Thursday, June 30, 2022

அவர்_அப்படித்தான்

 #அவர்_அப்படித்தான்...

கொஞ்ச நாளாகவே காலையில் வாக்கிங் கிளம்பி  போகும் வழியில் அந்தாளைப் பார்ப்பேன்.

என்னடா..இப்படி எல்லாம் கூடவா இருப்பாங்கனு பெண்ணிடம் புலம்பினேன். 

'உனக்கு இதே வேலையாப் போச்சு..போனோமா வந்தோமானு இல்லாம யாரையாவது பார்த்து CID வேலை பண்ணாதே' என்று வெடுக்கென்றாள்.

அன்றும் அப்படித்தான்..கீழே இறங்கியதும் கண்ணில் பட்டவர் அவரே..அவரே..

' அவர் கையில் வெச்சு ஆங்கிள் பார்க்கறதை பாரு..வர எரிச்சலுக்கு நாலு கேள்வி போய் கேட்கப் போறேன்னு கூட வந்த என் தோழியிடம் சொல்ல..' ஊர் வம்புக்குனே அலைவ .நீ ஏதாவது சொல்லப் போய் அவன் கன்னடத்தில் உன்னை திட்ட ஆரம்பிச்சா என்ன செய்வே..ஒழுங்கா வீட்டுக்குள்ள போனு என்னை விரட்டிட்டு விர்ருனு கிளம்பிட்டா..

'என்னடா இது ..எப்படி இந்த ஆளுக்கு பாடம்.சொல்லித் தரதுனு ஒரே கவலை மண்டையில..

"பின்ன என்ன காலங்கார்த்தால கடுப்பேத்தினா ..கோவம் வராதா எனக்கு? எவ்வளவு பிஸி ஏரியா? 


இன்று புத்திரியுடன் கீழே இறங்க..

இன்னிக்கு ஒரு வழி பண்ண போறேன்..அவர் கையில் இருக்கிறதை 'பிடுங்கி'..


'பிடுங்கி...'? ஐயோ அம்மானு பேந்தப் பேந்த அவள் முழிக்க..

.....

பின்ன என்னடா.?

.ஒழுங்கா பெருக்க வேண்டாம்..தரையிலேயே ஒட்டாமல் இப்படி 'துடப்பத்தை 'ஆட்டி ஆட்டி நடந்தா..கோவம் வராது பின்ன எனக்கு? 


"அவரு அப்படிதானாம் ' 

பல வருஷமா அந்த 99 வெரைட்டி தோசை கடையில் வேலையாம். பாவம் பிழைச்சு போட்டும் விடுங்கனு பக்கத்தில் இருந்த டீ குடித்தபடி ஒருவர் சொல்ல..


எப்புடி..கடைசியில டைட்டிலுக்கு வந்தேன் பாருங்க..

Saturday, June 18, 2022

Happy father's day

 சும்மா எதாவது அவளைச் சொல்லிண்டே இருக்காதே...

அன்று என் அப்பா..இன்று என் பெண்களின் அப்பா..

மாறவே மாட்டீங்களா ..அப்பாக்களே!!


திரையின் பின் நின்று

திறமைகளை வளர்க்கும்

நானிருக்கேன்டா என்று

நல்லூக்கம் நாளும் தரும்

அடக்கி வாசித்தாலும்

ஆட்சி புரிபவர் என்றும்

தந்தை எனும் மந்திரம்

தடைகளைச் தாண்டச் சொல்லும்

வாழ்த்துக்கள் ..

இந்நாளுக்கு மட்டுமல்ல்

நீ வாழும் வரைக்கும்..

நீ வாழ்ந்த பின்னரும்..


Happy father's day


Happy Father's day

Tuesday, June 14, 2022

very_easy_vadai

 #வாங்க_சாப்பிடலாம்

#very_easy_vadai



உளுந்து ஊற வைக்கணுமா?

No..

அரைச்சு எடுக்கும் வேலை இருக்கா?

No.

தண்ணி ஜாஸ்தியா..கம்மியா? டென்ஷனா?

No..No..

அப்போ என்னதான் செய்யணும்?

சொல்றேன் சொல்றேன்.


நம்ம கிச்சன்ல , ஃப்ரிட்ஜில இருக்கிற ஐட்டம்ஸ் எல்லாம் எடுங்க..

கலக்குங்க..

காட்டுங்க உங்க creativity😋


For 15 vada

Soft dosai  -2 ( fresh ஆ ரெண்டு பண்ணுங்க)

Bread -2

புளிக்காத தயிர் ஒரு 2கரண்டி

தோசையும் ப்ரெட்டும் தயிரில் ஊறவைக்கவும்.( thanks Raghupathy N sir for the idea 🙏)

உளுத்தம் மாவு - ஒரு கரண்டி

அரிசி மாவு - 1 ஸ்பூன்

உருளை ஒன்று சின்னதா வேகவைத்தது

(Optional)

வெங்காயம்

பச்சை மிளகாய்

இஞ்சி

தேங்காய்ப் பல்

மிளகு

கொத்த்மல்லி

தேவையான உப்பு.

எலாவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்யுங்க.


( உளுத்தம் மாவு last ஆ சேர்க்கணும்.)

எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுங்க..

Crispy tasty vada ready😀


இதை உதிர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்ட 

#வடை_உப்புமா ரெடி Bala Hari

Monday, June 13, 2022

மனதில்_உறுதி_வேண்டும்

 #மனதில்_உறுதி_வேண்டும்


தடுக்கி விழுந்தால் "உடுப்பி'

ப்ரேக் எடுக்கும் வாசல் ' பேக்கரி'

ஜேஜேனு கூட்டத்துடன்  "ஜூஸ் கடை'

ஜொள்ளு வரவழைக்கும் ' lassi shop'

தட்டு பல கைமாறும்  ' chaat corners'

மம்மிகளும் yummyநு முழுங்கும் மோமோ கடை.

குச்சி முதல் கோபுரம் கொண்ட ஐஸ்கிரீம் பார்லர்


தள்ளுவண்டியில தொண்ணூறு தோசை 

வாசனை மூக்கை துளைக்க வறுபடும் "வேர்க்கடலை வண்டி"

போளிகள் பலவகைனு போர்டுடன் ' holige mane'

ஆவி பறக்கும் அமெரிக்கன் கார்ன்

சேவைகள் சாம்ப்பிளுக்கொன்றாய் ' 'நைவேத்தியம்'

என்னை மயக்கும் " benne dosa' கடை.


கமகமக்கும் கர்நாடக காஃபி கடை..


...

கடிவாளம் கட்டி 

நடையை நான் கட்ட..

கை தட்டி கொண்டாடியது..


கைப்பேசியில் இருந்த..

எனதருமை..

Fit app தானே

Friday, June 10, 2022

மன்னிப்பா

 மன்னிப்பா..

(ஒரு ஜாலி போஸ்ட்)


மன்னிப்பா..என் அகராதியில.. இவங்களுக்கு கிடையவே கிடையாது.


1. உனக்கென்னப்பா ..housewife ..நீ எப்ப வேணாசமைக்கலாம்,சாப்பிடலாம்.தூங்கலாம், ஃபேஸ்புக்ல குடியிருக்கலாம்..watsapp ல் வாடகை இல்லாமலே இருக்கலாம் எனும்போது


2. அதே முன்கூறியவர் அப்பப்பா..எப்படித்தான் எல்லா நேரமும் வீட்டில இருக்கீங்களோ..எனக்கு ஒரு நாள் தள்றதே பெரிய பாடா இருக்கு எனும்போது..


3. நாம் செய்ததை எல்லாம் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு , அந்த பக்கத்து வீட்டு மாமி தந்த புளிக்கொழம்பு ஒரு ஸ்பூன் விடேன்னு சொல்லும்போது..


4. aunty நு எப்போதும் கூப்பிட்டு ஓடி வரும் அபார்ட்மென்ட் குட்டி, பாட்டினு திடீர்னு  கூப்பிடும். அவள் அம்மா நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி ' சாரிப்பா..நீங்க இந்த கண்ணாடில அசப்பில எங்க மாமியார் மாதிரியே இருக்கீங்க' சொல்லியபடி பின்பக்கம் இருக்கும் தோழிக்கு வெற்றிச் சின்னம் காட்டும்போது..


5. நல்ல தைப்பார் துணி எல்லாம் என்று தோழியை நம் ஆஸ்தான டைலருக்கு அறிமுகப்படுத்த..அவர் அவளுக்கு மட்டும் டிஸ்கவுண்ட் கொடுக்கும்போது..


6.நான் தான் எப்பவும் உங்க வீட்டுக்கு வரேன்.நீங்க ஒரு தடவை கூட வரதே இல்லைனு சொன்னதை நம்பிப் போனால்..டீவியில் கதறி அலறும் சீரியலோடு ஐக்கியமாகி..நீங்க பார்க்கறது இல்ல இந்த சீரியல்னு ஒரு கேள்வி கேட்பாங்க பாருங்க அவர்களை....


7. நம்ம கல்யாண ஃபோட்டோவை பார்த்துட்டு ' எப்படி இருந்த நீங்க ..இப்படி ஆகிட்டீங்கனு' மனசை பீஸ் பீஸா ஆக்குபவரை..

இந்த சின்ன மனசை பீஸ் பீஸாக்க எத்தனையோ பேர் காத்திருக்காங்க..

but going strong as always.

உங்களோடதையும் பகிருங்களேன்..

சும்மா இருக்காதே மனசு

 #மத்யமர்_கவிதைப்போட்டி

#பதிவு 2

#எடுத்துக்கொண்ட_வரி

#சும்மா_இருக்காதே_மனசு.


உரையாடல்கள் உறங்கிப் போன இந்நாளில்.. இந்த ஐயா,அம்மணியின் கவிதை நடை படியுங்களேன்.


நான் கொடுத்த தலைப்பு

#சொல்லத்_துடிக்குது_மனசு


#அம்மணி: 

கூடப்பிறந்தவன் கலியாணம்

கூப்பிடாமலே போகோணும்

கூடத்தான் வாருமையா..

கூடுமே மருவாதை யுந்தான்..

 

#ஐயா:

களத்து மேட்டு வேலையுமே

கழுத்து வரை இருக்குதிங்கே

கை கொடுக்க யாருமில்ல..

கண்ணே..நீ கிளம்பிடம்மா 


#அம்மணி:

நானில்லா அந்நேரம்

நாவையுமே அடக்கிடோணும்

நாலும்  திண்னு போட்டிங்கே

நோயில  விழுந்திடாதீரும்..


#ஐயா:

ஐயங் கொள்ளாதே பெண்ணே

ஐயர் மெஸ்ஸும் இருக்குதிங்கே

ஆவியில் வெந்த இட்டிலியுடன்

அடங்கிக் கிடப்பேனிங்கே 


#அம்மணி;

சக்கரையும் ஏறிடுமே

அக்கரையில் சொன்னேனே..

செவி சாய்க்க மாட்டீரென்று

சத்தியமாய் புரிந்தாலும்

#சும்மா_இருக்காதே_மனசு

சும்மா இருக்காதே..


#ஐயா:

ஒப்பாரி வைக்காதடி..

உன் பேச்சை தட்டேனடி

ஒழுங்கா இருப்பேனடி

ஒவ்வாததை உண்ணேனடி..


#அம்மணி;

கிளப்புறதே குறியாய் போச்சே

கும்மாள மடிக்க திட்டமுண்டோ

கிடந்த டிக்குதே என் மனசு

கிழவனையும் விட்டுப் போக..


ஐயாவின் மனசுக்குள்

ஆயிரம் யோசனையும்..


பற்றி வந்தாலே..எனைச்

சுற்றியே வருவாயே 

சுற்றம் மறப்பாயே..

பழித்துச் சிரிப்பாரே..


சண்டிராணி இல்லாது

சலிப்பூட்டு மென்றாலும்

#சும்மா_இருக்காதே_மனசு..

சுத்தி வருமே உன் நினைவு 


தேன்சொட்டும் சொல்லில்லை

செயலிலே அன்பிருந்தால்..

சன்மமிங்கே வாழ்ந்திடலாம்..வரும்

 சந்ததிக்கு சொல்லிடுவேன்..ஆதர்ச

 தம்பதியும் ..நாமென்று .

Thursday, June 2, 2022

Raaja sir

 உனக்கு ரொம்ப பிடிச்ச ராஜாவின் பாட்டு எது?..

உடனே பதில் சொல்ல முடியுமா ...யாராவது..?

இது இல்ல..அது..

ஐயோ.. அந்த பாட்டு இதை விட பிடிக்கும்.

இப்படியே..அடுக்கிண்டே போவோம்..

ஏனா..நாம எந்த mood ல இருக்குமோ..அந்த situation க்கு ஒரு பாட்டு உண்டு..ஒரு BGM உண்டு..

இப்படி யாதுமாகி நம் வாழ்வில்..ஒரு இசைப் பிணைப்பு..


ஒரு ஜீவன் நீ அழைத்தாய்...

உன் இசையால்..

ஓராயிரம் உள்ளம் இணைந்தோம்..


அகத்துள் நுழைந்து..

ஆவியுடன் கலந்தது...உன்னிசை..

வரிக்காக பாடல் கேட்டது போய்..

வாத்தியங்கள்...வருடும் மாயம்..

விந்தையாய்..உணர்வு..


பின்னனி இசையோ..

பேசி மாளாது..

வருடங்கள் போனாலும்

வருடல் உன் பாடல்..


 நம்முடனே..நடை போடும்..ராஜ நடை..அது ராஜாவின் இசை..


உன் இசையில் தொடங்கும்..

எம்

புத்தம் புது காலை..

நித்தமும் புதுசாய்த் தெரியும்

பொன்மாலைப் பொழுதுகள்..


ராக தேவனே..

உன் நாள் இன்று..

சங்கீத மேகம் தேன் சிந்தட்டும்..

ஆகாயம் பூக்கள் தூவட்டும்..

என்னாளும் பொன்னாளாய்..

உன்..

பொழுதுகள் விடியட்டும்..

வாழ்த்த வயதில்லை..

வணங்குகிறேன்..

Happy birthday raaja sir..

Happy birthday Raaja sir

 என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்

உன்னை விட்டு வேறு எங்கும் ஓட மாட்டேன்.


இது தான் நமக்கும் இளையராஜா சாருக்கும் உள்ள பந்தம்


அன்னக்கிளி பாட்டு முதன் முதலில் கேட்டபோது..ஆட்ட ஆரம்பித்த தலை இன்னும் நிற்கவில்லை..நிற்காது..

lyrics க்காக பாட்டு கேட்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய ..இசைக்கருவிகள் செவியை வருடி..சேதிகள் சொல்ல ஆரம்பித்தன..

வயலின் இசையில் வசமிழந்தேன்

தபேலாவில் தாளம் அறிந்தேன்

கோரஸ் பாடும் குரல்கள்..கொள்ளை இன்பம்

guitar .. காண்பிக்கும் சொர்க்கம்.


"ராகமென்ன..தாளமென்ன..அறிஞ்சா நான் பொறந்தேன்.."இல்லவே இல்லை..

ராகதேவன் பாடல்களின் மூலம் கற்றேன் கொஞ்சம் கொஞ்மாய் ராகங்களின் ரீங்காரம்.


புதுசு புதுசாய் அவர்.கையாளும் techniques..

 ஒரே பாட்டுக்குள் ஒராயிரம் சங்கதிகள் இருக்கும்.

எல்லாரையும் தாளம் போட வைத்து இணைத்த அவர் இசை..

தமிழ் இசை என்பது எட்டுத் திக்கும் சென்றடைந்த பொற்காலத்தின் தலைவன்..

அவர் கடைபிடிக்கும் punctuality..


காலையில் கண் விழிக்கும் போதே..' புத்தம் புது காலை பொன்னிற வேளை' பாட்டு மனசில் ஓடத் துவங்கும். தாலாட்டும் ராகத்துடுடன் என் நாள் முடியும்.

ஒரு நாளும் உனை மறவாத ரசிகர் கூட்டம் இங்கே..

எந்த வாகனத்தில் போனாலும்..வரும் கூடவே அவர் இசை தான்.

அவர் இசையால் எனக்கு கிடைத்த நட்பு வட்டங்கள் தான் எத்தனை எத்தனை..


' நன்றி சொல்லவே ..எங்கள் இசை 🎵 மன்னவா..வார்த்தை இல்லையே..


பிறந்தநாள் காணும் உன்னை..

' நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துக்கள்'

பல கூறி..

வாழ்த்தும் பல உள்ளங்களுடன் நானும் இணைகிறேன்.


"என்னோடு பாட்டு பாடுங்கள்..எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்..இசைக்கோலங்கள் தந்த ராஜ ராகத்துக்கு வாழ்த்து சொல்ல..

happy birthday raaja sir

Happy birthday Raaja sir

 Happy birthday ராஜா சார்..


Forever company என்று ஒன்று  உண்டென்றால் உங்க பாட்டுத்தான் எப்போதும்.


அண்ணாமலையானை் அருகே கண்டேன்

மூகாம்பிகையின் முக தரிசனம் கண்டேன்


பாபாவின் புகழ் மாலையில் பரவசம் அடைந்தேன்.


ரமண மாலை நீ  இசையால் கோர்க்க

ரணமெல்லாம் என் மனதில் ஆறக் கண்டேன்.


திருவாசகம் உன் இசையில்

தெவிட்டாத இன்பமாச்சு


'how to name it  ' கேட்ட போது

ஹா..என்று வாய் பிளந்தேன்


nothing but wind .

nostalgic ஆனது என்றும்.


காத்திருக்கேன் இப்போது..

காது குளிர திவ்யப் பிரபந்தம் கேட்க..


ஒரே ஒரு ஆசையுண்டு.

 

செளந்தர்ய லஹரியை எப்போது ஐயா உங்கள் இசையில் பாடப் போகிறோம்.


ராஜா..ராஜாதி ராஜா எங்கள் ராஜா.

பல்லாண்டு இசையோடு இணைந்து..

இன்பக்கடலில் எம்மை ஆழ்த்தணும் நீங்க..


Happy birthday இசை ஞானியே💐💐🙏🙏🙏