Friday, October 6, 2023

Madhyamar-ஒரே வார்த்தை

 ஒரு வார்த்தை..ஒரே ஒரு வார்த்தை

சொல்லி இருக்கலாமே/ கேட்டிருக்கலாமே..

அடிக்கடி இப்படி ஒர் எண்ணம் வருகிறது தானே..?


ஒரே ஒரு வார்த்தை  கேட்டிருக்கலாமே..

'இந்த வாண்டைத் தூக்கிண்டு ஏற முடியலையே..'ஒரு தடவை என்னைக் கேட்டிருக்கலாமே அம்மா'..

என்ன வேண்டுதல் இதெல்லாம்..கடுப்பில் பெண் புலம்ப..தாயும் சொன்னாள்

'தலைப் பிரசவம்...

தாயும் சேயும் நலமா இருக்கணுமேன்னு

திருமலையானை தரிசனம் பண்ண குழந்தையை தூக்கிண்டுனு வரேன் நடைபாதி வழியாகனு வேண்டிண்டேன்'

மூச்சிரைக்க ..ஏறியபடி அந்த குடும்பம்.


இந்த மாதிரி எத்தனை முறை சொல்றோம்..'ஒரே ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே/சொல்லி இருக்கலாமே.


அப்பா..ஏம்ப்பா இந்த மாடல் ஃபோன் ஆர்டர் பண்ணின..ஒரு தடவை என்னை கேட்க மாட்டியா...


நண்பர் சொல்வார்..ஏன் சார் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே ..எனக்கு தெரிஞ்ச ஆள் கிட்ட சொல்லி வேலையை முடிச்சிருக்கலாமே..


ஆத்துக்காரி புலம்பலுக்கு பயந்து டூர் போன இடத்தில ஒரு புடவை வாங்கிண்டு வந்தா..'ஏங்க..ஒரு வார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமே...என்கிட்ட இல்லாத கலரைச் சொல்லி இருப்பேனே..


கல்யாணத் தரகர் சொல்வார்..எதுக்கும் ஒரு வார்த்தை பைய்யன்/பொண்ணு கிட்ட கேட்டுடுங்கோ..வாழப் போறவா அவா..என்பார்.


கண்ணா.. இன்னிக்கு சாயந்திரம்  என் ஃப்ரண்டு பைய்யனுக்கு பிறந்தநாள். நம்ம ரெண்டு பேரும் போகலாம்..சீக்கிரமா படிச்சு முடிச்சுடறயா என்று புத்திர /புத்திரி சிகாமணிகளை கேட்க..குபீர்னு பாய்ஞ்சு..என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா..நான் மாட்டேன் என்று பிடைவாதம் பிடிக்க..


இப்படி எல்லாரும் பிடிச்சிண்ட 'என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே' dialogue..

ஏன் தோணவே இல்லை..இந்த ராமபிரானுக்கும், அந்த சீதா பிராட்டிக்கும்..


நீங்களும் கேட்டிருப்பீர்கள் தானே..எப்போது எங்கே , எதுக்கு..ஷேர் பண்ணுங்களே

No comments: