங்கிருக்கு.

பூஞ்ச காலம் புடிச்ச 

டிஃபன் பாக்ஸும் எங்கேருக்கு

வீட்டுப் பாடம் நோட்டுமெங்கே.

வீடு முழுக்க தேடிடவே

கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..


breakfast ம் ரெடியாயிருக்கு

பயில்வானாக நீ ஆக

விட்டமினும் தின்னனுமே

விட்டத்தை நீ தொட்டுடவே

கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..


பல் டாக்டர் பார்க்கவேணும்

பொழுது சாயும் நேரத்திலே

பியானோ கிளாஸும் உண்டே

புடை புடைக்கும் வெய்யிலிலே

விளையாட நேரம் வேணும்

வேலையும் பல இருக்க..

கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..


பஸ்ஸும் இப்போ வந்துடுமே

பசியோட கிளம்புவியே

பெட்டான பூனைக்கும்

பால் கொஞ்சம் தந்திடவே.

கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..


அறையை சுத்த மாக்க வேணும்.

அழகாய் மடிச்சு வெக்கணுமே

அடுக்கியும் நீ வெச்சால்

ஆ வென்று நான் சொக்கிடவே

கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..


இராப் பகலும்் தெரியாமலே

இண்டர்நெட் டில் குடியிருந்து

இழுத்து போர்த்தி நீயுமிங்கே

இடிவிழுந்தாலும் எழுந்திருக்காம..

இப்படியும் தூங்கறயே

கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..


சொல்லிவிட்டுப் போறதில்ல..

சொல்ற பேச்சு கேட்கறதில்ல

சொப்பனமும் கண்டபடி

சொக்கி சொக்கி தூங்குறதேன்

கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..


அம்மாவும் சொல்ல வந்தேன்

அறிவுரையும் கொஞ்சமிங்கே

அடப் போம்மானு சொல்லாமல்

அமைதியாக நீ கேளு கண்ணு


பொறுமையோடு இருக்க வேணும்

பதவிசா நடந்துக்கணும்

பகிர்ந்து வாழக் கத்துக்கணும்.

பொறுப்பா நீ நடந்துக்கணும்

வேலைக்கும் நீ போக வேணும்

வாழ்க்கையை அமைக்க வேணும்

ஆராய்ச்சி பல பண்ணி

ஆகாயத்தை தொட வேணும்.


கடைசியாய் ஒண்ணு சொல்வேன்.

கண்டிப்பாக கடை பிடிக்க வேணும்


அப்பா போல இருக்காதே

அப்பாவினு பேர் வாங்கி

அசடாட்டம் இல்லாமல் 

அசத்தணும் நீ உலகத்தையே

அதனாலே எழுந்திரடா..


கண்ணா நீ .எழுந்திரடா..என்

கண்ணா நீ எழுந்திரடா..

No comments: