Friday, October 6, 2023

Madhyamar- சிறுகதை

 #சிறுகதை

காலம் செய்த கோலமடி...


"அவளை தயவு செஞ்சு என் முகத்தில முழிக்க வேண்டாம்னு சொல்லுங்க..இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்திருக்கா..

நம்ம பரம்பரையில் யாருக்கும் வராத தைரியம் இவளுக்கு மட்டும் எங்கிருந்து வந்ததுங்க..

சொல்ற பேச்சே கேட்காமல் இப்படி ஒரு பொண்ணு நமக்கு ' எரிமலையா வெடித்த்படி வசந்தி.


'அம்மா இதெல்லாம் இந்த காலத்துல சகஜம்மா..இப்போ என்ன ..யாரும் பண்ணாத தப்பையா பண்ணிட்டா..கணேசன் உள்ளே புகுந்தான்.

ஆமாம்டா..நீயும் நல்லா வந்து உன் தங்கைக்கு வக்காலத்து வாங்கு..கோபம் இன்னும் கொம்பு வெச்சு ஏறியது வசந்திக்கு.


'எனக்கு மானமே போய்டும் போல இருக்கு. ஒண்ணு மட்டும் அவகிட்ட சொல்லிடு..இந்த Facebook ,watsapp எல்லாத்திலியும் profile pic மாத்தி ஊரே என்னைப் பார்த்து சிரிக்க வைக்கப் போறா..

"செஞ்சுக்கப் போறேன்..செஞ்சுக்கப் போறேன்னு சொன்னா..இப்படி திடு திப்புனு சொல்லாம கொள்ளாமல் இப்படி பண்ணுவானு நான் நினைக்கவே இல்லை.." ஒப்பாரி வைக்காத குறைதான்.

'எதுக்குடீ..இப்படி பொலம்பறே..ஆனது ஆச்சு..கொஞ்ச நாள் போக நமக்கு பழகிடும்.. வீணா மனசைப் போட்டு குழப்பிண்டு..BP ஏத்திக்காதே.." ராம்னாதன் 

பொண்ணை எப்பவும்  சப்போர்ட் செய்யும் அப்பா..

'உங்களுக்கென்ன ஈஸியா சொல்லிட்டீங்க்..நான் என் வாயை வெச்சுண்டு சும்மா இருக்காம எதிர்தத வீட்டு பக்கத்து வீட்டு தெருவில போற பொண்களையெல்லாம் குத்தம் சொல்வேன். எனக்கு இப்படி வந்து வந்து வாய்ச்சாளே..'இதுக்கு மேல நம்ம சாதி சனம் வாயை மூட முடியாதே.."


போர்ட் எக்ஸாமுக்கு படித்துக் கொண்டிருந்த சின்னப் பெண் சரயூ இவர்கள் லொள்ளு தாங்க முடியாமல்...' "இப்போ என்னங்கற மா..நீ.

.நானும் அக்கா மாதிரி தான் பண்ணிக்கப் போறேன். 

நாளைக்கு பரீட்சை முடிஞ்ச கையோட போக appointment கூட வாங்கியாச்சு.

ஆனா அக்கா மாதிரி மொக்கை கலர் இல்லை . இப்போ latest trend hair coloring செலெக்ட் பண்ணி இருக்கேன்.cash தரப் போறியா..card ஆ?

சரயூ பேசப் பேச ..

No comments: